Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Laloo Prasad Yadav’ Category

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News

2008022752331701.jpgஇந்திய ரயில்வே பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே

குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.

மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.

ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

 

எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

2008022752680101.jpgஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்

லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.


தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்2008022752530601.jpgபுது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.

2008022752600701.jpgபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)

7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)

8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)

9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)

2008022756941201.jpg10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)

14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை

2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை

3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்

4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை

நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு

புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

022708_07.jpgபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’

பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.

2008022757960101.jpg“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.

நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.

—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்

புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.

அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.

பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.

ரூ.2.50 லட்சம் கோடி

முதலீடு

ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.

எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.

11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.

நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை

கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை

பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை

சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”

இதுதான் அந்தக் கவிதை.

—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்

ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை

சரக்கு கட்டணம் உயர்வு இல்லை

பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்

இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை

தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்

முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்

காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.

ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல

சதவீத கட்டண சலுகை

—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்

உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்

புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.

புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.

பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’

இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.

—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு

புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.

எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.

தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.

“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.

மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.

“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).

மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).

தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.

காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.

—————————————————————————————————————————————-

டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்

புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:

ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?

சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.

காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.

இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.

ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.

மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.

—————————————————————————————————————————————-

AN EYE TO THE HUSTINGS

CUTS

FREIGHT

5% Petrol/diesel
14% Fly ash
6% Traffic to north-east
5% 2nd class fares for tickets >Rs 50
Re 1 Fares for tickets <Rs 50
7% AC 1st class
4% AC 2nd class
The Pay Commission’s impact
Operating ratio
07-08* 76.3
08-09** 81.4

Cash surplus

07-08* Rs 25,065 cr
08-09** Rs 24,782 cr
* Revised estimate ** Budget Estimate
 
 

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Laloo, Vasundhara Raje, Jaswanth Singh – Dynasty Politics: Some Samples for Indian Monarchy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

வாரிசு மீன்கள்

லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.

Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »

Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

ரயில்வே பட்ஜெட் 2007: தமிழக ஒதுக்கீடு ரூ.1232 கோடி – சேலம் கோட்டத்துக்கு ரூ.3 கோடி

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்தின் ரயில் திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவினங்களுக்கு ரூ.1232 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடான

  • ரூ.457 கோடியுடன் சேர்த்து, மொத்தம்
  • தமிழகத்துக்குக் கிடைத்தது ரூ.633 கோடி.
  • இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீடு மட்டும் ரூ.706 கோடி.
  • அதாவது, திட்டங்களுக்கு மட்டும் ரூ.249 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், திட்டம் சாரா செலவினங்களுக்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்தத்தில் ரூ.1232.77 கோடி தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது.

இதில்,

  • புதிய பாதைகள் அமைக்க ரூ.40 கோடி,
  • அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.595 கோடி,
  • இரட்டைப் பாதை அமைக்க ரூ.195 கோடி,
  • போக்குவரத்து விளக்கு, பணிமனை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.45 கோடி,
  • சாலைப் பாதுகாப்பு (லெவல் கிராஸிங்) ரூ.38 கோடி,
  • ரயில்வேயின் சாலை மேம்பாலம், சாலை கீழ்பாலம் கட்ட ரூ.40 கோடி,
  • இருப்புப் பாதை சீரமைக்க ரூ.152 கோடி,
  • புதிய மற்றும் நடைமுறையில் உள்ள பாலப் பணிகளுக்கு ரூ.5 கோடி,
  • சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்கு ரூ.65 கோடி,
  • பயணிகள் வசதிக்கு ரூ.24 கோடி,
  • மின்மயமாக்குதல் ரூ.5 கோடி,
  • சிறப்பு ரயில்வே நிதியின் கீழ் ரூ.27 கோடி ஆகியவை இதில் அடங்கும்.
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேலம் கோட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இக் கோட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று வேலு தெரிவித்தார்.

அகலப்பாதையாக மாற்றும் பணிகளுக்காக நாடு முழுவதும் ரூ.2400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தென்னக ரயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.485 கோடி.

தமிழகத்தில் 4 புதிய ரயில் தடங்களுக்கு ஆய்வு நடக்கும்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: தமிழகத்தில் நான்கு புதிய ரயில் வழித்தடங்களுக்கான பூர்வாங்க சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மொரப்பூர் -தருமபுரி,
  • மதுரை -காரைக்குடி,
  • நீடாமங்கலம் -புதுக்கோட்டை,
  • திண்டுக்கல் -குமுளி (போடிநாயக்கனூர் வழி) ஆகியவை அந்த நான்கு புதிய வழித்தடங்கள்.

இத் திட்டங்களுக்கான ஆய்வுகள் இந்த ஆண்டிலேயே, விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.
மின்மயமாக்கல் திட்டத்தில்,

  • ஈரோடு -எர்ணாகுளம் (ரூ.10 லட்சம்),
  • தாம்பரம் -செங்கல்பட்டு (ரூ.5.98 கோடி),
  • விழுப்புரம் -திருச்சி (ரூ.5 கோடி) ஆகிய மார்க்கங்களுக்கு மொத்தம் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் -பொள்ளாச்சி -பாலக்காடு மற்றும்
  • பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் போத்தனூர் -கோவை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • விழுப்புரம் -காட்பாடி மார்க்கத்தில் வேலூர் -திருவண்ணாமலை இடையிலான அகலப்பாதைப் பணிக்கு ரூ.84 கோடி,
  • திருச்சி -மானாமதுரை மார்க்கத்தில் காரைக்குடி -மானாமதுரை அகலப்பாதைக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது.
  • திருச்சி -நாகூர் -காரைக்கால் மார்க்கத்தில் திருவாரூர் -நாகூர் அகலப்பாதைக்கு ரூ.30 கோடி,
  • மதுரை -திண்டுக்கல் அகலப்பாதைக்கு ரூ.62 கோடி அளிக்கப்படும்.

தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்கள்

நமது சிறப்பு நிருபர்

புதுதில்லி, பிப். 27: இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய ரயில் திட்டங்களும், 5 புதிய ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • மதுரை வழியாக கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்,
  • யஷ்வந்த்புரம் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ்,
  • சென்னை எழும்பூர் -நாகூர் எக்ஸ்பிரஸ்,
  • எழும்பூர் -ராமேஸ்வரம் (வாரம் 6 முறை),
  • புவனேஸ்வரம் -ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதியவை.

இதில், கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தவிர மற்ற ரயில்கள், மீட்டர்கேஜ் பாதை அகலப்பாதையாக்கும் பணி முடிந்ததும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தற்போதைக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும். கோவை -மதுரை இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டதும் அறிவிக்கப்பட்ட பாதையில் இயங்கும் என ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வரையிலான மீட்டர்கேஜ் பாதை, மார்ச் 31-ம் தேதிக்குள் அகலப்பாதையாக மாற்றப்படும். நாகூர் பாதை இந்த ஆண்டு இறுதியில் அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிடும் என வேலு தெரிவித்தார்.

கோட்டயம் -திருவனந்தபுரம் இடையிலான பாசஞ்சர் ரயில், நாகர்கோவில் வரை நீடிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நான்கு புதிய திட்டங்கள் ரூ.41 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

  • கரூர் -சேலம் (ரூ.20 கோடி),
  • பெங்களூர் -சத்தியமங்கலம் (1 கோடி),
  • திண்டிவனம் -செஞ்சி -திருவண்ணாமலை (10 கோடி),
  • திண்டிவனம் -நகரி (10 கோடி) ஆகியவை இதில் அடங்கும்.

ரயில்வே மேம்பாலங்களைப் பொருத்தவரை, நாடு முழுவதும் 93 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 38 மேம்பாலங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக தமிழகத்துக்குக் கிடைத்திருப்பதாக வேலு தெரிவித்தார்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி வசதியில்லாத தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் 4% கட்டணம் குறைப்பு

சென்னை, பிப். 27: வரும் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏசி செய்யப்படாத (நான்-ஏசி), தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் (அனைத்து காலங்களிலும்) 4 சதவீதம் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு (81 படுக்கை), ஏசி சேர் கார் (102 படுக்கை) ஆகிய பெட்டிகளில் மட்டும் விழாக்காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்பட உள்ளது.

பாண்டியன், அனந்தபுரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால், ரயில்களுக்கு ரயில் பண்டிகைக் காலம், சாதாரண காலத்தை நிர்ணயிப்பதில் வேறுபாடு தொடர்கிறது).

கட்டணம் குறைப்பு சலுகை யாருக்கு?: சாதாரண பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் (நான்-சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள்) 2-ம் வகுப்பு கட்டணமும் ஒரு நபருக்கு தலா ரூ. 1 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இச் சலுகை ரயில் நிலையங்களில் தினமும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி (முன்பதிவு செய்யாமல்) பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பண்டிகை காலத்தின்போது கொடுக்கப்படும் சலுகைகள் முக்கிய ரயில்களில் மட்டும் ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும்.

இந்த ரயில்களின் பட்டியல் குறித்து பின்னர் வெளியிடப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (முறையே தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டி, ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, முதல் வகுப்பு) உள்ள தற்போதைய கட்டண விவரம் (ரூபாயில்):

தில்லி: 537, 3609, 2071, 1455. (ஏழைகள் ரதம் ரயிலில் கட்டணம் மாற்றம் இல்லை).

மும்பை: 405, 2660, 1534, 1084.

கோல்கத்தா: 469, 3120, 1794, 1264.

ஐதராபாத்: 301, 1915, 1113, 792.

புனே: 377, 2459, 1421, 1005.

பெங்களூர்: 195, 1176, 684, 493.

சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் கட்டண விவரம்: கன்னியாகுமரி: 309, 1970, 1444, 910, 814.

நாகர்கோவில்: 304, 1933, 1123, 893, 899.

தூத்துக்குடி: 286, 1805, 1051, 000, 749.

நெல்லை: 286, 000, 1051, 835, 749.

திருவனந்தபுரம்: 342, 2209, 1279, 000, 907.

மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில்): 235, 1460, 844, 680, 604.

சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் ரூ. 479; இரண்டாம் வகுப்பு சேர் கார் ரூ. 142.

திருச்சி: 166, 1069, 617, 491, 437.

கோவை: 235, 1460, 844, 000, 604.

சேலம்: 166 (2-ம் வகுப்பு அமர்ந்து செல்லும் இருக்கை வசதி ரூ. 101 மட்டும்) 1061, 617, 491, 437. சென்னை-சேலம் செல்லும் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி சேர் கார் ரூ. 372, 2-ம் வகுப்பு சேர் கார் ரூ. 111 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதர கட்டணம் ரூ.2 குறைப்பு: சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண 2-ம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான இதர கட்டணங்கள் (எக்ஸ்ட்ரா) ரூ. 10-ல் இருந்து ரூ. 8 ஆக குறைக்கப்படும்.

புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி: சென்னையில் புறநகர் மின் ரயில்களில் ஏசி பெட்டி இணைக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

Dinamani Editorial
லாலுவின் சாதனை

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தொழில்துறையினர் மட்டுமன்றி பொதுமக்களில் பலதரப்பினரும் வரவேற்கத்தக்க ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. உயர்வகுப்பு பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்படையாகச் சொல்வதானால் லாலுவின் ரயில்வே பட்ஜெட் நாட்டில் தற்போதுள்ள பணவீக்கப் போக்கை மட்டுப்படுத்துகின்ற அளவில் உள்ளது.

லாலு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது இது நான்காவது தடவையாகும். கடந்த மூன்று ரயில்வே பட்ஜெட்டுகளைவிட இந்தப் பட்ஜெட்டில் சில கொள்கைத் திட்டங்கள் தென்படுகின்றன. பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள மாதங்கள், பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள மாதங்கள் என வகை பிரிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் விமான நிறுவனங்கள் இவ்விதம் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களில் கட்டணச் சலுகைகளை அறிவிப்பது உண்டு. ரயில்வே அமைச்சர் அத்தகைய கட்டணச் சலுகை முறையை அமல்படுத்தியுள்ளார். இது இந்திய ரயில்வேயில் இதுவரை இல்லாத புதிய ஏற்பாடாகும்.

உயர்வகுப்புக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் துறையில் நகரங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிடமிருந்து எழுந்துள்ள போட்டியைச் சமாளிக்க ரயில்வேயின் இக் கட்டணக் குறைப்பு உதவும்.

ரயிலில் நீண்டதூரப் பயணங்களுக்கு டிக்கெட் வாங்குவதென்றால் ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்த நிலைமை இதுவரை இருந்து வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் வசதி இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுவிஷயத்தில் நவீனத் தொழில்நுட்ப முறையை ரயில்வே பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இவையெல்லாம் நடுத்தர வகுப்பினருக்குப் பயனுள்ளவை.

புதிய ரயில்களில் முன்பதிவு தேவைப்படாத ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இது சாதாரண மக்களுக்கும் திடீர்ப் பயணம் மேற்கொள்வோருக்கும் பெரிதும் உதவும். காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச் செல்வோருக்குக் கூடுதல் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இவை குளிர்சாதன வசதி கொண்டவையாக இருந்தால் மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

அமைச்சர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பை வரவழைத்துக் கொள்ளாதவகையில் படிப்படியாகத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார். இது சரியான அணுகுமுறையே. ரயில்வே இலாகா நடப்பு நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி லாபம் சம்பாதிக்க இருக்கிறது என்றால் அதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம். இதே ரயில்வே இலாகா முன்பு ஒருசமயம் மத்திய அரசுக்கு வழக்கமான ஈவுத் தொகையைக்கூட வழங்க முடியாமல் திண்டாடியது உண்டு.

கடந்த காலங்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் ஆகிறார் என்றால் அவர் தமது மாநிலம் அதிக நன்மையை அடைகின்ற வகையில் பல புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த விரும்பத்தகாத போக்குக்கு இலக்கு ஆகாத ரயில்வே அமைச்சர் என்று லாலுவைக் குறிப்பிடலாம்.

கடந்தகாலத்தில் பல்வேறு ரயில்வே அமைச்சர்களும் அறிவித்த புதிய ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 38 ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் ஒரு கமிட்டி கூறியுள்ளது. அமைச்சர் லாலு பிரசாத் இதில் கவனம் செலுத்தி இவற்றை நிறைவேற்றி முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியம்.

தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இல்லாத ரயில் பெட்டிகளை வடிவமைத்தல், விபத்து என்றால் சுக்குநூறாக நொறுங்கிவிடாத ரயில் பெட்டிகளைத் தயாரித்தல் ஆகியவற்றில் நாம் இன்னும் போதிய கவனம் செலுத்தவில்லை. இத்தகைய ரயில் பெட்டிகளைத் தயாரிக்கச் செலவு அதிகமாகும். எனினும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி விரைவில் இதுவிஷயத்தில் லாலு கவனம் செலுத்த வேண்டும்.

மன்னார்குடி – நீடாமங்கலம்: இடையே ரயில் விட மத்திய அரசு முடிவு

சென்னை, பிப். 28 : மன்னார்குடி – நீடாமங்கலம் இடையே மீண்டும் ரயில் பாதை அமைத்து ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி. ஆர். பாலுவுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு கடிதம் அனுப்பியுள்ளார்.

“”நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கும் அங்கிருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும்.

திருக்குவளை வழியாக…: “”மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்க, வேளாங்கண்ணி – திருத்துறைப்பூண்டி இடையே திருக்குவளை, எட்டுக்குடி வழியாக புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது” என்று அக் கடிதத்தில் வேலு குறிப்பிட்டுள்ளார்.

ரெயில்வே பட்ஜெட்: முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது; மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை

புதுடெல்லி, பிப். 26-

2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.

பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.

ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட “டபுள் டெக்கர் ரெயில்” விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.

இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.

முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.

தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.

தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.

டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.

பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.

வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.

ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.

குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.

ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.

அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.

அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.

உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-

நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.

ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்

ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.

கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.

ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.

ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-

1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)

2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)

3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)

4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)

5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)

6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)

7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)

8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)

ரெயில் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்

மத்தியமந்திரி லல்லுபிர சாத்தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.

* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.

*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.

* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.

*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.

* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.

* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.

* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.

* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.

* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.

*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.

*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.

*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.

* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.

* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.

*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.

*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.

*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.

*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.

*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.

* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.

* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.

* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.

2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.

=====================================================================
பாதுகாப்புக்கு 8000 பேர் நியமனம்: ரயில்வே இணை அமைச்சர் வேலு

வேலூர், மார்ச் 19: ரயில்வே துறையில் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் வகையில் 8 ஆயிரம் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தெரிவித்தார்.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 334 ரயில் நிலையங்கள் முன்மாதிரி நிலையங்களாக மாற்றப்படும் என்றார் அவர்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அமைச்சர், நிருபர்களிடம் கூறியதாவது:

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பாதை பணிகளும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை பணிகளும் நடந்து வருகின்றன.

வேலூர்-விழுப்புரம் அகல ரயில் பாதை பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தேறி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இப்பணி நிறைவடையும்.

திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதை ஆய்வுப் பணிகளுக்காக தலா ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 71 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம்-திருச்சி இடையிலான 167 கி.மீட்டர் தூரத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது திருச்சி-மதுரை இடையிலான 147 கி.மீட்டர் தூரத்தை மின்மயமாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2006-07-ம் ஆண்டில் 104 மேம்பாலங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 33 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நாட்டில் 93 மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 38 மேம்பாலங்கள் தமிழகத்தில் வருகின்றன என்றார் வேலு.
===================================================================================================================
கலாசார மையமாகிறது வேலூர் கோட்டை!: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில்

சென்னை, மார்ச் 19: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை இணைத்து சுற்றுலா சொகுசு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

சிப்பாய் கலகம் நடந்த வேலூர் கோட்டையை நாட்டின் மிகப் பெரிய கலாசார மையமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காந்தியடிகளின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவில், அறப்போரில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படக் கண்காட்சியை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் அரிய புகைப்படங்களை எனது துறையின் மூலம் பல்வேறு மாநில மக்களும் அறியும் வகையில் கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150-வது ஆண்டு விழா விரைவில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், டெக்கான் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா சொகுசு ரயில் சேவை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை ரயில்வே துறையும், சுற்றுலா துறையும் இணைந்து நடத்தும்.

நடப்பு ஆண்டில் 300 மண்டலங்களில் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது என்றார் அம்பிகா சோனி.

—————————————————————————————-

ரயில் சேவைகள் போதாது!

ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம்.

ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது.

இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் “டவுன்-பஸ்’ இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கூட எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்படுவது அவர்களின் விழிப்புணர்வுக்குச் சான்று.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, வேலூர், திருப்பத்தூர், பெங்களூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய, இருக்கை வசதி மட்டுமே உள்ள ரயில்களைப் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குவதன் மூலம், சாலைப் போக்குவரத்து நெரிசலையும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் கணிசமாகக் குறைக்க முடியும். விபத்துகளும் பெரிய அளவில் குறைய வாய்ப்புண்டு. அதற்கு இந்த ஊர்களுக்கு இடையில் இரட்டை ரயில் பாதைகளை அமைப்பதும் அவற்றை மின்மயமாக்குவதும் அவசியம். இது எரிபொருள் (டீசல்) செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தும். சரக்கு போக்குவரத்துக்கும் கை கொடுக்கும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைப்பதால் நமது நாட்டு அன்னியச் செலாவணி விரயமாவது தடுக்கப்படும்.

முன்பதிவு செய்யாத இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளும் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாததாலும், அவசரத் தேவையாலும், அறியாமையாலும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே துறை உணர வேண்டும். அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தக் கூடாது.

முன்பதிவு செய்யாத ரயில் பெட்டியில் பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், மனநிலை சரியில்லாதவர்கள், குடிகாரர்கள், பெண்களைச் சீண்டுவோர், ஏறும்வழி, நடக்கும் வழி ஆகியவற்றில் அதிக சுமைகளை வைக்கும் அடாவடி சிறு வியாபாரிகள், அரிசி கடத்துவோர், சீசன் டிக்கெட் பயணிகள், ரயில்வே பாஸ் வைத்துள்ளவர்கள் (ஊழியர்களும் சேர்ந்துதான்), இளநீர், வேர்க்கடலை, முந்திரி, சப்போட்டா, மாம்பழம், மாங்காய் போன்றவற்றை விற்போர் என்று ஒரு பெரிய இம்சைப் பட்டாளமே ஏறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

கழிப்பறை தண்ணீரின்றி, சுத்தப்படுத்தாமல் நாறினாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியானால்- அது எவ்வளவு தூரம் போகும் ரயிலாக இருந்தாலும் வழியில் அதற்கு கதி மோட்சமே கிடையாது. விபரீதமாக ஏதாவது நடந்து சங்கிலியைப் பிடித்து இழுத்தால் மட்டுமே அந்தப் பெட்டி இருப்பதையே அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் கண்டுகொள்கிறார்கள். இவையெல்லாம் களையப்பட்டால் ரயில் பயணங்கள் சுகமாவதுடன், அரசுக்குப் பணம் கொழிக்கும் கற்பக விருட்சமாக மேலும் வளம் பெறும்.

நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!

Posted in 2007, 2007-08, AC, Accidents, Ambika Soni, Analysis, Bridges, broadgauge, Budget, Capex, Capital Expenses, Cashflow, Commerce, Dinamani, Employment, Ettukkudi, Ettukudi, Expenditure, Expenses, Express, Features, Finance, First Class, Flyovers, Freight, Guides, Income, Information, Initiatives, Insights, Jobs, Karunanidhi, Keypoints, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Mannargudi, Meter gauge, Needamangalam, Notes, Opinion, passenger, Pattukkottai, Pattukottai, Planning, Profits, Railway, Railways, Rates, Revenues, Safety, Satyagraha, Schemes, Second AC, Sleeper, Statement, Takeaways, Tamil Nadu, Thirukkuvalai, Thirukuvalai, Thiruthuraipoondi, Thiruthuraippoondi, Three Tier, Tourism, Tourist, TR Balu, Train, Trains, Velaankanni, Velanganni, Velankanni, Vellore, Velu, Visit, Visitor | 7 Comments »

Lalu Prasad’s in-laws caught taking free ride

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்

பாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.

டிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.

இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.

பிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்வதற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.

சாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

டிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு

புதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

லாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

எனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகைகள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.

முன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை  நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.

Posted in abuse, AC, air-conditioned, Bihar, Cabinet, Champak Kranthi, Champak Kranti, Chapra, Cheat, Chhapra, Chivaan, Chivan, Chiwaan, Chiwan, CM, Corruption, East Central Railways, First Class, Free, Hajipur, in-laws, Indian Railways, kickbacks, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Minister, Mussafarpur, Mussafurpur, New Delhi, parliament, Power, Rabri Devi, Railways, Shivprasad Chowdhry, station master, Ticket Checker, Ticketless, Train, Travel | Leave a Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »

North Block nixes Lalu’s plan for Rae Bareli

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006

ரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை

இந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.

ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.

ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

Posted in Ambathur, Business, Cabinet, Chapra, Coach, Economy, Factory, Finance, Five-Year Plan, Freight, ICF, India, Industry, Kapurthala, Laloo Prasad Yadav, Lalu, locomotives, Lok Sabha, Manufacturing, MP, North Block, parliament, passenger, Politics, Punjab, Rae Bareli, Railways, Sonia Gandhi, Trains | Leave a Comment »

Laloo Prasad Yadav – For Prime Minister of India (Dinamani Editorial)

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

லாலுவின் ஆசை

நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்பது தமது ஆசை என மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார். அரசியலில் ஈடுபட்டு பதவி பெற்ற பின்னர் பதவிப்படிகளில் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதே எந்த ஓர் அரசியல்வாதியின் விருப்பமாக இருக்கும். குறுக்குவழியைப் பின்பற்றாதவரை இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆகவே லாலுவின் ஆசை பற்றி குற்றம் சொல்ல முடியாது. மத்திய அரசில் ஒரு பிரதமரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லாலு எப்படி இவ்விதம் சொல்லத் துணிந்தார் என்று வேண்டுமானால் வியக்கலாம். அப்படிப்பார்த்தால் மத்திய அரசில் பதவி வகிப்பவர்களில் யாருக்குமே இப்போது அல்லது கடந்தகாலத்தில் பிரதமராவதற்கு ஆசை இருந்தது கிடையாது எனச் சொல்ல முடியாது. 1984-ல் இந்திரா காந்தி காலமானபோது, பிரணப் முகர்ஜி தாம் அடுத்து பிரதமராக்கப்படலாம் என்று எதிர்பார்த்தவரே. பவார், அர்ஜுன் சிங் ஆகியோரும் ஒருகாலகட்டத்தில் பிரதமர் பதவியை விரும்பியவர்களே. மற்றவர்களுடன் ஒப்பிட்டால் லாலு பகிரங்கமாகத் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்போது மத்தியில் ஆள்வது கூட்டணி அரசே. ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துமேயானால் அந்த அரசில் அங்கம் வகிக்கிற எவரும் தமக்குப் பிரதமர் பதவி மீது ஆசையுள்ளதாகப் பகிரங்கமாகக் கூற மாட்டார். அப்படிக் கூற முற்பட்டால் தாம் ஓரங்கட்டப்படலாம் அல்லது பதவியிலிருந்தே விலக்கப்படலாம் என்பதை அவர் அறிவார். பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்தகாலத்தில் இப்படி நடந்தது உண்டு. இந்திரா காந்தி அரசில் பிரணப் முகர்ஜி முக்கியப் பதவி வகித்தவர். இந்திராவைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானபோது பிரணப் முகர்ஜிக்குப் பதவி எதுவும் அளிக்காமல் ஒதுக்கி வைத்ததையும் குறிப்பிடலாம். ஆட்சித் தலைமையில் உள்ளவர் ஒருபோதும் தமக்குப் போட்டியாக மற்றவர் கிளம்புவதை அனுமதிப்பதில்லை.

ஆனால் தமக்குப் பிரதமராவதற்கு ஆசை உள்ளதாக லாலு கூறியதைத் தொடர்ந்து அவர் பதவி இழக்கின்ற ஆபத்து எதுவும் கிடையாது எனலாம். ஏனெனில் இப்போது நடப்பது கூட்டணி அரசு. லாலு கட்சியின் ஆதரவின்றி மத்திய அரசு நீடிக்க இயலாது. தவிரவும் பிரதமராவதற்கு ஆசைப்படுவதாகத்தான் லாலு பிரசாத் கூறியுள்ளாரே தவிர அப் பதவிக்குக் குறி வைத்துள்ளதாகச் சொல்லவில்லை.

பிரதமர் பதவிக்கென தனித் தகுதி எதுவும் கிடையாது. பிரதமர் பதவிக்கு உரியவர் ஏற்கெனவே மாநில முதல்வராக, மத்திய அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அவ்விதத் தகுதிகள் லாலுவுக்கு உண்டு.

ரயில்வே அமைச்சர் என்ற முறையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார். நாட்டில் நிர்வாகவியல் படிப்பைச் சொல்லிக் கொடுக்கும் உயர் கல்வி அமைப்புகள் அவரது நிர்வாகத் திறனை வியந்து பாராட்டியுள்ளதைக் குறிப்பிடலாம். எனினும் பிரதமர் ஆவதற்கு முன்அனுபவம் அவசியம் என்றும் சொல்ல முடியாது. ராஜீவ் பிரதமரானபோது அவர் முன்அனுபவம் எதையும் பெற்றிருக்கவில்லை. தாங்கள் எதிர்பார்க்காமலேயே பிரதமர் ஆனவர்களும் உண்டு. தேவெ கௌட முதல்வர் பதவியிலிருந்து இவ்விதம் தில்லிக்கு இழுத்து வரப்பட்டவரே. ஐ.கே. குஜ்ராலுக்கும் இது பொருந்தும். அதேசமயத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய பிரதமர்களும் உண்டு. லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ் இப்படிப்பட்ட தலைவர்கள். நினைத்தால் பிரதமராகியிருக்கலாம் என்ற தலைவரும் உண்டு. அவர்தான் காமராஜர்.

இவை ஒருபுறமிருக்க, லாலு பிரசாத் யாதவ் நாட்டின் மற்ற பல தலைவர்களைவிட அலாதியானவர். அவரிடம் அலாதியான திறமைகளும் உண்டு. பிரதமர் பதவிக்கு வருகிற ஒருவருக்கு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாகத் தமது தலைமையை, தமது பதவியைக் காத்துக் கொள்கின்ற திறமை மிகவும் தேவை. அது லாலு பிரசாத்திடம் நிறையவே இருப்பதாகக் கூறலாம்.

Posted in Ajun Singh, Cabinet, India, Laloo Prasad Yadav, Lalu, Minister, PM, Pranab Mukherjee, Prime Minister, Railways, Sharad Pawar | Leave a Comment »

Laloo tries unsuccessfully to upset Anbumani Ramadoss

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு

புது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.

ஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.

அன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

சாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வழங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை? அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா?’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.

அதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.

அந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

Posted in Anbumani, Cabinet, Dengue, Laloo Prasad Yadav, Lalu, Ministers, Ministry, PMK, Politics, Railways, Ramadoss, Reservations | Leave a Comment »