Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘africa’

Sirius Star: Somali Pirates Seek Ransom for Hijacked Saudi Tanker: Efforts on to release supertanker

Posted by Snapjudge மேல் நவம்பர் 19, 2008


ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரிக்கிறது

சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல்
சோமாலிய கடற்கரைக்கு அண்மையில் நங்கூரமிட்டுள்ள கடத்தப்பட்ட கப்பல்

சவுதியின் எண்ணெய்க்கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் அதனை தற்போது சோமாலியாவின் வடபகுதிக்கு கொண்டு சென்றுள்ளதாக அமெரிக்க கடற்படை கூறுகிறது.

இந்த ஆண்டு சோமாலியாவின் கடற்பரப்பில் நடந்த கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் 92. இந்த சம்பவங்களின் விளைவாக, 36 கப்பல்கள் கடத்தப்பட்டன.

அதிகரித்துவரும் இந்தப்பிரச்சினைக்கு பதில் நடவடிக்கையாக கடந்த மாதம், நேட்டோ சோமாலியாவுக்கு உதவி வழங்கல்களை செய்துவரும் கப்பல்களைப் பாதுகாக்கவென ஒரு நடவடிக்கை அமைப்பை உருவாக்கியது.

ஆனால் இது வரை வழங்கப்பட்ட வளங்கள் இந்தப் பிரச்சினையை சமாளிக்கப் போதுமானவையாகத் தோன்றவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட கடற்பரப்பு மிகவும் பெரியது – சுமார் ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கும் மேலான பரப்பு அது.

நேட்டோ, இந்த கடற்பரப்பில் நான்கு கப்பல்களை மட்டுமே வைத்துள்ளது. எந்த ஒரு நாளிலும், இந்தப் பகுதியில், 10 வெவ்வேறு சர்வதேச போர்க்கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன.

அமெரிக்க விமானங்கள் கூடுதலாக வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது ஓரளவுக்கு பலனளித்திருப்பது போல் தோன்றினாலும் பிரச்சினை இன்னும் தொடர்கிறது.

கடற்கொள்ளைகளை சமாளிப்பது குறிப்பாகவே கடினம், ஏனென்றால், கடற்கொள்ளையர்களின் கப்பல்களை, தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னர்வரை, மற்ற கலன்களிலிருந்து பிரித்துப்பார்ப்பது ஏறக்குறைய முடியாத ஒன்று. அந்த சமயத்தில் தடுப்பது என்பது தாமதமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று பிபிசியிடம் அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கடற்கொள்ளையர் படகு ஒன்று
கடற்கொள்ளையர் படகு ஒன்று

இந்தப்பகுதியில் பாரிய கடற்படைகளைக் கொண்ட பிராந்திய சக்திகள் ஏதும் இல்லாததும், சோமாலியாவின் கடற்கரைப்பகுதியில் ஒட்டுமொத்த கட்டுப்பாடற்ற குழப்பம் நிலவுவதும், இந்தப்பகுதியில் கடற்கொள்ளையை நசுக்கும் நடவடிக்கைகளை முடக்குகிறது.

கப்பல் நிறுவனங்கள் தங்களது கப்பல்களில் பாதுகாப்பு பணியாளர்களை வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமெரிக்க கடற்படைக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கோடிகாட்டியிருந்தாலும், இத்தகைய நடவடிக்கை தங்களது கப்பல் பணியாளர்களுக்கு உள்ள ஆபத்துக்களை அதிகரிக்கவே செய்யும், மேலும் காப்பீட்டு செலவையும் அது அதிகரிக்கும் என்று வர்த்தக கப்பல் துறை அஞ்சுகிறது.

ஆனால், சோமாலி கடற்கொள்ளையர்கள் இந்த ஆண்டு இந்த கப்பல் கடத்தல்கள் மூலமாக 5 கோடி டாலர்கள் சம்பாதிப்பார்கள். இந்த நிலையில், இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று கருதுவது அடிப்படையில் கடினமாகவே இருக்கிறது.



கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் சோமாலிய கடற்கரையை அடைந்துள்ளது

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கப்பல் தற்போது சோமாலிய கடற்கரையை சென்றடைந்துள்ளது.

இந்த கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் இந்த கப்பலின் சொந்தக்காரர்கள், இந்த கப்பலில் இருக்கும் 25 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிரியஸ் ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பலில், நூறு மில்லியன் டாலர்கள் பெறுமதியான கச்சா எண்ணெய் இருக்கிறது. இந்தக் கப்பலை கடத்திச்சென்றிருப்பவர்கள், இதை விடுவிப்பதற்கு மிகப்பெரும் தொகையை கப்பமாக கேட்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கடத்தலை கண்டித்திருக்கும் சவுதி அதிகாரிகள். பயங்கரவாதத்தை போலவே, கடற்கொள்ளையும் மிகப்பெரிய ஆபத்து என்றும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் எல்லா கடற்கலன்களுக்கும் தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அமெரிக்காவின் கடற்படை தெரிவித்துள்ளதுடன், அந்த வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் தங்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த கப்பலை கடத்திச்சென்றுள்ள கடற்கொள்ளையர்கள் இது தவிர 13 கப்பல்களை ஏற்கனவே கடத்தி வைத்திருக்கிறார்கள்.

மற்றுமொரு கப்பலும் கடத்தப்பட்டது

இதற்கிடையே, ஏடன் வளைகுடாப்பகுதியில், 25 மாலுமிகளுடன் சென்ற ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட, சரக்குக் கப்பல் ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது.

ஏடன் வளைகுடாப் பகுதியில் நடந்த மற்றுமொரு சம்பவத்தில், 12 பேர் சென்ற, கிரிபாட்டியில் பதிவு செய்யப்பட்ட, ஒரு மீன்பிடி படகும் கடத்தப்பட்டதாக இந்த அலுவலகம் தெரிவிக்கிறது.


சோமாலியாவில் அமைதிக்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை

ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பான ஐ சி எ டி, அமைப்பைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் எத்யோப்பியாவில் நடத்திய மாநாட்டில் சோமாலியாவில் அமைதியை மீண்டும் கொண்டுவரத் தடையாக இருப்பவர்கள் மீது குறிப்பிட்ட சில தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தடை யார் மீது விதிக்கப்படும் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை.

புதிய அமைச்சரவை தொடர்பாக பிரதமருடன் சோமாலியாவின் இடைக்கால அதிபர் விரைவாக இணக்கப்பாடு காணவேண்டும் என்பதே இவர்களின் குறி என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் முன்னேறி வரும் இஸ்லாமிய கிளர்சிக்கார்ர்களிடம் இருந்து அரசை பாதுகாக்கும் ஆப்பிரிக்க ஒன்றியப் படைகளை மேம்படுத்துவது என்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


லாரண்ட் என்குண்டா படை பின்வாங்கலை அறிவித்துள்ளார்

காங்கோ கிளர்ச்சிப்படைகள்
காங்கோ கிளர்ச்சிப்படைகள்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.

காங்கோவுக்கான ஐநா மன்றத்தின் சிறப்பு மத்தியஸ்தராக சென்றுள்ள நைஜீரியாவின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஒபசாஞ்சோ அவர்களின் அழுத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

தாங்கள் பின்வாங்கிச்செல்லும் பகுதிகளில் ஐநா மன்றத்தின் அமைதிப்படையினர் காவல்காக்க வேண்டும் என்று என்குண்டா கோரியுள்ளார்.

காங்கோவில் இருக்கும் ஐநா மன்ற படைகளின் மூத்த தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் ஐநா மன்றத்தின் விதிகள் தமது படையினரின் கைகளை கட்டிப்போட்டிருப்பதால், கிளர்ச்சிப்படையினரை தமது படைகளால் தோல்வியுறச்செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்த பின்னணியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Ruling party wins Zambia presidential race: VETERAN diplomat Rupiah Banda sworn in as Zambia’s president after narrow election victor

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2008


ஜம்பியாவின் அதிபராக ருப்பய்யா பண்டா

ருப்பய்யா பண்டா
ருப்பய்யா பண்டா

ஜம்பியா நாட்டின் இடைக்கால அதிபராக இருந்த ருப்பய்யா பண்டா அவர்கள் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

கடந்த வியாழன் நடந்த தேர்தலில் அவர் சிறு வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துள் இரவரது பதவியேற்பு நடந்துள்ளது.

வறுமையையும் ஊழலையம் எதிர்த்துப் போராடுவேன் என்றும் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் மைக்கல் சத்தா அவர்கள் வாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்திடம் போகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியான எம்.எம்.டி கட்சி இது உணர்ச்சிகள் கொந்தளிக்கக் கூடிய ஒரு காலகட்டம் என்று கூறி, ஜம்பிய மக்கள் அனைவரையும் குழம்பாமல் இருந்து தேசிய ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் உதவும்படி கேட்டுள்ளது.

கலவரங்கள் மூளலாம் என்ற அச்சத்தில் தலைநகர் லுசாக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் லெவி முவனவாஸ அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து பண்டா அவர்கள் இடைக்கால அதிபராகப் பதவியேற்றிருந்தார்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Congo army withdraws under attack: Aid workers to evacuate Congo town as rebels advance

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008

காங்கோவில் மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் விசுவாசிகளுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இடம் பெயர்ந்தவர்களுகான ஒரு முகாம் தற்போது ஆளில்லாமல் இருக்கிறது என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் கிழக்கு காங்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

அரச துருப்புக்கள் பின்வாங்குவது போலத் தெரிகிறது என்றும், ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இராணுவத் தளத்தின் முழு கட்டுப்பாடும் கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கோமாவிலுளள ஐ நா வின் தலைமை அலுவலகம் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

US destroyer monitoring hijacked ship off Somalia: Pirates taking arms ship to Somali Islamist region, demand $20 mn for Ukrainian vessel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலை கண்காணிக்கிறது அமெரிக்க போர்க்கப்பல்

சோமாலிய கடற்கொள்ளையர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்கள்

சோமாலியா அருகே கடத்தப்பட்ட உக்ரைன் நாட்டு கப்பலில் இருக்கின்ற டாங்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் இறக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க அமெரிக்க போர்கப்பல் ஒன்று அதனை கண்காணித்து வருகின்றது.

மத்திய சோமாலியாவின் கடற்கரைக்கு அருகே கடத்தி செல்லப்பட்டு மற்ற கடத்தப்பட்ட கப்பல்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு கப்பல் தங்கள் கண்பார்வையில் இருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கென்ய இராணுவத்தினருக்கு இராணுவ பொருட்களை எடுத்து சென்ற இந்த கப்பலை கடத்தியவர்கள், கப்பலை விடுவிக்க பெரும் பணத்தை கேட்கின்றனர்.

இந்தக் கப்பலில் இருக்கும் டாங்கிகள் இப்பகுதியின் ஸ்திரதன்மையை குலைத்து விடும் என சோமாலியாவில் பெருமளவிலான இராணுவ செயற்பாடுகளை கொண்டுள்ள எத்தியோப்பியா கவலை தெரிவித்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

South Africa seeks to end anti-foreigner attacks: Anti-Immigrant Violence Continues

Posted by Snapjudge மேல் மே 19, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்கள் மீதான தாக்குதல்கள் நீடிக்கின்றன

வீதியில் கிடக்கும் சடலத்தை தூக்கும் பொலிஸ்காரர்

தென்னாப்பிரிக்காவில் குடியேறி சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் நீடித்துவருகின்ற நிலையில் அந்நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் காவல் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த இந்த வன்முறையில் இதுவரையில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஆபத்து தற்போது ஏற்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்க செஞ்சிலுவைச் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறிக்கிறார்கள் என்ற எரிச்சலுணர்வினால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை உருவாகியிருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 மே, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக வன்முறை

தென்னாப்பரிக்க காவல்துறையினர்
தென்னாப்பரிக்க காவல்துறையினர்

தென்னாப்பிரிக்கத் தலைநகர் ஜோஹன்னஸ்பர்கின் ஏழ்மையான பகுதிகளில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களுக்கு எதிராக அலையலையாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது நகரின் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது.

கிளீவ்லேண்ட் என்ற ஒரு புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர் அடித்தோ அல்லது உயிருடன் எரித்தோ கொல்லப்பட்டுள்ளார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஜிம்பாப்வே குடியேற்றக்காரர்களை இலக்குவைத்து ஒரு வார காலமாக நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இனவெறி காலத்தில் நடந்த வன்முறையோடு இதனை ஒப்பிட்டும் சில தலைவர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.


தென்னாபிரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான வன்செயல்கள்

பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து அங்கு குடியேறியவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது வன்செயல்கள் ஜோஹனன்ஸ்பேர்க் நகருக்கு அண்மித்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதன் காரணமாக 13,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், காவல் நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அரங்குகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும் உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்கள் சரியான ஆவணங்கள் உள்ள எந்த ஒருவரும் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் சட்டங்கள் சரியான முறையில் கடுமையாக அமல் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் காவல்துறையினரும் அவர்களுக்கு அனுசரணையாக ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 2 Comments »