Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ravikkumar’ Category

Ravikumar MLA: Sri Lanka Navy’s underwater defence system in the North

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

கடலுக்குள் கண்ணி வெடி! – ரவிக்குமார் எம்.எல்.ஏ.

‘வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது! அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987–ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் ‘அரிய’ ஆலோசனையாகும்.

மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில் பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும் மதிக்கவில்லையென்பதே உண்மை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின் கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும் ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

1974–ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ… இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ… கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள்.

1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.

தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.

கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி வாய்ந்ததாகும். ‘டார்பிடோக்கள்’என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல் கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன. கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால் மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல் ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே ‘நீண்ட ஆயுளுக்கான’ உதாரணம் ஆகும்.

கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில் வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள் அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே போகவில்லை.

யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘ஹாக் கன்வென்ஷன்’ மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. எனவே, 1994-ம் ஆண்டு ‘சான் ரெமோ கையேடு’ என ஒன்றை நிபுணர்கள் தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

‘பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல் பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது, அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும் மிதக்கவிட அனுமதி கிடையாது’ என ‘சான் ரெமோ கையேடு’ குறிப்பிட்டுள்ளது. இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன. ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை – ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப் பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும் செலவு மிகமிக அதிகம்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை ‘போர்க்காலக் குற்றச் செயல்களாகக்’ (War Cerimes) கருதுவதில் தவறில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால் இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.

இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி? அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ”மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்காது” என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல… இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.

– ஜூனியர் விகடன்

—————————————————————————————————

கச்சத்தீவு காட்சிகள்

செ. மாதவன், முன்னாள் அமைச்சர்

தமிழகத்தின் தென்பகுதியில் ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள், அன்றாட வாழ்விற்காக மீன்பிடிக்கும் தொழிலில் சந்திக்கும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. பல நூற்றாண்டுகளாக, ஆங்கிலேயர் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும் அனுபவித்த உரிமைகள் காங்கிரஸ் ஆட்சியில் 1976ஆம் ஆண்டு முதல் பறிக்கப்பட்டு விட்டன. இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டன. 1974ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்துவைத்த ஆதாரங்கள், மாற்று யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

நானும் முதல்வருடன் தில்லி சென்று ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றி ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளையும், பிற ஆதாரங்களையும் காட்டி வாதாடிய காட்சிகள் நினைவில் நிற்கின்றன. அதைத் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டி இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அதற்குப் பிறகு 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க. அரசைக் கலைத்து விட்டு 50 நாள்களுக்குள், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கை அரசுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. 1974இல் தமிழ்நாட்டுக்குப் பூர்வீகப் பாத்தியமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. 1976இல் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், இருநாட்டுக் கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் இந்திய – இலங்கை புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. இதற்காக தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 23-7-1974ஆம் நாள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஓர் உறுப்பினர் ஒப்பந்த அறிக்கை நகலைச் சபையில் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார். வாஜ்பாய் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளார்.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட மீன் பிடிக்கும் உரிமையும், இரு கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 26-6-1974ஆம் தேதி தில்லியில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயகா 28-6-1974ஆம் நாள் கொழும்பில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 23-3-1976ஆம் நாள் இரு நாட்டு அரசு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தைப் புதிய வெளியுறவு அமைச்சர் ஒய்.பி. சவான் 24-3-1976ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கையாக வைத்துள்ளார்.

இந்தப் புதிய 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தச் சரத்துகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசு, ஆளுநரின் பொறுப்பில் இருந்த நேரம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. சுருக்கமாக ரகசியமாகப் போடப்பட்ட ஒப்பந்தம். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட மீனவர்கள் உரிமையும், படகுகள் இருநாட்டுக் கடல் பகுதிகளில் செலுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது பற்றி 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் எந்தச் செய்தியும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், 23-3-1976ஆம் தேதி இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்தான் மீன் பிடிக்கும் உரிமையும், படகுகள் செலுத்தும் உரிமையும் பறிகொடுத்த செய்தி காணப்படுகின்றது. இதே கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர், “”இந்தியக் கடல் பகுதி ரஹக்ஞ்ங் ஆஹய்ந் என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது” என்று எழுதியுள்ளார்.

இலங்கை நாட்டுடன் உறவு வைத்திட வேண்டும்; பண்டார நாயகாவின் நட்பு வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த நாட்டு மீனவர்களின் வயிற்றுப் பிழைப்புக்குத் தேவையான மீன் பிடிக்கும் உரிமைகள், இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகு செலுத்தும் உரிமைகள் பறி கொடுக்கப்பட்டன.

மாநிலங்கள் அவையில் 1991ஆம் ஆண்டிலிருந்து இந்த இரு ஒப்பந்தங்களில் உள்ள முரண்பாடுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட மத்திய அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுப்பி வந்தேன். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் “”இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது” என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்து உறுதி செய்துள்ளார்.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலும் எதுவும் கூறாமல், அரசுச் செயலாளர் எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் ஸ்வரண் சிங்கால் நாடாளுமன்றத்திலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள், மத்திய அரசின் மெத்தனத்தால் பறிபோயுள்ளன.

10-3-1992ஆம் நாள் மாநிலங்கள் அவையில் இந்த விவரங்களை, மத்திய அரசின் முரண்பட்ட ஒப்பந்தங்களை, இந்தச் சபையிலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை எடுத்து உரைத்தேன். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்று சபையில் இருந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் எழுந்து பதில் அளித்தார்.

‘‘I had brought the 1974 agreement and the 1976 agreement to the notice of the House. The government responded by giving its interpretation of the two agreements. If there is any other document or letter which appears to contradicts with the tenor of the two agreements or the interpretation we placed on the two agreements, we will certainly look into it’’ என்று உறுதி அளித்தார்.

அதற்குப் பிறகு அன்றைய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் இந்தப் பிரச்னைகளைக் கடிதங்கள் மூலம் 1996ஆம் ஆண்டு வரை எழுதி வந்தேன். பிரதமரும், அமைச்சர்களும், பதில் கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தகுந்த பரிகாரம் காணப்படவில்லை. 5-1-1996ஆம் தேதி அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எனக்கு எழுதிய கடிதத்தில், “”கச்சத் தீவுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடவும், புனித அந்தோணி திருவிழாவுக்கும் செல்லலாம்” என்று புதிய விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை அரசியல் ரீதியாக கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங்கால் அளிக்கப்பட்ட விளக்கங்களின்படி, தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் வழியாகத் தோன்றுகிறது.

இந்திய மீனவர்கள் அனுமதி பெற்று, விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, இருநாட்டுக் கடற்படைகளின் பாதுகாப்புடன் அனைத்துக் கடல் பகுதிகளிலும் சென்று மீன் பிடித்திட உரிமை தர இலங்கை அரசு நிச்சயம் ஒப்புக்கொள்ளும். ஆயுதக் கடத்தலைத்தான் இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிகின்றது. 1976ஆம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் உரிமையை எதிர்த்து இலங்கை அரசு எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் நடமாட்டம்தான் இலங்கையை அச்சுறுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் பரம்பரை உரிமைகளை உறுதி செய்திடவும் முயற்சி எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கச்சத்தீவு இந்திய எல்லையிலிருந்து சுமார் 12 கடல் மைல்கள் தூரத்திலும் இலங்கை எல்லையிலிருந்து சுமார் 10 கடல் மைல்கள் தூரத்திலும் அமைந்துள்ளது. 2 மைல்கள் வித்தியாசத்தைக் காரணமாக வைத்து கச்சத்தீவை இலங்கை அரசு பறித்துக் கொண்டது.

1976ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த உரிமைகளை இலங்கை அரசு மறுக்க முடியாது. இருநாட்டுக் கடல் பகுதிகள் 1976ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பிறகும், இந்திய எல்லைக்குள் ஒரு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைக் கேட்டுப் பெற்ற இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், ஸ்வரண் சிங் மூலம், இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.

Posted in defence, Defense, DPI, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, Fishery, KACCHA THEEVU, Kachatheevu, Kachathivu, Kachativu, Kachchatheevu, Katcha Theevu, Katchatheevu, Landmines, LTTE, mines, Ravikkumar, Ravikumar, Sea, Sri lanka, Srilanka, Thiruma, underwater | Leave a Comment »

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Jegamathy Kalaikkoodam’s Regai – Docu-drama review by Ravikkumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆவணம்: அது இருண்ட காலம்!

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.

“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.

ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.

மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’

Posted in British Rule, Deenathayala Pandiyan, Deenathayala Panidyan, Dheenadhayala Panidyan, Dheenathayala Pandian, Dheenathayala Panidyan, Dhinakaran Jai, Dinakaran Jai, Docu Drama, Documentary, Independence, India, Jegamadhy Kalaikoodam, Jegamathy Kalaikoodam, Jekamadhy Kalaikkoodam, Jekamathy Kalaikoodam, Mayakkaal, Movies, Ravikkumar, Ravikumar, Regai, Rekai, Republic, Short Films, Suguna, Suhuna, Sukuna, Terrorism, Tribes, ULFA, Virumandi | 2 Comments »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »