Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Islam’

Senior Al Qaeda member killed in US raid in Syria, officials say: Eight people dead after US attack on Syrian town, says Damascus

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008


எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.

எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.

இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.


Posted in Govt, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

US destroyer monitoring hijacked ship off Somalia: Pirates taking arms ship to Somali Islamist region, demand $20 mn for Ukrainian vessel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலை கண்காணிக்கிறது அமெரிக்க போர்க்கப்பல்

சோமாலிய கடற்கொள்ளையர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்கள்

சோமாலியா அருகே கடத்தப்பட்ட உக்ரைன் நாட்டு கப்பலில் இருக்கின்ற டாங்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் இறக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க அமெரிக்க போர்கப்பல் ஒன்று அதனை கண்காணித்து வருகின்றது.

மத்திய சோமாலியாவின் கடற்கரைக்கு அருகே கடத்தி செல்லப்பட்டு மற்ற கடத்தப்பட்ட கப்பல்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு கப்பல் தங்கள் கண்பார்வையில் இருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கென்ய இராணுவத்தினருக்கு இராணுவ பொருட்களை எடுத்து சென்ற இந்த கப்பலை கடத்தியவர்கள், கப்பலை விடுவிக்க பெரும் பணத்தை கேட்கின்றனர்.

இந்தக் கப்பலில் இருக்கும் டாங்கிகள் இப்பகுதியின் ஸ்திரதன்மையை குலைத்து விடும் என சோமாலியாவில் பெருமளவிலான இராணுவ செயற்பாடுகளை கொண்டுள்ள எத்தியோப்பியா கவலை தெரிவித்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Kashmiri Hindus Suspend Protest On New Pact, Muslims Reject Accord: Amarnath pact: Curfew re-imposed in some areas

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

காஷ்மீர் கோயில் விவகாரத்தில் புதிய உடன்பாடு

காஷ்மீர் ஆர்ப்பாட்டங்கள்
காஷ்மீர் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் காஷ்மீரில், கோயில் ஒன்றை சுற்றியிருக்கின்ற நிலத்தை பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சையில், அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தை இந்துக்கள் கைவிட்டுள்ளனர்.

கோயிலை நடத்தும் வாரியத்திற்கு மேலதிகமாக நிலங்களை கொடுப்பதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சையால் இரு மதத்தினரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இப்போது நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், சர்சைக்குரிய நிலத்தை, வாரியத்தினர் தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.

இந்த செய்தியானது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில் புதிய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Malaysian Indian challenges dead brother’s conversion: Hindu family in court to reclaim relative’s body set to be buried as Muslim

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

மலேசியாவில் “சடலமும் சர்ச்சையும்”

மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்
மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்

மலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் சடலத்துக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பில், இந்து மதத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கும், அந்த நாட்டின் இஸ்லாமிய மத திணைக்களத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இலங்கேஸ்வரன் என்னும் பிறப்பால் இந்துவான, 34 வயதுடைய, தற்கொலை செய்துகொண்ட இந்த நபர், தனது குடும்பதுக்கு தெரியாமலேயே இஸ்லாத்துக்கு மாறி விட்டதாகக் கூறும் இஸ்லாமிய திணைக்களம், அவரது இறுதி அடக்கத்துக்காக, சடலத்தை தம்மிடம் தர வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், அவரது மத மாற்ற சான்றிதழில், அவரது கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இல்லாத காரணத்தால், அவரது மதமாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறும் அவரது குடும்பத்தவர், அவரை தமது இந்து முறைப்படி அடக்கம் செய்ய சடலத்தை தம்மிடம் தரவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய நாடான மலேசியாவில், சிறுபான்மையினத்தவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மத விவகாரத்தில் தொடருகின்ற முறுகலான உறவினை வெளிப்படுத்தும் அண்மைய சம்பவம் இதுவாகும்.

மரணத்தின் போதான பிணக்குகளை தவிர்ப்பதற்காக, மதம் மாறும் எவரும் அது பற்றி தமது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் இந்த வருட முற்பகுதியில் கூறியிருநந்தார்.

ஆனால், இந்த அறிக்கை பின்பற்றப்படுவதில்லை என்றும், ஒருவரது சடலம் அவருக்கு முன்பின் தெரியாதவர்களால் உரிமை கோரப்படும் சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்றும் மத நல்லிணக்கு குழு ஒன்று கூறியுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

18 civilians killed in Wanni blasts; Moothoor fishermen protest against fishing ban; Pillayan group supporters attack Muslim traders in Thaazhangkudaa

Posted by Snapjudge மேல் மே 26, 2008

இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.

கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.


மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Islamists Win 24 of 50 Seats in Parliament: Kuwait’s parliamentary elections

Posted by Snapjudge மேல் மே 19, 2008

குவைத் தேசிய தேர்தல்

தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமியவாதிகள்
தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமியவாதிகள்

வளைகுடா நாடான குவைத்தில் நடந்த தேசியத் தேர்தல்களில் இஸ்லாமியவாதக் கட்சிகள் வலுவான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவது முறையாக இந்த தடவையும் பெண்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தனர், மொத்த வேட்பாளர்களில் பத்து சதவீதம் பேர் பெண்கள் என்றாலும் ஒரு பெண் கூட இம்முறையும் வெற்றி பெறவில்லை.

குவைத் தேர்தல்களில் மத கடும்போக்காளர்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வலுவான நிலைக்கு வந்துள்ளனர்.

குவைத்தைப் பொறுத்தவரை கட்சிச் சின்னத்தை முன்னிலைப் படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யவது தடைசெய்யட்ட விஷயம் என்றாலும் எந்தெந்த வேட்பாளர்கள் எந்தெந்த கட்சியையும் கூட்டணியையும் சேர்ந்தவர் என்பதை வாக்களிக்கக்கூடிய மக்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகு அமைகின்ற தேசிய ஆட்சி மன்றத்தில், 24 இடங்களுடன் மத பழமைவாதிகள் வலுவான நிலையில் இருப்பார்கள். மொத்தம் 50 இடங்களைக் கொண்டது குவைத் நாடாளுமன்றம்.

குவைத் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் 2005ஆம் ஆண்டில் அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்ட பின்னர் நடக்கின்ற இரண்டாவது தேர்தல் இது. போன தேர்தலிலும் இந்த தேர்தலிலுமாக 27 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் என்றாலும் ஒருவர்கூட இதுவரை வெற்றிபெறவில்லை.

Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Pillaiyan appointed CM as LTTE strikes in Colombo – Hisbullah parts company in protest

Posted by Snapjudge மேல் மே 17, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008

கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் பிள்ளையான்

இலங்கையின் கிழக்கு மாகாண சபை முதல்வராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றிருக்கிறார். நிதி, திட்டமிடல், சட்டம்-ஒழுங்கு, மாகாண சபை நிர்வாகம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் பல துறைகளுக்கு பிள்ளையான் பொறுப்பேற்றுள்ளார்.

வேறு மூன்று அமைச்சர்களும் இந்த வைபவத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

துரைரட்ணம் நவரத்தின ராஜா வரதன் விவசாயம், கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராகியுள்ளார்.

கல்வி கலாச்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளுக்கான அமைச்சராக விமலவீர திஸ்ஸநாயக பதவியேற்றார்.

மீரா சாஹிப் உதுமான் லெப்பே வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு பொறுப்பேற்றார்.

பிள்ளையான் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் மறுப்பு

இதனிடையே, கிழக்கு மாகாணசபைக்கு பிள்ளையான் அவர்கள் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஏ.எஸ்.ஜவாஹர் சாலிஹ் மற்றும் எம்.எஸ்.சுபேர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தாங்கள் மூவரும் தனியொரு குழுவாக செயல்படப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தங்கள் குழுவுக்கு ஹிஸ்புல்லாவே செயலர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையான் தலைமையில் அமைகின்ற அரசுக்கு தங்களுடைய ஆதரவு கிடையாது என்று தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

சுழற்சி முறையில் தமிழ் முஸ்லிம் இனங்களிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற யோசனையில் தனக்கு உடன்பாடு இருந்தாலும், அதிக பிரதிநிதிகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்கள் என்பதால் தன்னையே முதலில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் முஸ்லிமாகும் நிலை வந்தால் அதனை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இந்திய மீனவர்கள் சிக்கிக்கொள்ளும் விவகாரம்: வெளியுறவுத்துறையை அணுகி மீனவர்கள் முறையிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா இலங்கைக்கு இடையிலான கடல்பரப்பில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும், இதிலிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய நடுவணரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும், இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கம் வெள்ளியன்று வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.

அது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மீனவர்கள் முதலில் இந்திய வெளியுறவுத் துறையிடம் இவ்விவகாரத்தை முறையிட்டு நடவடிக்கை கோரவேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்தும், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் பொதுச் செயலர் போஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒன்றில், குறைந்தது 8 பொலிஸ்காரர்களும், இரண்டு பொதுமக்களும், தற்கொலையாளியும் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரின் சன சந்தடி மிக்க வணிகப் பகுதியில், பொலிஸாரின் பஸ் ஒன்றுடன், தற்கொலையாளி தனது மோட்டார் சைக்கிளை மோதி வெடிக்கவைத்ததாக, இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் உட்பட 90 க்கும் அதிகாமனோர் இதில் காயமடைந்ததாக, வைத்தியசாலை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் என்று கூறி ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கண்டித்துள்ளார்.

இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து உடனடியாக கருத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை.


Posted in Govt, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

மலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு

Posted by Snapjudge மேல் மே 15, 2008


ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்

மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »