Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Economy’

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

French government probing Sarkozy bank theft: President Nicolas bank account is hacked & raided in internet scam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2008


பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி
பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி

இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார்.

பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Posted in Economy | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Importance of Bible: Pope Says Credit Crunch Shows Money Is ‘Nothing’: Financial crisis shows wealth a ‘house built on sand’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 7, 2008

அற்ப விஷயம் செல்வம்: போப்பாண்டவர்

பாப்பரசர் பெனடிக்ட்

பணமும், பேரவாவும் எவ்வளவு அற்பமானவை என்பதை தற்போதைய உலக நிதி நெருக்கடி காட்டுகின்றது என்று புனித பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கானில், ஆயர்கள் மாநாடு ஒன்றை முன்னிட்டு உரையாற்றிய பாப்பரசர், பெரும் பெரும் வங்கிகளின் வீழ்ச்சியானது, பணம் எப்போது வேண்டுமானாலும் மறைந்துபோகும் என்பதையும், அதன் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமானதே என்பதையும் காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தமது வாழ்க்கையை வெற்றிகளின் மீதும், தொழில் முன்னனேற்றங்களின் மீதும், பணத்தின் மீ்தும் நிர்மாணிக்கக் கூடாது என்றும், ஆண்டவனின் உலகமே வலுவான யதார்த்தமாகும் என்றும் கூட அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Bollywood: Shooting schedules hit as cine strike enters second day: Film workers begin stir over pay, timings: Strike by 100,000 Movie Employees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2008

இந்தியாவில் திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்

திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தத்தில் இந்திய திரைத் துறையினர்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்தி திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது அல்லது ஊதியமே தரப்படுவதில்லை என்று கூறி நடிகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாற்பது படங்களின் படப்படிப்பு தடை பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த காலவரையரையற்ற வேலைநிறுத்தம் தொடர்ந்தால் வரவிருக்கும் விழாக்கால வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

திரைப்பட ஊழியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கியச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சங்கங்களில் இல்லாதவர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்படிச் செய்வதன் காரணமாக ஊதியங்கள் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Posted in Economy, Finance, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Two days all India bank harthal on 24th and 25th Sept: Bank unions strike over wages, consolidation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

இந்தியாவின் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இந்தியாவின் வங்கிகளில் வேலை நிறுத்தம்
இந்திய வங்கிகளில் வேலை நிறுத்தம்

இந்தியாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் வங்கிகளைச் சேர்ந்த ஒன்பது லட்சம் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இருநாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று பல பகுதிகளில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பொதுத் துறையில் உள்ள வங்கிகளை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்தும், பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதை எதிர்த்தும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்புகள் பல இணைந்து இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்தியாவில் நடக்கும் வங்கிப் பரிவர்தனைகளில் 90சதவீத அளவு பொதுத் துறை வங்கிகளாலேயே கையாளப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

U Ra Varadarasan: Rural Economy – Agriculture, Industry, Services

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

கிராமப்புற பொருளாதாரம் – சில கவலைகள்!

உ . ரா. வரதராசன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் பங்கு (2001 – 02ஆம் ஆண்டில்) கீழ்வருமாறு அமைந்திருந்தது.

விவசாயம் – 15 சதவிகிதம், தொழில் – 31 சதவிகிதம், சேவைப்பணிகள் – 54 சதவிகிதம்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 15 சதவிகித அளவிலேயே வேளாண்துறையின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சற்றொப்ப 60 சதவிகிதத்தினர் வேளாண் துறையையே சார்ந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30 லட்சம் கிலோ மீட்டரில் 17.59 சதவிகிதம் காடுகளாகும்.

இவை நீங்கலாக உள்ள நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களில் பாசன வசதி அமையப்பெற்றது 48 சதவிகிதம் மட்டுமே; மீதமுள்ள 52 சதவிகித நிலங்கள் பாசன வசதியற்றவையாகும்.

1979 – 80இல் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 48.1 சதவிகிதம் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.

இது 2005 – 06இல் 38.5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்பது அலட்சியப்படுத்த முடியாததோர் அபாய அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில், பாசன வசதி கிடைக்கப்பெறும் நிலங்கள் சரிபாதிக்கும் குறைவு என்பது ஒன்று.

இந்தப் பாசன வசதியும், பருவமழையைப் பொறுத்ததுதான் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய மற்றொன்று.

பருவமழை பொய்க்கும்போது, தமிழ்நாடு வறட்சி நிலைமைகளைச் சந்திப்பது தொடர்ந்து நாம் அனுபவித்து வந்துள்ள துயரமான நிகழ்வுகள் என்பது மறக்கக்கூடியதல்ல.

தமிழ்நாட்டு விவசாயத்திற்குப் பாசன வசதியைப் பெருக்குவது என்பது, நமது அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மிகவும் சிக்கலாக நீடித்து வருவதால், உடனடியாக சாத்தியப்பாடு இல்லாத விஷயம்.

எனினும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, பருவமழை சராசரி அளவுக்கும் அதிகமாகப் பெய்யும் காலங்களில் மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீறி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுப்பது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படுவது, நீர் சேதாரத்தைத் தவிர்க்கும் வகையிலான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேளாண்துறையைப் பலப்படுத்த உதவும்.

மாநிலத்தில் விவசாயிகள் கையில் உள்ள நில அளவு மற்றோர் அடிப்படையான அம்சமாகும்.

1995 – 96ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 74.3 சதவிகிதம் உள்ள ஏழை – குறு விவசாயிகளிடத்தில் மொத்த விளைநிலத்தில் 30 சதவிகிதமே இருந்தது என்று அறியப்பட்டுள்ளது.

சிறிய – நடுத்தர – பெரும் விவசாயிகளின் சதவிகிதம் 10 மட்டுமே; ஆனால் அவர்கள் கையில் உள்ள நிலம் 46.1 சதவிகிதம் என்று அதே கணக்கீடு எடுத்துச் சொல்கிறது.

இந்தக் குறு விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருவதும், இதனால் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடிகளில் ஒரு பெரும் பகுதி ஏழ்மையில் தள்ளப்படுவதும் தொடர்கிறது என்பதையும் அரசுத்தரப்பு ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.

இந்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கை என்பது அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய திமுக அரசு அறிவித்துள்ள இலவச நில விநியோகத் திட்டம் விரிவாக்கப்படுவதும், விரைவுபடுத்தப்படுவதும் அவசர அவசியத் தேவையாகும்.

இதில் செல்வாக்குப் படைத்த தனியாரிடத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களைக் கண்டறிந்து கையகப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்க வேண்டியது உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

இந்த இலவச நில விநியோகத் திட்டத்தையும் தாண்டிச் சென்று, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இன்று நிலவுகிற நிலக் குவியலைத் தகர்ப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1979 – 80இல் 62.59 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இது 2005 – 06இல் 50.10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

சதவிகிதக் கணக்கில் 48.56}லிருந்து 38.46ஆக இதே காலகட்டத்தில் சுருங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், “ரியல் எஸ்டேட்’ கட்டுமானத் துறையில் வேகவேகமாக நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு – உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களும், சாகுபடிக்கு உட்படுத்தப்படும் நிலத்தின் அளவை மேலும் வெட்டிச் சுருக்க அனுமதிப்பது. கிராமப்புறங்களில் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதே போக்கு இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து வருவது கண்கூடு. எனவே இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருவதையடுத்து, இதைச் சார்ந்து நிற்கும் சற்றொப்ப 60 சதவிகித மக்களைப் படிப்படியாக வேறு துறைகளுக்கு மாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் இன்று இந்தக் கணிசமான மக்கள் பகுதியினருக்குப் பயனுள்ள – வருவாய் ஈட்டத் தகுந்த – மாற்று வேலைகள் பெற்றுத் தருவது என்பது சுலபமல்ல.

எனவே கிராமப்புறங்களிலேயே வேளாண்துறையைச் சார்ந்த இதர தொழில்களை வளர்ப்பதில் ஒரு திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழக கிராமப் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கவலைக்குரிய அம்சங்களில் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே கேள்வி!

(கட்டுரையாளர்: தேசியச் செயலர், சி.ஐ.டி.யூ.)

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

N Murugan: Economic Depression & Inflation in India: Sensex, Finance, Markets

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்

என். முருகன்

நம் எல்லோரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்துள்ள சமீபத்திய பிரச்னை பணவீக்கம். வேறு எந்த அம்சமும் உண்டாக்காத தலைவலியை ஆளும் கட்சிக்கு உருவாக்கும் பிரச்னை இது.

காரணம், இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் ஏழைகள் நிறைந்த நாட்டில் மிக அதிகமாக மக்களைப் பாதிப்பது பொருள்களின் விலைவாசிதான்.

பணவீக்கம் என்பது பொருள்களின் விலை ஏற்றத்தைக் குறிக்கும் என்பதால் தான் இவ்வளவு அதிகமான விளம்பரத்துடன் அன்றாடம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அது அலசப்படுகிறது.

வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்று பணவீக்கம் என்பது பொருளாதாரம் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்களுக்குப் புரியும். இரண்டு முக்கியமான காரணங்களினால் பணவீக்கம் உருவாகிறது. மக்கள் பொருள்களை அதிகம் வாங்குவதால் உருவாகும் விலை ஏற்றம் முதலாவது ஆகும்.

பொருளாதாரம் பற்றிய பாடங்களைக் கல்லூரிகளில் கற்பிக்கும் போது இரண்டு அடிப்படை விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒன்று டிமாண்ட் எனப்படும் பொருள்களின் தேவை. மற்றொன்று அப்பொருள்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் சப்ளை எனப்படுவதாகும். மக்களின் தேவை அதிகமாகி விநியோகிக்கும் பொருள்கள் குறைவாகத்தான் கிடைக்கும் எனில் அவற்றின் விலைவாசி உயர்ந்துவிடும். இதனை டிமாண்ட் விலையை மேலே இழுத்துச் சென்று விட்டதால் உருவான பணவீக்கம் (Demand- Pull Inflation) என்கிறோம்.

இரண்டாவதாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு உபயோகிக்கப்படும் மூலப்பொருள்களின் விலை அதிகமாகும்போது, அப்பொருள்களின் விற்பனை விலை தானாக ஏறி அதனால் உண்டாகும் பணவீக்கம் (Cost- Push Inflation). பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஓரளவு பணவீக்கத்தை நாம் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லலாம். அல்லது நமது நாட்டை வேறு எந்த அன்னிய நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளும் தொடாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தனியாக நமது பொருளாதாரம் இருக்க வேண்டும்.

1990-க்கு முன்னர் நமது பொருளாதாரத்தை அடைபட்ட ஒரு பொருளாதாரம் (Closed- Economy) என கூறுவார்கள். ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாடுகள், சில பொருள்களை பொதுத்துறையில், பல தொழில்களை சிறு தொழில்களாக தனியாரிடம், எல்லா தொழில்களையும் லைசென்ஸ் முறையில் என பல கடுமையான சட்டதிட்டங்களை நாம் நிறைவேற்றிக் கையாண்டோம். இதில் பல நன்மைகள் உண்டு. நமது பொருளாதாரத்தின் முழுப்பலனும் நமது மக்களைச் சென்றடையும்படி பல வளர்ச்சித் திட்டங்களுடன், ஏழை எளிய மக்களுக்கு மானியச் சலுகைகளும் வழங்கப்பட்டன.

ஆனால், மற்றைய நாடுகளில் தாராளமயமாக்கலின் மூலம் வேகமான வளர்ச்சி ஏற்பட்டதை, நமது மூடி அடைக்கப்பட்ட பொருளாதாரத்தில் இறக்குமதிக்கு அதிகமான அன்னியச் செலாவணி தேவை என்பதால் நமது டாலர் கையிருப்பு குறைந்து நமது வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டியும் முதலும் செலுத்தப்படாத ஒரு நிலைமையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தி அன்னிய முதலீடுகள் வரவேற்கப்பட்டன. உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது.

இதன் பலனாக தேசிய வருமானம் பெருகி நிறைய வேலை வாய்ப்புகள் உருவாயின. உலகின் பல நாடுகள் போல இங்கேயும் ஆண்டு வளர்ச்சி விகிதாசாரம் 8, 9 சதவிகிதங்கள் என்ற உயரிய இலக்குகள் அடைந்த பெருமிதம் நம் எல்லோரிடமும் பரவியது.

பலர் நாம் சுதந்திரம் அடைந்த பின், 1990 வரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தவறு எனவும், அப்போதிருந்தே நாம் இப்போது கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் நாம் இதைவிட அதிகமான முன்னேறிய நிலையில் இருந்திருக்கலாமே என கூறினார்கள். ஆனால், நமது பணவீக்கம் திடீரென நாலுகால் பாய்ச்சலில் சென்றதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்!

பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. ஆனால் வளர்ந்துவிட்ட பல மேலை நாடுகளில் மக்களுக்கிடையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டில் அதிகம் இல்லை என்பதால் விலை ஏற்றத்தை மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். அதாவது, சிறிது காலம் விலையேற்றம் இருக்கும். பின்னர் அது சரிக்கட்டப்பட்டுவிடும். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நமது நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது மிகக் கடுமையாக ஏழை மக்களை வெகுவாகப் பாதித்து விடும் என்பதால்தான் நாம் இவ்வளவு அதிகமாக பணவீக்கம் பற்றிக் கவலைப்படுகிறோம்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை முடுக்கிவிடலாம். பணப்புழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பணவீக்கம் ஓரளவு குறையும். ஆனால், இதனால் பொருளாதார வளர்ச்சி உடனடியாகப் பாதிக்கப்படும். ஏனென்றால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் பொருள்களின் உற்பத்தியையும், தனியார் கடன் பெறுவதையும் பாதித்து பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் குறைத்து விடும்.

எனவே மிக கவனமாக இப் பிரச்னை கையாளப்பட வேண்டும். பணவீக்கம் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு உருவாக்கும். இது தேர்தல் காலம் என்பதால் ஆளும் கட்சி அரசியல் வாதிகளுக்கு கடுமையான சோதனைகளையும், எதிர்க்கட்சியினருக்கு ஆளும் கட்சியினரைச் சாட ஒரு சரியான ஆயுதத்தையும் பணவீக்கம் அளிக்கிறது.

ஆனால் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியது பணவீக்கம் கட்டுப்படமுடியாமல்போய் பழங்காலத்தில் சிதறுண்டுபோன அரசுகள் பற்றிய தகவல்கள்தான். இதைக் “”கட்டுப்படுத்த முடியாத ஹைபர்இன்ஃப்ளேஷன் (Hyper inflation்) மற்றும் பொருளாதார வீழ்ச்சி (Economic Collapse) என கூறலாம்.

1946- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹங்கேரியில் நிலவிய பணவீக்கம்தான் இதுவரை உலகிலேயே அதிகமான பணவீக்கம் என கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவாக பெங்கோ எனும் ஹங்கேரிய பணம் வீழ்ச்சியடைந்து, ஒரு பெங்கோ பின்னர் 828,000,000,000,000,000,000,000,000,000 பெங்கோவுக்கு சமமானது. (ஆம்! 828 எனும் நம்பருக்கு அடுத்து 27 சைஃபர்கள்)

அதேபோல் 1920 ஆம் ஆண்டில் ஜனநாயக முறையில் வெய்மெர் குடியரசு ஜெர்மனியில் மிக மோசமான அரசாங்க நடவடிக்கைகளின் சின்னமாக விளங்கி, அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதற்கு ஒரு முக்கியமான காரணம் முதல் உலகப்போர் முடிந்த பின்னர் ஜெர்மனியின் மீது 132 கோடி மார்க் நஷ்டஈடு வழங்க போரில் வெற்றி பெற்ற நாடுகள் வலியுறுத்தியதால் பணவீக்கம் அதிகரித்தது. 1922- ஆம் ஆண்டு பணவீக்கம் 5470 சதவிகிதம் ஆனது! (நமது பணவீக்கம் தற்போது 8.2 சதவிகிதம்). இதனால் ஜெர்மனியில் பொருள்களின் விலையேற்றம் 1,300,000,000,000 மடங்கு அதிகமானது. (ஆம்,13 எனும் நம்பருக்கு அடுத்து 11 சைஃபர்கள்தான்).

ஜெர்மானியர் ஒருவர் 1923- ஆம் ஆண்டு ஒரு சாதாரண கடிதத்தை அமெரிக்காவுக்கு அனுப்ப ஆன ஸ்டாம்ப் செலவு 2 லட்சம் மார்க். ஒரு பவுண்டு வெண்ணெயின் விலை 15 லட்சம் மார்க். 1 கிலோ மாமிசம் 20 லட்சம் மார்க். ஒரு முட்டையின் விலை 60 ஆயிரம் மார்க். பொருள்களின் விலை எவ்வளவு வேகமாக மாறியது என்பதைக் குறிக்க, ஒரு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போதே உணவுப் பண்டங்களின் விலையைக் கூட்டி சர்வர்கள் கூறுவதை எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். ஆக, ஹோட்டலுக்குள் நுழையும் போது இருந்ததைவிட அதிகம் விலையை ஒருவர் சாப்பிட்ட பண்டத்திற்கு வழங்க வேண்டியிருந்தது.

இவை சரித்திரபூர்வமான உண்மைகள். இவ்வளவு கடுமையான பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும் இனி நடக்காது எனலாம். ஆனால் நம் நாட்டில் 83 கோடியே 60 லட்சம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20- க்கு கீழே வருமானம் உள்ளவர்கள் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி சொல்லியிருப்பதை கருத்தில் கொண்டால் சிறிதளவு பண வீக்கமும் அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வும் நமக்கு எவ்வளவு பாதகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).

—————————————————————————————————————————————

பதற வைக்கும் பற்றாக்குறை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பணவீக்க விகிதம் மட்டும் அதிகரிக்கவில்லை, மத்திய -மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இத்துடன் அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் குறைக்க, மத்திய அரசு அனுமதித்துள்ள ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் பத்திர வெளியீடும் கவலைதரும் அம்சமாகும்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்னுற்பத்தி போன்ற அவசியப் பணிகளுக்கு நிதி இல்லாமல் தவிக்கும்போது வெவ்வேறு வகை மானியச் செலவுகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல. நல்ல திட்டங்களுக்கு பயன்படக்கூடிய நிதியே, மானியம் என்ற பெயரில் வேறு செலவுகளுக்குத் திருப்பிவிடப்படுகிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டிலும் உயர்த்திக் கொள்வது என்று முன்னர் எடுத்த முடிவை, அவ்வப்போது எதிர்ப்பட்ட சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களுக்காக ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது மத்திய அரசுதான். இப்போது அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக மட்டும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்குக் கடன் பத்திரத்தை வெளியிட அனுமதி தந்திருக்கிறது. இது நஷ்டத்தை கணக்கில் காட்டாமல் மூடி மறைக்கும் தந்திரம் ஆகும்.

இந்தத் தொகை பொது பட்ஜெட்டில் இடம் பெறாது. அதே சமயம் இந்த நிதிச் சுமை எதிர்கால அரசின் கழுத்தை நெரிக்கும். மானியம் என்பது அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியிலிருந்து ஒதுக்கப்படும் தொகைதானே தவிர யாரும் இனாமாகத் தருவதில்லை. விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்க தரப்படும் மானியங்களும், ஏற்றுமதியாளர்களுக்கு சர்வதேசச் சந்தையில் போட்டிபோடத் தரப்படும் மானியங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. இவற்றை வரவேற்பதில் தவறும் இல்லை. ஆனால் வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அறிவிக்கப்படும் வெற்று ஜனமயக்கு திட்டங்களுக்குச் செலவிடப்படும் மானியம் விழலுக்கு இறைத்த நீர்தான்.

மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய பட்ஜெட்டில் நிர்ணயித்தபடி பட்ஜெட் பற்றாக்குறையையும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக “”நிதிப்பொறுப்பு மசோதா” நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு ஆட்சியாளர்களிடம் இல்லை. கடந்த ஆண்டு இந்த ஒட்டுமொத்தப் பற்றாக்குறை அளவு 5.7% ஆக இருந்தது. இதை 3%-க்குள் அடக்கிவிட வேண்டும் என்பதுதான் அரசின் லட்சியம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இது 7%-ஐ தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது. பணவீக்க விகிதம் 11%-ஐ தாண்டியதைவிட இது ஆபத்தானது.

அன்னியச் செலாவணி கையிருப்பு இதுவரைக்கும் திருப்திகரமாகவே இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இந்தத் தொகை பெரிய கடல்போல காட்சி தந்தாலும் ஒன்றை நாம் மறக்கக்கூடாது. உலக வங்கியிலும் ஆசிய வளர்ச்சி வங்கியிலும் நாம் வாங்கிய கடனையும், பிற வெளிநாடுகளிடம் வாங்கிய கடன்களையும் இன்னமும் முழுதாக அடைத்துவிடவில்லை. அந்தக் கடன்களுக்கு வட்டியைத்தான் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த அன்னியச் செலாவணி கையிருப்பில் நமது தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் அல்ல, நம் நாட்டில் நேரடி முதலீட்டில் இறங்கியுள்ள அன்னிய முதலீட்டாளர்களுக்கும் பங்கு உள்ளது. அவர்கள் இதைத் தங்கள் நாட்டுக்குத் திரும்ப எடுத்துச் செல்ல முற்பட்டால் இது வேகமாகக் கரைந்துவிடும்.

பருவமழை இந்த ஆண்டு மோசமாக இராது என்பதும் உணவு தானிய விளைச்சல் குறையாது என்பதும் ஆறுதல் தரும் விஷயம். ஆனால் மானியச் செலவுகள் அதிகரிப்பதும், நிதிப் பற்றாக்குறை கடுமையாக உயர்வதும் கவலைதரும் அம்சங்கள். பணவீக்க விகிதம், வங்கி வட்டி வீதம், பண சப்ளை ஆகியவற்றைத் திறம்பட நிர்வகித்துவந்த மத்திய அரசு, “”அரசியல் காரணங்களுக்காக” தடுமாற்றத்தில் சிக்கி, கட்டுப்பாடுகளைக் கோட்டைவிட்டுவிட்டது கவலையைத் தருகிறது. அடுத்துவரும் அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்று எண்ணாமல் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியது அவசியம்.

Posted in Economy, Finance, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts

Posted by Snapjudge மேல் மே 20, 2008

ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.

பெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப ‘தசாவதாரம்’ ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

  • வட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடி
  • மதுரை ஏரியா மூன்று கோடி,
  • கோயம்புத்தூர் நான்கு கோடி,
  • சேலம் இரண்டரை கோடி,
  • திருநெல்வேலி மற்றும்
  • கன்னியாகுமாரி ஒன்றரை கோடி,
  • திருச்சி
  • தஞ்சை இரண்டரை கோடி

என மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது.

கன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம்.

தசாவதாரம்’ இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடி.

Dasavatharam Nizam rights for 6.25 crore

The Nizam rights of the film Dasavatharam have been bagged by Siri Media of Dasari Narayan Rao for a record 6.25 crore. This is very high for a Tamil hero film in Nizam. After Rajinikanth’s Shivaji, the craze for a Tamil hero film has reached such heights.

Kamal Hassan’s new film Dasavatharam has already completed the censor formalities and is now set for release on June 6. Kamal plays 10 different roles while heroin Asin is playing a dual role. Mallika Sherawat and Jayaprada are playing special roles in the film.

Posted in Economy, Finance, India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Report on The Government of Tamil Nadu: Public Administration: Accountant General’s Office: IAAS – Indian Audit and Accounts Service

Posted by Snapjudge மேல் மே 20, 2008

மு.க.ஸ்டாலின் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் ரூ. 32 கோடி அளவுக்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறையில் மட்டும் ரூ.13 கோடி அளவுக்கு முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006-07ம் ஆண்டிற்கான மத்திய தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தணிக்கை விவரங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டு சென்னையில் உள்ள இந்திய தணிக்கை துறை தலைவர் முருகையா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் மாநில அரசின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை துறை தணிக்கை செய்து மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அறிக்கையில் உள்ளவற்றை இந்தக் குழு ஆய்வு செய்து அதன்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். இதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

  • 2006-07 ஆம் ஆண்டு மாநில அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட 20.5 சதவிகிதம் உயர்ந்து 40 ஆயிரத்து 913 கோடியாக உள்ளது.
  • வருவாய் செலவினம் 19.5 சதவிகிதம் உயர்ந்து 38 ஆயிரத்து 265 கோடியாக உள்ளது.
  • கடன் அல்லாத மூலதன வருவாய் 710 கோடி ரூபாயாகவும்,
  • மூலதன செலவு மற்றும் கடன்கள் வழங்கியவை முறையே 1898 கோடி மற்றும் 1214 கோடி ரூபாயாக அதிகரித்ததாலும்
  • இந்த ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 1705 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அரசின் நிதி பொறுப்பு வருவாயை விட 1.62 மடங்குகூடுதலாக ரூ.66 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது. நபார்டு வங்கி ஒப்புதல் அளித்த 269 பாசன திட்டங்களில் 251 திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. பாசனத்துறை ஒப்புதல் பெறாத திட்டங்களில் 2.47 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. கூடுதல் திறன் கொண்ட கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை வடிவமைப்பதில் கூடுதலாக 5.77 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

வணிகவரித்துறையில் இலவசமாக கிடைக்கும் மென்பொருளை தனியாரிடமிருந்து வாங்கியதால் 80 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 14 கோடி ரூபாய் செலவு செய்தும் கணினிமயமாக்கும் பணிகள் முற்றுப் பெறவில்லை.

கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 415 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அனுபவித்து வருகிறது. பல்வேறு வரிகள் வசூலிப்பதில் சுணக்கம் காரணமாக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் எந்தவித இடர்பாடுகளும் இல்லாத நிலையிலும் 25 திட்டங்களில் 23 திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை.

பாக்கித் தொகை செலுத்துவதில் தமிழ்நாடு மின்சார வாரியம் நிபந்தனைகளை பின்பற்ற தவறியதால் 24.63 கோடி ரூபாய் ஊக்கத் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செலவு தொகையை திரும்ப பெற சமர்ப்பித்த தவறான கோரிக்கையின் விளைவாக ரூ.3.99 கோடி முடங்கிப் போயுள்ளது.

இத்துடன் அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கள அலுவலகங்களில் சோதனை செய்ததில் வீணான செலவினம் மற்றும் இதர முறைகேடுகள் காரணமாக 31.89 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றில் மு.க.ஸ்டாலின் கீழ் உள்ள துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தேவையற்ற மற்றும் பலன் அளிக்காத செலவு 9.63 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்திருக்கக் கூடிய செலவுகள் 3.30 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பல துறைகளில் பல கோடி ரூபாய்க்கு தேவையற்ற மற்றும் முறைகேடான செலவுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Posted in DMK, Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss

Posted by Snapjudge மேல் மே 15, 2008

ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் சிகரம் தொட்டு சாதனை படைத்தது நினைவிருக்கலாம். இந்த சிவாஜியின் சாதனையை ஒரு விஷயத்தில் விஜய்யின் குருவி படம் முறியடித்திருக்கிறது.

ஆம்! அதுவும் சென்னை நகரில்…! சென்னையில் சிவாஜி படம் மல்டிபிளக்ஸ் ஒன்றில் ஒரே நாளில் 25 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையைத்தான் குருவி முறியடித்திருக்கிறது. குருவி திரையிடப்பட்ட ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், குருவி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

சிவாஜி படைத்த சாதனைச் சிதறல்கள் :

* இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டுடன், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், வெளியான ஒரே படம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

* சிவாஜி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.70 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. சென்னையில் 17 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்பட்டது.

* செல்போன் நிறுவனத்திருக்கும் செம பிசினஸை கொடுத்தது சிவாஜி. சிவாஜி படத்தின் ட்யூன்களையும், பஞ்ச் வசனங்களையும் காலர் ட்யூன்களாக மாற்றி வெளியிடும் உரிமையை ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம் சிவாஜி படத்தின் ரிங் டோன்கள் மற்றும் காலர் ட்யூன்களை 33 நாடுகளில் 70 நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் டவுன்லோடுகள் வரை செய்யப்பட்டதாக ஹங்கமா தெரிவித்தது.

* அமெரிக்க கண்ட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த படம் சிவாஜிதான்.

* 40 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் வெளியான படம் சிவாஜி. அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ் சிவாஜி 44 மையங்களில் திரையிடப்பட்டது. இதுவரை இப்படி ஒரு படம் இங்கு திரையிடப்பட்டதில்லை.

* இங்கிலாந்தில், யுகே டாப் 10 பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம் பெற்ற பெருமையை சிவாஜி நிகழ்த்தியது.

* கனடாவில் மட்டும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

* டொரண்டோவில் ஒரு தமிழ்ப் படம் 100 நாட்களாக ஓடியது என்றால் அது சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

* இலங்கையில் 12 தியேட்டர்களில் சிவாஜி தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடியது.

* சிங்கப்பூரில் 2 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து சிவாஜி படம் ஓடியது.

* தமிழகத்தில் 90 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்களை தொட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களிலும் புறநகர்களில் 13 தியேட்டர்களிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது.

* பெங்களூரில் சிவாஜி படம் 3 தியேட்டர்ளில் 100 நாள் ஓடியுள்ளது.

* மைசூரில் ஒரு தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடியது.

* மும்பையில் உள்ள அரோரா சினிமா ஹாலில் சிவாஜி நாளையுடன் 100 நாட்களை கடந்து ஓடியது.

Posted in Economy, Finance, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani

Posted by Snapjudge மேல் மே 8, 2008

பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!
வியாழக்கிழமை, 8 மே 2008 ( 16:49 IST )

‘குருவி’க்கு விமர்சனங்கள்தான் சாதகமாக இல்லை என்றாலும், அதிரடி ஒபனிங் மூலம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

‘கில்லி’ போல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் உள்பட பல தரப்பும் கூறி வந்தாலும், சென்ற வார இறுதியில் ரூ.1 கோடியே 80 லட்சங்களுடன் சென்னையில் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றுள்ளது ‘குருவி’.

இரண்டாம் இடத்திலுள்ள ஜெயம் ரவியின் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, பதினெட்டே கால் லட்சங்களை ஈட்டியுள்ளார்.

தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, வார இறுதியில் பதிமூன்று லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.

ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு, ‘சிவாஜி’யின் (25 காட்சிகள்) சாதனையை முறியடித்த ‘குருவி’, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.37 லட்சத்தை வசூல் செய்தது. இதன்மூலம், முதல் இருதின வசூலில் ‘பில்லா’வை முந்தியது.

இந்த வேகம் குறையாமல் ‘குருவி’ பறக்குமாயின், பதினைந்தே நாட்களை முதலீடு செய்யப்பட்ட பணம் வசூல் செய்யப்பட்டுவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
(மூலம் – வெப்துனியா)

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 1 Comment »

Guntur chilli market fire: 500 shops gutted in Asia’s biggest Mirchi market

Posted by Snapjudge மேல் மே 5, 2008

ஆந்திராவில் மிளகாய்ச் சந்தையில் தீவிபத்து

மிளகாய் சந்தை பற்றி எரிந்தது
மிளகாய் சந்தை பற்றி எரிந்தது

தென்னிந்தியாவிலே, ஆந்திர மாநிலம் குண்டூரில் இந்தியாவின் மிகப் பெரிய மிளகாய்ச் சந்தைகளில் ஒன்றில் பெரிய அளவில் தீ பரவியதில் அந்தச் சந்தை பெரும் சேதத்துக்குள்ளாகியிருக்கிறது.

பெருமளவிலான மிளகாய் தீயில் கருகியதால், அவ்விடத்தைச் சுற்றியும் காரமான நெடியுடன் கண் எரிச்சல் தருகின்ற புகை பரவியிருப்பது, தீயைக் கட்டுப்படுத்த முயலும் தீயணைப்புப் படையினருக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஆட்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தீ எவ்வாறு பரவியது என்ற விபரம் இதுவரை தெளிவாகவில்லை.

The Hindu Business Line : Guntur chilli market yard gutted, loss estimated at Rs 55 cr: “AP Govt to decide on compensation package after insurance payment

A major fire broke out in the Guntur chilli market yard, the biggest one in the country for the spice, on Saturday, heavily damaging chilli stocks and even a branch of Andhra Bank.

As per the initial enquiry conducted by the Andhra Pradesh Government, out of the 2,01,000 bags of chillies, 1,90,000 bags were burnt.

“There was a stock of 1,06,000 bags of chillies of farmers and 95,000 bags belonging to purchasers at the time of the fire. The total damage including that of infrastructure is estimated to be around Rs 55 crore, while around Rs 30 crore worth of chillies were burnt,” the Chief Minister, Dr Y.S. Rajasekhara Reddy, told a press conference after holding a review meeting here on Saturday.
Insurance

He also said the Government will look at the amount insurance companies will give and then decide on a compensation package. “Fifty shops of commission agents were insured at Rs 1 lakh by the agents for the commodity and the Agricultural Produce Marketing Committee (APMC), Guntur has insured the structures for Rs 23 crore,” Mr Reddy added.

The fire broke out in the morning when a lorry hit overhead electric wires, causing a short circuit. The Chief Minister also ruled out a possibility of sabotage but said an enquiry will be conducted. Earlier, the State Marketing Minister, Mr M. Mareppa, pegged the initial loss at Rs 40 crore.

The market yard is on the Guntur-Chilakaluripeta road and a cluster of 25-30 cold storages are situated in the region within a radius of 15 km.

One of the major handicaps in putting out the fire was that there were not enough fire tenders. The district administration had to summon tenders from nearby Vijayawada and Ongole. In view of this, officials faced problems in putting out a fire at a cluster of 25 houses in Chirala. Until evening, the fire had not been brought under control.

Mr Srinivas Reddy, a trader in the APMC market, said that being the peak season, arrivals were about 1.5 lakh bags last week and over two lakh bags were stored in the warehouses.
Price run

“Depending on the quality, prices were hovering around Rs 3,200 to Rs 4,200 per quintal on good export demand and shortage of good quality produce,” he added.

Average arrivals a day in this APMC market yard, spread over 60 acres, are about one lakh bags.

Chilli farmers from different parts of the state and neighbouring States bring their produce to the Guntur market, which also serves as an export hub. Spices produced in Prakasam, Krishna, Khammam and Warangal districts are also brought to Guntur for trading.
Fire at Cairn warehouse

Meanwhile, a warehouse of Cairn Energy in Vakalapudi near Kakinada in Andhra Pradesh caught fire.

The company stores pipes in the warehouse and reportedly, they have been gutted. Fire tenders from Nagarjuna Fertiliser Corporation and Godavari Fertiliser Corporation were rushed to put out the fire.”

Posted in Economy, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Food crisis and blame-game: DMK vs Communist Parties – Protests against price rise

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 23, 2008

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை வாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன.
அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும்.
எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது எது முக்கியம்?: மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்: மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது.
அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.
வெளிநடப்பு முறையல்ல: மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.
ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள் ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்தி ரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி

Posted in Economy, Finance, Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | 1 Comment »