Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Monarchy’ Category

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

MG Ramachandran: Politics, Cinema, Personality – MGR Biosketch by Panruti Ramachandhran

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

மறைந்தும் மறையாத தலைவர்

பண்ருட்டி ராமச்சந்திரன்

எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.

அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

ஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.

“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.

நடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.

எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.

1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா? உணர்வுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.

அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.

அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.

ஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த கொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.

எம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.

அன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.

சத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்டியது இல்லை என்று தீர்மானித்தோம்.

இந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.

“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.

நல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

உலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.

உலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.

முயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே!

(கட்டுரையாளர்: அவைத்தலைவர், தேமுதிக)

Posted in Actors, ADMK, AIADMK, Anjali, Anna, Assembly, Biography, Biosketch, Children, Cinema, CM, DMDK, DMK, dynasty, EVR, Films, Food, Free, Freebies, Heartthrobs, Hero, Heroes, Incidents, Indhra, Indira, Indra, Iruvar, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, King, KK, Life, Manifesto, Meals, Memoirs, MGR, Midday Meals, Monarchy, Movies, Notes, Nutrition, Panruti, Periyar, Personality, Politics, Poor, PVNR, Ramachandhran, Ramachandran, Ramachanthiran, Ramachanthran, Rao, UN, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007


கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை


சென்னை, நவ.28-

1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நினைவுபடுத்தி கொள்கிறேன்

பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

மட்டிலா மகிழ்ச்சி

“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.

சரண்புக மாட்டோம்

தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.

செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஐநூறு கிளைகள்

ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.

நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.

இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.

நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.

மகத்தான இயக்கம்

ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.

நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.

அர்ப்பணிக்க வேண்டும்

நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.

ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.

சமூகநீதி தேவை என்றால்…

1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.

இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.

அடுத்த திட்டம்

நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.

அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.

கோரப்பசி

ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.

பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.

அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!

வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”

இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in 1950, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anna, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, DMK, Dravidian, dynasty, EVR, Heritage, History, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Ponmudi, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Koilpatti, Kovilpatti, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MK Stalin, Monarchy, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Periyaar, Periyar, Stalin | Leave a Comment »

TJS George – Blind Leaders and Greedy Sons form a deadly dynasty for the Indian Thrones

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

நவீன திருதராஷ்டிரர்கள்!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

திருதராஷ்டிரரின் சிக்கலான குணநலன்களுக்கு அடிப்படையாக அமைந்த அம்சம் என்னவென்றால், தனது ஆவி, பொருள் அத்தனையையும் செலவழித்தாவது தனது மகன்களை மாமனிதர்களாக்கிவிட வேண்டும் என்னும் அவரது ஆசைதான்.

தனது மகன்களின் நலனை தன் ராஜ்ஜியத்தின் நலன்களுக்கும் மேலானதாகக் கருதினார் அவர். செயல்களில் நேர்மை குறித்த கேள்வி ஒருபொழுதும் அவரது நெஞ்சில் எழவில்லை.

வியாசர் இப்பொழுது இருந்திருப்பாரானால், 21-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றியும் எழுதியிருப்பார். அதில் ஒரே வேறுபாடு என்னவென்றால், அக்கால இந்திரப்பிரஸ்தத்தில் நூறு மகன்களைக் கொண்ட ஒரே ஒரு திருதராஷ்டிரர்தான் இருந்தார். ஆனால் இன்று ஒன்று அல்லது இரு மகன்களைக் கொண்ட நூறு திருதராஷ்டிரர்கள் இருக்கின்றனர்.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகியவை அடங்கிய இன்றைய இந்திரப்பிரஸ்தத்தில் நாம் காண்பது என்ன?

பொது வாழ்க்கையின் அடிப்படை நாகரிகங்களையெல்லாம் உதறிவிட்டு, தமது வாரிசுகளை மட்டுமே தலைவர்களாக்குவதற்காக தமது திறமை, சாதுர்யம் அனைத்தையும் பயன்படுத்தும் அபிநவ திருதராஷ்டிரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அந்த வியாசருக்கே ஓரிரு சகுனிவித்தைகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர் ஒருவர் உண்டென்றால், அது தேவ கௌடாதான். அவரை நெருங்கிவந்துகொண்டிருப்பவர்கள் கருணாநிதியும் கருணாகரனும். தில்லியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்.பி.க்களைக் கொண்டிருப்பதால் கிடைத்திருக்கும் தாற்காலிக செல்வாக்கால் ஒருவர் தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.

இன்னொருவரோ, அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு மகனுக்காக எதையெதையோ செய்துகொண்டு, தள்ளாடிக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய நபராகிவிட்டார்.

தேவ கெüடாவின் பிடியும் நழுவிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் தனது நிலையை மாற்றிக்கொள்வதுடன், தனக்குத்தானே முரண்பாடான நிலைகளை மேற்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகிவிட்டார் அவர். தனது எதிரிகளே மிரளும் அளவுக்கு வில்லங்கமான சதித் திட்டங்களைத் தீட்டக்கூடிய மூளை அவருக்கு. இப்போதோ அவரது நண்பர்களே அஞ்சி நடுங்கும் மனிதராகிவிட்டார் அவர். இதைப்பற்றி பாஜகவினரைக் கேட்டால் தெரியும்.

கெட்டிக்கார திருதராஷ்டிரராக இருக்க வேண்டுமென்றால், வஞ்சகப் புத்தி மட்டும் இருந்தால் போதாது; இரக்கமற்ற கல்நெஞ்சராகவும் இருந்தாக வேண்டும். நவீன யுகத்தின் மிக வெற்றிகரமான வம்சத் தலைவராக இந்திரா காந்தியை ஆக்கியவை அந்தக் குணங்களே ஆகும். அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆன பிறகும் உறுதியாக, வலிமையாக, வெற்றி கொள்ள முடியாததாக, தகர்க்க முடியாததாக… ஓர் அரசாட்சியைப்போல அவரது வம்சம் ஆண்டுகொண்டிருக்கிறது. அது முடிவின்றி நீள்வதைப்போலத் தோன்றுகிறது; மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து ராகுல் காந்தி வரவிருக்கிறார்; அவருக்குப் பின் பிரியங்கா காந்தி வருவார். இந்திரா காந்தியில் தொடங்கி வழிவழியாக வந்ததைப்போல மீண்டும் அடுத்த வாரிசுகளின் வரிசை தொடங்கிவிடும்போலத் தோன்றுகிறது.

அதனுடன் ஒப்பிட்டால் கெüடாவின் வம்சாவளி ஒன்றுமே இல்லை. அவர் காங்கிரûஸக் காலைவாரி விட்டுவிட்டு பாரதிய ஜனதாவுடன் கைகோத்தபோது, தனது மகனை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு அவர் மேற்கொண்ட சாதுர்யமான நடவடிக்கையாக அது கருதப்பட்டது.

பிறகு காங்கிரஸýடன் உறவு கொள்வதற்காக பாஜகவைக் காலைவாரிவிட்டார் அவர். பின்னர் மீண்டும் பாஜகவைக் கரம்பிடிக்க காங்கிரûஸக் கைகழுவினார். பிறகு ஏறக்குறைய பாஜகவைக் கவிழ்க்கும் வகையில் புதிய “12 கட்டளைகளை’ அறிவித்தார் கெüடா. அதன் மூலம் அவர் விடுத்த செய்தி என்னவென்றால், பாவப்பட்ட மனிதரான எடியூரப்பா முதல்வராகிவிட்டாலும் சரி, ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது என்பதுதான். காலைவாருவதில் மன்னரான கெüடா, அவரை தன் விருப்பம்போல ஆட்டுவித்துவிடுவார் என்பது நிச்சயம்.

இருந்தபோதிலும், தேவ கெüடாவுக்கும் பரிதாபகரமான ஒரு பக்கம் உள்ளது. மதச்சார்பின்மை என்ற துரும்பைப் பிடித்துக்கொள்ள அவர் செய்யும் முயற்சிதான் அது. “மதச்சார்பற்ற ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் -செக்யூலர்) என்பதற்கு, “மகன்களின் ஜனதா தளம்’ (ம. ஜனதா தளம்) (ஜேடி-எஸ் ~ சன்ஸ்) என்று எப்பொழுதோ விளக்கம் கொடுத்துவிட்டனர் கர்நாடக மக்கள்.

ஆனால், அதன் மூத்த தலைவரால்தான் அந்த உண்மையை ஒப்புக்கொள்ள இயலவில்லை. மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைப்பதாலேயே தான் மதச்சார்பற்றவர் என்பது இல்லை என்றாகிவிடாது என்று கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் கெüடா. அதாவது, மதச்சார்பின்மை என்பது இனி “நேர்மையின்மை’ என்பதாகிவிடும்.

இவ்வளவு அனுபவம் மிக்க மனிதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இதற்கான பதிலை எப்பொழுதோ யுகாந்தவில் கூறிவிட்டார் ஐராவதி கார்வே.

“”திருதராஷ்டிரருக்கு யோசனை கூறும்போது, பேராசையின் அறிவீனம் குறித்தும், நீதியின் அவசியம் குறித்தும், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் விதுரர். ஆனால், அந்த யோசனைகளுக்கு அவர் செவிசாய்க்கவுமில்லை; அதனால் பயன்பெறவும் இல்லை. விழலுக்குப் போய்ச் சேர்ந்தன அந்த யோசனைகள். சரியெது, தவறெது என்று பிரித்தறியும் திறனை இழந்துபோய்விட்டார் திருதராஷ்டிரர்” என்று அப்பொழுதே கூறிவிட்டார் கார்வே.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

—————————————————————————————————————————-
சாணக்கியருக்கு ஒரு தர்மசங்கடம்

நீரஜா செüத்ரி

அரசியல் சாணக்கியர் எனக் கருதப்படும் எச்.டி. தேவ கெüடாவுக்கே இப்போது ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதா, வேண்டாமா என்பதுதான் அது. அவருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. பாஜகவின் ஆதரவு இல்லாமலே அவரது மகனின் அரசு தொடரட்டும் என்று முதலில் நினைத்தார். இப்போதோ பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்; அதே நேரத்தில் அதை முழுமையாகத் தாம் ஆதரிக்கவில்லை என்று காட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். இதுதான் இப்போது சிக்கலாகிவிட்டது.

இதே கெüடாதான், 1997-ல் காங்கிரஸ் அளித்துவந்த ஆதரவை சீதாராம் கேசரி திரும்பப் பெற்றவுடன், பாஜக ஆதரவு தர முன்வந்தபோதிலும், அதை நிராகரித்துவிட்டு பிரதமர் பதவியில் இருந்து இறங்கினார் என்பதை மறந்துவிட முடியாது.

2006-ல் பாஜகவுடன் அவரது மகன் கூட்டணி சேர்ந்தவுடன், அதைத் “துரோகச் செயல்’ என்று வர்ணித்தார் கெüடா. தனது பாஜக எதிர்ப்பு நிலையை நிரூபிப்பதற்கு அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகளில் அதுவும் ஒன்று. அப்போது, “துரோகம்’ செய்ததற்காக தனது மகனைத் தகுதி நீக்கம் செய்யுமாறும், மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.பி. பிரகாஷை நியமிக்குமாறும் கோரி கர்நாடக ஆளுநருக்கு 2006-ல் கடிதம் எழுதினார் கெüடா. “மனந்திருந்திய மைந்தனை’ சில வாரங்களிலேயே அவர் வரவேற்றுச் சேர்த்துக்கொண்டபோதிலும், அவர் எழுதிய கடிதத்துக்குப் பதிலாக வேறு கடிதம் எதையும் அவர் அனுப்பவில்லை.

இப்போது பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ள போதிலும், 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறார் கெüடா. அந்த நடவடிக்கையில் இருந்து தான் விலகியிருப்பதாகக் காட்டிக்கொள்வதே அதன் நோக்கம். கர்நாடகத்தை ஹிந்துத்துவா சோதனைச்சாலையாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது என்று கூறியே, முதலில் அக் கட்சிக்கு ஆதரவு தர ம. ஜனதா தளம் மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

கூட்டணி உடன்பாட்டின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவதற்கு வழிவிட்டு அக்டோபர் 3-ல் எச்.டி. குமாரசாமி பதவியில் இருந்து விலகியாக வேண்டிய நிலை இருந்தது; அப்பொழுது, காங்கிரஸýடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், அக் கட்சிக்குத் தூது விட்டார் கெüடா. ஆனால், அந்தத் தூண்டிலில் காங்கிரஸ் சிக்கவில்லை; சோனியாவையும் அவரால் சந்திக்க முடியாமல் போனதால், எரிச்சலடைந்தார் கெüடா.

நம்ப முடியாததாகத் தோன்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துவிட்ட பிறகு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடந்த வாரம் தேவெ கெüடா கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுவதுதான். பாஜகவுடன் கைகோப்பதைவிட தேர்தலைச் சந்திப்பதற்கு அவர் தயாராக இருந்தார் என்பதைப் பதிவுசெய்வதாக அது இருக்கும் என்று நினைத்திருக்கக்கூடும்.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள வொக்கலிகர் சமுதாயத்தின் பெருந்தலைவராகக் கருதப்படும் அவர், முஸ்லிம்களைக் கவர்ந்திழுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறார். அண்மையில்தான், கட்சியின் மாநிலத் தலைவராக ஒரு முஸ்லிமை அவர் நியமித்தார். அண்மையில் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்றது. சிறுபான்மைச் சமுதாயத்தினர் அக் கட்சிக்கு வாக்களித்திருக்காமல் அந்த வெற்றி கிடைத்திருக்காது. பாரம்பரியமாக ஜனதா தளத்துக்கு இருந்துவந்த முஸ்லிம்களின் ஆதரவில் குறிப்பிடத் தக்க பங்கை தேவெ கெüடா சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலில், தனது பலத்தை முன்பிருந்ததைவிட மும்மடங்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும் அக் கட்சியைப் பொருத்தவரை தேர்தலைச் சந்திப்பதற்கு இது சரியான நேரமல்ல என்று கருதியதால்தான் பி.எஸ். எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவுக்கு கெüடா குடும்பம் வந்தது.

கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், “தந்தை-மகன்’ கூட்டணியால் ஏமாற்றப்பட்டதால், பாஜக மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுவிட்டது. நமது சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் (எடியூரப்பா) மாநிலத்தின் தலைமைப் பதவிக்கு வருவதைத் தடுத்துவிட்டார்களே என்று லிங்காயத்து சமுதாயத்தினரும் கோபமுற்றனர். அந்தச் சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால், பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்திருக்கும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றவற்றைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது பாஜகவே என்பது கவனிக்கத்தக்கது.

இன்றைய அரசியலில் வர்த்தக நோக்கங்களும் ஒரு முக்கியப் பங்கை வகித்துக்கொண்டு இருக்கின்றன. பெங்களூர்- மைசூர் அடிப்படைக் கட்டமைப்பு வளாகத் திட்டத்தை நிறைவேறாமல் முடக்கிவிட கெüடாக்கள் விரும்பினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். பலநூறு கோடியில், “புது பெங்களூர்’ நகரத்தை நிர்மாணிப்பது குறித்தும் பேச்சு இருக்கிறது. உறவை முறித்துக்கொள்வது என்ற முடிவை பாஜகவும் ம. ஜனதா தளமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவ்விரு கட்சிகளையும் அத் திட்டத்தில் அக்கறை கொண்ட சக்திகள் வலியுறுத்தி இருக்கவும்கூடும்.

கெüடாவுடன் கூட்டணி வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெரும்பான்மையினர் அதற்கு எதிராக உள்ளனர். அதுவேதான் காங்கிரஸ் மேலிடத்தின் நிலையும். ஏற்கெனவே கூட்டணி வைத்து, கையைச் சுட்டுக்கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே, தேவ கெüடாவை நம்ப முடியாது என அக் கட்சி கருதுகிறது. அதோடு, கெüடாவுடன் கைகோப்பது அரசியல் ரீதியில் பயன்தரக்கூடியதுதல்ல என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

அதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து பிரிந்துவந்து காங்கிரஸில் சேர்ந்திருக்கும் சித்தராமய்யாவைப் பகைத்துக்கொள்வதாகவும் அது ஆகிவிடும். மேலும், கர்நாடகத்தின் மூன்றாவது பெரிய சமூகமான குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் சித்தராமய்யா. அவர்களது ஆதரவு காங்கிரஸýக்குப் பலம் சேர்ப்பதாக அமையும்.

கெüடாவும் அவரது மகனும் இல்லாத மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து காங்கிரஸ் ஆலோசித்திருக்கக்கூடும். ஆனால், 12 எம்எல்ஏக்களுடன் தில்லியில் முகாமிட்டிருந்த ம. ஜனதா தளத்தின் மூத்த தலைவரான எம்.பி. பிரகாஷால், தேவையான எண்ணிக்கையில் எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை.

கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைவது, விந்திய மலைக்குத் தெற்கே அக் கட்சி முதல் முறையாகக் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதால், மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட வேண்டும் என்று சில காங்கிரஸôர் கூறுகின்றனர்.

வேறு சிலர் அதற்கு மாறாக வாதிடுகின்றனர். முதலாவதாக, பேரவையைக் கலைத்தால் உடனடியாகக் கண்டனங்கள் எழும். பாஜக -ம. ஜனதா தள கூட்டணிக்கு 129 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. குடியரசுத் தலைவர் முன் 125 எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்திவிட்டனர். குடியரசுத் தலைவர் ஆட்சியை கர்நாடகத்தில் பிரகடனம் செய்தபொழுதே சட்டப் பேரவையையும் கலைத்துவிட்டிருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

ஆனால் அப்பொழுது அதை பிரதமர் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பொம்மை வழக்கின் தீர்ப்பு, பிகார் அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்சினையில் இடதுசாரிகளுடனான உரசலை மனத்தில் கொண்டும், இந்த நேரத்தில் இன்னொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கருதியும் பிரதமர் அவ்வாறு முடிவுசெய்திருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், அரசியல் நோக்கங்களும் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைக்குமானால், அதற்கு அனுதாப ஆதரவு என்பது இனி இருக்க வாய்ப்பில்லை. தேவ கெüடா விதித்திருக்கும் நிபந்தனைகளால் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து, ஆட்சி சுமுகமாக நடைபெறுவதைக் கடினமாக்கிவிடும். எனவே, தேர்தல் இப்போது வந்தாலும் சரி, பிறகு வந்தாலும் சரி, பொறுத்திருப்பதன் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறது காங்கிரஸ் கட்சி.

—————————————————————————————————————————-

சந்தர்ப்பவாதமும் வாரிசு அரசியலும்

பொதுவாக, மன்னராட்சி மீதான மோகமும், அடிமைத்தன சிந்தனையும் படித்தவர்கள் மத்தியிலும் பரவலாகவே காணப்படுகிறது என்பதுதான் உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் உண்மை.

பிரிட்டன், பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பெயரளவிலாவது மன்னராட்சி முறை தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதும் பிரிட்டிஷ் மகாராணியின் தலைமைக்குத் தலைவணங்குவதாகப் பெயரளவில் சொல்லிக் கொள்கின்றன. இந்தியாவிலும் சரி, முன்னாள் மகாராஜாக்கள் மட்டுமல்ல, ஜமீன்தார்களும் பண்ணையார்களும் இப்போதுகூட அவரவர் இடங்களில் மரியாதைக்குரியவர்கள்தான். இவர்களில் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் வம்சாவளியாகத் தொடர்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது, தெற்கு ஆசியாவில் வாரிசு அரசியல் தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தியாவையே எடுத்துக்கொண்டால், அனைத்து மாவட்டங்களிலும், சொல்லப்போனால் தாலுகா வரையில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் குடும்பம் நிச்சயமாக நேரு குடும்பம் மட்டும்தான். அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்தியாவை ஒரு நாடாகப் பிணைத்து வைத்திருக்கும் பல விஷயங்களில் நேரு குடும்பத்தின் செல்வாக்கும் ஒன்று.

மன்னராட்சி வாரிசுகளுக்கும், இப்போதைய மக்களாட்சி வாரிசுகளுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அரச குடும்பத்தினர், அவர்கள் ஆண்ட நாட்டைத் தங்களது உரிமைக்கு உள்பட்ட சொத்து என்று கருதினார்கள். அதனால்தானோ என்னவோ, அரசர்களில் பலரும் தனது நாடும் மக்களும் செழிப்புடன் திகழ வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர். ஆனால் அரசியல் வாரிசுகள் அந்த அளவுக்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார்களா என்று கேட்டால், தயக்கம்தான் தலைதூக்குகிறது. அதற்குக் காரணம், எந்தவிதத் தியாகமும் செய்யாமல், உரிமையும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக அடைந்த பதவிகள் பொறுப்புணர்வையும் கடமையுணர்வையும் தருவதில்லை.

அரசியலை ஒரு வியாபாரம் அல்லது தொழில்போலக் கருதி தங்களது வாரிசுகளை கட்சியின்மீதும் ஆட்சியின்மீதும் திணிக்கும் தலைவர்கள், தங்களை மன்னர்களாகக் கற்பனை செய்து கொண்டு, தங்களது வாரிசுகளைத் தயார்படுத்துகின்றனர். அந்த வாரிசுகளுக்கு நாடாளும் திறமை இருக்கிறதா என்று யோசிப்பதில்லை. அதனால்தான், எல்லா வாரிசுகளாலும் அரசியலில் வெற்றி பெற முடிவதில்லை.

மக்களாட்சியில் ஒரு மிகப்பெரிய நன்மை உண்டு. மன்னராட்சியில் இருப்பதுபோல, இறைவனால் அனுப்பப்பட்டவன்தான் அரசன் என்கிற மனப்போக்கு இங்கே செல்லுபடியாகாது. மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாவிட்டால், என்னதான் திணித்தாலும் எந்த வாரிசாலும் தாக்குப்பிடிக்க முடியாது. தங்களை நிலைநிறுத்திக் கொண்ட வாரிசுகளைவிட, வந்த சுவடு தெரியாமல் காற்றோடு கலந்த வாரிசுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் ஆனாலும் திறமை மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதுதான் மக்களாட்சி மலர்ந்ததால் ஏற்பட்டிருக்கும் மகத்துவம். வாரிசு என்கிற அடையாளம் நுழைவுச்சீட்டாக இருக்க முடியுமே தவிர துருப்புச் சீட்டாக முடியாது.

அனுதாப அலையை சாதகமாக்கி அரசியல் லாபம்தேட வாரிசுகளைக் களமிறக்குவது என்பது தெற்கு ஆசியாவின் அத்தனை நாடுகளிலும் பலமுறை கையாளப்பட்ட யுக்திதான். அந்த வரிசையில் இப்போது பேநசீர் புட்டோவின் 19 வயது மகன் பிலாவலைக் களமிறக்கி இருக்கிறது பாகிஸ்தான் மக்கள் கட்சி. பிலாவல் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்பதை காலம்தான் கணிக்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். வாரிசுகளை முன்னிறுத்தி அனுதாபம் தேடும் சந்தர்ப்பவாதம் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. நிலையான வெற்றிக்கு உத்தரவாதம் திறமையே தவிர பரம்பரை பாத்தியதை அல்ல!

Posted in Asia, Belgium, Benazir, Bhutto, Congress, DMK, dynasty, Ediyurappa, Greed, India, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karnataka, Karnatata, Karnatka, Karuna, Karunagaran, Karunakaran, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kerala, Leaders, Maharaja, Monarchy, Money, Muraleetharan, Muralitharan, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Neerja, PAK, Pakistan, Politics, Portugal, Power, Raja, Spain, Throne, UK, Yediyurappa | 2 Comments »

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

Laloo, Vasundhara Raje, Jaswanth Singh – Dynasty Politics: Some Samples for Indian Monarchy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

வாரிசு மீன்கள்

லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.

Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Bhutan – M Manikandan: Requirement for Democratic Elections

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

பூடான்: தேவை மக்களாட்சி

எம். மணிகண்டன்

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துமே சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கியவையே. இந்த நாடுகள் பின்தங்கியிருப்பதற்கு முழுமையான மக்களாட்சிக் கொள்கையும், உயர்வான அரசியல் சட்டமும் இல்லாததே காரணம் எனலாம்.

இதற்கு அண்மைக்கால உதாரணமாக பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் ஆட்சியாளர்களால் அரசியல் சட்டம் முடக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். இலங்கையில் மோசமான பிரதிநிதித்துவக் கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. நேபாளத்தில் மக்களாட்சிக்கான அடிப்படை மாற்றங்கள் 1990-களிலேயே நடக்க ஆரம்பித்து விட்டாலும்கூட இன்றைக்கும் அங்கு அரசியல்சட்ட குளறுபடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மியான்மரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்களாட்சியே தெரியவில்லை. மாலத்தீவு மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தச் சூழலுக்கு அப்பாற்பட்டவை.

ஒவ்வொரு நாடும் இந்தியாவைப் பார்த்து அப்படியே பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயம், இந்தியாவின் அரசியல் சட்டம்தான். நாடாளுமன்ற நடைமுறைகள், மத்திய மாநில உறவுகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் நெகிழ்வுத் தன்மையுடன் வரையறுத்ததுபோல் வேறு எந்த நாட்டுச் சட்டமும் வரையறுக்கவில்லை. அவசரநிலைக் காலம் தவிர, மற்ற காலங்களில் இந்திய அரசியல் சட்டம் மக்களாட்சியைத் தாங்கிப் பிடித்துள்ளது.

இந்தியாவின் பேச்சை அப்படியே கேட்கும் அண்டை நாடுகள் நேபாளமும், பூடானும்; இந்த இரண்டு நாடுகளும் அருகே அமைந்திருப்பதால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன என்பது அயலுறவுக் கொள்கைகளை வகுப்பவர்கள் மத்தியில் நிலவும் கருத்து. இதில் நேபாளம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், நிதியுதவிகளைப் பெறுவதும் என இந்தியாவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அன்புக் “கட்டுப்பாட்டில்’ இருப்பது பூடான் மட்டுமே. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தாலும், இன்றும் பண்பாட்டை விட்டுக் கொடுக்காத நாடு. 90-களின் இறுதியில்தான் பூடானில் தொலைக்காட்சி மற்றும் இணைய சேவைக்கே அனுமதி கிடைத்தது. பூடான் மன்னர் கடவுளாகப் போற்றப்படுகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகிய 4-வது மன்னர் ஜிக்மே சியாங் வாங்சுக் மக்களாட்சிக்கான வழித்தடங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். பதவிக் காலம் முடியும்வரை மன்னரை யாரும் கேள்வியே கேட்க முடியாது என்ற நிலையை மாற்றும் வகையில் நாடாளுமன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான முன்னுரையை எழுதினார்.

நாடாளுமன்றம் நினைத்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் மன்னரையே நீக்க முடியும் என்பதுதான் ஜிக்மே சியாங் செய்த அதிரடி நடவடிக்கை.

அவருக்குப் பின் மன்னராகப் பதவியேற்ற அவரது மகன் ஜிக்மே கேசர் வாங்சுக்கும் தந்தையின் வழியிலேயே மக்களாட்சிக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். அதன் ஒருகட்டமாக கடந்த மே மாத இறுதியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு இடைக்கால அரசின் பிரதமர் கூடப் பொறுப்பேற்று விட்டார்.

இங்கு வேடிக்கை என்னவெனில் இங்குள்ள மக்களுக்கு மக்களாட்சி, தேர்தல் பற்றி கொஞ்சமும் தெரியாமல் இருப்பதுதான். தேர்தல் நடைமுறைகள் பற்றி அரசே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாதிரித் தேர்தலில்கூட மக்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் நடத்துவதற்குள் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

உங்களுக்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், சமூக மாற்றங்களும் தேவையா என்று பூடானில் யாரையாவது கேட்டால், மன்னராட்சியில் எங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். மக்களாட்சியை மக்களே விரும்பவில்லை என்பது இந்த நாட்டைப் பொருத்தவரை உண்மைதான் என்றாலும், இது அறியாமைதான்.

சுமார் 23 லட்சம் மக்கள்தொகை கொண்ட பூடானில் வெளியுறவுக் கொள்கை ஒன்றும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவே கையாண்டு வருவதாகக் குற்றச்சாட்டு வேறு. சீனா திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, பாதுகாப்புக்காக இந்தியாவிடம் ஒட்டிக் கொண்டது பூடான். அந்நாட்டுக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை என்பதும் நிஜம்தான்.

அமெரிக்க-பூடான் உறவைக் கண்காணிக்கும் பணியைக் கூட இந்தியாதான் செய்துவருகிறது. பூடான்-இந்தியா இடையே பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்பது வேறு விஷயம். மக்களாட்சி மலர்ந்தால் இந்நிலை நிச்சயம் மாறிவிடும்.

கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்தற்காக மக்களாட்சியை மறுப்பது நியாயமில்லை. எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மேற்கத்திய நாகரிகம் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் எந்த ஆசிய நாடும் இதுவரை வெற்றி பெறவில்லை. மக்களாட்சியை உருவாக்கி அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவது ஒன்றே, இந்தக் காலகட்டத்தில் அறிவுபூர்வமான செயலாக இருக்கும்.

Posted in Bhutan, Democracy, Elections, Freedom, Military, Monarchy, Polls, Republic, Rule, SAARC | Leave a Comment »

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Nepal: ICRC seeks to clarify the fate of more than 800 missing persons

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.

மேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Posted in armed conflict, Clan, Communism, Communist, Democracy, Dictatorship, Government, ICRC, Insurgency, King Gyanendra, Lockup deaths, Maoists, missing persons, Monarchy, Nepal, political disappearances, Rebels, Red Cross, RTI, security forces | Leave a Comment »