Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 6th, 2006

Somali Parliament Leader Meets With Islamist Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சோமாலிய கிளர்ச்சிக்காரர்களுடன் சமரசத்துக்கு முயற்சி

ஷரிப் ஷேக் அடன்
ஷரிப் ஷேக் அடன்

சோமாலியாவின் இடைக்கால நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ஷரிப் ஷேக் அடன், இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைநகர் மொகடிஷுவிற்கு சென்றுள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஆயுதக்குழுக்கள் நகரத்தினை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

அமைதி ஏற்படுவதற்காகவும், சோமாலியர்கள் ஒன்றிணைவதற்காகவும், தான் தலைநகர் சென்றுள்ளதாக அடன் கூறுகின்றார்.

தலைநகர் மொகடிஷு கடந்த ஜுலை மாதத்தில் இஸ்லாமிய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின்னர், மொகடிசஷுவிற்கு செல்லும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இவர்.

இஸ்லாமிய படைகள் தலைநகரின் கட்டுப்பாட்டினை எடுத்து கொண்டதினை அடுத்து, பதினைந்து ஆண்டுகளாக தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் நகரத்தினை விட்டு வெளியேறின.

ஆனால் சபாநாயகர் நடத்திவரும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தின் இதர உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு ஆதரவாக செயற்பட கூடும் என்றும், இதனால் சர்வதேச சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கம் கலைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

Posted in Fear, Islam, Mogadishu, Negotiation, parliament, Sharif Hassan Sheikh Adan, Somalia, Speaker, Sudan, Talks | 3 Comments »

‘Pookkadai, Purasaiwakkam, Pondy Bazaar Shops should be removed by Pongal’

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பூக்கடை, புரசைவாக்கம், பாண்டி பஜார் நடைபாதை கடைகளை பொங்கலுக்குள் அகற்ற வேண்டும்: ஐகோர்ட்டு வற்புறுத்தல்

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சென்னையில் முக் கிய இடங்களில் நடைபாதை கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டனர்.

இந்த குழு நடைபாதை கடைகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரித்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.அதில் பூக்கடை பகுதி என்.எல்.சி. போஸ் ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், பார்க் டவுன் ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள கடைகளை அகற்றி அல்லிகுளம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை போல புரசைவாக்கம் பகுதி கடைகளையும் அகற்றி அல்லிகுளத்திற்கு கொண்டு வர வேண்டும். பாண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளை அந்த பகுதியில் 4 மாடி கட்டி டம் ஒன்று கட்டி அங்கு மாற்ற வேண்டும் என்று சிபாரிசு செய்தனர்.

இந்த அறிக்கை அடிப்படை யில் இன்று விசாரணை நடந்தது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் இந்த அறிக்கையை ஏற்பதாக அறிவித்தனர். அறிக்கையின் அடிப்படையில் பொங்கலுக்குள் கடைகளை அகற்ற வேண்டும். மாற்று இடங்களுக்கான ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். இது தொடர்பான முழு தீர்ப்பு விரைவில் கூறப்படும் என்று கூறினார்கள்.

Posted in Allikulam, Association, Congestion, High Court, Judgement, Madras, Merchants, NSC Bose Road, Police, Pondy Bazaar, Pongal, Pookkadai, Purasaiwakkam, Ramasamy, Removal, Shops, Small Business, Street Vendors, Traffic | 2 Comments »

M Karunanidhi – Airport Expansion, Super-Fast Intra-city Service et al.

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கம்: திருவள்ளூவர்-தொல்காப்பியர் பெயரில் விருதுகள்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மோட்டார் வாகன தொழிலை மேம்படுத்த சென்னை அருகே ஒரகடத்தில் வாகன சோதனை ஆராய்ச்சி மையத்தை இங்கு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தோம். பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் சேதுசமுத்திர திட்ட விழாவை தொடங்கி வைக்க வந்தபோது இந்த கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தார்.

அதன்படி இன்று அடிக்கல் நாட்ட வந்துள்ளார். ஏறக்குறைய 300 ஏக்கர் நிலத்தில் இந்த வாகன மையம் அமைகிறது. நீண்ட காலம் நெஞ்சில் கனவாக இருந்த இந்த திட்டம் இன்று எழுச்சியுடன் தொடங்கி உள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியும் தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உதவி இருக்கிறார்கள்.

150 ஆண்டுகள் கனவாக இருந்த சேதுசமுத்திர திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. 100 ஆண்டு கோரிக்கையான தமிழ் மொழியை செம்மொழி ஆக்கும் எண்ணத்துக்கும் வடிவம் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நோக்கியா உள்பட பல தொழிற்சாலைகள் வர ஒத்துழைப்பு அளித்துஉள்ளனர். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1553 கோடி செலவில் இரும்பு உருட்டாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அருகே வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கேட்டதை கேட்டபடி வழங்கி வரும் பிரதமர் மன்மோகன்சிங், கூட்டணி தலைவர் சோனியாவுக்கு தமிழக மக்கள் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை பல திட்டங்கள் வழங்கி இருந்தாலும் இன்னும் சில கோரிக்கைகளையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

குமரி மாவட்டம் குளச்சலில் பெரியதுறைமுகம் அமைக்கப்பட வேண்டும். 1.1.07 முதல் தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டுவரி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான இழப்பீட்டையும் ஈட்டுத் தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி நவீன மயமாக்குதல், சென்னை, மதுரை, சென்னை-கோவை இடையே அதிவேக புல்லட் ரெயில் விட ஏற்பாடு செய்தல், தமிழை செம்மொழி ஆக்கினாலும் அது தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வழி வகுக்கப்பட வேண்டும். செம்மொழி பெயரில் ஆண்டுதோறும் “வள்ளுவர் விருது” “தொல்காப்பியர் விருது” ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

மேலும் பல கோரிக்கைகளை கடிதம் வாயிலாகவும் நேரிலும் தெரிவித்து இருக்கிறோம். அவற்Ûயும் நிறைவேற்றி தர வேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. இது மேலும் தொடரும். அந்த வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மோட்டார் வாகனம் தொடர்பான முதலீடு இந்திய அளவில் 50 ஆயிரம் கோடி. இதில் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி நடக்கிறது.

தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலில் முதன்மை பெற்று திகழ்கிறது. ஏற்கனவே அசோக் லேலண்ட், டி.வி.எஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

1996-க்கு பிறகு போர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டில் 35 சதவீத மோட்டார் உதிரிப்பாகங்கள் தயார் ஆகின்றன. 20 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகின்றன.

இந்த ஆராய்ச்சி மையத்தில் இந்திய அளவிலான முதலீடு 1718 கோடி. இதில் ரூ.470 கோடி முதலீட்டில் இங்கு ஆய்வு மையம் தொடங்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் ஐரோப்பிய விதிமுறைப்படி சோதனை சான்றிதழ் பெற முடியும். பல்வேறு நவீன அமைப்புகளை வாகனங்களில் புகுத்த முடியும்.

1.8 கிலோ மீட்டர் நீள சோதனைப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். உள்ளூர் தொழிலாளர்கள்தான் வேலையில் அமர்த்தப்படுவார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 5 தொழிற்சாலைகள் இங்கு வந்துள்ளன. 24 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 26 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைத்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வாகன சோதனை மையம் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

2015-க்குள் 6 அல்லது 7 மடங்கு இது வளர்ச்சி பெறும். 17 முதல் 20 மில்லியன் டாலர் அளவு ஏற்றுமதி பெருகும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

Posted in Airport, Chennai, desalination, Expansion Project, Kulachal, Kumari Harbour, Madras, Manmohan Singh, New Harbor, Pozhichaloor, Projects, Sea water, Sethu Samuthiram, Sidha Research, Sonia Gandi, Tamil Nadu, Thiruvalluvar Award, Tholkappiyar Prize, TN, Treatment Plant, Waste Water | Leave a Comment »

London Diary :: Iraa Murugan

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

லண்டன் டைரி: அடல்ஃபி தியேட்டர்…வில்லியம் ஆவி!

இரா. முருகன்

டிரஃபால்கர் சதுக்கத்திலிருந்து பொடிநடையாக ஸ்ட்ராடுக்குப் போகலாம். பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தால் நம் அதிர்ஷ்டம் நமக்கு முன்னால் ஒரு நாலு டூரிஸ்ட்கள் அன்ன நடை பயின்று கொண்டிருப்பார்கள். அதாவது காலில் வலி வந்த வயசான அன்னம் களிம்பு வாங்கப் புறப்பட்டது போன்ற நடை. என் மிச்ச வாழ் நாளை அவர்களுக்குப் பின்னால் டிரஃபால்கர் சதுக்க நடைபாதையில் ஊர்ந்தபடி கழிக்க உத்தேசம் இல்லாமல் சுற்றுமுற்றும் பார்க்க, சுரங்கப் பாதை வா வா என்கிறது.

சப்-வேயில் இறங்குகிறேன். மெலிசான இருட்டு. போனால் போகிறது என்று ஒரு குழல் விளக்கு கொஞ்சம்போல் சிந்திய வெளிச்சம் இருட்டை அடிக்கோடு இட்டுக் காட்டுகிறது. குப்பென்ற சிறுநீர் வாடை மூக்கைக் குத்தக் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். லண்டன்தான். எங்கிருந்தோ ஒரு கெட்ட வார்த்தை உரக்க ஆரம்பித்துத் தீனமாக முடிகிற சத்தம். சுரங்கப் பாதை சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடிக்கு ஓர் இளவயது வெள்ளைக்காரன். பக்கத்தில் காலி பாட்டில். கூடவே பாதி உடைந்து தரையில் கண்ணாடிச் சில்லு சிதறிய இன்னொன்று…””சில்லறை இருக்கா?” அவன் கேட்கிறான். இல்லை என்று தலையாட்டிவிட்டு, வழியில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததை மிதிக்காமல் ஜாக்கிரதையாக நடக்கிறேன். மறுபடியும் வசவு, அழுகல் வாடையோடு பின்னால் தொடர்கிறது.

சுரங்கப்பாதை படியேறி வெளியே வரும்போது, அழகும் ஆடம்பரமுமாக இன்னொரு லண்டன் சிரிக்கிறது. பரபரப்பான ஸ்ட்ராண்ட் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்னால் நடந்தால், இன்னும் கடைகள், நாடகக் கொட்டகைகள். நடுத்தெருச் சிலைகள். தூரத்தில் பிரதமர் டோனி ப்ளேர் குடியிருக்கும் டவுனிங் தெரு. நாடாளுமன்றம். இரண்டாம் யுத்தகாலத் தலைமைச் செயலகமான போர் அறைகள் என்று நீண்டு வளைந்து போகும் பாதை.

“தள்ளுபடி விற்பனை’, அடல்ஃபி தியேட்டருக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு பெரிய கடையில் விளம்பரம். கறீஸ் (இன்ழ்ழ்ஹ்ள்) என்ற அந்தப் பெரிய கடையில் டிவி, டிஜிட்டல் காமிரா, பாட்டு கேட்கும் ஐபாட், கம்ப்யூட்டர் என்று சகல எலக்ட்ரானிக் பொருட்களும் சரித்திரம் காணாத மலிவு விலையில், இன்றைக்கு மட்டும். சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்கொண்டு கறீஸ் கடைக் கூட்டத்தில் கலக்கிறேன்.

வாங்கிய பொருளோடு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டையும் கல்லாவில் நீட்டுகிறேன். எலிசபெத் ராணியம்மா படம் இல்லாத அந்த நோட்டைக் கடைக் காசாளர் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்கிறார். நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் தலை போட்ட அந்தப் பணம் நான் வசிக்கிற ஸ்காட்லாந்து பிரதேசத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்த மாநிலத்துக்கு மட்டும் தனி நாடாளுமன்றம், தனி கரன்சி நோட்டு என்று பிரிட்டீஷ் அரசு உரிமை கொடுத்திருக்கிறது.

“”என்ன பங்காளி, உங்க எடின்பரோவிலே பத்து, இருபது பவுண்ட் நோட்டு மட்டும்தான் அடிப்பீங்களா? இந்த வயசாளி படம் போட்ட ஐம்பது பவுண்ட் ஸ்காட்லாந்து நோட்டை நான் பார்த்ததேயில்லையே..”

மீதிச் சில்லறையைக் கொடுத்தபடி, கறுப்பர் இனக் காசாளர் “மேட்’ என்று என்னை சிநேகிதத்தோடு பங்காளியாக அழைத்து விசாரிக்கிறார். சமீபத்தில் யாரோ பஸ் கண்டக்டர் தன்னை “மேட்’ என்று கூப்பிட்டதை ஆட்சேபித்து தினப் பத்திரிகையில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் முழுப்பத்திக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது நானில்லை.

“”போனாப் போகுதுன்னு ராணியம்மாவை ஐம்பது பவுண்ட் நோட்டிலே மட்டும் விட்டு வச்சிருக்கோம். அது சரி, உங்க ஊர்லே ஒரு பவுண்ட் நோட்டு கிடையாது. எங்க கிட்டே உண்டே அது” என்கிறேன். “”நிஜமாவா” அவர் ஆவலோடு கேட்க, பாக்கெட்டிலிருந்து ஸ்காட்லாந்து கரன்சி நோட்டு ஒரு பவுண்ட்டை எடுத்துக் காட்டுகிறேன்.

அடல்ஃபி தியேட்டர் வெறிச்சோடிக் கிடக்கிறது சரியாக இருநூறு வருடத்துக்கு முன்னால் அதாவது 1806-ம் வருடம் கட்டிய நாடகக் கொட்டகை அது. ராயல் தியேட்டர், ராயல் மாடர்ன் அடல்ஃபி தியேட்டர், ராயல் அடல்ஃபி தியேட்டர் என்றெல்லாம் இந்த இருநூறு வருடத்தில் அவ்வப்போது பெயரை மாற்றி, இடித்துக் கட்டி, தற்போது வெறும் அடல்ஃபி தியேட்டராக இயங்குகிறது. இந்தத் “தற்போது’ என்பது 1930-ல் தொடங்குகிற சமாச்சாரம். ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பெத் தொடங்கி, ஈவிதா வரை இருநூறு வருடத்தில் இங்கே மேடையேறாத நாடகமே இல்லை.

இந்தத் தியேட்டரிலும் சுற்றுப் புறத்திலும் ஒரு பேய் உலாவுகிறதாகத் தெரிகிறது. 1897-ம் வருடம் ஒரு டிசம்பர் மாதக் குளிர்கால ராத்திரியில் வேஷம் கட்ட பக்கத்து முட்டுச் சந்து வழியாக அடல்ஃபி தியேட்டருக்கு விரைந்து கொண்டிருந்த வில்லியம் டெரிஸ் என்ற ராஜபார்ட் நடிகரை, சக நடிகர் ஒருத்தர் குத்திக் கொலை செய்துவிட்டாராம். “போய்ட்டு வரேன்’ என்ற கடைசி வாக்கியத்தோடு உயிரை விட்ட வில்லியம் இன்னும் இடத்தை விட்டுப் போகவே இல்லையாம்.

அடல்ஃபி தியேட்டரில் “ஈவிதா’ பகல் காட்சிக்கே இடம் கிடைத்தது. நான் நுழைந்தபோது தனியாகப் பத்து நிமிடம் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். என் ஒருத்தனுக்காக ஒரு பெரிய கோஷ்டியே பாடி நடிக்கப் போகிறது என்ற பெருமை சின்னாபின்னமாக, சீக்கிரமே அவை நிறைந்தது. நாலு மாதமாக ஒவ்வொரு தினமும் ஹவுஸ்ஃபுல்லாக நடக்கிற நாடகமாக்கும் ஈவிதா.

“”ஈவிதாவா நடிக்கிற எலினா ரோஜர், வீட்டுலே விசேஷம்னு அர்ஜெண்டினா போய்ட்டாளாம். இன்னிக்கு இன்னொரு பொண்ணு தான் நடிக்கறா” பக்கத்து சீட் அண்ணாச்சி கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல, அனுதாபத்தோடு தலையாட்டுகிறேன்.

ஐம்பதுகளில் அர்ஜெண்டினா அதிபராக இருந்த மேனுவெல் பெரானின் மனைவி ஈவா பெரான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் இது. சின்னக் கிராமத்தில் பாடகியாக வாழ்க்கையைத் தொடங்கி, அர்ஜெண்டினா தலைநகர் போனஸ் அயர்ஸ் வந்து மானுவல் பெரானின் ஆசை நாயகியாக, அப்புறம் அவருடைய அன்பு மனைவியாக, நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தலைவி ஈவிதாவாக எனப் படிப்படையாக உயர்ந்து, எதிர்பாராத தருணத்தில் நோயில் விழுந்து மரித்த ஈவா பெரானின் வாழ்க்கை பாட்டுக்களுக்கும் நடனத்துக்கும் இடையே பார்வையாளன் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈவா பெரான் சந்தித்தே இருக்காத பொலிவீயா புரட்சிக்காரன் செகுவேரா தான் அந்தப் பார்வையாளன் பாத்திரம்.

“”டோண்ட் க்ரை ஃபார் மீ அர்ஜெண்டினா” (எனக்காக அழாதீர்கள், அர்ஜெண்டினா மக்களே). இறக்கப் போகும் ஈவிதா உருக்கமாகப் பாட அரங்கத்தில் கலங்காத கண் இல்லை. நாடகம் முடிந்து செகுவேரா குரலில் “குட்நைட் அண்ட் கம் எகெய்ன்’ என்று வாய்க்குள் பாடிக்கொண்டு சப்-வே வழியாகத் திரும்புகிறேன்.

“”எப்படி இருந்தது நாடகம்?”- கத்திக்குத்தில் செத்துப்போன ராஜபார்ட் வில்லியம் பக்கத்தில் மிதந்தபடி விசாரிக்கிறார்.

“”பிரமாதம்: ஆமா, நீங்க எப்படி பகல் நேரத்திலே உலாத்தறீங்க?”

“”நானும் மேட்னி ஷோ நடத்துறேன்.” புகைபோல் அந்த ஆவி டிரஃபால்கர் சதுக்கப் பக்கம் எழுந்து போகிறது.

Posted in Adelphi Theater, Diary, Dinamani, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, London, Series, Thinamani Kathir | 1 Comment »

Kavitha Deepan :: Vetrilai, Paakku, Thaamboolam

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பாரம்பரியம்: கும்பகோணம் சீவலே… சீவல்!

இ. கவிதாதீபன்

“கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’ என்று நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு சிவக்கச் சிவக்க வெற்றிலை- சீவல் போட்டு சரத்குமாருடன் ஆடும் காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வெற்றிலையும் சீவலும் போட்டு குஷியாக இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முதல் மணக்க மணக்க தாம்பூலம் போட்டு வாய் சிவக்க பாட்டு எழுதிவரும் கவிஞர் வாலி வரை எல்லோருமே வெற்றிலை சீவலின் ரசிகர்கள்தாம்.

அர்ச்சனைத் தட்டில் இறைவழிபாட்டுப் பொருளாகவும், ஆலய விழாக்களில் “விடையமாய்’ கொடுக்கப்படுவதாகவும், நம் வீட்டு விழாக்களுக்கு நட்பை, உறவை, ஊர் மக்களை அழைப்பதற்கு முன்வைப்பதாகவும், தடபுடலான விருந்துக்குப் பின் தாம்பூலம் தரிப்பதாகவும் இந்தத் தொன்மைக் கலாசாரம் இன்றும் தொடர்கிறது.

இன்றைய நாட்களில் இந்தப் பாக்குகள் “போதைப் பாக்குகளாக’ மாறி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கடைகளில் தொங்கி, நம் இளைஞர்களின் வாய்களில் தங்கி, மெல்ல மெல்ல அவர்களின் உயிரை வாங்கிவிடுவதும் உண்டு.

ஆனால் உண்மையில் மருத்துவக் குணங்கள் நிரம்பியதும், செரிமான சக்தியைத் தூண்டுவதும், சந்தோஷத்தைத் தருவதுமான கொட்டைப்பாக்கு சீவல் நம் தஞ்சை விவசாயிகளின் இடுப்பில் நீங்காத உடுப்பு. ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இந்தத் தாம்பூலம் நிறையவே இருக்கும்.

உழைக்கும் விவசாயி முதல் உயர்ந்த கலைஞர்கள் வரை உற்சாகமாய்ப் பணிபுரியத் தூண்டும் “தாம்பூலத்தின் தாயான’ கொட்டைப் பாக்கு சீவலைப் பற்றி அறிய, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள “சங்கு சீவல்‘ நிறுவனத்தின் உரிமையாளர் கே. குணசேகரனிடம் கேட்டோம்…

“”எங்களுக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர். என்னுடைய அப்பா கிருஷ்ணமாச்சாரி சின்ன வயசிலேயே பிழைப்புக்காக கும்பகோணம் வந்துட்டாங்க. அந்தக் காலத்துல, அதாவது 1943ல அப்பா கைச் சீவலைப் பாக்கு வெட்டி மூலமா தயாரிச்சு அக்கம்பக்கம் விற்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சீவலுக்கு முக்கியமான மூலப்பொருள் கொட்டைப் பாக்குதாங்க!

கொட்டைப் பாக்கு மரம் பனை மர வகையைச் சேர்ந்தது. ஒல்லியாக, நல்ல உயரமாக வளர்ந்து, தலைப்பாகம் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். காய் பச்சையா, பழங்கள் மஞ்சளா குண்டு குண்டா அழகாயிருக்கும்.

இது வருடாந்திரப் பயிர் ரகம். விளையிற பாக்கை ரெண்டு மூணுவாட்டி பறிப்பாங்க. முதல் பறிப்பும் கடைசிப் பறிப்பும் அவ்வளவு தரமா இருக்காது. நடுப் பறிப்பை மட்டும் அறுவடை முடிச்சு காய வைச்சு காய் மேல இருக்கிற மட்டையோட பத்திரப்படுத்தி ஒரு வருசத்துக்கு மேல விவசாயிங்க இருப்பு வைப்பாங்க.

பாக்கோட அளவைப் பொறுத்து

  • மோட்டி,
  • மோரா,
  • விச்சாரஸ்,
  • சேவர்தன்,
  • ஜாம்,
  • ஜீனி,
  • ரெண்டி,
  • பூஜா

இப்படின்னு பல ரகம் இருக்கு. இதில நடுத்தரமா சின்னதா இருக்கிற பாக்குதான் இந்தச் சீவல் தொழிலுக்குப் பயன்படுது.
இந்தப் பாக்கு நம்ம தமிழ்நாட்டுல ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் நிறைய விளையுது. கேரளம், கர்நாடகத்துல முக்கிய பணப் பயிர் இதுதான். குறிப்பா கர்நாடகத்தோட தென் பகுதியும் கேரளத்தோட கடல் பகுதியும் இணைகிற இடத்தில் வளரும் பாக்கு மரத்தில் கிடைக்கும் பாக்கு மிகத் தரமாக இருக்கும். கர்நாடகத்தில் உள்ள புத்தூள், விட்டாலா பக்கம் நல்ல தரமான பாக்கு கிடைக்குது. ஆனா விலை அதிகம். இந்தப் பக்கம் விளைகிற பாக்குக்கு இந்தியா முழுக்க நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு.

வெளிநாட்டுல மலேசியா, இந்தோனேசியா இங்கெல்லாம் பாக்கு விளைஞ்சாலும் நம்மூரு பாக்கைப் போல தரமா இருக்காது. அந்தமான் தீவுல வெளையுற பாக்கு பெரிசா, லேசா வாசனையோட இருக்கும். இது பெரும்பாலும் கொல்கத்தா சந்தைக்குத்தான் போகும்.

பாக்குல கொட்டைப் பாக்கு, களிப்பாக்கு, பீட்டன் பாக்கு, ஷிமோகா பாக்கு இப்படி நிறைய வகை இருக்கு. அந்தக் காலத்தில எல்லாம் பாக்கைக் கடிச்சு வெத்தலை போடுற அளவுக்கு பல்லு உறுதியா இருந்துச்சு. காலம் மாற மாற பாக்கை சீவலா கொடுக்க வேண்டியதாப் போய்டுச்சு.

எங்க அப்பாதான் முதல் முதல்ல பாக்கிலிருந்து சீவலைத் தயாரிக்கிற மிஷினைக் கண்டுபிடித்தார். இன்னிக்கு பல பேர் சீவல் தொழிற்சாலை வைக்கக் காரணமே அப்பாதான். அப்பாகிட்ட தொழில் கத்துக்கிட்ட பல பேர் இன்னிக்கு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்காங்க. நாங்களும் அப்பாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு சிறப்பா தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். நான் வக்கீலுக்கு படிச்சிருந்தாலும் இந்தத் தொழிலை விடாம செஞ்சுக்கிட்டு வர்றேன்.

பொதுவாக வெத்தலை சீவல் போடுற பழக்கம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலா இருக்கு. நாம எல்லோரும் சாப்பிட்டுட்டு வெத்தலை சீவல் போடுவோம். ஆனா நம்ம விவசாயிகளுக்கு சாப்பாட்டை விட முக்கியமானது இந்த வெத்தலை சீவல்.

இதே சீவலை இன்றைக்குக் கொஞ்சம் நவீனமா சுத்தமான நெய் விட்டு பொன்னிறமாய் வறுத்து நெய்சீவல் என்றும், தேங்காய்ப் பூவுடன், ஏலக்காய், ஜாதிக்காய், கற்பூரம் சேர்த்து புதிய மணத்துடனும் விற்பனை செய்து வருகிறோம். இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது சந்தோஷம் அளிக்குது” என்றார் குணசேகரன்.

தஞ்சை காவிரிக் கரையில் பயிராகும் இளந்தளிர் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி, குடந்தை சீவலை வைத்து மடித்து வாயிலிட்டு மென்று, நாவும் உதடும் சிவக்க ஊறும் நறுமண எச்சிலை விழுங்கினால் வருகின்ற ஏப்பம் நல்ல ஜீரணத்தின் அடையாளம்.

என்ன இருந்தாலும் வெற்றிலை சீவல் போடுவோரை பார்க்கும்போது ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது.

வெத்தலை பாக்கு சுண்ணாம்பு

பத்திரி ஏலம் கிராம்பு

ரெத்தம் போல சிவந்து போச்சுதே

என் ராஜாத்தி

ஒம் மேலே ஆசையாச்சுதே!

என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அந்தக் காலத்திலேயே சும்மாவா பாட்டெழுதியிருக்கார்!

Posted in Addiction, Ban, betelnut, Chew, Habit, Kumbakonam, Paakku, Seeval, Thamboolam, Thanjai Ramiah Daas, Vaali, Vethilai, Vetrilai | Leave a Comment »

Upcoming Tamil Movie Releases – Cheran’s Nagara Kannaadi

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

திரைக்கதிர்: ‘நகரக் கண்ணாடி’!

மனோஜ் கிருஷ்ணா

சேரன் இயக்கி நடிக்கும் “மாயக் கண்ணாடி’ படத்தின் ஸ்டில்கள் வழக்கமான அவருடைய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. “”உங்கள் படங்களிலுள்ள யதார்த்தம் இந்தப் படத்திலும் இருக்குமா?” என்று கேட்டதற்கு…

“”இதுவும் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம்தான். இவ்வளவு நாள் கிராமத்துப் பின்னணியில் படங்கள் எடுத்திருக்கிறேன். முதன்முறையாக இந்தப் படத்தில் நகர்ப்புற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறேன். நகரத்திலும் ஒரு யதார்த்தம் இருக்கிறது. நகரத்துப் படங்கள் என்றாலே காதல் கதையையும், அடிதடி கதையையும்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

இவை இரண்டும் இல்லாமல் இடைப்பட்ட, மெஜாரிட்டியாக வாழக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த அடிதடிக்கும் போவதில்லை; எந்த கமர்ஷியல் விஷயங்களுக்கும் போவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவதில்தான் அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். அவர்களைப் பற்றிய கதைதான் “மாயக் கண்ணாடி’. இந்தப் படத்தில் என்னைப் பார்க்க மாட்டீர்கள்; உங்களைத்தான் பார்ப்பீர்கள்” என்கிறார் சேரன்.

அவார்டு பெறுமா “அடைக்கலம்’?

பிரஷாந்த், தியாகராஜன், உமா நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் “அடைக்கலம்’ படம் மீண்டும் புத்துணர்வு பெற்று திரைக்கு வருகிறது. படத்தைப் பற்றி கதாநாயகனிடம் கேட்ட போது… “”இன்றைய கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம். எந்த ஒரு ஜீவராசிக்கும் ஓர் அடைக்கலம் தேவை. அப்படி அன்பு தேடி அலையும் ஒருவனுக்கு அடைக்கலமாக கிடைக்கும் மனது பற்றியதுதான் கதை. தந்தை -மகன் போராட்டத்தையும், அண்ணன் தங்கை பாசத்தையும் சினிமாத்தனமில்லாமல் காட்டியிருக்கிறார் டைரக்டர் ஆர்.புவனராஜா. தந்தை கேரக்டரில் என்னுடைய அப்பாவும், தங்கை கேரக்டரில் உமாவும் நடித்துள்ளார்கள். நான் ஆத்ம திருப்தியோடு நடித்த படம் இதுதான். தேசிய விருது பெற்ற “வீடு’ படத்தைத் தயாரித்த ஸ்ரீநாராயணதாஸ்தான் “அடைக்கலம்’ படத்தின் தயாரிப்பாளர். நல்ல படங்கள் எடுக்கும்போது வழக்கமாக ஏற்படும் பணப் பிரச்சினைதான் இந்தப் படத்துக்கும் ஏற்பட்டது. இப்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. தேசிய விருதுக்கு அனைத்து விதத்திலும் தகுதியான படம் என்பது என் கருத்து” என்றார் பிரஷாந்த்.

விறுவிறு பந்தயம்!

சிபிராஜ், நிலா நடித்து வரும் “லீ’ படத்தை எப்படியும் பெரிய வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று இயக்குநர் பிரபுசாலமன் யூனிட் மிகுந்த கவனத்தோடு உழைத்து வருகிறார்கள். பிரபுசாலமனின் முந்தைய படமான “கொக்கி‘ ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் விறுவிறுப்பாக சென்றதைப் போலவே “லீ’ படமும் இருக்கும் என்கிறார்கள்.

இதைப் பற்றி இயக்குநரிடம் கேட்டால்… “”படத்தின் கதைக்கு ஏற்பத்தான் நேரம்; கோடிக்கணக்கான முதலீட்டில் ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எத்தனையோ உள்ளன; அதே சமயம் ” டைட்டானிக்’, “லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற மூன்றரை மணி நேரப் படங்களும் உள்ளன. எல்லாமே வெற்றிப் படங்கள்தான். ஐந்து நிமிட, அரை மணி நேர குறும்படங்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

கால்பந்து தொடர்பான எங்கள் “லீ’, மிகப் பெரிய இரண்டு கால்பந்து அணிகள் மோதும்போது எப்படி விறுவிறுப்பாய் இருக்குமோ அதேபோல இருக்கும். அதற்கு நான் கியாரண்டி” என்கிறார்.

கமல் புராணம் பாடும் ஆர்யா!

சமீபத்தில் கமல்ஹாசனுக்காக “வட்டாரம்’ படத்தின் சிறப்புக் காட்சியைத் திரையிட்டார்கள். படத்தைப் பார்த்த கமல், இயக்குநர் சரணிடம் சில விஷயங்களைப் பற்றி விமர்சித்தார். அருகிலிருந்த ஆர்யாவை அழைத்து “”நன்றாக நடித்திருக்கிறீர்கள்; சண்டைக் காட்சிகளில் எதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள்?

அதெல்லாம் வேண்டாம். உடல்தான் சொத்து; அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றும், “”நல்ல கதையைத் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது” என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறார். இதை அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்து “கமல் புராணம்’ பாடி வருகிறார் ஆர்யா.

Posted in Adaikkalam, Arya, Cheran, Kamal, kamalahasan, Kamalhassan, Lee, Nagara Kannaadi, New Films, Nila, Prashanth, Sibiraj, Tamil Cinema, Tamil Movies, Thiagarajan, Vattaaram | Leave a Comment »