முன்னணி இந்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் காலமானார்
இந்தியாவின் முன்னணி நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான விஜய் டெண்டுல்கர் புனேவில் தனது இல்லத்தில் காலமானார். எண்பது வயதான விஜய் டெண்டுல்கர் நெடுநாளாக சுகவீனமடைந்திருந்தார்.
தனது தாய்மொழியான மராத்தியிலும் ஹிந்தியிலும் எழுதிவந்த அவர், தனது நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் பிற உரைநடைகளுக்காக பல விருதுகளை வாங்கியவர்.
அவரது பிரபலமான படைப்புகளுக்கு 1970களில் பழமைவாத நேயர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது, ஆனால் காலம் செல்லச் செல்ல அப்படைப்புகள் பெரும் புகழ் பெற்றன.