Shibu Soren convicted in his secretary Jha’s murder case
Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2006
கொலை வழக்கில் ஷிபு சோரனுக்கு எதிராகத் தீர்ப்பு
![]() |
![]() |
ஷிபு சோரன் |
கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, இந்திய நடுவண் அரசின் மூத்த அமைச்சர் ஷிபு சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷிபு சோரன் தனது உதவியாளரை கடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார், என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
ஷிபு சோரன் நிலக்கரித் துறையை வகித்து வந்தார். தீர்ப்பு வந்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலம் உருவாக முக்கியப் பங்கு வகித்த ஷிபு சோரன், ஏற்கனவே ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பதும் பிறகு மீண்டும் பதவியேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெறுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை.
மறுமொழியொன்றை இடுங்கள்