Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Prime Minister’ Category

Prime Minister Lal Bahadur Shasthri – R Venkatraman (Biosketch)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

எளிமைக்கு இலக்கணம் சாஸ்திரி!

ஆர். வெங்கடராமன்

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டாலும் லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் லேசாக வலி ஏற்படுகிறது. ஈடு இணையற்ற எளிமையான மனிதர். பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் ஒரே மாதிரியாக இருந்தார். பதவியைத் தேடி அவர் சென்றதில்லை, மாறாக, பதவிகள்தான் அவரைத் தேடி வந்தன.

1950-ல் அப்போதைய நாடாளுமன்றத்துக்கு நான் சென்றபோது காமராஜரும் சாஸ்திரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததைக் கண்டேன். இருவருமே ஒரே வார்ப்பில் உருவாக்கப்பட்டவர்கள். இருவரும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள், சொந்தமாக சொத்தோ, செல்வாக்குள்ள தொடர்புகளோ இல்லாமல் பொதுவாழ்வுக்கு வந்தவர்கள். நேர்மை, உழைப்பு, தியாகம் ஆகியவற்றின் மூலம் உன்னத நிலைக்கு உயர்ந்தவர்கள். இருவருமே சமூகத்தில் வறிய பிரிவினர் மீது எல்லையற்ற கரிசனம் கொண்டிருந்தனர்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் தலைவிரித்தாடியபோது நடுநிலையுடனும் நியாயமாகவும் சாஸ்திரி அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்ட விதத்தால் மிகவும் வியப்படைந்தேன். ஒரு தரப்பு அல்லது ஒரு கோஷ்டி சொல்வதை மட்டும் கேட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டார்.

காமராஜரிடம் அதே குணம்தான். ஒருதலைப்பட்சமாக யாராவது ஏதாவது கூறினால் அவர், “”பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிடுவார். தில்லி அரசியல் வட்டாரங்களில் காமராஜரின் அந்த பதில் ரொம்பப் பிரபலம். இருதரப்பையும் கேட்டு, விருப்புவெறுப்பு இல்லாமல் எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் சாஸ்திரியின் நல்ல குணம், உயர் பதவிகளை அவர் வகிக்கப் பெரிதும் கைகொடுத்தது.

சாஸ்திரியின் அடக்கமும் காங்கிரஸ்காரர்களிடையே மிகவும் பிரசித்தியாக இருந்தது. சாஸ்திரியின் மகன் ஹரி, சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். நீ என்னுடைய மகன் என்று யாருக்கும் தெரிவிக்கக்கூடாது, என் பெயரைச் சொல்லி நீ கூடுதலாக எந்தச் சலுகையையும் யாரிடமும் பெறக்கூடாது என்றே மகனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார் சாஸ்திரி. சாஸ்திரியாரின் மகளும் மாப்பிள்ளையும் சென்னைக்கு வந்தபோது ஆளுநர் இல்லமான ராஜ்பவனில் தங்க மறுத்துவிட்டனர்.

அவர் பிரதமராகப் பதவி வகிக்தபோது இரவு 10 மணிக்கு அவரை அவருடைய அலுவலகத்தில் சென்று பார்த்தேன். அப்போது அவருடைய கையெழுத்துக்கு ஒரு கோப்பு வந்தது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட மேஜையில் பேனாவைத் தேடினார் அவர். வெளிநாட்டில் வாங்கிய என்னுடைய பால்-பாயிண்ட் பேனாவை நான் உடனே அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி கையெழுத்திட்டுவிட்டு என்னிடம் திருப்பித்தந்த அவர், நன்றாக எழுதுகிறது என்று கூறினார். வெளியே புறப்பட்ட நான், சாஸ்திரியாரின் உதவியாளரை அழைத்து, இந்தப் பேனா அவருக்குப் பிடித்திருக்கிறது, இதை அவரிடமே கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு வந்தேன். அடுத்த நாள் சாஸ்திரியாரின் உதவியாளர் நான் தங்கியிருந்த இடத்துக்கே வந்து, சாஸ்திரியார் அதைத் திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னார், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும் மத்திய அரசிலும் தாம் வகித்த பதவிகளில் எல்லாம் தனி முத்திரை பதித்துச் சென்றார் சாஸ்திரி.

ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்களில் அப்போது நிலவிய பல்வேறு வகுப்புகளை அவர் ரத்து செய்தார். மேல் வகுப்பு, சாதாரண வகுப்பு என்ற இரண்டை மட்டும் அனுமதித்தார். சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தினார்.

தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, பெரிய தொழில் நிறுவனங்களுடன் கதர், கிராமத் தொழில்களும் வளர்ச்சி பெற உரிய முக்கியத்துவம் தந்தார்.

பிரதமராக இருந்தபோது, தொழில் வளர்ச்சி, ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு பட்டியிலில் இருந்து பலவற்றைப் படிப்படியாக நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாராளமயத்தை அப்போதே அவர் அனுமதித்தார்.

மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிராக பெரிய போராட்டம் நடைபெற்றது. 1965 ஜனவரி முதல் தேதி ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கு மாறிவிடுவார்கள் என்று பெரிய போராட்டம் வெடித்தது. தென்னிந்திய மாநில மக்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட சாஸ்திரி, ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். 1965 ஜனவரி 1-க்குப் பிறகு ஹிந்தியுடன் ஆங்கிலமும் அரசு நிர்வாக நடைமுறையில் தொடர அவர் அதிகாரபூர்வ மொழி மசோதாவை அறிமுகம் செய்தார். காரியசாத்தியமாக முடிவெடுக்கும் அவருடைய பண்பு மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தமது துறையில் நடக்கும் தவறுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் அமைச்சர்தான் பொறுப்பு என்ற தார்மிக நெறியை முதலில் ஏற்படுத்தியவரே லால் பகதூர் சாஸ்திரிதான். அப்போதைய சென்னை மாகாணத்தில் நிகழ்ந்த பெரிய ரயில் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். நேருஜி எவ்வளவோ வலியுறுத்தி கேட்டுக்கொண்டும் அவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

பொதுச்சபை கூட்டத்துக்கும், சபையின் நிர்வாக நடுவர் மன்றக் கூட்டத்துக்கும் இந்தியாவின் பிரதிநிதியாக பல முறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கிருப்பவர்கள், “நேருஜிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரத் தகுதியானவர்கள் யார்?’ என்று என்னிடம் அக்கறையுடன் விசாரிப்பார்கள். ஜனநாயகம் தழைத்தோங்கும் எங்கள் நாட்டில், நேரம் வரும்போது உரியவரைத் தேர்ந்தெடுப்போம் என்றே நான் பதில் சொல்லிவந்தேன்.

நேருஜி மறைந்த பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு காமராஜரிடம் விடப்பட்டது. அப்போது கருத்தொற்றுமை மூலம் முடிவெடுப்பது என்ற உத்தியை காங்கிரஸ் பின்பற்றி வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி அவருடைய கருத்தை கேட்பது என்ற நடைமுறையை காமராஜர் பின்பற்றினார். மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி என்ற இருவர் இடையே போட்டி இருந்தது. பெரும்பாலானவர்கள் சாஸ்திரியையே விரும்பினர். அதை மொரார்ஜி தேசாயும் ஏற்றுக்கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக ஏற்கும் தீர்மானத்தை வழிமொழிந்தார்.

1966 ஜனவரி 11-ம் தேதி தாஷ்கெண்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. திறமையான ஒரு நிர்வாகியை, சாமானிய மனிதனின் உண்மையான நண்பனை நாடு இழந்துவிட்டது.

ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று அவர் தந்த கோஷம் என்றும் நிலைத்திருக்கும். ஹிந்துஸ்தானம் வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையின் விளைவாக அவருள் உதித்ததே இந்த கோஷம்.

(கட்டுரையாளர்: முன்னாள் குடியரசுத் தலைவர்)

Posted in Agriculture, Assassination, Biography, Biosketch, CCCP, dead, Faces, Farmer, LB Shasthri, LB Shastri, Murder, names, people, PM, President, Prez, Prime Minister, Russia, Shasthri, Shastri, Tashkent, USSR, Venkatraman | Leave a Comment »

Blair departs, leaving Brown to rebuild their New Labour

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை

கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.

சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.

பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.

புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.

சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்


பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு

பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.

அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.

தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.


மனைவியுடன் கார்டன் பிரவுன்மனைவியுடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்


மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்

டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்

பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.

டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.

ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.

இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.

பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.


Posted in africa, Arab, Biosketch, Blair, Britain, Brown, Cabinet, Cameron, Chancellor, Charles, Commons, Commonwealth, Conflict, Conservative, Diana, Downing, Dubai, Egypt, Election, England, EU, Faces, Fatah, Finance, financial, Gordon, Gordon Brown, Government, Govt, Gulf, Hamas, Iraq, Ireland, Islam, Israel, Jerusalem, Kuwait, Labor, Labour, Leader, London, Mid-east, Mideast, NATO, Opposition, Palestine, Party, people, PM, Polls, Post, Prime Minister, Ruler, Russia, Saudi, Scotland, Shuffle, Thatcher, Tony, Tory, Treasury, UAE, UK, UN, War | Leave a Comment »

Cut excessive pay to CEOs: Manmohan Singh – Ambika Soni defends Prime Minister’s premise

Posted by Snapjudge மேல் மே 28, 2007

தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி

புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.

“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.

சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:

பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.

ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.

அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.

Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »

Chirac backs Sarkozy in poll race – France Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு

நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)
நிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)

பிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.

12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.

ஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.

இந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பைரோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.

Posted in Chirac, Elections, Euro, Europe, France, Francois Bayrou, French, PM, Polls, President, Primary, Prime Minister, Race, Sarkozy, support, UMP | Leave a Comment »

Former PM Chandrashekhar`s grandson declared absconder in murder

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

கொலை வழக்கு: முன்னாள் பிரதமரின் பேரனை போலீஸ் தேடுகிறது

மாவ் (உ.பி.), ஜன. 29: முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் பேரன் ரவிசங்கர் சிங் மற்றும் இருவரை தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில சட்ட மேலவை உறுப்பினராக உள்ள ரவிசங்கர் சிங் மற்றும் இருவர் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவர்களின் சொத்துக்களை முடக்கி வைக்குமாறும் மாவட்ட தலைமை நீதிபதி ஏ.கே.பாண்டே சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் கைது செய்யப்படாமலும் அவர்கள் சரணடையாத நிலையில் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நிலக்கரி வியாபாரி கஜேந்திர சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரவிசங்கர் சிங், சுஷில் சிங், சுரேஷ் சிங் ஆகிய மூவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

Posted in BJP, Chandrashekhar, Chulbul Singh, Coal, Dhanbad, Former PM, Gajendra Singh, grandson, Indara, Law, Mau, MLC, Murder, Order, Prime Minister, Ravi shankar Singh, Ravishankar Singh, Suresh Singh, Sushil Singh | Leave a Comment »

Can Sharad Pawar become Prime Minister of India?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?

நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ

கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.

நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.

அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.

பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.

Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

Manipur capital Imphal shutsdown, as PM arrives

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

மன்மோகன்சிங் வருகையை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு

இம்பால், டிச.3- பிரதமர் மன்மோகன்சிங், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவருடைய வருகையை ஒட்டி, இரு அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

`திபாய்முக்’ அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழு சார்பிலும், மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஆயுத சட்டம் அமலில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, புரட்சிகர மக்கள் முன்னணி என்ற தீவிரவாத அமைப்பு சார்பிலும் இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டம் காரணமாக, மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. வாகனங்கள் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கான வாகன போக்குவரத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.

Posted in ACATP, Action Committee Against Tipaimukh Project, Armed Forces Act, Bandh, Churachandpur, Dam, Impala, Imphal, Manipur, Manmohan Singh, PM, Prime Minister, Protest, Revolutionary People's Front, RPF, Strike, Tipaimukh Dam | Leave a Comment »

Shibu Soren convicted in his secretary Jha’s murder case

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2006

கொலை வழக்கில் ஷிபு சோரனுக்கு எதிராகத் தீர்ப்பு

ஷிபு சோரன்
ஷிபு சோரன்

கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, இந்திய நடுவண் அரசின் மூத்த அமைச்சர் ஷிபு சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷிபு சோரன் தனது உதவியாளரை கடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார், என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஷிபு சோரன் நிலக்கரித் துறையை வகித்து வந்தார். தீர்ப்பு வந்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் உருவாக முக்கியப் பங்கு வகித்த ஷிபு சோரன், ஏற்கனவே ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பதும் பிறகு மீண்டும் பதவியேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெறுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை.

Posted in Bribe, Cabinet, CBI, Chiroari massacre, Corruption, India, Jharkhand, Jharkhand Mukti Morcha, JMM, Minister, Prime Minister, Shashinath Jha, Shibu Soren, Shiv Sena, Union Minister for Steel and Mines, UPA | Leave a Comment »

Laloo Prasad Yadav – For Prime Minister of India (Dinamani Editorial)

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

லாலுவின் ஆசை

நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.

ஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.

பிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.

ரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் பதவியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் பிரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.

இவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.

Posted in Ajun Singh, Cabinet, India, Laloo Prasad Yadav, Lalu, Minister, PM, Pranab Mukherjee, Prime Minister, Railways, Sharad Pawar | Leave a Comment »

Give relief to farmers: Dharia – Manmohan invites for talks

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

விவசாயிகள் தற்கொலையைக் கண்டித்து மோகன் தாரியா உண்ணாவிரத திட்டம்

புணே, அக். 27: மகாராஷ்டிரத்தில் கடன் சுமை தாளாமல் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க அரசு தலையிடக் கோரி, காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் தாரியா (82) திட்டமிட்டிருக்கிறார்.

நேரு பிறந்த நாளான நவம்பர் 14 முதல் இக்கிளர்ச்சியை அவர் தொடங்கவிருக்கிறார்.

எனவே அதற்கு முன்னதாக, இம் மாதம் 30-ம் தேதி தில்லிக்கு வருமாறு தாரியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் மன்மோகன்.

இது தொடர்பாக நிருபர்களிடம் மோகன் தாரியா கூறியதாவது:

“மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகளுக்குப் பிறகும்கூட மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வது நிற்கவில்லை.

இந்தப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு யாரும் நடவடிக்கை எடுப்பதைப் போலத் தெரியவில்லை.

நமது பொருளாதாரத்துக்கே அச்சாணியான விவசாயிகளின் மன உறுதி குலைந்தால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அக்டோபர் 7-ம் தேதி கடிதம் எழுதினேன். நவம்பர் 14 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன்.

அவ்வாறு செய்யவேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

கூட்டுறவுச் சங்கங்கள், அரசுடைமை வங்கிகள், தனியார் லேவாதேவிக்காரர்கள் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளனர் விவசாயிகள். இதில் தனியாரிடம் வாங்கிய கடனுக்குத்தான் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது.

அவர்களின் மிரட்டல் தாங்க முடியாமல்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்தக் கடன்கள் சட்ட விரோதமானவை. இவற்றை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காதவரை, உண்ணாவிரத முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்புகள் எனக்கு ஆதரவாக உள்ளன’ என்றார் மோகன் தாரியா.

சிறந்த நிர்வாகி: மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், சிவில் சப்ளை துறை அமைச்சராக இருந்தவர் மோகன் தாரியா. நிர்வாகத் திறமை மிகுந்தவர், நேர்மையாளர். அவருடைய காலத்தில்தான் சர்க்கரைக்கு இரட்டை விலைக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. வெளிநாடுகளுக்கு மிகக் குறைந்த விலைக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்தது நிறுத்தப்பட்டது. இவ்விரு காரணங்களால் ரேஷன் கடைகளைவிட மளிகைக் கடைகளில் சர்க்கரை விலை குறைவாகவும், எளிதாகவும் கிடைத்தது.

அத்துடன் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வையும் அற்புதமாக கட்டுப்படுத்தினார் அவர். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் விலைவாசியும் பணவீக்க விகிதமும் கட்டுக்குள் இருந்தன.

Posted in Agriculture, Farmers, Fast, maharashtra, Manmohan, Mohan Dharia, Morarji Desai, Prime Minister, Suicide, Union Minister, voluntary | Leave a Comment »

Pranab gets MEA, Anthony named Defence Minister

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

மத்திய மந்திரி சபை இன்று இரவு மாற்றம்: நடிகர் அம்பரீஷ் மந்திரி ஆகிறார்

புதுடெல்லி, அக். 24-

மத்திய மந்திரிசபையில் பல இலாகாக்களுக்கு மந்திரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். வெளியுறவு மந்திரியாக இருந்த நட்வர்சிங் ஈராக்கின் உணவுக்கு எண்ணை திட்ட ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.

  • தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த தெலுங் கானா கட்சி தலைவர் கே.சந்திரசேகர்ராவ்,
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த ஏ.நரேந்திரா,
  • நீர் வள ஆதார மந்திரியாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெய் பிர காஷ் நாராயணன் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மத்திய மந் திரி சபையில் இன்று சிறிய அளவில் மாற்றம் செய் யப்படுகிறது.

ராணுவ மந்திரியாக இருக்கும் பிரணாப்முகர்ஜி இலாகா மாற்றம் செய்யப் படுகிறது. அவரை வெளியுறவு மந்திரியாக நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து இருக்கிறார். பிரணாப் முகர்ஜிக்கு பதில் புதிய ராணுவ மந்திரி நியமிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் பொது செயலாளராக இருக்கும் ஏ.கே.அந்தோணி தொழிலாளர் நலத்துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார். ஐ.என்.டி.சி. தலைவர் சஞ்சீவரெட்டியும் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுகிறார். இவர் 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு தேர்தலிலும், 2004-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார்.

நடிகர் அம்பரீஷ் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில் ஸ்ரீதேவிக்கு காதலனாக நடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

இவரது மனைவி நடிகை சுமலதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ள ஏராளமான படங்களில் நடித்தவர். அம்பரீசுடன் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கன்னட பட உலகில் முன் னணி நடிகராக இருந்த அம் பரீஷ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார்.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Posted in A K Antony, Ambareesh, Chandra Sekhar Sahu, Defence Minister, External Affairs, Information and Broadcasting, J P Yadav, Jaiprakash Narayan Yadav, Karnataka, Manmohan Singh, Minister of State, Mukherjee, Oscar Fernandes, Pranab, Prime Minister, Rural Development, Sumalatha, Water Resources | 1 Comment »

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

Posted in Army, Azad Kashmir, Bomb Blasts, Book, Criticism, Critique, defence, Defense, External Affairs, Foreign Affairs, In the Line of Fire, India, Kashmir, Military, Mumbai, Musharraf, Pakistan, POK, Prime Minister, Relations, review, Tamil, Terrorism | Leave a Comment »

External Affairs Minstry – Conundrum for Prime Minister

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

யார், புதிய வெளியுறவு அமைச்சர்?

நீரஜா செüத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ

அணிசாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியதும் வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருந்தார் பிரதமர். அதைத் தொடர்ந்து, அப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியும் நெருக்குதல்களும் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்துவிட்டன.

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உறுதியாகும் வரையில் வெளியுறவு இலாகாவைத் தன் வசமே வைத்துக்கொள்ளவே பிரதமர் விரும்புவார் என பலர் கருதுகின்றனர். நேரம் வரும்போது புதியவரின் பெயரையும் அறிவித்து நியமனமும் செய்துவிட்டுப் போகலாம். முன்னறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்குதல்களை வரவழைத்துக் கொண்டுவிட்டார் பிரதமர்.

இது ஒருபுறம் இருக்க; அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பொருத்தவரை, அது வெற்றி பெற்றால், பிரதமரின் கிரீடத்தில் வைத்த வைரக்கல்லாக அது கருதப்படும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், “அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடவில்லை’ என்ற பெருமை அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் அவரது மதிப்பும் உயர்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான உறுதிமொழியை அளித்திருக்கும் அவரால், அதிலிருந்து பின்வாங்குவது இயலாத காரியம்.

மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதையும் மேற்கொள்ளும் உத்தேசம் பிரதமருக்கு இல்லை. ஏனென்றால், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல்களை வரவழைப்பதாக அது அமைந்துவிடும்.

பாதுகாப்புத் துறை அமைச்சரான பிரணப் முகர்ஜி வெளியுறவுத் துறைக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்; அனுபவத்தில் மூத்தவர், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட 35-க்கு மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைமை வகித்திருப்பவர்; எதிரும் புதிருமாக நாடுகள் அணி சேர்ந்திருக்கும் இன்றைய உலகச் சூழலில், இந்தியாவுக்கு வரக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்கக்கூடியவர். ஆனால், பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுக்கு மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை.

தெளிவாகச் செயல்படக்கூடிய ப. சிதம்பரமும் அப் பொறுப்புக்குப் பொருத்தமானவர்தான். ஆனால், தமிழரான அவருக்கு, இலங்கை தொடர்பான கொள்கையை ~ அதிலும் குறிப்பாக அங்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்துள்ள நேரத்தில் ~ கையாள்வது சங்கடமானதாக இருக்கக்கூடும். அதோடு, நிதித் துறையை அவர் கையாள்கிற விதமும் பிரதமருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.

புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக கரண் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, கமல் நாத், கபில் சிபல் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக்கொண்டு இருந்தது. சிதம்பரத்துக்கு எப்படி இலங்கை விவகாரமோ, அதேபோல கரண் சிங்குக்கு பாகிஸ்தான் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவுக்கு அவர்தான் தலைவர்; அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்; பிரதமரின் தூதராக நேபாள விவகாரத்தைத் திறமையாகக் கையாண்டவர். இருந்தபோதிலும், அவர் ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அம்சம் அவருக்குப் பாதகமாக இருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புத்தெழுச்சியுடனும் உத்வேகத்துடனும் செயல்படக் கூடியவர்தான் கபில் சிபல். பிரதமரின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கூர்மையாகவும் சிந்தனைத் தெளிவுடனும் செயல்படக்கூடியவர்; சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அறிவும் அவருக்கு இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் நண்பர்களாக இருப்பவை இஸ்லாமிய நாடுகள்; ஆயினும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, ஈரான் விவகாரம் ஆகியவற்றில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அவை அதிருப்தி அடைந்துள்ளன. எனவே, அவற்றுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது புதிய அமைச்சருக்கு முன்னுள்ள சவால்களில் ஒன்று. கபில் சிபலுக்கு சிறுபான்மைச் சமுதாயத்தினருடனும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், அப் பதவிக்கு நியமிக்கும் அளவுக்கு அவர் மூத்தவரல்லர்; பலருக்கு “இளையவர்’ என்று கருதப்படுவதான் அவருக்கு உள்ள சிக்கல். அதோடு, கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் சக்திகளும் பலமாக உள்ளன.

அனுபவத்தால் மெருகேறிய, மகாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலத்தில் அடிபட்டது. மத்திய அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு சில காலமாக இருந்துவருகிறது. ஆனால், அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர், அண்மைக் காலத்தில் மத்திய அரசியலில் செல்வாக்கும் பலமும் மிக்கவராக உருவெடுத்திருக்கும் வீரப்ப மொய்லி ஆவார். பல்வேறு கமிட்டிகளின் தலைவராக, பிரதமரால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர், ஒரே நேரத்தில் தில்லி அரசியலில் அதிகார மையங்களாகச் செயல்பட முடியாது.

கடைசியாக வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சிவராஜ் பாட்டீல்; உள் துறையில் குறிப்பிடும்படி செயல்படாத அவர், வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, உள் துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என்ற பேச்சு அடிபட்டது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பிரதமர் செயல்பட வேண்டியுள்ளது. பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, சைபுதீன் சோஸ் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் தமது துறைச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அந்த வேலையில் இறங்கினால், அது குழவிக்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும் என்று அதைத் தவிர்த்துவருகிறார் பிரதமர்; எனவே, அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வது அதைவிடச் சிக்கலானதாகிவிடும்.

இருந்தபோதிலும், வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சரை நியமிக்கும் விஷயத்தைக் காலவரையின்றி மன்மோகன் சிங் தள்ளிப்போட முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சரின் பணிகளை பிரதமர் கவனித்துக் கொண்டிருக்க முடியாது; இந்தியாவுக்கு வருகை தருகின்ற பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மன்மோகன் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்கு வரும் வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்தான் சந்திக்க வேண்டும் என்பது அரச நடைமுறையாகும். எனவே, இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் எவரும், இணை அமைச்சரைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள்.

இராக்கிய எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் தொடர்பாக விசாரித்த விசாரணைக் குழு, “நட்வர் சிங் குற்றமற்றவர்‘ என்று அறிவிக்கும் பட்சத்தில், அப் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை அவருக்குத் தெரிவித்து, அவரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில்தான், முதலில் அப் பதவி நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலைமைகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு வெளியுறவுத் துறைப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்திருக்கின்றனர். ஆனால், அக் காலச் சூழல் வேறு. இன்று, வெளியுறவுக் கொள்கையானது மிகவும் சிக்கலானதாகிவிட்டது; அப் பொறுப்பைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிராந்திய வல்லரசாக இந்தியா உருவெடுத்துவரும் நிலையில் அதற்கான அவசியம் மேலும் அதிகரித்திருக்கிறது.

தமிழில்: லியோ ரொட்ரிகோ

Posted in Analysis, Cabinet, Dinamani, External Affairs, India, Kamal Nath, Kapil Sibal, Karan Singh, Leo Rodrigo, Manmohan Singh, Minsiter, Minstry, NAM, Neeraja Chowdhry, Op-Ed, Pa Chidambaram, Pakistan, Pranab Mukherjee, Prime Minister, SM Krishna, Sri lanka, Tamil | Leave a Comment »

Thaksin Shinawatra, the ousted prime minister of Thailand to stay put in London

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

லண்டனில் தக்ஷின்
லண்டனில் தக்ஷின்

லண்டனில் தக்ஷின் சின்வத்ரா

தாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தனது மனைவியுடன் தக்ஷின்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Posted in Asean, Bangkok, Coup, Democracy, General, London, Military, parliament, Pasuk Phongpaichit, Prime Minister, Sondhi Boonyaratkalin, Tamil, Thailand, Thaksin Shinawatra, World | Leave a Comment »