Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 26th, 2006

Mettupaalayam – Local body councillor gets into action to cleanup the roads

Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2006

மேட்டுப்பாளையம் நகரசபையில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்த கவுன்சிலர்

மேட்டுப்பாளையம், நவ. 26- மேட்டுப்பாளையம் நகராட்சி 15-வது வார்டுக் குட்பட்ட நிï எக்ஸ்டென்சன் வீதி, பெரிய பள்ளிவாசல் வீதி, திரு.வி.க. வீதி, அண்ணாஜிராவ் ரோடு ஆகிய பகுதிகள் உள்ளது. கடந்த 4,5 நாட்காக 15-வது வார்டில் உள்ள வீடுகளில் குப்பை சேகரிக்க நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் யாரும் வரவில்லையெனத் தெரிகிறது.

இதனால் வீடு களில் மலைபோல் குப்பை தேங்கியது. இதுபற்றி வார்டு கவுன்சிலர் முகமது யூனுஸ் நகராட்சி நிர்வாகம் மற்றும் மேஸ்திரியிடம் பலமுறை எடுத்துக் கூறினார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகி றது.

இதனால் வேதனையும், வெறுப்பும் அடைந்த கவுன்சிலர் முகமது ïனுஸ் காலை குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு பெரிய பள்ளிவாசல் வீதி, நிï எக்ஸ்டென்சன் வீதி, தி.ரு.வி.க. வீதி ஆகிய வீதிகளில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார். சேகரித்த குப்பை களை காயிதேமில்லத் திடலில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்தில் கொட்டினார்.

இதே நிலை கடந்த வாரம் 3-வது வார்டிலும் காணப்பட்டது. உடனே வார்டு கவுன்சிலர் முகமது உசேன் வார்டுக்குட்பட்ட சிறுமுகை ரோடு, தோல்-ஷாப், சீரங்கராயன் ஓடை ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று குப்பை வண்டியில் குப்பையை சேகரித்தார்.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு, துப்பு ரவு தொழிலாளர்களின் மெத்தனப்போக்கு பொது மக்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.

Posted in Tamil | Leave a Comment »

Thanjavur Ponniah Ramajayam College’s Murugesan caught with Hawaala money

Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2006

சென்னை விமானத்தில் வந்த தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி `ஹவாலா’ பணம் சிக்கியது

சென்னை, நவ. 26- சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற் கொண்டனர்.

அப்போது டெல்லியில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சூட்கேசில் ரூ.1 கோடியே 2 லட்சம் ஹவாலா பணத்துடன் தொழில் அதிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரது பெயர் முருகேசன் (வயது 45) என்பதும், இவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் என்பதும் தெரிய வந்தது. இவர் பொன்னையா ராம ஜெயம் என்ற பெயரில் கல்லூரி நடத்தி வருகிறார்.

வருமான வரி துறை அதிகாரி களின் பிடியல் இருக்கும் தொழில் அதிபர் முருகேசனிடம் ரூ.1கோடி பணம் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள இவரது கல்லூரி அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரிதுறையினர் சோதனை நடந்தது.

Posted in Chennai, College, Hawala, Indian Airlines, Madras, Murugesan, New Delhi, ponniah ramajayam college, ponniah ramajeyam college, Tanjore, Thanjavur | 3 Comments »

Dalit lady’s nose is severed – ‘Land’s chastity is lost’

Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2006

புல் அறுத்ததால் நிலம் தீட்டாம்: தலித் பெண்ணின் மூக்கறுத்த பிகார் நில உடைமையாளர்

Chennai Online News Service – View News: “Dalit woman raped by upper caste youths”

முஸாபர்நகர், நவ. 26: தலித் பெண் ஒருவர் வயலில் நுழைந்து புல் அறுத்ததால் நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாகக்கூறி அப் பெண்ணின் மூக்கை நிலத்தின் உரிமையாளரும் அவரது மகனும் அறுத்துள்ளனர்.

பிகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நரோட்டம்பூர் கிராமத்தில் வியாழக்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது.

இக் கிராமத்தில் ரந்தீர் என்பவருக்குச் சொந்தமான வயலில் தலித் பெண் ஒருவர் கால்நடைக்கு புல் அறுத்துள்ளார். அப்போது நில உரிமையாளர் ரந்தீரும் அவரது மகனும் வந்தனர். தலித் பெண் நுழைந்ததால் தனது நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாக நிலப்பிரபு கூச்சலிட்டார். அவருடன் தலித் பெண் வாக்குவாதம் செய்தார்.

அப்போது திடீரென அப் பெண் வைத்திருந்த அரிவாளை வாங்கி அவருடைய மூக்கை நிலப்பிரபு அறுத்துவிட்டார். ரத்தம் கொட்டியபடி ஆபத்தான நிலையில் அப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் கிராமத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Atrocities, Bihar, Mussafarnagar, muzaffarnagar, Narottampur, SC, Scheduled Caste, ST, Tewra, Upper Caste, Youths | Leave a Comment »