DMDK Vijayaganth vs DMK Kalainjar Karunanidhi: War of words
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008
அடக்கம் தேவை; ஆணவமல்ல! புதிய தலைவர்களுக்கு கலைஞர் அறிவுரை
சென்னை, பிப். 12- தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டில் அலங்கோல ஆட்சி நடை பெறுவதாகப் பேசியதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று விடுத்துள்ள அறிக்கையின் பகுதிகள்:
தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள கோவில்பட்டிக்குச் சென்ற அந்தக் கட்சியின் தலைவர், தான் திருமண விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று இருந்ததாகவும், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி அலங் கோலத்தைப் பார்க்கும்போது பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் நாட்டு ஆட்சியிலே அப்படி என்ன அலங்கோலம்?
எது அலங்கோல ஆட்சி?
தமிழகத்திலே அப்படி என்ன அலங்கோல ஆட்சி நடக்கிறது? ஏழை எளிய மக்களுக்கு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறதே? அதை அலங்கோலம் என்கிறாரா? விவசாயி களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்குக் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை அலங்கோலம் என்று கூறு கிறாரா? மகளிருக்கு எரிவாயுவுடன் கூடிய அடுப்புகள் இலவச மாக வழங்கப்படும் திட்டம் அலங்கோலமாக இருக்கிறதா? இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது அவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறதா? நிலமற்ற ஏழையெளிய விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட்டு வருகிறதே, பல ஆண்டுக் காலமாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறதே. வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ப தற்காக தமிழகத்திலே புதிய புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கச் செய்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறேதே. வேலையில் லாமல் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் அரசே நிதி உதவி அளித்து வருகிறதே. இவைகள் எல்லாம் தே.மு.தி.க. தலைவருக்கு அலங்கோலமாகத் தெரிகிறது என்றால் அவர் கருத்தில் கோளாறு இருக்கிறது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு மனிதனிடம் வளரவேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல
ஆனால் கட்சி ஆரம்பித்து தலைவராக வருபவர்கள் உண்மை நிலையைப் பேசி, நியாயம், நேர்மையோடு பேசினால் அது நாட்டிற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது, ஏன் அவர்களுக்கும் நல்லது! இல்லையேல் சிரிப்புக்கு ஆளாக நேரிடும். உயர்ந்திட நினைக்கும் ஒரு மனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர, ஆணவமல்ல!
சந்துமுனையில் சிந்து பாடலாமா?
விருத்தாசலம் தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பியது எதற்காக? ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்தபோது, பேரவையிலே வந்து ஆட்சியின் அலங்கோலத்தை அங்கே வந்து பட்டியலிட்டிருந் தால், அதற்குப் பதில் கிடைத்திருக்குமல்லவா? ஆறு பேர்களைக் கொண்ட ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் உரையிலே பேசுகிறார்கள். ஏன் சுயேச்சை உறுப்பினர் கூட ஒருவர் அங்கே பேசுகிறார். ஒரு கட்சியை நடத்தும் தலைவர், நான்தான் ஆட்சிக்கே வரப் போகிறேன் என்று சொல்லுபவர் பேரவையிலே வந்தல்லவா அவர் காணும் அலங்கோலங்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு எங்கேயோ சந்து முனையிலே போய் நின்று கொண்டு சிந்து பாடினால் என்ன செய்வது?
மக்கள் நலனில் அக்கறை இல்லாத செயல் எது?
தி.மு.க.வுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்கிறார் தே.மு.தி.க. தலைவர். இந்தப் பணிகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாமலா செய்யப்பட்டுள்ளது? பொய் சொல்வ தற்கும் ஒரு எல்லை இல்லையா? திருமணம் ஆகாமல் ஆண்டுக் கணக்கிலே காத்திருக்கும் பெண்களுக்கெல்லாம் வாழ்வளிக்க வேண்டுமென்பதற்காக திருமண நிதி உதவித் திட்டம் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் பதினைந்தாயிரம் ரூபாய் வீதம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளதே, மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசா இது? அது போலவே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அரசின் சார்பில் அளிக்கப்படுகிறதே. அது மக்கள் நலனில் அக்கறையில்லாத செயலா?
நான்தான் புத்தர்; மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசலாமா?
தேசியக் கட்சியும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மத்திய அரசை ஆளும் கட்சியின் மீதும் குறை கூறியிருக் கிறார். தேசிய கட்சி தமிழ் மக்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை? தமிழை செம்மொழியாக அறிவித்திருப்பது தற்போதுள்ள மத்திய அரசுதானே? சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் கொடுத்தது எந்த ஆட்சியிலே? தற்போதைய ஆட்சியில்தானே! கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் தர ஒப்புதல் கொடுத்திருப்பதும் இன்றைய மத்திய ஆட்சிதானே? எல்லாவற்றையும் ஒரேயடியாக மறைத்துவிட்டு, நான்தான் புத்தர், மற்றவர் எல்லாம் அயோக்கியர் என்ற ரீதியில் பேசுவது நல்லதா?
ரசிகர்களின் கூட்டத்தையெல்லாம் கட்சிக்காரர்கள் கூட்டம் என்று நினைத்துக் கொள்வதா?
நடிகரைப் பார்ப்பதற்காக கூடுகின்ற ரசிர்கள் கூட்டத்தை யெல்லாம் தனது கட்சிக்காரர்கள் கூட்டம் என்று எண்ணிக் கொண்டு எல்லோரையும் இழிவாகப் பேச நினைப்பது தவறு. கச்சத் தீவைப் பற்றியெல்லாம் கோவில்பட்டி கூட்டத்தில் பேசி இருக்கிறார். அந்த வகையில் கச்சத்தீவு பற்றிய உண்மை விவ காரங்கள் அவருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசியிருக்கலாமே?
யார் ஊழல்வாதி?
ஊழல் பற்றியெல்லாம் அவர் கூட்டத்திலே பேசியிருக்கிறார். எந்தத் திட்டத்திலே ஊழல்? ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலே கூட திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகள் என்று குறிப்பிட்டு, எல்லா வற்றிலும் வெளிப்படையாக ஆட்சி நடை பெறுகிறது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்குவதற்கான சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவிலே இடம் பெறவே மறுத்து விட்டு, இப்போது ஊழல் என்று உரைக்கலாமா? பேசுகிறவர்கள்; அவர்களே ஒரு முறை தம்முடைய முகத்தைக் கண்ணாடிக்கு முன் நின்று பார்த்துக் கொண்டால் நல்லது – யார் ஊழல்வாதி என்பது அப்போது தெளிவாக அவருக்குப் புரியும். அதை விடுத்து, பிறர் மீது புழுதியை வாரி இறைக்க நினைப்பது சரியல்ல.
ஆட்சிக்கு வர நினைப்பவர் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது
ஆட்சிக்கு வரவேண்டும், முதலமைச்சராக வர வேண்டு மென்றெல்லாம் நினைக்கும் அவர் ஏதோ ஒரு சாதாரணப் பேச்சாளரைப் போல் குற்றச் சாட்டுகளை பொறுப்பில்லாமல் கூறக்கூடாது. மக்களைச் சுரண்டுகிறோம் என்றால் எந்த மக்களை, எப்படி என்று விளக்கம் தரவேண்டாமா? எழுப்பப் படும் குற்றச் சாட்டுகளை புள்ளி விவரங்களோடு மறுத்துப் பதில் கூறினால் அவருக்கு வேடிக்கையாக இருக்கிறதாம்! அவரிடம் ஆதாரம் இருந்தால், புள்ளி விவரங்கள் தெரிந்தால், தான் கூறு கின்ற குற்றச் சாட்டுகளோடு அவற்றையும் இணைத்துச் சொல் வதுதானே? எந்த விவரமும் இல்லாமல் வாயில் வந்ததையெல் லாம் பேசுவேன் என்ற பாணியில் பேசினால் என்ன செய்வது?
செய்தித்தாள்களைப் படிக்க மாட்டாரா?
மின் பற்றாக்குறையைப் போக்க அரசு அன்றாடம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை யெல்லாம் படிக்காமல் தமிழக அரசு மீது அவர் குறை கூறி இருக் கிறார். அரசியல் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திடவும், ஆட்சி நடத்திடவும் விரும்புகிறவர், அன்றாடம் நாளேடுகளைப் பார்ப்பதும் அதிலே அரசு சார்பில் எடுக்கப்படுகின்ற முயற்சி களைப் படித்து தெரிந்து கொள்வதும் முக்கியமல்லவா?
டன்னுக்கும், மூட்டைக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?
20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்துவிட்டு 1500 டன் சிமெண்ட் தான் விற்பனையாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 20 லட்சம் டன் சிமெண்ட் குறைந்த விலையில் விற்கப்படும் என்று அரசு சார்பில் எப் போதும் கூறவில்லை. ஒரு லட்சம் டன் அதாவது 20 லட்சம் மூட் டைகள் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்றுதான் அரசு சார் பில் கூறப்பட்டது. 20 லட்சம் டன்னுக்கும் 20 லட்சம் மூட் டைக்கும் வேறுபாடு தெரியாமல் பேசுவதா? தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டு அதைக் குறித்து வைத்துக் கொண்டு பேசக் கூடாதா? -இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்