Madhya Pradesh Assembly has Vaastu problem?
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006
மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் மரணத்துக்கு வாஸ்து காரணமா?
Shall we redesign then?
போபால், நவ. 29- மத்திய பிரதேசத்தில் 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டு அன்றில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு 16 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்து உள்ளனர்.
1998 முதல் 2003-ம் ஆண்டு வரையிலான பா.ஜனதா ஆட்சியின் போது 12 எம்.எல்.ஏ.க்கள் இறந்தனர். தற்போதும் அங்கு பா.ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது.
சட்டசபை கட்டிடம் கட்டப் பட்டு 10 ஆண்டுகளில் 16 உறுப்பினர்கள் மரணம் அடைந்ததற்கு வாஸ்துதான் காரணம் என்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்து உள்ளனர். உலக புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் சோரேரா இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர்.
எம்.எல்.ஏ.க்கள் மரணத் துக்கு சட்டசபை கட்டிடத்தின் அமைப்புதான் காரணமா என்று மாநில அரசு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக 45 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறை மந்திரி கைலாஷ் கூறும்போது, வாஸ்து கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சிந்திப்ப தாக தெரிவித்தார். பெரும் பாலான எம்.எல்.ஏ.க்கள் மரணத்திற்கு
- வயது முதிர்வு,
- நோய்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களான கிஷோரிலால் வர்மாவும், அவரது மனைவியும் பணப் பிரச்சினையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதற்கு வாஸ்துதான் காரணமா என்று கம்ïனிஸ்டு உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.எம்.எல்.ஏ.க்கள் மரணத் திற்கு வாஸ்துதான் காரணமா என்பதில் பாரதீய உறுப்பினர்கள் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்