Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sriya’ Category

‘Sivaji – The Boss’ celebrations – 175th Day Event Coverage: Rajni speech

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2008

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது; ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்”
கருணாநிதி முன்னிலையில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, ஜன.12-

“சிலபேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால் அவர்களை கடவுளுக்கு பிடிக்கும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

வெள்ளி விழா

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகிய இருவரும் தயாரித்த `சிவாஜி’ படம் 175 நாட்களை தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது. இதையொட்டி அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசளிக்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு `சிவாஜி’ படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த்

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“சிவாஜி படத்தில், சில அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருமைக்குரிய படத்தில் நான் இருந்தது, பாக்கியம். ஏவி.எம்.சரவணன், ஷங்கர், படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பணம்

பணம் இருந்தால், உன்னையே உனக்கு தெரியாது. பணம் இல்லையென்றால் யாருக்கும் நீ தெரியமாட்டாய் என்று சொல்வார்கள். அந்த பணம் இருந்தபோதும், அது தலைக்கு போகாமல் தொழில்தான் முக்கியம் என்று அப்பா ஸ்தாபித்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக சரவணன் படும் சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தலைவணங்குகிறேன்.

அவருடைய மிகப்பெரிய சொத்து, அவருடைய மகன் குகன். தாத்தா மாதிரி நீங்களும் பெரிய பட அதிபர் ஆக, என் மனமார்ந்த வாழ்த்துகள்.

கே.பாலசந்தர்

`சிவாஜி’ படம் பார்த்துவிட்டு என் குருநாதர் கே.பாலசந்தர் எப்படி இப்படி எல்லாம் நடித்தாய்? என்று கேட்டபோது, அவர்கள், மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் ஆகிய படங்களில் நடித்தபோது, உங்களிடம் எப்படி நான் கேள்வி கேட்காமல் நடித்தேனோ, அதேபோல்தான் ஷங்கர் என்ன சொன்னாரோ, அதைத்தான் செய்தேன் என்று சொன்னேன்.

பாலசந்தர் சாருக்கு பின்னால், நான் புளோரில் ஒரு டைரக்டரை பார்த்தேன் என்றால், அது ஷங்கர்தான். இப்படி சொல்வதால் நான் மற்ற டைரக்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டதாக அர்த்தம் அல்ல. ஷங்கர், ஏகலைவன் மாதிரி. அது, பூர்வஜென்ம புண்ணியம்.

கபிலமுனி

நான் செய்யும் `சாங்கியோகா’வை கண்டுபிடித்த கபிலமுனி, “ஆசைப்படு…ஆசைப்பட்டதை அடைவதற்கு விஷயத்தை சேர்த்து வை…அப்படி சேர்த்து வைத்த விஷயத்தை சரியாக செயல்படுத்து…அது கொடுக்கும் பலனை முதலில் நீ அனுபவி… அதில் கொஞ்சம் நீ வைத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு கொடுத்து விடு” என்று கூறியிருக்கிறார்.

சாப்பிட்டதை எல்லாம் உடம்பில் வைத்துக்கொண்டால், உடம்பு கெட்டுப்போய்விடும். சம்பாதித்ததை எல்லாம் நாமே வைத்துக்கொண்டால், வாழ்க்கை கெட்டுப்போய்விடும்.

ஆசைப்படுவதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? என்று முதலில் பார்க்கணும். சைக்கிள் வாங்குவதற்கே கஷ்டப்படுகிற ஒருவன், கார் வாங்க ஆசைப்பட்டால் எப்படி? ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்றால், சரியான ஆட்களை சேர்த்துக்கொள். அதன்பிறகு ஆகாயமே கீழே விழுந்தாலும், `காம்ப்ரமைஸ்’ ஆகாதே. நினைத்ததை செயல்படுத்திவிடு… இதைத்தான் ஷங்கர் செய்துகொண்டிருக்கிறார்.

`ரோபோ’

அடுத்து, நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யப்போகிற படம், `ரோபோ.’ மிகப்பெரிய படம்.

`ரோபோ’ படம், கடவுள் ஆசீர்வாதத்தில், சிவாஜி அளவுக்கு வெற்றிபெறவேண்டும்.

அடுத்து கே.பாலசந்தர் சாருக்காக ஒரு படம் நடிக்கிறேன். அதையடுத்து சவுந்தர்யா டைரக்ஷனில், `சுல்தான் தி வாரியர்’ படத்தில் நடிக்கிறேன். அதையடுத்து, `ரோபோ’ வரும்.

சாய் பாபா

சாய்பாபாவை நேரில் பார்க்க, நான் நான்கு முறை முயற்சி செய்தேன். பெங்களூரில் இரண்டு தடவை. புட்டபர்த்தியில் ஒரு தடவை. இங்கே சென்னையில் ஒரு தடவை. இங்கே வந்தபோது, அவரை நான் சந்தித்தேன். வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுங்க, வருவார் என்று சொன்னார்கள். நானும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன். அவர், பெருந்தலைவர் காமராஜர் `டயலாக்’க்கை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

கடவுளுக்கு பிடிக்கும்

ஆனால், அதே சாய்பாபா கலைஞர் வீட்டுக்கு வந்து, அவரை சந்தித்தார். நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். சில பேருக்கு கடவுளை பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களை பிடிக்கும்.

வேண்டுகோள்

இந்த சமயத்தில், கலைஞர் அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கலையுலக விழாவாக இருந்தாலும் சரி, இலக்கிய விழாவாக இருந்தாலும் சரி, உங்களை தவிர யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. யாரும் கிடையாது. நீங்கதான் கலந்துகொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர்

டைரக்டர் ஷங்கர் பேசும்போது, “ரோபோ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தமிழ் பட பட்ஜெட் தாங்காது என்பதால்தான், இந்தியில் படமாக்க முயன்றேன். சில காரணங்களால், அந்த திட்டம் நின்றுபோனது. `சிவாஜி’ படத்தின் வெற்றியும், வசூலும் `ரோபோ’ படத்தை தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை எனக்கு தந்தது. ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய சக்திகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால், ரோபோவை மிக சிறந்த படமாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ஏவி.எம். நிறுவனத்தின் மகுடம், `சிவாஜி’ படம். நான் ரஜினியை பற்றி ஒரு விஷயம் பேசவேண்டும். ஒரு மனிதன் பேசுவதில்லை. ஆனால் பேசப்படுகிறார். அவர் விளம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால், அவர் இல்லாமல் விளம்பரம் இல்லை. அவருக்கு அரசியல் இல்லை. ஆனால், அவரை சுற்றி அரசியல் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டுக்கு ரஜினி கொடுத்த உற்சாகம் கொஞ்சம் அல்ல. அவர் நினைத்தால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விதம்விதமாக செய்திகள் சொல்லலாம்” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசும்போது, “சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் நான் நடிக்க விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.

ஏவி.எம்.சரவணன்

நடிகர்கள் சுமன், விவேக், வி.எம்.சி.அனீபா, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பேச்சாளர் ராஜா, கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், எழுத்தாளர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் ஆகியோரும் பேசினார்கள்.

ஏவி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். படத்தின் இணை தயாரிப்பாளரான டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நன்றி கூறினார்.

Posted in 175, Actors, Actress, AVM, Baba, Celebrations, Cinema, Coverage, Events, Films, Functions, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KB, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Robo, Robot, Saibaba, Sankar, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Speech, Sreya, Sriya, Tax, The Boss, Vairamuthu | 1 Comment »

Diwali Releases – Tamil Cinema (Vel, Evano Oruvan, Machakkaran, Kannamoochi Yenada, Azhagiya Thamizhmagan, Polladhavan)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தீபாவளி படங்கள் ஒரு கண்ணோட்டம்

இந்த ஆண்டு தீபாவளிக்கு இறுதியாக 6 படங்கள் போட்டிக்குத் தயாராகியுள்ளன. இன்னும் சில படங்கள் வருமா வராதா என்ற நிலையில் உள்ளன. அழகிய தமிழ்மகன், வேல், எவனோ ஒருவன், கண்ணாமூச்சி ஏனடா, பொல்லாதவன், மச்சக்காரன் ஆகிய 6 படங்களில் தீபாவளி சரவெடியாய் வெடிக்கப்போகும் படம் எது என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

வேல்

“ஆறு’ படத்திற்குப் பிறகு ஹரியுடன் சூர்யா இணையும் படம். கஜினிக்குப் பிறகு இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். “மிராண்டா மீனாட்சி’ என்ற கதாபாத்திரத்தில் தொகுப்பாளினியாக அசினும், வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளனர். நாசர், லட்சுமி, சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா. கிராமத்தில் அட்டகாசம் செய்யும் கலாபவன் மணியை சூர்யா எதிர்க்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

மச்சக்காரன்

நான் அவனில்லை படத்திற்குப் பிறகு ஜீவன் நடிக்கும் படம். இதயத்திருடனுக்குப் பிறகு தமிழில் காம்னா நடித்திருக்கிறார். தோல்விகளையே சந்தித்த ஜீவன், காம்னாவைச் சந்தித்த பிறகு மச்சக்காரனாகிறார். அதன்பிறகு ஏற்படும் பிரச்னைகள்தான் கதை.

“கள்வனின் காதலியை’ இயக்கிய தமிழ்வாணன் இயக்கியுள்ளார். இசை யுவன்சங்கர் ராஜா.

கண்ணா மூச்சி ஏனடா

கண்ட நாள் முதல் படத்திற்குப் பிறகு பிரியா.வி இயக்கும் 2-வது படம். ராதிகாவின் ராடன் நிறுவனமும், யு.டி.வியும் இணைந்து தயாரித்துள்ள படம்.

சத்யராஜ்-ராதிகா தம்பதியின் மகளான சந்தியா, பிருத்திவிராஜை காதலிக்கிறார். சத்யராஜ் சம்மதம் தெரிவிக்க ராதிகா எதிர்கிறார். பிரச்னையில் இருவரும் பிரிய, தம்பதிகளை காதலர்கள் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ராதிகா பெரிய திரையில் வருகிறார். “அன்று வந்ததும் அதே நிலா’ பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய தமிழ்மகன்

முதன்முறையாக விஜய் இருவேடங்களில் நடிக்கும் படம். சிவாஜிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடித் தமிழ்ப்படம். மசாலாவுக்காக நமீதாவும் விஜய்யுடன் இதில் ஜோடி சேருகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சி முன்பாகவே தெரியும் குணாதிசயத்தோடு இருக்கிறார் விஜய். அதனால் ஏற்படும் பரபரப்புத் திருப்பங்களை சொல்வதுதான் படம். தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பரதன் இயக்கியுள்ளார். “உதயா’வுக்குப் பிறகு விஜய்யின் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொல்லாதவன்

தனுஷ்-திவ்யா (குத்து ரம்யா) நடிக்க பாலுமகேந்திராவின் உதவியாளர் வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ்க்கும் மேல் தட்டு மக்களைப்போல் வாழ வேண்டும் என ஆசை. அதை நிறைவேற்ற அவர் எடுக்கும் தந்திரங்கள்தான் பொல்லாதவனாக உருவாகியிருக்கிறது. தனுஷின் “திருவிளையாடல்’ இதிலும் தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். “வேட்டையாடு விளையாடு’வுக்குப் பிறகு டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நினைத்தாலே இனிக்கும் படத்தின் “எங்கேயும் எப்போதும்’ என்ற பாடல் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

எவனோ ஒருவன்

தேசிய விருது பெற்ற மராட்டிய படமான “டோம் பிவாலி பாஸ்ட்’ படம்தான் தமிழில் எவனோ ஒருவனாக உருவாகியிருக்கிறது; நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் சமூக பிரச்னையில் சிக்குவதுதான் படம். படத்திற்கு வசனமும், தயாரிப்பும் மாதவனே. சங்கீதா ஜோடியாக நடித்திருக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் பிறகு இயக்குநர் சீமான் இதிலும் தலைகாட்டியுள்ளார்.

பழனியப்பா கல்லூரி

கல்லூரி மாணவர்-மாணவிகளின் மூன்று வருட வாழ்க்கையைச் சித்திரிக்கும் படம் இது. பிரதீப், மது சாலினி, அர்ஜுமன் மொகல், அட்சயா ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள். ஆர்.பவன் இயக்கியுள்ளார்.

இவை தவிர,

  • விக்ரம் நடித்த ‘பீமா,’
  • அஜீத் நடித்த ‘பில்லா’

ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது இவை இரண்டும் தீபாவளியைத் தாண்டி வெளியாகின்றன.

Posted in Ajith, Asin, Azhagiya Thamizhmagan, Cinema, Deepavali, Dhanush, Diwali, Evano Oruvan, Films, Kalainjar TV, Kannamoochi enada, Kannamoochi enadaa, Kannamoochi Yenada, Kannamoochi Yenadaa, Kodambakkam, Kollywood, Kuthu, Machakaran, Machakkaran, Madavan, Madhavan, Mathavan, Movies, Pollaadhavan, Polladahavan, Polladavan, Polladhavan, Pollathavan, Prithiviraj, Prithviraj, Priya, Radaan, radan, Radhika, Ramya, Releases, Rumya, Sandhya, Sangeetha, Sangitha, Sankeetha, Sathiaraj, Sathyaraj, Shreya, Shriya, Simbu, Sivaji, Soorya, Sriya, Sun, Surya, Thanush, TV, V Priya, Vel, Vijay | Leave a Comment »

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

PMK Ramadas, Gemini Labs, AR Rehman – Why ‘Sivaji’ is delayed?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

ஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…?

ரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.

எதிர்பார்ப்புகள்:

* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது

* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

காரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.

காரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.

எதிர்ப்புகள்:

* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.

* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

சிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…

Posted in Amitabh, Anbumani, ARR, Audio, AVM, Bachan, Chiranchivi, Chiranjeevi, Director, Fans, Gemini, Kollywood, May, music, PMK, Ragavendira, Ragavendra, Ragaventhra, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Ramadas, Ramadoss, Rehman, Sankar, SC, Shankar, Shivaji, Shivaji the boss, Shreya, Shriya, Sirancheevi, Siranjeevi, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sriya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Telugu, Tollywood | 1 Comment »

Sivaji – The Boss: Movie starts its post-production work

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ஒரு வருடத்துக்கு மேல் நடந்த ரஜினியின் `சிவாஜி’ படப்பிடிப்பு முடிந்தது

சென்னை, பிப். 14-

ரஜினி நடிக்கும் `சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சந்திரமுகி ரிலீசுக்கு பின் இப் படத்தில் அவர் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் படம் தயா ரானது.

ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். மணிவண்ணன், சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி எனபலர் நடித்துள்ளனர்.

2005-ல் டிசம்பர் 13ந் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோ, பிஅண்ட்சி மில், புளியந்தோப்பு போலீஸ் நிலையம், கும்ப கோணம் கோவில், புதுவை நகராட்சி அலுவலகம், என பல இடங் களில் படப்பிடிப்பு நடந்தது

ஐதராபாத், பெங்களூர், புனே நகரங்களிலும் பிர மாண்ட `செட்’கள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் புனேயில் கர காட்ட கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர். சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட் டுள்ளது.

இறுதி கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர். அங்கு ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை கெட்டப் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பை சிலர் படமெடுத்து இண்டர் நெட்டில் வெளியிட் டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியேதெரிந்து விட்டது. எனவே படப்பிடிப்பு எச்சரிக்கையாக நடத்தப்பட்டது. படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று மாலை அல்லது நாளை ரஜினி சென்னை திரும்புகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக நடந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஏவி எம் ஸ்டூடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் டப்பிங் பேசினார். அமெரிக் காவில், படமான காட்சிகளுக்கு அடுத்து டப்பிங் பேசுகிறார்.ஸ்ரேயாவுக்கு சந்தியா பின்னணி குரல் கொடுக்கிறார். ஷங்கரின் காதல் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகிறார்.

தமிழ் புத்தாண்டில் `சிவாஜி’ ரிலீஸ் ஆகிறது.

Posted in AR Rehman, AVM, Manivannan, Raghuvaran, Raguvaran, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shreya, Shriya, Sivaji, Sivaji the Boss, Sriya, Sujatha, Suman, Vadivukkarasi, Vivek | Leave a Comment »

Tamil Actress Salary details – Kumudam

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

24.01.07 சினிமா

ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.

ம்ம்… இப்போது படியுங்கள்.

சிம்ரன், ஜோதிகா, லைலா, ஷாலினி, ரோஜா, ரம்பா, தேவயாணி, மும்தாஜ், கிரண், மீனா, அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், ஸ்நேகா, சதா, பூஜா, பூமிகா, நமீதா, பாவனா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், சோனியா அகர்வால், நிலா, ஜெனிலியா, கோபிகா, சந்தியா, மாளவிகா, மம்தா மோகன்தாஸ், ஜோதிர்மயி, பத்மப்ரியா, தமனா, இலியானா, சங்கீதா, அனுஷ்கா, லக்ஷ்மிராய், தியா, அபர்ணா, ப்ரியாமணி, அமோகா, சிந்துதுலானி, ‘குத்து’ ரம்யா, ‘தம்’ ரக்ஷிதா, வசுந்தராதாஸ், கௌசல்யா, கஜாலா, ராதிகா சௌத்ரி, சொர்ணமால்யா, குட்டிராதிகா, திவ்யா உன்னி, கனிகா, விந்தியா, சாயாசிங், மதுமிதா, உமா, ப்ரியங்கா த்ரிவேதி, காயத்ரி ஜெயராம், காயத்ரி ரகுராம், அபிதா, ஸ்ரீதேவிகா, அக்ஷயா, பூனம், ரேணுகாமேனன், நந்தனா, மோனிகா, சுனிதா வர்மா, சரண்யா பாக்யராஜ், நிகிதா, நந்திதா, ஸ்ரீதேவி, ஆஷிமா, காவேரி, சாக்ஷி, ஸ்ரியாரெட்டி, ஷெரீன், அங்கீதா, சூஸன், சமீக்ஷா, மல்லிகா கபூர், ஷீலா, வேதிகா, மீரா வாசுதேவன், விமலாராமன், காம்னா, ஸ்ருதி, ஸ்ருதிகா, ஸம்விருதா, கீரத், காமினி, அதிசயா, மேக்னா நாயுடு, பூர்ணிதா, நித்யாதாஸ், கீர்த்தி சாவ்லா, கார்த்திகா, பானு, கமாலினி முகர்ஜி, தீபா, ரெஜினா, ஆன்ட்ரியா, நர்கீஸ், உதயதாரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், பிபாஷாபாசு, மல்லிகா ஷெராவாத்.’

என இன்றைய தலைமுறை தமிழ் சினிமா இந்த நூற்றியெட்டு கிளுகிளு ஹீரோயின்களின் பெயர்களைத்தான் கலர்ஃபுல் மந்திரமாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. (சிம்ரன் நடிக்க வந்த பிறகு கோலிவுட்டுக்கு குறி வைத்த நடிகைகள் பட்டியல்தான் மேற்படி பட்டியல். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்)

இந்த நடிகைகளுக்கு மெனக்கெட்டு உடலை வருத்தி நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. பக்கம் பக்கமாக பேசுகிற வசனங்கள் இல்லை. அதிகப்படியான காட்சிகளும் இல்லை. வெளிநாடுகளில் கடும் பனியில், ‘பட்ஜெட்’ உடையில் டூயட் பாட இரண்டு மூன்று பாடல்கள் உண்டு. இவையெல்லாவற்றையும்விட, ஹீரோக்களுக்கு இணையாக மார்க்கெட் வேல்யுவோ பிஸினஸோ எதுவும் இல்லாத போதிலும் சம்பளம் மட்டும் அதிகம் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். இதுமட்டும் எப்படி சாத்தியம்?

வாய்ப்புகள் பிடிப்பது எப்படி?

ஒரு நடிகை எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஓடுகிற படத்தில் அவர் ஹீரோயினா இருக்கவேண்டும் அல்லது முன்னணி நடிகருக்கு ஜோடியாக இருக்க வேண்டும். இப்படி ஜோடி சேர்வதற்கு சில காரியங்கள் செய்யவேண்டும். ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகை சினிமா ஜாம்பவான்களுக்கு ஃப்ரெண்ட்லியாக விருந்து கொடுப்பது, புதிய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு ஜிலுஜிலு உடைகளில் வந்து எல்லோரையும் அசர வைப்பது. இதையும் தாண்டி ஹீரோக்களின் வீட்டுக்கே சென்று அவருடைய வீட்டுச் சமையலை பாராட்டுவது, அவர்களது குடும்பத்தின் சென்டிமெண்ட்டான ஆதரவைப் பெறுவது என இப்படி நடிகருக்கும் நடிகைக்கும் இடையே நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் பலன், நட்பு ரீதியாக வாய்ப்புகள் நிச்சயம்.

ஹீரோ ரெக்கமண்டேஷன்

ஒரு தயாரிப்பாளர் மார்க்கெட்டில் உள்ள முன்னணி ஹீரோவை வைத்து படமெடுக்க மும்முரமாக இருப்பார். முன்னணி ஹீரோவை வைத்து படமெடுப்பதால், சுலபமாக ஃபைனான்ஸியர்களிடமிருந்து பண உதவி பெறமுடியும், லாபம் பார்க்க முடியும், பெரிய தயாரிப்பாளர் என்ற இமேஜ் கிடைக்கும். இதனால் பெரிய ஹீரோவை எப்படியாவது கமிட் செய்து விடுவார் அந்தத் தயாரிப்பாளர். உடனே அந்த ஹீரோவும், தயாரிப்பாளரும் இயக்குநரை முடிவு செய்வார்கள், அடுத்தது ஹீரோயின் உடனே ஹீரோ தனக்கு நட்பு ரீதியில் இருக்கும் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யலாம் என்பார். இதனால் அந்தத் தயாரிப்பாளர் அந்த ஹீரோயினையே கமிட் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார். அந்த ஹீரோயினை கமிட் செய்ய அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக இருப்பார். காரணம் ஹீரோவின் ரெக்கமண்டேஷன். இதனால் நாயகியின் சம்பளம் ஏறுவதை தடுக்க முடியாது.

யார் முன்னணி?

தற்போதைய சூழ்நிலையில் நம்பர் விளையாட்டில் முன்னணியைப் பிடிப்பதற்கு அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயாவுக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.

சம்பளத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது தற்போது த்ரிஷா ஒரு லாங் ஜம்ப்பில் முந்திப் போய் கொண்டிருக்கிறார்.

திறமையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அஸின் முன்னணியில் வேகமெடுத்து இருக்கிறார்.

திறமை, சம்பளம் இரண்டையும் தவிர்த்து, மக்களிடையே ஏற்படும் திடீர் மவுசு ஒரு நடிகையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி விடும். அந்த வகையில் ‘சிவாஜி’யில் ரஜினியின் ஜோடியான ஸ்ரேயா கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

‘‘முன்னணி நடிகர்களுடன் க்ளாமரான ஹீரோயின்கள் டூயட் ஆடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இத்தோடு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பெறவும் படத்தோட வியாபாரத்திற்கும் இந்த ஹீரோயின்களும் காரணமாக இருப்பதால் அதிக சம்பளம் தவிர்க்க முடியாததாகிறது’’ என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி.

தமிழ் நடிகைகளில் தனக்கென ஒரு நிலையான இடம் பிடித்த நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய போது அவர் வாங்கிய சம்பளம் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான். ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்னணி நடிகைகளின்

சம்பளப் பட்டியல் (தோராயமாக)

த்ரிஷா _ 65_80 லட்சம்
அஸின் _ 40_60 லட்சம்
நயன்தாரா _ 40_60 லட்சம்
ஸ்ரேயா _ 50 லட்சம்
ஜெனிலியா _ 40 லட்சம்
நிலா _ 25 லட்சம்
சதா _ 25 லட்சம்
ரீமாசென் _ 20_30 லட்சம்
பாவனா _ 20_25 லட்சம்
ஸ்நேகா _ 20 லட்சம்
நமீதா _ 18 லட்சம்
பூஷா _ 10_15 லட்சம்
கோபிகா _ 12 லட்சம்
சந்தியா _ 7_10 லட்சம்

_ ஆதித்யா இராமநாதன்

—————————————————————————————————

நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா, ஜெனிலியா உறுப்பினரானார்கள்: சம்பளத்தில் புதிய கட்டுப்பாடு

நடிகர் சங்கத்தில் 20 சதவீதம் நடிகர்-நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். குறிப்பாக மும்பை நடிகைகள் சங்கத்தில் சேரவில்லை. நடிகர் சங்க கூட்டங்களுக்கும் வருவது இல்லை. ஆனால் அவர்களின் சம்பள பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்தது.

இனிமேல் உறுப்பி னர் அல்லாத நடிகர்-நடிகை களுக்கு உதவுவதில்லை என்று நடிகர் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அவர்களை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் தயா ரிப்பாளர் சங்கத்தை கேட்டுக் கொண்டு உள்ளது.

நடிகர் சங்கத்தின் கிடுக்கிப்பிடியால் ஒருவாரமாக பலர் உறுப்பினர் படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். நடிகை ஸ்ரேயா உறுப்பின ராக சேர்ந்துள்ளார். ஜெனிலியா வும் உறுப்பினராகியுள்ளார். இதுவரை உறுப்பினராகாமல் இருந்த இளம் கதாநாயகர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

இதற்கிடையில் நடிகர்கள் சம்பள பிரச்சினையிலும் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சிங்கப்பூரில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த நட்சத்திர கலைவிழாவுக்கு பலர் வர மறுத்தனர். விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் – நடிகைகளுக்கு பக்க பலமாக இருந்த நடிகர் சங்க விழாவை முன்னணி நட்சத்திரங்கள் புறக்கணித்தது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கமும் அழைப்பு விடுத்தது. அதையும் உதாசீனம் செய்தனர்.

இந்த நிலையில் 50 லட்சம் வரை வாங்கும் நடிகைகள் சம்பளத்தில் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சம்பளத்தில் 70 சதவீதத்தை முன்கூட்டி வாங்க வேண்டும் என்றும் 30 சதவீதம் படம் ரிலீசுக்கு முன்பு தரப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் யோசனை தெரிவித்தது. அது இதுவரை ஏற்கப்படாமல் இருந்தது. அந்த தீர்மானம் ஓரிரு வாரத்தில் அமுலுக்கு வர உள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, விமான பயண செலவு போன்றவற்றிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

Posted in Actors, Actresses, Boys, Boyz, Compensation, Genelia, Harini, Jenelia, Kumudam, Lists, Movies, Price, Salary, Shankar, Shreya, Sriya, Tamil Actress, Tamil Cinema, Tamil Films | 2 Comments »

Can ‘Thiruvilaiyadal Aarambam’ hit the Theatres?

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

திரைக்கதிர்: திரு-வா? குரு-வா?

மனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா

தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா? படத்தின் தற்போதைய நிலைமை என்ன? என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…

“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

திரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா? குரு-வா? என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.

Posted in Bhoopathy Pandiyan, Devathayai Kanden, Dhanush, Shreya, Sreya, Sriya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thanush, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »