Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Congress’

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

ஜார்க்கண்டில் பங்கீடு: காங்கிரஸ்-7, ஜே.எம்.எம்.-5

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 7 மக்களவைத் தொகுதியிலும், சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும். லாலு பிரசாத் கட்சிக்கு எஞ்சிய 2 தொகுதிகள் விடப்பட்டுள்ளன. இம் மாநிலத்தில் மொத்தமே 14 மக்களவைத் தொகுதிகள்தான்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அதற்கு 3 தொகுதிகளை மட்டுமே விட்டுவைத்துவிட்டு எஞ்சியவற்றை லாலு பிரசாதும் ராம்விலாஸ் பாஸ்வானும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலடி தருவதைப்போல இந்த ஒதுக்கீடு அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நடந்த பேச்சில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் லாலு கட்சிக்கு 3 தொகுதிகளும் தரப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இப்போது லாலு கட்சிக்கு ஓரிடத்தைக் குறைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை அதிகப்படுத்திவிட்டனர்.

லாலு இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.

கோதர்மா, ஹஸôரிபாக் ஆகிய இரு தொகுதிகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரஸ் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கோதர்மாவில் பாபுலால் மராண்டியும், ஹஸôரிபாக் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன. பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக தலைவர். சுயேச்சையாக கோதர்மாவில் வென்றார். ஹஸôரிபாக்கில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இல்லை. எனவே இத் தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

இந்த இரண்டைத் தவிர எஞ்சிய 12 தொகுதிகளும் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆர்ஜேடி ஆகிய 3 கட்சிகளுமே போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் பத்திரிகையாளரும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான சந்தன் மித்ரா, புவனேசுவரத்துக்கு அவசரப் பயணம் மேற்கொண்டபோது பாஜக -பிஜு ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்துபோகும் என்று கனவில்கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி முறிந்தால் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும். பிஜு ஜனதாதள அரசும் சரியாகச் செயல்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவாக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்ததால்தான் மித்ரா, புவனேசுவரம் சென்றார்.

இந்த கருத்துக்கணிப்புகளுடன்தான் மித்ரா, முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினர். மித்ரா சொன்ன தகவல்களைக் கேட்ட நவீன் பட்நாயக், பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் மீண்டும் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.

மித்ராவை உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறும் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் மித்ரா, பட்நாயக்கை சந்திக்கச் சென்றபோது, “உங்கள் கட்சிக்கு சட்டப்பேரவைக்கு 31 தொகுதிகளும், மக்களவைக்கு 5 தொகுதிகளும்தான் தர முடியும்’ என்று கூறினார் (தற்போது பாஜகவுக்கு 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 9 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன).

தற்போது நவீன் பட்நாயக், பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகளை தேர்தலில் பாஜக கைப்பற்றிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்களால் இதுதான் முடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த முடிவை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்பதும் அவருக்குத் தெரியும்.

பாஜகவுக்கு 31 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்க பிஜு ஜனதாதளம் முன்வந்துள்ளதை அக்கட்சித் தலைமை ஏற்க முன்வராவிட்டால் என்ன செய்வது என்று மித்ரா கேட்டதற்கு, இதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை அவர்கள்தான் (பாஜக) முடிவு செய்யவேண்டும் என்று நவீன் தெரிவித்துவிட்டார்.

ஒரிசா மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் உண்மை நிலவரத்தை கணக்குப் போட்டு பார்த்த பின்னர்தான் நவீன் இந்த முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் கூட்டணியை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில்தான், சந்தன் மித்ரா, பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் சிறப்புத் தூதராக புவனேசுவரம் சென்றார். பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து, நான் அத்வானியிடம் ஆலோசனை கலந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவசரப்பட்டு கூட்டணிக்கு எதிரான முடிவு எதையும் எடுக்கவேண்டாம் என்று மித்ரா, நவீன் பட்நாயக்கிடம் கூறியிருந்தார். ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

நவீன் பட்நாயக் இந்த முடிவுக்கு வர பிஜு ஜனதாதளம் கட்சி எம்.பி.யான ஜெய் பாண்டாவும் பிஜு பட்நாயக்கிடம் முன்னர் முதன்மைச் செயலராக இருந்த பி.மோகன் மகாபாத்ராவும்தான் காரணம் என்று பாஜக கருதுகிறது.

கடந்த ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் வகுப்பு மோதல் நடந்ததிலிருந்தே சங்கப் பரிவாரங்களின் முன்னணி அமைப்பான பாஜக மீது, நவீன்பட்நாயக் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விஷயம்.

இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம் வரும் தேர்தலில் அவர் “ரிஸ்க்’ எடுக்கத் தயாராகி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளவும் அவர் முன்வந்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு தனது கட்சியின் வெற்றியைப் பொருத்து மூன்றாவது அணியுடன் கூட்டு சேரவும் அவர் முற்படலாம். நவீன் பட்நாயக்கின் இந்த திடீர் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானிக்கு பலத்த அடியாகும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானியின் கட்சி 138 இடங்களில் வென்றிருந்தது. இந்தத் தேர்தலில் எப்படியும் 180 இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியிருந்த பாஜக, இனி அதிக இடங்களை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோகதளம் கட்சி, அசாமில் அசாம் கணபரிஷத் கட்சி ஆகியவை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி முறிந்தது, அதற்கு பலத்த பின்னடைவாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக ஆதரவு அளிப்போம் என்று சிவசேனை கூறிவருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி உள்ளார். எனவே அவரைத்தான் சிவசேனை ஆதரிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டால்தான் பாஜக-சிவசேனை இடையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகாது என்றாலும், அதிக இடங்கள் ஒதுக்கக் கோரி அது பாஜகவை நிர்பந்திக்கலாம். பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக ஜனசக்தி, காங்கிரஸ் ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் நிதீஷ்குமார் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

2009 தேர்தலில் அத்வானி தவிர, பிரதமராகும் வாய்ப்பு மூன்று பேருக்கு உள்ளது. இதை அந்தந்த அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தால் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க முற்பட்டு அதற்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தால், மன்மோகன் சிங்கை அவர்கள் பிரதமராக ஏற்க முன்வர மாட்டார்கள். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்குமாறு சோனியாவை வற்புறுத்தலாம்.

இந்தச் சூழ்நிலையில் சோனியாவுக்கு நம்பகமானவரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே பிரதமராக வாய்ப்பு உள்ளது. பிரணாப் முகர்ஜியோ அல்லது ப.சிதம்பரமோ பிரதமராக வருவதில் சோனியாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் கூட்டணி ஏற்பட்டால் காங்கிரஸ் தனது வெற்றி எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பதை உறுதிபடக் கூறமுடியாது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

கடந்த முறை இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ், பாஜகவை இடதுசாரிகள் ஆதரிக்கத் தயாராக இல்லை. தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் மாயாவதி பிரதமர் ஆவதை அவர்கள் ஆதரிக்கக்கூடும். இவையெல்லாமே மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தது.

மாயாவதி கட்சிக்கு 65 இடங்கள் வரை கிடைத்து, மற்ற பிராந்தியக் கட்சிகள் அவரை ஆதரிக்க முன்வந்து பிரதான கட்சிகளில் ஒன்றும் அவரை ஆதரிக்க முன்வந்தால் மாயாவதி பிரதமராக சாத்தியக் கூறுகள் உள்ளன.

மாயாவதியைப் போலவே பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கக்கூடிய தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார். சிவசேனை கட்சி, பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கிறது.

மேலும் சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அமர்சிங்கும் பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்.

அரசியல் உலகில் பவாருக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பல சமயங்களில் அவர் நிதியுதவி அளித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் தேவ கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரிசா மாநிலத்தில்கூட ஒன்று அல்லது இரு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்ய பிஜு ஜனதாதளத்தின் நவீன் பட்நாயக் முன்வந்துள்ளார்.

ஒரிசாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் மூன்றாவது அணிக்கு ஆறுதலாக இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களைவிட குறைவான இடங்களே இந்தத் தேர்தலில் கிடைக்கும். அதாவது 15-வது மக்களவையும் தொங்கு நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, “கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இதேபோல ஏழை மக்களின் நலனுக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து செயல்படுத்தியதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தனது சாதனைகளை தொண்டர்கள் மூலம் அனைத்து மக்களிடமும் தகுந்த நேரத்தில் விளம்பரப்படுத்தத் தவறிவிட்டது.

மக்களவைக்குத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இப்போது செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிவருகிறது.

வாசகர்களில் ஒருசிலர் காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் படித்து மகிழ்வார்கள். ஆனால், பொருளாதாரச் சரிவு, நிதி நெருக்கடி இருக்கும் நேரத்தில் இதுபோன்று மக்கள் பணத்தை வீணடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மீண்டும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கூறிய கருத்துக்கு வருவோம். பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதைவிட தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதே மேல் என்பது அவரது கருத்து.

நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பரவாயில்லை என்று தேர்தல் சமயத்தில் முடிவுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது சில மாதங்களுக்கு முன்னரோ தொடங்கப்பட்ட கட்சியைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்துவரும் கட்சி. அதன் வலிமை அனைவருக்கும் தெரியும். எனவே புதிய கட்சியாக இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கட்டும் என்று காத்திருக்கலாம்.

பஞ்சமர்ஹி முதல் சிம்லா வரையில் நடைபெற்ற பல்வேறு கட்சி மாநாடுகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, அது செயல்படும் முறை, தேர்தல் உத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மேல் என்று ஒரு காலத்தில் கூறிவந்த காங்கிரஸ், இப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முன் உள்ள முதல் சவால், தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக வருவது யார் என்பதுதான். அப்படியொரு நிலை காங்கிரஸýக்கோ அல்லது பாஜகவுக்கோ ஏற்பட்டால், ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பார். அதன் பின் ஆட்சியமைப்பதற்கு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது முடிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு முன் கூட்டணி ஏற்பட்டாலும், தேர்தலுக்குப் பின் அணி மாறும் வாய்ப்பு உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே உணர்ந்துகொண்டுள்ளன.

காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துக் கொள்வதே தங்களின் வெற்றி எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இது அனைவரும் அறிந்த உண்மை.

பாஜக ஏற்கெனவே தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே அகாலிதளம், சிவசேனை, பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர இந்திய தேசிய லோக தளம் (ஹரியாணா), அசாம் கணபரிஷத் (அசாம்) ஆகியவையும் இக் கூட்டணியில் சேர்ந்துள்ளன.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து அஇஅதிமுக, தெலுங்கு தேசம் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெளியேறிவிட்டன.

அஇஅதிமுகவும், தெலுங்கு தேசம் கட்சியும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸýடன் தேர்தல் கூட்டுக்குத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை பாஜகவைவிட காங்கிரஸ் வலுவானதாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுகவும், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.

இது தவிர மேலும் மூன்று மாநிலங்களில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவகௌட தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயன்று வருகிறது.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய மூன்றும் கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், திரிணமூல் காங்கிரஸýம் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன. அண்மையில் பிரணாப் முகர்ஜி மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி அக்கட்சியுடன் அவர் தேர்தல் கூட்டுவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார். இந்த விஷயத்தில் அவர் சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.

2008-ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலை கணக்கிட்டுப் பார்த்தால் சில விஷயங்கள் புரியவரும். அங்கு மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களில் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதேபோல காங்கிரஸ் 3 அல்லது 4 இடங்களில் வெற்றிபெறக்கூடும்.

காங்கிரஸýடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தனது கட்சிக்கு நலன் பயக்கும் என்பதை மம்தா பானர்ஜி நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஏன் தான் போட்டியிடும் தெற்கு கோல்கத்தா தொகுதியில் வெற்றிபெற காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.

கர்நாடக மாநிலத்தில் 2008-ல் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு பாஜக ஆட்சியமைத்துள்ள போதிலும் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகமானதாகும். அங்கு காங்கிரஸ் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 4 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அதிக இடங்களை வெல்லக்கூடும்.

மேலும் இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். அங்கு பாஜக இப்போது ஆட்சியில் இருந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் வென்ற 18 இடங்களை அது தக்கவைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எப்படியும் 45 முதல் 50 இடங்களை வென்றுவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாயாவதி கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காது.

சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் தங்களுக்கு 25 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. தேர்தல் கூட்டு பற்றி இரு கட்சிகளும் தலைவர்களும் அடிக்கடி பேசி வருகிறார்களே தவிர இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. உ.பி. மாநில அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் முடிவு செய்வது நல்லது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியக் கட்சிகள் தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனால் அதிக பலன் அடையப் போவது பிராந்தியக் கட்சிகள்தான். ஆனால், அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தால்கூட அது அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதே தன்னை “பெரியண்ணன்’ போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. அதாவது இன்னும் சொல்லப்போனால், 2004-ம் ஆண்டு தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக அதீதமாக செயல்பட்டதைப் போல காங்கிரஸ் நிலை உள்ளது. காங்கிரஸ் தனது நிலையை உணர்ந்து தேர்தல் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது வெற்றிக்கு வலுசேர்க்கும். இதை காங்கிரஸôர் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | 1 Comment »

Tirupur or Namakkal: EVKS Ilangovan

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

“பனியன்’ நகரில் களமிறங்குகிறார் ஜவுளி அமைச்சர்?

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதியில், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்தின் கோபி மக்களவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், மத்திய அமைச்சரவையில் முதலில் வர்த்தக இணை அமைச்சராக இருந்தார். தற்போது ஜவுளித் துறை இணை அமைச்சராக உள்ளார்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கோபி மக்களவையில் இருந்த

  • பெருந்துறை,
  • பவானி,
  • அந்தியூர்,
  • கோபிசெட்டிப்பாளையம்,
  • திருப்பூர் வடக்கு,
  • திருப்பூர் தெற்கு

பேரவைத் தொகுதிகளை இணைத்து புதிதாக திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த கோபி தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.

காங்கிரஸýடன் முதல் முறையாக எம்ஜிஆர் கூட்டணி அமைத்து 1980-ல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது தமிழகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. அப்போது கோபி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.சின்னசாமி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸýக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதிகளின் பட்டியலில் கோபியும் இருந்து வருகிறது.

2004-ல் அதிமுக வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்களில் இளங்கோவனும் ஒருவர்.

தொகுதி சீரமைப்பில் கோபி மக்களவை நீக்கப்பட்டுள்ளதால் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாய்ப்பு இருந்தாலும் அவரது விருப்பம் திருப்பூராகவே உள்ளது. ஈரோடு தொகுதியை திமுக கேட்டு வருவதால், அத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு.

முக்கியமாக, திருப்பூரில் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸýக்குள் எதிர்ப்பு இருக்காது. அதேபோல அதிமுக வாக்கு வங்கி அதிகமாக இருப்பதால், இத்தொகுதியில் போட்டியிட திமுகவும் விரும்பாது.

“திருப்பூர் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதி மட்டுமே புதியவை. மற்றவை அவருக்கு வெற்றியை அளித்தவைதான். ஆகவே, திருப்பூரில் போட்டியிடவே விரும்புகிறார்’ என்கின்றனர் இளங்கோவனின் ஆதரவாளர்கள்.

திருப்பூர் மக்களவையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸýக்கு வாய்ப்புக் குறைந்தவை. இருப்பினும் பிற 4 தொகுதிகளில் காங்கிரஸ், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இளங்கோவன் இத் தொகுதியை விரும்புவதாகவும் அக் கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்பூர் தொகுதி கிடைக்காதபட்சத்தில் நாமக்கல்லில் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Nielsen ORG Marg survey gives AP to Congress: Chiru gets only 30-35 seats: Andhra Pradesh Assembly Poll Surveys

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

ஆந்திர சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் தகவல்

நகரி, மார்ச்.10-

ஆந்திர சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல் ஏப்ரல் 16, மற்றும் 23-ந் தேதிகளில், இரு கட்டமாக நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் இன்றி தனியாக போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஓரணியாக போட்டியிடுகின்றன.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கருத்து கணிப்பு

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி. அமைப்பு, என்.டிவி.யுடன் இணைந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரசுக்கு 155 இடங்கள்

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

வட ஆந்திர பகுதியில்

காங்கிரஸ் கட்சிக்கு, வட ஆந்திர பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயல சீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல சீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வட ஆந்திர பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முல் 24 தொகுதிகளிலும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

The former chief of the Swadeshi Jagran Manch, Muralidhar Rao appointed adivser to BJP chief Rajnath Singh

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

பாஜக தலைவரின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமனம்

புது தில்லி, மார்ச் 9: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட முரளீதர் ராவ், சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக பிரபாத் ஜா உள்ளார், அவருடன் இணைந்து முரளீதர் ராவும் ஆலோசகராக செயல்படுவார் என பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடந்த மாதம் சேர்க்கப்பட்ட முரளீதர் ராவ், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

மேலும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய சுதன்ஷு மிட்டல், தற்போது பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் எஸ்.எஸ். அலுவாலியாவுக்குத் தேவையான உதவிகளையும் இவர் மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் கண பரிஷத் கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டுவதில் சுதன்ஷு, மிகச் சிறந்த பணியாற்றியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Andhra Pradesh Polls: Chiru vs Jeevitha; TRS Rao vs Azhar

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

சிரஞ்சீவி Vs ஜீவிதா; ராவ் Vs அசார்!

ஹைதராபாத்:

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியை எதிர்த்து நடிகை ஜீவிதாவையும், மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை எதிர்த்து அசாருதீனையும் நிறு்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு ஏப்ரல்16,23 தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இம் முறை ஆந்திராவில் 4 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

காங்கிரசும், பாஜகவும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடவுள்ளன. மற்ற கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை.

சிரஞ்சீவி திருப்பதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து சினிமாவைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நடிகர்-இயக்குனர் ராஜசேகரின் மனைவியான நடிகை- இயக்குனர் ஜீவிதாவை காங்கிரஸ் நிறுத்தலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே தெலுங்கு பட உலகில் சிரஞ்சீவிக்கும் ராஜசேகருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை ராஜசேகர் கண்டித்தபோது அவரை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதைடுத்தே காங்கிரசில் இணைந்தார் ராஜசேகர்.

ராவை எதிர்த்து அசார்?:

அதே போல மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. அசாருதீனை நிறுத்தினால் ராவின் வெற்றியை தடுத்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Thuglaq – Cover Image on Congress Govt’s Parliamentary Practices

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

Thanks: http://aruvaibaskar.blogspot.com/2008/07/blog-post_23.html

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Pazha Nedumaran: DMK & Tamil Nadu Politics of Alliances – Coalition Government & PMK

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

மாற்று அணி காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா – கருணாநிதி கூட்டு உருவானது.

ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க “சர்க்காரியா கமிஷனை’ இந்திரா அமைத்தார்.

1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.

1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.

ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். “”நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என முழங்கினார். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது. 1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள். 1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன. ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும் தனது ஏதேச்சாதிகாரப்போக்கை அது கைவிட மறுக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.

இரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.

இரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மோதல் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.

ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.

எல்லையற்ற ஊழலும், லஞ்சமும், நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.

தி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.

முக்கியமான பிரச்னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிற கட்சித் தலைவர்களை முதலமைச்சரும், அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழகத் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது.

ஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன.

1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன. தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.

அ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் – சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.

இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முன் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய் பிரச்னையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும், பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in DMK, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Thuglaq Cartoons: Political satire on current issues by Cho, Satya & Sri

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

Posted in DMK, Govt, India, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »