Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Law’

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Attorneys threaten to paralyse courts, besiege parliament: Top lawyers Anand & Khan debarred for bribing witness: Guilty of contempt – BMW hit-and-run expose verdict: Bar associations, Lawyers on strike, protest

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2008

நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை

இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.

புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.

அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

TN handloom minister NKKP Raja in property row: Victims charge DMK Cabinet holder for abduction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2008


அமைச்சர் தூண்டுதலால் கடத்தப்பட்டதாக புகார்:
3 பேர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்

சென்னை, ஜுலை.30-

அமைச்சரின் தூண்டுதலால் 3 பேர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்படும் 3 பேரும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடத்தல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பள்ளிக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் கேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். 10 ஏக்கர் நிலத்தை பெறுவதற்காக தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர் ஒருவரை கடத்தி சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.

கைத்தறித்துறை அமைச்சரின் ஆட்களால் 3 பேரும் கடத்தப்பட்டதாகவும், அவர்களை மீட்டு, ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டில் ஆஜர்

கடத்தப்பட்டதாக கூறப்படும் பழனிச்சாமி, மலர்விழி, சிவபாலன் ஆகியோர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் நீதிபதிகள் ரகசிய விசாரணை நடத்தினார்கள். பழனிச்சாமியும், மலர் விழியும், தங்கள் உறவினர் ஜெகநாதன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார் என்றும், அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உதவி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் ஆஜரான சிவபாலனை வீட்டிற்கு செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். இதே போன்று இன்னொருவர் கடத்தப்பட்டதாக இளங்கோவன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா இன்னும் நோட்டீசு பெறவில்லை என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தங்களை விடுவிக்கும்போது, இந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று குண்டர்கள் மிரட்டியதாக மலர்விழியும், பழனிச்சாமியும் மனு ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

நிலத்துக்காக 3 பேர் கடத்தப்பட்டார்களா?
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜுலை.26-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கேபியஸ் கார்பஸ் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மாமனார் மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ஒருவரும், அவருடைய ஆட்களும் கேட்டு மிரட்டி வந்தார்கள்.

நிலத்தை விற்க சம்மதிக்காததால், எனது மாமனார், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரையும், அமைச்சரின் ஆட்கள் கடத்தி சென்று சட்டவிரோதமாக எழுதி வாங்க மிரட்டி வருகிறார்கள். எனது மாமனாரின் தம்பியையும் கடத்த முயற்சித்து வருகிறார்கள். சட்டவிரோத பிடியில் இருக்கும் 3 பேரையும் தேடி கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சொக்கலிங்கம், வெங்கட்ராமன் ஆகியோர் விசாரித்தனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். போலீஸ் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Bhutanese temple thieves get life

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

பூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை

பூட்டானில் ஒரு புத்த மடாலயம்
பூட்டானில் ஒரு புத்த மடாலயம்

இமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.

செல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.

இந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.

வெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.

Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

N Vittal – Indian Justice System Reformations: Law & Order

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

நீதித்துறையின் மறுநிர்மாணம்!

என். விட்டல்

அரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.

தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.

அரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.

1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.

இப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.

ஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.

சட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.

விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும்? அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.

நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.

தாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.

வழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.

நம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.

பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.

நீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.

நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.

தற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.

அடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.

இந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.

அடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri lanka: Ambarai District – Two policemen murdered

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

அம்பாறையில் இரு போலீசார் கொலை

அம்பாறை நகர்
அம்பாறை நகர்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அற்புதராஜுக்கு நன்றி!

அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?

கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.

அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.

இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Concern after Brazil loses environment minister: Lawlessness mars Amazon dreams

Posted by Snapjudge மேல் மே 15, 2008

பொருள் தேடும் மாற்று வழிகள் மக்களுக்கு இருந்தால்தான், அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுவது நிற்கும்: பிரேசில் அமைச்சர்

காடுகள் எரிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்படுகின்றன

அமேசான் மழைக்காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பிரேசில் திட்டமிடல் அமைச்சர் , ரொபெர்ட்டோ மங்கபெய்ரா உங்கர், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புக்கள் தரப்பட்டால் மட்டுமே காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படமுடியும், என்று கூறியுள்ளார்.

அத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டால், அமேசான் காட்டுப்பகுதிகளில் வசிக்கும் 25 மிலியன் மக்கள் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள், அதன் மூலம் காடுகள் அழிக்கப்படுவது நடக்கும் என்று பிபிசியிடம் அமைச்சர் கூறினார்.

காட்டை ஒரு சரணாலயமாக பாதுகாப்பது என்பதற்கும், குறைந்த தீவிரத் தன்மையுடைய பண்ணை நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்ட அழிக்கும் வடிவிலான உற்பத்தி முறையை கையாள்வதற்கும் இடையிலான ஒரு மைய வழி இருப்பதாக அவர் கூறினார்.

Posted in Economy, Finance, Govt, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Trial of physician and rights activist: Call to drop all charges against Dr Binayak Sen: Tribal doctor – A Prisoner of Paradox?

Posted by Snapjudge மேல் மே 15, 2008

மனித உரிமை செயற்பாட்டாளரை விடுவிக்க நோபல் பரிசு பெற்றவர்கள் கோரிக்கை.

கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்
கம்பிகளுக்கு பின்னால் பினாயக் சென்

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரு சிறையில் ஒரு வருடமாக அடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான டாக்டர் பினாயக் சென் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசை பெற்றுள்ள இருபதுக்கும் மேலானவர்கள் இந்திய அரசிடம் ஒரு கூட்டு வேண்டுகோளை வைத்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் செயல்படும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.

ஆனல், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஆயுததாரிகளை அவர் விமர்சித்தார் என்கிற காரணத்தினாலேயே அவர் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பினாயக் சென் அவர்களின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Binoy Kampmark: The Case of Binayak Sen: “Indian Jailbirds By BINOY KAMPMARK”

Binayak Sen: A Prisoner of Paradox? | Anita Ratnam | Indiainteracts.com

BBC NEWS | South Asia | Dr Binayak Sen: Tribal doctor

Governing Human Rights Violation And Dr. Binayak Sen By Arpita Banerjee

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

மலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு

Posted by Snapjudge மேல் மே 15, 2008


ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்

மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Hope for prisoners facing death row in India

Posted by Snapjudge மேல் மே 5, 2008

இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கோரிக்கை

இந்தியாவில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மரண தண்டனையை சட்டத்திலிருந்து அகற்றும் நோக்கில் இந்தியா நகரவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மரண தண்டனைகள் குறித்து தனது பங்கில் முதல் முறையாக ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ள இந்த அமைப்பு, இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் நிறைய கோளாறுகள் இருப்பதாகவும், யதேச்சதிகாரப் போக்கு, பாரபட்சம் காட்டப்படுவது போன்ற கவலைகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்றாலும் கடந்த பதிமூன்று ஆண்டுகளில் இரண்டு பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் குரல்கொடுத்துவரும் பி.யு.சி.எல். அமைப்பின் தமிழகத் தலைவர் வி சுரேஷ் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும் சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குருமான டி.ஆர்.கார்திகேயன் ஆகியோர் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Amnesty urges India to abolish capital punishment

NEW DELHI (AFP) – Amnesty International Friday appealed to India to declare a “moratorium” on executions as an interim step towards abolishing the death penalty.

The London-based rights group said there was a worldwide trend towards abolition and urged India to “declare an immediate moratorium on executions with a view to abolishing the death penalty.”

As an emerging power, “India has an opportunity to exercise regional leadership and to send a strong signal of its determination to fully uphold human rights” by rejecting the death sentence, it said.

Amnesty India chief Mukul Sharma said the report was based on the belief that the “death penalty violates the right to life and does not have any place in the modern justice system.”

“There was no comprehensive study on the impact or consequences of awarding the death penalty” for many decades, he noted.

President Pratibha Patil has about 60 mercy petitions under review for people on death row including the high-profile case of a Muslim man, Afzal Guru, sentenced to hang for plotting a 2001 attack on parliament.

The petition is Guru’s last hope after the Supreme Court in 2006 upheld his death sentence for conspiracy in the attack that nearly brought nuclear-armed India and Pakistan to war in 2002.

He has claimed innocence in the attack and many opponents of his execution say he did not get a fair trial.

The rights watchdog said it feared India’s leaders lacked the political courage and human rights leadership to abolish the death penalty, with the public “erroneously” believing it deters violent crime.

After studying 56 years of evidence used to hand down death sentences, Amnesty said it had found “abuse of law and procedure and arbitrariness and inconsistencies in the investigation process.”

“In practice, the exercise of clemency has even more potential for abitrariness than the judicial process, especially since there is no requirement to give reasons for accepting or rejecting mercy petitions,” Sharma said.

The last execution in India was in 2004 when a 41-year-old former security guard was hanged for the rape and murder of a 14-year-old schoolgirl.

India’s Supreme Court ruled in 1980 the death penalty was to be imposed only in the “rarest of rare” cases. But Amnesty said some people were handed death sentences for crimes for which others received lesser punishment.

Vikramjit Batra, who wrote the report, said “many Supreme court judges themselves have pointed out the absence of a clear sentencing policy or what constitutes the rarest of the rare.

He described India’s judicial and police system as “riddled with errors,” saying the Supreme Court had acquitted the accused in 175 of the 728 cases he reviewed because the lower courts’ verdict was erroneous.

Posted in Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 1 Comment »