Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Alternate’

Mooligai Corner: Herbs & Naturotherapy: Clove, Ilavangam, Wild Cinnamon, Cassia bark – Spices

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2008

மூலிகை மூலை: பசியைத் தூண்டும் இலவங்கம்

விஜயராஜன்

இலவங்க மரம் பச்சைநிறம் கொண்டிருக்கும். அதிக நறுமணம் கொண்டதாகும். இம்மரத்தின் உள்ள மலர்களின் மொட்டுகளைத்தான் இலவங்கம் என்று அழைப்பார்கள். இலவங்கத்தின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

இலவங்கத்தை உணவுடன் சேர்த்து வர உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்.

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் உடனே குணமாகும்.

இலவங்கத்தைத் தணலில் வதக்கி வாயில் போட்டுச் சுவைக்க, தொண்டைப்புண் ஆறும். தொடர்ந்து சுவைத்து வர பற்களின் ஈறுகள் கெட்டியாகும்.

இலவங்கத்தைப் பொடியாக்கி பத்துகிராம் எடுத்து இருநூறு மில்லி வெந்நீருடன் கலந்து குடிக்கப் பசியைத் தூண்டி, கழிச்சலைப் போக்கும்.

இலவங்கம், சுக்கு வகைக்கு 20 கிராம் எடுத்து ஓமம், இந்துப்பு வகைக்கு 40 கிராம் எடுத்துச் சேர்த்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து 1 டம்ளர் வெந்நீருடன் கலந்து குடிக்க, பசியைத் தூண்டி உண்ட உணவை நன்றாகச் செரிமானம் ஆக்கும். இலவங்கம், நிலவேம்பு சம அளவாக பத்து கிராம் இடித்து 1 டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சலுக்குப் பின்னால் உண்டாகும் களைப்பைப் போக்கும். அயர்ச்சி நீங்கும். நன்றாகப் பசியைத் தூண்டும்.

நிலாவாரையை கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு அத்துடன் இலவங்கப் பொடியும், சுக்குப் பொடியும் வகைக்கு 2 கிராம் சேர்த்து 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க சுகமாகப் பேதியாகும்.

இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்த தைலம் துல்லியமாகவும், காரமாகவும், நல்ல மணமுள்ளதாகவும், இருக்கும். நாவில் பட்டால் சிவக்கும். சிறிது சர்க்கரையுடன் 3 சொட்டு இலவங்கத் தைலம் சேர்த்துச் சாப்பிட பசியைத் தூண்டும். உடலுரமாக்கும்.

இலவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து பல் நோய்க்கு வைக்க சாந்தமாகும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Ayurvedha Corner: Restless Leg Syndrome

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆடும் கால்கள் அமைதியாக…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனது மகன் வயது 23. அவனுக்கு நோய் தாக்கப்பட்டுள்ளதாக ஆங்கில வைத்தியர் கூறுகிறார். இந்நோய் காரணமாக காலில் குடைச்சல் ஏற்படுகிறது. அதன் காரணமாக காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறான். இரவில் குடைச்சல் காரணமாகத் தூக்கமின்றித் தவிக்கிறான். மன உறுத்தல் ஏற்பட்டு படிக்கவும் முடியாமல் சிரமப்படுகிறான். இதற்கு ஆங்கில வைத்தியத்தில் மருந்துகள் இல்லை என்று கூறுகிறார்கள். ஆயுர்வேத

முறையில் இதற்குச் சிகிச்சை செய்ய முடியுமா?

என்.கங்காதரன், இராமேஸ்வரம்.

நம் மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகை தோஷங்கள் தம் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன. அதிலும் முக்கியமாக இடுப்பு மற்றும் அதன் கீழ்ப் பகுதிகள் அனைத்தும் வாததோஷத்தின் முக்கிய இருப்பிடங்களாகும். இந்த வாதத்திற்கென்றே சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. வறட்சி, குளிர்ச்சி, நுண்ணியது மற்றும் அசையும்தன்மை ஆகிய இதன் குணங்கள் எப்போதும் ஒரே சீரான நிலையில் இருக்க, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களும் உணவு வகைகளும் உதவுகின்றன. இந்தக் குணங்கள் அனைத்தும் தவறான செயல் மற்றும் உணவுகளால் சீற்றமடைந்துவிட்டால் அவற்றின் தாக்கத்தை இடுப்பிலும், உடல் கீழ்ப்பகுதிகளிலும் அதிகமாக உணரலாம். நீங்கள் குறிப்பிடும் ரெஸ்ட் லெஸ் லெக் எனும் நோயில், வாத தோஷத்தின் அசையும் தன்மை எனும் தனிப்பட்ட குணம் மற்ற குணங்களைவிட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் காரணமாக காலில் குடைச்சலும், எந்நேரமும் காலை ஆட்டிக் கொண்டிருத்தலும் ஏற்படுகிறது. இந்தத் தனிப்பட்ட குணம் சீற்றமடையக் காரணமாக அதிக தூரம் சைக்கிளை மிதித்து பயணம் செய்தல், தையல் மெஷினில் காலை வேக வேகமாக ஆட்டித் துணிகளைத் தைத்தல், அதிக அளவில் நடைப்பயிற்சி செய்தல், சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுதல், நீண்ட தூரம் நடந்து வீடு வந்ததும் குளிர்ந்த நீரால் கால்களை அலம்புதல், குளிர்ந்த நீரில் குளித்தல், குடித்தல், ஆழ்ந்த உறக்கமின்றிப் புரண்டு புரண்டு படுத்தல், உணவில் உப்புக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு வகைகள், காரம், கசப்பு. துவர்ப்புச் சுவை ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அசையும் தன்மை எனும் குணத்திற்கு நேர் எதிரான குணமாகிய ஸ்திரம் எனும் நிலையானது, மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் தங்கள் மகனுக்கு அளிக்கப்படுமேயானால் அவர் இந்த உபாதையிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய அஸ்வகந்தாதி லேஹ்யம் 10 கிராம், 10 சொட்டு க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய்யை அந்த லேஹ்யத்துடன் நன்றாகக் கலந்து, காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல மருந்தாகும். இந்த மருந்தைச் சாப்பிட்ட பிறகு அரை கிளாஸ் வெதுவெதுப்பான பசும்பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிடவும். சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். மேல்பூச்சாக மஹாமாஷ தைலமும், பலா அஸ்வகந்தாதி குழம்பு எனும் தைலமும் வெதுவெதுப்பாக இடுப்பிலிருந்து கால்பாதம் வரை தேய்த்து சுமார் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. உணவில் எண்ணெய்ப் பசையுள்ளதும், சூடான வீர்யம் கொண்டதுமான உணவு வகைகளும், இனிப்புச் சுவை, புளிப்புச்சுவை, உப்புச் சுவைகளுள்ளதுமான பொருட்களை அதிகம் சேர்க்க வேண்டும். கால்களை இதமாகப் பிடித்து விடுதல், வாதநாராயணன், நொச்சி இலை, ஆமணக்கு இலை, புங்கன் இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரில் இடுப்புவரை அமிழ்ந்து இருத்தல் போன்றவை நன்மை தரும். கடற்கரைக் காற்று அதிகமுள்ள இடத்திலிருந்து சற்று சூடான பூமியும் காற்றுமுள்ள ஊரில் உங்கள் மகன் சிலகாலம் வாழ்வதும் நல்லதேயாகும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

Chennai: Harassed couple ends life – Loving women: Being lesbian in India

Posted by Snapjudge மேல் மே 19, 2008

சென்னையில் ஒன்றாக தீக்குளித்த இரண்டு பெண்கள்

பெண் ஓரினச் சேர்க்கையை குறிக்கும் சின்னம்

மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்கக வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்த, மனம் கசந்து இருவரும் தங்களுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்டு மரித்திருக்கிறார்கள்.

40 வயதான ருக்மணி மற்றும் 38 வயதான கிறிஸ்டி ஜெயந்தி மலர் ஆகிய இந்த இரு பெண்களுக்கிடையே பாலுறவு இருந்ததாகவும் அதனாலேயே இருதரப்பு உறவினர்களும் கடுமையாக அவர்கள் நட்பிற்கு ஆட்சேபித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மணமானவர்கள், அவர்களில் மலருக்கு எட்டு வயது மகன் ஒருவரும் இருக்கிறார். ஆனால் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே இருக்க முயன்றிருக்கிறார்கள். அடிககடி ருக்மணி தனது குடும்பத்தை விட்டு மலரின் வீட்டுககுச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்கொலை என்று மட்டுமே வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இறந்த பெண்களை சந்திக்கக்கூடாது என்று வற்புறுத்தியதாக உறவினர்கள் மீதெல்லாம் முதல் தகவலறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்றார்.

ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்திருகின்றனர். தத்தம் குடும்பத்தினரின் ஆட்சேபணைகளை மீறி நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரியவந்திருப்பதாகவும், அவ்விருவருககிடையே என்னமாதிரியான உறவிருந்தது என்பது எல்லாம் மேல்விசாரணையிலேயே தெரியவரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பெண்களிடையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பாக பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.நாராயண ரெட்டி தமிழோசைக்கு வழங்கிய சில கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »