Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Secretary’ Category

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

Madurai Bye-elections – June 26 Polls: Congress, DMK, ADMK, Vijaikanth, Azhagiri

Posted by Snapjudge மேல் மே 26, 2007

மதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்!

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.

அதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.

தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.

எனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.

திமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.

அதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

தினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.

காங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.

தேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை

  • கம்யூனிஸ்ட் 2 முறையும்,
  • அதிமுக 4 முறையும்,
  • திமுக,
  • காங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

———————————————————————————————————————————

ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்

புதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.

வாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.

இடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

——————————————————————————————————————-

மதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு?

பா. ஜெகதீசன்

சென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.

எனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.

தி.மு.க. பின் வாங்கியது ஏன்?

அதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.

காங். நிலை:

இந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.

அ.தி.மு.க.வின் பிரச்னை:

இந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.

தேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.

கடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.

இந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.

2006 தேர்தலில்…:

2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.

சண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களில்…:

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):

1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.

1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.

1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.

1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.

1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.

1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.

1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.

1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.

2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.

அ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

—————————————————————————————————

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும்

  • மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்,
  • மாவட்ட செயலாளர் ராஜாங்கம்,
  • தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன்,
  • அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,
  • ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,
  • கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை

  • காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,
  • மாணவரணி செயலாளர் உதய குமார்,
  • முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,
  • முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம்,
  • முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,
  • எம்.எஸ்.பாண்டியன்,
  • தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்

  • கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,
  • விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
  • மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

————————————————————————————-

இடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா?

மதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.

சென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

விலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

————————————————————————————-

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜ×ன். 4-

மதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

செல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.

செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

—————————————————————————————————–

மதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை, ஜுன். 9-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.

இதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.

1. கோரிப்பாளையம்,
2. தல்லா குளம்,
3. கரும்பாலை,
4. தத்தனேரி,
5. பந்தல்குடி,

6. சின்னகீழத்தோப்பு,
7. மீனாம்பாள்புரம்,
8. ஜம்புரோ புரம்,
9. நரிமேடு,
10. செல்லூர்,

11. 50 அடிச்சாலை,
12. 60 அடி சாலை,
13. பி.டி.புரம்,
14. அருள்தாஸ்புரம்,
15. பெத்தானியாபுரம்,

16. அழகரடி,
17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.

இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.

பதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounder, Bye-elections, CB-CID, CBI, Chellur Raju, Chengottaian, Chengottaiyan, CID, Colour TV, Congress, DDMK, Desiya Murpokku Dravida Kalagam, Desiya Murpokku Dravida Kazhagam, Dhinakaran, Dhinamani, Dinamalar, Dinamani, Dist Secy, District, DMDK, DMK, Economy, Elections, Free, History, Inflation, Jagadeesan, Jagadhisan, Jegadeesan, Jegadessan, Jegadhisan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Loser, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madhusoodhanan, Madhusudhanan, Madhusuthanan, Madurai, Madurai West, Manifesto, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, O Paneerselvam, Op-Ed, Opinion, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Polls, Predictions, PTR, Rajan Chellappa, Recession, Research, Secretary, Sellur Raju, Sengottaian, Sengottaiyan, Survey, VaiGo, Vaikai, VaiKo, Viduthalai Chiruthaigal, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Winner | 13 Comments »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

Pillay wants longer term for Carvalho

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை

கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.

கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:

பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.

பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Asiad, Asian Games, Azlan, Azlan Shah, Baskaran, Bhaskaran, Captain, Carvalho, Coach, Cup, Dhanraj, foreign coach, Game, Hockey, IHF, Indian Hockey Federation, Joaquim Carvalho, K Jothilkumaran, K P S Gill, Loss, maharashtra, Olympics, PHL, Pillai, Pillay, Politics, Premier Hockey League, President, Rajinder Singh, Secretary, selection, Sports, Sultan Azlan Shah, Tamil Nadu, TamilNadu, Taminadu, Team, Term, TN, trial, Vasudevan Baskaran, Victory, Win, World Cup | Leave a Comment »

DMK party official attacks Government Officers for omitting his name

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007

அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை தாக்க முயன்ற திமுக நிர்வாகி

புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மத்திய இணை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் அலுவலர்களைத் தாக்க முயன்றதாக திமுக மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இவ்விழாவுக்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் திமுக மாவட்ட பொருளாளருமான த. சந்திரசேகரன் பெயர் இடம்பெறவில்லையாம்.

இதனால் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே விழா மேடையிலிருந்த ஒன்றிய ஆணையர் மாரியப்பனிடம் சந்திரசேகரன், “ஏன் எனது பெயர் இடம்பெறவில்லை’ எனத் திட்டியதோடு தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்: இந்நிலையில், விராலிமலை ஒன்றிய ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபில்சாரட்கரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Posted in abuse, Ceremony, Chandrasekaran, Collector, District, District Secretary, DMK, Fame, Function, Government, Local Body, Mariappan, Mariyappan, Minister, Petty, Police, Politics, Power, Raghupathi, Raghupathy, Ragupathi, Ragupathy, Secretary, Viraalimalai, Viralimalai | Leave a Comment »

Seema Basheer – MDMK functionary arrested by vicious DMK Government

Posted by Snapjudge மேல் மார்ச் 22, 2007

சீமா பஷீர் கைது செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை: வைகோ

சென்னை, மார்ச் 22: மதிமுக அமைப்புச் செயலாளர் சீமா பஷீர் கைது செய்யப்பட்டிருப்பது பழி வாங்கும் நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

க்ஷஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:/க்ஷ

இலங்கைக்கு பால்ரஸ் குண்டுகளைக் கடத்துவதன் பின்னணியில் செயல்பட்டார் என்று குற்றச்சாட்டின் கீழ் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் எள் அளவும் உண்மை இல்லை. மதிமுகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மதிமுகவில் பிளவை ஏற்படுத்த முதல்வர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போன நிலையில், மதிமுக மீது பொய்வழக்குப் போடவும் களங்கம் சுமத்தவும் திட்டமிட்டதன் விளைவுதான் சீமா பஷீர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கு.

இலங்கைக்கு ஆயுதம் கடத்துவதாகக் கூறி மதிமுகவின் முன்னணித் தலைவர்கள் ஓரிருவர் மீது பொய் வழக்குப் போட தீவிரமான முயற்சிகள் காவல்துறை வட்டாரத்தில் நடைபெறுவதாக மார்ச் முதல் வாரத்திலேயே நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்தன. இந்தப் பின்னணியில்தான் சீமா பஷீர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சர்க்கரை நோயாலும், ரத்த அழுத்தத்தாலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள சீமா பஷீரை போலீஸôர் விசாரணைக்கு அழைத்தவுடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனையும் மருந்துகளும் பெற்றுக்கொண்டு அவராகவே க்யூ பிரிவு போலீஸôரிடம் ஆஜர் ஆனார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு எந்த சூழ்நிலையிலும் மதிமுக ஆதரவு அளிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் மதிமுக எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டது இல்லை, ஈடுபடப் போவதும் இல்லை.

காவல்துறையைப் பயன்படுத்தி திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். உண்மையும் நீதியும் இறுதியில் வெல்லும் என்று வைகோ கூறியுள்ளார்.

Posted in abuse, ADMK, Alliance, Barkath, cardamom, Chinjee, DMK, functionary, Government, Hawala, Illegal, L Ganesan, Law, LG, LTTE, MDMK, Money, Order, Pepper, Police, Raids, Ramachandran, Saree, Secretary, Seema Basheer, Seema Bashir, Senjee, Senjeeyar, Trade, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo | Leave a Comment »

Tha Kiruttinan Murder case – Mu Ka Azhagiri obstructs procedures?

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைசிறப்பு நிருபர்

புதுதில்லி, ஜன. 12: மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி, சாட்சிகளில் ஒருவரான முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக்பான் மற்றும் லோகேஸ்வர் சிங் பன்டா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

தமிழக அரசுக்கும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதில்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

முத்துராமலிங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அழகிரி, தன்னிடம் உள்ள ஏராளமான பண பலத்தையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி வருகிறார். வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம், அழகிரியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி நீதிமன்றத்துக்கு வந்து கோஷமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீதிமன்ற அறைக்குள் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சாட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

அரசுத் தரப்பு சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருட்டிணனின் சகோதரர் உள்பட மேலும் பல சாட்சிகள், மிரட்டல் காரணமாக நீதிமன்றத்துக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவருக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தற்போதைய (திமுக) அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி மாற்றப்பட்டுவிட்டதாக அதற்குக் காரணம் கூறியிருக்கிறது.

தற்போதைய அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் சார்பில், ஏற்கெனவே ஆஜரானவர். அதனால், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படாவிட்டால், நீதியே கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும் என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

——————————————————————————————

தா.கிருட்டிணன் கொலை வழக்கு: துணை மேயர் உள்பட 11 பேர் ஆஜர்

மதுரை, ஜூன் 2: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கே.கே. நகரில் உள்ள அவரது வீடு அருகே 2003 மே 20-ம் தேதி தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக் கொலை தொடர்பாக மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான தற்போதைய

  • மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன்,
  • எஸ்ஸார் கோபி,
  • கராத்தே சிவா,
  • ஈசுவரன்,
  • மணி,
  • சீனிவாசன்,
  • பாண்டி,
  • ராஜா,
  • கார்த்திகேயன்,
  • பாலகுரு,
  • முபாரக் மந்திரி,
  • இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்ததன்பேரில், இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். மு.க.அழகிரி, கராத்தே சிவா ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.

Posted in abuse, Accused, ADMK, Alagiri, Alakiri, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, CM, Court, dead, DMK, Karate Siva, Kiruttinan, Krishnan, Law, Law and Order, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madurai, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Muthuramalingam, Order, Paandi, Pandi, Police, Power, Secretary, Supreme Court, Tha Kiruttinan, Tha Krishnan, Thaa Kirutinan | 3 Comments »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »

Indian Cricket Association Elections – Vengsarkar for President

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006

கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் பதவி: வெங்சர்க்காரை எதிர்த்து 2 பேர் போட்டி

மும்பை, செப். 22- இந்திய கிரிக்கெட் வீரர் கள் தேர்வு குழு தலைவர் கிரண்மோரே பதவி முடி கிறது. அதே போல இதன் உறுப்பினர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர் பதவியும் முடிகிறது. வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் மும்பையில் கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடக் கிறது. அதில் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள்.

இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் வெங் சர்க்காரை நிறுத்த மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அவருக்கு மேற்கு மண்டல கிரிக்கெட் சங்கங்கள் அனைத்தும் ஆதரவாக உள்ளன. வெங்சர்க்காரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட 2 பேர் தயாராகி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் திராஜ் பிரசன்னா. இவர் 1970-ம் ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடினார்.

அதே போல கர்சான் காவ்ரியும் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இவர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடி உள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ஆதரவு இல்லை.

சந்திரசேகருக்கு பதிலாக முன்னாள் இந்திய வீரர் வெங்கடபதிராஜ× தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Posted in Association, Batsmen, Bowler, Cricket, Dhiraj Prasanna, Elections, ICC, India, Kharsan Gavri, Mumbai, President, Secretary, Tamil, Vekatapathy Raju, Vengsarkar, West Zone | Leave a Comment »