Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Issues’ Category

Issues within the Tamilnadu Information and Public Relations Department

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

செய்தித் துறையில் “பனிப்போர்’

கே.வி. ஐயப்பன்

கோவை, பிப்.14: தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்குள் பணியாளர்களிடையே தற்போது ஒரு “பனிப்போர்’ துவங்கியுள்ளது.

நேரடியாக நியமனம் பெறுவோர், துறை மூலமாக பதவி உயர்வுக்கு வருவோர் ஆகியோரிடையே பதவி உயர்வு தொடர்பாக தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆட்சியில் இருக்கும் அரசின் திட்டங்களை பறைசாற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டன்க்ஷப்ண்ஸ்ரீண்ற்ஹ் ஞச்ச்ண்ஸ்ரீங் என இருந்த இத்துறை கருணாநிதி முதல்வரான பின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையாக மாறியது.

பிற மாநிலங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் இத் துறைக்கான அலுவலர்கள் பதவிக்கு வருகின்றனர். பதவி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வும் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்நிலை இல்லை என்பது இத் துறையில் பணியாற்றுவோரின் மனக்குறை.

இத் துறையில் கணக்கர், மேல்நிலைக் கணக்கர், வரவேற்பாளர், காப்பாளர், திரைப்படக் கருவி இயக்குபவர் ஆகிய பதவிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் செய்தி, மற்றும் விளம்பரப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

அரசாணை (நிலை) எண் 2778 பொதுத் துறை நாள் 18-12-1950-ன்படி பதவி உயர்வு மூலம் இப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இப் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு ஆகியவற்றில் சிலவற்றை தளர்த்தி பணி நியமனம் செய்வதால் வரவேற்பாளர், கணக்கர், திரைப்படக் கருவி இயக்குநர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நிர்வாகத் தீர்ப்பாயத்தை ஒரு சிலர் அணுகினர். இத் தீர்ப்பாயம் 2:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்கியது துறை. இதனால், பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனம் மூலமாகவும் 1:1 என்ற விகிதத்தில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொது விதிகளின்படி விகிதாசாரம் பின்பற்றப்படுவதில்லை என்பது பதவி உயர்வு கிடைக்காதோரின் புலம்பல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பதவி உயர்வின்போது உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ஆக தற்போது பணிபுரிவோரை நுழைவுப் பதவியின் (உய்ற்ழ்ஹ் கங்ஸ்ங்ப்) அடிப்படையில் இரண்டாகப் பிரித்து 5:1 என்ற விகிதத்தில் தற்போதுள்ள விதிகளுக்கு திருத்தம் செய்ய கோப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேரடி நியமனம் மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டோருக்கு சாதகமாக இத் திருத்தம் செய்யப்பட்டால் அது தீர்ப்பாணையத்தில் உத்தரவுக்கு முரணாக அமையும். துறையின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று கூறி தமிழ் வளர்ச்சி, அறநிலைய மற்றும் செய்தித்துறைக்கு ஊழியர்கள் மனு செய்துள்ளனர். நடைமுறையில் உள்ள விதிகளில் திருத்தம் செய்யும்போது தற்போது பணியில் இருப்போர் அதனால் பாதிக்கப்படாதவாறு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது அரசின் கொள்கை.

விதிகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் முரணாக திருத்தம் மேற்கொள்ள ஒரு பிரிவு வரிந்துகட்டுவதால் பணியாளர்களிடையே வலுத்துள்ளது பனிப்போர். பணியாளர் சீர்திருத்தத் துறை இக் கோரிக்கைக்கு எதிராக குறிப்பு எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது இக் கோப்பு சட்டத்துறையின் ஆய்வில் உள்ளது. பணியாளர்கள் மனம் புண்படாதவாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல முடிவை ஆளும் அரசுதான் எடுக்கவேண்டும்.

Posted in Department, Departments, Dept, Govt, Information, Issues, Jobs, News, PR, Problems, seniority | Leave a Comment »

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

Ayurvedha Corner: S Swaminadhan – How to improve eyesight: Better vision with Naturotherapy

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கண்ணிலே குறையிருந்தால்…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

என் மனைவிக்கு வயது 39. ஒன்றரை வருடத்திற்கு முன்பு வலது கண்ணில் மையப் பகுதியில் பார்வைக் குறைவு ஏற்பட்டது. கண் மருத்துவர், “”இது கண்ணில் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதற்கு எந்த மருத்துவ வசதியும் உலகத்திலேயே இதுவரை இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆயுர்வேதத்தில் இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா?

நம் உடலில் ஐந்து வகையான பித்த தோஷங்கள் உள்ளன. அவற்றில் ஆலோசகம் எனும் பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பித்தத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும்தன்மை, சூடு, லேசானது, கடும் நாற்றம், பரவுதல், நீர்த்தன்மை ஆகியவற்றைச் சீரான உணவு முறைகளால் நாம் பெறுவதாகயிருந்தால் இந்த ஆலோசகப் பித்தத்தின் முக்கிய செயல்பாடான பொருட்களைச் சரியான நிலையில் காணுதல் என்ற வேலை திறம்பட நடைபெறும். பஞ்ச மஹா பூதங்களில், நெருப்பை தன் அகத்தே அதிகம் கொண்ட புளிப்பு, உப்பு, காரச் சுவையையும், பட்டை, சோம்பு, ஜீரகம், பெருங்காயம், கடுகு, மிளகு, நல்லெண்ணெய், பூண்டு போன்ற உணவுப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதாலும் சீற்றமடையும் பித்தத்தின் குணங்களும், செயல்களும் ஆலோசகப் பித்தத்தின் வேலைத் திறனில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இந்தக் குறைபாடுதான் பார்வைக் குறைவுக்கும் காரணமாகிறது.

இந்த நிலை வராதிருக்க ஆயுர்வேதம் “நித்யம் ஷட்ரúஸô அப்யாஸ:’ என்று கூறுகிறது. அதாவது அறுசுவைகளையும் என்றும் புசித்துப் பழகு என்று அதற்கு அர்த்தம். கார உணவால் ஏற்பட்ட கோளாறுக்கு இனிப்புச் சுவையும், புளிப்புச் சுவையால் ஏற்படும் உபாதைக்கு கசப்பும், உப்புச் சுவையின் சேர்க்கையால் உண்டாகும் நோய்களுக்கு துவர்ப்புச் சுவையும் நேர் எதிரான குணம் மற்றும் செயல்களால் நம்மால் இழந்த ஆரோக்கியத்தைப் பெற இயலும் என்பதால், உங்கள் மனைவிக்கு உணவில் காரம்-புளிப்பு-உப்பு அறவே குறைத்து இனிப்பு-கசப்பு-துவர்ப்புச் சுவையை அதிகரித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. உணவில் இந்த மாற்றத்தின் வாயிலாக ஆலோசகப் பித்தத்தின் சீற்றத்தைத் தணித்து அதன் சமச்சீரான செயல்பாட்டினை மறுபடியும் பெற இயலும்.

உணவில் செய்யப்படும் இந்த மாற்றம் மட்டுமே என் மனைவியின் உபாதையைப் போக்கிவிடுமா? என்று நீங்கள் கேட்கக் கூடும். போக்காததுதான். ஆனால் இந்த மாற்றத்துடன், மருந்தும் சாப்பிட வேண்டும். சூறாவளியால் ஏற்படும் சேதம் சிறுகச் சிறுக செப்பனிடப்படுவதுபோல், உடலில் தோஷத்தினால் ஏற்பட்ட சேதத்தை சிறிது சிறிதாகத்தான் சரி செய்ய இயலும். அவ்வகையில் குடலில் தேவையற்ற மல ரூபமான பித்தத்தை நீர்த்து வெளியேற்றும் அவிபத்தி எனும் சூரணத்தை 10 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்துச் சிறிது தேனுடன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக முதல் மூன்று நாட்கள் சாப்பிட, நீர்ப்பேதியாகும். குடல் சுத்தமாகும். அதன் பிறகு இரவில் திரிபலா சூரணம் 5 கிராம், ஜீவந்த்யாதிகிருதம் எனும் நெய்மருந்தை 7.5 மி.லி. உருக்கிக் குழைத்து 1/2 ஸ்பூன் தேனும் கலந்து படுக்கும் முன் நக்கிச் சாப்பிடவும்.

தலைக்கு திரிபலாதி தைலம் ஊற வைத்துக் குளிக்கவும். குளித்த பிறகு அணுதைலம் 2 சொட்டு மூக்கில் விட்டு உறிஞ்சித் துப்பவும். கண்களில் நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.

கண்களைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி, கண்ணில் ஊற்றி சுமார் 1 மணி நேரம் வரை நிறுத்தப்படும் மஹாத்பலகிருதம் எனும் நெய் மருந்து சிகிச்சை, கண்நோய்களை அகற்றும் சிறப்புச் சிகிச்சையாகும். அதை உங்கள் மனைவி செய்து கொள்ளலாம்.

கண்நரம்புகளுக்கு வலுவூட்டும் சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்றவற்றை பகல் உணவில் அடிக்கடி சாப்பிடுதல் நல்லது. இருவித கையாந்தரைக் கீரைகளும் உணவிலும், தலைக்கு எண்ணெய்யில் காய்ச்சித் தேய்த்துக் குளித்தலும் நலம் தரும். ஊசிப்பாலை எனும் பாலைக் கீரை நல்ல இனிப்புச் சுவை உள்ளது. கண்ணுக்கு மிக உயர்ந்த ரஸôயன உணவு. சாப்பாட்டில் சாதா உப்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் இந்துப்பு சாப்பிட நல்லது. இரவில் படுக்கும் முன் உள்ளங்கால் நடுப்பகுதியில் பசு நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணை) தேய்த்துவிடுவதும் நல்லதே.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, bile, bladder, Diet, Disorders, Eyes, Eyesight, Food, Gall, Herbs, Issues, medical, Natural, Naturotherapy, Problems, Retina, Swaminadhan, Swaminathan, Symptoms, Taste, Vision | 2 Comments »

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Bill to hike pension for former MLAs, MLCs: Increase in Tamil Nadu Legislature spending

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

நமது கடன்…

ஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்

இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.

இன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே!

இது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா?

அவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.

அமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்?

மக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்? நமது கடன் வாக்களித்து ஓய்வதே!

————————————————————————————————————————————————-

மக்கள் பிரதிநிதிகள்…?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.

சாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.

அமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அறைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.

கலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.

மாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.

கடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.

1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 கோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.

இத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.

தகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————————————————————–

பயனுள்ளதாகட்டும் நாடாளுமன்றம்!

பி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்

நாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.

மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.

இதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.

இவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

பிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.

நம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்தொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.

உண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.

நாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.

நாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.

இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.

அதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.

ஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.

ஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.

இதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”

Posted in 5, ADMK, Allocation, Allowances, Anbalagan, Anbazagan, Anbazhagan, Appraisal, Assembly, Attendance, Bribery, Bribes, Budget, Cell, Checks, Chennai, Citizen, City, Congress, Cops, Corruption, Council, DA, Decorative, Decorum, Democracy, Disqualify, DMK, Economy, Election, Elections, Employed, Employment, Exceptions, Expenses, Exploit, Exploitation, Finance, Freedom, Funds, Government, Governor, Govt, Hike, Impeach, Income, Independence, Issues, IT, JJ, Jobs, kickbacks, KK, Legislature, Lifelong, Limits, Lok Ayuktha, Lok Saba, Lok Sabha, Lokpal, LokSaba, LokSabha, Madras, Metro, MGR, MLA, MLC, MP, MuKa, NGO, Office, Operations, parliament, pension, people, Performance, Phones, Polls, Power, Query, Questions, Raise, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Recall, Representation, Representative, Representatives, responsibility, Retirement, Rich, Role, Ruler, Salary, Senate, service, Sincere, Sincerity, Somnath, State, Suspend, TamilNadu, Tax, Telephone, Terms, Transport, Verification, Verify, Vote, voters, Walkouts, Woes, Years | Leave a Comment »

Saravana Bhawan Rajagopal Annachi vs Jeevajothi saga – Details, History

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

IdlyVadai – இட்லிவடை: ஜீவஜோதி, அண்ணாச்சி ப

சற்றுமுன்…: ஓட்டல் அதிபர் ராஜகோ�: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு

நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.

ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.

இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.

வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.

தினமணி

————————————————————————————————————

ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீதானகொலை முயற்சி வழக்கில் ஜீவஜோதி `திடீர்’ பல்டி

நாகை, ஜுலை.24-

நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக் கப்பட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கொலை முயற்சி வழக்காக நடத்த வேண்டும் என்றும், வேறு கோர்ட்டில் விசாரிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நாகை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபால் உள்பட 6 பேர் மீதும் 7 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஜுலை 23-ந்தேதி 1 முதல் 10 வரையிலான சாட்சிகள் விசாரணை நடக்கும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.

இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் ஜீவஜோதியின் மாமா தசமணி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் தசமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.

புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.

ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.

—————————————————————————————————

ஜீவஜோதி கடத்தல் வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் விடுவிப்பு

நாகப்பட்டினம், ஆக. 1: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு, வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தங்கியிருந்த ஜீவஜோதியின் வீட்டுக்கு ராஜகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து வற்புறுத்தினர். ஜீவஜோதி மறுக்கவே அவரை கடத்த முயற்சித்தனராம்.

இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார். இதன்பேரில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், வழக்கறிஞர் ஜி. ராஜேந்திரன், கணேசன் (எ) சகாதேவன், சுப்ரமணியன், கார்த்தீசன், ஸ்ரீநிகநாஜன் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சேதுமாதவன் தனது தீர்ப்பில், “புகார் கூறிய ஜீவஜோதி மற்றும் அரசுத் தரப்பில் காவல் துறையைத் தவிர அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சியமளித்ததால் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

Posted in Annaachi, Annachi, Backgrounders, Biosketch, case, Chain, Developments, Eatery, Faces, Franchise, Franchisee, History, Hotel, Inn, Issues, Jeevajothi, Jeevajothy, Jivajothi, Jivajothy, Judge, Justice, Law, Lawsuit, Order, people, Price, Raajagopal, Rajagopal, Restaurant, Rich, Santhakumar, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan, Society, Stuff, TN | Leave a Comment »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

Rupee appreciates against Dollar – Financial pressures & Trade imbalance in Pricing disparities

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்

ஆர். அறிவானந்தம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.

செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.

ரூபாய் மதிப்பு உயர்வால்

  • ஆட்டோமொபைல்,
  • உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
  • டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
  • ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
  • கைவினைப் பொருள்

உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்

  • சாப்ட்வேர் நிறுவனங்கள்,
  • பிபிஓ நிறுவனங்கள்,
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
  • கிரானைட்,
  • கடல் உணவு,
  • தேயிலை,
  • என்ஜினீயரிங்,
  • முந்திரி,
  • மாம்பழம் மற்றும்
  • நார் பொருள்களை

தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.

அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.

கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.

மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.

நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.

ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted in Appreciation, Balancesheet, BPO, BRIC, Cash, China, Company, Disparity, Dollar, Economy, Exchange, Exim, Exports, Finance, fiscal, Fishery, Fixing, GDP, Imbalance, Imports, Industry, Inflation, InfoTech, Interest, Issues, markets, Monetary, Money, Outsourcing, Policy, PPP, Pressures, Pricing, Rates, ratio, RBI, Recession, Reserve, Rupees, Rupya, service, Trade, World | 1 Comment »

India’s Ruling Coalition Nominates Pratibha Patil for President

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.

ராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.

முதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.

இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.

கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன? இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.

எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.

ஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

வெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.

எதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்.)


தேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்!புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.

சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.


பிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்!நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!இந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி?’ என்று கேட்கப்பட்டது.

அப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

சொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.

எனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.

வலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா?

பிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.

பொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.

பதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.

பிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.

இதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.

அரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.

அப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.

பிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.

—————————————————————————————

பிரதிபாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.

தேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.

சுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.

“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.

த.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.

தர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
———————————————————————————————–
பிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக

புதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

கொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா? பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மன்மோகன் கண்டனம்

பிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கலாம் விவகாரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.

———————————————————————————————–

பிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜலகோன், ஜுன். 28-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:-

பிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.

எனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.

கார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.

இவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

———————————————————————————————–

பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)

ஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்!

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு!

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.

பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன?


பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு!அருண் செüரி
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்!இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று!கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை!

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

——————————————————————————————-

பிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும்! – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)

அருண் சௌரி

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா? சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

———————————————————————————–

கூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி

புதுடெல்லி, ஜுலை. 5-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

தனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-

பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா?

1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா?

கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.

வங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

——————————————————————————————————-

எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:

மகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.

பிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்?.

விதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

—————————————————————————————————

From Unmai Online:

மகளிருக்கு மரியாதை

முதல் பெண் குடியரசுத் தலைவர்

மனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.

நீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.

அறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

அதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.

1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.

1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.

1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.

பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.

திவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.

இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.

——————————————————————————————————

திருமதி. பிரதிபா பாட்டில்
வாழ்க்கைக் குறிப்பு

தந்தை பெயர்: நாராயணராவ்

பிறந்த தேதி: டிசம்பர் 19, 1934

பிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்

துணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்

குழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.

1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.
1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.

கடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.

பல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
——————————————————————————————————

பதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்?

எஸ். குருமூர்த்தி
“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.

இவையெல்லாம் வெறும் புகார்கள்தானா? இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா? பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா?

பேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.

வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.

கிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.

இந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்?” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.

பிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.

ஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை?

2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்?

பிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும்? நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார்? கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா? பொதுமக்களிடம் அதை அம்பலப்படுத்தியவர்களா?

1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.

பிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.

இதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.

2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.

சந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா?

——————————————————————————————————————-
Part II

பிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார்? பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா?

சகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன்! கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

ஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார்? அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா? அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா?

அடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.

அவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா?

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா?

தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.

இதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது? கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா? இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது! தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.

சுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.

———————————————————————————-
இந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா?

இரா. செழியன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.

பிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.

நேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான்! ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.

1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.

இப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.

முதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.

மிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.

அதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.

பிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.

ஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.

பிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.

பிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக!

(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)

————————————————————————————————————

மிஸ்டர் பிரதிபா பாட்டீல்…
Prathibha patil husband devisingh shekawath

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.

புது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.

குடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.

குடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.

Posted in Abdul Kalam, Abdulkalam, abuse, Accusations, Accused, Advani, Akbar, Allegation, Alliance, APJ, Attorney, Aurangazeb, Babar, Bajpai, bank, BJP, Bribe, Bribes, BSP, Burqa, candidate, Chandrasekar, Chandrasekhar, Chezhiyan, Co-operative, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cooperative, Corrupt, Corruption, CPI, CPI(M), Dalit, Desai, Devisingh, DMK, Elections, Emergency, Fakhruddin, Fakhrudheen, Fakruddin, Fakrudheen, Fakrudhin, Fakrudin, Female, Finance, Giri, Governor, Governor-general, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, History, Hussain, Hussein, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Islam, Issues, Jailsingh, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, Kalaam, Kalam, kickbacks, KR Narain, Lady, Law, Lawyer, Loans, Lok Saba, Lok Sabha, LokSaba, maharashtra, Mahila Sahakari Bank, Manmohan, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mogals, Moghuls, Moguls, Moraarji, Morarji, Moslem, MP, Mukhals, Muslim, Narain, Narayan, Narayanan, NDA, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Nehru, nexus, Nomination, Order, Party, Patil, Pilani, PM, Polls, Post, Power, Pradhiba, Pradhibha, Pradiba, Pranab, Pranab Mukherjee, Pranav, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, PRATIBHA MAHILA BANK, PRATIBHA MAHILA SAHAKARI BANK, Pratibha Patil, President, Prez, Propaganda, Purqa, Radhakrishnan, Raj, Rajaji, Rajasthan, Rajeev, Rajeev Gandhi, Rajendra, Rajendra Prasad, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rashtrapathi, Rashtrapathy, Reddy, Religion, Republic, SAHAKARI BANK, Sanjeev, Sanjeev Reddy, Sanjeeva reddy, Sarma, Scam, Scandal, SD Sharma, Sezhiyan, Shankar Dayar Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Shivraj, Shivraj Patil, Shourie, Sikhs, Speaker, Speech, support, Sushil Kumar Shinde, TMMK, UPA, Vajpayee, Vajpayi, Veil, Venkatraman, vice-president, Victory, Vote, VP, VP Singh, Winner, Women, Zail singh, Zailsingh, Zakir | 6 Comments »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Thamil Cinema Association not to support Tamil Actresses: Why?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!

சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.

உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.

முன்னணி நடிகைகளான

  • ஸ்ரேயா,
  • ஜெனீலியா,
  • ஜோதிர்மயி,
  • தமன்னா,
  • நவ்யா நாயர்,
  • சிந்துதுலானி,
  • நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:

அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.

இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.

Posted in Actress, Association, Compensation, Dues, Geneelia, Genelia, Geneliya, Issues, Jeevan, Jeneelia, Jenelia, Jeneliya, Jodhirmayee, Jodhirmayi, Jothirmayee, Jothirmayi, Member, Navya, Navya Nayar, Raama Narayan, Raama Narayanan, Rama Narayan, Rama Narayanan, Salary, Shreya, Shriya, Sindhu Dholani, Sindhu Dolani, Sreya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamanna, Union | Leave a Comment »

Operation Salma Ayup – Unmai Online: Bavanandhi

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஆப்பு’ ரேசன் சல்மா அயூப் – பவானந்தி

காந்தியக் கொன்ன கோட்சே, கொலை செய்யப் போகும் முன்பே கையில் ‘இஸ்மா-யில்’னு பச்சை குத்திக்கிட்டு சுன்னத் செஞ்சுகிட்டுத்தான் போனான். ஒரு வேளை தான் யார்னு அடையாளம் கண்டு பிடிக்கப் படாட்டா, முஸ்லீம்னு தெரியட்டும்; அதனால் கலவரம் வந்து முஸ்லீம்களைக் கொல்லட்டும்கிறதுக்காக அப்படி செஞ்சான். தான் செஞ்ச தப்பை அடுத்தவன் மேல போட்டு மாட்டிக் கொடுக்கிறது அவ்வாளுக்கு நிகர் அவாளே!

இப்படி முஸ்லீம் பேரைப் பயன்படுத்தி பூணூல் கூட்டம் பண்ற முடிச்சவிக்கித் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இப்ப சமீபத்தில நடந்தது. ரிடையராகி வீட்டில உட்கார்ந்துகிட்டிருந்தாலும், ஏகப்பட்ட பார்ப்பான் இன்னைக்கு இண்டர்நெட்டிலதான் உட்கார்ந்திருக்கான். தங்கள் குல ஆதிக்கம் அழிஞ்சிடாம இருக்க மூளைச் சலவை செய்யற வேலையில ரொம்ப பூணூல் இறங்கயிருக்குது. இதுக ஒரு பேர்லதான் வரும்னு இல்ல. நல்ல பிள்ளையாட்டமா ஒரு பேர்ல இருந்து கட்டுரை எழுதுறது. அப்புறம் ஏகப்பட்ட போலி பேர்கள்ல தனக்குத்தானே பாராட்டி முதுகைச் சொறிஞ்சுக்கிறது; பகுத்தறிவு, இனஉணர்வு எவனாவது பேசிட்டா அவனைப் பத்தி தரக்குறைவா எழுதறதுன்னு இதுகளோட ஆட்டம் தாங்க முடியல இணையத்தில்.

‘மொழி’ படத்துல வர்ற புரபசர் கேரக்டர் மாதிரி (எம்.எஸ்.பாஸ்கர் ஏற்ற பாத்திரம்) ‘சமீபத்தில 1967-ல அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தப்போ’, ‘சமீபத்தில நேரு இறந்தப்-போ’ன்னு இந்த மறதிக் கேஸு 40 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற மாதிரியே எழுதும். ‘சமீபத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ’ன்னு எழுதும்போது, விவேக் படத்தில வர்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது.

இது ஒரு கேஸுன்னா, இன்னொரு கேஸ் இருக்கு. அது அடுத்தவங்க பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு, இதுங்க அரிப்பை எல்லாம் அதில தீர்த்துக்கிறது. வலைப்பூக்கள்னு சொல்லப்படுகிற Blog Spot-கள் தமிழர்களால் அதிகளவு பயன்படுத்தப்-படுகிறது. பத்திரிகைகளில் பிரசுரிக்க அலையாமல், தங்கள் படைப்புகளை, கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுபோக எளிய வழி இது. தத்தம் பெயரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நல்ல வாய்ப்பைத்தான் தவறாய் பயன்படுத்துது இந்தக் கேஸு.

“திராவிட இயக்கங்கள், பெரியாரியம், தமிழ் உணர்வு போன்றவற்றையொட்டி, தனது வலைப்பூ தளத்தின் மூலமாக தன் கருத்துகளை சொல்லி வந்த ஒரு பெண் பதிவாளரின் பெயரில் போலிப் பதிவு யாரோ உருவாக்கி-யிருந்தார்கள். ‘Eveready’ என்பதையே ‘Every day’  என்று போலி உருவாக்குவது போல அந்தப் பெண்னின் பெயருடன் ஒரு எழுத்தைச் சேர்த்து புதிய வலைப்பக்கம் உருவாக்கப்-படுகிறது. அதே வடிவமைப்பு! அதே எழுத்து வடிவம்! அதே வண்ணங்கள்!

ஆனால், தளம் முழுக்க ஆபாசப் படங்களும், கதைகளுமாக எழுதப்பட்டிருந்தது. தளத்தின் உரிமையாளர் பெயர் சல்மா அயூப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே சல்மா அயூப் என்ற பெயரில் இதற்கு முன்பும் பல தளங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளது. யாரிந்த ‘சல்மா அயூப்’ என்பது பெருங்குழப்பமாயிருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண் பதிவரே ‘இந்தச் சிக்கல் தீரும் வரை நான் இணையத்தில் செயல்படப்போவதில்லை’ என்று சொல்லுமளவுக்கு முடக்கிப் போடும் வேலை நடந்ததுங்கிறாரு. இந்தப் பிரச்சினையில இறங்கி வேலை பார்த்த பாலபாரதி.

‘சல்மா அயூப் என்பது போலிப் பெயர் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில், அது யாரெனக் கண்டுபிடிக்கும் பதியை மேற்கொண்டோம். அந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் (IP Member Tracker) வாய்ப்பைப் பயன்படுத்தி கிண்டியில இருக்கிற முகவரியைக் கண்டு பிடித்துவிட்டோம். நாளை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். ஏற்கனெவே அவர்களிடம் சொல்லி வைத்தாயிற்று? அப்படின்னு ஒரு பதிவு இணையதளத்தில் வெளிவந்தது.

அவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்தில் பாலபாரதிக்கு போன் போட்டு “நான் உங்களைப் பார்க்கணும் எங்க வரணும்’னு கேட்குது ஒரு ஆண் குரல். இடத்தை சொன்னவு-டனே குறிப்பிட்ட நேரத்தில ஒரு கார்ல வந்திறங்கினார் ஒரு ஆளு. சல்மா அயூப்ங்கற பெயருக்கு பின்னாலே ஒளிஞ்சிருந்த பூணூல் பேர்வழி தான் அவரு.

முதல்ல “நான் எழுதல. என் தளத்தின் முகவரியிலிருந்து என் பாஸ்வேர்டு தெரிஞ்ச யாரோ இந்த மாதிரி செஞ்சிருக்காங்க’ன்னு சொல்லி கெஞ்சியிருக்காரு. “நாங்க இதுபத்தி போலீஸ்ல போட்டுக்கொடுக்கப்போறோம். உங்க பாஸ்வேர்டல எழுதறத யாருன்னு அப்பத் தெரிஞ்சிடும்ல’ என்று அ.மு.க. சார்பில் பாலபாரதி சொல்ல அ.மு.க. (அனானி முன்னேற்றக் கழகம்) ஒரு மணி நேரத்தில மெல்ல மெல்ல ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுட்டு இனிமே இதுமாதிரி செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.

நம்மாளுகதான் பெருந்தன்மையான ஆளுகளாச்சே! ‘மாட்டிக்கிட்டாரு மாப்புள! ஆனா சகபதிவர்தானே அதனால் மன்னிச்சு விட்டுடுவோம்’னு முடிவெடுத்து பெயரைக் கூட வெளியில சொல்லாம விட்டுட்டாங்க. இந்தப் பெருந்தன்மையை புரிஞ்சுக்கத் தெரியாத பூணூல், ‘நான் எழுதல என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க’ன்னு வெளியில போய்ச் சொல்ல ‘பாப்பானுக்கு முன்புத்தி கொஞ்சமும் கிடையாதுங்கிறது’ அப்பத்தான் ரொம்பப் பேருக்கு விளங்குச்சு. “ஏன்டா, நீ எங்கிருந்து எழுதறன்னு இங்கிருந்தே கண்டுபிடிச்ச எங்களுக்கு நீ என்ன பேசினன்னு பதிஞ்சு வைக்கத் தெரியாதா? இந்த புளுகு வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததிலிருந்து என்ன பேசினங்குற ஆடியோவை இணையத்தில் போட்டுடுவோம்’ நம்மாளுக சொன்னதுக்கப்புறம் தான் அந்த இழிபிறவிக்கு புரிஞ்சது- ‘ஆகா நமக்கு அறி-வில்லை’ங்கிறது.

“இந்த மாதிரி பண்ற ஆளுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இறக்கம் காட்டக்கூடாது வோய்! ஆனா அதே மாதிரி பல புனை பெயர்ல எழுதற உங்களவாவைப்பத்தி ஏன் பேச மாட்டேங்குறீர்’னு ஒரு பூணூல் கொதிச்சது.

“புனை பெயர் வேற, போலிப் பெயர் வேற, என் புனை பெயர்ல நான் என்ன வேண்ணா எழுதிட்டுப் போறேன். ஆனா உன்னைய மாதிரி ஆபாசமா நான் எழுதல. அப்படியும் என்னையக் கண்டுபிடிக்கணும்னா நீங்கதான் திறமைசாலி வெங்காயங்களாச்சே. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க’ன்னு பதிலடிச்சுவிட்டதில மூக்கில ப்ளாஸ்திரி ஒட்டற அளவுக்கு உடைஞ்சு போச்சு.

இப்படி “ஆப்பு’ அடிச்ச ‘ஆபரேசன் சல்மா அயூப்’ பண்ண தோழர்களுக்கு பாராட்டு சொல்லணும்னாலும். அந்தப் பூணூலோட ‘சைபர் கிரைம்’ குற்றவாளியா போஸ் கொடுக்க வச்சிருந்தா தானே மத்தவங்களுக்கு புத்திவரும். விட்டுட்டீங்களே பாலபாரதி! எங்களுக்கு அந்த இறக்கம்லாம் தேவையில்லை. அந்த இழி பிறவியோட பெயரை நாங்க சொல்லிடுறோம்.ஆபரேசன் சல்மா அயூப்ல ஆப்பு அடிக்கப்பட்ட ஆளு ‘ஜெயராமன்’ங்கிற பூணூலு!

Posted in Bavanandhi, Blogspot, Controversy, Issues, Operation, Salma Ayub, Salma Ayup, Tamil Blog, Tamil Blogs, Unmai, unmaionline, Viduthalai, Vituthalai | Leave a Comment »

Human trafficking, quota to cast shadow on Parliament session

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

புதுதில்லி, ஏப். 26: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகளும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எழுப்ப உள்ளன.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் இந்தக் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும்.

முதல் நாள் கூட்டத்தில் ஆள்கடத்தல் வழக்கில் பாஜக எம்.பி. கடாரா கைதான விவகாரம் மக்களவையில் முக்கியமாக இடம்பெறும்.

கடாரா விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று சட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தங்கள் கட்சி எம்.பி.யான பாபுபாய் கடாரா மட்டும் அல்லாமல் பிறகட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்கள் பற்றியும் விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

2007-08-ம் ஆண்டுக்கான நிதிமசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை முன்கூட்டியே அதாவது மே மாதம் 3-ம் தேதியே தாக்கல் செய்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் மே 6-ம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நிதிமசோதா மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயமும் அவையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரமும் முக்கிய விவாதமாக அவையில் இடம்பெறும். இது விஷயத்தில் நீதித்துறையின் பங்கு பற்றி பல்வேறு கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் உறுதியான கொள்கை இல்லாதது, போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவது, ரூ.2 நாணயத்தில் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றையும் பாஜக எழுப்பும் எனத் தெரிகிறது.

Posted in 27, Babubhai Katara, BJP, Communist, Congress, Election, Issues, Katara, Lok Sabha, LokSaba, MP, OBC, parliament, Party, Politics, Reservation, SJP, SP, UP | 1 Comment »

China considering property protection: Tax Issues

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

சீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை

சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

சீனாவில், அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

கிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.

கம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————-

சீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு

பெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.

சீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.

வேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.

மேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.

இதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.

Posted in Agriculture, Arid, Assets, Capitalism, China, commercial, Communism, Communist, Dams, Disaster, Drought, Economy, Farming, Flood, Food, Government, individuals, industrial, Industry, Irrigation, Issues, Land, Law, Nature, Paddy, Poor, Poverty, Private, Production, Property, Protection, rice, Rural, Stats, Tax, Water | 1 Comment »

Congress receives drubbing in Elections: Lessons, Monetary Policy, Financial Impacts

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

தேர்தல் புகட்டும் பாடம்

3மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ஒன்றில் கூட்டணி அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இத் தேர்தல் ஓர் உரைகல் போன்றதாகவே கருதப்படுகிறது.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இங்கு பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்ட பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

உத்தரகண்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

இதற்கு ஆறுதலாக மணிப்பூரில் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தோல்விகளுக்கு ஆளும் கட்சி மீது வழக்கமாக மக்களிடையே ஏற்படும் அதிருப்தி மற்றும் உள்ளூர்ப் பிரச்சினைகள் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனினும் முக்கியப் பிரமுகர்களுக்காக அரசுப் பணம் பெருமளவில் செலவிடப்பட்டது, விவசாய நிலங்களை, கல்வி என்ற பெயரில் வியாபாரம் நடத்தி வரும் பெரும் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது, இவ்வாறு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட கடும் பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்து உத்தரகண்டில் ஆளும் கட்சியைப் புறக்கணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

தனியார்மயக் கொள்கை, தனியாருக்கு நிலங்களை விற்றது, மாநிலத்தில் மின்வாரியத்தைக் கலைத்தது, சுகாதார நலத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்தது, கடுமையான பணவீக்கம் முதலியன காங்கிரஸýக்கு நகர்ப்புற மக்களிடையே இருந்த செல்வாக்கைக் குறைத்துவிட்டது. இதுவே பஞ்சாபில் காங்கிரஸின் தோல்விக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், மக்கள், உள்ளூர்ப் பிரச்சினைகளை வைத்து மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, இத் தேர்தல் முடிவுகளால் மத்திய அரசுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், அரசின் சில கொள்கைகள் குறிப்பாக கட்டுக்கடங்காத விலை உயர்வு, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக விளைநிலங்களை தனியாருக்கு அளிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அரசுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனவே, மக்கள் மனமாற்றத்துக்கு, அதுவும் நகர்ப்புற மக்களின் மனமாற்றத்துக்கு உள்ளூர்ப் பிரச்சினைகள் மட்டுமே காரணமாகுமா என்பது பரிசீலனைக்குரிய விஷயமாகும்.

அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய வளர்ச்சியையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். பங்குச்சந்தையில் விலைப்புள்ளிகள் அதிகரித்து வருவதால் மட்டுமே இந்தியா ஒளிர்வதாகக் கருதி விட முடியாது. எத்தகைய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு சிலர் சலுகைகளை அனுபவிப்பதும் பலர் எத்தகைய வசதியும் கிடைக்காமல் வாடுவதும் சமமான உயர்வுக்கு வழி வகுக்காது. இது மட்டுமன்றி சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பது உள்ளிட்டவையும் மக்களின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

பணவீக்கம் குறித்து நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையிலும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்காக விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும். இது தேர்தலுக்கு மட்டுமல்ல, நாட்டின் சீரான வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

Posted in Analysis, BJP, Budget, Commerce, Congress, Elections, Employment, Finance, Growth, Issues, Jobs, Monetary, Op-Ed, Opinion, Policy, Reasons | Leave a Comment »