Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Murder’ Category

Investigation sought in Border Security Force (BSF) personnel death in Tripura

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

திரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு

மதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.

அண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.

சடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.

பெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.

ஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.

எனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.

மறு பிரேத பரிசோதனை?

பிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Posted in BSF, CBI, dead, Death, Investigation, Murder, Postmortem, Suicide, Tamil, Tripura | Leave a Comment »

Jan 15 – LTTE, Eezham, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2008

இந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.

இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.

ஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

 


வன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

வான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.

மக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.

 

 


அனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதியுடன் திஸ்ஸ விதாரண
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.

புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.

இந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை

மட்டக்களப்பின் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்
மட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.


இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.

நிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.

சுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

டாக்டர் விக்னேஸ்வரன்

இதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.

இந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.


மொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.

முதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

மொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.

அதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்

சைமன் ஹியுஸ்

இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.

இப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.

“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை

இலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 

 


போர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்

யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்
யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்

இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால்.

மட்டக்களப்பில் ஹர்த்தால்
மட்டக்களப்பில் ஹர்த்தால்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

இலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

பிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.

ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

 


புத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்

புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

 


Posted in Attacks, Batticaloa, dead, Economy, Eelam, Eezham, Fights, Finance, Killed, LTTE, Murder, Peace, Sri lanka, Srilanka, Vanni, Wanni, War | 2 Comments »

Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்

“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.

Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”

சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.

தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.

முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.

நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.

பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.

  • தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
  • தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
  • கட்டுரையாளர் குருமூர்த்தி,
  • ஜெயா ஜெட்லி,
  • திருநாவுக்கரசர் எம்.பி.,
  • அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
  • மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Posted in America, BJP, Cho, Cho Ramaswamy, Cho S Ramasamy, Civil, Criminal, dead, Editor, Ela Ganesan, Gujarat, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Ila Ganesan, Islam, Jaya, Jeya, Killed, Law, MDMK, minority, Modi, Murder, Muslim, Order, Religion, Sarathkumar, Sharathkumar, Thirunavukkarasar, Thirunavukkarasu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, US, USA, Vai Gopalasami, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo, Visa | 2 Comments »

LTTE’s Head of Army Intelligence killed in Claymore ambush

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.


ஜயந்த தனபாலா ராஜினாமா

இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.

கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.

 


Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lanka to ban Tamil Tigers, abrogate CFA, says Gotabhaya

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகல்

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், கள நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கும் மேலாக மீறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை பார்ப்பதற்காகத் தான் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அதற்கு மாறாக தேசத்தின் பாதுகாப்பு பலவகையிலும் அச்சுறுத்தப் படுவதாகவும் ரம்புக்கவெல்ல கூறினார்.

ஒவ்வொருநாளும் இத்தகைய அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை இனிமேலும் நடைமுறைப் படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை என்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறைகளை இன்றிலிருந்தே தாங்கள் துவங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.

 


கொழும்பில் குண்டுத்தாக்குதல்-நான்கு பேர் பலி 28 பேர் காயம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் பயணம் செய்த ஒரு வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகி, இருபத்தி எட்டு பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பின் இதயப் பகுதியான கொம்பனி வீதியில் இராணுவ பஸ் வண்டியை இலக்கு வைத்து, இன்று-புதன் கிழமை காலை நடத்தப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவரும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவர் பெண். பதினொரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் பயணிக்கும் பஸ்வண்டியொன்றும் சேதமடைந்திருக்கிறது.

சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சம்பவ இடத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

இராணுவத் தலைமையகம், விமானப்படைத்தலைமையகம் போன்ற பல்வேறு பாதுகாப்புக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையங்களிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள நிப்பொன் ஹோட்டல் சந்திக்கு அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் மிகவும் மோசமாக காயமடைந்திருப்பதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் நிப்பொன் ஹோட்டலின் முன்புறம் மோசமாகச் சேதமடைந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் குவிக்கப்பட்டதோடு, இந்தப்பகுதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து
குண்டு தாக்குதலுக்குள்ளான பேருந்து

இன்றைய சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, இன்று கலை சுமார் 9.30 மணியளவில் நோய்வாய்ப்பட்டுள்ள இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ்வண்டியை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்த குண்டு தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் புலிகள் இதை மறுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த சக்திவாய்ந்த கிளேமோர் குண்டு நிப்பொன் ஹோட்டலின் குளிரூட்டும் இயந்திரத்தின் வெளிப்பாகத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பான புலன் விசாரணைகளை காவ்ல்துறையினர் ஆரம்பித்திருக்கிறார்கள்.

 


மகேஸ்வரன் படுகொலை, கொழும்பு குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கண்டனம்

நேற்று, செவ்வாய்க்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேசர் ஆலயத்தினுள் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத துப்பாக்கி நபரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையையும், இன்று கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையும் அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்
படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன்

இது தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், மகேஸ்வரனின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குப் பொறுப்பானவர்களைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர் களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சனைக்கு சமாதான வழியில் பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக்காண சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேவேளை, மகேஸ்வரனின் பூதவுடல் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்றையதினம் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் அவரது பூதவுடலிற்கு தமது அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் குறித்த விவரங்கள்

மகேஸ்வரனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் குறித்து, இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், பிபிசி தமிழோசையிடம் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்.

அவரது பெயர் வசந்தன் என்றும் அவரது தனிப்பட்ட விபரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் எதையும் பெறவில்லை என்றும் கூறிய கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், வசந்தன் தற்காலிகமாக தங்கியிருந்த வத்தளை வீட்டில் அவர் பயன்படுத்திய மைக்ரோ பிஸ்டலுக்குத் தேவையான தோட்டாக்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

வசந்தன் 1996 அம் ஆண்டு யாழில் இருந்து வெளியேறியதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளதாகவும், அரசுப் பணியில் இருந்துள்ளதாகவும், காவல்துறை பணியில் இருந்திருப்பார் என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்த கெஹலிய ரம்புக்கவெல்ல அவர்கள், அனால் தமக்கு இது குறித்த காவல்துறை உயரதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை என்றும், அந்த அறிக்கை கிடைக்கும் வரை யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Posted in Agreement, Blasts, Bombs, Ceasefire, Ceylon, CFA, Colombo, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezham, EPRLF, EROS, Fight, Gotabaya, Gotabhaya, Liberation Tigers of Tamil Eelam, LTTE, Magesvaran, Mageswaran, Mahesvaran, Maheswaran, Murder, Parliamentary Tamil United Liberation Front, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, PLOTE, Rajapaksa, Rajapakse, Sri lanka, Srilanka, Tamil, Tamil Eelam Liberation Organisation, TELO, Temple, Thimpu, Tigers, TULF, War | Leave a Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Colombo withdraws security – Tamil MP Mano Ganesan alleges ‘threat to life’, may flee Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

விடுதலைப் புலிகளும், கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை சேர்ப்பதாக ஐ.நா கூறுகிறது

இலங்கையில் விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது.

சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது.

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு சில நாட்களிலேயே அவர்களை மீண்டும் சேர்த்து கருணா குழுவினர் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாகவும் ஐ.நா கூறியுள்ளது.

 


பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினறும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், தற்காலிகமாக வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

இலங்கையில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கிறது என்று காவல் துறையின் புலனாய்வுத் தறை கூறிய பிறகும் தன்னுடைய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கும் மனோ கணேசன், இதையடுத்து தற்காலிகமாக இலங்கையை விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறிய இலங்கை அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல அவர்கள், கூடுதல் பாதுகாப்பு கோரி மனோ கணேசன் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

 


Posted in Abductions, Colombo, dead, disappearances, Eelam, Eezham, extra-judicial, extra-judicial killings, Freedom, Ganesan, HR, Human Rights, Killed, killings, Life, LTTE, Mahinda, Mahinda Rajapaksa, Mano, Mano Ganesan, MP, Murder, Prabhakaran, Rajapaksa, Security, Sri lanka, Srilanka, Tamils, Threat, Velupillai, Velupillai Prabhakaran | Leave a Comment »

Benazir Bhutto (1953-2007) – Former Pakistan Prime Minister Assassinated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

பேனசீர் புட்டோ படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

பேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

 


பாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்

அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை
அவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

 


தமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்
பேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்

பேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

கிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.


பன்னாட்டுத் தலைவர்கள் கண்டனம்

பேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

பேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

இந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.

அருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்கோசி
பிரெஞ்சு அதிபர் சர்கோசி

இந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.

 


பேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது

அதிபர் முஷாரஃப்
அதிபர் முஷாரஃப்

படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.

நாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது
பலபகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது

பாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.


some of the key events in her career:April 4 1979: Bhutto’s father, Zulfikar Ali Bhutto, is executed for the murder of a political opponent, two years after he was ousted as prime minister in a military coup.April 10 1986: Bhutto returns from exile in London to lead the Pakistan People’s party that her father founded.December 1 1988: Bhutto, aged 35, becomes the first female prime minister of a Muslim nation after winning parliamentary elections.August 6 1990: President Ghulam Ishaq Khan dismisses Bhutto’s government, citing corruption and a failure to control ethnic violence.October 19 1993: Bhutto takes the oath for a second term as prime minister.November 5 1996: President Farooq Leghari dismisses Bhutto’s second administration amid accusations of nepotism and undermining the justice system.April 14 1999: A court finds Bhutto guilty of corruption while she is out of the country. The conviction is later quashed, but Bhutto remains in exile.October 5 2007: President General Pervez Musharraf signs a corruption amnesty covering other cases against Bhutto, opening the way for her return and a possible power-sharing agreement.October 18 2007: Bhutto flies in to Karachi, where tens of thousands of supporters give her a rousing welcome amid tight security. Two bombs go off near her vehicle. More than 140 people are killed in the assassination attempt.

December 27 2007: Bhutto dies after a suicide bomb attack in Rawalpindi.


பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….

 

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.

இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.

 

அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

 

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

 

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

 

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

 


சிதைந்த கனவுகள்! துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலை!தந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.

சமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்?

அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.

முஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது!

அடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா? அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.

சிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை!


துணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவு!இஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண்டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.

மக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

அவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் இருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.

புட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :

பெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.

புட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.

மூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கொலைக்கார பகுதி :

பெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.


பேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.

ராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.

அவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

அந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.

இரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

பேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.

கூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்திருந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

லண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.

அவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.

கடைசி 46 நிமிடங்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.

அவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.

இதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.


பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.

இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.

தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்.பி.ஐ:

இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இன்று உடல் அடக்கம்:

இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.


பேநசிரின் உடலடக்கம்

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

பூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.

மற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.


பேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை

கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன
கார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன

பேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.

கடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.


பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?

 

பாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.

இனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.

தனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் எதிர்காலம்? – நிபுணர் கருத்து

 

பேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேரம் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.

பூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.

பேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .

தற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.

அதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.

————————————————————————————————————————————————————-
பேநசீருக்குப் பின் யார்?

இஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.

வியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.

அவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

பேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.

மக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.

ஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.

எனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது

அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.

பேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

இதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————————————————————————-
“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’

லண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.

1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

கடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
————————————————————————————————————————————————————-

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

பெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.

 


பெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு

படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ
படுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ

பெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.

பூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.

பூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 


துபைக்குச் சென்றார் பேநசீர் மகன்

கராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.

பேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.

துபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.

பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.

தலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.

தம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.

பேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
—————————————————————————————————————————————————————-

பேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி

இஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.

பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.

ஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.

பேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————————-
பேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்க மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.

இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.

இதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

இதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

உள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

படுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.

நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.

ஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.

பேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.

பேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.

பேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.

விசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.

துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.

பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————-

—————————————————————————————————————————————————————-

Posted in Assassinations, Benazir, Bhutto, Bombs, Campaign, dead, Elections, Killed, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, PAK, Pakistan, PM, Polls, PPP, Rawalpindi, Sharif, Suicide, Violence, Zulfikar, Zulfikar Ali Bhutto | 4 Comments »

Another Red Cross Staff Assassinated in Jaffna & Eelaventhan loses membership in Sri Lanka parliament

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

தவறு தன்னுடையதல்ல என்கிறார் ஈழவேந்தன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த விடயத்தில் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் ஆகவே தனது நிலைமையை உணர்ந்து தனது கட்சித் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் என்று தான் நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

தனது விடுமுறையை நீட்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் ஊடாக தான் ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், ஆயினும், நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவல் காரணமாக அவர் அந்த கடிதத்தை கையளிக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இன்று தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த நிலையில் தவறு தன்னுடையது அல்ல என்றும், குறிப்பிட்ட நாடாளுமன்ற அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை (சிறியளவு தவறாயினும்) ஆகியோரின் தவறினாலேயே தான் தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக நான்கு நாட்கள் தான் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்து மூன்று உரைகளை ஆற்றியிருந்ததாகவும், ஆயினும் வாக்களிப்பு தினத்தன்றே தான் அதற்கு தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து ஈழவேந்தன் மற்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே ஆகியோரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


செஞ்சிலுவைச் சங்க ஊழியர் கொலை

யாழ் நகரப் பகுதி
யாழ் நகரப் பகுதி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த 14 ஆம் திகதி கடத்தப்பட்டு பின்னர் கைதடியில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்க ஊழியராகிய 43 வயதுடைய சூரியகாந்தி தவராஜா கொல்லப்பட்டிருப்பதை சர்வதேச செஞ்சிலுவைக் குழு இன்று அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றது,

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சார்பில் குரல் தரவல்ல அதிகாரியாகிய டாவிடே விக்னட்டி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையில் பல வருடங்களாக அவர் பணியாற்றி வந்துள்ளதுடன், மூன்று வருடங்களாக பருத்தித்துறை பிரிவின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணிபுரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தவராஜா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினராலும் அதிகாரிகளினாலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இது, இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாரதூரமான சம்பவமாகும் எனவும், இதனால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது இன்று இலங்கையில் பணியாற்றும் செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பணியாற்றும் சூழல் குறித்தும் கவலையடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை சர்வதேச செம்பிறைச் சங்கம் கோரியிருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் டாவிடே விக்னட்டி தெரிவித்தார்.


Posted in Assassinations, Budget, dead, Eelam, Eelavendhan, Eelaventhan, Eezham, Eezhavendhan, Eezhaventhan, Jaffna, Killed, LTTE, Murder, NGO, Red Cross, RedCross, Sri lanka, Srilanka, UN, UNICEF, Volunteer, Volunteering, Volunteers | 1 Comment »

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Sri Lanka says 25 people killed in fighting: defence ministry

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன; 25 பேர் பலி

இலங்கையின் வடக்கே நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ் குடாநாட்டின் கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிளாலி இராணுவ முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளின் 2 பதுங்கு குழிகளையும் தாங்கள் தாக்கி அழித்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முகமாலை, நாகர்கோவில் மற்றும் வன்னிப் பகுதியில் பாலம்பிட்டி, தம்பனை ஆகிய பகுதிகளில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம், இந்த மோதல்களின்போது 12 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இதனிடையில் இரண்டு நாள் விஜயமாக யாழ் குடாநாட்டிற்குச் சென்றிருந்த பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் நீல் பெரி அவர்கள், யாழ் அரசாங்க அதிபர், யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோரைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.

பிரித்தானிய அரசின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பார்வியிட்ட அவர், அங்கு பணியாற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பணியாளர்களையும் சந்தித்துள்ளார்.

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் சிலரையும் அவர் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகளையும் நேரில் கண்டறிந்ததாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு

மனித உரிமை மீறல் சம்வங்கள் குறித்து பல்வேறுபட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையில் மிகமோசமான 15 மனித உரிமை சம்பவங்களை விசாரித்தறியும் பொருட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடித்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார்.

கதிர்காமர் கொலை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரித்துவருகிறது
  • முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை,
  • முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை,
  • முன்னாள் சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலை,
  • திருகோணமலையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை,
  • மூதூரில் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலை,

உள்ளிட்ட கடந்த காலங்களில் 15 மிக முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு, எட்டு பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006 நவம்பர் மூன்றாம் திகதி உருவாக்கியிருந்தார்.

அந்தக் கமிஷன் அதற்கு வழங்கப்பட்ட ஆணைக்குள் இவை குறித்த தனது விசாரணைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வதனை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே ஜனாதிபதி இதற்கான பதவிக்காலத்தினை 2008 நவம்பர் இரண்டாம் திகதிவரை நீடித்திருப்பதாக ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

இந்த விசாரணக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வை செய்யவே, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி P.N.பகவதி தலைமையிலான சர்வதேச பிரசித்தி பெற்ற நிபுணர்கள் குழுவொன்றினையும் உருவாக்கியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Posted in Assassinations, Attacks, Bay, bunker, dead, defence, Defense, Eelam, Eezham, Fights, Jaffna, Killed, LTTE, Murder, people, Sri lanka, Srilanka, Vavuniya, Wanni | Leave a Comment »

Prime Minister Lal Bahadur Shasthri – R Venkatraman (Biosketch)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

எளிமைக்கு இலக்கணம் சாஸ்திரி!

ஆர். வெங்கடராமன்

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டாலும் லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் லேசாக வலி ஏற்படுகிறது. ஈடு இணையற்ற எளிமையான மனிதர். பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் ஒரே மாதிரியாக இருந்தார். பதவியைத் தேடி அவர் சென்றதில்லை, மாறாக, பதவிகள்தான் அவரைத் தேடி வந்தன.

1950-ல் அப்போதைய நாடாளுமன்றத்துக்கு நான் சென்றபோது காமராஜரும் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததைக் கண்டேன். இருவருமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவர்கள். இருவரும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள், சொந்தமாக சொத்தோ, செல்வாக்குள்ள தொடர்புகளோ இல்லாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள். நேர்மை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் மூலம் உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள். இருவருமே சமூகத்தில் வறிய பிரிவினர் மீது எல்லையற்ற கரிசனம் கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் தலைவிரித்தாடியபோது நடுநிலையுடனும் நியாயமாகவும் சாஸ்திரி அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்ட விதத்தால் மிகவும் வியப்படைந்தேன். ஒரு தரப்பு அல்லது ஒரு கோஷ்டி சொல்வதை மட்டும் கேட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டார்.

காமராஜரிடம் அதே குணம்தான். ஒருதலைப்பட்சமாக யாராவது ஏதாவது கூறினால் அவர், “”பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடுவார். தில்லி அரசியல் வட்டாரங்களில் காமராஜரின் அந்த பதில் ரொம்பப் பிரபலம். இருதரப்பையும் கேட்டு, விருப்புவெறுப்பு இல்லாமல் எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் சாஸ்திரியின் நல்ல குணம், உயர் பதவிகளை அவர் வகிக்கப் பெரிதும் கைகொடுத்தது.

சாஸ்திரியின் அடக்கமும் காங்கிரஸ்காரர்களிடையே மிகவும் பிரசித்தியாக இருந்தது. சாஸ்திரியின் மகன் ஹரி, சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். நீ என்னுடைய மகன் என்று யாருக்கும் தெரிவிக்கக்கூடாது, என் பெயரைச் சொல்லி நீ கூடுதலாக எந்தச் சலுகையையும் யாரிடமும் பெறக்கூடாது என்றே மகனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார் சாஸ்திரி. சாஸ்திரியாரின் மகளும் மாப்பிள்ளையும் சென்னைக்கு வந்தபோது ஆளுநர் இல்லமான ராஜ்பவனில் தங்க மறுத்துவிட்டனர்.

அவர் பிரதமராகப் பதவி வகிக்தபோது இரவு 10 மணிக்கு அவரை அவருடைய அலுவலகத்தில் சென்று பார்த்தேன். அப்போது அவருடைய கையெழுத்துக்கு ஒரு கோப்பு வந்தது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட மேஜையில் பேனாவைத் தேடினார் அவர். வெளிநாட்டில் வாங்கிய என்னுடைய பால்-பாயிண்ட் பேனாவை நான் உடனே அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி கையெழுத்திட்டுவிட்டு என்னிடம் திருப்பித்தந்த அவர், நன்றாக எழுதுகிறது என்று கூறினார். வெளியே புறப்பட்ட நான், சாஸ்திரியாரின் உதவியாளரை அழைத்து, இந்தப் பேனா அவருக்குப் பிடித்திருக்கிறது, இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். அடுத்த நாள் சாஸ்திரியாரின் உதவியாளர் நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்து, சாஸ்திரியார் அதைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னார், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும் மத்திய அரசிலும் தாம் வகித்த பதவிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்துச் சென்றார் சாஸ்திரி.

ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்களில் அப்போது நிலவிய பல்வேறு வகுப்புகளை அவர் ரத்து செய்தார். மேல் வகுப்பு, சாதாரண வகுப்பு என்ற இரண்டை மட்டும் அனுமதித்தார். சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தினார்.

தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, பெரிய தொழில் நிறுவனங்களுடன் கதர், கிராமத் தொழில்களும் வளர்ச்சி பெற உரிய முக்கியத்துவம் தந்தார்.

பிரதமராக இருந்தபோது, தொழில் வளர்ச்சி, ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு பட்டியிலில் இருந்து பலவற்றைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாராளமயத்தை அப்போதே அவர் அனுமதித்தார்.

மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிராக பெரிய போராட்டம் நடைபெற்றது. 1965 ஜனவரி முதல் தேதி ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாறிவிடுவார்கள் என்று பெரிய போராட்டம் வெடித்தது. தென்னிந்திய மாநில மக்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட சாஸ்திரி, ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். 1965 ஜனவரி 1-க்குப் பிறகு ஹிந்தியுடன் ஆங்கிலமும் அரசு நிர்வாக நடைமுறையில் தொடர அவர் அதிகாரபூர்வ மொழி மசோதாவை அறிமுகம் செய்தார். காரியசாத்தியமாக முடிவெடுக்கும் அவருடைய பண்பு மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தமது துறையில் நடக்கும் தவறுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் அமைச்சர்தான் பொறுப்பு என்ற தார்மிக நெறியை முதலில் ஏற்படுத்தியவரே லால் பகதூர் சாஸ்திரிதான். அப்போதைய சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த பெரிய ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். நேருஜி எவ்வளவோ வலியுறுத்தி கேட்டுக்கொண்டும் அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

பொதுச்சபை கூட்டத்துக்கும், சபையின் நிர்வாக நடுவர் மன்றக் கூட்டத்துக்கும் இந்தியாவின் பிரதிநிதியாக பல முறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கிருப்பவர்கள், “நேருஜிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள் யார்?’ என்று என்னிடம் அக்கறையுடன் விசாரிப்பார்கள். ஜனநாயகம் தழைத்தோங்கும் எங்கள் நாட்டில், நேரம் வரும்போது உரியவரைத் தேர்ந்தெடுப்போம் என்றே நான் பதில் சொல்லிவந்தேன்.

நேருஜி மறைந்த பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு காமராஜரிடம் விடப்பட்டது. அப்போது கருத்தொற்றுமை மூலம் முடிவெடுப்பது என்ற உத்தியை காங்கிரஸ் பின்பற்றி வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி அவருடைய கருத்தை கேட்பது என்ற நடைமுறையை காமராஜர் பின்பற்றினார். மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி என்ற இருவர் இடையே போட்டி இருந்தது. பெரும்பாலானவர்கள் சாஸ்திரியையே விரும்பினர். அதை மொரார்ஜி தேசாயும் ஏற்றுக்கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக ஏற்கும் தீர்மானத்தை வழிமொழிந்தார்.

1966 ஜனவரி 11-ம் தேதி தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. திறமையான ஒரு நிர்வாகியை, சாமானிய மனிதனின் உண்மையான நண்பனை நாடு இழந்துவிட்டது.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று அவர் தந்த கோஷம் என்றும் நிலைத்திருக்கும். ஹிந்துஸ்தானம் வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையின் விளைவாக அவருள் உதித்ததே இந்த கோஷம்.

(கட்டுரையாளர்: முன்னாள் குடியரசுத் தலைவர்)

Posted in Agriculture, Assassination, Biography, Biosketch, CCCP, dead, Faces, Farmer, LB Shasthri, LB Shastri, Murder, names, people, PM, President, Prez, Prime Minister, Russia, Shasthri, Shastri, Tashkent, USSR, Venkatraman | Leave a Comment »

Murder sparks violence in Haryana town: Dalit-Jat fight breaks out in Sonepat

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

தலித் இளைஞர் கொலை: ஹரியாணாவில் வன்முறை

கோஹணா, ஆக. 30: ஹரியாணா மாநிலத்தில் மேலும் சில ஊர்களில் தலித் இளைஞர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.

ராகேஷ் லாரா என்ற தலித் இளைஞர், முன்விரோதம் காரணமாக கோஹணா என்ற ஊரில் கடந்த திங்கள்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 ஆகஸ்ட் 27-ம் தேதி பல்ஜீத் சிவாச் என்ற ஜாட் சமூகத்தைச் சேர்ந்த லேவாதேவிக்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ராகேஷ் லாரா முக்கிய எதிரியாகக் குறிப்பிடப்பட்டார்.

ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவு விக்கி என்ற நண்பருடன் அவர் பைக்கில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சுட்டுக்கொன்றது. இதை அடுத்து தலித் இயக்கங்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தின. கொலைகாரர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

புதன்கிழமை கோஹணாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக சீரடைந்தது. ஆனால் கர்னால், பிவானி போன்ற ஊர்களில் வன்செயல்களும் மோதல்களும் தொடர்ந்தன.

ராகேஷின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேசியக் கமிஷன் தலைவர் பூட்டா சிங், வால்மீகி சமாஜத் தலைவர் தசரத் ரத்தன் ராவண், நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் அதாவாலே ஆகியோர் அக்கிராமங்களுக்குச்சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். போலீஸôர் அத்துமிறீ நடந்ததாகக் கூறி கண்டித்தனர்.

ஹரியாணா மாநிலம் முழுக்க புதன்கிழமை முழு அடைப்பு நடத்த தலித் இயக்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன. அதனால் சில ஊர்களில் போலீஸôருக்கும் தலித் இளைஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

கர்னாலில் தடியடி: கர்னாலில் தேசிய நெடுஞ்சாலையில் தலித் இளைஞர்கள் மறியல் செய்ததால் அவர்களைக் கலைக்க போலீஸôர் லேசாக தடியடி நடத்தினர். அதில் 5 இளைஞர்கள் காயம் அடைந்தனர். இளைஞர்களில் சிலர் போலீஸôர் மீது கல் வீசினர். வாகனங்களையும் தாக்க அவர்கள் முற்பட்டனர்.

சோனேபட்டில் அமைதி: சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்த கோஹணா அமைந்துள்ள சோனேபட் மாவட்டத்தில் புதன்கிழமை சகஜநிலைமை நிலவியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. கல்வி நிலையங்கள், வங்கிகள், பிற நிறுவனங்கள் செயல்பட்டன. போலீஸôர் கோஹணா நகரில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிவானி நகரில் பழைய பஸ் நிலையம் அருகில் கல்வீச்சில் ஈடுபட்ட தலித் இளைஞர்களைக் கலைக்க போலீஸôர் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். பிவானியில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு இருந்தது.

யமுனா நகர் என்ற இடத்தில் பைக்குகளில் சென்ற தலித் இளைஞர்கள் எதிர்ப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

அம்பாலா நகரிலும் அம்பாலா கன்டோன்மென்டிலும் தலித்துகள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

சர்க்கி தாத்ரி என்ற ஊரில் தலித்துகள் ஊர்வலமாகச் சென்று தங்களுடைய கோரிக்கை அடங்கிய மனுவை சார்பு-கோட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

கைதால் நகரில் தலித்துகள் விடுத்த முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை.

பக்வாரா நகரில் தலித்துகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் அவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி, அழைப்பைத் திரும்பப்பெற வைத்தனர். பிறகு தலித்துகள் சாலையில் அமர்ந்து போக்குவரத்தைத் தடுத்தனர். அதிகாரிகள் மீண்டும் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

பஸ் எரிப்பு: ஹிஸ்ஸôர் மாவட்டத்தின் ஹான்சி நகரில் தலித் இளைஞர்கள், அரசு பஸ்ஸýக்கு தீ வைத்தனர். பஸ் ஊழியர்களே அதை அணைத்தனர். ஹிஸ்ஸôரில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்தே இருந்தன. பஸ்கள் வழக்கம்போல ஓடின.

Posted in Caste, Community, Dalit, Haryana, Jat, Murder, Punjab, Sonepat, Violence | Leave a Comment »