Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nakkeeran’ Category

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

சென்னை, பிப்.12-

டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார்.

ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது.

போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது.

அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார்.

கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார்.

மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது.

முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:-

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார்.

வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார்.

மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார்.

மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார்.

அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார்.

தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார்.

ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார்.

இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார்.

தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி

தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.

வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது.

ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன்.

டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார்.

ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார்.

அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர்.

தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது.

இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது.

நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம்.

ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர்.

4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார்.

கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர்.

“ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார்.

ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா?

என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள்.

அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள்.

அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார்.

இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன்.

நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்.

விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார்.

டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார்

சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார்.

பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார்.

புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர்.

டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார்.

2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன்

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர்.

மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர்.

அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர்.

இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர்.

இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம்.

சூப்பர்ர்ர்ர் கேள்வி…

முன் ஜாமீன்:

இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,

உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள்

தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம்.

அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம்.

‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம்.

எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா.

சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர்.

இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார்.

இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார்.

அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா.

Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments »