Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Azakiri’ Category

Mu Ka Azhagiri & State-owned Arasu Cable TV Corporation Ltd: Multi System Operator (MSO) – Television network for Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி?

சென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.

இதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

எஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்!’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.

அதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

————————————————————————————————————————-

கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?: தயாநிதி மாறன்

சென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.

இதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.

கேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா?

இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.

————————————————————————————————————
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்?: சரத்குமார்

சென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

எஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.

தனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா?

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.

பிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.

—————————————————————————————————————-
ஜூனில் அரசு கேபிள் டிவி

சென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.

இந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.

எம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.

பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.

ஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.

“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.

கேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

——————————————————————————————————-

———————————————————————————————————————-
“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா?

நமது சிறப்பு நிருபர் – Dinamani

சென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.

பல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.

வந்தது “ஹாத்வே’:

1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.

“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சிதைந்து போன “ஹாத்வே’:

1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.

ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.

ஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.

வந்தார் பாஸ்கரன்:

2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.

“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

தொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா? கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.

அதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.

“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

இதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.

அன்று அவர்…இன்று இவர்…

வளர்த்த கடா மார்பில் பாய்வதா…? என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.

“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.

அந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.

முடக்கும் வேலை சாத்தியமா?:

“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.

நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.

இதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Arasu, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, cable, Chennai, Dayanidhi, Gossips, hathway, Jaya, Jeya, JJ, Kalainjar, Kalanidhi, Kanimozhi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Maran, Media, MK, MSO, MuKa, Multi System Operator, network, Rumors, Sasikala, satellite, SCV, Stalin, Sumangali, Sun, Telecom, telecommunications, Television, TV | 1 Comment »

DMK Youth Wing – MK Stalin: History, Biosketch, Faces, People

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2007

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

 

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

 

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில்
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy) நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990
1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10 ஆகிய நாள்களில் தி.மு.கழகத்தின் ஆறாம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம்மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கழக இளைஞர் அணியினரின் வெண்சீருடைப் பேரணி மகத்தானது. அம்மாநாட்டு வளாகத்திற்குள் தி.மு.க. இளைஞர் அணி திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியை அமைத்தது. இக்கண்காட்சியைத் தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் இயக்க வரலாற்றை விளக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும் எழிலுற அமைக்கப்பட்டன. அத்துடன் சேதுசமுத்திரத் திட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, போக்குவரத்துத் திட்டம் ஆகிய தமிழகம் காண வேண்டிய முன்னேற்றத் திட்டங்களை விளக்கும் செயல்விளக்கக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. எண்ணற்ற கழகத் தோழர்களும், பொதுமக்களும் கண்காட்சியைக் கண்டு மகிழ்ந்து பயனடைந்து பாராட்டினர்.
அதன்பின் அதே ஆண்டு (1990) ஜூன் மாதத்தில் நடைபெற்ற தமிழிக முதல்வர் – தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளின் போது சென்னை கலைவாணர் அரங்கில் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை புகைப்பட – ஓவியக் கண்காட்சியாக இளைஞர் அணி ஏற்பாடு செய்தது. இப்பணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் – இளைஞர் அணி மாநில துணை செயலாளர் மா.உமாபதி, தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் அமைத்தனர். இக்கண்காட்சியை அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மொகந்தா அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
1991
1991ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கினார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்றுக் கொள்ளாத பாரதீய ஜனதா கட்சி தன் ஆதரவை விலக்கிக் கொண்டதால், வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் சந்திரசேகரின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றனர். சந்திரசேகர் 116 நாள்கள் மட்டுமே ஆட்சி செய்தார். எனினும் அக்குறுகிய காலத்தில் சந்திரசேகர் ஆட்சி செய்த ஒரே செயல் தமிழ்நாட்டில் கழக ஆட்சியைக் கவிழ்த்ததுதான். தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கழக அரசை பொய்யான காரணங்களைக் கூறி ஆளுநர் பர்னாலா பரிந்துரை செய்ய மறுத்தும் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் துணையோடு ஆட்சியைக் கலைத்தனர்.
அதற்குப் பிறகு 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதனால் ஏற்பட்ட அனுதாப அலையின் விளைவாக கழகம் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அத்தேர்தலில் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞரைத் தவிர மற்ற அனைவரும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
1992
பிப்ரவரியில் மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியினரின் வெண்சீருடை அணிவகுப்பு காண்போரை வியக்க வைத்தது. அப்பேரணி அணிவகுப்பில் தென்னார்க்காடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் தயாளமூர்த்தி முதல் பரிசை வென்றார். அவருக்குத் தலைவர் கலைஞர் கேடயம் வழங்கி பாராட்டினார். மதுரை தமுக்கம் திடலில் நடைபெற்ற அம்மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
1993
19.01.1993இல் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வடசென்னை மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் தமிழர் திருநாள் விழா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக நடைபெற்றன. தலைவர் கலைஞர் நிறைவு உரையாற்றினார்.
1994
19.09.1994இல் கழக மதுரை மண்டல மாநாட்டில் முதல் நாள் நடைபெற்ற வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார்.
7.10.1994இல் தலைவர் கலைஞர் அவர்களின் இல்லம் வந்த இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
1995
13.03.1995இல் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாநகர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிதி திரட்டினார். அத்தொகையில் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயை இளைஞர் அணி வளர்ச்சி நிதியில் சேர்த்து, ரூபாய் ஒரு லட்சத்தை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நிதியாக இளைஞர் அணியின் சார்பில் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ஆகியோரிடம் வழங்கினார்.
18.7.1995இல் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருளாளர் ஆர்க்காடு நா.வீராசாமி அவர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவு செய்து பேருரையாற்றினார்.
18.9.1995இல் கழக முப்பெரும் விழாவையொட்டி சென்னை இராயபுரம் அறிவகம் முதல் அண்ணா அறிவாலயம் வரை சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினரின் மாபெரும் சைக்கிள் பேரணிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
1996
28.1.1996இல் தி.மு.கழகத்தின் 8ஆம் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணியின் சிறப்பான அணிவகுப்பைத் தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னணியினர் வள்ளுவர் கோட்டம் வடிவில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் நின்று கண்டு களித்தனர்.
மாநாட்டில் இளைஞர் அணியின் சார்பில் ஏ.வி.கே. நினைவு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சி அமைக்கப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் துயிலுமிடங்களின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
10.8.1996இல் தமிழக முதல்வர் கலைஞர் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கினார். இத்திட்டத்தை +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டுமென சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று +2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
சென்னை மேயர்
1996 அக்டோபரில் சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். உலகிலேயே 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி மேயர் என்னும் சிறப்புத் தகுதி பெறுகிறார்.
28.12.1996இல் தி.மு.க. இளைஞர் அணியால் பல்வேறு கழகச் செய்திகளை உள்ளடக்கிய – நமது இயக்க நாள் குறிப்பு – 1997 வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட, கழகத் தலைவர் கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.
1997
28.6.1997இல் சேலத்தில் தி.மு.கழக சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுப் பேரணியில் தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடை அணிவகுப்பிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
8.10.1997இல் வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணியின் பயிற்சிப் பாசறை ஏலகிரியில் நடைபெற்றது.
16.10.1997இல் இங்கிலாந்து நாட்டின் பேரரசியான இராணி எலிசபெத் சென்னை மாநகருக்கு வருகை புரிந்தார். அவருக்கு சென்னை மாநகரின் முதல் குடிமகனாம் மேயர் ஸ்டாலின் மலர்க்கொத்து அளித்து வரவேற்றார்.
27.10.1997இல் திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பயிற்சிப் பாசறையில் பேராசிரியர் நன்னன், கோவை மு.இராமநாதன், விடுதலை விரும்பி, திருச்சி செல்வேந்திரன், வெற்றிகொண்டான் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
30.10.1997இல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
22.11.1997இல் அமராவதி புதூர் குருகுலம் வளாகத்தில் சிவங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தா.கிருட்டிணன், சுப.தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1998
30.6.1998இல் மேயர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1999
3.1.1999இல் சென்னைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களை விமான நிலையத்தில் மேயர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
4.1.1999இல் சென்னையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையத்தினை மேயர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
30.8.1999இல் இளைஞர் அணியின் துணைச் செயலாளரும், தளபதி ஸ்டாலின் அவர்களின் உடன்பிறவா சகோதரரும், இளைஞர் அணித் தோழர்களின் உறவுப் பாலமாகவும் விளங்கிய அன்பில் பொய்யாமொழி மாரடைப்பில் காலமானார்.
2000
கடந்த 1991-1996இல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த ஊழல்கள் எண்ணற்றவை. தொட்டில் குழந்தை திட்டம் முதல் சுடுகாட்டுக் கூரைத் திட்டம் வரை பல்வேறு ஊழல்கள் தலைவிரித்தாடின. டான்சி நில ஊழல் வழக்கு முதல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பல்வேறு வழக்குகள் வழக்கு மன்றங்களில் பதிவாகின. அவற்றுள் ஒன்றான கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று வழக்கு மன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீச்சு – கட்டாய கடையடைப்பு போன்ற அராஜகங்களில் ஈடுபட்டனர்.
அந்நிகழ்ச்சிகளில் ஒன்றாக தருமபுரியில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சென்ற பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காட்டுமிராண்டிகள் கூட செய்ய அஞ்சும் அக்கொலை பாதகச் செயலாளர் அப்பேருந்தில் பயணம் செய்த ஹேமலதா, காயத்திரி, கோகிலாவாணி என்னும் மூன்று மாணவிகள் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். மற்றும் பல மாணவிகள் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இக்கொடிய சம்பவத்தைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
2001
2001ஆம் ஆண்டு மார்ச் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஜான்பாண்டியனால் திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா உடனடியாக கழக வெற்றி வேட்பாளர் பரிதி இளம்வழுதியை கைது செய்தார்.
அதன்பின் சட்டமன்றத்தில் கழக ஆட்சியில் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரிசி புழுத்துப் போய்விட்டதாகப் பொய் சொன்னார். அரசுக் கிடங்களில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போனவை அல்ல என்பதை நிரூபித்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, செய்தியாளர்களுடன் சென்று மாதிரிகளை எடுத்து அவை நல்ல அரிசிதான் என்பதை நிரூபித்தார். இதனை அத்துமீறல் என்று கூறி ஜெயலலிதாஅரசு பொன்முடியைக் கைது செய்தது.
ஜெயலலிதாவின் ஏவல் துறையாக செயல்பட்ட காவல் துறையினர் ஜூன் 30ஆம் நாள் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களை அறைக் கதவுகளை உடைத்து, அத்துமீறி அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனைத் தட்டிக் கேட்ட மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தளபதி ஸ்டாலின் அவர்களையும் கைது செய்யச் சென்றனர். அப்போது அவர் பெங்களூருக்கு சென்றிருந்ததால் கைது செய்யவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையை சிங்காரச் சென்னையாக்கிட பத்து மேம்பாலங்களைக் கட்டிச் சாதனை படைத்ததை ஊழல் என்று கூறி கைது நடவடிக்கைகள் நடைபெற்றன. தலைவர் கைது செய்யப்பட்டதையும், தான் தேடப்படுவதையும் அறிந்த தளபதி ஸ்டாலின் உடன் சென்னை திரும்பி காவல்துறையிடம் தன் ஒப்படைப்பு செய்தார்.
தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்து நாடே கொந்தளித்தது. பலர் நெஞ்சதிர்ச்சியாலும், நஞ்சருந்தியும், தீக்குளித்தும் மாண்டனர். நாடு முழுவதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறையேகினர்.
தலைவர் கலைஞர் அவர்களை அக்கிரமமான முறையில் கைது செய்தததைக் கண்டித்து ஆகஸ்ட் 12ஆம் நாள் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் வரை நடைபெற்றது. அமைதியான முறையில் தன் கண்டனத்தைத் தெரிவித்து நடைபெற்ற அந்தப் பேரணியை, காவல்துறைத் தலைவர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சியால் ஏவப்பட்ட கூலிப் படைகளும், காலிப் படைகளும் அரிவாள், பட்டாக்கத்தி முதலான பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ஆறு தோழர்கள் மரணமடைந்தனர். எண்ணற்ற கழகத் தோழர்கள் படுகாயமுற்றனர். சிதறியோடிய கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். இக்காட்சிகளைப் படம் பிடித்த செய்தியாளர்களும் காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளாகினர். காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டனர். கழகத் தோழர்கள் வந்த வாகனங்கள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இப்பேரணியில் முழக்கமிட்டபடி தொழிலாளர் பேரணியை நடத்தி வந்த தொழிலாளர் முன்னேற்றக் கழக செயலாளரும், சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வை.பெருமாள் நெஞ்சதிர்ச்சியால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று, வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக, தொண்டர் அணியின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொண்டர் அணியில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கலைஞர் விருது பொற் பதக்கம் வழங்கப்பட்டது. அப்பதக்கத்தை மிடுக்குடன் வந்து பெற்றுத் திரும்பிய தொண்டர் அணியின் செயலாளர் மாஸ்டர் தமிழ்ப்பித்தன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து நெஞ்சதிர்ச்சியால் மாண்டார்.
தளபதி அவர்களின் தலைமையில் சிறப்பு மிகுந்த வெண்சீருடை அணிவகுப்பினை நடத்திக் காட்ட பயிற்சியளித்தவரும் தளபதி அவர்களின் தனியன்புக்கு உரியவருமாமன மாஸ்டர் தமிழ்ப்பித்தன் இழப்பு கழகத்திற்கு பேரிழப்பாகும்.
25.10.2001 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்றார்.
2002
22.04.2002 எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் மேயர் போன்ற உள்ளாட்சி மன்ற பதவி வகிக்க முடியாதபடி 22.9.2002இல் அ.தி.மு.க அரசு சட்டம் கொண்டு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் அவர்களின் மேயர் பதவியைப் பறித்தது.
சென்னை மாநகர தலைவராக (மேயராக) இருந்த தளபதி ஸ்டாலின் அவர்களின் பதவியைப் பறித்தது செல்லாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சூடு கொடுத்தது. எனினும் இரண்டாவது முறையாக ஒருவரே மேயர் ஆக முடியாது என்று கூறியதால் மேயர் பொறுப்பை விடுத்தார்.
2003
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வகித்த கழக தளபதி மு.க.ஸ்டாலின் கழகத்தின் 12ஆம் பொதுத் தேர்தலுக்குப் பின் 2.6.2003இல் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பெருமுயற்சியால் தி.மு.க. இளைஞர் அணி நடத்தி வந்த திராவிட இயக்க வரலாறு கண்காட்சி, நிரந்தரமான கண்காட்சியமாக அண்ணா அறிவாலயத்தில் உருவானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணிக்கு தஞ்சை இரத்தினகிரியும், பொள்ளாச்சி மா.உமாபதியும் துணை நின்றனர். கலைஞர் கருவூலம் என்னும் குளிரூட்டப்பட்ட 10,000 சதுர அடி பரப்பளவு தளத்தில் அமைந்த அக்கண்காட்சி இந்தியாவில் வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமை கொண்டது. கலைஞர் கருவூலத்தை மேனாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
2004
மே மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என பிரகடனம் செய்தார். தலைவரின் அறிவிப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியது. இதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் தி.மு.கழகம் தலைமையில் இக்கூட்டணி 40 இடங்களிலும் வென்று மகத்தான வரலாறு படைத்தது.
மத்திய அரசில் தமிழகத்தின் சார்பில் ஆறு கேபினட் அமைச்சர்களும், ஆறு இணை அமைச்சர்களுமாக 12 தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி பாராட்டுக் கூட்டம் நடத்தியது.

—————————————————————————————————————————-

தி.மு.க. இளைஞர் அணி

தி.மு.க. இளைஞர் அணி தலைவர் கலைஞர் அவர்களால் 1980, ஜூலை 20ஆம் நாள் மதுரை, ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க. இளைஞர் அணி துவங்கப்பட்டது.

1982, ஆகஸ்ட் 1ஆம் தேதி திருச்சி வாசவி மகாலில் இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் முதன்முதலாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் பேசினர்.

கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் 1982, ஆகஸ்ட் 1ஆம் நாள் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

17.8.1982இல் ஜெயம் ஜுலியஸ், பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவிற்கு கூடுதலாக அறிவிக்கப்பட்டனர்.

1983, ஏப்ரல் 10-இல் பொதுச் செயலாளர் அவர்களால் தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க. ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜூலியஸ் ஆகியோர் மாநில இளைஞர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

1983, ஆகஸ்ட் 25இல் இளைஞர் அணிக்கு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு இளைஞர் அணிக்கு மாவட்டத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதிக்கு இளைஞர் அணி அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்களும், பேரூர் கழகத்திற்கு அமைப்பாளர், இரண்டு துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

தற்போது இளைஞர் அணி, கிராமங்கள் மற்றும் வார்டுகள் தோறும் சார்பு மன்றங்களைப் போல இளைஞர் அணி அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

—————————————————————————————————————————-

 

தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

பெயர் : மு. கருணாநிதி, தலைவர் கலைஞர் என தமிழ் உலகமெங்கும் போற்றப்படுவர்.
தந்தை : தாய் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார்
பிறந்த ஊர்: திருவாரூர் அருகே உள்ள திருக்குவளை
பிறந்த நாள்: 1924, சூன் திங்கள் 3ஆம் நாள்
சிறப்பியல்புகள் இணையற்ற மனிதாபிமானி, ஓய்விலா உழைப்பாளர், மக்கள் தலைவர், ஒப்பற்ற சிந்தனையாளர், உலகத் தமிழர்களுக்கு என்றே ஓயாது உழைத்து வருபவர், நிகரற்ற பேச்சாளர், செயல் வீரர், சிறந்த எழுத்தாளர், நாடகக் கலைஞர், பத்திரிகை ஆசிரியர், ஓவியர், பதிப்பாளர், வெளியீட்டாளர், மதிநுட்பம் மிக்க அரசியல் அறிஞர்.
1957 – 1996 14 வயது முதலே பொதுவாழ்வில் தன்னைப் பிணைத்துக் கொண்டவர். பல்வேறு அரசியல் போராட்டங்களில், குறிப்பாக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், கல்லக்குடி அறப்போர், விலைவாசி உயர்வு மும்முனைப் போராட்டம், ஈழத் தமிழர் அறப்போரில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பல முறை சிறை சென்றவர்.
1936 திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ நேசன் கையெழுத்து ஏட்டின் ஆசிரியர்.
1938 இராஜாஜியின் கட்டாய இந்தியை எதிர்த்து ஊர்வலம்.
1941 தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
1949 பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் காணுதல்.
1961 திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர்.
1962 – 1967 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆனார்.
1967 அண்ணாவின் அரசியல் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசு அலுவலகம், பேருந்து ஆகியவற்றில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம் பெறச் செய்தது.
1969 தி.மு.க.வின் தலைவர் பொறுப்பு ஏற்றார்.
1969 – 1971 முதன்முறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
1971 – 1976 இரண்டாம் முறை முதலமைச்சர் பொறுப்பு ஏற்றார்.
சட்டமன்ற வெற்றிகள்
1956 குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றார்.
1962 தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1967 சைதை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
1971 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1977 அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1980 மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1989 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1991 துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் விலகினார்.
1996 சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1957 – 1996 41 ஆண்டுகள் தோல்வியைச் சந்திக்காமல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பணியாற்றினார்.
1977 – 1983 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.
1983 ஈழத் தமிழர் நலங்காக்கும் பெரும் போரில் தமது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 – 1986 மேலவை உறுப்பினர் ஆனார்.
1989 – 1961 மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.

நூல்கள்

ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன், சங்கத் தமிழ், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, இனியவை இருபது, வெள்ளிக்கிழமை, புதையல், ஒரே ரத்தம், திருக்குறள் உரை என 100க்கும் மேலானவை.

நாடகங்கள் இருபதுக்கும் மேற்பட்டவை.

தூக்குமேடை, மணிமகுடம், பழனியப்பன், காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், சிலப்பதிகாரம் முதலியன.

திரைப்படங்கள் எழுபதுக்கும் மேற்பட்டவை.

ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, தேவகி, மணமகள், ஆடடெ ஜெனமா, பராசக்தி, பணம், நாம், திரும்பிப் பார், மனோகரா, மனோஹரா (தெலுங்கு), மலைக்கள்ளன், அம்மையப்பன், ராஜாராணி, ரங்கோன் ராதா, பராசக்தி (தெலுங்கு), புதையல், வீரகங்கணம் (தெலுங்கு), புதுமைப்பித்தன், குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டுமன்னர், அரசிளங்குமரி, தாயில்லா பிள்ளை, இருவர் உள்ளம், காஞ்சித்தலைவன், பூம்புகார், பூமாலை, அவன் பித்தனா? மறக்க முடியுமா? மணிமகுடம், தங்கதம்பி, வாலிப விருந்து, ஸ்திரீ ஜென்மா (தெலுங்கு), எங்கள் தங்கம், பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, அணையா விளக்கு, வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி, ஆடு பாம்பே, அம்மாயி மொகுடு மாமகு யமுடு, குலக்கொழுந்து, மாடி வீட்டு ஏழை, தூக்குமேடை, இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள், குற்றவாளிகள், காகித ஓடம், பாலைவன ரோஜாக்கள், நீதிக்கு தண்டனை, ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், பாசப்பறவைகள், இது எங்கள் நீதி, பாடாத தேனீக்கள், தென்றல் சுடும், பொறுத்தது போதும், நியாயத்தராசு, பாசமழை, காவலுக்குக் கெட்டிக்காரன், மதுரை மீனாட்சி, புதிய பராசக்தி.
13.5.1996 நான்காம் முறையாக தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
3.6.1998 பவளவிழா ஆண்டு தொடக்கம்

வரவேற்காமல் வரக்கூடிய நோய்,
தடுத்தாலும் கேளாமல் தழுவக்கூடிய சாவு,
இவற்றுக்கு மத்தியில் மனத்தூய்மையுடனும்
உறுதியுடனும் ஆற்றுகின்ற செயல்கள்தான்
நிலைத்துவாழக் கூடியவை.
– தலைவர் கலைஞர்

கலைஞர் ஒரு சிறைப்பறவை
சிறைப்படுத்தப்பட்ட நாள்கள்
1. கல்லக்குடி – 15-7-53 முதல் 21-11-53 வரை
பெயர் மாற்றப் போராட்டம்

2. பிரதமர் நேருவுக்குக் கருப்புக்கொடி – 3-4-58 முதல் 8-1-58 வரை
விளக்கக்கூட்டம் தடை மீறல்

3. விலைவாசி உயர்வு கண்டனப் – 19-7-62 முதல் 26-10-62 வரை
போராட்டம் (தஞ்சை)

4. மதுரை சட்ட எதிர்ப்புப் போராட்டம்
தலைமை தாங்கியதாகக் குற்றச்சாட்டு – 19-12-63 முதல் 25-12-63 வரை

5. தடுப்புக் காவல் சட்டப்படி குளித்தலை – கோவைப் பயணத்தில்
பசுபதிபாளையத்தில் கைது – 25-4-65 முதல் 2-2-65 வரை

6. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 16-2-65 முதல் 4-4-65 வரை
பாளையங்கோட்டை சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் கைது

7. நெருக்கடி காவல் (பத்திரிகைத் தணிக்கையைக்
கண்டித்து அண்ணாசாலையில் – 2-6-76 – இரவே விடுதலை
போராட்டம்

8. பிரதமர் இந்திராகாந்திக்குக்
கருப்புக் கொடி – 30-10-77 முதல் 8-12-77 வரை
9. இலங்கைத் தூதர் அலுவலகத்தின் முன்
அடையாள மறியல் செய்தவர்களை விடுவிக்கக்கோரி மறியல் – 15-9-81 முதல் 29-9-81 வரை

10. இலங்கைத் தமிழர் ஆதரவுப்
போராட்டம் – காஞ்சிபுரம் – 16-5-85 முதல் 30-5-85 வரை

11. சென்னை அரசினர் தோட்ட
கட்சி அலுவலகம் மூடல் – 30-5-85 – இரவே விடுதலை

12. இந்தித் திணிப்பு அறிக்கை எரிப்பு
(சிறைக் கைதி உடை) – 9-12-86 முதல் 30-1-87 வரை

13. வெள்ளக்கோவில் பொதுக்கூட்டம்
தொடர்பாக குமாரபாளையத்தில் கைது – 19-4-87 – இரவே விடுதலை

14. இடஒதுக்கீட்டுப் போராட்டம் – 20-6-94 – இரவே விடுதலை

——————————————————————————————————————————————————–

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 

பெயர் : பேராசிரியர் க.அன்பழகன்
பெற்றோர் : சொர்ணம் – மு. கல்யாணசுந்தரம்
பிறப்பு : டிசம்பர் 19, 1922
சொந்த ஊர் : நாகை மாவட்டம், வைத்தீசுவரன் கோயில் அருகே உள்ள கொண்டந்தூர்
கல்லூரிக் கல்வி : (எம்.ஏ). அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
1941 மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் ஈடுபாட்டால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்.
1943 தலைவர் கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு மாணவர் மன்ற விழாவில் பங்கேற்றார்.
1944 சென்னை, பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் பணியேற்றார்.
1948 புதுவாழ்வு இதழ் – சண்பகம் இதழ்களுக்கு 1949 வரை ஆசிரியர், சிறப்பாசிரியர்
1952 இலங்கைப் பயணம்
1956 நேருவிற்குக் கறுப்புக் கொடி காட்டி கைதாகி 5 நாள் சிறைவாசம் ஏற்றார்.
1957 கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்து விலகி எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1959 தி.மு.க. சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவர். தி.மு.க. தொழிற்சங்கச் செயலாளராக 1961 வரை பணியாற்றினார்.
1962 சென்னை – செங்கை ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி மேலவையில் தி.மு.க. குழுவின் தலைவரானார்.
1964 இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 6 மாதச் சிறைவாசம் ஏற்றார்.
1967 திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியடைந்து, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
1968 ஏதன்ஸ், ரோம், பாரிஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா சென்று வருதல்.
1971 சென்னை புரசைத் தொகுதியில் வெற்றி பெற்று 1976 வரை தலைவர் கலைஞரின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1974 தி.மு.கழகப் பொருளாளராகப் பதவி ஏற்றார்.
1976 இந்திராகாந்திக்குக் கறுப்புக்கொடி காட்டி, கழகம் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1977 புரசை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார்.
1978 இந்திராகாந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதாகிச் சிறைவாசம் ஏற்றார்.
1980 புரசைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1983 ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் நிலையைக் கண்டித்துத் தலைவர் கலைஞருடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.
1984 சென்னைப் பூங்காநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1986 அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சட்டமன்ற உறுப்பினர் பதவி இழந்தார்.
1989 சென்னை அண்ணாநகர் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1994 மலேசியப் பயணம் மேற்கொண்டார்.
1996 சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வென்று கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1978, 1983, 1988, 1992, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998 பவள விழா – பணிகள் தொடர்கின்றன.


—————————————————————————————————————–
மனோரமா விழாவில் கலந்துகொள்வது என் பாக்கியம்: கருணாநிதி

சென்னை, ஜன. 14 உலகின் மிகச் சிறந்த நடிகையான மனோரமா வின் பொன்விழா பாராட்டு விழா வில் கலந்துகொள்வது என்னு டைய பாக்கியம் என முதல்வர் கரு ணாநிதி தெரிவித்தார்.

1958 முதல் 2008 வரையிலான 50 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம், ஹிந்தி உள் ளிட்ட மொழிகளில் சுமார் 1,500 திரைப்படங்களில் நடித்துள்ள மனோரமாவுக்கு சென்னையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலை மையேற்று கருணாநிதி பேசியதா வது: “மனோரமாவின் இன்றைய பேச்சு, குறிப்பாக என்னைப் பற்றிப் பேசும்போது ஏற்பட்ட பரபரப்புக் குக் காரணம் எங்களுடைய கலையு லகத் தொடர்பு மட்டுமல்ல; அவர் பிறந்தது திருவாரூருக்கு அருகி லுள்ள காட்டூர் என்பது மட்டு மல்ல, அதையும் தாண்டிய குடும்ப உறவும் உண்டு.
குடும்ப ரகசியம்: இங்குள்ள ஆயிரக்கணக்கானோர் மத்தியில், இதுவரை நான் வெளியிடாத ஒரு குடும்ப ரகசியத்தைக் கூற விரும்புகி றேன். 1967-ம் ஆண்டு திமுக ஆட் சிப் பொறுப்பேற்ற ஏழு, எட்டு மாதங்களில் தஞ்சையில் என்னு டைய தலைமையில் “அண்ணா கவி யரங்கு’ நடைபெறவிருந்தது.

அந்த விழாவுக்குச் செல்லும் போது திண்டிவனம் அருகே கார் விபத்துக்குள்ளாகி நான் உள்பட பலரும் படுகாயமடைந்தோம்.

செய்தியைக் கேள்விப்பட்ட அண்ணா உள்பட பலரும் எனக்கு என்ன ஆகிவிட்டதோ என கவலை யுற்று திண்டிவனத்துக்கு வந்தனர்.

அங்கிருந்து என்னை சென்னைப் பொதுமருத்துமனையில் அனும தித்தனர். அதுவரை எனக்கு நினைவு திரும்பவில்லை.
அப்போது மனோரமாவும் அவ ரது தாயாரும் நான் அனுமதிக்கப் பட்ட அறைக்கு வந்துள்ளனர். அப் போது அங்கு தலைவிரி கோலமாக வந்த என்னுடைய துணைவியார் ராஜாத்தியம்மாள் அழுது புலம்பி யிருக்கிறார். அப்போது அங்கு இருந்த தயாளு அம்மாள் அதைப் பார்த்துவிட்டு “இது யார்?’ என மனோரமாவிடம் கேட்டிருக்கி றார்.

அவ்வளவுதான்… “ஊருக்கெல் லாம் தெரிந்த விஷயம் உனக்குத் தெரியாதாம்மா..! இவர்தான் ராஜாத்தியம்மா!’ என மனோரமா விஷயத்தைப் போட்டு உடைக்க, “ஊருக்குத் தெரிந்த -வீட்டுக்குத் தெரியாத’ விஷயம் அப்போது வெளிப்பட்டுவிட்டது. மனோ ரமா என்ன நினைத்து சொன் னாரோ தெரியாது; ஆனாலும் இன்றளவும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உலகின் ஒப்பற்ற நடிகை:

“உதயசூரியன்’ என்ற நாடகத்தில் நான் கதாநாயகனாகவும் மனோ ரமா கதாநாயகியாகவும் நடித் தோம். அதில் நான் தேசியவாதியா கவும் மனோரமா திராவிடம் என் றால் என்ன என்று விளக்கும் கதா பாத்திரத்திலும் நடித்தோம். ஒரு பெண்ணுக்கு அந்த வேடத்தைக் கொடுத்ததற்குக் காரணம், திராவி டத்தைப் பரப்புவதற்காகத்தான்.
ஏனென்றால் பெண்கள் திருந்தி னால் போதும் நாடே திருந்திவி டும்.

மனோரமா பேசும்போது நான் இந்த விழாவில் கலந்துகொள்வது அவருடைய பாக்கியம், பெருமை என்றெல்லாம் கூறி எல்லாவற்றை யும் எனக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி னார்.

ஆனால் உண்மையைக் கூற வேண்டுமானால் உலகின் மிகச் சிறந்த, ஒப்புயர்வற்ற நடிகை மனோ ரமாவின் பொன்விழாவை யொட்டி நடைபெறும் இந்த மாபெரும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நா ளில் பெற்ற பாக்கியம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கருணாநிதி.

ரஜினிகாந்த்:

நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ராஜாரா மன் தாஸ் ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ, சார்லி சாப்ளின் பாலி வுட்டில் முக்கிய நடிகர்கள், தமி ழில் சிவாஜிகணேசன், ரெங்கா ராவ், எம்.ஆர்.ராதா, பாலையா போன்றோரைப் பற்றிய படக் காட் சிகளைக் காட்டி சொல்லிக் கொடுத்தார்.

ஹீரோயின்களில் அவர்கள் தேர்ந்தெடுத்தது சாவித்ரி, மனோ ரமா. அவருடன் “குப்பத்து ராஜா’ படத்தில் முதல்முறையாக நடித் தேன். அப்போது என் தமிழ் உச்ச ரிப்பு, ஸ்டைல் இவற்றையெல்லாம் பார்த்து “இப்படியே பேசுப்பா; நல்லா இருக்கு’ என்று கூறியவர்.

ஒருசமயம் “பில்லா’ படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அரு கில் ஒரு குப்பத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த ஒருவர் “பரவாயில்லையே; பைத்தியம் நல்லா ஆடுதே’ என்று குரல் கொடுத்தார். அந்தக் காலகட் டத்தில் என்னைப் பற்றி ஒருவித மாக செய்திகள் வந்துகொண்டிருந் தன.

அப்போது என் அருகில் இருந்த மனோரமா அந்த நபரின் சட்டை யைப் பிடித்து அடித்து, “அவரை படப்பிடிப்பிலிருந்து வெளியேற்றி னால்தான் நடிப்பேன்’ என்று கூற அவர் வெளியேற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டியவர் என்றார்.

கமல்ஹாசன்:

சிவாஜிகணே சன், ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா ஆகியோரின் மடியில் தவழ்ந்த நான், இந்த அளவுக்குக் கூட சாதிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான்.

மனோரமாவின் பணிவு, பண்பு, அன்பு போன்றவை அவருடைய ஒவ்வொரு செய்கையிலும் தெரி யும். எனக்குத் தெரிந்து கண்ணுக் கெட்டியவரை மனோரமாவுக்கு நிகரான நடிகை இந்த உலகில் இல்லை. அவருக்கு ஆண்டுதோ றும் விழா நடத்தினாலும் கண்டிப் பாக கலந்துகொள்வோம் என்றார் கமல்ஹாசன்.

மனோரமா:

எனக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே கேட்டனர். தவிர்த்து வந்தேன். கரு ணாநிதி ஆட்சி செய்யும்போது தான் இந்த விழா நடக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப் பம் போலும். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு நான்கு பேர் முக்கியக் காரணம். முதலாவதாக என்னு டைய தாய். இரண்டாவது என் னுடை தாய் ஸ்தானத்தில் இருக்கும் கருணாநிதி. அவருடைய “மணிமகு டம்’ நாடகத்தின் மூலம்தான் கலை யுலகுக்கு அறிமுகமானேன்.

தொடர்ந்து அவருடைய நாடகங்க ளில் நடித்துத்தான் புகழடைந் தேன். மூன்றாவதாக கவிஞர் கண் ணதாசன். கருணாநிதியின் நாட கங்களில் நான் நடிப்பதைப் பார்த் துவிட்டு அவர்தான் என்னை 1958-ல் “மாலையிட்ட மங்கை’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.

நான்காவது நபர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். என்னை செட்டிநாட்டிலிருந்து சென் னைக்கு வரவழைத்தவர். இவர்க ளும் தமிழக ரசிகர்கள் என்மேல் காட்டி வரும் அன்பும்தான் நான் இந்த நிலைக்கு வரக் காரணம்.

அனைவருக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக் கிறேன் என உணர்ச்சிவயப்பட்டு நன்றி தெரிவித்தார் மனோரமா.நடிகை மனோரமாவின் பொன்விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில்
திங்கள்கிழமை நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் 50 தங்க
நாணயங்கள் பொறித்த நினைவுப்பரிசை மனோரமாவுக்கு வழங்கினர்.

Posted in Alagiri, Alakiri, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Azakiri, Azhagiri, Azhakiri, Biosketch, DMK Youth Wing, dmkyouthwing, dmkyouthwing.in, Faces, History, Kamal, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, MK Stalin, MLA, MLAs, MLC, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, people, Rajini, Rajni, Stalin, www.dmkyouthwing.in | Leave a Comment »

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007


கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை


சென்னை, நவ.28-

1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நினைவுபடுத்தி கொள்கிறேன்

பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

மட்டிலா மகிழ்ச்சி

“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.

சரண்புக மாட்டோம்

தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.

செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஐநூறு கிளைகள்

ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.

நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.

இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.

நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.

மகத்தான இயக்கம்

ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.

நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.

அர்ப்பணிக்க வேண்டும்

நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.

ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.

சமூகநீதி தேவை என்றால்…

1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.

இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அடுத்த திட்டம்

நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.

அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.

கோரப்பசி

ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.

பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.

அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!

வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”

இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in 1950, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anna, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, DMK, Dravidian, dynasty, EVR, Heritage, History, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Ponmudi, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Koilpatti, Kovilpatti, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MK Stalin, Monarchy, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Periyaar, Periyar, Stalin | Leave a Comment »

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Mayavathi’s corruption supported by TR Balu with Congress Blessings – Presidential Elections

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?

மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.

உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.

அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

———————————————————————————————-

கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி

லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.

தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.

நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.

முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.

ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.

அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.

அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.

மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.

கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.

மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.

மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, APJ, Archeaological Survey of India, ASI, Azagiri, Azakiri, Azhagiri, Baalu, Balu, Bribery, Bribes, Business, CBI, Coalition, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, DMK, Environment, Governor, Interrogation, Investigation, Kalam, kickbacks, Law, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, nexus, Order, Party, Pollution, Power, President, support, Taj Heritage Corridor, Taj mahal, Tajmahal, TR Balu, UP, Uttar Pradesh, UttarPradesh | Leave a Comment »

Kanimozhi Karunanidhi – Rajya Sabha MP, Biosketch

Posted by Snapjudge மேல் மே 27, 2007

இந்திய மேலவை உறுப்பினராக திமுக சார்பில் கனிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

நடக்கவுள்ள, மேலவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது. தனது மகள் கனிமொழியை மேலவை உறுப்பினர் பதவிக்காக திமுக தலைவர் மு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.

திமுக தலைவரின் மகனான மு க ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சகோதரர் மு க அழகிரி, கட்சியிலும், ஆட்சியிலும் முறைப்படி பதவியில் இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் திமுகவை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது தவிர கருணாநிதியின் மருகமகனான, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உடனடியாக மத்திய அமைச்சாரகவும் ஆக்கப்பட்டார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து கருணாநிதியின் குடும்பத்துக்கும்- முரசொலி மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான விரிசல் அதிகமானதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு கருணாநிதி, தனது மகளான கனிமொழியை தற்போது அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.

திமுக சார்பில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாவும் இத்தேர்தலில் களமிறக்கப்பட உள்ளார்.

கட்சியில் தான் பல ஆண்டுகளாக இருந்ததாக தமிழோசையிடம் தெரிவித்த கனிமொழி, வாரிசு அரசியல் குறித்து செய்யப்படும் விமர்சனம் தொடர்பான கேள்விகளை தனக்கு பதவி அளிக்க முடிவு செய்தவர்களிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.

—————————————————————————————————————————————————–

எம்.பி. ஆகிறார் கனிமொழி
Kalianjar _Karunanidhi_Kanimozhi_stalin_Rajathi_Ammal

தந்தை மு. கருணாநிதி, தாயார் ராசாத்தி அம்மாள், அண்ணன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன், மாநிலங்களவை திமுக வேட்பாளராகத் தேர்வு பெற்ற கனிமொழி.

சென்னை, மே 27: தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:

ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.

நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

குதிரை பேரம் கூடாது:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.

சுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.

தமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா? அரசியல் ரீதியான காரணமா? எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.

———————————————————————————————————

கனிமொழியின் சொத்து எட்டரை கோடி

சென்னை, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்றொரு திமுக வேட்பாளரான திருச்சி என். சிவாவும் மனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைக்கான தேர்தல் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கவிஞர் கனிமொழி முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வெள்ளிக்கிழமை அவர் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தலைமைச் செயலகம் வந்து மனு தாக்கல் செய்தார்.

சொத்து ரூ. 8.56 கோடி:

தனது சொத்து மதிப்பு ரூ. 8.56 கோடி என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள தொகை ரூ. 6.58 கோடி.

மேலும் ரூ. 3.61 லட்சம் நகைகளும்,

ரூ. 18.70 லட்சம் மதிப்பிலான “டொயோட்டா காம்ரி’ காரும் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர அண்ணா சாலையில் ரூ. 1.61 கோடி மதிப்பிலான வர்த்தக வளாகம் உள்ளதாகவும்,

தனது கணவர் ஜி. அரவிந்தனுக்கு அத்திக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் வீட்டுமனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வங்கிக் கணக்கில் ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், தனது கணவருக்கு ரூ. 10 ஆயிரமும் இருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான திருச்சி என். சிவா, தனது வேட்பு மனுவில் தனது குடும்பத்தினருக்கு வங்கி மற்றும் இதர சேமிப்பு வகையில் ரூ. 1.83 லட்சம் இருப்பதாகவும், நகை ரூ. 7.59 லட்சத்துக்கு இருப்பதாவகும், குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 59.8 லட்சம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி மனு தாக்கல் செய்யும்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடனிருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 61,944 என்று குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ரூ. 3,000 ரொக்கம் இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்கு வங்கியில் ரூ. 58,944 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.

மனு தாக்கல் செய்தபிறகும் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:

மாநிலங்களவை உறுப்பினராவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி முன்னிறுத்தும் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார். அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசன் ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். எஞ்சிய இரு இடங்கள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 5-ம் தேதியாகும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரைத் தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

——————————————————————————————————–

தாலி கட்டும் பழக்கம் தொடர்வது ஏன்?: கனிமொழி கேள்வி

விழுப்புரம், மே 27: பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி யின் மகளும், கவிஞருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

இதுபோன்ற திருமணங்களை கலப்புத் திருமணம் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுகையில், நான் ஆட்டுக்கும், மாட்டுக்குமா திருமணம் நடத்தி வைக்கிறேன். மனிதனுக்கும், மனிதனுக்கும் நடத்தி வைக்கும் திருமணம், எப்படி கலப்புத் திருமணமாகும் என்று வினவினார்.

சாதியை, மதத்தை எதிர்த்து இந்த திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு வழக்கமான திருமணத்தின்போது கயிறு (தாலி) தேவைப்படுகிறது. பல பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட இன்னும் தாலியை பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

அமெரிக்க கருப்பர் மக்களை போல, நாம் நமது போர் முறையை மாற்றிக் கொண்டு போராட வேண்டும் என்றார் கனிமொழி.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

————————————————————————————————————

Kaalachuvadu Kannan

கனிமொழி, சசிகலா: ஞானியின் ஒப்பீடு.

ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று ‘ஓ பக்கங்கள்’.

மேற்படி இதழின் ‘ஓ பக்கங்கள்’ தலைப்பு “சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்”. இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.

இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் ‘கலைஞரின் மகள்’ என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.

 

இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.

 

இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

 

செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் ‘வாரிசு’ என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி ‘வாரிசு’ என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.

 

ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.

 

ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி ‘எப்போது?’ என்பதுதான்; ‘ஆவாரா?’ என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.

ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.

 

கண்ணன் காலச்சுவடு

——————————————————————————————————————

-அப்பா-கனிமொழியின் கவிதை

அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை ‘அகத்திணை’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?

-கனிமொழி
posted by சோமி at

Posted in Accounts, Assembly, Assets, Auto, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Badge, Betrothal, Bhindhi, Bhindi, Bindi, Biosketch, Bride, Bridegroom, Cars, Caste, Ceremony, Checking, Community, Crores, daughter, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, DMK, dynasty, Election, Engagement, EVR, family, Flat, Golusu, Hereditary, Heritage, hierarchy, Hindu, Hinduism, Holy, Home, House, Husband, Indication, Indicator, Jewelry, Jewels, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuthu.com, Kolusu, Land, Maran, Marriage, Marry, Metti, Millionaire, Modern, Money, MP, N Siva, Party, Periyar, plot, Politics, Polls, Property, Raajaathi, Raajaathi Ammal, Raajathi Ammaal, Raajathi Ammal, Raasaathi, Raasaathi Ammal, Raasathi, Raasathi Ammaal, Raasathi Ammal, Rajya Sabha, Rajyasabha, Rasaathi, Rasathi, Rasathi Ammal, Rational, Rich, Ring, Ritual, Savings, Shiva, Siva, Stalin, Sticker, Sun, Symbol, Tali, Thaali, Thali, Thiruchy Siva, Thiruma, Thirumavalavan, Thread, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal, Vituthalai Siruthaikal, Wedding, widow, Wife | 2 Comments »

Madurai Bye-elections – June 26 Polls: Congress, DMK, ADMK, Vijaikanth, Azhagiri

Posted by Snapjudge மேல் மே 26, 2007

மதுரை மேற்கு இடைத்தேர்தல் களத்துக்குத் தயாராகும் அதிமுக- காங்கிரஸ்!

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, மே 26: இடைத்தேர்தல்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துபவை அல்ல. ஆனால், ஆட்சியின் சாதனைகளை அளவிடும் அளவுகோல் என்று கூறுவதுண்டு.

அதுவும் தென்மாவட்டங்களின் அரசில் அளவுகோலாகக் கருதப்படும் மதுரை மாநகரானது, பொதுத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவையடுத்து மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.

தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.வி.சண்முகம் மறைவை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக- காங்கிரஸ்: மதுரை மேற்கு தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தது. எனவே, கூட்டணியின் அடிப்படையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று அக்கட்சியினர் கூறினாலும், திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அக்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்காக, அத்தொகுதியில் சிறப்புக் கவனமும் செலுத்தி வந்தனர். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்பட்டன. ஏராளமான குடும்பங்களுக்கு எவர்சில்வர் தண்ணீர் குடங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அரசின் சார்பிலும் இலவச டி.வி., காஸ் அடுப்பு வழங்குவதிலும் இத்தொகுதியில் தனி கவனம் செலுத்தப்பட்டது. மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து செல்லூர் பகுதியைக் காப்பதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

நெசவாளர் பக்கம் திடீர் கவனம்: மதுரை மேற்குத் தொகுதி, தொழிலாளர்கள் குறிப்பாக நெசவுத் தொழிலாளர் அதிகம் வசிக்கும் தொகுதி. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பே நெசவாளர்களின் கையில்தான் என்றும் கூறுவதுண்டு.

எனவே, வறுமையில் வாடும் மதுரை நெசவாளர்கள் மீது இடைத்தேர்தலையொட்டி அரசின் கவனம் திரும்பியது.

திமுக கூட்டணியினர் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பலத்த போட்டி எழுந்தது.

அதிமுக -மதிமுக கூட்டணியின் சார்பில் இத்தொகுதியை தக்கவைக்க சிறந்த வேட்பாளரை நிறுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்தது.

தினகரன் ஊழியர்கள் மூவர் பலி: இந்த நிலையில், தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால், அந்த நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மதுரை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் திமுகவினர் ஆர்வம் குறைந்தது. திமுக கூட்டணியில் தேர்தல் களத்தை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர் யார் என கட்சி மேலிடத்தில் பரிசீலிக்கப்படுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவில் பலத்த போட்டி: ஏற்கெனவே, அதிமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாகவும் இடைத்தேர்தலில் அதிமுக -மதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதில் அதிமுக நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இப்போட்டியில் முன்னணியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் மாவட்டச் செயலர்கள் செல்லூர் ராஜு, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேலு, மகளிர் பிரிவைச் சேர்ந்த அல்லி ஆகியோரது பெயர்கள் உள்ளன.

காங்கிரஸ்: காங்கிரûஸப் பொருத்தமட்டில் பல்வேறு கோஷ்டியினரும் தங்கள் அணிக்குத்தான் சீட் கிடைக்கும் என்று கூறிவந்தாலும், முன்னணியில் இருப்பது கட்சியின் நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், தெய்வநாயகம், கவுன்சிலர் ஐ.சிலுவை, கே.எஸ்.கோவிந்தராஜன், ஆர். சொக்கலிங்கம், தொழிலதிபர் தங்கராஜ், முன்னாள் நகர் மாவட்டத் தலைவர் பி.மலைச்சாமி, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வழக்கறிஞர் பெருமாள் ஆகியோரது பெயர்கள் உள்ளன.

தேமுதிக: இந்த இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக 14,741 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1967-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை

  • கம்யூனிஸ்ட் 2 முறையும்,
  • அதிமுக 4 முறையும்,
  • திமுக,
  • காங்கிரஸ் ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

———————————————————————————————————————————

ஜூன் 26 மதுரை மேற்கு இடைத்தேர்தல்

புதுதில்லி, மே 26: மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 29-ல் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் கடந்த பிப். 5-ம் தேதி காலமானார். அதையடுத்து இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தொடர்பான முறைப்படியான அறிவிப்பு ஜூன் முதல் தேதி வெளியாகும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8. அடுத்த நாள் பரிசீலனை. வாபஸ் பெற கடைசி நாள் 11.

வாக்குப்பதிவு ஜூன் 26-ல் நடைபெறும். 29-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஜூலை 2-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்கள் எதையும் தேர்தல் முடியும் வரை அறிவிக்கக் கூடாது.

இடைத் தேர்தலுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் ஆவணங்களின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

——————————————————————————————————————-

மதுரை மேற்கு: கலக்கப் போவது யாரு?

பா. ஜெகதீசன்

சென்னை, மே 28: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க.வும், காங்கிரஸýம் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளன.

எனினும், தேர்தல் களத்தில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி நடைபோடப் போகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸýக்கு வாய்ப்புத் தரப்பட மாட்டாது. தி.மு.க.வே போட்டியிடும் என்கிற யூகங்கள் கடந்த சில வாரங்களாகவே நிலவின.

தி.மு.க. பின் வாங்கியது ஏன்?

அதற்கேற்ப தொகுதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமிடும் பணிகளில் தி.மு.க. முனைப்புடன் ஈடுபட்டு வந்தது. மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகத்தின் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதல், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் போன்ற காரணங்களால், இந்த இடைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கருதியது.

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தாங்கள் தோற்றால், அது கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் கரும்புள்ளி ஆகி விடும் எனவும் தி.மு.க.வினர் கருதினர்.

காங். நிலை:

இந்நிலையில் இத் தொகுதியை காங்கிரஸýக்கே தி.மு.க. தலைமை அளித்துள்ளது. இதனால், இத்தொகுதியைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த மகிழ்ச்சி நிலை பெறத் தக்க அளவுக்கு காங்கிரஸýடன் தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து பணியாற்றுவார்களா என்கிற கேள்வி தொகுதியில் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவாக தி.மு.க. செய்யும் பிரசாரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பைப் பாதிக்கக் கூடும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், தொகுதியில் போட்டியிட விரும்பும் காங்கிரஸின் பல்வேறு அணிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் வேட்பாளர் தேர்வின்போது வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலின் வெற்றியை இந்தக் கோஷ்டிப் பூசல் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பிரசாரத்தின்போது தெரிந்து விடும்.

அ.தி.மு.க.வின் பிரச்னை:

இந்தத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால், அழகிரியின் தலைமையில் தி.மு.க. அணியினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் என்கிற கவலை அ.தி.மு.க.வினரிடையே முன்பு இருந்தது. தற்போது இங்கே காங்கிரஸ் போட்டியிடுவதையடுத்து, அவர்களது கவலை பறந்து போனது.

தேர்தல் களத்தில் எதிர் அணியின் வேட்பாளரை எளிதாக எதிர்கொள்ளலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. இங்கு நிறுத்தும் வேட்பாளரைப் பொருத்தே அந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிக்கப்படும். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், முன்னாள் நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், செல்லூர் ராஜு, காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போன்றவர்களில் யாராவது ஒருவர் நிறுத்தப்படலாம் என்பது அ.தி.மு.க. வட்டாரத் தகவல்.

கடந்த தேர்தலில் இத் தொகுதியில் 3-வது இடத்தைப் பெற்ற தே.மு.தி.க. 14,527 வாக்குகளைப் பெற்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளின் காரணமாகவும் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தி.மு.க. தலைமையிலான அணியின் சார்பில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளரையும், தே.மு.தி.க. வேட்பாளரையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அ.தி.மு.க. உள்ளது.

இந்தத் தொகுதியில் யாதவர், தேவர், செüராஷ்டிர சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். தேர்தல் வெற்றி -தோல்வியில் இவர்களின் பங்கும் முக்கியமானது.

2006 தேர்தலில்…:

2006-ல் நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்ட எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 57,208 வாக்குகளைப் பெற்று வென்றார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் என். பெருமாள் 53,741 வாக்குகளைப் பெற்றார்.

சண்முகம் காலமானதையடுத்து, இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த தேர்தல்களில்…:

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள், 2-வது இடம் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக):

1967: என்.சங்கரய்யா (மார்க்சிஸ்ட்) -46,882, எம். செல்லையா (காங்.) -23,012.

1971: கே.டி.கே.தங்கமணி (கம்யூனிஸ்ட்) -40,899, பி.ஆனந்தன் (ஸ்தாபன காங்கிரஸ்) 31,753.

1977: டி.பி.எம். பெரியசாமி (அ.தி.மு.க.) -32,342, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -16,211.

1980: எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) -57,019, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -35,953.

1984: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -48,247, எஸ். பாண்டியன் (அ.தி.மு.க.) -45,131.

1989: பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) -45,569, ஆர்.வி.எஸ். பிரேம்குமார் (காங்.) -26,067.

1991: எஸ்.வி.சண்முகம் (காங்.) -59,586, பொன். முத்துராமலிங்கம் (தி.மு.க.) -32,664.

1996: பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) -61,723, ஆர். முத்துசாமி (காங்.) -17,465.

2001: வளர்மதி ஜெபராஜ் (அ.தி.மு.க.) -48,465, பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 47,757.

அ.தி.மு.க. தொகுதி என்று கருதப்படும் மதுரை மேற்குத் தொகுதியை அ.தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது நழுவ விடுமா என்பது தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பொருத்து இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

—————————————————————————————————

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி: வெள்ளிக்கிழமை மனு தாக்கல்

மதுரை, மே. 30-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந்தேதி
நடக்கிறது.

இந்த தேர்தலில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் ஓட்டுப்போட
உள்ளனர். இதற்காக தொகுதி முழுவதும் 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வருகிற 1-ந்தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், பகுதிகள் கண்டறியப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் பொதுக் கூட்டங்கள், ஊர்மவலங்கள் நடத்தவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த, முன்னரே போலீஸ் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 8-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்து கிறது. இடைத்தேர்தல் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனாலும்

  • மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன்,
  • மாவட்ட செயலாளர் ராஜாங்கம்,
  • தொழிற்சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன்,
  • அமைப்புச் செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ்,
  • ஆசிரியர் பிரிவு தலைவர் ஆபிரகாம்,
  • கவுன்சிலர் சிலுவை ஆகியோரின் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட லாம் என்று தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. ஏற்கனவே தொடர்ந்து 2 முறை வென்ற தொகுதி என்பதால் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கவும் 50-க்கும் அதிகமான நிர்வாகிகள் மனு செய்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை

  • காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை,
  • மாணவரணி செயலாளர் உதய குமார்,
  • முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்,
  • முன்னாள் எம்.எல்.ஏ.ராஜாங்கம்,
  • முன் னாள் மாவட்ட செயலாளர் கள் செல்லூர் ராஜு,
  • எம்.எஸ்.பாண்டியன்,
  • தொழிற் சங்க செயலாளர் எஸ்.டி.கே.ஐக்கையன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம் என்று தெரிகிறது. நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என்ற பரபரப்பும் கட்சி நிர்வாகி களிடையே ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை பொறுத்த வரை முதன்முறையாக கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்றது. எனவே இந்த முறை கணிசமான ஓட்டு களை பெற முடியும் என்ற நம்பிக்கை தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கட்சியிலும் போட்டியிட பலர் ஆர்வம் தெரிவித்து உள்ளனர். ஆனால்

  • கடந்த முறை போட்டியிட்ட மணிமாறன்,
  • விஜயகாந்த் மனைவி பிரேமலதா,
  • மாநில பொருளாளர் சுந்தர் ராஜன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருகிற 4-ந்தேதி விஜயகாந்த் அறிவிக்கிறார்.

கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்ற மூவேந்தர் முன்னணி கழகம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த கட்சி யின் வேட்பாளர் பகவதி 1851 ஓட்டுகள் பெற்றார். தற்போது மூவேந்தர் முன்னணி கழகம் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட போவ தாக அறிவித்து இருப்பதால் முதல் முறையாக பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். வருகிற 3-ந்தேதி வேட்பாளரை அறிவிப்பதாக மாநில தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.

ஜனதா கட்சி, பாரதீய ஜனதாவை ஆதரிக்குமாப அல்லது அந்த கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப் படுவாராப என்பது குறித்து ஜனதா கட்சி தலவைர் சுப்பிரமணியசாமி இன்னும் ஓரிரு நாளில் முடிவு அறிவிப்ப தாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தி னால் ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றே தெரிகிறது.

எனவே மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகி விட்டது. மேலும் 15-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் களத்தில் குதிக்க தயாராகி வரு கிறார்கள். எனவே வருகிற 1-ந்தேதியில் இருந்து மேற்கு தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிடும்.

————————————————————————————-

இடைத்தேர்தல்: அழகிரி பிரசாரம் செய்யலாமா?

மதுரை, ஜூன் 2: மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்யலாமா என்பது குறித்து காவல் துறையின் உளவுப் பிரிவு ரகசிய அறிக்கை தயாரித்துள்ளது.

சென்னையில் உள்ள காவல் துறைத் தலைமையகத்துக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் உளவுப் பிரிவு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

இதில் மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு, அதிமுகவின் தற்போதைய நிலை, தேமுதிக வளர்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உளவுப் பிரிவு போலீஸôர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

விலை உயர்வு காரணமாக திமுக கூட்டணி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உண்மையிலேயே தகுதி இருந்தும் இலவச கலர் டி.வி. கிடைக்கப் பெறாத பெரும்பாலோனோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக அனுதாபிகளுக்கே அதிகளவில் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இலவச காஸ் அடுப்பு வழங்கும் முறையிலும் நீடிக்கிறது என்று கூறப்படுகிறது.

இதனால், 19 வார்டுகளிலும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

தினகரன் நாளிதழ் அலுவலகம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, 3 ஊழியர்கள் இறந்த சம்பவத்தால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதன் பாதிப்பு இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எனவே, தேர்தலின்போது மு.க. அழகிரியை பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் உளவுப் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

————————————————————————————-

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு- ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜ×ன். 4-

மதுரை மேற்கு தொகு திக்கு வருகிற 26-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் இடையே 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின. தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 29 பேர் விண்ணப்ப மனு அளித்து இருந்தனர். இதில் சம்பத் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தவிர்த்து மீதமுள்ள 28 பேரும் நேர்காணலுக்காக நேற்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

முதல் கட்டமாக அவர்களிடம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு 28 பேரிடமும் விவரங்களை கேட்டு அறிந்தது. பிறகு அவர்கள் அனைவரும் போயஸ் கார்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசினார். ஒவ்வொருவரிட மும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கமாக கேட்டு அறிந்தார். பிறகு அவர் உங்களில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார். அவருக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் பெயரை ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மதுரை மாநகர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் செல்லூர் ராஜ× வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி வருகிற 26.6.2007 அன்று நடைபெற உள்ள மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் செல்லூர் கே.ராஜ× தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு நாளை பகல் 1 மணிக்கு மேற்கு தொகுதி தேர்தல் அதிகாரியான நாராயணமூர்த்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

செல்லூர் ராஜுவுடன் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.

செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். இப்போது மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

—————————————————————————————————–

மதுரை மேற்கு தொகுதியில் 20 பகுதிகள் பதட்டமானவை: போலீஸ் கமிஷனர் தகவல்

மதுரை, ஜுன். 9-

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு அன்றும் வன்முறைகள் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மத்திய அதிரடிப்படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். வருகிற 18-ந்தேதி மதுரை வரும் அவர்கள் மேற்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே மேற்கு தொகுதியில் பதட்டமான பகுதிகள் எவைப வன்முறைகள் அரங்கேறும் இடங்கள் எதுப எங்கெங்கு சமூக விரோதிகள் பதுங்குவார்கள்ப என்பதை கண்டறியும் பணி நடந்தது. நேற்று மத்திய தேர்தல் பார்வை யாளர் அஜித் தியாகியும், தொகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவருடன் மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பின்னர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பதட்டமான பகுதிகள் எவை என்பது குறித்தும் முடிவு செய்தனர்.

இதனை மதுரை போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலையொட்டி மேற்கு தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுவரை அந்த தொகுதியில் 20 பகுதிகள் வரை மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள் ளது.

1. கோரிப்பாளையம்,
2. தல்லா குளம்,
3. கரும்பாலை,
4. தத்தனேரி,
5. பந்தல்குடி,

6. சின்னகீழத்தோப்பு,
7. மீனாம்பாள்புரம்,
8. ஜம்புரோ புரம்,
9. நரிமேடு,
10. செல்லூர்,

11. 50 அடிச்சாலை,
12. 60 அடி சாலை,
13. பி.டி.புரம்,
14. அருள்தாஸ்புரம்,
15. பெத்தானியாபுரம்,

16. அழகரடி,
17. சிங்கராயபுரம் உள்பட 20 பகுதிகள் பதட்டமானவை என்று கண்டறிந்துள்ளோம்.

இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மேலும் இங்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடனும் ஆலோ சனை மேற்கொள்ளப்படும்.

பதட்டமான பகுதிகளில் போலீசார் 4 அடுக்குப் பாதுகாப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounder, Bye-elections, CB-CID, CBI, Chellur Raju, Chengottaian, Chengottaiyan, CID, Colour TV, Congress, DDMK, Desiya Murpokku Dravida Kalagam, Desiya Murpokku Dravida Kazhagam, Dhinakaran, Dhinamani, Dinamalar, Dinamani, Dist Secy, District, DMDK, DMK, Economy, Elections, Free, History, Inflation, Jagadeesan, Jagadhisan, Jegadeesan, Jegadessan, Jegadhisan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Loser, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madhusoodhanan, Madhusudhanan, Madhusuthanan, Madurai, Madurai West, Manifesto, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, O Paneerselvam, Op-Ed, Opinion, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Polls, Predictions, PTR, Rajan Chellappa, Recession, Research, Secretary, Sellur Raju, Sengottaian, Sengottaiyan, Survey, VaiGo, Vaikai, VaiKo, Viduthalai Chiruthaigal, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Winner | 13 Comments »

Tha Kiruttinan Murder case – Mu Ka Azhagiri obstructs procedures?

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைசிறப்பு நிருபர்

புதுதில்லி, ஜன. 12: மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி, சாட்சிகளில் ஒருவரான முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக்பான் மற்றும் லோகேஸ்வர் சிங் பன்டா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

தமிழக அரசுக்கும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதில்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

முத்துராமலிங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அழகிரி, தன்னிடம் உள்ள ஏராளமான பண பலத்தையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி வருகிறார். வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம், அழகிரியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி நீதிமன்றத்துக்கு வந்து கோஷமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீதிமன்ற அறைக்குள் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சாட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

அரசுத் தரப்பு சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருட்டிணனின் சகோதரர் உள்பட மேலும் பல சாட்சிகள், மிரட்டல் காரணமாக நீதிமன்றத்துக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவருக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தற்போதைய (திமுக) அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி மாற்றப்பட்டுவிட்டதாக அதற்குக் காரணம் கூறியிருக்கிறது.

தற்போதைய அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் சார்பில், ஏற்கெனவே ஆஜரானவர். அதனால், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படாவிட்டால், நீதியே கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும் என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

——————————————————————————————

தா.கிருட்டிணன் கொலை வழக்கு: துணை மேயர் உள்பட 11 பேர் ஆஜர்

மதுரை, ஜூன் 2: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கே.கே. நகரில் உள்ள அவரது வீடு அருகே 2003 மே 20-ம் தேதி தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக் கொலை தொடர்பாக மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான தற்போதைய

  • மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன்,
  • எஸ்ஸார் கோபி,
  • கராத்தே சிவா,
  • ஈசுவரன்,
  • மணி,
  • சீனிவாசன்,
  • பாண்டி,
  • ராஜா,
  • கார்த்திகேயன்,
  • பாலகுரு,
  • முபாரக் மந்திரி,
  • இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்ததன்பேரில், இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். மு.க.அழகிரி, கராத்தே சிவா ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.

Posted in abuse, Accused, ADMK, Alagiri, Alakiri, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, CM, Court, dead, DMK, Karate Siva, Kiruttinan, Krishnan, Law, Law and Order, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madurai, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Muthuramalingam, Order, Paandi, Pandi, Police, Power, Secretary, Supreme Court, Tha Kiruttinan, Tha Krishnan, Thaa Kirutinan | 3 Comments »