Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Death’

18 civilians killed in Wanni blasts; Moothoor fishermen protest against fishing ban; Pillayan group supporters attack Muslim traders in Thaazhangkudaa

Posted by Snapjudge மேல் மே 26, 2008

இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.

கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.


மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Chennai: Harassed couple ends life – Loving women: Being lesbian in India

Posted by Snapjudge மேல் மே 19, 2008

சென்னையில் ஒன்றாக தீக்குளித்த இரண்டு பெண்கள்

பெண் ஓரினச் சேர்க்கையை குறிக்கும் சின்னம்

மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்கக வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்த, மனம் கசந்து இருவரும் தங்களுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்டு மரித்திருக்கிறார்கள்.

40 வயதான ருக்மணி மற்றும் 38 வயதான கிறிஸ்டி ஜெயந்தி மலர் ஆகிய இந்த இரு பெண்களுக்கிடையே பாலுறவு இருந்ததாகவும் அதனாலேயே இருதரப்பு உறவினர்களும் கடுமையாக அவர்கள் நட்பிற்கு ஆட்சேபித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மணமானவர்கள், அவர்களில் மலருக்கு எட்டு வயது மகன் ஒருவரும் இருக்கிறார். ஆனால் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே இருக்க முயன்றிருக்கிறார்கள். அடிககடி ருக்மணி தனது குடும்பத்தை விட்டு மலரின் வீட்டுககுச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்கொலை என்று மட்டுமே வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இறந்த பெண்களை சந்திக்கக்கூடாது என்று வற்புறுத்தியதாக உறவினர்கள் மீதெல்லாம் முதல் தகவலறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்றார்.

ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்திருகின்றனர். தத்தம் குடும்பத்தினரின் ஆட்சேபணைகளை மீறி நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரியவந்திருப்பதாகவும், அவ்விருவருககிடையே என்னமாதிரியான உறவிருந்தது என்பது எல்லாம் மேல்விசாரணையிலேயே தெரியவரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பெண்களிடையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பாக பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.நாராயண ரெட்டி தமிழோசைக்கு வழங்கிய சில கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

19 Tamil Nadu fishermen blindfolded, attacked by Sri Lanka Navy for 5 days; India extends ban on LTTE by two years

Posted by Snapjudge மேல் மே 15, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 மே, 2008


கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு ஒத்திப்போடப்பட்டுள்ளது

சந்திரபால லியனகே

இலங்கையில், வெள்ளியன்று நடைபெறவிருந்த, கிழக்கு மாகாண சபைக்காக புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி, பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த சந்திரபால லியனகே அவர்கள், கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் யார் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இன்று முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

ஆகவே இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக, கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் உறுப்பினர்களுடன் நாளை சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்திலேயே முதலமைச்சர் நியமனம் குறித்த இறுதி முடி எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்துள்ளது

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது தான் விதித்திருந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய உள் துறை அமைச்சகத்திலிருந்து விடுக்கப்பட்ட ஒரு அறிக்கை இந்த குழு ஒரு சட்டவிரோத அமைப்பு என்று கூறியது.

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா 1992ல் முதன் முதலில் தமிழ்ப்புலிகள் அமைப்பை தடை செய்தது. இந்த கொலைக்கு புலிகளே காரணம் என்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் சில விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் இந்த தடைக்கு எதிராக பிரச்சாரம் செய்துவந்தன.

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல் சமீப மாதங்களில் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இந்த தடை நீட்டிப்பு வருகிறது.


இலங்கையில் கைதான 19 இந்திய மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடமேற்கே தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 19 இந்திய மீனவர்களை வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மூன்று மீன்பிடி இழுவைப் படகுகளில் வந்த இவர்கள், கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, கடற்படையினரால் விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் வியாழனன்று பொலிசாரினால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் உடனடியாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையில் வவுனியா, மன்னார், ஜனகபுர, மணலாறு பிரதேச போர்முனைகளில் நேற்று இராணுவத்தினர் மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைளின்போது இரு தரப்பிலும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.


Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Hope for prisoners facing death row in India

Posted by Snapjudge மேல் மே 5, 2008

இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கோரிக்கை

இந்தியாவில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மரண தண்டனையை சட்டத்திலிருந்து அகற்றும் நோக்கில் இந்தியா நகரவேண்டும் என்று மனித உரிமை அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மரண தண்டனைகள் குறித்து தனது பங்கில் முதல் முறையாக ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ள இந்த அமைப்பு, இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் நிறைய கோளாறுகள் இருப்பதாகவும், யதேச்சதிகாரப் போக்கு, பாரபட்சம் காட்டப்படுவது போன்ற கவலைகள் தென்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்றாலும் கடந்த பதிமூன்று ஆண்டுகளில் இரண்டு பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் குரல்கொடுத்துவரும் பி.யு.சி.எல். அமைப்பின் தமிழகத் தலைவர் வி சுரேஷ் மற்றும் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும் சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குருமான டி.ஆர்.கார்திகேயன் ஆகியோர் தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Amnesty urges India to abolish capital punishment

NEW DELHI (AFP) – Amnesty International Friday appealed to India to declare a “moratorium” on executions as an interim step towards abolishing the death penalty.

The London-based rights group said there was a worldwide trend towards abolition and urged India to “declare an immediate moratorium on executions with a view to abolishing the death penalty.”

As an emerging power, “India has an opportunity to exercise regional leadership and to send a strong signal of its determination to fully uphold human rights” by rejecting the death sentence, it said.

Amnesty India chief Mukul Sharma said the report was based on the belief that the “death penalty violates the right to life and does not have any place in the modern justice system.”

“There was no comprehensive study on the impact or consequences of awarding the death penalty” for many decades, he noted.

President Pratibha Patil has about 60 mercy petitions under review for people on death row including the high-profile case of a Muslim man, Afzal Guru, sentenced to hang for plotting a 2001 attack on parliament.

The petition is Guru’s last hope after the Supreme Court in 2006 upheld his death sentence for conspiracy in the attack that nearly brought nuclear-armed India and Pakistan to war in 2002.

He has claimed innocence in the attack and many opponents of his execution say he did not get a fair trial.

The rights watchdog said it feared India’s leaders lacked the political courage and human rights leadership to abolish the death penalty, with the public “erroneously” believing it deters violent crime.

After studying 56 years of evidence used to hand down death sentences, Amnesty said it had found “abuse of law and procedure and arbitrariness and inconsistencies in the investigation process.”

“In practice, the exercise of clemency has even more potential for abitrariness than the judicial process, especially since there is no requirement to give reasons for accepting or rejecting mercy petitions,” Sharma said.

The last execution in India was in 2004 when a 41-year-old former security guard was hanged for the rape and murder of a 14-year-old schoolgirl.

India’s Supreme Court ruled in 1980 the death penalty was to be imposed only in the “rarest of rare” cases. But Amnesty said some people were handed death sentences for crimes for which others received lesser punishment.

Vikramjit Batra, who wrote the report, said “many Supreme court judges themselves have pointed out the absence of a clear sentencing policy or what constitutes the rarest of the rare.

He described India’s judicial and police system as “riddled with errors,” saying the Supreme Court had acquitted the accused in 175 of the 728 cases he reviewed because the lower courts’ verdict was erroneous.

Posted in Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 1 Comment »