Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘King’ Category

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Laloo, Vasundhara Raje, Jaswanth Singh – Dynasty Politics: Some Samples for Indian Monarchy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

வாரிசு மீன்கள்

லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.

Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Maoists in south Nepal gun battle

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நேபாள மோதலில் 5 பேர் பலி

மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்
மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.

காவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

தனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.

 

=======================================================

நேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன

காத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

வருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.

இதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

=======================================================

நேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு

காத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

கிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.

தக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.

இந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Posted in battle, Blast, Bomb, Business, Businessman, Clashes, Commerce, Constitution, Curfew, dead, Elections, ethnic, Fighters, Gaur, Government, Hari Shiroda, Hari Shirodha, Hindu, Hinduism, Hotel, Insurgency, Kathmandu, King, Madheshi, Madheshi Janadhikar Forum, Madhesis, magazine, Maoist, Media, MJF, MSM, Nepal, Protest, Rebels, Restaurant, rights, Scare, Strike | 1 Comment »

Egypt: Mubarak to ease restrictions on presidential bids

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

எகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்

அதிபர் முபாரக்
அதிபர் முபாரக்

எகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

நாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.

முபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Posted in al-Jazeera, autocrat, Egypt, Hereditary, Islam, King, Military, Mubarak, National Democratic Party, parliament, President, reforms | Leave a Comment »

Thailand’s King supports Coup as long as he is not affected

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2006

ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியவர்களுக்கு தாய்லாந்து மன்னர் ஆதரவு

தாய்லாந்தில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர்கள்
மன்னரின் படத்திற்கு தாய்லாந்தின் புதிய தலைவர் மரியாதை

தாய்லாந்தின் விவகாரங்களில் அதீத செல்வாக்கு உடைய மன்னர் பூமிபோல் அடுல்யடெஜ் இந்த வாரத் தொடக்கத்தில் தாய்லாந்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவத் தலைவர்களுக்கு முறைப்படியான தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார்.

தாய்லாந்து மன்னரின் முறைப்படியான அங்கீகாரம் வாசிக்கப்பட்ட வேளை மன்னரின் உருவப் படத்திற்கு முன் தாய்லாந்தின் புதிய தலைவர் ஜெனரல் சோந்தி பூன்யாரட்கிளின் மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணங்கினார்.

பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரதமர் தக் ஷின் ஷினாவத்ராவின் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க இராணுவக் கவுன்சில் ஒரு ஆணையத்தினை அமைத்துள்ளது.

தலைநகர் பேங்காக்கில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்த்து பல சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Posted in Asean, Asia, Bangkok, Bhumibol Adulyadej, Commission, Corruption, Coup, Inquiry, King, Military, Sondhi Boonyaratkalin, South East, Tamil, Thailand, Thaksin Shinawatra | Leave a Comment »

King Kalingarayan Stamp will be Issued – Subbulakshmi Jegadeesan

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

காலிங்கராயனுக்கு தபால் தலை: சுப்புலட்சுமி ஜெகதீசன் தகவல்

ஈரோடு, ஆக. 4: நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முதல் காரணமாக விளங்கிய மன்னர் காலிங்கராயனுக்கு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.

ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பளிங்குக்கல் பெயர்ப் பலகை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:

வனத்தை வயலாக்கியவர் காலிங்கராயன். வயல் வனமாக இப்போது மாறி வருகிறது. சாயப்பட்டறை மற்றும் தோல் ஆலைகளின் கழிவுகள் வாய்க்காலில் கலப்பதுதான் இதற்குக் காரணம். கழிவுநீர் கலப்பதால் தாவரங்கள்தான் ஒரு காலத்தில் அழிந்து வந்தன. இப்போது மனிதனே அழியக்கூடிய நிலை உருவாகிவிட்டது. புற்றுநோய் பாதிப்பால் பொதுமக்கள் இறந்து வருகின்றனர். சென்னையில் உள்ள புற்றுநோய் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். காலிங்கராயனுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் சிலை வைக்க இப்போது அனுமதி கொடுப்பதில்லை என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மாநிலச் சாலையில் வைக்கலாம் என்றால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே காலிங்கராயன் இல்லத்திலேயே சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் யாருக்கு தபால் தலை வெளியிடுவது? என்பதை முடிவு செய்ய ஆகஸ்ட் இறுதி வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காலிங்கராயனுக்கு தபால் தலை வெளியிட வலியுறுத்தப்படும். தபால் தலை வெளியீட்டு விழா ஈரோட்டில் நிச்சயம் நடக்கும் என்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

Posted in Dinamani, Kalingaraayan, King, Minister, River, Stamps, Subbulakshmi Jegadeesan, Tamil, Uplink | Leave a Comment »