Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘voter’ Category

Display of power and the arrogance behind the Govt sponsored conferences: DMK at Nellai

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

பலமல்ல, பலவீனம்!

தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பு: DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details « Tamil News

நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே?

இந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.

இதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

மாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.

இளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.

மற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.

இப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை?

மக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன!

————————————————————————————————————————————————————-
மாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன?

திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.

அதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.

குறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.
————————————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Arcot, Arcot N Veerasamy, Arcot Veerasami, Arcot Veerasamy, Bribery, Bribes, Conference, Corruption, Dinamani, DMK, Economy, Elections, Electricity, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Media, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MSM, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Op-Ed, Order, Politics, Polls, Poor, Power, Prices, Procession, Rich, Stalin, State, Tirunelveli, voter, Votes, Waste, Youth | 2 Comments »

K Ramamurthy: Politics & Politicians – Plight of the leaders

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

அரசியல்வாதிகளும் அரசியல்கட்சிகளும்!

கே.ராமமூர்த்தி

“”அரசியல்” என்ற வார்த்தையையே ஏளனம் தொனிக்கும் வகையில்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது, அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, வேண்டியவருக்குச் சலுகை, அதிகார துஷ்பிரயோகம் என்றே முடிவு கட்டப்படுகிறது. “”சாணக்கியன்”, “”மாக்கியவல்லி” என்று ஒருவரைக் குறிப்பிடும் அடைமொழிகூட, “”அந்த ஆள், இந்த அத்துமீறல்களில் கைதேர்ந்தவர்” என்ற வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.

மனிதர்கள் முதலில் சமுதாயமாகக் கூடி வாழ ஆரம்பித்தபோது அவர்களுடைய தலைவனின் அதிகாரமும் ஆளுமையும்தான் அவர்களைக் காத்தது. வேளாண்மையும் வர்த்தகமும் சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தவுடன், கிரேக்க நாட்டில் போலீஸ், குடிமகன் என்ற வார்த்தைகள் சமூகத்தில் இடம்பெறலாயின. ரோமானியச் சட்டத்துக்கும் சட்டப்படியான ஆட்சிக்கும் மேற்கத்திய நாடுகளில் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். கீழை நாடுகளில் பஞ்சாயத்து, தர்மம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன.

மனிதனின் அடிப்படையான வக்கிரபுத்தி, சுயநலன் சார்ந்த எண்ண முரண்பாடுகள், அதிகாரத்தைச் செலுத்தியவர்களின் சமச்சீரற்ற நோக்கு, பரம்பரை அதிகாரம் ஆகியவற்றால் இந்தச் சமுதாயத்தில் மோதல்களும் அமைதியின்மையும் நிரந்தர அம்சங்களாகிவிட்டன.

இப்போது அரசியல்வாதி என்றாலே அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாகிறான். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் முழுமை பெறாது. கட்சிகளே இல்லாமல் தேர்தல் நடத்தி நல்லவர்களை, நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள்கூட வலியுறுத்தினார்கள். இவையெல்லாம் வெறும் லட்சியங்களாகவே நின்றுவிட்டன.

நவீன அரசியல் பாட ஆசான் ஜே.சி. ஜோஹரி குறிப்பிடுவதைப் போல, அரசியல் கட்சிகள் பங்கு பெறாமல் இப்போதைய ஜனநாயகம் இல்லை; இந்தியா போன்ற பன்முகத்தன்மை உள்ள நாட்டில் வெவ்வேறு குழுக்கள் அரசியல் கட்சிகளுடன் நேரடியாகவோ, ரகசியமாகவோ கூட்டு வைத்துக்கொண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தங்களுடைய காரியங்களைச் சாதித்துக்கொள்கின்றன. அரசியல் கட்சிகளுக்குத் தொண்டர்களும் நிதியும் அவசியம். அவற்றை இந்தக் குழுக்கள் அளிக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு ஒரு திசைவழியும், வழிநடத்திச் செல்ல ஒரு தலைவனும் தேவை. அதை அரசியல் கட்சிகள் தருகின்றன.

இதுவரை நடந்துள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், எந்த மாதிரியான அரசு தேவை என்று வாக்காளர்களுக்குப் பாடம் கற்றுத் தருவதும், எந்த மாதிரியான அரசுகள் தங்களுக்குத் தேவை என்று வாக்காளர்கள் அரசியல் கட்சிகளுக்குப் பாடம் கற்றுத்தருவதும் வெகு நேர்த்தியாகவே நடந்துவருவது புலனாகும்.

இந்திய வாக்காளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல -பல்வேறு வகையான கூட்டணி அரசுகளைப் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் கூட்டு வைத்து, பிறகு அரசிலும் அப்படியே நீடித்த கூட்டணிகளையும், தேர்தலுக்கு முன்பு கடுமையாகப் போட்டியிட்டு எதிர்த்துவிட்டு பிறகு ஆட்சியமைக்க பெரும்பான்மை இடங்கள் தேவை என்றதும், எந்தக் கட்சியைப் பிரதானமாக எதிர்த்தார்களோ அந்தக் கட்சியையே கூட்டாளியாக்கிக்கொண்ட கூட்டணியையும், ஒரே மாதிரியான சித்தாந்தமே இல்லாமல் “”அவியலாக” உருப்பெற்ற கூட்டணிகளையும் மக்கள் பார்த்துவிட்டார்கள்.

இந்நாட்டு வாக்காளர்களில் பெரும்பான்மையினரான கிராமவாசிகள் குறித்து டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. “”இந்திய கிராமவாசிகளைப்பற்றி நன்கு அறிவேன். அவர்களுக்கு நல்ல பொதுஅறிவும், அனுபவ அறிவும் இருக்கிறது. அவர்களுக்கென்றே உறுதியான ஒரு கலாசாரம் இருக்கிறது. முறையாக விளக்கினால் அவர்கள் தங்களுக்கு எது நல்லது, நாட்டுக்கு எது நல்லது என்று ஆராய்ந்து சரியாக முடிவெடுப்பதில் வல்லவர்கள்” என்றார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகள், அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பதை நிரூபித்துவிட்டன.

அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத அம்சங்கள். ஆனால் நமது அரசியல்சட்டத்தை வகுத்த முன்னோடிகள் அரசியல் கட்சிகளுக்கென்று தனியாக எந்தவித சட்டவிதிமுறைகளையோ கோட்பாடுகளையோ அரசியல் சட்டத்தில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். சொல்லப்போனால் நமது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறதே தவிர, அரசியல் கட்சிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. எந்தவித வரைமுறைகளையும் இந்த விஷயத்தில் உருவாக்காமல் விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது. இந்தக் குறையை ஈடுகட்டும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கான வரம்புகளைக் குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் இப்போது விளக்கம் அளிக்கிறது. கட்சி மாறுவதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காகவே அரசியல்சட்டத்தில் தனிப்பிரிவையே உருவாக்கலாம். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிட்டுவிடலாம். 1999-ல் இந்திரஜித் குப்தா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகளை இச்சட்டப் பிரிவில் சேர்க்கலாம்.

அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்க, அவற்றையும் மத்திய நிர்வாக நடுவர் மன்றத்தின் விசாரணை வரம்பில் கொண்டுவரலாம். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட தாஜ் வணிக வளாகத் திட்டத்தை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம்.

சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், கடைசியில் ஒரு சிலருக்கு மட்டும் பயன்படுவதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். ஒரு பொது நன்மைக்காகக் குரல்கொடுப்பவர்கள் யார், ஒரு குழு நலனுக்காக மட்டும் செயல்படுகிறவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது எளிது. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் என்று பார்க்காமல் முடிவுகளை எடுப்பது நன்மை தராது. அப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பது தொடர்பாக நிர்வாகச் சட்டத்தில் விரிவாகக் குறிப்பிட வேண்டும். எனவே தவறு செய்ய வழி இல்லாமல் போகும்.

அப்படி ஒரு சட்டபூர்வ பாதுகாப்பு இல்லாவிட்டால், விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்துசெய்வது, கல்வியில் 10-2-3 என்று அடிப்படையை மாற்றுவது போன்ற முடிவுகளை துணிச்சலாக எடுக்க முடியாது. குற்றம் செய்தவர்களைத் தப்புவிக்கும் வழியே இருக்கக் கூடாது. அதேசமயம், முடிவுகளை எடுப்பதில் தொலைநோக்குப் பார்வைக்கும் துணிச்சலுக்கும் பாதுகாப்பு தருவதுடன், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும்.

அரசியல்வாதி என்பவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள்தான் அவகாசம். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். தாம் செய்த தவறுகளுக்கும் செய்யாமல்விட்ட நன்மைகளுக்கும் மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

அரசியல்வாதிக்கு தேசபக்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த தேசபக்தி எப்படி இருக்க வேண்டும் என்று ராஜாஜி பின்வருமாறு கூறுகிறார்:

“”நம்நாட்டின் கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் சாமான்ய மக்களை நீங்கள் நேசிக்கிறீர்களா? அவர்களுடைய மொழியை விரும்புகிறீர்களா? அவர்களுடைய வாழ்க்கை முறையையும் போக்கையும் ரசிக்கிறீர்களா? அவர்களுக்குள்ள தெய்வநம்பிக்கை மீது உங்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதா, அதை அவர்களுடைய அறியாமை என்று கருதுகிறீர்களா? அவர்களைவிட நமக்கு பரந்த அறிவு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?

இப்படி அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் விரும்புகிறவராக இருந்து அதையெல்லாம் தொகுத்தால், அதுதான் தேசபக்தி… அவர்களுடைய குறைகளையும் பார்க்கிறேன், அவர்களிடம் உள்ள மெச்சத்தக்க குணாதிசயங்களையும் பார்க்கிறேன். விரக்தியான அவர்களுடைய மனோபாவத்தை நான் கண்டிக்கிறேன். இப்போது செய்வதைவிட அதிக ஆற்றலுடன் காரியங்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுவேன். மற்றவர்களிடம் அதிக சகிப்புத்தன்மையுடனும் அன்புடனும் பழகுமாறு அறிவுறுத்துவேன். பொதுநன்மைக்காக மேலும் ஒற்றுமையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்வேன்” என்கிறார் ராஜாஜி.

அரசியல்வாதி என்பவர், ராஜாஜி கூறிய சித்தாந்தப்படி வாழத்தலைப்பட்டால் அவருடைய மற்ற குறைகளையெல்லாம் நமது ஜனநாயக அமைப்பும், அரசியல் சூழலுமே திருத்திவிடும்.

(கட்டுரையாளர்: குஜராத் அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்.)

Posted in abuse, Alliance, Analysis, Bribery, Bribes, Cabinet, Citizen, Coalition, Constituition, Corruptions, Elections, Govt, Influence, Justice, kickbacks, Law, Leader, NGO, Op-Ed, Order, Party, Perspectives, Policy, Politics, Polls, Power, service, Volunteer, voter | Leave a Comment »

Viduthalai Siruthaigal & DMK Convention in Thirunelveli

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.

சுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.

“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.

நெல்லையில் ஏன் மாநாடு?

வட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.

திருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன?.

திமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல் வெற்றி:

மாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

திருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.

பொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.

இந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

————————————————————————————–
குமுதம் ரிப்போர்ட்டர்
தேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்
(நெல்லை அதிரடி)

– அ. துரைசாமி

தன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.

மாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.

இப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்?

தென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.

வட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி?’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

விழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.

அவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது!’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.

மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.

அதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.

‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.

அன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

மாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.

‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

– அ. துரைசாமி

Posted in Alliance, Appeasement, BC, Bridge, Caste, Chellapandiyan, Coalition, Community, Convention, Dalit, deal, Devar, DMK, Equations, Harijans, Leader, MBC, Nellai, OBC, Party, Politics, Puthia Thamilakam, Puthia Thamizhagam, Puthiya Thamilagam, Puthiya Thamilakam, Puthiya Thamizagam, Puthiya Thamizakam, Puthiya Thamizhagam, Puthiya Thamizhakam, SC, Sellapandiyan, ST, Thevar, Thiruma, Thirumavalavan, Thirunelveli, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal, voter, Votes | 3 Comments »

How to ensure quality participation & responsibility from MLAs and MPs?

Posted by Snapjudge மேல் மே 31, 2007

தேவை திரும்ப அழைக்கும் உரிமை!

பி. சக்திவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் தவறிழைத்தாலோ அல்லது அவர்களது கடமையில் தவறினாலோ அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார்.

இது மக்களாட்சி சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவராலும் வரவேற்கக்கூடிய கருத்தாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையானது ஒரு சில மக்களாட்சியின் சிறப்பு அம்சமாகும். மக்கள் பிரதிநிதிகள் சரிவரச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிரேக்க காலத்திலிருந்து இன்றுவரை பல நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளை மீண்டும் அடுத்த தேர்தலில்தான் நம்மால் பார்க்க முடிகிறது!

இந்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் சரிவரச் செயல்படவில்லை என்றாலும், லஞ்சம் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டாலும் நாம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மேலும் நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது அவசியமானது. அத்துடன்அத்தியாவசியமான உரிமையும் ஆகும்.

மேலைநாடுகளில் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கனடாவிலுள்ள சில மாகாணங்களிலும் சுவிட்சர்லாந்து, ஜமைக்கா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் இந்த உரிமையானது வாக்காளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மாநில ஆளுநர் சரியாகச் செயல்படவில்லை என்கிற காரணத்திற்காக பதவியிலிருந்து மக்களால் திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இந்தியாவில் சமீபகாலமாக இந்தக் கோரிக்கை எழுவதற்கான காரணங்கள்:

நம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லாதது; இந்த ஆண்டு தொடக்கத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக 11 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டது; போலி பாஸ்போர்ட் மோசடியில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; அதிக அளவு குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் சில மாநில சட்டப்பேரவைகளில் இடம்பெற்ற சம்பவங்கள்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் கிரிமினல் மற்றும் குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 136. இவர்களில் சுமார் 26 பேர் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்தச் சூழ்நிலையில்தான் சரிவர செயல்படாத மற்றும் குற்றம்புரிந்த பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையானது மேலும் வலுப்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை நடவடிக்கைகள் 73 மணி நேரம் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. தனிநபர் விமர்சனம் மற்றும் முக்கியமில்லாத பிரச்னைகளுக்காக அமளியை உருவாக்குவதால் மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் விவாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

பட்டினியை எவ்வாறு நம் நாட்டிலிருந்து நீக்குவது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் 6 உறுப்பினர்களோடு விவாதம் தொடங்கி மொத்தம் 12 உறுப்பினர்களோடு விவாதம் முடிவடைந்தது. இது மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் இரண்டு சதவீதம் மட்டுமே ஆகும். கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் ஆவர்.

அதேசமயம் மற்ற நேரங்களில் தங்களது கட்சித் தலைவரை கைது செய்தாலோ அல்லது அரசியல் லாபத்திற்காக ஏதேனும் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் எனில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகி விடுகின்றனர்.

எதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து தேர்தல் நடத்தி நாம் நம்முடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம்? மக்களுக்காக, மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடக்கூடிய உறுப்பினர்கள்தான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை. அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்ப அழைக்கும் உரிமையானது மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மூலமாக இந்திய குடிமக்களுக்கு வாக்குரிமையும் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சரிவர செயல்படாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் அதிகாரத்தையும் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த உரிமை வழங்கப்படுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும். பிரதிநிதிகள் மக்களுக்குக் கட்டுப்பட்டவராகவும் மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் மாறக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மற்றும் அதிக அளவில் பங்கேற்கக்கூடிய நிலை உருவாகும். பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பது நிரந்தரமல்ல; சிறப்பாகச் செயல்பட்டால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகும். இது நிச்சயமாக இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்தும்; மேலும் வலுப்படுத்தும்.

(கட்டுரையாளர்: இணைப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.)

Posted in Assembly, Attendance, Carrot, Corruption, Courts, Criminal, Democracy, discussion, Elections, Fire, Governor, Impeach, Impeachment, Incentives, Judge, Justice, kickbacks, Law, Lok Saba, Lok Sabha, LokSaba, LokSabha, Member, Minister, MLA, MP, Order, Performance, Politics, Polls, Quality, Removal, Representation, Stick, Suspension, Vote, voter | 1 Comment »

DMK Government’s One year Completion – Analysis of woes & achievements: Election, Politics, manifesto

Posted by Snapjudge மேல் மே 28, 2007

சாதனைகளும் வேதனைகளும்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு ஒரே ஆண்டில் நிறைவேற்றிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பேசி இருப்பது சற்றே வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

கடந்த ஓர் ஆண்டில் எட்டுத் தொழில் நிறுவனங்களுடன் சுமார் 6985 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கத் தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக தொழில்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த முதலீட்டின் கணிசமான பகுதி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் தொழிலுக்குரியது என்கிறது அந்தக் குறிப்பு. இதன் மூலம் 37,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் சுமார் 60,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.

கடந்த ஓர் ஆண்டில் தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் தமிழகம் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது என்பதையும் ஒத்துக்கொண்டே தீர வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் பங்கு கணிசமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.

அதேநேரத்தில், ஆட்சிக்கு வந்த புதிதில் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு காட்டிய முனைப்பு இப்போது காணப்படவில்லை. இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம் என்று சொல்லி சந்தோஷப்படும் அரசு, வெளிமார்க்கெட்டில் அரிசி விலை தாறுமாறாக ஏறி இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இரண்டு ரூபாய் அரிசி என்று விளம்பரப்படுத்தி, முதல் இரண்டு மாதங்களுக்கு முறையாக விநியோகமும் நடந்தது. இப்போது பல ரேஷன் கடைகளில் அரிசி ஸ்டாக் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ரேஷன் அரிசி கள்ளமார்க்கெட்டில் விற்கப்படுகிறது என்கிற முணுமுணுப்பு தெருவெல்லாம் கேட்கிறது. ஆனால் அரசின் காதுக்கு மட்டும் கேட்கவில்லை. சராசரி பொதுமக்களின் பார்வையில் ஒரு நல்லரசு என்பது விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு. எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய சாதனை என்று அவரது ஆதரவாளர்கள் இப்போதும் சொல்வது, அவரது பதிமூன்று வருடகால ஆட்சியில் அரிசி விலை ஏறவே இல்லை என்பதைத்தான்.

ரேஷன் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை என்கிற அறிவிப்பு மத்தியதர வகுப்பினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் பெரிய அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அரசுக்கு ஏனோ தெரியவில்லை. இந்த அறிவிப்புகள் மூலம் பலர் இரண்டு ரூபாய் அரிசியையும், மற்ற ரேஷன் பொருள்களையும் வாங்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்கள் விற்கப்பட வழிகோலும் என்று மக்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.

அதேபோல, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தும் எரிச்சலும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மின்வெட்டு இருக்கவில்லை என்று நினைவுகூறாதவர்கள் குறைவு.

புதிய பஸ்கள் பல அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த சொகுசு பஸ்களில் அநியாயக் கட்டணம் என்று மனம் நொந்து சபித்தபடி பிரயாணம் செய்பவர்களே அதிகம். போக்குவரத்துத் துறையின் வருமான அதிகரிப்புக்காகக் குறைந்த கட்டண பஸ் சர்வீஸ்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது மக்களுக்குப் புரியாமல் இல்லை.

சாதனைகளைப் பட்டியலிடுவதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதிலும், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதிலும் ஓர் அரசின் பணி முடிந்துவிடுவதில்லை. சராசரி மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்ட அரசாகவும் அந்த அரசு செயல்பட வேண்டும்.

அப்படிப் பார்த்தால், ஓர் ஆண்டு சாதனைகளைப் பாராட்டவிடாமல் தடுக்கின்றன சராசரி மனிதன் படும் வேதனைகள்!

Posted in Achievement, Analysis, Bus, Business, Coop, Defaltion, DMK, Economy, Elections, Employment, Finance, Govt, Inflation, investments, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, markets, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Op-Ed, Politics, Polls, Prices, promises, Ration, Recession, solutions, Stagflation, Tamil Nadu, TamilNadu, TN, Transport, TUCS, TV, voter | Leave a Comment »

The Rich, The Filthy Rich, The Politicians – Justice, Education, Electorate

Posted by Snapjudge மேல் மே 10, 2007

மாம்பழக்கூடையும் அரசியல் பீடையும்!

க.ப. அறவாணன்

இப்போது மாம்பழக் காலம்.

கூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.

நடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.

நல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.

இப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன?

நாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.

நம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.

உ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.

நம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர! என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.

வெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா? படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்!

இங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.

அரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.

மாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார்? ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார்? தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார்? அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.

இந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா? இதற்கு முடிவே இல்லையா?

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in abuse, Admin, Assembly, Attorney, candidates, Citizen, Convicts, Corruption, Courts, Criminals, EC, Election, Govt, Judge, Jury, Justice, kickbacks, Law, Lawyer, Mango, MLA, MLAs, MP, MPs, Order, Politics, Polls, Poor, Power, Rich, Seller, Students, UP, Vote, voter | Leave a Comment »

State of the Indian Parliament MPs – The Politics of Corrupt Representatives

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

இதற்காகவா தேர்ந்தெடுத்தோம்?

பி. சக்திவேல்

உலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.

தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.

சிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்?

இவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

சிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

சிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.

தனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.

மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.

பல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்?

14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in BJP, BSP, Communist, Congress, Corruption, Criminal, Elect, Election, Government, Govt, Janatha, kickbacks, Law, MLA, MP, MPs, Order, parliament, Politics, Polls, SJP, SP, Vote, voter | Leave a Comment »

Dadaism, Tamil Nadu, Politics, Rowdy, MLAs, Election Violence – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2007

Kalki 01.04.2007

தாதாக்களின் பிடியில் தமிழ்நாடு

சென்னைக்கு அருகே உள்ளது மதுரவாயல். கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அந்த ஏரியாவில் நடந்த ரவுடித்தனத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் மக்கள் யாரும் சுதந்திரமாகத் தெருவில் நடமாட முடியவில்லை. கடைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.

மற்றொரு சம்பவம். சென்னையின் வடக்குப் பகுதியில்
திருவொற்றியூரையொட்டியுள்ள மீனவர் கிராம மக்கள், தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், உயிருக்குப் பயந்து வெளியூர்களுக்கு ஓடினார்கள். ‘‘தி.மு.க. அமைச்சரும் அவரது சகோதரர்களும் எங்களை மிரட்டுகிறார்கள்’’ என்று அந்த ஊர் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அண்மையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தூத்துக்குடியில் நடத்திய கடை அடைப்பில் வியாபாரிகள் ஆதரவு கொடுக்காததால் கடைகள் உடைக்கப்பட்டன. ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பதினைந்தே நாட்களில் அம்பத்தூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அடுத்து, திருவள்ளூரில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெட்டப்பட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜோதி ராஜேந்திரன் என்பவர் நெய்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.

தென்காசியில் இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே இடத்தில் த.மு.மு.க.
பிரமுகர் மைதீன் சேட் வெட்டப்பட்டார். இப்போது தென்காசி பதற்றமாக ஆகிவிட்டது.

அரசியல் விரோதம் காரணமாக சில கொலைகள் நடந்திருந்தாலும், இந்தக் கொலைகளைச் செய்வதற்கு ரவுடிப் படைகளையே நாடுகிறார்கள்
அரசியல்வாதிகள். இந்த ரவுடிப் படைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவும் அவ்வப்போது தேவைப்படுவதால், இரு தரப்பினருக்கும் நெருக்கம் உண்டாகி நட்பு ஏற்படுகிறது. இது பல சமூக விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற கொலைகள் ஒரு பக்கம் இருக்க, ‘தொழில் போட்டி’ காரணமாக ரவுடிகள் பழிக்குப் பழியில் ஈடுபடுவதால் பல மோதல்கள். அம்பத்தூர் ரவுடி செந்தில்குமார் என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துரைப்பாக்கம் ரவுடி அசோக் வெட்டப்பட்டான். மண்ணிவாக்கம் சுகுமாரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். காவல் துறையும் தன் பங்குக்கு என்கவுண்ட்டர் நடத்தி நாகூர் மீரான், கொர கிருஷ்ணன், உருண்டை ராஜன், பங்க் குமார் போன்ற தாதாக்களைச் சுட்டுத் தள்ளியது.

‘‘தி.மு.க. ஆட்சியில், அதிக அளவில் குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீடியாவில் வருவதால், ஏதோ இப்போதுதான் நடந்தது போன்ற தோற்றம் உருவாகிறது. ஜெ. ஆட்சியில் ஸ்டேஷனில் வழக்கே பதிவு செய்யாத நிலைதான் இருந்தது. திருவொற்றியூர் குப்பம் விவகாரத்தில் தி.மு.க. அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உயர்நீதிமன்றம் நியமித்த குழு சொல்லியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் 36 பேர் வன்முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெ.ஆட்சியில் தி.மு.க. பேரணியின்போது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியதை மறக்க முடியுமா?’’ என்று கேட்கிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகள், கலைஞர் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டு சேர்த்தது. உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சங்கிலித் தொடராக வன்முறைகள்.

‘‘தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டு வேலைக்காரர்கள் கூட போலீஸைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் ‘குடி’மகன் ஒருவரை ராயப்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அரசியல் தலைவர் ஒருவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து, குடிமகனை விடுதலை செய்ய
முயன்றிருக்கிறார்! நிலைமை இப்படி இருக்கும்போது, தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்வதிலோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலோ என்ன ஆச்சர்யம் இருக்கிறது?’’
என்கிறார் அ.தி.மு.க. பிரமுகரான க.சுப்பு. அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே பயந்தார்கள் என்கிறார் இவர்!

தமிழகமெங்கும் கடந்த பத்து மாதங்களில் நடந்த கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றைப் பட்டியல் போடத் துவங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே போகும்.

சமூக விரோதிகளின் மோதல்களுக்குக் கள்ளச் சாராயமும் ஒரு காரணம். காய்ச்சுதல், விற்பது ஆகியவற்றைப் பொருத்த அளவில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

ஒரு பக்கம் பாலியல் தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. அண்மையில் கன்னட பிரசாத் பிடிபட்டு தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறார். தவிர, தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இரும்பு உருளைகள் அனுப்ப முயன்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

அம்பத்தூரில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லான்ச்சர்கள் அனுப்பிக் கொண்டிருந்தது அம்பலமானது.

ஏதேனும் ஓர் இடத்தில் ரவுடிகளுக்குள் மோதலோ அல்லது கொலையோ நடக்கும் பட்சத்தில் அந்த ஏரியாவின் அமைதி
பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இவற்றில் தலை நுழைக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் மீடியாவுக்கு நல்ல தீனி கிடைக்கிறது! ‘‘ரவுடிகள் முன் கைகட்டி நிற்கிறது காவல்துறை’’ என்று அறிக்கை விடுகிறார் ஜெ.

‘‘காவல்துறை இன்னமும் தொழில் ரீதியாக மாற வேண்டும். அதில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழகம்
ஸ்ரீலங்காவின் அருகிலேயே இருப்பதால் தேச விரோத சக்திகளுக்குத் துணை போகும் நிலையும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

தமிழக காவல்துறை இயக்குநரான முகர்ஜி, இதற்கெல்லாம் என்ன
பதில் சொல்கிறார்?

‘‘2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2006-ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பதும்
அதிகரித்திருக்கிறது. சில மீடியாக்கள்தான் சின்ன விஷயங்களைக் கூட ஊதிவிடுகின்றன.

2005-ல் 1365 கொலைகள் நடந்தன; 2006-ல் 1274 கொலைகள்தான் நடந்தன. நடந்த குற்றங்களில் கண்டுபிடிப்பு விகிதம் 88 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. திருட்டு, கொள்ளையில் மீட்ட சொத்துக்களின் விகிதம் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் 571 பாலியல் பலாத்காரங்கள்; 2006-ல் 457. இப்படிப் பார்த்தால் பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறு திருட்டுக்கள், கொள்ளைகள் ஆகியவையும் குறைந்திருக்கின்றன. ரவுடித்தனம் முழுவதுமாக அடக்கப்பட்டிருக்கிறது. குண்டர்கள் சட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே போடப்பட்டிருக்கிறார்கள். சமூக உரசலை உசுப்பிவிட்டு, அமைதிக்கு வேட்டு வைக்கும் பல பிரச்னைகளை தமிழக போலீஸ் மிக நுட்பமாகக் கையாண்டு சமாளித்திருக்கிறது. கன்னட பிரசாத் உட்பட பாலியல் ரீதியான குற்றங்களில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். இஸ்லாமியத் தீவிரவாதமும் கட்டுக்குள் இருக்கிறது. காவல்துறையின் இமேஜை உயர்த்தும் வகையில் அடிமட்டம் வரை உள்ள காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடு என்பது கீழ் மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாமே தவிர, மேல் மட்டங்களில் சிறிதும் கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’’ என்று ஒரேயடியாக மறுக்கிறார் டி.ஜி.பி. முகர்ஜி.

– ப்ரியன்

Posted in booth capturing, Dadaism, Election, Kalki, Law, MLA, MP, Order, Police, Politics, Rowdy, Rowdyism, Tamil Nadu, TN, Violence, voter, Votes | Leave a Comment »

‘Why did Jaya bachan hide her asset details while competing for Rajya Sabha?’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

சொத்து விவரங்களை மறைத்தது ஏன்? ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி, மார்ச். 18-

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.

ஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.

===================================================
முலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி

புடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

குனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

Posted in ABCL, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Assets, Bachchans, case, Corruption, Declaration, Declare, Disproportionate, Election, Hid, Hide, Jaya Bachan, Jayabachan, Jeya Bachan, Jeyabachan, kickbacks, Law, lies, MP, Mulayam, Order, Polls, Rajya Saba, Rajya Sabha, RS, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, UP, Uttar Pradesh, voter | Leave a Comment »

DMDK grabs 5 seats – Re-polling details for the Chennai Corporation polls

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.

27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மறு தேர்தல்: யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்?

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.

மறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.

25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

Kalki weekly Editorial (04.03.2007)

தேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்!

தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,
எப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே
நிகழ்ந்திருக்கிறது.

மறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :

இப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை
நிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.

கட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு! ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்
அறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா!

கட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே
வாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.
சுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.

‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்
கமிஷனின் அசிரத்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர்! தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே!

தேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது!

Posted in ADMK, BJP, Chennai, Congress, Corporation, DMDK, DMK, Elections, Electorate, Kalki, Madras, MDMK, Municpality, PMK, Polls, Ramadoss, Re-poll, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Violence, Vote, voter | 2 Comments »

Electronic Voting Machines – Chennai civic elections lawsuit adjourned

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Posted in AB Shah, abuse, AK Venkatasubramanian, Ballot Paper, BEL, Bharath Electronics, Booth, booth capturing, civic elections, Corruption, DMK, EC, election commission, Electronic Voting Machines, EVM, G Masilamani, Government, K Chandru, Law, LN Raja, Local Body, Municipality, Order, Polls, Power, voter | Leave a Comment »

Catholic MP loses seat for ‘misusing’ Pope’s name

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

முன்னாள் மத்திய அமைச்சர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

கொச்சி, நவ. 1: முன்னாள் மத்திய அமைச்சரும் கேரளத்திலுள்ள மூவாட்டுப்புழா தொகுதி எம்.பி.யுமான பி.சி.தாமஸ் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மே 10-ம் தேதி மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மூவாட்டுப்புழா தொகுதியில் இந்திய பெடரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எம்.இஸ்மாயில் போட்டியிட்டார்.

529 வாக்குகள் வித்தியாசத்தில் தாமஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு எம்.பி.யானார். இந்தத் தேர்தலில் முறைகேடு மூலம் தாமஸ் வெற்றி பெற்றதாகக் கூறி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இஸ்மாயில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் 81 பக்க தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

தேர்தலில் தாமஸ் முறைகேடு செய்தது உறுதியாகத் தெரியவந்துள்ளது. கத்தோலிக்க வாக்காளர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரி மூவாட்டுப்புழா தொகுதியில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை தாமஸ் விநியோகித்துள்ளார். மதத்தின் பெயரால் இவ்வாறு வாக்கு கோருவது மக்கள் பிரநிதித்துவச் சட்டப்படி தவறான செயலாகும்.

துண்டுப் பிரசுரங்களை அச்சடிக்க ஏற்பாடு செய்தது, அவற்றை அவர் விநியோகித்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இஸ்மாயில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர் தாமஸ். அண்மையில் கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இவர் இணைந்தார்.

Posted in Campaign, catholicism, Christianity, CPI(M), Elections, Islam, John Paul II, Judge, Judgement, Kerala, Moovaattupuzha, MP, Muvattupuzha, PC Thomas, PM Ismail, Politics, Pope, Religion, voter | Leave a Comment »