Archive for the ‘Dhanush’ Category
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007
தீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்
இந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
வேல்
“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.
மச்சக்காரன்
நான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.
“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.
கண்ணா மூச்சி ஏனடா
கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.
சத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அழகிய தமிழ்மகன்
முதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
பொல்லாதவன்
தனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.
எவனோ ஒருவன்
தேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.
பழனியப்பா கல்லூரி
கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.
இவை தவிர,
- விக்ரம் நடித்த ‘பீமா,’
- அஜீத் நடித்த ‘பில்லா’
ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.
Posted in Ajith, Asin, Azhagiya Thamizhmagan, Cinema, Deepavali, Dhanush, Diwali, Evano Oruvan, Films, Kalainjar TV, Kannamoochi enada, Kannamoochi enadaa, Kannamoochi Yenada, Kannamoochi Yenadaa, Kodambakkam, Kollywood, Kuthu, Machakaran, Machakkaran, Madavan, Madhavan, Mathavan, Movies, Pollaadhavan, Polladahavan, Polladavan, Polladhavan, Pollathavan, Prithiviraj, Prithviraj, Priya, Radaan, radan, Radhika, Ramya, Releases, Rumya, Sandhya, Sangeetha, Sangitha, Sankeetha, Sathiaraj, Sathyaraj, Shreya, Shriya, Simbu, Sivaji, Soorya, Sriya, Sun, Surya, Thanush, TV, V Priya, Vel, Vijay | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007
நடிகர் தனுஷ் மீது அவதூறு வழக்கு: படஅதிபர் கேயார் அறிவிப்பு
சென்னை, மார்ச். 19-
நடிகர் தனுஷ்-மீராஜாஸ்மின் நடித்துள்ள படம் `பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ கேயார் தயாரித்துள்ளார். இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடுகள் நடந்தது.
இந்த நிலையில் தனுசுக்கும் கேயாருக்கும் இடையே சம்பள பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள பாக்கி ரூ.85 லட்சத்தை வாங்கித் தருமாறு நடிகர் சங்கத்தில் தனுஷ் புகார் செய்துள்ளார். இந்த கடிதம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனுசையும் கேயாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர் கேயாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கன்னடத்தில் வெற்றி பெற்ற `ஜோகி’ என்ற படத்தின் தமிழ் உரிமையை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினேன். பெரிய நடிகர்கள் இதில் நடிக்க ஆசைப்பட்டனர். நான் தனுசை ஒப்பந்தம் செய்தேன். அவர் நடித்த `புதுப்பேட்டை’, `அது ஒரு கனாக்காலம்’ படங்கள் தோல்வி அடைந்தன.ஆனாலும் வாக்கு கொடுத்து விட்டதால் தனுசை வைத்து படத்தை எடுத்தேன். அவருக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டது. இதில் 12 லட்சம் ரூபாய் தான் பாக்கி உள்ளது. 85 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இருப்பது வியப்பளிக்கிறது. எங்கள் இருவர் இடையே மோதலை ஏற்படுத்தும் சூழ்ச்சி இது.
எங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு அந்த தேதியில் `திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் நடித்தார். இதனால் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. பைனான்சியருக்கு கொடுக்க வேண்டிய வட்டியும் ஏறியது.
இந்த பிரச்சினை தொடர்பாக தேவைப்பட்டால் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடருவேன்.
இவ்வாறு கேயார் கூறினார்.
Posted in Actor, Alagusundaram, Alagusundharam, Azhagusundaram, Azhagusundharam, Cinema, Compensation, Court, Danush, Dhanush, Films, Financier, Judge, Keyaar, KR, Parattai, Producer, Rumour, Salary, Tamil Movies, Thanush, Thiruvilaiyaadal, Thiruvilaiyadal, Thiruvilaiyadal Aarambam, Thiruvilaiyadal Arambam | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜன.21-
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி
இயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
நான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.
தனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.
இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.
அதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.
ஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.
18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.
தசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.
என் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Posted in Apdiyaa, Appadiyaa, Arthanari, Bala, Balasubramanian, case, Cheat, Clones, Court, Dasavatharam, Dhanush, Dhasavatharam, dialogues, Direction, Gurumani, Intellectual Property, Judge, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, KS Ravikkumar, KS Ravikumar, Law, Murali, Order, Oscar Ravichandran, Pictures, Producer, Rajkamal, Screenplay, Stolen, Story, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thasavatharam, Theerthamalai, Theft, TTK Road | 5 Comments »
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007
சிம்பு என் மச்சான் தனுஷ்
சிம்புவுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மாமா, மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
சிம்புவும், தனுஷûம் பள்ளிக் கூட தோழர்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தனுஷை கிண்டலடித்து தனது படங்களில் சிம்பு வசனம் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சிம்பு எதிரே வர, மறுபக்கம் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் (இவரும் சிம்புவின் தோஸ்து தான், ஒருகாலத்தில்!) வர ஹலோ சொல்லிக் கொள்வார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க கண்டு கொள்ளாமல் விருட்டென்று ஐஸுடன் பறந்து விட்டார் தனுஷ்.
இப்படி அனலும், உலையுமாக இருவரும் இருந்து வரும் நிலையில் திடீரென சிம்புவை தூக்கி வைத்துப் பேசியுள்ளார் தனுஷ். ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பொறி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்,
இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.
எங்களைப் பற்றி வெளியில்தான் வேறு மாதிரியாக பேசுகிறார்கள். எங்களுக்குள் மோதல் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மாமன், மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் (மாமா யாரு, மச்சான் யாரு??). சத்தியமா நம்புங்க, சிம்பு என் நண்பன்தான்.
இதை நான் தனியாக சொன்னால் நன்றாக இருக்காது. நான் சின்னப் பையன் மாதிரி இருப்பது தான் என் பலமும் பலவீனமும்.
திருடா திருடி மூலம் என்னைத் தூக்கி விட்டவர் சுப்ரமணியம் சிவா. மன்மத ராசாவை மறக்க முடியுமா? அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொறியும் சிறப்பாக அமையும். இப்படத்தில் தீப்பொறி உள்ளது. நிச்சயம் ஜீவா சாதிப்பார். படமும் வெற்றி பெறும் என்றார் தனுஷ்.
நண்பன் ‘துயரத்தில்’ இருக்கும்போது கை கொடுப்பவன், ஆறுதல் சொல்பவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். ‘லிட்டில்’ சிம்பு இப்போது ‘கஷ்டத்தில்’ இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசியுள்ளார் தனுஷ்.
இதுவல்லோ நட்பு!
Posted in Aishwarya Rajnikanth, Aiswarya Rajiniganth, Asiwarya Rajinikanth, Audio, CD Release, Dhanush, Jeeva, Little Superstar, Manmadhan, Manmatha Raasa, Pori, Sathyam Cinemas, Sify.com, Silambarasan, Simbu, Simbu vs Dhanush, Subramania Siva, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Thatstamil.com, Thiruda Thirudi, Thiruvilayadal Aarambham, Tiruvilayadal Arambham, Vallavan | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
திரைக்கதிர்: திரு-வா? குரு-வா?
மனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா
“தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா? படத்தின் தற்போதைய நிலைமை என்ன? என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…
“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.
திரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா? குரு-வா? என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.
இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.
Posted in Bhoopathy Pandiyan, Devathayai Kanden, Dhanush, Shreya, Sreya, Sriya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thanush, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006
கோர்ட்டில் வழக்கு: தனுஷின் `திருவிளையாடல்’ படம் வெளியாகுமா?
சிவாஜி நடித்த படம் “திருவிளையாடல்”. இப்படம் நீண்ட நாட்கள் ஓடியது. பக்தி படம் என்பதால் கோவில் திருவிழாக்களில் ஒரு காலத்தில் இப்படத்தில் வசனம் ஒலி பரப்பப்பட்டன.
நடிகர் தனுஷ் “திருவிளை யாடல் ஆரம்பம்” படத்தில் தற்போது நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரேயா. பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
திருவிளையாடல் பெயரில் தனுஷ் நடிக்க சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவாஜி சமூக நல பேரவை தலைவர் ஏ.சந்திரசேகரன் சிட்டி சிவில் கோர்ட்டில் திருவிளையாடல் படத்துக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தனுசும் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் விமலகீதாவும் கோர்ட்டில் பதில் மனு தாக் கல் செய்தனர். வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இரு வரும் வற்புறுத்தினர். விமல கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் “திருவிளையாடல்” என்ற பெயரில் படம் எடுக் கவில்லை என்றும் “தனுசின் திருவிளையாடல் ஆரம்பம்” என்று தான் படத்துக்கு பெயர் வைத்துள் ளோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையில் திருவிளையாடல் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு சிவாஜி சமூக நல பேரவை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப் பேரவையின் சார்பில் வக்கீல் குமரகுரு கூறியதாவது:-
“திருவிளையாடல்” பெயரில் படம் எடுக்கவில்லை என்று எதிர் தரப்பில் கோர்ட் டில் பதில் மனுதாக்கல் செய் யப் பட்டது. ஆனால் விளம்பரங்களில் அதே பெயர் தான் உள்ளது. எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய் வோம். விரைவில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
Posted in AP Nagarajan, Ban, Court, Dhanush, God, Petition, Shivaji, Shreya, Sivaji Fans, Sreya, Stay, Tamil Cinema, Tamil Movie, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006
டிசம்பர் 15-ந் தேதி சோனியாஅகர்வால் செல்வராகவன் திருமணம்
சென்னை, அக். 16-
காதல் கொண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான வர் சோனியா அகர்வால் கோவில், ஒரு கல்லூரியின் கதை, திருட்டுப்பயலே, 7ஜி ரெயின்போ காலனி, மதுர , புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
காதல் கொண்டேன் படத்தை செல்வராகவன் இயக்கினார். அப்போது இருவருக்கும் நட்புஏற்பட்டு காதலானது. பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொண்டனர்.
சோனியா அகர்வாலும் செல்வராகவனும் திருமணம் செய்ய விரும்பினர். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதித்தார்கள்.
இதையடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. செல்வராகவன் பெற்றோர் சோனியாஅகர்வாலின் சொந்த ஊருக்குச் சென்று திருமணம் பேசி முடித்தனர்.
சோனியா அகர்வால் செல்வராகவன் திருமணம் டிசம்பர் 15-ந்தேதி எழும்பூரில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் அதே மண்டபத்தில் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளில் இருவரும் தீவிரமாக உள்ளனர். அழைப்பிதழ் அச்சிடும் பணியும் நடக்கிறது.
Posted in Aiswarya, Cinema, December, Dhanush, Director, Egmore, Invitation, Kasthoori raja, kasthuriraja, Marriage, Movies, Rajniganth, Selvaraghavan, Sonia Agarwal, Wedding | Leave a Comment »