Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chief Minister’ Category

Chief Minister’s secretary – Ko Shanmuganathan: Biosketch, Memoirs by Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

கோ.சண்முகநாதனை எனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி?
கருணாநிதி வெளியிட்ட தகவல்

All in the Family - Prodigal Sons and Daughters of DMK: Mu Karunanidhi, MK Azhagiri, MuKa Stalin, Kanimozhi Karunanidhy
சென்னை, பிப்.4-

கோ.சண்முகநாதனை தனது செயலாளராக ஆக்கிக் கொண்டது எப்படி? என்பது பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கினார்.

திருமண நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் கருணாநிதியின் செயலாளர் கோ.சண்முகநாதனின் தம்பி கோ.ராமதாஸ்-அமுதா மகள் ரா.மலர்விழி-போரூர் மு.கலைமணி-சுப்புலட்சுமி மகன் மு.க.அருண் ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் கி.கதிரேசன்-தங்கை மகாலட்சுமி மகன் வ.க.சிவக்குமார்-சென்னை சு.குமார்-சுப்புலட்சுமி மகள் கு.கவிதா ஆகியோரது திருமணமும், சண்முகநாதனின் மைத்துனர் டாக்டர் ம.ராசேந்திரன்-தங்கை மைதிலி மகள் ரா.எழில்-சென்னை ஜா.லெனார்டு மகன் லெ.ஜான் சாலமன் பிரேம்குமார் ஆகியோரது திருமணமும் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம்- கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை ஏற்று திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபம் வந்தால்

40 ஆண்டு காலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். சண்முகநாதன் இன்றைக்கு நீங்களெல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல நான்தான் அவர், அவர்தான் நான் என்கின்ற அளவிற்கு பெருமை பெற்றிருக்கிறார். 40 ஆண்டுகாலமாக என்னோடு சண்முகநாதன் இருக்கிறார். அப்படியும் சொல்லலாம். சண்முகநாதனோடு நான் இருக்கிறேன் என்றும் நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்வதென்பது சாதாரண காரியம் அல்ல. அனுபவபூர்வமாக நான் சொல்கின்றேன். நீங்கள் அதற்காக சண்முகநாதனை கொடுமையாகக் கருதிவிடக் கூடாது. எனக்கு கோபம் வந்தால் அவருக்குக் கோபம் அடங்கிவிடும். அவருக்கு கோபம் என்று தெரிந்தால் நான் அந்த பக்கமே திரும்ப மாட்டேன்.

இது என்னுடைய வீட்டிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட ஒரு செயலாளர் 40 ஆண்டுகாலமாக அவரோடு நான் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.

எண்ணி பார்க்கவில்லை

எப்படி சண்முகநாதனை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன் என்பது ஒரு புதிர். தி.மு.க. இப்பொழுது ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி, அதற்கு முன்பு பெரியார் தலைமையில் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் கழகத்தினுடைய பேச்சாளர்களிலே நானும் ஒருவன்.

அந்த நேரத்தில் நான் மாநிலத்திலே எங்கே சென்று பேசினாலும், மாவட்டத் தலைநகரமாக இருந்தாலும், வட்டத் தலைநகரமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒன்றிய நிலையிலே உள்ள இடமாக இருந்தாலும், அங்கெல்லாம் ஒருவர் உட்கார்ந்து என்னுடைய பேச்சை எழுதிக் கொண்டேயிருப்பார்.

மூன்று வழக்குகள்

என்னுடைய நண்பர் திருவாரூர் தென்னனைப் பார்த்து கேட்டேன், யார் இந்தப் பையன், நான் போகின்ற கூட்டத்திற்கெல்லாம் தவறாமல் வந்து எழுதிக் கொண்டிருக்கிறானே, இவன் யார் என்று கேட்டேன். தென்னன் சொன்னார், இவர் சொந்த ஊர் திருக்கண்ணமங்கை. நன்றாகப் படித்திருக்கிறார். இவர் போலீசினுடைய சுருக்கெழுத்தாளராக இருக்கிறார். அவரை ஸ்பெஷலாக நீங்கள் போகிற இடங்களுக்கெல்லாம் அனுப்புகிறார்கள். உங்களுடைய பேச்சை எழுதி போலீசுக்கு கொடுக்கிறார். நீங்கள் ஏதாவது சர்க்காரைப் பற்றி தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுவதற்கு அந்தப் பேச்செல்லாம் பயன்படும் என்று சொன்னார்.

நான் அதிலிருந்து சண்முகநாதனிடத்திலே ஒரு கண்ணாகவே இருந்தேன். நான் பேசிய பேச்சைப் பற்றி இரண்டு, மூன்று வழக்குகள் அப்பொழுது என்மீது வந்தன. சண்முகநாதன் அந்த பேச்சிற்கு நீதிமன்றங்களுக்கு சாட்சி சொல்ல வருவார் என்றுகூட எதிர்பார்த்தேன். அதற்குள் அரசு மாறிவிட்ட காரணத்தால் அந்த வழக்குகள் நடைபெறவில்லை. சண்முகநாதனை நான் நீதிமன்றத்திலே அப்பொழுது சந்திக்க இயலவில்லை. சட்டமன்றத்திலே சந்திக்க வேண்டும் என்றிருக்கும்போது நான் நீதிமன்றத்திலே எப்படி சந்தித்திருக்க முடியும்.

திறமையானவர்

இப்படி அவர் திறமையாக, எந்தத் தலைவருடைய பேச்சையும் எழுதக்கூடிய ஆற்றல்பெற்றவர் என்று அறிந்தபிறகு, அந்தச் சூழலிலே அண்ணா தலைமையிலே 1967-ம் ஆண்டு ஆட்சி உருவாயிற்று. அண்ணா யார் யார் எந்தெந்த துறைக்கு அமைச்சர் என்று குறித்து வெளியிட்டபிறகு, நான் என்னுடைய துறையை கவனிக்க என்னுடைய செயலாளராக யாரை நியமித்துக் கொள்ளலாம் என்று எண்ணியபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார்.

ஒரு பையன் உட்கார்ந்து நான் பேசும்பொழுது எழுதுவானே அவனை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டால் என்ன என்று யோசித்து சுருக்கெழுத்தாளராக வைத்துக்கொண்டேன். இப்படி 40 ஆண்டுகாலமாக ஒரு போலீஸ் துறைக்கு தி.மு.க.வின் பேச்சுக்களை எழுதிக்கொடுத்து, இதில் ஏதாவது தவறு இருந்தால் மாட்டவிடுங்கள் என்று யார் எழுதிக் கொடுத்தாரோ அவரை நான் என்னுடைய செயலாளராக ஆக்கிக்கொண்டேன்.

அப்படி செயலாளராக வந்தவர்தான் இன்றைக்கு உங்களால் புகழப்படுகிறார்; பாராட்டப்படுகிறார் என்றால் அவ்வளவு பெருமையும் சண்முகநாதனுக்கு அல்ல, அவரை நியமித்துக் கொண்ட என்னைத்தான் அந்த பெருமை சாரும் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மாதச் சம்பளம்

ஒரு எளிய குடும்பத்தில், சாதாரண, சாமான்ய குடும்பத்திலே பிறந்து, இரண்டு மூன்று சகோதரர்களுடன் பிறந்து, சில உற்றார் உறவினர்கள், அவர்களும் மிட்டா மிராசுகள் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சாதாரண சூழ்நிலையில் என்னைப் போலவே, என்னுடைய குடும்பத்தாரைப் போலவே இருந்த தம்பி சண்முகநாதன், இன்று என்னோடு இருக்கிறார்.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஆட்சி மாறிய பிறகு நான் இந்த பொறுப்பை ஐந்தாவது முறையாக ஏற்றுக் கொண்ட பிறகு, அவரை அழைத்து நீ என்னோடு இருக்கின்றாயே, மாதச் சம்பளம் எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன்.

எவ்வளவு வேண்டும், எவ்வளவு தர என்று கேட்கவில்லை. எவ்வளவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். நான் உங்களிடத்தில் சம்பளம் வாங்கப் போவதில்லை. கடைசி வரையிலே என்னை உங்களிடத்திலே ஒப்படைத்து விட்டேன் என்று சொன்னார் சண்முகநாதன்.

40 ஆண்டு காலமாக

அப்படி சம்பளமே வேண்டாம் என்று தன்னையே என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிற தம்பியிடத்தில் எனக்கு இருக்கிற அன்புக்கும், பாசத்திற்கும் காரணம் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட தம்பி சண்முகநாதன் சாதாரண, சின்ன குறிப்புகளைக்கூட விடாமல் எனக்கு எழுதித்தந்து, தேடித்தந்து, அப்படிப்பட்ட தேடலுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்து, அவைகள் எனக்கு கிடைக்குமாறு செய்து நான் பேச, எழுத, செயல்பட இந்த 40 ஆண்டுகாலமாக என்னோடு இருந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் அரசியல் காரணங்களுக்காக எழுதுவது மாத்திரமல்ல, இலக்கியங்கள்எழுதச் சென்றாலும், மாமல்லபுரத்திற்குச் சென்று எழுதினாலும், கோவாவிற்குச் சென்று எழுதினாலும், வேறு எந்த ஊருக்குச் சென்று எழுதினாலும், அங்கெல்லாம் அமர்ந்து எழுதுவது திருக்குறள் உரையானாலும், குறளோவியமானாலும், தொல்காப்பியப் பூங்காவானாலும் அங்கெல்லாம் அந்தப் பன்முகப் பணிக்கு தானும் அந்தப் பன்முகப் பணியாளரைப் போல விளங்கி எனக்கு உதவி செய்து கொண்டிருப்பவர் தம்பி சண்முகநாதன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி ஆகியோர் மணவிழாவிற்கு முன்னிலை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், திராவிட கழக தலைவர் வீரமணி, போட்டி ம.தி.மு.க. அவைத்தலைவர் எல்.கணேசன் எம்.பி., கவிஞர் வைரமுத்து, ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், பொங்கலுர் பழனிச்சாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன், முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், தங்கபாலு எம்.பி., நடிகர்கள் நெப்போலியன், பிரசாந்த், நடிகை மனோரமா, தலைமை செயலாளர் திரிபாதி உள்பட பலர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

முடிவில் மு.க.அழகிரி நன்றி கூறினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

முன்னதாக நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:-

மத்திய மந்திரி ரகுபதி, பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.பி.பி.சாமி, மொய்தீன் கான், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், `தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயந்தி நடராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சுந்தரதேவன், கால்நடை துறை செயலாளர் லீனா நாயர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆதி சேஷையா, சென்னை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன், சமூகநலத்துறை செயலாளர் என்.எஸ்.பழனிச்சாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி,

அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கடல்சார் வாரிய இயக்குனர் முத்துக்குமாரசாமி, செய்தித்துறை இயக்குனர் மோகன்தாஸ், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரமவுலி, உள்துறை செயலாளர் மாலதி, தமிழ்நாடு கனிம நிர்வாக இயக்குனர் நந்தகிஷோர், திட்டக்குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பாரதி, ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.சேகர், உளவு துறை ஐ.ஜி. ஜாபர்சேட், போலீஸ் ஐ.ஜி. முத்துக்கருப்பன்,

செ.குப்புசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காயத்ரி தேவி, சிவபுண்ணியம், பன்னீர்செல்வம், காமராஜ், டாக்டர் ராமன், நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், சினிமா பாடகர் மலேசியா வாசுதேவன், கவிஞர் வாலி, கவிஞர் மேத்தா, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைசெயலாளர் பூச்சி முருகன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Posted in aide, Anna, Anna Arivalayam, Arivalayam, Assistant, associate, Biosketch, Chief Minister, CM, Compatriot, Compensation, DMK, Faces, family, Government, Influence, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Marriages, Memoirs, Minister, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, names, partner, people, Power, Receptions, Salary, Sanmuganadhan, Sanmuganathan, Sanmukanadhan, Secretary, Shanmuganadhan, Shanmuganathan, Shanmukanadhan, Shanmukanathan, Sidekick, Stalin, Wedding | 1 Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Puducherry Chief Minister N. Rangasamy: Govt. seeks land for runway expansion

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

கருணாநிதியுடன் ரங்கசாமி சந்திப்பு: புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு தமிழக பகுதியில் இடம் கேட்டு கடிதம்

புதுச்சேரி, மார்ச். 7-

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று காலை சென்னை சென்றார். கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது அவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.அதில் கூறி இருப்பதாவது:-

புதுவையில் விமானத்தளம் விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது. இதற்கு போதுமான பகுதிகளை தமிழக அரசு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

கோட்டக்குப்பம் பகுதி யில் இணைப்பு சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

சென்னையில் புதுவை விடுதி கட்ட, உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டுகிறோம். திருக்கனூர் பகுதியில் தமிழகப்பகுதி சாலைகள் குறுகலாக உள்ளன. அவற்றை தமிழக அரசு அகலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தை பெற்றுக் கொண்ட கருணாநிதி, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி காரில் புதுவை திரும்பினார்.

Posted in Administration, Airport, Chief Minister, CM, Congress, East Coast Road, ECR, Expansion, Government, Govt, Karunanidhi, Kottakkuppam, Kottakuppam, Land, Pondicherry, Pondy, Project, Puducherry, Puthucherry, Rangasami, Rangasamy, Rengasami, Rengasamy, runway, Siddhandar Koil, Siddhandar Kovil, Siddhandar Temple, Tamil Nadu, Thirukanoor, Thirukanur, Thirukkanoor, Thirukkanur, TN | 2 Comments »

Bihar Government to keep tabs on doctors through a specially-designed website

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007

பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »

Portfolios of senior Ministers in TN changed

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

5 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: துரைமுருகன், பொன்முடி, வேலுவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை, பிப். 14: தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மூன்று மூத்த அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களின் இலாகா பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோ.சி. மணியிடம் இருந்து வந்த கூட்டுறவுத் துறை மாற்றப்பட்டு உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கூடுதலாக இருந்த ராணுவத்தினர் நலத்துறை கோ.சி. மணியிடம் வழங்கப்பட்டுள்ளது. கோ.சி. மணியிடம் இருந்த புள்ளியியல்துறை அவரிடமே இருக்கும். இனி, கோ.சி. மணி, புள்ளியியல் மற்றும் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

சட்டத்துறையைக் கவனித்து வந்த ஐ. பெரியசாமியிடமிருந்து அத்துறை பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இனி ஐ. பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

துரைமுருகன் இனி பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

முதலமைச்சரிடம் இருந்துவந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை பொறுப்புகள் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. உயர்கல்வி, தொழில் கல்வி, மின்னணு, அறிவியல், தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுடன் கூடுதலாக கனிமம் மற்றும் சுரங்கத் துறை பொறுப்புகளையும் பொன்முடி கவனிப்பார்.

கூடுதல் பொறுப்பு: புதிய மாற்றங்கள் மூலம் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம்

சென்னை, பிப். 14: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து, அவரது பொறுப்பு பெரியகருப்பனிடம் வழங்கப்பட்டது. குடிசை மாற்று வாரிய அமைச்சராக இருந்த பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரிடம் இருந்த குடிசை மாற்று வாரியம் கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம் வழங்கப்பட்டது.

இரண்டாவது முறையாக பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோது மாற்றம் செய்யப்பட்டது. மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதலாக இருந்த ஊரக தொழில்துறை பொங்கலூர் பழனிச்சாமியிடம் அளிக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் கவனித்துவந்த பணியாளர் நிர்வாகத்துறை ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் சொன்னபடி மாற்றம்: சில தினங்களுக்கு முன்புதான், அதாவது பிப். 8-ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் “உசிதப்படி, உரிய நேரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாற்றத்துக்கு காரணம் என்ன?: கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவால் அமைச்சர் கோ.சி. மணி அவதிப்பட்டு வந்தார். மூன்று தினங்களுக்கு முன்னர்தான் அவரை மருத்துவமனையில் முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது அவர் வசமிருந்த கூட்டுறவுத் துறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்குப் பிறகு மாற்றம்?: அமைச்சரவையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட இலாகா மாற்றம் தாற்காலிகமானது என்று கூறப்படுகிறது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை முதல்வர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

Posted in A V Velu, Cabinet, Chief Minister, Co-operation, Duraimurugan, Duraimurukan, Ex-servicemen welfare, Food Minister, Government, I Periyasamy, K Ponmudi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Ko Si Mani, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mines and Minerals, Minister, Ministry, MLA, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Periyasami, Politics, Ponmudi, PWD, reshuffle, revenue, Tamil Nadu, TN, Velu | Leave a Comment »

‘I’m the owner of Bentley car but did not gift Bentley to Abhishek’: Amar Singh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்

புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.

இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.

பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்

புதுடெல்லி, பிப். 12-

பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.

விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-

லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.

கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »

CM lays foundation for ‘Asia’s biggest’ Rs 616 crore drinking water project

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: தமிழக முதல்வர்

பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நலத் திட்ட உதவியை ஊனமுற்ற மாணவருக்கு வழங்கி பரிவுடன் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.முத்துஸ்வாமி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சுப. தங்கவேலன், துரைமுருகன். (வலது) விழாவில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்.

பரமக்குடி, ஜன. 31: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டதுபோல் சேலம், தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ. 616 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் இவ்வாறு பேசினார்.

இதற்கான விழா பரமக்குடியில் ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமை வகித்தார்.

ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,163 குடியிருப்புகளுக்கு பயனளிக்கும் இத் திட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு. கருணாநிதி நாட்டினார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:

கடந்த ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளது பரமக்குடியில் இன்று நடைபெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்ட அடிக்கல் நாட்டு விழா.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துப்படி தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் தூர்வரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை உணர்கிறேன். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஜப்பான் நாட்டு உதவியுடன் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

இதில் தாமதம் ஏற்பட்டால் எனது சொந்த நிதியை கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்றுவேன்.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 616 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து குழாய் மூலமாக 831 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் அமைத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல், பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், இளையாங்குடி வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூர், சாயல்குடிக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு ஊரகப் பகுதியில் நபர் ஒருவருக்கு 40 லிட்டரும், பேரூராட்சிப் பகுதியில் 70 லிட்டரும், நகராட்சிப் பகுதியில் 90 லிட்டர் குடிநீரும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 லட்சம் பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இத்திட்டத்தை 2 ஆண்டுகளில் அதிகாரிகள் நிறைவேற்றினால் விருது வழங்கப்படும் என்றார் முதல்வர்.

விழாவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, தமிழக அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசினர்.

Posted in Asia, Cauvery, Chief Minister, CM, District, Farming, Irrigation, Karunanidhi, M Karunanidhi, Mokkombu, Mukkombu, panchayats, Paramagudi, Paramakudi, Paramgudi, Paramkudi, pudhukottai, Pudukottai, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Ramnad, Ramnadhapuram, Ramnathapuram, River, Sivaganga, Tamil Nadu, Thiruchirappalli, Tiruchirappalli, TN, Trichy, Village, Water | Leave a Comment »

Actor Balakrishna meets Naidu, may join politics & Telugu Desam

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்

ஐதராபாத், ஜன.30-

ஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.

தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.

1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்திரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.

மறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

என்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.

2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.

கடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.

இந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.

ஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Posted in Actors, Andhra, Andhra Pradesh, AP, Balakrishna, Chandrababu Naidu, Chief Minister, CM, Elections, Films, Harikrishna, Lok Sabha, Naidu, NT Rama Rao, NTR, Party, Politics, TDP, Telugu Cinema, Telugu Desam, Telugu Movies, Tollywood | Leave a Comment »

Karnatka CM Kumarasamy’s son pelts stones and intimidates hotel workers

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

நான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்

அரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.

இதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்குமார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

Posted in abuse, Arrest, case, Chief Minister, CM, FIR, Food, Haryana, Hotel, Karnatka, Kumarasamy, Nikhil Kumar, Police, Power, Pramod Mahajan, responsibility, Syed | Leave a Comment »

DMK Government’s undemocratic collusion with election commission

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தன் மணிமகுடத்தில் மீண்டும் அந்த வைரத்தைப் பதித்துக்கொண்டது.

சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மட்டுமன்றி, முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது சுமார் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 35 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் 19,909 வாக்குகளே பெற முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. கடந்த தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, மொத்தம் 17 ஆயிரம் வாக்குகளுடன் அதிமுகவை மிக நெருங்கி, 3-வது இடத்தில் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதே நிலைதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் தொடர்கிறது.

மதுரை மாநகரின் வெற்றி திமுகவுக்குப் பெருமை சேர்த்தாலும், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நடந்த வன்முறை, அதன் பெருமையைக் குறைப்பதாய் அமைந்துவிட்டது.

உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளுங்கட்சி விரும்பாத சம்பவங்களை சில அதிகாரிகள் பூசிமெழுகுவது வழக்கமான ஒன்றுதான். இது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்ட்டுகள் என்ற அளவில் முடிந்து போகும்.

2001-ல் அதிமுக ஆட்சியில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் கள்ளவோட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு என பல சம்பவங்கள் இருந்தன. இருப்பினும் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாஜக, தேமுதிகவினரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவைக் குற்றம் சாட்டியதைப் போன்ற சம்பவம் இதுவே முதல்முறை.

சென்னை மாநகர முந்தைய மேயரும் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அப்பதவியிலிருந்து விலக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடுதான்-ஓர் இடத்தில் கூட அதிமுக வந்துவிடக்கூடாது என்ற தீவிரமும், அதைத் தொடர்ந்த வன்முறையும் எனக் கருதப்படுகிறது. திமுகவின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

வன்முறைகள் தலைகாட்டியவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “முரசு சின்னத்தை முடக்கிவிட்டீர்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதும் உடனே எச்சரிக்கை விடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, வன்முறை நடந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் இன்று நீதிமன்றத்தில் குட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.’

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தன. அதேபோன்ற நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் செய்யத்தவறி விட்டது. மக்களுக்கு, குறிப்பாக ஊரக மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இதுபோன்ற செயல்களால் குறைந்து போகும்.

தமிழகத்தில் நடந்த பிரசாரங்களில் மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் முழுமையாகத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இதுவே ஒரு பொதுவான ஜனநாயகத்தன்மைக்கு விரோதமானது. இது எதிர்மறை அரசியலாகும். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம்.

Posted in anti-people, autocrat, Chennai, Chief Minister, civic poll, Democracy, Dinamani, DMK, Editorial, election commission, Elections, Karunanidhi, Local Body, Madras, Madurai, MK Stalin, Polls, Tamil Nadu, Violence | Leave a Comment »

Tamil Cine Artistes Association Felicitation for Chief Minister of Tamil nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

`திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, செப்.24-

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இங்கே கமலஹாசன் பேசும்போது கலைஞருக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொன்னார். உடனே கலைஞர் என் காதில் எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்றார். அதனால்தான் கலைஞர் இந்த பாராட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியில் இருக்கும் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் நன்றாக இருக்கும் பத்து பேர்களைத்தான் தெரிகிறது. சிரமப்படுகிற, கஷ்டப்படுகிற பத்தாயிரம் பேர்களை தெரியவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்படும் 10 பேர்களில் கூட உண்மையாகவே நன்றாக இருப்பவர்கள் 5 பேர்கள்தான். சினிமாவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய மனிதர்களெல்லாம் இப்போது எங்கே? மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, விஜயா வாஹினி, மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எங்கே? எத்தனை பெரிய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் முகவரி தெரியாமல் போய் விட்டார்கள். நான் எல்லாம் எம்மாத்திரம்?

அமிதாப்பச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது. சோப்ராவிடம் அவர் வாய்ப்பு கேட்டு போனார். அவருக்கே இந்த நிலை என்றால் ரஜினி மாதிரி ஆளெல்லாம் எந்த மூலைக்கு?

தாய்க்கு கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுக்க தெரியும். ஆனால் குழந்தை அழாமலே இந்த தாய் (கருணாநிதி) பால் கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.

அரசியல்வாதிகளுக்கே 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜாதகம் மாறும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும். திரையுலகுக்கு பல சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு லட்சம் முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

“இங்கே வைரமுத்து பேசும்போது கலைஞர்தான் சூரியனை தட்டி எழுப்புகிறார்” என்று கூறினார். நீண்ட நேரம் பேசி இதை நான் பொய்யாக்கி விடக்கூடாது. அவருக்குத்தான் காலையில் எழுந்ததும் அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை இருக்கிறது. அவருக்கு இன்று திருமண நாள் என்று சொன்னார்கள். திருமண நாளும் அதுவுமாக அவருடைய தூக்கத்தை நாம் கெடுக்கக் கூடாது.

கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருந்திருக்கிறார். இன்னும் கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

டைரக்டர் கே.பாலசந்தர் பேசுகையில், கலைஞர் நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

சில விழாக்கள் சில நேரங்களில் சம்பிரதாயத்துக்காக நடைபெறுவதுண்டு. ஆனால் இந்த விழா ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்த விழா. 35 ஆண்டுகளாக தமிழகத்தை திரையுலகம் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த முதல்வரும் இத்தனை சலுகைகளை அளித்ததில்லை.

`இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்வார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுண்டு. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு தாய்ப்பசுவாக இருந்து பாலூட்டியவர் கருணாநிதி. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில சமயங்களில் உங்களுடன் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முட்டி மோதிக் கொண்டதில்லை.

நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தமிழ் இனத்தையும், மொழியையும் பாதுகாப்பதற்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

டைரக்டர் ஷங்கர் இங்கே பேசியபோது இரண்டரை மணி நேரம் திரையை ஆளுவதற்கு நாங்கள் திணறுகிறோம். ஐந்தாண்டு கால ஆட்சியை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டார். அறுபது ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் வரலாற்றை கட்டிக்காத்த புகழ் கலைஞர் ஒருவருக்குத் தான் உண்டு. தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் பல முதல்-அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். கலைஞருக்கு பின்னாலும் பல நூறு முதல்-அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட ஒரேயொரு கலைஞர் இவர்தான். எங்களுடன் நீங்கள் இருந்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு நன்றி.

கலைஞருக்கு சிவாஜிக்காக நாலு பக்கங்களில் வசனமும் எழுத தெரியும். எம்.ஜி.ஆருக்காக 4 வார்த்தைகளில் வசனமும் எழுத தெரியும். 83 வயதில் இந்த உற்சாகம், இந்த ஆற்றல், இந்த சுறுசுறுப்பு அவருக்கு எப்படி வந்தது? என்று எல்லோரும் கேட்கிறார்கள். சிலருக்கு பணம் ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பதவி ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பெண் ஒரு நோக்கமாக இருக்கும். அளவுக்கு மீறி பணம் வரும்போது அந்த பணத்தின் மீது வெறுப்பு வரும். பதவியும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகும். மனமும், உடலும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பெண்ணாசையும் வெறுத்து விடும். ஆனால் கலைஞர் அவர்களுக்கு லட்சியம், இனம், மொழி ஆகியவையே நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் அவர் இன்னும் இளமையுடன் காணப்படுகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எழுகிற ஒரே முதல்-அமைச்சர் கலைஞர்தான். அவர்தான் பல அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்புகிறார். சூரியனையே தட்டி எழுப்புபவர் இவர்தான். சூரியனை தட்டி எழுப்பி தமிழகத்தை விழித்திருக்க வைத்த சூரியனுக்கு சூரியன் இவர்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நடிகர் விஜய் பேசியதாவது:-

சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் கலைஞரின் வசனத்தை நான் பேசி நடித்திருக்கிறேன். சமீபத்தில் அவருடைய வசனத்தில் நான் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்குள் அவர் முதல்-அமைச்சராகி விட்டார். எந்தவொரு விழாவில் அவரை சந்திக்கும்போதும், நீ நன்றாக இருக்கிறாயா? என்ன படத்தில் நடிக்கிறாய்? என்றெல்லாம் அவர் என்னை விசாரிக்கும்போது சந்தோஷப்படுவேன்.

நாங்கள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடனம் அல்லது சண்டை காட்சியில் நடித்தால் களைப்பு வந்து விடுகிறது. அடுத்த நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. ஆனால் இந்த வயதில் முதல்-அமைச்சர் கருணாநிதி எத்தனை விழாக்களில் கலந்து கொள்கிறார். மதுரை, சேலம், டெல்லி என்று பறந்து கொண்டே இருக்கிறார். அவருடைய உடம்பை விட அவருடைய மனதுக்கு வலிமை அதிகம் என்று கருதுகிறேன். அவரை ஒரு அரசியல்வாதி, முதல்-அமைச்சர் என்பதையெல்லாம் விட நல்ல மனிதராக பார்க்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

பட அதிபர்கள்

  • ஏவி.எம்.சரவணன்,
  • கே.ஆர்.ஜி.,

டைரக்டர்கள்

  • கே.பாக்யராஜ்,
  • விஜய டி.ராஜேந்தர்,
  • ஷங்கர்,

தியேட்டர் அதிபர்கள்

  • அபிராமி ராமநாதன்,
  • பன்னீர்செல்வம்,
  • பெப்சி விஜயன்,

நடிகர்கள்

  • சத்யராஜ்,
  • சிவகுமார்,
  • பார்த்திபன்,

நடிகைகள்

  • சரோஜாதேவி,
  • மனோரமா,
  • ஸ்ரீபிரியா,
  • பிலிம் சேம்பர் தலைவர் கே.சி.என்.சந்திரசேகர்,
  • கவிஞர் வாலி,
  • விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் கோவை சண்முகம் ஆகியோரும் பாராட்டி பேசினார்கள்.

முன்னதாக அனைவரையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வரவேற்று பேசினார்.

தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெள்ளி சிம்மாசனமும், வெள்ளிப் பேனாவும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள்

  • காஜா மைதீன்,
  • அன்பாலயா பிரபாகரன்,
  • செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன்,
  • கே.எஸ்.சீனிவாசன்,
  • பொருளாளர் அழகன் தமிழ்மணி,
  • டைரக்டர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்,
  • செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Posted in Actors, Actresses, Association, Chief Minister, Cinema, Felicitation, Film, Functions, Kalainjar, Kalinjar, Kamalhassan, Karunanidhi, M karunanithi, Movies, Mu Ka, Mu Karunanidhy, Rajiniganth, Tamil, Tamil Nadu, Vijay, Vizha | 1 Comment »

Free Gas Connection in Tamil Nadu – Mu Karunanidi

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

ஏழைக் குடும்பங்களுக்கு பொங்கல் முதல் இலவச கேஸ் அடுப்பு; கருணாநிதியின் சுதந்திர தின அறிவிப்பு

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக தலைநகர் சென்னையில், மாநில அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை இந்திய தேசிய மூவண்ணக்கொடியை வைபவ ரீதியாக ஏற்றி வைத்தார்.

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

கடந்த மேமாதம் நடந்த தமிழக பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில், தமது தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றிய முக்கிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்ட கருணாநிதி, தம் கட்சியின் சார்பில் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான வறுமைகோட்டிற்கு கீழே வாழும் ஏழை குடும்பங்களில், சமையல் எரிவாயு அடுப்பு இல்லாத குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கும் திட்டம் எதிர்வரும் பொங்கல் திருநாளில் இருந்து துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக 150 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இலங்கை விமானப் படையின் வான் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்

 

தமிழ முதல்வர் மு கருணாநிதி

பின்னர், இன்று மாலை கருணாநிதி வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையில், இலங்கையில் முல்லைத்தீவுப்பகுதியில் இலங்கை விமானப் படையின் வான் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று கண்டித்துள்ளார்.

இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளில் கொடுமை நிறைந்த நிகழ்ச்சியாக குழந்தைகள் காப்பகம் தாக்கப்பட்டு குண்டுமாரி பொழிந்து 60-க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்களை கொன்று குவித்திருப்பது மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று கூறியிருக்கும் கருணாநிதி, மனித நேயத்தில் தோய்ந்துள்ள எவராயினும் அவர்களால் மன்னிக்கப்பட முடியாத இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்ட அகதிகள் ராமேஸ்வரம் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in BBC, Budget, Chennai, Chief Minister, CM, Cooking Gas, DMK, Election, Free, Gas, Karunanidhi, Manifesto, Mu Karunanidi, South India, Tamil, Tamil Nadu, TamilNadu | Leave a Comment »

Tamil Nadu Profits by selling Electricity to Other States

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

வெளிமாநிலத்துக்கு மின்சாரம் விற்பதால் மின்வாரியத்துக்கு ரூ.150 கோடி லாபம்

கே.எம். சந்திரசேகரன்

சென்னை, ஆக.2: தமிழகத்தில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்கலாம் என்ற கொள்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி லாபம் கிடைக்கும்.

மின் வாரியத்தின் மின் உற்பத்தி நிலையங்கள், தனியார் உற்பத்தி நிலையங்கள் என சேர்ந்து இரவு நேரத்தில் தேவைக்கும் அதிகமாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிகமான உற்பத்தி இருக்கும் நேரங்களில் தென்னக மின் தொகுப்பில் இருந்து எடுத்து பயன்படுத்தினால் அதற்கான விலை மிகவும் குறைவு. அந்த வகையில் ஆந்திர மாநிலம் இரவு நேரத்தில் கணிசமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து பெற்று விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ஆந்திரம் 60 பைசா என்ற அளவில் தான் கட்டணம் செலுத்துகிறது. எனவே, இத் திட்டத்துக்கு ஆந்திர அரசு செலவிடும் தொகை குறைகிறது.

உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகமே, தேவையுள்ள வேறு மாநிலங்களுக்கு விற்றால், அது தமிழகத்தின் பயன்பாட்டுக் கணக்கில் சேர்ந்துவிடும்.

அந்த வகையில் இரவு நேரத்தில் 300 மெகாவாட் அளவுக்கு தமிழகத்திடம் இருந்து பஞ்சாப் மாநிலம் மின்சாரம் வாங்குகிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.15 கட்டணம் தருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ரூ.206.9 கோடி வருமானம் கிடைக்கும்.

இதை விற்காமல் போனால் ஆந்திர மாநிலம் இந்த மின்சாரத்தை எடுத்துக் கொண்டு, ரூ.50 கோடி தான் தரும்.

எனவே, வெளி மாநிலங்களுக்கு மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் விற்கலாம் என்ற முடிவால் ஆண்டுக்கு ரூ.150 கோடி லாபம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொள்கை முடிவு: வெளி மாநிலத்துக்கு மின்சாரத்தை விற்க வேண்டுமானால் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்க விழாவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இப்போது மின்சாரத்தை விற்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வசதியாக, அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் இத் தகவல் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகஸ்ட் 2005-ல் வழங்கிய ஆணைப்படி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அயலார்களுக்கு, சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு விற்கலாம் என கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இரவு நேரத்தில் தமிழகத்தில் சில மின் நிலையங்களில் உற்பத்தியை குறைவாக வைத்திருக்க வேண்டிய அவசியம் எழாது.

Posted in Chief Minister, Dinamani, DMK, Electricity, India, Profits, Tamil, TamilNadu | 1 Comment »

Providing Free Lands to Poor Farmers – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2006

தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கும் திட்ட பணிகள் தொடக்கம்

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

தமிழ் நாட்டில் இருக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி இலவசமாக வழங்கும் திட்டத்தின் முதற் கட்டப் பணிகள் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் தரிசு நிலங்கள் பற்றி எடுக்கப்பட்ட கணக்கீட்டின் முதற் கட்ட புள்ளி விவரங்களின்படி, ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் உடனடியாக ஏழை விவசாயிகளுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையில் இருக்கும் அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் இருப்பதாக தெரிய வந்திருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

சுமார் 98,000 சிறு குறு விவசாயிகளால் 67,000 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும்; இது தவிர 4 லட்சத்து
25 ஆயிரம் விவசாயிகளுக்கு சொந்தமாக சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பட்டா தரிசு நிலம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதில், ஆக்கிரமிப்பு செய்யப்படாத அரசுக்குச் சொந்தமான 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா
2 ஏக்கர் வீதம் பிரித்து வழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த கருணாநிதி, சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 67,000 ஏக்கர் அரசு புறம்போக்கு தரிசு நிலத்தை பண்படுத்தி அதனை ஆக்கிரமித்துள்ள 98,000 விவசாயிகளுக்கே மீண்டும் வழங்கப் போவதாகவும் அறிவித்தார்.

நான்கு லட்சத்து 25 ஆயிரம் சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமானதாக இருக்கும் 7 லட்சம் ஏக்கர் தரிசு பட்டா நிலத்தைப் பொறுத்தவரையில், நிலச்சொந்தக்காரர்களே விரும்பி கேட்டுக் கொண்டால், அரசாங்கம் அவர்களின் நிலங்களை விவசாயம் செய்யத்தக்க நிலமாக பண்படுத்தி அவர்களுக்கே திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே இந்த மூன்று வகையான நடைமுறைகள் மூலமாக முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலம் மேம்படுத்தி வழங்கப்படுவதற்கான துவக்கப்பணிகள் ஆரம்பித்துவிட்டதாக கருணாநிதி கூறினார்.

கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு பற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கப்பிரிவு செயலாளர் கே.பாலகிருஷ்னணின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Acres, Arid, BBC, Chennai, Chief Minister, DMK, Farmers, Free, Karunanidhi, Lands, Tamil, Tamil Nadu, TN | Leave a Comment »

CBI vs Jayalalitha on obtaining Gifts from Sengottaiyan & Azhagu Thirunavukkarasu

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ஜெயலலிதா மீது சிபிஐ வழக்கு

தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா
தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா

அரசு ஊழியர் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய பணியோடு தொடர்புடைய யாரிடமிருந்தும் எந்த ஒரு பரிசுப்பொருளையும் பெறக்கூடாது என்கிற ஊழல் தடுப்புச்சட்ட விதிகளை மீறி, 1992 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போது அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோரிடமிருந்து ரூ. 2 கோடி ரூபாயை அன்பளிப்பாக பெற்றது தொடர்பான வழக்கில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான ஜெயலலிதா, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இதில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சியில் இருந்தபோது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 89 வங்கி டிடிக்கள் எனப்படும் உடனடி பண ஓலைகள் அவருக்கு பரிசாக வந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 12 ருபாய்.

இந்த உடனடி பண ஓலைகளை செங்கோட்டையனும், அழகு திருநாவுக்கரசுவும் வெவ்வேறு பெயர்களில் எடுத்து பரிசு வழங்கியதாக புகார் எழுந்தது.

முதல்வராக இருந்த நிலையில் இந்த உடனடி பண ஓலை பரிசுகளை ஜெயலலிதா பெற்றுக்கொண்டது தவறு என்று, திமுக ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தவிர, ஜெயலலிதா வெளிநாட்டிலிருந்தும் பரிசு வாங்கியதாக புகார் எழுந்ததால், இந்த வழக்கை சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தது.

இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்தது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

ஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பனுடைய முன் அனுமதி கோரி அவருக்கு மத்திய புலனாய்வுத்துறை கடிதம் அனுப்பியது.

இதற்கான அனுமதியை ஆவுடையப்பன் வழங்கிய பின்னணியில், இன்று சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விவரங்கள் பற்றி, மத்திய புலனாய்வுத்துறையின் வழக்கறிஞர் டேனியலின் பேட்டியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

Posted in ADMK, Azhagu Thirunavukkarasu, BBC, CBI, Chief Minister, Corruption, Jayalalitha, Law, News, Sengottaiyan, Tamil, Tamil Nadu, TN | Leave a Comment »