Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Can ‘Thiruvilaiyadal Aarambam’ hit the Theatres?

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

திரைக்கதிர்: திரு-வா? குரு-வா?

மனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா

தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா? படத்தின் தற்போதைய நிலைமை என்ன? என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…

“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

திரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா? குரு-வா? என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: