Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 3rd, 2006

Madras ENT Hospital’s Achievement – 200 Operations done

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

ஓசையில்லாத உலகத்துக்கு ஒரு விடியல்

சென்னை, நவ. 4: குழந்தைகளின் காது கேளாமையைப் போக்கி, அவர்களுக்கு பேச்சுத் திறனைக் கொடுக்கும் நவீன காக்ளியர் இம்பிளாண்ட் சிசிச்சையை 200 குழந்தைகளுக்குச் செய்து சாதனை படைத்துள்ளது சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை.

வேலூரைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மதன்ராஜுக்கு நவீன காக்ளியர் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது இந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட 200-வது காக்ளியர் இம்பிளாணட் சிகிச்சை. இதற்கான விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்த நவீன சிகிச்சை குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:

இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர். இந் நிலையில் காது கேளாத குழந்தைகளுக்கு நவீனத் தொழில்நுட்ப அடிப்படையில் காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை சிறந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் நூறு சதவீதம் காது கேட்கும் திறன் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட செவித் திறன் கிடைக்கிறது.

தொடர்ந்து பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிலையில் இக் குழந்தைகளால் இயல்பாக பேசவும் முடியும்.

அபிநயா என்ற பச்சிளம் குழந்தைக்குக் கூட இம் மருத்துவமனையில் 9-வது மாதத்திலேயே காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இக் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. இக் குழந்தையின் கேட்கும் திறனும் மேம்பட்டு வருகிறது.

தெற்கு ஆசியாவிலேயே இச் சிகிச்சை அளிப்பதில், சென்னை காது மூக்கு தொண்டை மருத்துவமனை முன்னணியில் உள்ளது.

இந்த மருத்துவமனையில் முதன் முதலில் செய்யாறைச் சேர்ந்த துரைமுருகனுக்கு காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 24.1.2005-ல் சென்னையைச் சேர்ந்த சிதார்த் (3) என்ற குழந்தைக்கு 100-வது காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டு 9 மாதங்களுக்குப் பின் தற்போது வேலூரைச் சேர்ந்த மதன்ராஜூக்கு வெற்றிகரமாக காக்ளியர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது 200-வது காக்ளியர் சிகிச்சை.

திருமண தகவல் இணைய தளம்: காக்ளியர் சிகிச்சை செய்தவர்களை மண வாழ்வில் இணைக்க உதவும் தனி இணைய தளத்தையும் சென்னை காது மூக்கு தொண்டை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.

மருத்துவத்தின் மகத்துவம்: தெற்காசிய அளவில் புதிய சாதனையாக இம் மருத்துவமனையில் 200-வது காக்ளியர் சிகிச்சை நிறைவு விழா சென்னை தியாகராயநகர் கர்நாடக சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சிகிச்சை மூலம் பயனடைந்த 120 பேர் தங்களது குடும்பத்தினருடன் விழாவுக்கு வந்திருந்தனர்.

தங்களது புதுவாழ்வு மலரப் பெற்றதால் மகிழ்ச்சி பொங்க அவர்கள் இவ்விழாவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சாஃப்ட்வேர் பொறியாளர்: இம் மருத்துவமனையில் காக்ளியர் சிகிச்சை செய்து காது கேட்கும் திறனைப் பெற்ற ஜனீஸ் (25) (ஐஐடியில் பட்டம் பெற்றவர்) தனது இளம் மனைவியுடன் விழாவில் பங்கேற்றார். முதன்முதலில் காது கேட்டதால் ஏற்பட்ட உற்சாகத்தையும், தற்போது பெங்களூரில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றுவதையும் மகிழ்ச்சியுடன் விவரித்தார் அவர்.

Posted in Aid, Chennai, cochlear implant, deaf, doctors, ENT, hearing aid, Hearing impaired, Hospital, Madras, medical, Medicine, Operation, Tamil, Volunteer | Leave a Comment »

PMK to fight against acquisition of agricultural lands for SEZs

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

தமிழக பகுதியில் விளைநிலங்களை எடுத்தால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்

விழுப்புரம், நவ. 4: புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தினால் பாமக போராட்டம் நடத்தும் என்று திண்டிவனம் எண்.பி கோ.தன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் கூறியது:

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் உள்ள நிலங்களை ஆர்ஜிதம் செய்யப்போவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில எல்லையையொட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் தென்னந்தோப்புகளும், விவசாய விளைநிலங்களும் உள்ளன. இந்த விளைநிலங்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்துக்கொண்டால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

விளைநிலங்களை வர்த்தகரீதியான விமான நிலையத்திற்காக எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. இப்பகுதி விவசாயிகள், இது குறித்து என்னிடம் முறையிட்டுள்ளதோடு, கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

ஆகவே இந்த முயற்சியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விளைநிலங்களை கையகப்படுத்த முயன்றால், பொதுமக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே நகர் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் தரைப்பகுதி முழுவதும் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி அருகே உள்ள இந்த பழைய விமான நிலையத்தை வர்த்தகரீதியான விமானப் போக்கு வரத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் பலனடைவார்கள்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் சுற்றுலா மற்றும் கலாசார குழுவின் உறுப்பினர் என்ற முறையில் இது குறித்து மத்திய அரசிற்கு ஏற்கெனவே பல கடிதங்கள் எழுதியுள்ளேன்.

புதுச்சேரி விமான நிலையத்திற்காக கோட்டக் குப்பம் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்யும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

Posted in acquisition, Agitation, Agriculture, Airport, Expansion, Farmers, Fight, PMK, Pondicherry, Projects, Puthucherry, SEZ, Tamil, workers | Leave a Comment »

CDMA issues list of Chennai high-rise without permit buildings to be demolished

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

சென்னை நகரில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 27 கட்டிடங்கள் இடிக்கப்படும்

சென்னை, நவ.3-

சென்னை நகரில் பல பகுதிகளில் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 3 மாடி கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு 7 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன.

சமீபத்தில் இதுபோன்று கட்டப்பட்ட சில கட்டிடங்களை சி.எம்.டி.ஏ. இடித்து தள்ளியது. மேலும் இதுபோல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி 27 கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அனுமதிக்கு ஏற்ப தாங்களே இடித்துவிடும்படி 30 நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர்களே கட்டிடங்களை இடிக்காவிட்டால், சி.எம்.டி.ஏ. அந்த கட்டிடங்களை இடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தியாகராய நகர், மைலாப்பூர், எழும்பூர், அண்ணாசாலை, அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வேப்பேரி, வடபழனி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள 27 கட்டிட உரிமையாளர்களுக்கு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.எம்.டி.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழே விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள கட்டிடங்கள் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமலும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், கட்டிட அபிவிருத்தி செய்பவர்கள், கட்டிடத்தில் குடியிருப்போர் இந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது கட்டிடங்களை பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு ஏற்ப கொண்டு வரவேண்டும். அல்லது திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தங்களது மனையை கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு தாங்களே கொண்டு வரவேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் சட்டப்படி மறு அறிவிப்பின்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்.

  • தியாகராயநகர் ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் (3-வது தளம் முதல் 7-வது தளம் வரை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),
  • நிï சரவணா ஸ்டோர்ஸ் (கார் நிறுத்தும் தளம் வணிக உபயோகமாக மாற்றப்பட்டுள்ளது, மற்றும் சில பகுதிகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),
  • ஜி.ஆர்.டி. தங்க சேமிப்பு பிரிவு,
  • போத்தீஸ்,
  • சரவணா கோல்டு ஹவுஸ்,
  • சரவணா செல்வரத்தினம்,
  • ஜி.ஆர்.டி. தங்க மாளிகை,
  • டி.சி.எஸ். டெக்ஸ்டைல்ஸ்,
  • அண்ணாசாலை அசோசியேட்டட் பில்டர்ஸ்,
  • அண்ணாநகர் பிரமீட் ஆடியோ இந்தியா,
  • வடபழனி ஏ.வி.எம். வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம்,
  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியம் உள்பட 27 கட்டிடங்கள்.

இவ்வாறு சி.எம்.டி.ஏ.வின் எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in ADMK, AVM, Buildings, CDMA, Chennai, Chennai Metropolitan Development Authority, Chennai Silks, Demolition, DMK, Extortion, GRT, License, Madras, Multi story, Permit, Pothys, Pyramid, Saravan Selvarathinam, Saravana Stores, Sekhar Emporium, TCS Textiles | Leave a Comment »

Minister Dasari Narayana Rao in domestic violence case

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

மகனுக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி: மத்திய மந்திரி மீது மருமகள் பரபரப்பு புகார்- குடும்ப வன்முறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மனு

ஐதராபாத், நவ. 3-

பிரபல தெலுங்கு பட இயக்குனரான தாசரி நாராயணராவ் மத்திய மந்திரியாக பதவி வகிக்கிறார். இவரது மூத்த மகன் தாசரிபிரபு. இவருக்கும் சுசீலா என்ற பெண்ணுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் தாசரி நாராயணன் என்ற மகன் இருக்கிறான். குடும்ப தகராறு காரணமாக தாசரி பிரபுவும் சுசீலாவும் பிரிந்து வாழ்கிறார்கள்.

கடந்த ஆண்டு சுசீலா தனது கணவர் மீதும் மாமனார் தாசரி நாராயணராவ் மீதும் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே சுசீலா கணவர் மீதும் தாசரி நாராயண ராவ் மீதும் மீண்டும் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை தனிமைப்படுத்திவிட்டு தாசரி பிரபுவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், எனவே இருவர் மீதும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரை கொடுப்பதற்காக சுசீலா ஐதராபாத் போலீஸ் நிலையம் வந்திருந்தார். அவரை போலீசார் 3 மணிநேரம் காக்க வைத்தபிறகு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் அதன் மீது முறைப்படி வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இது பற்றி போலீசாரிடம் கேட்டதற்கு தாசரி நாராயண ராவ் மற்றும் அவரது மகன் மீது ஏற்கனவே சுசீலா வரதட்சணை புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வந்துள்ள புகாரையும் அதனுடன் சேர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

புதிய புகார் பற்றி தாசரி பிரபுவிடம் கேட்டபோது, சுசீலாவை நான் திருமணம் செய்தது முதல் என் மீது அவள் ஒருபோதும் அன்பு காட்டியது இல்லை. பண ஆசை பிடித்தவள். பணத்தின் மீதே குறியாக இருப்பாள். பணத்துக்காக அவள் எதை வேண்டுமானாலும் செய்வாள்’ என்றார்.

கணவன்- மனைவி பிரச்சினையில் இவர்களது 11 வயது மகன் தாசரி நாராயணன் தவிக்கிறான்.

Posted in abuse, Cabinet, Dasari, domestic violence, Dowry, Hyderabad, Marriage, Minister, Narayana Rao, Telugu, Tollywood | Leave a Comment »

‘Maniammai’ Kushboo – Thangar Bhachaan refuses to handle camera duty

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் குஷ்பு எதிர்ப்பை கைவிட்டனர்: மணியம்மை படப்பிடிப்பு தீவிரம்

கற்பு பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் குஷ்பு. அவர் தற்போது `பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்கிறார்.

`மணியம்மை’ கேரக்டரில் குஷ்பு நடிக்க ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. `பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் படிப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்றும் இரு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் குஷ்பு இடம்பெறும் காட்சிகள் திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன. பா.ம.க., விடுதலை சிறுத்தைகளால் படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஆனால் இரு கட்சித்தொண்டர்களாலும் எதிர்ப்பு வரவில்லை. எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டனர்.

தங்கர்பச்சான் மட்டும் கோபத்தில் பிடிவாதமாக இருந்தார். குஷ்பு காட்சிகளை படமாக்க மறுத்து விட்டார். அவரது உதவியாளர் ஒளிப்பதிவு செய்கிறார். குஷ்பு நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

மணியம்மை கேரக்டரில் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார் குஷ்பு.

கடவுள் நம்பிக்கை தனக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

Posted in Cameraman, cinematographer, Dalit Panthers, EVR, Kushboo, Kushbu, Maniammai, Periyaar, PMK, Sathyaraj, Thangar Bachan, Thangar Bhachaan, Viduthalai Siruthaigal | Leave a Comment »