Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Cinema’

Bollywood: Shooting schedules hit as cine strike enters second day: Film workers begin stir over pay, timings: Strike by 100,000 Movie Employees

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2008

இந்தியாவில் திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்

திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தத்தில் இந்திய திரைத் துறையினர்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்தி திரைப்படத் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது அல்லது ஊதியமே தரப்படுவதில்லை என்று கூறி நடிகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாற்பது படங்களின் படப்படிப்பு தடை பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த காலவரையரையற்ற வேலைநிறுத்தம் தொடர்ந்தால் வரவிருக்கும் விழாக்கால வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

திரைப்பட ஊழியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கியச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் சங்கங்களில் இல்லாதவர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இப்படிச் செய்வதன் காரணமாக ஊதியங்கள் குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Posted in Economy, Finance, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Machan screened in 65th Venice Film Festival

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

வெனீஸ் திரைப்பட விழாவில் ‘மச்சான்’

'மச்சான்' திரைப்பட காட்சி
‘மச்சான்’ திரைப்பட காட்சி

வெனீஸ் நகரில் நடந்து வரும் திரைப்பட விழாவில் இவ்வாரக் கடைசியில் காண்பிக்கப்படுகின்ற ஒரு திரைப்படமான மச்சான், வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பில் உருவான மிகச் சில இலங்கைத் திரைப்படங்களுள் ஒன்று.

ஜெர்மனியில் குடியேறவேண்டும் என்பகிற உண்மை உள்நோக்கத்துடன் இருக்க, ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவது என்ற போர்வையில் அந்நாட்டுக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் பற்றிய உண்மைச் சம்பவம்தான் இந்த படத்தின் கதை.

திரைப்படத் தயாரிப்பாளர் உபெர்டோ பசோலினியின் பார்வையில் பட்ட ஒரு செய்திக் குறிப்பு கொழும்பை மையமாகக் கொண்டு அவர் ‘மச்சானை’ உருவாக்க காரணமாக காரணமாக அமைந்தது.

இலங்கை இளைஞர்கள் பற்றிய இந்த சம்பவத்தில், நட்பு வாழ்க்கைப் போராட்டம் என பார்வையாளர்களை கட்டிப்போடக்கூடிய ஒரு நல்ல கதைக் கரு இருக்கிறது என்று பசோலினி உணர்ந்திருந்தார்.

தங்களுடைய தாய்நாட்டைத் துறந்து வெளிநாடு சென்று ஒரு மேம்பட்ட வருமானம் ஈட்டுகிற ஒரு வாழ்க்கையை இளைஞர்கள் தேடும் நிலைக்கு தள்ளப்படுவது குறித்த ஒரு பார்வையை இலங்கை தாண்டியும் இப்படம் ஏற்படுத்தும் என்று உபெர்டோ பசோலினியும் மஹேந்திர பெரேராவும் நம்புகிறார்கள்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

கத்ரீனா கைஃப்

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2008

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

அதே நேரம்; அதே இடம்: பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலஷ்மி அகத்தியன்

Posted by Snapjudge மேல் ஜூலை 15, 2008

Tamil Cinema Posters & Banners

Tamil Cinema Posters & Banners

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

(மைக்) மோகன் :: சுட்டபழம் (Adults Only)

Posted by Snapjudge மேல் ஜூலை 12, 2008

Sex Sells - Posters in Dhinathanthy

Sex Sells - Posters in Dhinathanthy

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

வெங்கட் பிரபு :: சரோஜா – யுவன் சங்கர் ராஜா: விளம்பரம்

Posted by Snapjudge மேல் ஜூலை 12, 2008

Yuvan Shankar Raja - Audio

Yuvan Shankar Raja - Audio

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | 1 Comment »

சேரனின் ‘பொக்கிஷம்’: தினமணி விளம்பரம் – நாளிதழ் சுவரோட்டி

Posted by Snapjudge மேல் ஜூலை 12, 2008

Yugabharathy

Director Cheran - Tamil Movies: Yugabharathy

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam: Sify Photos – Kamal’s 10 Screen Faces: Images

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Tamil Actor Kamalahassan: Life story, Biography, Movie History – Dinathanthi

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

மங்கள வாத்தியம்

இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத் தயாரித்த “மங்கள வாத்தியம்” என்ற படத்திலும் கமல் ஹீரோவாக நடித்தார்.

கமல் அறிமுகமாகிற காட்சியில் “வண்டின்னா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான்” என்ற பாடல் வரும். பாடல் காட்சியின்போது கமல் “வாத்தியார்” என்று பாடுகிற இடத்தில், எம்.ஜி.ஆர். பட போஸ்டரை திரையில் காட்டுவார்கள். இந்தக் காட்சியின்போது, திரையரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

கமல் எம்.ஜி.ஆரின் அபிமானி என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு கமலின் ரியாக்ஷன் எதுவுமில்லை என்பதால் அந்தப் பேச்சு அடங்கிவிட்டது. படமும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

“பராசக்தி” படத்தில் சிவாஜியை இயக்கிய டைரக்டர்கள் கிருஷ்ணன் – பஞ்சு கமலை நாயகனாக வைத்து இயக்கிய முதல் படம் “நீலமலர்கள்.” இந்தியில் வெற்றி பெற்ற “அனுராக்” என்ற படத்தை தமிழில் ரீமேக்காக உருவாக்கினார்கள், இவர்கள். தமிழில் சுமார் என்றாலும், தெலுங்கில் “அனு ராகலு”, மலையாளத்தில் “ராகம்” என்ற பெயர்களில் “டப்” செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

உல்லாசப் பறவைகள்

1980-ம் ஆண்டுவாக்கில் பெரிய பட்ஜெட்டில் கமலை வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் “உல்லாசப் பறவைகள்.” படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்தது. கமலுக்கு ஜோடியாக “புதிய வார்ப்புகள்” ரதி நடித்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கினார்.

இந்தப்படமும் கமல் பட வரிசையில் `சுமார்’ பட்டியலில்தான் சேர்ந்தது.

டைரக்டர் ஐ.வி.சசி, கமல்-ரஜினி இருவரையும் தனது இயக்கத்தில் “அலாவுதீனும் அற்புதவிளக்கும்” மலையாளப்படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படம் தமிழிலும், தெலுங்கிலும்கூட `டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தில் கமலுக்கும், ரஜினிக்கும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகளும் இருந்தன. இருந்தும் எல்லோருக்கும் தெரிந்த “அலாவுதீன்” கதை என்பதால், ரசிகர்கள் படத்தை பெரிதாக ரசிக்கவில்லை. குறிப்பாக தமிழ் ரசிகர்களிடம் “அற்புத விளக்கு” ஒளிவீசவில்லை.

இதன்பிறகு ஐ.வி.சசி கமலை மலையாளத்தில் “ஈட்டா” என்ற படத்தில் நடிக்க வைத்தார். இதுவும் கமலின் பட எண்ணிக்கையை கூட்டும் படமாகவே அமைந்துவிட்டது.

குரு

எப்படியும் கமலுக்கு ஒரு வெற்றிப்படம் தந்தேயாகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஐ.வி.சசி. இந்தியில் வெற்றி பெற்ற “ஜ×க்னு” என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து கமலைப் பார்த்தார். போலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் ஒரு கொள்ளைக்காரன், ஏழைகளுக்கு உதவும் குணம் படைத்தவன். அனாதை இல்லமும் நடத்தி வருகிறான். கொள்ளைப் பணத்தில் கோடீசுரவனான அவன்தான் `பிரபல கொள்ளையன்’ என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவனை பொறி வைத்து பிடிக்க போலீஸ் காத்திருக்கிறது.

இப்படியொரு கொள்ளைக்கார “குரு” வேடத்தில் கமல் நடித்தார். ஸ்ரீதேவியுடனான காதல், போலீசுக்கே சவால் விடும் வகையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தங்க மீனை திருடும் சாகச காட்சி என்று ரசிகர்கள் ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தன.

“பறக்காதே கிடைக்காது”, “பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?” போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் உற்சாக இறக்கை கட்டிப் பறந்தார்கள். படம் நூறு நாள் படமாகி, ஐ.வி.சசியின் லட்சியத்தையும் நிறைவேற்றி வைத்தது.

திரைப்பட வரலாறு :(944)
கமல்-ஸ்ரீதேவி நடித்த “மீண்டும் கோகிலா”

கமல் நடிப்பில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது “மீண்டும் கோகிலா.” இந்தப் படத்தை முதலில் டைரக்டர் மகேந்திரன் இயக்குவதாக இருந்தது. அவர் விலகிக் கொண்ட பிறகு டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இதுவும் வெற்றிப்படமானது.

படத்தில் கமல் ஜோடியாக ஸ்ரீதேவியும், நடிகை கேரக்டரில் தீபாவும் நடித்தார்கள். தீபா கேரக்டரில் முதலில் பிரபல இந்தி நடிகை ரேகா (ஜெமினிகணேசன் மகள்) நடித்தார். அவர் விலகிக்கொள்ள, தீபா அந்த வேடத்தை ஏற்றார்.

“மீண்டும் கோகிலா” படத்தின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன், இந்தப்படம் வளர்ந்த பின்னணி பற்றி கூறியதாவது:-

மகேந்திரன் விலகல்

“டைரக்டர் மகேந்திரன்தான் “மீண்டும் கோகிலா” படத்தை இயக்க இருந்தார். படத்துக்கு பூஜை போடப்பட்டு ஒரு பாடலும் பதிவாகி விட்ட நிலையில், சில காரணங்களால் மகேந்திரன் விலகிக் கொண்டார்.

இதன் பிறகு கமல் என்னை அழைத்து, “அண்ணா! இந்தப் படத்தை நீங்கள் இயக்குங்கள்” என்றார். கதை விவாதத்தில் என் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்தார்.

இந்தக் கதை பிராமண குடும்ப பின்னணியை கொண்டது. பிராமணர்களான கமலும், அனந்தும் கதை விவாதத்தில் என்னுடன் கலந்து கொண்டனர். சில காட்சிகளை நான் சொன்னபோது, “பிராமணர் பாணி உச்சரிப்பை அப்படியே உச்சரிக்கிறீர்களே! எப்படி?” என்று கமல் ஆச்சரியப்பட்டார். கோவை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியில்தான் எங்கள் குடும்பம் வசித்தது என்பதை கமலிடம் சொன்னபோது “அதனால்தான் பாஷை இவ்வளவு இயல்பாக வருகிறதா!” என்றார்.

ரேகா விலகல்

இந்தப் படத்தில் வரும் நடிகை கேரக்டரில் பிரபல இந்தி நடிகை ரேகாவை முதலில் ஒப்பந்தம் பண்ணிக் கொடுத்ததே கமல்தான். அவரும் உற்சாகமாக அந்த கேரக்டரில் நடித்தார். 3 ஆயிரம் அடி வரை அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தொடர்ந்து நடிக்க வராமல் இருந்து விட்டார். வராததற்கான காரணத்தையும் சொல்லவில்லை.

ரேகா சொல்லாமல் கொள்ளாமல் நின்று விட்டதில் கமல் `அப்செட்’ ஆகிவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது `தீபா’வை சிபாரிசு செய்ததும் அவர்தான்.

கணவனையே உயிராக நினைக்கும் மனைவி. கணவனோ ஒரு நடிகை மீது சபலம் கொண்டு திரிகிறான். வக்கீலாக இருந்தாலும் தொழிலில் அக்கறை இல்லாமல் இப்படி நடிகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததால் எந்த மனைவிக்கு பொறுக்கும்? இதில் மனைவி கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்தார். “மாமி” மேக்கப் அவருக்கு ரொம்பப் பொருந்தியது.

காமெடி

இந்த சீரியஸ் கதையின் முதல் நாள் படப்பிடிப்பின்போது தனது கேரக்டரில் சில மேனரிசங்களை கமல் கொண்டு வந்தார். கண்களை `சட் சட்’டென இமைப்பது, வெகுளித்தனமான நடவடிக்கைக்கான பாடி லாங்வேஜ் என்று அவர் வெளிப்பட்டபோது, அவரது கேரக்டரை காமெடிப் பின்னணியில் கதைக்குள் செலுத்த முடிவு செய்தோம். முழுப்படத்திலும் கமலின் இந்த `வெகுளித்தன’ நடிப்பு ஜொலித்தது. இந்த வகையில் ஒரு சீரியஸ் கதை கமலின் நடிப்பு வித்தியாசத்தில் நகைச்சுவை முலாம் பூசிக்கொண்டதில் படம் பெரிய வெற்றிப்படமானது.

செட்டில், சதா ஜாலியும், கேலியுமாக கமல் வலம் வருவார். எதற்காவது எனது உதவியாளர்களை சீண்டிக் கொண்டே இருப்பார். `கிளாப்’ அடிக்க வருபவரைக்கூட இடுப்பில் `கிச்சு கிச்சு’ காட்டி அலற வைப்பார். ஆனால் கேமரா `ஸ்டார்ட்’ ஆனதும் அந்தக் கணமே மாறிவிடுவார். எந்தக் கேரக்டரில் நடிக்கிறாரோ அந்த கேரக்டரை அப்படியே காமிராவுக்குள் பதிவு செய்துவிடுவார். முந்தின நொடியில் கேலியும் கிண்டலுமாய் சீண்டிக் கொண்டிருந்தவரா இவர் என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி” என்ற பாடல் ரசிகர்களுக்கு தெவிட்டாத தேனாகிப்போனது. உரலில் வெற்றிலை இடிக்கும் ஓசையைக்கூட இசையாக்கி இருந்தார் இசைஞானி.”

இவ்வாறு டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் கூறினார்.

வறுமையின் நிறம் சிவப்பு

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரிக்கத் தொடங்கியிருந்த 1980-களில் அதை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார் டைரக்டர் கே.பாலசந்தர்.

படித்த பட்டதாரி இளைஞன் படிப்புக்கான வேலை கிடைக்காவிட்டால் தன்னை மாய்த்துக்கொள்வதோ, விரக்தியடைவதோ சரியான முடிவல்ல. “உழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான்” என்ற கண்ணோட்டத்தில் உருவாக்கிய இந்தக் கதைக்கு “வறுமையின் நிறம் சிவப்பு” என்ற பெயரை சூட்டினார்.

படித்து பட்டம் பெற்ற நான்கு இளைஞர்களின் கனவை, தனக்கே உரிய பாணியில் கையாண்டிருந்த பாலசந்தர், படத்தின் பெரும் பகுதிக்காட்சிகளை டெல்லியில் எடுத்திருந்தார்.

மற்ற 3 நண்பர்களும் தங்களுக்கேற்ற நல்ல வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ள, கமல் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். அந்த போராட்ட வேளையிலும் கமலை மனதார நேசிக்கும் ஸ்ரீதேவி, படித்து நல்ல வேலையில் இருப்பதால் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரதாப்.

நல்ல வேலையில் அமரும்வரை வீடு திரும்புவதில்லை என்று தந்தையிடம் சபதம் செய்யும் இளைஞன் கமல், தன் லட்சியத்தில் பின்னடைவு ஏற்படும்போது சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்து தனது தன்மானத்தையும் பொருளாதார தேவையையும் ஈடுகட்டுகிறார். கடைசியில் பெற்ற தந்தைக்கே முடி திருத்தும் காட்சியுடன், படத்தை உணர்ச்சிபூர்வமாக முடித்திருந்தார், பாலசந்தர்.

“நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்”, “சிப்பியிருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் என்னடி ராஜாத்தி”, “தீர்த்தக் கரைதனிலே” போன்ற பாடல்களும் படத்தின் வெற்றிக்குத் துணை நின்றன. நூறு நாளைத்தாண்டி ஓடிய படம் இது.

படத்தில் கவிஞர் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் “சிப்பியிருக்குது முத்தும் இருக்கிறது” பாடலை புதுமையாக உருவாக்கியிருந்தார்கள். ஸ்ரீதேவி சந்தம் சொல்கிற மாதிரியும், கமல் அதற்கு வார்த்தைகளை பொருத்துகிற மாதிரியும் அந்தப்பாடல் அமைந்து ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதுவரை நட்பாக பழகும் இருவரும் தங்களுக்குள் காதலை உணர வைக்கிற பாடலாகவும் இதை பிரமாதப்படுத்தியிருந்தார், பாலசந்தர்.

99-வது படம்

இதற்கிடையே, தேவர் பிலிம்சில் இருந்து “தாயில்லாமல் நானில்லை” வெற்றியைத் தொடர்ந்து மறுபடியும் கமலுக்கு அழைப்பு வந்தது. யானை வளர்க்கும் இளைஞனாக, “ராமன் லட்சுமணன்” படத்தில் கமல் நடித்தார். இதுவும் நூறுநாள் படம். கமலுக்கு அவர் நடிப்பில் இது 99-வது படம்.

திரைப்பட வரலாறு 943
ஜி.என்.ரங்கராஜன் டைரக்ஷனில்
கமலஹாசன் நடித்த “கல்யாணராமன்
வெள்ளி விழா கொண்டாடியது

கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த “கல்யாணராமன்” மிகப்பெரிய வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடியது.

கமலின் தமிழ்ப்பட மார்க்கெட்டை நிமிர்ந்து நிற்கச் செய்த படங்களில் கல்யாண ராமனுக்கு முக்கிய இடம் உண்டு. கமலின் அன்புக்குப் பாத்திரமான ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய முதல் படம் இது.

பல் அழகன்

படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் ஒன்று, எடுப்பான பல் கொண்ட இளைஞன். முன்பற்கள் வாயை மூட முடியாத அளவுக்கு துருத்திக் கொண்டிருக்கும் இளைஞனாக நடித்தார். கமல் முதன் முதலாக பல்லுக்கு `கிளிப்’ மாட்டி தன் முக அழகைக் குறைத்துக்கொண்டு இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்தார்.

“கல்யாணராமன்” படம் தொடங்கி “மீண்டும் கோகிலா”, “கடல் மீன்கள்”, “எல்லாம் இன்பமயம்”, “ராணித்தேனீ”, “மகராசன்” என்று கமல் நடித்த 6 படங் களை இயக்கியவர் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இயக்கிய முதல் படமே கல்யாணராமன்.

கல்யாணராமன் படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது பற்றி அவர் கூறியதாவது:-

புத்தர்

“கமலின் சிறு வயது முதலே அவரை நான் அறிவேன். ஏவி.எம். தயாரிப்பில் பீம்சிங் இயக்கிய “களத்தூர் கண்ணம்மா” படத்தில் கமல் சிறுவனாக நடிக்க வந்தபோதே அவரது சுறுசுறுப்பும், குழந்தைத் தனமும் என்னைக் கவர்ந்துவிட்டது.

கமலுடன் அவரது அண்ணன் சந்திரஹாசனும் வருவார். நான் எடிட்டிங் ரூமில் இருந்தால் பெரும்பாலும் என்னைப் பார்க்க கமல் அங்கேயே வந்துவிடுவார்.

கமல் இளைஞனான பீரியடில் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் உருவான “அன்புத்தங்கை” படத்தில் ஒரு பாடல் காட்சியில் புத்தராக நடித்தார். இதற்கான பின்னணி சுவாரசியமானது. இந்த பாடல் காட்சியில் புத்தராக நடிக்க முதலில் ஒரு நடிகையைத்தான் ஏற்பாடு செய்திருந்தோம். பாடல் காட்சிக்கு நடிக்க வந்த ஜெயலலிதா என்ன நினைத்தாரோ, பாடல் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். காரணத்தை அவரே சொன்னார். “புத்தர் வேடத்தில் இருக்கும் நடிகை அந்த வேடத்துக்கு பொருத்தமானவராகத் தெரியவில்லை. உங்கள் படத்தில் நடனக் காட்சி அமைக்கும் கமலஹாசனை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தால்கூட பொருத்தமாக இருக்கும்” என்றார்.

இது நல்ல யோசனையாகப் பட்டது. கமலிடம் புத்தராக நடிக்க கேட்டோம். அவரோ, அந்த வேடத்தில் மொட்டையடித்து நடிக்க வேண்டிவரும் என்பதால், “ஆளை விடுங்க” என்று ஓடிப்போய்விட்டார். ஆனால் நாங்கள் விடவில்லை. கமலிடம் “பயப்படவே அவசியமில்லை. மொட்டையடிக்க அவசியமில்லை. முடியை மட்டும் கொஞ்சம் கத்தரித்தால் போதும். மற்றதை மேக்கப்பில் சரிக்கட்டிக் கொள்ளலாம்” என்று அவர் மனதைக் கரைத்தோம். அப்போது டான்ஸ் மாஸ்டரின் உதவியாளருக்கு தினமும் 75 ரூபாய் சம்பளம். தங்கப்பன் மாஸ்டரின் உதவியாளர் என்ற முறையில் கமலும் இந்த சம்பளத்தைத்தான் வாங்கிக் கொண்டிருந்தார்.

புத்தர் வேடத்தில் நடித்தால் சம்பளம் 250 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று கூறினேன். அப்போதும் தயங்கியவரிடம், “இரண்டே நாளில் இந்தக் காட்சியை படமாக்கி விடலாம்” என்று நம்பிக்கை கொடுத்தேன். நாங்கள் எதிர்பார்த்தபடியே சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்தார் கமல்.

டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் நான் அசோசியேட்டாக இருந்த அந்த காலகட்டத்தில் கமல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். கமல் என்னை எப்போதுமே “அண்ணா” என்றுதான் அழைப்பார். நான் சிறுவயது முதலே அவரை பார்த்து வருவதால் அன்புடன் `வாடா போடா’ என்கிற ரீதியில் பேசுவேன். வளர்ந்துவிட்ட கமலை ஒருமுறை “வாங்க சார்” என்று சொல்லிவிட்டேன். உடனே கமல், “என்ன கிண்டலா?” என்று கேட்டார். வேண்டியவர்களிடம் மட்டும் அவர் இந்த உரிமையை எடுத்துக் கொள்வார்.

அப்போதெல்லாம் என்னை எப்போது பார்த்தாலும், “அண்ணா! எப்ப படம் டைரக்ட் பண்ணப்போறீங்க?” என்று கேட்பார். அவருக்காகவே சீக்கிரம் டைரக்டராக முடிவு செய்தேன்.

இது நிஜமா?

எஸ்.பாலசந்தர், முழு நேர வீணை வித்வானாக தன்னை மாற்றிக்கொள்ளுமுன், நடிகராகவும், டைரக்டராகவும் விளங்கியவர். அவர் இரட்டை வேடத்தில் நடித்த “இது நிஜமா” என்ற படத்தைப் பார்த்தேன். இறந்து போனவர் ஆவியாக வந்து தனது சகோதரன் உடலில் புகுந்து, வில்லன்களை பழிவாங்கும் கதை. பாலசந்தர் அற்புதமாக பண்ணியிருந்தார். இந்தக் கரு எனக்குள் தங்கி இதே பின்னணியில் ஒரு கதையை உருவாக்க வைத்தது. அந்தக் கதைதான் “கல்யாணராமன்.”

இந்தக் கதையை என் நட்பு வட்டாரத்தில் சொன்னபோது, “ஆவியாவது, கீவியாவது!” என்று கிண்டல் செய்தார்கள். எதற்கும் கமலிடம் சொல்லிப் பார்ப்போம் என்று ஒருநாள் மதுரைக்கு விமானத்தில் போகும்போது, இந்தக் கதையை சொன்னேன். கதையைக் கேட்டவர், “பிரமாதமா இருக்குண்ணா! இதையே பண்ணுவோம். அப்பாவி கேரக்டரில் வந்து செத்துப்போகும் இளைஞன் கேரக்டரையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவோம்” என்றார்.

அப்படி அவர் சிந்தித்து முடிவு செய்ததுதான் “முன் பல் தூக்கலான” கல்யாணராமன். ஒருநாள் செட்டில் `முன் பல் தூக்கலான’ பல்செட் கிளிப்பை போட்டுக் காண்பித்தவர், அந்த கேரக்டருக்கான சில மேனரிசங்களையும் செய்து காட்டினார்.

அந்த கேரக்டருக்கான உடைகளையும் அவரே தேர்வு செய்தார். `ஆகா காதல் வந்துருச்சு’ பாட்டில் நடனமாடும்போது இடுப்பில் பேப்பர் வைத்து ரசிக்கும்படியான காமெடி செய்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் கமலின் ஒரு காலில் முறிவு ஏற்பட்டது. கால் முறிவுக்கு சிகிச்சையை தொடர்ந்த நிலையிலேயே ஊட்டிக்கு வந்து சில காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.

“ஆவி கல்யாணராமனும், அவன் அண்ணனும் சந்திக்கும் இரட்டை வேட காட்சிகளில் நடிக்கும்போது கமலின் ஈடுபாடு மறக்க முடியாதது. குறிப்பாக `மாஸ்க் ஷாட்’களில், காட்சி சிறப்பாக அமைய சிரமப்பட்டு உழைத்தார்.

கமலிடம் நான் வியந்த ஒரு சிறப்பு, கதையை கேட்கும்போது அந்த கேரக்டருக்குள் தன்னை நிரப்பிக் கொள்வார். கேரக்டரில் ஏதாவது முரண்பாடு தெரிந்தால் அது தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் செய்வார். அது கதையை இன்னும் தெளிவாக்கவே செய்யும்.

கல்யாணராமன் படத்தில் மட்டுமின்றி அவரை நான் இயக்கிய மற்ற படங்களிலும் இந்த ஆரோக்கியமான விவாதம்தான் படங்களை வெற்றிப்பட்டியலில் சேர்க்க உதவியது என்றே சொல்வேன்.

“கல்யாணராமன்” படம் ரசிகர்களுக்கு கமலின் நடிப்பில் வித்தியாசமான படமாக அமைந்தது. வெள்ளி விழா படமாக்கினார்கள் ரசிகர்கள்.”

இவ்வாறு ஜி.என்.ரங்கராஜன் கூறினார்.

அடுத்தடுத்து வந்த படங்கள்

“சிகப்பு ரோஜாக்கள்” வெளியான மறுநாளே கமல் நடித்த இன்னொரு படமான “மனிதரில் இத்தனை நிறங்களா” படம் ரிலீசானது. இதில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும் அவர் கமலுக்கு ஜோடியில்லை. கமலுக்கு ஜோடியாக சத்யபிரியா நடித்திருந்தார். படத்தை கமலின் நண்பர் ஆர்.சி.சக்தி இயக்கி இருந்தார்.

இதற்கும் மறுநாள் கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த “அவள் அப்படித்தான்” படம் ரிலீசானது. ருத்ரையா இயக்கிய படம் இது.

ஒரு ஹீரோ நடித்த 3 படங்கள் இப்படி வரிசையாக வெளியான மாதிரி, வேறு எந்த ஹீரோவுக்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 72 மணி நேரத்துக்குள் 3 படங்கள் வந்ததால், சிகப்பு ரோஜாக்கள் பெற்ற வெற்றியை மற்ற 2 படங்களும் பெறத் தவறிவிட்டன.

நாகின்

இந்தியில் பாம்புப் பின்னணியில் வெளியான `நாகின்’ படம் அங்கே பெரிய அளவில் வெற்றி பெற்றது. `பாம்புகளுக்கும் ஆசாபாசம் உண்டு. பந்த பாசம் உண்டு. காதல் உண்டு. வாழ்க்கை உண்டு’ என்பதை கதைப் பின்னணியாக்கிய விதம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்தப்படம் “நாகமோகினி” என்ற பெயரில் தெலுங்கில் `டப்’ செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

நடிகை ஸ்ரீபிரியா “நாகின்” படத்தை பார்த்தார். இதை தமிழுக்கு தகுந்த மாதிரி மாற்றி எடுக்கலாமே என்று தோன்றியது. இதுபற்றி அப்போது `பிசி’ டைரக்டராக இருந்த `பசி’ துரையிடம் பேசினார். முன்னணி ஹீரோக்கள் 5 பேர் சேர்ந்து நடிக்க வேண்டிய கதையம்சம் கொண்ட படம் என்பதால் ஒவ்வொரு ஹீரோவிடமும் பேசினார், துரை. கமல், ரவிச்சந்திரன், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் என 5 ஹீரோக்கள் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். படத்தில் கமல் ஜோடியாக லதா நடிக்க, “பாம்பு” கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார். படத்தை ஸ்ரீபிரியாவின் அம்மா கிரிஜா பக்கிரிசாமி தயாரித்தார். அதுவரை பார்த்திராத திரைக்கதை. பாம்புகளின் போராட்டம், `ஈகோ’ பார்க்காமல் முன்னணி நடிகர்கள் நடித்தது இதெல்லாம் படத்தை வெற்றிப்பட வரிசையில் சேர்த்தது. “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா”, “நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா” போன்ற இளையராஜாவின் இசைப்பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போட்டன.

சின்னப்ப தேவர்

கமலின் வளர்ச்சியில் எப்போதுமே தனி அக்கறை கொண்டவர் சின்னப்ப தேவர். கமல் சிறுவனாகவும் இல்லாமல் இளைஞனாகவும் இல்லாமல் அல்லாடிய இரண்டும் கெட்டான் பருவத்தில் பட வாய்ப்பு சுத்தமாக நின்று போயிருந்தது. அந்த நேரத்தில் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக சேர்ந்து, நடிகர் – நடிகைகளுக்கு நடனப்பயிற்சி கொடுத்து வந்தார். அதோடு நடிப்பு வாய்ப்புக்கும் முயன்று வந்தார்.

19 வயதில் இந்த முயற்சியை கமல் தொடர்ந்த நேரத்தில் தேவரின் “மாணவன்” படத்துக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. படத்தின் கதாநாயகனாக ஜெய்சங்கர் நடித்தார். மற்ற நட்சத்திரங்களும் முடிவான நேரத்தில் ஒரு நடனப் பாடலுக்கு மட்டும் நடிகர் அமையவில்லை. நடனப் பாடலுக்கு நடனமாட ஏற்கனவே குட்டி பத்மினியை தேர்வு செய்து வைத்திருந்தார்கள்.

நடனமாட நடிகர் தேவை என்பது இளைஞன் கமலின் காதுக்கும் எட்ட, நேராக தேவர் பிலிம்ஸ் அலுவலகம் சென்றார். தேவர் முன்னிலையில் சில வகை நடனங்கள் ஆடிக்காட்டினார். திருப்தியடைந்த தேவர், “குட்டி பத்மினியுடன் இந்த பையனே ஆடட்டும்” என்று சொல்லிவிட, கமலும், குட்டி பத்மினியும், ”விசிலடிச்சான் குஞ்சுகளா” பாடலுக்கு நடனமாடி நடித்தார்கள்.

படத்தில் இந்தப் பாடலும் ஹிட்டானது. அதோடு நடன ஜோடிகளாக வந்த கமல் – குட்டி பத்மினி ஜோடியையும் ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.

தேவர் கொடுத்த “செக்”

இந்தப்படம் வெளிவந்த பிறகு அடிக்கடி வாய்ப்பு தேடி தேவர் பிலிம்ஸ் அலுவலகம் போவார் கமல். அப்போதெல்லாம் அவரை தேவர் அன்புடன் வரவேற்று விசாரிப்பதுண்டு. அப்போது கமல் ரொம்பவே ஒல்லி உடல்வாகுடன் காட்சியளிப்பார். ஒருமுறை உடல் நலக் குறைவில் இன்னும் மெலிந்து போயிருந்த கமலை தேவர் பார்த்தபோது, “என்னடா இப்படி இளைச்சுப் போயிட்டே? கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த மாதிரி வராதுல்ல” என்றார், வாஞ்சையோடு.

பதிலுக்கு கமல் அவரிடம், “படம் கிடைக்காமல் கல்யாணம் பண்ணிக்கிற தைரியம் வரலை” என்று சொன்னார்.

உடனே ஒரு வெற்றுச் செக்கை எடுத்து கமல் கையில் கொடுத்த தேவர், “இதை வெச்சிக்கடா! உனக்கு எவ்வளவு தேவையோ அந்தப் பணத்தை இந்த `செக்’கில் எழுதிக்கோ. நீ கல்யாணம் பண்ணினதும், எங்க கம்பெனிக்கு பண்ணப்போற படத்துக்கு இது சம்பளமா இருக்கட்டும்” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், கமல் நெகிழ்ந்து போய்விட்டார். தனக்கே நம்பிக்கை இல்லாத தன் எதிர்காலம் மீது, தேவருக்கு இருந்த நம்பிக்கை அவருக்கு ஆச்சரியம் தந்தது. அதோடு தன் மீதான தன்னம்பிக்கையையும் அது வளர்த்தது.

கமலின் கடின முயற்சி அவருக்கு படங்களை தேடித்தர, அவரை நடிப்பின் பல பரிமாணங்களுக்கு கொண்டு செல்ல ஒரு பாலசந்தர் அமைய, கமலின் நடிப்பு வட்டம் விசாலமானது. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று கமல் வளர்ந்த நேரத்தில் தேவர் பிலிம்சின் “தாயில்லாமல் நானில்லை” படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

ஆனால் இந்த கால கட்டத்துக்குள் தேவர் காலமாகிவிட்டார். தன் மீது நம்பிக்கை வைத்து `பிளாங்க் செக்’ தந்த தேவரின் நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க அழைப்பு வந்தபோது, இதைப் பார்த்து மகிழ தேவர் இல்லையே என்ற வருத்தம் கமலுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

தேவர் பிலிம்சின் இந்தப் படத்தில் கமல் – ஸ்ரீதேவி இணைந்து நடித்தார்கள். படம் வெற்றி. நூறு நாட்களை கடந்து ஓடியது.

திரைப்பட வரலாறு :(945)
கமலஹாசனின் 100-வது படம் – “ராஜபார்வை
அரசாங்கம் வரி விலக்கு அளித்தது

கமலஹாசனின் 100-வது படமான “ராஜபார்வை”யை, அவரே சொந்தமாகத் தயாரித்தார்.

சிறப்பாக அமைந்த இந்தப் படத்துக்கு அரசாங்கம் வரி விலக்கு அளித்தது.

தமிழ்ப்பட உலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய ஹீரோக்கள்தான் அவ்வப்போது சொந்தப்படம் எடுத்தார்கள். பெரும்பாலும் அவை வெற்றிப்படங்களாக அமைந்தன. மற்ற நடிகர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் படத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. காரணம், அது ரொம்ப “ரிஸ்க்.”

தயாரிப்பு அனுபவம் என்பது சாதாரணமில்லை என்பதை அனுபவித்தவர்களே உணர்ந்து கொள்ள முடியும். படிப்படியாக சினிமாவில் போராடி முன்னணி நாயகர் என்ற நிலைக்கு வந்துவிட்ட கமலஹாசன், நினைத்திருந்தால் மற்ற மொழிகளிலும் நடித்து பிஸியாக இருந்திருக்க முடியும். பணம் குவித்திருக்க முடியும்.

ஆனால் கமல் அதைச் செய்யவில்லை. தனது நூறாவது படத்தை சொந்தமாக தயாரிக்கும் முடிவுக்கு அவர் வந்ததே, அந்த 1980-ம் ஆண்டில் பட உலக அதிசயமாக பேசப்பட்டது.

27 வயது

கமலுக்கு அப்போது 27 வயதுதான். சினிமாவில் நடிப்பு, தொழில் நுட்பம் என்று வளரத் தொடங்கிய நேரத்தில் `தயாரிப்பு என்பது எத்தனை சுமை! வலி நிறைந்தது’ என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்! ஆனாலும், சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருந்துவிட்டால் போகட்டும் என்று கமல் நினைத்தார்.

கமலுக்கு அப்போதே, `சினிமாவில் வித்தியாசமான கதைகள் தரவேண்டும்’ என்ற தாகம் இருந்தது. நூறாவது படமாக அவர் உருவாக்கி வைத்திருந்தது பார்வையற்ற ஒருவனின் கதை. அந்த இளைஞனின் வாழ்க்கைச் சுழற்சி, அவனை நேசிக்கும் பெண், சமூகம் என்று புதுக்களம் அமைத்திருந்தார். கதையும் அவரே. திரைக்கதையும் அவர்தான். இந்த வகையில் சினிமாவில் கமலின் முதல் திரைக்கதையும் இதுதான்.

இயக்குனர்

படத்துக்கு யாரை இயக்குனராகப் போடுவது என்ற எண்ணம் கமலின் மனதில் தோன்றியபோது சட்டென அவரது நினைவுக்கு வந்தவர் சிங்கிதம் சீனிவாசராவ். இந்தப் படத்தில் தொடங்கிய கமல் – சிங்கிதம் நட்பில் தான் பின்னாளில் கமல் தயாரித்த சில படங்களுக்கு அவரே இயக்குனர் ஆனார்.

படத்தில் இளையராஜாவின் இசையில் “அந்தி மழை பொழிகிறது” பாடல் வைரமுத்துவின் வைர வரிகளில் ரசிகர்களை பரவசப்படுத்தியது.

வரி விலக்கு

படம் வெளியான முதல் வாரத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. ஆனால் பார்வையற்ற இளைஞனின் உணர்வுகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழக அரசு படத்துக்கு வரி விலக்கு அளித்தது. இதன் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளை நிறைக்கத் தொடங்கினார்கள். படம் நூறு நாள் ஓடி வெற்றி பெற்றது.

இந்தப்படம் `நேன்சி’ என்ற பெயரில் மலையாளத்தில் `டப்’ செய்யப்பட்டது.

கடல் மீன்கள்

“கல்யாணராமன்”, “மீண்டும் கோகிலா” படங்கள் மூலம் ரசிகர்களுக்கு புதுவித கமலை தந்த டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன், கடல் பின்னணியில் “அப்பா-மகன்” கதையை உருவாக்கி வைத்திருந்தார். இளைஞனாகவே பார்த்த கமலை வயதான அப்பா கேரக்டரிலும் நடிக்க வைத்தார், ரங்கராஜன். அந்தப்படமே “கடல் மீன்கள்.”

படத்தில் கமலுக்கு ஜோடி சுஜாதா.

டைரக்டர் ஷங்கர் பின்னாளில் இயக்கி வெற்றி கண்ட “இந்தியன்” படத்திலும் கமல் அப்பா – மகன் வேடங்களில் நடித்தார். அப்படியொரு அப்பா கேரக்டரை ஷங்கர் உருவாக்க, அதற்கு முன்னோடியாக இருந்தது கடல் மீன்களில் வந்த `அப்பா கமல்’ கேரக்டர்தான்.

“கடல் மீன்கள்” அப்பா கேரக்டரில் நடிக்க கமல் ரொம்பவே சிரத்தை எடுத்துக்கொண்டார். `அப்பா’ மேக்கப் போட 2 மணி நேரம் ஆனது. அந்த மேக்கப்
3 மணி நேரம்தான் தாங்கும். அதுவும் படப்பிடிப்பு முழுவதும் கடல் பின்னணியில், கடலுக்குள் நடந்ததால் உப்புத்தண்ணீர் பட்டு சீக்கிரமாய் மேக்கப் கலைந்து விடும் அபாயமும் இருந்தது.

இந்த அப்பா மேக்கப் போட்டு முடித்து அதை கலைக்கும் வரை கமலால் எதுவும் சாப்பிட முடியாது.

அதிகபட்சமாக தாகத்துக்கு ஜுஸ் ஏதாவது பருகிக் கொள்ளலாம். அவ்வளவுதான். என்றாலும் கேரக்டர் மீதான ஈர்ப்பில் சிரமங்களை கருதாமல் இந்த கேரக்டரில் நடித்தார், கமல்.

வயிற்று வலி

இதோடு இன்னொரு கஷ்டத்தையும் இந்த பட சமயத்தில் கமல் அனுபவித்தார். கடலுக்குள் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கமலுக்கு `அல்சர்’ பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் வயிற்று வலியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நேரம் வயிற்று வலி அதிகமாகி துடித்துப்போகும் கமல், தன் வலி பற்றி மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடுவதில்லை.

நடுக்கடலில்

“பொதுவாக அல்சர் நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு `சட் சட்’டென கோபம் வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடிப்பைத் தொடர்ந்தார். `அல்சர்’ வேதனையை முகத்தில் அவர் பிரதிபலித்து ஒருபோதும் நான் பார்த்ததில்லை” என்கிறார், படத்தின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன்.

இந்தப்படத்தில் கடலுக்குள் எடுத்த ஒரு காட்சியின்போது நடந்த சம்பவம் பற்றி இவர் சொன்ன தகவல் இன்னும் ஆச்சரியமானது. ஒரு முறை படகு நடுக்கடல் வரை போய்விட்டது. எப்படி கரைக்கு வருவது என்று தெரியாமல் படகில் இருந்தவர்கள் தவித்துக் கொண்டிருக்க, கமலோ நடுக்கடலில் படகை ஆட்டி, குலுக்கி சுஜாதாவை பயமுறுத்திக் கொண்டிருந்தார். சுஜாதாதான் ரொம்பவே பயந்து நடுங்கினார்.

கரை சேருவோமா என்று மற்றவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில், எப்படி இப்படி எந்தவித பயமுமின்றி உங்களால் இருக்க முடிகிறது?” என்று கமலைக் கேட்டால், “கரைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு ஏன் தேவையில்லாத பயம்?” என்றிருக்கிறார், கமல். இந்த வகையில் “உலக நாயகன்” அப்போதே தைரிய நாயகனாகவும் இருந்தார்.

படத்தில் இளையராஜா இசையில் “தாலாட்டுதே வானம்” என்ற பாடல் காட்சி சுகராகம். இந்த பாடல் காட்சி மட்டும் கடலுக்குள் 7 நாட்கள் படமாக்கப்பட்டது.
திரைப்பட வரலாறு 947
பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை”
கமல் தேசிய விருது பெற்றார்

பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் உருவான “மூன்றாம் பிறை”யில் பிரமாதமாக நடித்து தேசிய விருது பெற்றார், கமலஹாசன்.

ஒளிப்பதிவாளராக தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய பாலுமகேந்திரா, 1977-ம் ஆண்டில் “கோகிலா” என்ற கன்னடப்படத்தை இயக்கி டைரக்ஷன் துறையிலும் முத்திரை பதித்தார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கமலஹாசன். நாயகி ஷோபா. மற்றும் ரோஜா ரமணி, மோகன் ஆகியோரும் நடித்தனர்.

1969-ம் ஆண்டு புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கு பயின்று வந்தபோதே, பாலுமகேந்திராவின் மனதில் “கோகிலா” கதை உருவாகி விட்டது.

ஒரு விமானப் பயணத்தின்போது, “கோகிலா” கதையை கமலிடம் பாலுமகேந்திரா கூறினார். அப்போதே கமலுக்கு கதையின் மீது ஈர்ப்பு ஏற்பட, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ரோஜா ரமணி நடித்த கேரக்டரில் முதலில் நடிகை சில்க் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ரோஜாமணியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 நாட்களில் உருவான படம்

24 நாட்களில் 26 பிலிம் ரோல்களில் படத்தை குறித்த நேரத்திலும் சிக்கனமாகவும் எடுத்து முடித்திருந்தார், பாலுமகேந்திரா.

“கலர்ப்படங்கள்” அவ்வளவாக வராத காலம் என்பதால் இந்தப் படத்தையும் கறுப்பு – வெள்ளையில்தான் ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா.

அந்த ஆண்டில் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அதோடு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார்.

இந்தப்படம் கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் கன்னட மொழியிலேயே வெளியிடப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் திரையிடப்பட்ட எமரால்டு தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது.

இந்த சமயத்தில்தான் கே.பாலசந்தர் டைரக்ஷனில் கமல் நடித்த “மரோசரித்ரா” தெலுங்குப்படம் சென்னை சபையர் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரே வளாகத்தில் இருந்த 2 தியேட்டர்களில் கமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

“கோகிலா”வுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 28 வருடங்களாக எந்த கன்னடப்படமும் இதுபோன்ற வெற்றியைக் கண்டதில்லை என்கிறார், இந்தப்படத்தின் உரிமையை வாங்கிய ஆர்.ஜி.வெங்கடேஷ்.

“கோகிலா”வுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பாலுமகேந்திரா தமிழில் “அழியாத கோலங்கள்” படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியபோது கமல் அவரை சந்தித்தார். “உங்கள் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப்படத்தில் நான் இல்லாமலா? நானும் இருக்கிறேன்” என்று உரிமை எடுத்துக்கொண்ட கமல், படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். “நண்பர்களுக்கு கமல் சார் கொடுக்கும் முக்கியத்துவம் இது” என்கிறார், டைரக்டர் பாலுமகேந்திரா. இந்தப்படம் வெற்றி விழாவையும் கடந்து 26 வாரங்கள் ஓடியது.

மூன்றாம் பிறை
இப்படி தனது படத்துக்கு ஒரு “கெஸ்ட்ரோல்” மூலம் மரியாதை கொடுத்த கமலுக்காக பாலு மகேந்திரா உருவாக்கிய கதைதான் “மூன்றாம் பிறை.” கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். படம் 329 நாள் ஓடி வெற்றி பெற்றது.

அதோடு இந்தப்படத்தை “சத்மா” என்ற பெயரில் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் உருவாக்கினார். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.

இந்தப்படம் மூலம் கமலுக்கு இந்தியிலும் “பிரமிக்க வைக்கும் நடிகர்” என்ற பெயர் கிடைத்தது.

தேசிய விருது

“மூன்றாம் பிறை” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 1982-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். அகில இந்திய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலு மகேந்திராவுக்கு கிடைத்தது.

படம் முழுக்க நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்குத்தான் இருந்தது. விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட 18 வயதுப்பெண், 10 வயது சிறுமியின் குணநலன் கொண்ட பெண்ணாக மாற, அவரை `குழந்தை’ போல் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கமலுக்கு வந்து சேர்கிறது. `குழந்தைக்குணம்’ கொண்ட ஸ்ரீதேவிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கேரக்டரில் கமலும் ஜொலித்தார்.

முடிவில் ஸ்ரீதேவிக்கு மன நிலை சரியாகிவிட, இடைப்பட்ட நாட்களில் தன்னை பாதுகாத்த, போஷித்த, உயிரையே வைத்திருந்த கமலை முழுவதுமாக மறந்து விடுகிறார். கமல் பலவிதங்களில் நினைவூட்டிப் பார்த்தும் அவர் நினைவு வளையத்துக்குள் கமல் வரவே இல்லை. கடைசியாய் ஸ்ரீதேவிக்கு பிடித்த `குட்டிகரணம்’ கூட அடித்து நினைவூட்ட முயலும் கமலை “யாரோ பிச்சைக்காரன் பாவம்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் ஸ்ரீதேவி, அவருக்கு கொஞ்சம் சில்லரைக் காசை போட்டு விட்டு ரெயிலில் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார்.

கிளைமாக்சில் தன்னை யார் என்று நிரூபிக்க, கமல் படும் அந்த 5 நிமிட வேதனைகள்தான் நடிப்பில் அவருக்கு தேசிய விருதை தேடித்தந்தது.

இந்தப்படத்தில் நடிகை சில்க் சுமிதாவும் இருந்தார். தனது அதிகபட்ச கவர்ச்சியால் தமிழ்த் திரையுலகை ஆட்டி வைத்திருந்த சில்க், இந்தப் படத்திலும் தனக்கான காட்சிகளில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. கமலுடன் சேர்ந்து “பொன்மேனி உருகுதே” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் காட்சியும் ஒரு காரணமாக அமைந்தது.

மிகுந்த திறமையுடன் பாலு மகேந்திரா உருவாக்கிய “மூன்றாம் பிறை”, ரசிகர்கள் கண்களில் பூரண நிலவாய் இன்றும் ஒளிவிடுகிறது.

சவால்

நடிகர் பாலாஜி அப்போது தயாரிப்பாளராகவும் மாறி படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜியின் “தங்கை” படத்தில் தொடங்கிய அவரது தயாரிப்பு, தொடர்ந்து சிவாஜி படங்களாக உருவானது. அதைத் தொடர்ந்து ரஜினி, கமல் படங்களைத் தயாரித்தார். கமலை வைத்து அவர் தயாரித்த முதல் படம் “சவால்.”

பாலாஜி அப்போது இந்தியில் வெற்றி பெறும் படங்களை தமிழில் “ரீமேக்” செய்து வந்தார். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற “ஹாத்தி கீ சபாய்” என்ற படத்தின் உரிமையை விலைக்கு வாங்கி தமிழில் அதை “சவால்” என்ற பெயரில் தயாரித்தார்.

சிறுவயதில் பிரிந்து விடும் அண்ணன் – தம்பி இருவரும் 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரும் கதை. இந்தக் கதையில் அண்ணன் பெரிய திருடன். தம்பி லோக்கல் திருடன் என்ற கருவை ஜாலியாக கையாண்டிருந்தார்கள். அண்ணனாக ஜெய்சங்கரும், தம்பியாக கமலும் நடித்தார்கள். கமல் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். படத்தில் மனோரமாவுடன் சேர்ந்து கொண்டு கமல் செய்யும் காமெடிக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. படமும் நூறு நாள் ஓடி வெற்றிப்படமானது.

டிக்… டிக்… டிக்

கமலை வைத்து நகரப் பின்னணியில் ஒரு திகில் கதையாக “சிகப்பு ரோஜாக்கள்” படத்தை தந்த டைரக்டர் பாரதிராஜா, மீண்டும் அவரை வைத்து இயக்கிய படம் “டிக் டிக் டிக்.” கமலுக்கு புகைப்படக் கலைஞராக வித்தியாசமான வேடம். அவரது வாழ்வில் சந்திக்கும்

3 இளம் பெண்கள் பின்னணியில் படத்தை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருந்தார், பாரதிராஜா.

இந்தப்படத்தில் பாடல் காட்சிகளை புதுமையாக உருவாக்கி இருந்தார். கமலின் 100 நாள் வெற்றிப் பட்டியலில் இந்தப்படமும் இணைந்து கொண்டது.

எல்லாம் இன்ப மயம்

கமலை வைத்து முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு சிரிப்பு காட்ட வேண்டும் என்பதற்காகவே உருவான படம் “எல்லாம் இன்ப மயம்.” டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய இந்தப்படத்தில் காமெடிக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டிருந்தன. கமல் தும்மினால் பக்கத்தில் உள்ள எல்லாமே பறக்கும் என்கிற கற்பனை, ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

இந்தப் படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு, கமலின் 11 வகை கெட்அப். கமல் தனது படங்களில் பலவித கெட்அப்களை போட்டு நடிக்க முன்மாதிரியாக அமைந்தது இந்தப் படம்தான்.

இந்தப்படம் “சிலிப்பி சின்னோடு” என்ற பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் கமலின் கவனம் மற்ற மொழி படங்களில் அதிகம் லயித்திருந்தது. “அரங்கேற்றம்” தமிழ்ப்படத்தை இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் அந்தப்படத்தை `ஆய்னா’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார்கள். இதில் கமலுக்கு முக்கிய வேடம். என்றாலும், தமிழில் பெற்ற வெற்றியை இந்திப்படம் அடையவில்லை.

இதைத்தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்ற புதுமைக்கதையான “அவள் ஒரு தொடர்கதை” படத்தை பாலசந்தர் இந்தியில் இயக்கினார். இந்தியில் படத்துக்குப் பெயர் “அந்து லேனி கதா.” தமிழில் ஏற்ற வேடத்தையே இந்தியிலும் கமல் செய்தார். புதுமையான கதையம்சம் கொண்ட இந்தப் படத்துக்கு இந்தி ரசிகர்களும் வரவேற்பு கொடுத்ததில் படம் வெள்ளி விழா கொண்டாடியது.

தப்புத்தாளங்கள்

“அரங்கேற்றம்” படத்தில் ஒரு குடும்பப் பெண் குடும்பத்தை காப்பாற்ற விபசாரியாக மாறுவதை சித்தரித்திருந்தார் பாலசந்தர். இந்தப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்து, முழுக்க விபசார சூழலில் வாழும் ஒரு பெண்ணை மையமாக்கி பாலசந்தர் எடுத்த படம்தான் “தப்புத்தாளங்கள்.” இந்தப்படத்தில் விபசாரப் பெண்ணாக நடிகை சரிதா நடித்தார். படத்தில் ரஜினி ஹீரோ என்றாலும், பாலசந்தருக்காக கவுரவ வேடத்தில் கமல் நடித்தார். சரிகாவைத் தேடி வரும் கஸ்டமராக அவர் நடித்த காட்சி, படத்தில் 5 நிமிடம் மட்டுமே வரும்.

டைரக்டர் துரைக்கு “அடையாளம்” சொல்லும் அளவுக்கு அமைந்த படம் “பசி.” இந்தப்படத்தில் நடித்ததற்காக ஷோபாவுக்கு “ஊர்வசி” விருது கிடைத்தது. டைரக்டர் துரையிடம் இருந்த நல்ல நட்பு காரணமாக படத்தில் ஒரு நடிகராக தோன்றினார் கமல். ஏறக்குறைய இதே கால கட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா தயாரித்த “நட்சத்திரம்” படத்திலும் நடிகராக வந்து போனார். டைரக்டர் தசரதன் இயக்கிய “சரணம் ஐயப்பா”, பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” படங்களிலும் `கெஸ்ட் ரோலில்’ வந்து போனார்.

வாழ்வே மாயம்

தமிழில் மட்டும் இப்படி அடுக்கடுக்காக நாலைந்து படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே கமலை பார்க்க முடிந்ததில் ரசிகர்களுக்கு வருத்தம். “வாழ்வே மாயம்” படம் மூலம் ரசிகர்களின் இந்த வருத்தத்தை வட்டியும் முதலுமாக தீர்த்து வைத்தார், கமல்.

தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய “பிரேமாபிஷேகம்” படத்தை தமிழில் பாலாஜி “வாழ்வே மாயம்” என்ற பெயரில் தயாரித்தார். படத்தை இயக்கியவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பின்னாளில் ரஜினி நடித்த “பில்லா” படத்தை இயக்கி, “பில்லா” கிருஷ்ணமூர்த்தியாகவே

ஆகிப்போனார்.படத்தில் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடி. ஸ்ரீபிரியாவும் இன்னொரு ஜோடியாக நடித்தார். நடிகை அம்பிகா முக்கிய கேரக்டரில் வந்து போனார்.

காதலிக்கு ஒரு வாழ்வு அமையவேண்டும் என்பதற்காக, காதலன் தனக்குள் `காதலை’ புதைத்துக் கொண்ட சோக காவியமாக இப்படம் அமைந்தது. தியாகக் காதலனாக கமலும், காதலியாக ஸ்ரீதேவியும் நடிப்பில் உச்சத்தை தொட்டிருந்தார்கள். புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி உயிர் விடும் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை தனது நடிப்பால் அழவைத்தார் கமல்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் இதே மாதிரியான தியாகக்காதல் பின்னணியில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “பயணங்கள் முடிவதில்லை” படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் காதல் ஜோடிகளாக மோகன்- பூர்ணிமா ஜெயராம் நடித்தார்கள்.

திரைப்பட வரலாறு 949
ஏவி.எம். தயாரிப்பில் கமல் நடித்த பிரமாண்டமான படம் “சகலகலா வல்லவன்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமலஹாசனை “ஆக்ஷன் ஹீரோ” ஆக்கிய படம் “சகலகலா வல்லவன்.” ஏவி.எம். தயாரித்த பிரமாண்டமான படம்.

முதல் பாதியில் அடிதடிக்கு அஞ்சாத கிராமத்து இளைஞனாகவும், பிற்பகுதியில் நகரத்து இளைஞனாகவும் இரண்டிலுமே நடிப்பில் வித்தியாசப்பட்ட கமல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கதைக்கேற்ப ஏவி.எம்.மின் பிரமாண்டம், படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்து படத்தை `வெள்ளி விழா’ வரை கொண்டு சென்றது.

எஸ்.பி.முத்துராமன்

கமலை 4 வயது சிறுவனாக இருந்தபோதே அறிந்தவர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், அந்த வயதில்தான் களத்தூர் கண்ணம்மா படத்தில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாட்டுக்கு நடித்தார் கமல்.

எஸ்.பி.முத்துராமன் அந்தப் படத்தின் இணை இயக்குனராக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத பெரும்பாலான நேரங்களில் கமலை தன் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு செட்டுக்குள் வலம் வருவார்.

கமல் வளர்ந்து இளைஞனான போதும் இந்த நட்பும், பாசமும் நீடித்தன. இதற்குள் எஸ்.பி.முத்துராமனும் இயக்குனராக பிரபலமானார்.

நடிகர் கமலஹாசனை 11 படங்களில் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

1976-ல் “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது” படம் தொடங்கி “மோகம் முப்பது வருஷம்”, “ஆடுபுலி ஆட்டம்”, “சக்கை போடு போடு ராஜா”, “சகலகலா வல்லவன்”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “எனக்குள் ஒருவன்”, “உயர்ந்த உள்ளம்”, “ஜப்பானில் கல்யாணராமன்”, “பேர் சொல்லும் பிள்ளை” என 10 படங்களிலும், முத்துராமன் – ஜெயலலிதா நடித்த “அன்புத்தங்கை” படத்தில் கவுரவ வேடத்திலும் கமலை இயக்கியவர்.

கமல் பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“களத்தூர் கண்ணம்மா” படத்தில் நடிக்க வந்தபோது அவரது துறுதுறுப்பு என்னைக் கவர்ந்தது. `ஷாட்’ இல்லாத நேரத்தில் மற்றக் குழந்தைகள் மாதிரி ஒரு இடத்தில் சும்மா இருந்து கொண்டிருக்க மாட்டார். எங்காவது ஓடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை `ஷாட்’ ரெடியான நேரத்தில் கமலை மட்டும் காணோம். எங்கே போயிருப்பார் என்று தேடினோம். கடைசியில் ஏவி.எம்.மில் உள்ள ஏ.சி. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அழைத்து வந்தோம். அதுவும் அவர் தியேட்டருக்குள் உட்கார்ந்து படம் பார்க்கவில்லை. ஆபரேட்டர் அறைக்குப்போய் அங்குள்ள துவாரம் வழியாக திரையில் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்!

அப்போதே சினிமா என்பது அவரை எந்த அளவுக்கு கவர்ந்த விஷயமாகி இருக்கிறது என்பதற்கான முன்னோட்டம்தான் இது.

இதன் பிறகு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி படங்கள் பார்ப்பது கமலுக்கு வழக்கமாகி விட்டது. சில நேரம் பாடல் காட்சியை பார்த்து விட்டு வருபவர், செட்டில் அந்த பாடல் காட்சியில் வரும் நடனத்தை தனக்குத் தெரிந்த மாதிரி ஆடுவார். படத்துக்காக பயிற்சி எடுத்தவர்கள் ஆடுவது போல் ஆட்டம் அத்தனை அம்சமாய் இருக்கும். `விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று சொல்வது சினிமா விஷயத்தில் கமலுக்கு அப்படியே பொருந்தும்.

பிற்காலத்தில் இவர் சினிமாவில் ஒரு நிலையான இடம் பிடிப்பார் என்பதற்கான அடித்தளமாகத்தான் இதை உணர்ந்தேன். “உலக நாயகன்” என்ற இடம் வரை வந்திருப்பதற்கு சினிமாவை இப்படி தனது சுவாசமாக அவர் மாற்றிக் கொண்டதுதான் காரணம் என்பேன்.

வித்தியாசமான வேடம்

கமலுக்கு அப்போதே வித்தியாசமான முயற்சிகள் பிடிக்கும். புஷ்பா தங்கதுரை எழுதிய வித்தியாசமான முரண்பட்ட கேரக்டர்கள் பின்னணியில் அமைந்த கதையே “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.”

உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு காதல் ஜோடி. காதலனின் சில மாத தலைமறைவில், காதலி இன்னொருவருக்கு கட்டாய மனைவி ஆகிறாள். காதலியை இன்னொருவனின் மனைவியாக சந்திக்கும் காதலன், “என்னுடன் ஒரே ஒருநாள் `மனைவி’யாக `நடிப்பு வாழ்க்கை’ வாழ்ந்தால் போதும். அந்த ஒருநாளை மனதில் பதித்து மீதி காலத்தை நிம்மதியாக கழித்து விடுவேன்” என்கிறான்.

முன்னாள் காதலி இதற்கு சம்மதிக்கிறாள். அந்த ஒருநாள் காதலனுடன் தங்கி கண்ணியம் கலந்த பாசத்தை கொட்டுகிறாள். அவனை பிரிந்து கணவன் வீட்டுக்கு புறப்பட தயங்குகிறாள். “தனது காதலி இப்போது இன்னொருவனின் மனைவி” என்ற கண்ணோட்டத்தில் அவளை கவுரவம் குலையாமல் திருப்பி அனுப்புகிறான் காதலன்.

தடுமாறும் காதல் உள்ளங்கள் பின்னணியில் `தாலி’யின் புனிதம் சொன்ன இந்த கதையில் கமல் விரும்பியே நடித்தார். கமலின் காதலியாகவும் பின்னர் விஜயகுமாரின் மனைவியாகவும் சுஜாதா நடித்தார்.

என் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்தமுதல் படம் இது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காதலி இடம் மாறியபின் காதலனுக்கு ஏற்படும் தடுமாற்றங்களை நடிப்பில் மிக அற்புதமாக பிரதிபலித்திருந்தார் கமல்.

படத்துக்கு தட்சிணாமூர்த்தி இசை அமைத்திருந்தார். “நல்ல மனம் வாழ்க”, “ஆண்டவன் இல்லா உலகம் எது” போன்ற பாடல்கள் அப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தது.

மோகம் முப்பது வருஷம்

பிரபல எழுத்தாளர் மணியன் “மோகம் முப்பது வருஷம்” என்று ஒரு நாவல் எழுதியிருந்தார். இடம் மாற எண்ணி தடுமாறும் ஒரு காதல் ஜோடிதான் கதையின் முடிச்சு. செக்ஸ் அடிப்படைதான் கதைக்களம்.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன நவநாகரீக இளைஞனுக்கு, நாகரீக வாடையே இல்லாத பட்டிக்காட்டுப் பெண் மனைவியாக அமைகிறாள். ஆடம்பரம், பகட்டு என்று உல்லாசம் காணத்துடிக்கும் நாகரீகப் பெண்ணுக்கோ, ஓவியத்தை மட்டுமே நேசிக்கும் கணவன் அமைகிறான்.

வெளிநாட்டு மோக இளைஞனும், நாகரீக யுவதியும் இன்னொருவர் ஜோடி என்றாலும், சந்தர்ப்பம் அவர்களை இணைக்கப் பார்க்கிறது. அவர்கள் `தப்பு’ செய்துவிடுவார்கள் என்கிறவரை சூழ்நிலை கொண்டு நிறுத்தும்போது திடீர் திருப்பத்தில் தங்கள் தவறை உணர்கிறார்கள்.

இந்தக் கதைக்குள் இன்னொரு திருப்பமாய் நாகரீக இளைஞனை ஒருதலையாய் காதலிக்கும் பெண். `நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உன் மூலமாக எனக்கு ஒரு குழந்தை கிடைத்தால் போதும்’ என்கிற அளவுக்கு அவளது காதல் வெறித்தனமாகிறது. இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலையில் நாகரீக இளைஞன், “குழந்தைதானே வேணும். தரேன்” என்று சொல்லி ஒரு பொம்மையை கையில் கொடுத்து அவளை அப்புறப்படுத்தி விடுகிறான்.

இதில் நாகரீக இளைஞனாக நடிப்பில் கமல் முற்றிலுமாய் நடிப்பில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார். கமலை விரும்பும் ஓவியரின் மனைவியாக `படாபட்’ ஜெயலட்சுமியும், ஒருதலைக் காதலியாக ஸ்ரீபிரியாவும் நடித்திருந்தார்கள். கதைக்குள் இத்தனை காதல் களேபரம் இருந்தாலும், கதை `ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தமிழ்ப்பண்பாட்டை விளக்குவதுடன் முடியும்.

கமலின் பட்டிக்காட்டு மனைவியாக சுமித்ராவும், ஓவியராக விஜயகுமாரும் நடித்தார்கள்.

ஆடுபுலி ஆட்டம்

அடுத்து நான் இயக்கிய “ஆடுபுலி ஆட்டம்” படத்தில் கமலுடன் ரஜினியும் நடித்தார். ரஜினி இதில் வில்லன்.

ரஜினி எனது டைரக்ஷனில் “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படம் வெளிவந்த நேரத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட `ஆடுபுலி ஆட்டம்’ படத்தில் வில்லன் கேரக்டரில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்தார்.

ஹீரோ அந்தஸ்தை அடைந்தவர்கள் அடுத்து `வில்லன்’ கேரக்டர்களை ஒப்புக்கொள்வதில்லை. எங்கள் ïனிட் மீதான அன்பிலும், நண்பர் கமல் படம் என்ற உரிமையிலும் ரஜினி `வில்லன்’ வேடம் பண்ண ஒப்புக்கொண்டார்.

சகலகலா வல்லவன்

சினிமாத்துறையின் சகல விஷயங்களிலும் கமல் சகலகலா வல்லவன் என்பது தெரியும். இதை சினிமா உலகமும் தெரிந்து கொண்ட நேரத்தில், ஏவி.எம். அவரை வைத்து எடுத்த படமே “சகலகலா வல்லவன்.” இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நடிப்பு, நடனம், சண்டை, தொழில் நுட்பம் என சகல துறைகள் பற்றிய அறிவிலும் சகலகலா வல்லவரான கமலுடன் பணியாற்றுவதே பரம சுகம். அதோடு கமலை சகலகலைகளிலும் வல்லவனாகவே வெளிப்படுத்தும் கதையும் அமைந்தது. கதாசிரியர் பஞ்சு அருணாசலம், கமலுக்காகவே இந்தக் கதையை உருவாக்கினார்.

இந்தப் படத்தின் “ஹேப்பி நிï இயர்” பாட்டு, அதற்கான செட் பிரமாண்டம், கமலின் அற்புத நடனம் எல்லாமே ரசிகர்களை பிரமிப்பாக உணர வைத்தது. இந்தப்படம் வெளிவந்த பிறகு வந்த ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளிலும் சின்னத்திரைகளில் இந்தப்பாடலை ஒளிபரப்புவார்கள். கடந்த 26 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

மோட்டார் சைக்கிளில் பெண்

இந்த பாடல் காட்சி, கமல் ஒரு மோட்டார் சைக்கிளில் அரங்கில் இருந்து புறப்படுவது போல் தொடங்கும். மோட்டார் சைக்கிளுடன் கமல் தயாராக இருந்தார். பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜா கமலிடம், “மோட்டார் சைக்கிள் ஹாண்ட் பாரில் ஒரு பெண்ணை தூக்கி வைத்து போவது போல் செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

கமல் எப்போதுமே புலிïர் சரோஜாவை `மாமியாரே’ என்றுதான் அழைப்பார். அவரும் `மருமகனே’ என்பார். புலிïர் சரோஜா இப்படி சொன்னதும், “சரி மாமியாரே” என்றவர், ஷோபனா என்ற நடனப் பெண்ணை மோட்டார் சைக்கிளின் ஹாண்ட்பாரில் உட்கார வைத்து மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து செட் பூராவும் ஒரு ரவுண்டு அடித்தார்.

எதிலும் “முடியுமா, முடியாதா?” என்ற பார்வை அவருக்கில்லை. “முடியாததையும் முயன்றால் முடிக்கலாம்” என்பதே அவரது பாலிசியாக இருந்தது. ஹாண்ட்பாரில் முகத்துக்கு முகம் பார்க்கிற மாதிரி ஒரு பெண்ணை உட்கார வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கானது. என்றாலும் அதை கொஞ்சமும் தயங்காமல் செய்ய முன்வரும் குணம் கமலிடம் இருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தீப்பற்றி எரிகிற வீட்டுக்குள் புகுந்து ரிஸ்க் எடுத்து நடித்த கமல் கொஞ்ச நேரம் எங்களை பதைபதைக்க வைத்த சம்பவமும் நடந்தது.”

திரைப்பட வரலாறு :(951)
நஷ்டம் அடைந்த பட அதிபருக்கு உதவி
சம்பளம் வாங்காமல் நடித்தார், கமல்
அடமானம் வைத்த வீட்டையும் மீட்டுக் கொடுத்தார்

பட அதிபரும், டைரக்டருமான ஜி.என்.ரங்கராஜன் நஷ்டப்பட்டபோது, சம்பளம் வாங்காமல் ஒரு படத்தை நடித்துக் கொடுத்தார், கமலஹாசன். அடமானம் வைக்கப்பட்ட வீட்டையும் மீட்டுக் கொடுத்தார்.

இந்தியில் வெள்ளி விழா

1982-ல் கமல் நடித்த “சகலகலா வல்லவன்” படம் வெள்ளி விழா கொண்டாடியபோது, அவர் இந்தியில் நடித்த `யேதோ சுமால் ஹோகயா’ என்ற படமும் வெள்ளி விழா படமானது. இது, தமிழில் டி.என்.பாலு இயக்கிய “சட்டம் என் கையில்” படத்தின் ரீமேக் ஆகும். இதே படம் இதே ஆண்டின் முற்பகுதியில் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் மலையாளத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.

ஒரு கதை தமிழில் பெற்ற வெற்றியையும் தாண்டி இந்தியில் ஓடுகிறது. அதே கதை, மலையாளத்தில் `சுமார்’ பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொழிக்கு மொழி சினிமா ரசிகர்களின் ரசனை மாறுபடுவதே இதற்குக் காரணம்.

இதே 1982-ல் கமல் இந்தியில் நடித்த “சனம் தேரி கசம்” படமும் வெள்ளி விழா காண்கிறது.

இப்படி ஒரே ஆண்டில் இந்தியில் 2 வெள்ளி விழா படங்கள் கொடுத்து இந்திப்பட முன்னணி நாயகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த சாதனையையும் செய்தார், கமல்.

ராணித்தேனீ

சகலகலாவல்லவனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, கமலின் அன்புக்குரிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் “ராணித்தேனீ” என்ற படத்தை தயாரித்து இயக்கினார். புதுமுகங்கள் நடித்த இந்தப் படத்தில், கமல் நட்புக்காக கவுரவ வேடம் ஏற்றிருந்தார்.

இந்தப் படத்தில் முதலில் கமல் நடிப்பதாக இல்லை. அவர் நடிக்க நேர்ந்தது எப்படி என்பது குறித்து டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் கூறியதாவது:-

“தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கியதால், சொந்தப்படம் எடுக்கலாம் என்று எண்ணினேன். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க “ராணித்தேனீ” என்றொரு படத்தை இயக்கி தயாரித்தேன்.

சிக்கல்

படம் முடிந்த பிறகுதான் எத்தனை பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறேன் என்பது புரிந்தது. படத்தை வினியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்டினேன். அவர்கள், படத்தை வாங்கத் தயங்கினார்கள். “கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் “ஸ்டார் வேல்ï” இல்லை என்பதால் வாங்க யோசனையாக இருக்கு” என்று சொல்லி நழுவிவிட்டார்கள்.

இதனால், என் மொத்தப்பணமும் முடங்கி விட்டது. செய்வதறியாமல் திகைத்தேன்.

இந்த விஷயம் எப்படியோ கமலுக்குத் தெரிந்திருக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டவர், “அண்ணா! நீங்கள் உங்கள் மனசில் என்னதான் நினைச்சிட்டிருக்கீங்க? படம் வியாபாரம் ஆகலைன்னா அதுபற்றி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்.

அன்றைக்கு அவரை சந்தித்தேன். முழு கதையையும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், “படத்தின் நான் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித்தரேன். படம் முழுக்க அந்த கேரக்டர் வருகிற மாதிரி செய்துவிடலாம்” என்றார்.

அப்படி அவர் உருவாக்கியதுதான் படத்தில் இடம் பெற்ற குடிகார `டோபி’ வேடம். படத்துக்கு 3 நாள் கால்ஷீட் கொடுத்தார். இந்த 3 நாட்களில் 3 ஆயிரம் அடி படம் எடுக்க கடும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதில் ஒரு பாடல் காட்சியும் உண்டு.

அவரது போர்ஷனை படத்தில் எந்தெந்த இடங்களில் சேர்க்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். அப்படி சேர்த்து படத்தை பார்த்தபோது, கமலுக்கு `கெஸ்ட் ரோல்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள், அந்த அளவுக்கு படம் முழுக்க வந்தார்.

படம் வாங்க போட்டி

இதற்குப்பிறகு படத்தை வியாபாரம் செய்ய எந்த சிரமமும் இல்லை. முதலில் வாங்கத் தயங்கியவர்களே “படத்தை எனக்குத்தான் தரவேண்டும்” என்று ஏரியா வாரியாக கேட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்.

படம் ரிலீசாகி எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், நான் போட்ட முதல் திரும்பக் கிடைத்துவிட்டது.

மூன்று நாள் நடிப்புக்கு கமலுக்கு சம்பளம் தரவில்லை. நானும் அவரிடம் அப்போது கேட்கவில்லை. கமலும் அதுபற்றிப் பேசவில்லை. ஆனாலும், படம் வியாபாரம் ஆன பிறகு அதுபற்றி பேசாமல் இருக்க முடியுமா? கமலை சந்தித்து, “உங்க ஒத்துழைப்பால் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன். உங்கள் நடிப்புக்கு சம்பளம்?” என்று ஆரம்பித்தேன்.

இப்போது கமல் என்னை கோபமாக ஒரு பார்வை பார்த்தார். “நான் உங்களைக் கேட்டேனா? பேசாமல் வேறு வேலையைப் பாருங்கள்” என்றார். தனக்கு வேண்டியவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற கமலின் கொள்கையால் “ராணித்தேனீ” என்னை கொட்டிவிடாமல் தப்பித்தேன்.

மகராசன்

என்றாலும் “ராணித்தேனீ” சரியாகப் போகவில்லை என்பதையும், அதில் எனக்கு எவ்வளவு நஷ்டம் என்பதையும் நான் சொல்லாமலே தெரிந்து கொண்ட கமல், என்னை அழைத்து “நான் முழுசாக உங்களுக்கு ஒரு படத்தில் நடித்து தருகிறேன். அதற்கான கதை தயார் செய்யுங்கள்” என்றார்.

உடனே அவருக்காக நான் உருவாக்கிய கதைதான் “மகராசன்.” கமல் இதில் கறிக்கடை வைத்திருப்பவராக நடித்தார். கதையை தெரிந்து கொண்டவர் அன்றைக்கிருந்த `பிஸி’யிலும் எனக்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தார்.

கதைக்குள் ஈடுபாடு வந்துவிட்டால் கமல், நடிக்கும் நாட்கள் பற்றி கவலைப்பட மாட்டார். இந்த வகையில் அந்த `கறிக்கடை’ கேரக்டருடன் ஒன்றியவர் மறுபடியும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 நாட்கள் தாண்டியும் அவரது கேரக்டர் ஈர்ப்பில் மேலும் 10 நாள் கொடுத்தார். 20 நாட்களில் படம் முடிந்தது. அவருக்கும் திருப்தி. இந்தப் படத்திற்கும் அவர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார்.

படம் நல்ல விலைக்குப் போனது. இது தெரிந்ததும் என்னை அழைத்த கமல், “எவ்வளவு லாபம் வந்திருக்கிறது அண்ணா?” என்று கேட்டார். சொன்னேன். “பழைய கடன்களை இந்த லாபத்தில் அடைத்து விடலாம் இல்லையா?” என்று கேட்டார். “அடைத்து விடலாம்” என்றேன்.

“அப்படியானால், முந்தின படத்துக்கு உங்கள் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்கியிருக்கிறீர்களே, அதையும் அடைத்து விடமுடியுமில்லையா?” என்று கேட்டார்.

எனக்கு `திக்’ என்றது. `வீட்டை அடமானம் வைத்து சொந்தப்படம் எடுத்ததை நான் அவரிடம் சொல்லவே இலை. அவராக யார் மூலமோ எப்படியோ தெரிந்து கொண்டு, என் வீட்டை மீட்பதற்காகவே எனக்கு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்ததும்

திரைப்பட வரலாறு 953
கமல் – ரேவதி இணைந்து நடித்த
பாரதிராஜாவின் “ஒரு கைதியின் டைரி”

பாரதிராஜா இயக்கிய “ஒரு கைதியின் டைரி” படத்தில் கமலஹாசனும் ரேவதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படம், பிறகு இந்தியிலும் எடுக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் 5 இந்திப்படங்கள்

இந்திப் படங்களிலும் நடித்து வந்த கமலுக்கு, 1984-ம் ஆண்டு முக்கியமானது.

அந்த ஆண்டில் கமல் நடிப்பில் “ஏ தேஷ்”, “ஏக் நை பஹெலி”, “யாத்கார்”, “ராஜ்திலக்”, “கரீஷ்மா” என்று 5 இந்திப்படங்கள் வெளியாயின!

தமிழில் வெற்றி பெற்ற “அபூர்வ ராகங்கள்” படத்தை இந்தியில் “ஏக் நை பஹெலி” என்ற பெயரில் இயக்கினார், பாலசந்தர்.

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “டிக் டிக் டிக்” படத்தை இந்தியில் “கரீஷ்மா” என்ற பெயரில் ஐ.வி.சசி இயக்கினார். 5 இந்திப் படங்களிலும் “யாத்கார்” படம் மட்டுமே 100 நாட்களை தாண்டியது.

எனக்குள் ஒருவன்

இந்த ஆண்டில், அவர் தமிழில் நடித்தது ஒரே ஒரு படம்தான்! அதுதான் கவிதாலயா தயாரிப்பான “எனக்குள் ஒருவன்.” இது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட கதை. தமிழில் மறுபிறவி பின்னணியில் வந்த கதைகள் அவ்வளவாக மக்களிடம் எடுபடவில்லை. அந்த வகையில் இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

நேபாளி இளைஞன் ஒருவனுக்கு திடுமென ஏற்படும் முற்பிறவி ஞாபக பின்னணியில் கதை சொல்லியிருந்தார், எஸ்.பி.முத்துராமன்.

நடிகை ஷோபனா இந்தப்படம் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார். சத்யராஜ் வில்லனாக நடித்தார்.

இந்த படத்தில் `நேபாளி’யாக மாற கமல் எடுத்துக்கொண்ட சிரத்தை பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“நேபாளிகளின் முகத்தோற்றம் நம்மில் இருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கும். நேபாளியாகவே மாற விரும்பிய கமல், கண் இமைகளை இழுத்து வைத்து ஒட்டி இருந்தார். இப்படி `மேக்கப்’ போட்டிருக்கும் நேரங்களில் முகத்தில் `வலி’ இருந்து கொண்டிருக்கும்.

நாங்கள் அவரிடம் “கமல் வலிக்குமே” என்றால், “வலிக்கலை சார்” என்று தெரிந்தே பொய் சொல்வார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில், நேபாளி மேக்கப்பில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம். கேரக்டர் வித்தியாசப்படுவதற்காக தானும் வித்தியாச தோற்றத்துக்கு மாறவேண்டும் என்றால் எந்த மாதிரியான வலியையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இருந்தது. இந்த மாதிரி வலியுடன் கூடிய மேக்கப்புகள் சினிமாவுக்காக அவர் செய்கிற யாகம் என்பேன். சினிமாவைப் பொறுத்தமட்டில் அவருக்கு ஒவ்வொரு வேஷமும் ஒரு பிறப்பு மாதிரி. படத்தில் `நேபாளி’ கமல் ஜோடியாக ஸ்ரீபிரியாவும், இன்னொரு கமல் ஜோடியாக ஷோபனாவும் நடித்தார்கள். முழுப்படத்தையும் டார்ஜிலிங்கில் எடுத்தோம்.

சண்டைக்காட்சி

கிளைமாக்ஸ் சண்டையை இரண்டு மலைகளுக்கு மத்தியில் `விஞ்ச்’சை போக வைத்து அதில் எடுத்தோம். விஞ்ச்சில் இருந்து ஹீரோவை வில்லன் கீழே தள்ளி கொல்லப்பார்க்கிற மாதிரியான காட்சி. 250 அடி உயர மலையின் உச்சியில் `விஞ்ச்’ போக, அதில் தொங்கிக் கொண்டு சண்டைக்காட்சி என்பது எத்தனை ரிஸ்க் என்பது தெரியும். கொஞ்சம் தவறினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை.

அதனால் ஆரம்பத்திலேயே கமலிடம், “கமல்! குளோசப் காட்சியில் உங்களை படம் பிடித்துக் கொள்கிறேன். 250 அடி உயர ரிஸ்க் ஷாட் என்பதால் `டூப்’ போட்டு எடுத்துக் கொள்கிறேன்” என்றேன்.

கமலும் “சரி சார்” என்று கேட்டுக்கொண்டார்.

படத்துக்கு சூப்பர் சுப்பராயன்தான் ஸ்டண்ட் மாஸ்டர். ஒரு கேமரா குளோசப் ஷாட் எடுக்கவும், இன்னொரு கேமரா லாங் ஷாட் காட்சிகளை படம் பிடிக்கவும் வைக்கப்பட்டன. இரண்டு மலைகளுக்கும் இடையே 250 அடி உயர கம்பியில் `விஞ்ச்’சில் தொங்கியபடி `டூப்’ நடிகர் வருகிறார். கேமரா வழியாக பார்க்கிறேன். அதிர்ச்சி அடைகிறேன். விஞ்ச்சில் தொங்கியபடி வந்தது டூப் நடிகர் அல்ல; கமலேதான்!

எனக்கு உயிரே போய்விட்டது. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஸ்டண்ட் மாஸ்டரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்து இப்படி `ரிஸ்க்’ காட்சிக்கு தயாராகி விட்டதை பின்னர் தெரிந்து கொண்டேன். காட்சி முடிந்து கீழே பத்திரமாக வந்து சேர்ந்த பிறகு கமல் எனக்கு தைரியம் சொன்னது தனிக்கதை.

ஆயிரம் குடைகள்

டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு நான் இந்தப்படத்தை இயக்கினேன். படத்தில் “கொட்டட்டும் வானம்” என்ற மழைப் பாடலை ஆயிரம் குடைகளுக்கு மத்தியில் படமாக்கினேன். கிளைமாக்சில் நேபாளி கமலுக்கு பழைய நினைவுகள் வரும் காட்சிகளில் ஏற்படும் பரபரப்பு சம்பவங்களை எடிட்டர் விட்டல் சார் அவருக்கே உரிய பாணியில் `எடிட்’ செய்திருந்தார். கதை புதுமை. சண்டைக்காட்சி புதுமை. பாடல்களில் புதுமை என இருந்தும் “மறுபிறவி” கதை என்ற காரணம் படத்தின் ஓட்டத்துக்கு `பிரேக்’ ஆக அமைந்து விட்டது.”

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

ஒரு கைதியின் டைரி

கமலை வைத்து வித்தியாசமான நகரப் பின்னணியில் “சிகப்பு ரோஜாக்கள்”, “டிக் டிக் டிக்” படங்களைத் தந்த பாரதிராஜா, சிலகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து தந்த படம், “ஒரு கைதியின் டைரி.”

டைரக்டர் பாக்யராஜின் திரைக்கதையை தனக்கே உரிய ஸ்டைலில் காட்சியாக்கினார் பாரதிராஜா. படத்தை தயாரித்தவரும் அவரே.

படத்தில் கமல் இளைஞன், வயதானவர் என இரு வேடங்களில் தன்னை வித்தியாசப்படுத்தினார். படம் வெற்றி. இந்தப்படம் இந்தியில் அமிதாப் நடிக்க “ஆக்ரி ரஸ்தா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூலை வாரியது.

இந்தியில் அமிதாப்பச்சன் மார்க்கெட்டை ஒரேயடியாக உச்சத்துக்கு கொண்டுபோன படம் என்ற பெருமையும் `ஆக்ரி ரஸ்தா’வுக்கு உண்டு.

தமிழில் இந்தப்படத்துக்கு கிளைமாக்ஸ் வேறு. இந்திக்கு வேறு. அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டதற்காக இந்தியில் வேறு கிளைமாக்ஸ் காட்சியை வைத்தார், டைரக்டர் பாக்யராஜ்.

காக்கி சட்டை

சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான “காக்கி சட்டை”யில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்தார். கமல் அதுவரை போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததில்லை. இதுதான் முதல் படம்.

போலீஸ் வேலைக்காக உடற்பயிற்சி மூலம் உடம்பை ஏற்றி வைத்திருக்கும் கமலுக்கு போலீஸ் வேலை கிடைக்காமல் போகிறது. அதனால் போலீஸ் மீதே வெறுப்பாகும் கமலை முறைகேடான தொழில் செய்யும் கும்பல் ஒன்று தங்கள் வலைக்குள் இழுத்துப் போடுகிறது.

அந்தக் கும்பலின் முகமூடியை கமல் கிழித்தெறியும்போது தான் அவர் “ரகசிய போலீஸ் அதிகாரி” என்ற உண்மை தெரியவருகிறது. ராஜசேகர் இயக்கிய இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ் “தகடு தகடு” வசனம் பேசி, புகழின் உச்சிக்குப் போனார்.

புன்னகை மன்னன்

டைரக்டர் கே.பாலசந்தர் அவ்வப்போது வேறு நடிகர்களின் படங்களை இயக்கி வந்தாலும் கமல் மீதும் ஒரு பார்வை வைத்திருந்தார். கமலுக்காக அவர் உருவாக்கி, தயாரித்து இயக்கிய படம் “புன்னகை மன்னன்.”

“ஒருமுறை காதலில் தோற்றவன், அவனிடம் பழக நேரும் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்படுவானா?” என்ற கேள்வியை திரைக்கதையாக்கி அதற்கு விடையும் தந்திருந்தார் கே.பாலசந்தர்.

இந்தப்படத்தில் “சாப்ளின்” என்ற கேரக்டரையும் உருவாக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

படம் வெள்ளி விழா கொண்டாடியது. தெலுங்கில் “டான்ஸ் மாஸ்டர்” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு அங்கும் நன்றாக ஓடியது.

பேர் சொல்லும் பிள்ளை

சிறுவயதில் ஏவி.எம். மூலம் வெளிப்பட்ட கமல், நடிப்பில் `பேர் சொல்லும் பிள்ளை’யானார். கமல் நாயகனாக வளர்ந்த நிலையில் தங்கள் நிறுவனத்தின் “பேர் சொல்லும் பிள்ளை”யாக கமலை உணர்ந்த ஏவி.எம். நிறுவனம், அந்தப் பெயரிலேயே கமலை வைத்து ஒரு படம் தயாரித்தது. இந்தப்படத்தை ஏவி.எம்.மின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

“படிக்காத மேதை” படம் இன்றைக்கும் சிவாஜியின் நடிப்புச் சரித்திரம். இந்தப் படத்துக்கு கதை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னாளில் இயக்குனராக உயர்ந்து “இயக்குனர் திலகம்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஏவி.எம்.முக்காக அவர் இந்தப்படத்தின் கதை வசனத்தை எழுதினார்.

இந்தப்பட அனுபவம் பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“படத்தில் 4 பிள்ளைகளின் அம்மாவாக கே.ஆர்.விஜயா நடித்தார். அவர் பெறாமல் பெற்ற பிள்ளை கமல். அந்த வீட்டின் விசுவாசமிக்க வேலைக்காரனாக இருந்து கொண்டு, குழம்பிக் கிடக்கும் அந்த வீட்டின் நிர்வாகத்தை சீர்படுத்துவார். அப்படியே கே.ஆர்.விஜயாவின் உருப்படாத பிள்ளைகளையும் திருத்துவார். படத்தில் கமலுக்கு ராதிகா ஜோடி. செட்டி நாட்டு பாஷை பேசி ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

படத்தில் கமல் சாப்பாடு பரிமாறிக் கொண்டே நடனமாடுகிற மாதிரி ஒரு புதுமையான நடன பாடல் காட்சி எடுத்தோம். கமல் இந்தக் காட்சியில் தனது நடனத்திறமையோடு நடிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தினார். கமலுடன் ஒரு பாட்டுக்கு ரம்யாகிருஷ்ணன் ஆடினார்.

படத்தில் “அம்மம்மம்மா வந்ததிங்கே சிங்கக்குட்டி” என்ற பாடலை கமலே பாடியிருக்கிறார். மற்றும் “மாடியேறி வாம்மா டிவி பார்க்கலாம்”, “தப்புத்தண்டா பண்ணிடுவோம்”, “விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை” போன்ற பாடல்களும் இளையராஜா இசையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

லாபத்தில் பங்கு

இந்தப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை ஏவி.எம்.மும் கமலும் சேர்த்து எங்கள் ïனிட்டுக்கு கொடுத்தார்கள். எங்களின் உண்மைக்கும், கடின உழைப்புக்கும் அவர்கள் அளித்த அங்கீகாரமாக இதை எடுத்துக்கொண்டோம்.

நடிகர் ரஜினி எங்கள் ïனிட்டுக்காகவே “பாண்டியன்” என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார். ஏவி.எம்., கமல் வழங்கிய பணம், ரஜினி கொடுத்த பணம் ஆகியவற்றின் மூலம்தான் இன்றும் எங்கள் ïனிட் நிம்மதியாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.”

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

பேசாத “பேசும் படம்!”

சினிமா உலகில் வித்தியாசமான எந்த முயற்சிக்கும் முன் நிற்பார் கமல். படம் முழுக்க யாரும் பேசாமலே வருகிற ஒரு படம், “பேசும் படம்” என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது, அதில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். கமலுக்கு ஜோடியாக அமலா நடித்தார். கமலின் ஆஸ்தான இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கினார். இதுவும் கமலுக்கு வெள்ளி விழாப் படமானது.

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியில் “புஷ்பக்” என்றும், தெலுங்கு, கன்னட மொழிகளில் “புஷ்பக விமானம்” என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“ராஜபார்வை”, “விக்ரம்” படங்களைத் தொடர்ந்து கமல் மீண்டும் தயாரிப்புக்குள் வந்த படம் “சத்யா.”

இந்தப் படத்தில் சுரேஷ்கிருஷ்ணாவை டைரக்டராக கமல் அறிமுகப்படுத்தினார். வேலையில்லாத ஒரு இளைஞனின் பிரச்சினையை, புதிய கோணத்தில் சொன்ன இந்தப்படம் வெற்றி பெற்றது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்து இருந்தார்.

சித்ரா லட்சுமணனின் “சூரசம்ஹாரம்” படத்தில் கமல் நடித்தார்.

பழி வாங்கல் கதையான இதில், கமல் ஜோடியாக ராதிகாவின் தங்கை நிரோஷா நடித்தார். 100 நாட்கள் ஓடிய இந்தப்படம் தெலுங்கில் “போலீஸ் டைரி” என்ற பெயரில் “டப்” செய்யப்பட்டு வெளியானது.

திரைப்பட வரலாறு 955
கமல் நடித்த இந்திப்படங்கள்
50 வாரங்கள் ஓடின

தமிழில் படங்களை தொடர்ந்த நிலையில் இந்தி வாய்ப்புகளையும் ஏற்று நடித்தார், கமல். இப்படி அவர் நடிப்பில் அடுத்தடுத்து வந்த “சாகர்”, “கிராப்தார்” படங்கள் 50 வாரங்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

ரிஷிகபூர், டிம்பிள்

தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது கமலுக்கு தொடர்ந்து இந்திப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தன. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் இந்தியில் கமல் ஒப்புக்கொண்ட படம் “சாகர்.”

கமலுடன் ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள். முக்கோண காதல் கதைதான். டிம்பிளை கமலும், ரிஷிகபூரும் விரும்ப, டிம்பிள் யாரை விரும்புகிறார் என்பதை கடல் பின்னணிக் காட்சிகளில் உருவாக்கியிருந்தார்கள். 50 வாரம் ஓடி, வசூலில் கலக்கிய படம்.

கமல், ரஜினி

இந்த காலகட்டத்தில் ரஜினியும் ஒரு சில இந்திப்படங்களில் நடித்தார். “கிராப்தார்” என்ற இந்திப்படத்தில் கமல் – ரஜினி இருவருமே இணைந்து நடித்தார்கள். படத்தில் அமிதாப்பச்சனும் இருந்தார்.

இந்தியில் 3 ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதென்பது சர்வசாதாரண விஷயம். இந்த 3 ஹீரோக்கள் படமும் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாகி படத்தை 50 வாரம் ஓட வைத்தது.

மனக்கணக்கு

கமலின் நெருங்கிய நண்பர் டைரக்டர் ஆர்.சி.சக்தி. டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் கமல் உதவியாளராக இருக்கும்போதே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. கமலின் முதல் படத்தை இயக்க முன்வந்தவர் என்ற முறையிலும் டைரக்டர் மீது கமலுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. இப்படி அன்புக்குரிய டைரக்டர் ஆர்.சி.சக்தி “மனக்கணக்கு” என்ற படத்தை விஜயகாந்தை கதாநாயகனாக்கி இயக்கியபோது கமலை கவுரவ வேடத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார். நண்பருக்காக கமலும் அந்த கெஸ்ட் கேரக்டரில் நடித்தார்.

இந்த வகையில் கமல் – விஜயகாந்த் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.

சிப்பிக்குள் முத்து

கமலை “சாகர சங்கமம்” என்ற தெலுங்குப்படம் மூலம் நடிப்பில் சிகரம் ஏற்றிய டைரக்டர் கே.விஸ்வநாத், மீண்டும் கமலை வைத்து இயக்கிய படமே “சுவாதி முத்யம்.” தமிழில் இது “சிப்பிக்குள் முத்து” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக ராதிகா நடித்தார். தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய இந்தப்படம் தமிழிலும் நூறு நாட்களைத் தொட்டது.

நானும் ஒரு தொழிலாளி

“இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் ஸ்ரீதரே தயாரிப்பாளராகவும் மாறி கமலை இயக்கிய படம் “நானும் ஒரு தொழிலாளி.” நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஸ்ரீதரையும் வெளிப்படுத்தவில்லை; கமலுக்கும் பெயர் கொடுக்கவில்லை.

விக்ரம்

டைரக்டர் ராஜசேகர் அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். அவர் மேல் கமல் பார்வை பட்டபோது, தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமல் கேட்டுக்கொண்டார். அந்தப்படமே “விக்ரம்.” எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைக்கு ராஜசேகர் “கமர்ஷியல் மசாலா” தடவியும் “விக்ரம்” சொல்லிக் கொள்கிற மாதிரி போகவில்லை. படத்தில் கமலை விரும்பும் பட்டத்து ராணியாக பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்தார்.

காதல் பரிசு

சத்யா மூவிசின் “காக்கி சட்டை” கமலுக்கு அப்படியே பொருந்திப்போய் கிடைத்த வெற்றியில் அடுத்து “காதல் பரிசு” என்ற படத்தை தயாரித்தார்கள். இந்தப்படத்தில் அம்பிகாவும், ராதாவும் ஜோடியாக நடித்தார்கள். டைரக்டர் ஏ.ஜகந்நாதன் படத்தை இயக்கினார். 90 நாட்கள் ஓடி தயாரிப்பு தரப்பை வசூலில் திருப்தி செய்தது இந்தப்படம். தெலுங்கிலும் இந்தப்படம் `டப்’ செய்யப்பட்டது. அங்கே நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலையும் குவித்தது.

டைரக்டர் ஏ.ஜகந்நாதனின் முதல் குரு டைரக்டர் டி.பிரகாஷ்ராவ். இவர் சிவாஜி நடித்த “உத்தமபுத்திரன்”, எம்.ஜி.ஆர். நடித்த “படகோட்டி” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். தெலுங்கில் `டப்’ செய்யப்பட்ட “காதல் பரிசு” படத்தை பார்த்த டி.பிரகாஷ்ராவ் டைரக்டர் ஜகந்நாதனை போனில் தொடர்பு கொண்டு “படம் நன்றாக இருக்கிறது. நன்றாகவும் போகிறது. என் சிஷ்யன் இயக்கிய படம் என்று என் நண்பர் வட்டாரத்தில் பெருமையாக சொல்லிக்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதை நினைவு கூர்ந்த டைரக்டர் ஏ.ஜகந்நாதன், “என் குருவுக்கு என்னை வெளிப்படுத்திய படம் என்ற முறையில் இப்போதும் இந்தப்படம் மீது எனக்கு காதல் உண்டு” என்கிறார்.

இந்தப் படத்தை இயக்குவதற்கு முன் ஏற்கனவே 1977-ல் கமலை “குமார விஜயம்” என்ற படத்தில் இயக்கினார் இவர். படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஜெயசித்ரா நடித்தார். முழு நீள காமெடி படமாக அமைந்த இந்தப்படம் சென்னை வெலிங்டன் தியேட்டரில் 12 வாரங்களுக்கு மேல் ஓடியது.

இந்தப் படத்தில் கமலை இயக்கிய அனுபவம் குறித்து டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறியதாவது:-

“மலையாளத்தில் வந்த “பாலாயி மதனம்” என்ற படமே தமிழில் “குமார விஜயம்” ஆனது. கமல் அந்த காலகட்டத்தில்தான் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருந்தார். “அந்தரங்கம்” போன்ற படங்கள் வரத் தொடங்கியிருந்தன. காட்சிகளை புரிந்து கொண்டு கேரக்டராக மாறிவிடும் வித்தையை அப்போதே கைவரப் பெற்றிருந்தார், கமல். மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளராக இருந்த ஈ.கே.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்தார்.

இவர் அப்போது முருகாலயா ஸ்டூடியோவை “லீசுக்கு” எடுத்து நடத்தி வந்தார். அவர் லீசுக்கு எடுத்த பிறகு அந்த ஸ்டூடியோவில் தயாரான முதல் படம் இதுதான்.

பெண் ரசிகைகள்

முதன் முதலாக இந்தப் படத்துக்கு பெண் ரசிகைகள் அதிக அளவில் வந்தனர். சினிமாவைப் பொறுத்த மட்டில் எந்த ஒரு ஹீரோவுக்கு அதிக பெண் ரசிகைகள் கிடைக்கிறார்களோ, அந்த ஹீரோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிப்பார். “குமாரவிஜயம்” படத்துக்கு பெண்களிடம் கிடைத்த ஆதரவை வைத்தே, பிற்காலத்தில் கமல் உயர்ந்த நிலையை எட்டுவார் என்று கணித்தேன். என் கணிப்பு இன்று அவரை “தசாவதாரம்” வரை கொண்டு நிறுத்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான “கண்ணன் என் காதலன்”, “சங்கே முழங்கு” ஆகிய படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே கமலை சந்தித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களுக்கும் நடன அமைப்பு டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்தான். கமல் அவரிடம் உதவியாளராக இருந்தார்.

பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக கமல் ஆடிக்காட்டுவார். “சங்கே முழங்கு” படத்தின் ஒரு பாடலுக்கு இப்படி கமல் ஆடிக்காட்டிய நேரத்தில் எம்.ஜி.ஆர். கமலிடம் அக்கறையாக பேசினார். “உன்னை `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிகனாக பார்த்தேன். என் “ஆனந்தஜோதி” படத்தில் நீ நடித்தபோது பின்னாளில் பிரபல நடிகனாக வருவாய் என்று கணித்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக நீ இப்போது நடனமாடிக் கொண்டிருக்கிறாய். நீ நடிப்பில் உருவாக வேண்டியவன். அதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்கிவிடு. உனக்கு எந்த மாதிரியான உதவி தேவைப்பட்டாலும் என்னை வந்து பார்” என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த அக்கறையுடன் கூடிய அறிவுரையே, கமலை மாற்றியது. அதன்பிறகே அவர் டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிப்பிலும் மெருகேறினார். “உலக நாயகன்” என்ற நிலையில் இன்று கமல் வளர்ந்திருக்கிறார். கமலின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை பார்க்கும் அதே நேரத்தில், அன்று அவரை நடிப்பு பக்கமாய் திருப்பிய அண்ணன் எம்.ஜி.ஆர். என் கண்ணில் நிற்கிறார்.”

இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.

திரைப்பட வரலாறு 958
இரட்டை வேடத்தில் புதுமை
“குள்ள அப்பு” வேடத்தில் அசத்தினார், கமல்!

இரட்டை வேடத்தில், புதுமையைப் புகுத்தினார், கமல். ஒரு வேடத்தில் `குள்ள அப்பு’வாக நடித்து, அனைவரையும் பிரமிக்க

வைத்தார்.வித்தியாசமான கேரக்டர்கள் என்றால் கமலுக்கு அப்படியொரு ஈடுபாடு. அதுவரை திரைக்குள் வந்திராத கேரக்டர் ஏதாவது கமலுக்கு தோன்றினாலோ, அல்லது மற்றவர்கள் சொன்னாலோ, அப்போது முதலே அந்த கேரக்டருக்குள் வாழத்தொடங்கி விடுவார். அப்படியொரு கதைதான் கமல் இரட்டை வேடத்தில் நடித்த “அபூர்வ சகோதரர்கள்.”

போலீஸ் அதிகாரி குடும்பம்

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒருவர், சமுதாயத்தில் செல்வாக்கு பெற்ற மூன்று சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்துகிறார். அவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. செல்வாக்கை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து வெளியே வரும் அவர்கள், போலீஸ் அதிகாரியின் குடும்பத்தை அழித்து பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியைக் கொன்றதோடு அவரது கர்ப்பிணி மனைவியின் வாயிலும் விஷத்தை ஊற்றி கொல்ல முயல்கிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரியின் மனைவி தப்பி விடுகிறாள். அவளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஒருவன் பழுதில்லாமல் வளர, மற்றவனோ `விஷ’ பாதிப்பினால் மூன்றடி உயரத்தோடு நின்று போகிறான்!

வளர்ந்தவன் மெக்கானிக் ராஜாவாக `ஜாலி’யாகத் திரிய, `குள்ள’ அப்புவோ சர்க்கசில் சேர்ந்து கொள்கிறான்.

சர்க்கஸ் கம்பெனியில் `குள்ளனாக’ வாழ்க்கையைத் தொடங்கும் `அப்பு’வுக்கு, ஒரு கட்டத்தில் தனது உயரம் குறைந்த பின்னணி தெரிய வருகிறது. செல்வாக்கு பெற்ற 3 சமூக விரோதிகளால், தங்கள் அழகான குடும்பம் சிதறடிக்கப்பட்ட விவரத்தை அறிகிறான்.

தனது சின்ன உருவத்தால் அவர்களை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த அப்பு, தனது மதிïகத்தால் அந்த மூவரையும் எப்படி எமலோகம் அனுப்புகிறான் என்பதுதான் கதை.

சிதம்பர ரகசியம்

இரட்டை வேடங்களில் கமல் அசத்தினார்.

குறிப்பாக, குள்ள அப்புவாக அவர் எப்படி நடித்தார் என்பது கடைசிவரை “சிதம்பர ரகசிய”மாகவே இருந்தது!

சில இடங்களில் முழங்காலை மடித்துக் கட்டியும், சில இடங்களில் பள்ளத்துக்குள் நின்றபடியும் நடித்தார் என்பது திரை வட்டாரத் தகவல். ஆனால் படத்தில் `அப்பு’ கேரக்டரில் அவர் நடித்தபோது அவருடன் பங்கேற்றவர்கள் அந்த ரகசியம் பற்றி வாய் திறக்கவே இல்லை.

வில்லன்கள் மூவரையும், குள்ள கமல் கொல்வதற்காக கையாண்ட வித்தியாசமான டெக்னிக்குகள் ரசிகர்களை பெரிதும் கவர, படம் 200 நாட்கள் ஓடியது.

படத்தின் கதையும், தயாரிப்பும் கமல்தான். டைரக்ட் செய்தவர் கமலின் ஆஸ்தான டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ்.

இந்தப்படம் ஆரம்ப கட்ட தயாரிப்பில் இருந்தபோது, எடுத்தவரையில் போட்டுப் பார்த்தார் கமல். அவருக்குத் திருப்தியில்லை. அதனால் அந்தக் காட்சிகளை அப்படியே தூக்கிக் கடாசிவிட்டு மறுபடியும் திரைக்கதையில் சில மாற்றம் செய்து படத்தை உருவாக்கினார்.

படத்தில் இளையராஜாவின் இசை இன்னொரு சிறப்பு அம்சம். “அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ”, “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா”, “உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்”, “வாழவைக்கும் காதலுக்கு ஜே” போன்ற பாடல்கள் ரசிகர்களைபரவசப்படுத்தின.

கவுதமி

படத்தில் வழக்கமான கமலுக்கு கவுதமி ஜோடியாக நடித்தார். குள்ள கமல் ஒருதலையாக விரும்பும் பெண்ணாக ரூபினி நடித்தார்.

வில்லன்களாக ஜெய்சங்கர், நாகேஷ், டெல்லி கணேஷ் நடித்தார்கள்.

தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் “விசித்ர சோதரலு” என்ற பெயரிலும், இந்தியில் “அப்புராஜா” என்ற பெயரிலும் படம் `டப்’ செய்யப்பட்டு ஓடியது.

சாணக்யன்

மலையாளத்தில் கமல் பல படங்களில் நடித்திருந்தாலும் “சாணக்யன்” அவருக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படம். ராஜீவ்குமார் இயக்கிய இந்தப்படத்தில் கமல் சாணக்யத்தனத்தால் எதிரிகளை வெற்றி கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஹீரோவின் புத்திசாலித்தனத்தை ரசிகர்களும் வரவேற்க, படம் வெள்ளி விழா கொண்டாடியது. படம் இதே பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

இந்திரன் சந்திரன்

இதே காலகட்டத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த “இந்துருடு சந்துருடு” படமும் வெளியானது. இந்த இரட்டை வேடங்களில் “மேயர்” கேரக்டரில் ரொம்பவே வித்தியாசம் காட்டியிருந்தார் கமல். அதுவும் வில்லத்தனத்தை மிக இயல்பாக செய்து ரசிக்க வைத்தார்.

தெலுங்கில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம் தமிழில் “இந்திரன் சந்திரன்” என்ற பெயரிலும், இந்தியில் “மேயர் சாஹேப்” என்ற பெயரிலும் வெளியானது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக விஜயசாந்தி நடித்திருந்தார்.

மைக்கேல் மதன காமராஜன்

பட அதிபர் பஞ்சு அருணாசலம், கமல் 4 வேடங்களில் நடிக்க வைக்க விரும்பி அவருக்காக “மைக்கேல் மதன காமராஜன்” என்ற படத்தை தயாரித்தார்.

4 கமல்களுமே காமெடியில் ரசிகர்கள் வயிற்றை புண்ணாக்கினார்கள். ஒரு கமலுக்கு குஷ்புவும், இன்னொரு கமலுக்கு ஊர்வசியும் ஜோடியாக நடித்து, கமலுடன் காமெடிக் கூட்டணி போட்டுக் கொண்டார்கள்.

கமல் – ஊர்வசி பாடுவதாக வரும் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” பாடல் பிரபலமானதோடு, அந்நாளைய மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இடம் பெற்றது.

“வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” பாடல் ஜனரஞ்சக ரசனைப் பட்டியலில் சேர்ந்தது.

சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப்படம், 200 நாட்கள் ஓடியது. இதே பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

திரைப்பட வரலாறு 959
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில்
கமல்-குஷ்பு நடித்த “சிங்காரவேலன்”

வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வந்த கமல் ஒரு மாறுதலுக்காக முழு நீள காமெடி படமான “சிங்காரவேலன்” படத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இதில் கமலுக்கு ஜோடி குஷ்பு.

ஆர்.வி.உதயகுமார் இயக்கிய இந்தப் படமும் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தது.

கமலுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்த நேரம் அது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தியவர், தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் தான் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த நேரத்தில் முழுக்க முழுக்க காமெடி கேரக்டரில் சிங்காரவேலனாக வந்தார், கமல்.

உதயகுமார்

சிங்காரவேலன் படத்தில் கமலை இயக்கிய ஆர்.வி.உதயகுமார், அதற்கு முன் காமெடிப் படங்களை இயக்கியவரல்ல. “உரிமை கீதம்”, “புதிய வானம்”, “உறுதிமொழி”, “கிழக்கு வாசல்”, “சின்னக்கவுண் டர்” என அதிரடி ஆக்ஷன் கதைகள் மூலமும், உணர்வு பூர்வமான குடும்பக் கதைகள் மூலமும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சிங்காரவேலனை இயக்கிய அனுபவம் பற்றி ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார்:

“இசையமைப்பாளர் இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக நான் இயக்கிய படமே “சிங்காரவேலன்.”

கமல் சார் அப்போது வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருந்தார். அதனால், அதுமாதிரி கதையாக தயார் செய்யலாமா என்று கூட டிஸ்கஸ் செய்தோம்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான இளையராஜாவின் விருப்பமோ, `படத்தை காமெடியாக எடுக்கலாமே’ என்பதாக இருந்தது. இதுபற்றி கமல் சாரிடம் பேசியபோது, “சமீபத்தில் செய்த படங்களுக்கு மாற்றாக காமெடியிலும் செய்வோமே” என்று சம்மதம் கொடுத்தார். அதற்குப்பிறகு உருவான கதையே “சிங்காரவேலன்.”

பஞ்சு அருணாசலம்

கதை காமெடிக்களம் என்றதுமே, பஞ்சு அருணாசலம் சார் ஒரு வரியில் ஒரு கதை சொன்னார். அந்த `லைன்’ மொத்த திரைக்கதையையும் தாங்குவதாக தெரிந்தது. கதை பற்றி கமல் சாரிடம் சொன்னபோது, “டைரக்டரா உங்களுக்கு ஓ.கே.ன்னா எனக்கும் ஓ.கே.தான்” என்று உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

காமெடிக்கதை என்று முடிவான பிறகும், எனக்குள் உள்ளூர வருத்தம்தான். `ஒரு மகா கலைஞனை இயக்குகிறோம். அவருக்கான தேடல்களில் கொஞ்சம் நாளெடுத்து உணர்வுபூர்வ பின்னணியில் கதை தந்திருக்கலாமே’ என்று எனக்குள் உறுத்தல் இருந்தது. ஆனால், எப்போது காமெடிக்கதை என்று முடிவானதோ, அப்போதே, “காமெடிக்கு நான் இப்போதே ரெடி. காட்சிக்கு காட்சி ரசிகர்கள் சிரிக்கிற மாதிரியாக கதை பண்ணுவோம்” என்று கமல் களமிறங்கி விட்டார்.

ஆனாலும் ஒருநாள் கதை தொடர்பாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உதய்! “சின்னக்கவுண்டர்” மாதிரி உணர்வுபூர்வமான கதை பண்ணினவர் நீங்கள். எனக்காக காமெடிக் கதை பண்ணினால் உங்க இமேஜ் பாதிக்காதா?” என்று கேட்டார். இது ஒரு டைரக்டர் மீதான அவரது அக்கறைப் பார்வை. ஒரு டைரக்டர் தனக்கே உரிய சிறப்பு அம்சங்களுடன் படத்துக்கு படம் நிலைத்து நிற்க வேண்டும் என்கிற அவரது எல்லை கடந்த பார்வையைத்தான் இது எனக்கு வெளிப்படுத்திற்று.

நான் அவரிடம், “கமல் சார்! காமெடிக் கதை என்பதும் அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதும் சாதாரண விஷயமல்ல. அதையும் முழு மூச்சுடன் முயன்று பார்ப்போமே” என்று பதில் சொன்னேன்.

கமல் சாரைப் பொறுத்தமட்டில் எந்த விஷயமானாலும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசி விடுவார். இதுவிஷயத்தில் எனக்கே ஒரு அனுபவம் நேர்ந்திருக்கிறது.

நான் இயக்கிய “சின்னக்கவுண்டர்” படத்தை பார்த்தவர் படத்தை பாராட்டுவார் என்று எதிர்பார்த்தால், அவரோ அதுபற்றி எதுவும் சொல்லாமல் “என்ன உதய்! நீங்களுமா சாதி ரீதியாக தலைப்பு வைப்பது? உங்ககூட நான் பேசமாட்டேன்” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார். நான் அவரிடம், “சார்! பொள்ளாச்சி, கோயமுத்தூர் ஏரியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களை `கவுண்டர்’ என்றும் சொல்வதுண்டு” என்று விளக்கினேன். புரிந்து கொண்டார்.

60 நாட்களில் எடுத்த படம்

சிங்காரவேலன் முழுப்படத்தையும் 60 நாட்களில் எடுத்து முடித்தேன். சென்னையிலும், பொள்ளாச்சியிலுமாக மாறி மாறி படப்பிடிப்பு நடத்தினோம். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த `எம்.ஆர்.சி. பார்ம் ஹவுஸ்’ எனது நண்பர் சம்பத்துக்கு சொந்தமானது. படத்தில் ஆடு, மாடு, கோழிகள் வரும் காட்சியையும், பாடலையும் இங்குதான் படமாக்கினோம்.

முதலில் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு கமல் சாருக்காக பொள்ளாச்சி மகேஷ் லாட்ஜில் ரூம் ஏற்பாடு செய்தோம். இரண்டு ரூம்களை ஒன்றாக்கி தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் படப்பிடிப்புக்கு வந்த கமல், பண்ணை வீட்டின் இயற்கை அழகில் பிரமித்து, “இங்கேயே தங்கிக் கொள்கிறேனே” என்று சொல்லிவிட்டார்.

அதிகாலையில் பசுமாட்டில் இருந்து கறந்த பாலை அப்படியே குடித்துவிட்டு உடற்பயிற்சியை தொடங்கி விடுவார். அந்த பண்ணை இல்லம் 60 ஏக்கர் சுற்றளவைக் கொண்டது என்பதால் கமல் சார் படப்பிடிப்பு நாட்களில் அதை விட்டு வெளியே வரவில்லை. காலையில் படப்பிடிப்பு ரெடி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; அடுத்த வினாடி கேமரா முன் வந்து நிற்பார்.

சிறு வயதிலேயே எனக்கு நகைச்சுவை உணர்வு இருந்தது. படிக்கிற நாட்களில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இயல்பான காமெடி மூலம் அவர்களை சிரிக்க வைப்பேன். அந்த நகைச்சுவை உணர்வு இந்தப் படத்துக்கு எனக்கு கைகொடுத்தது.

குஷ்பு

படத்தின் கதாநாயகி குஷ்பு என்று முடிவானதும், அவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் எப்படி வந்தால் சரியாக இருக்கும் என்பதை விவரித்தேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குஷ்புவும் அப்படியே காமெடிக் காட்சிகளில் இரண்டறக் கலந்து விட்டார்.

படத்தில் கமல், ஆச்சி மனோரமா, கவுண்டமணி ஆகியோர் சேர்ந்து நடித்த காமெடிக் காட்சிகளில், ரசிகர்கள் விலா நோகச் சிரித்தார்கள். படம் உருவான அந்த நேரத்தில் நாங்களும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

கமல் கணிப்பு

படத்தில் சார்லி, வடிவேலு ஆகியோரும் காமெடிக்கு இருந்தார்கள். என் டைரக்ஷனில் சின்னக்கவுண்டரை அடுத்து வடிவேலுவுக்கு இது இரண்டாவது படம். வடிவேலுவின் நடிப்பை பார்த்த கமல் சார், “இவர் வித்தியாசமாக இருக்கிறார். நல்ல கேரக்டர் அமைஞ்சா பெரிசா வெளிப்படுவார்” என்று கணித்தார். இந்த எண்ணம் அவருக்குள் தொடர்ந்து நீடித்ததால் அடுத்து தான் தயாரித்த “தேவர் மகன்” படத்தில் வடிவேலுவுக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்து அவரை `நட்சத்திர’ நடிகராக்கினார்.

பாடகர் மனோவை நான் நடிக்க அழைத்தபோது, ரொம்பவும் தயங்கினார். வலுக்கட்டாயமாக அவரையும் காமெடி பண்ண வைத்தேன்.

குஷ்புவை ஆண்களுடன் பழகவிடாமல் ஆச்சி மனோரமா தடுக்கிற காட்சிகளில் எல்லாம் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களும் சிரித்தார்கள்.

அனுபவம் புதுமை

கமல் சாரை நான் இயக்கிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. காட்சியை படமாக்குவதற்கு முன், காட்சிக்கு எந்த மாதிரியாக நடிக்கலாம் என்று அவரே பத்து விதமாகவாவது செய்து காட்டுவார். அதில் ஒன்றை நாம் தேர்வு செய்தாலே போதும். இந்த வகையில் டைரக்டரின் பளுவில் பாதியைக் குறைத்து விடுவார்.

காட்சிகள் தொடர்பாக அவர் ஏதாவது விவாதம் செய்தார் என்றால், அதற்கான காரணத்தையும் விளக்குவார். அவரது கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிற மாதிரியே இருக்கும்.

சில இடங்களில் நாம் சொல்லும் கருத்தில் உடன்பாடு இருந்தால், உடனே ஏற்றுக்கொள்வார். அவருக்கு ஒரு படம் இயக்கினாலே, ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட அளவுக்கு அனுபவம் வந்துவிடும். இன்றைக்கு 10 வேடங்களில் “தசாவதாரம்” வரை அவரை வியந்து பார்த்து பிரமிக்க காரணமே, கேரக்டர்கள் மீதான அவரது தனிப்பட்ட ஈடுபாடுதான்.

படத்தில் இளையராஜாவின் பாடல்களும் சிறப்பு அம்சமாக அமைந்தன. “புதுச்சேரி கச்சேரி”, “இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்”, “ஓ ரங்கா ஸ்ரீரங்கா”, “போட்டு வைத்த காதல் திட்டம் ஓ.கே. கண்மணி”, “சொன்னபடி கேளு” போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் தாளம் போட்டார்கள். படம் வெளிவந்தபோது கமல் சாரின் இயல்பான காமெடிக் காட்சிகளுக்கு ரசிகர்கள் திரையரங்கை அதிர வைத்தார்கள். படம் நூறு நாள் ஓடி வெற்றிப்பட்டியலில் சேர்ந்தது.

“தசாவதாரம்” படம் ரிலீசுக்கு முன்னதாக கமல் சார் பேசும்போது, “இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றி படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரையே சேரும். எதிர்பார்த்த மாதிரி படம் இல்லாது போனால் அதற்கு நானே பொறுப்பு” என்றார். தனது சுய முயற்சிகள், கதை ஈடுபாடு போன்றவை ரசிகர்களிடம் சரிவர சென்று சேராமல் போயிருந்தால் அதற்கு தானே பொறுப்பாளி என்று சொல்ல பெரிய மனது வேண்டும். இந்த வெளிப்படையான குணம்தான் அவரது பலமும் கூட.

உழைப்பாளிகளுக்கு ஆதரவு

ஒருமுறை டைரக்டர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் சிறு பிரச்சினை. இதில் கமல் சார் பெப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை சொன்னபோது டைரக்டர்கள் சங்கம் அவர் மீது அதிருப்தியில் இருந்தது. இதனால் “வஞ்சப்புகழ்ச்சி” பாணியில் ஒரு வாசகத்தை எழுதி அந்த `பொக்கே’வுடன் இணைத்து கமல் சாருக்கு கொடுத்தனுப்ப ஏற்பாடு நடந்தது. “இது சரியல்ல. கமல் சார் ஒரு நல்ல கலைஞர். எதையும் மனதில் வைக்காமல் ஆத்மார்த்தமாக பேசிவிடக்கூடியவர். எனவே கிண்டல் தொனியிலான வார்த்தைகளுடன் கூடிய பொக்கேயை அனுப்ப வேண்டாம்” என்று தடுத்துப் பார்த்தேன். தனியொருவனாக என் குரல் அங்கே அப்போது எடுபடவில்லை.

கொஞ்ச நாட்களில் அப்படி செய்தது தவறு என்பதை டைரக்டர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கமல் சாருடன் நேசக்கரம் நீட்ட, டைரக்டர் விசுவுடன் என்னை கமல் சாரைப் பார்த்து வரச் சொன்னார்கள். நாங்கள் போய் கமல் சாரை பார்த்து வருத்தம் தெரிவித்த நேரத்தில், “இந்த விஷயத்தில் முதலில் இருந்தே எனக்காக `பைட்’ பண்ணினது நீங்கள் ஒருத்தர் மட்டும்தான்னு எனக்குத் தெரியும் உதய்”

என்றார்.”சிங்காரவேலன்” படத்தயாரிப்பு சமயத்தில்தான் இந்த சம்பவமும் நடந்தது. சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் கலைஞனாக இருப்பதால்தான், ரசிகர்கள் அவரை தங்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.”

இவ்வாறு டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

திரைப்பட வரலாறு :(960)
வித்தியாசமான படம் “குணா”
மாறுபட்ட வேடத்தில் கமல் சிறந்த நடிப்பு

கமல் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட படமாக வந்தது, “குணா”. சந்தானபாரதி இயக்கிய வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப்படம், நூறு நாட்கள் ஓடி, கமலின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தது.

வெறித்தனமான காதல் கொண்ட இளைஞனாக இப்படத்தில் கமல் நடித்தார்.

படத்தை, டைரக்டர் சந்தானபாரதி இயக்கினார். கமலிடம் மானேஜராக இருந்த டி.என்.சுப்பிரமணியம் தனது மனைவி அலமேலு பெயரில் இந்தப்படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனது மானேஜரையும் தயாரிப்பாளராக்கி விட்டார், கமல்.

புதுமை

படத்தின் கதை, இப்போதும்கூட புதுமையானதுதான்.

வளர்ந்த சூழல் சரியில்லாத ஒருவன் தனது கோணத்தில் எடுக்கும் தீவிர முடிவுகள் அவனது எதிர்காலத்தை எப்படி விபரீதத்தில் முடித்து வைக்கிறது என்பதை நேர்த்தியாய் காட்சிப்படுத்தியிருந்தார், சந்தானபாரதி.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் கண்ணில் படுகிறாள், தெய்வாம்சம் கொண்ட ஒரு இளம் பெண். அவள் மந்திரி ஒருவரின் மகள். அவளை, தான் வழிபடும் `அபிராமி’யாகவே எண்ணும் இளைஞன், அந்த அபிராமி தன் பராமரிப்புக்குள் எப்போதும் இருக்க வேண்டும் என்று விபரீத முடிவெடுக்கிறான். அப்படியொரு வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அந்தப் பெண்ணை கடத்திக்கொண்டு போய், ஒரு மலைக்குகையில் சிறை வைக்கிறான்.

தன்னை யாரோ ஒரு ரவுடி கடத்திக்கொண்டு வந்ததாக பயந்து நடுங்கும் அந்தப்பெண், கடத்தியவன் மனதளவில் ஒரு “குழந்தை” என்பதை புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு பயம் விலகி, அவனிடம் நட்பு பாராட்டுகிறாள். அவனும் தான் வணங்கும் `அபிராமி’யாகவே கருதி, அவளை கொண்டாடுகிறான்.

இந்த பக்திப்பார்வை நட்பின் பின்னணியில் வலுவடைகிறது. `அபிராமி’ தன்னைவிட்டு எந்தக் காலத்திலும் போய்விடக்கூடாது என்று எல்லையற்ற அன்பு செலுத்துகிறான். மந்திரி மகளை தீவிரமாகத் தேடும் போலீஸ், மோப்பம் பிடித்து அவள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குகைப் பாறைக்கும் வந்துவிடுகிறது. `அபிராமி’யை கடத்தி வந்ததாக கருதிய போலீஸ் இளைஞனை சுட்டுத் தள்ளுகிறது. அந்தப்பெண் மீட்கப்பட்டாலும், இளைஞனின் `பாசமுகம்’ அவளுக்குள் நிரந்தரமாகிப்போய், இளைஞனின் இழப்பை தன்னையே இழந்ததுபோல் உணர்கிறாள்.

கண்மணி… நான் எழுதும் கடிதமே

படத்தில் இளையராஜா இசையில் உருவான “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. அந்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த மூன்றாது படமாக `குணா’வை தமிழக அரசு தேர்ந்தெடுத்து விருது வழங்கியது.

இந்திப் பட உலகில் பிரபல வில்லனாக இருந்த சரத் சக்சேனா இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படத்தில் துடிப்பான போலீஸ் அதிகாரியாக வந்தார்.

பழைய நடிகை எஸ்.வரலட்சுமி நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு இந்தப்படத்தில் நடித்தார். கமலின் வளர்ப்புத் தாயாக வந்த அவர், கமலின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொன்னார்.

ரோஷிணி

படத்தின் நாயகிக்கான தேடுதல் வேட்டை அதிக நாட்கள் நடந்தது. கமலின் மனம் கவர்ந்த அபிராமி கேரக்டர் என்பதால், “பார்க்கிற வினாடியில் ஈர்க்கிற” பெண்ணாக தேடிப்பார்த்தார்கள்.

கடைசியில் மும்பையில் இருந்து ரோஷிணி என்ற பெண்ணை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்கள். இந்த ரோஷிணி அதற்குப்பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காமல் மும்பைக்கே சென்றுவிட்டார்.

“குணா” படத்தை தயாரித்த அனுபவம் குறித்து டி.என்.சுப்பிரமணியம் கூறியதாவது:-

அரை நூற்றாண்டு அனுபவம்

“சினிமா உலகுடன் எனக்கு 50 ஆண்டுகள் பரிச்சயம். சினிமாதான், கமல் சாருடன் என்னை நெருங்க வைத்தது. அவரிடம் பணியாற்றும் வாய்ப்பையும் தந்தது.

கமல் சார் மலையாளத்தில் “ஆசீர்வாதம்” என்ற படத்தில் நடித்தபோது, அந்த கம்பெனியில் நான் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தேன். அந்தப் படத்தில் கமல் – ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தார்கள். படத்தின் கதை எனக்குப் பிடித்துப்போய் அதை டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் “அடுக்குமல்லி” என்ற பெயரில் தயாரித்தேன். 1979-ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த 9 படங்களில் இது மட்டுமே கறுப்பு வெள்ளைப்படம். இருந்தும் `கலர்’ வித்தியாசமின்றி படம் நன்றாக ஓடியது. இதன் பிறகு நடிகர் பிரபு நடிக்க “சின்ன வாத்தியார்” என்ற படத்தை தயாரித்தேன். சுமாராக ஓடியது.

கமல் சார் அலுவலகத்தில் மேலாளர் பணியில் என்னை இணைத்துக் கொண்டதால், தயாரிப்பு பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன்.

கமலுக்கு பிடித்த படம்

இந்நிலையில் “குணா” படத்தை உருவாக்க கமல் சார் முடிவு செய்தபோது, நான் கொஞ்சமும் எதிர்பாராமல் என்னையே தயாரிப்பாளராக்கினார்.

இந்தப்படம் வந்த பிறகு, கமல் சார் எந்தப் பேட்டி என்றாலும், தனக்கு பிடித்த படங்களைக் குறிப்பிடும்போது மறக்காமல் “குணா”வையும் குறிப்பிடுவார். ரசிகர்கள் என்னை சந்திக்கும்போது நான்தான் “குணா” படத்தை தயாரித்தவன் என்று தெரிந்து கொண்டால், உடனே என் கைகளை பற்றிக்குலுக்கி பாராட்டுவார்கள். இப்போதும் இந்த பாராட்டு தொடர்கிறது.

குணா குகை

கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாறையிடுக்கில் உள்ள குகையை அதுவரை எந்த சினிமாவிலும் பயன்படுத்தியதில்லை. அந்தப் பாறைக்குகையை கதையின் முக்கியத்துவம் கருதி தேடியலைந்து கண்டுபிடித்தவரே கமல் சார்தான்.

கொடைக்கானல் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, ஓட்டலில் வேலை பார்த்த டிரைவர் ஒருவர் மூலம், இப்படியொரு குகை இருப்பதை தெரிந்து கொண்டவர், அப்போதே அந்த இடத்தை தேடிப்போய் கண்டுபிடித்து விட்டார்.

இந்தப்படம் வெளிவந்த பிறகு, அந்த பாறைக்கே “குணா குகை” என்று பெயர் வழங்குகிறது. சுற்றுலாத்துறையில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவோரும் “குணா குகை” என்றே அதை குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு எங்கள் படத்தின் மூலம் குகை புகழ் பெற்றுவிட்டது.

இந்த குகை பக்கத்தில் ஒரு `சர்ச்’ செட் போட ஏற்பாடு செய்தார், கமல். `செட்’ பணி முடிந்த பிறகு பார்த்தால், குகை அருகே உள்ள இயல்பான சர்ச் மாதிரி அந்த சூழலுக்குள் சர்ச் அப்படி பொருந்திக் கொண்டது.

குகைக்குள் படப்பிடிப்பு நடந்த நாட்களில் பாறைக்குள் படப்பிடிப்பு குழுவினரும் போய் வரும் வகையில் `சைடு’ பகுதியில் கம்பு நட்டு அதன் மூலம் பாறைக்குள் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறி, இறங்க வசதி செய்து கொடுத்தார். 6 மணிக்குள் அந்த பகுதி இருட்டி விடும் என்பதால், அதற்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்வார்.

கமல் சாருக்கு இதிலும் வித்தியாசமான மேக்கப் என்பதால், விடியகாலை 3 மணிக்கே எழுந்து மேக்கப் போட்டு காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவார்.

படத்தில் கமல் தனக்குத்தானே புலம்பலாய் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியை ராஜ்கமல் ஆபீசில் எடுத்தார்கள்.
200 அடி பிலிமில் வருகிற அந்த காட்சி, ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தபோது, டிவி சேனல்களில் இந்தக் காட்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கமல் சாரின் நடிப்புக்கு பெருமை சேர்த்தார்கள்.

படத்தின் பாதி காட்சிகள் கொடைக்கானலிலும், மீதி காட்சிகள் ஐதராபாத்தில் வீடுகள் செட் போட்டும் எடுக்கப்பட்டது. மொத்தப் படப்பிடிப்பும் 65 நாட்களில் நடந்து முடிந்தது.

ராஜீவ் கொலை

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் குகையில் நடந்தபோதுதான், ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியானார். அதற்கு முந்தின தினம்தான் சென்னையில் இருந்து படப்பிடிப்பை பார்க்க பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மறுநாள் யாரும் வெளியே வரமுடியாத சூழலில், அன்று அவர்களை தங்க வைத்து, அதற்கும் அடுத்த நாள் கறுப்புக்கொடி கட்டிய கார், ஜீப், வேன் என்று கிடைத்த வாகனத்தில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

ஒரு தயாரிப்பாளராக “குணா” எனக்கு லாபம் தந்த படம். நூறு நாள் ஓடி வெற்றி பெற்று, கமல் சாரின் படத்தை தயாரித்தவன் என்ற பெருமையையும் எனக்கு தந்தது.”

இவ்வாறு டி.என்.சுப்பிரமணியம் கூறினார்.

திரைப்பட வரலாறு 961
சிவாஜி- கமல் இணைந்து நடித்த “தேவர் மகன்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமல் நடிப்பில் உருவான “தேவர் மகன்” படம் வன்முறைப் பாதையில் இருந்து சமுதாயம் விடுபட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. படத்தில் நடித்ததோடு, தயாரிப்பையும் கமலே ஏற்றிருந்த இந்தபடம் வெள்ளி விழா கொண்டாடியது.

நடிகர் சிவாஜிகணேசன் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

அதிரடி கதைகளில் கூட ஒரு நல்ல மெசேஜ் சொல்வது கமல் பாணி. அவர் நடித்த “தேவர்மகன்” படத்திலும் “வன்முறை கூடாது” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

படத்தில் வன்முறைக்கு எதிராகக் கிளம்பும் பட்டதாரி இளைஞன் சக்திவேல் கேரக்டரில் கமலும், கமலின் முன்னேற்ற முயற்சிகளுக்கு சாதிய வர்ணம் பூசி முட்டுக்கட்டை போடும் மாயன் கேரக்டரில் நாசரும் நடித்தார்கள்.

அரிவாள் கலாசாரம்

சக்திவேலின் அப்பா சிவாஜி சமாதானத்தை விரும்புபவர். அவரது தம்பி மகன் மாயன் பெரியப்பாவின் கொள்கை களை முரட்டுத்தனமாக எதிர்ப்பவன். பெரியப்பாவின் மறைவுக்கு பிறகு பெரியப்பா மகன் சக்தி வேலை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்குகிறான். மோதலை தவிர்க்கும் விதமாக சமரசம் பேச விரும்பும் சக்திவேலின் முயற்சிகள் பலனற்று போகின்றன.

கடைசியில் வன் முறையே கூடாது என்ற கருத்தை உடைய சக்திவேலின் வீச்சரிவாளுக்கு மாயன் பலியாகிப் போக, இளைய சமுதாயத்திடம் “இந்த வன்முறை என்னோடு முடியட்டும், நீங்களாவது அரிவாளை தூக்கி எறியுங்கள்” என்று புத்திமதி கூறிவிட்டு ஜெயிலுக்கு போகிறார் சக்திவேல்.

படத்தில் கமலின் கல்லூரிக் காதலியாக கவுதமியும், மனைவியாக ரேவதியும் நடித்தார்கள்.

மனோகரா பட காலத்தில் அண்ணன், தம்பியாக நடித்த சிவாஜியும் `காகா’ ராதாகிருஷ்ணனும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அண்ணன்- தம்பியாக நடித்தார்கள்.

பழைய படங்களில் அற்புதமான நடன நடிகர் என்று பெயரெடுத்த `கள்ளபார்ட்’ நடராஜன் இதில் ரேவதியின் அப்பாவாக குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

பரதன்

படத்தை பிரபல கேரள இயக்குனர் பரதன் டைரக்டு செய்திருந்தார்.

இளையராஜா இசையில், “போற்றிப் பாடடி பெண்ணே”, “இஞ்சி இடுப்பழகி”, “சாந்து பொட்டு ஒரு சந்தனப் பொட்டு” போன்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

இந்தப் படம் தெலுங்கில் `சத்ரிய புத்ருடு” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

வெற்றி விழா

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த `வெற்றி விழா’ படத்தில் கமல் நடித்து, அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கினார்.

பிரதாப் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக பிரபுவும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிவாஜி பட நிறுவனம் கமலை வைத்து “கலைஞன்” படத்தை தயாரித்தது. ஜி.பி.விஜய் என்ற டைரக்டர் படத்தை இயக்கினார்.

விபத்து

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை சங்கம் தியேட்டர் அருகில் சாலை ஓரத்தில் நடந்த போது படப்பிடிப்பு வாகனம் கமலின் கால் பகுதியில் ஏறி விபத்து ஏற்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய கமல், அந்த சமயத்தில் நடந்த பட விழாக்களில் ஊன்று கோல் உதவியுடன் நடந்து வந்து கலந்து கொண்டார். கால் சரியானதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முழு வீச்சில் முடித்துக் கொடுத்தார். ஆனாலும், இந்த நடிப்புக் கலைஞனுக்கு “கலைஞன்” படம் வசூலிலும் விபத்தையே தந்தது.

இந்தப் படம் தெலுங்கில் `போலீஸ் பேடா’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

மகாநதி

குணா படத்தின் மூலம் கமலுடன் வித்தியாசங்களுக்கு பழகிப் போன டைரக்டர் சந்தானபாரதி, மீண்டும் கமலுடன் இணைந்த படம் `மகாநதி’. உணர்ச்சி பூர்வமான கதையமைப்பும் உள்ளத்தை உலுக்கும் காட்சிகளும் கொண்ட இந்தப் படம் கமலின் நடிப்புப் பட்டியலிலும் மறக்க முடியாத படமாக இடம் பிடித்தது. 200 நாட்கள் ஓடி கமலின் வெற்றி வரிசையிலும் இடம் பிடித்துக் கொண்டது.

கமலின் ஜோடியாக சுகன்யா நடித்தார். கமலின் 10 வயது மகளாக இந்தப் படத்தில் நடித்த சோபனா, இந்தப் படத்துக்குப் பிறகு `மகாநதி’ சோபனா என்றே அழைக்கப்பட்டார். இப்போது பாடகியாகப் புகழ் பெற்று விளங்குகிறார். சங்கர் என்ற பெயரில் வில்லனாக அறிமுகமான நடிகர், இந்தப் படத்துக்குப்பிறகு “மகாநதி” சங்கர் ஆனார்.

கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதியில் தன் மகளை கமல் மீட்கப் போய், மகளை பார்த்ததும் கட்டியணைத்து கதறி கண்ணீர் விடும் காட்சியில், பார்த்த அத்தனை ரசிகர்களும் கண்ணீர் விட்டார்கள்.

பாரதிராஜாவை “16 வயதினிலே” படம் மூலம் டைரக்டராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இந்தப் படத்தை தயாரித்தார்.

16 வயதினிலே படத்தைத் தொடர்ந்து “கிழக்கே போகும் ரெயில்,” “சின்னச் சின்ன வீடு கட்டி” போன்ற படங்களை தயாரித்திருந்தாலும் “மகாநதி படத்தைத் தயாரித்ததில் தனிப் பெருமை அடைகிறேன்” என்று அவர் கூறினார்.

திரைப்பட வரலாறு 962
“குணா”, “மகாநதி”
கமல் படங்களை இயக்கிய சந்தானபாரதியின் அனுபவங்கள்

கமலஹாசனின் வெற்றிப்படங்களான “குணா”, “மகாநதி” ஆகிய படங்களை இயக்கியவர், சந்தான பாரதி. இந்தப் படங்களை இயக்கியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் வெளியிட்டார்.

கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் சந்தான பாரதி.

கமல் நடிப்பில் வித்தியாசமான கேரக்டர்களைக் கொண்ட “குணா”, “மகாநதி” இரண்டு படங்களையும் இயக்கியவர் டைரக்டர் சந்தானபாரதி. நடிகர் சத்யராஜை கதாநாயகனாக்கி கமல் தயாரித்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற படத்தையும் இயக்கினார். பாடல்களே இல்லாத அந்தப்படமும் வெற்றி பெற்றது.

கமலுக்கும் தனக்குமான நட்பு, திரைத் தொடர்பு பற்றி சந்தான பாரதி கூறியதாவது:-

ராஜபார்வை

“நான் உதவி இயக்குனராக இருந்தபோதே கமல் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் சந்திக்கிற நேரங்களில் எல்லாமே எங்கள் பேச்சு சினிமா பற்றியதாகவே இருக்கும்.

ஒருநாள் கமலின் அண்ணன் சாருஹாசன் என்னைப் பார்க்க வந்தார். “ராஜ்கமல் ஆபீசுக்கு கமல் வரச் சொன்னார்” என்று சொல்லி விட்டுப் போனார். நான் கமலை சந்தித்தேன்.

“சொந்தப்படம் தயாரிப்பதால் கதை திருப்தியாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால ஒரு `அவுட்லைன்’ கொடுங்கள்” என்றார் (`அவுட்லைன்’ என்பது கதை பற்றிய சிறுகுறிப்பு)

“2 நாள் டைம் கொடுங்கள். தயார் செய்து கொண்டு வருகிறேன்” என்று சொல்லி விடைபெற்றேன். அன்றே என் நண்பர் ரமணனுடன் சேர்ந்து ஒரு அவுட்லைன் தயார் செய்தேன்.

இரண்டு நாளில் ராஜ்கமல் ஆபீஸ் போய் கமலை சந்தித்து கதையின் அவுட் லைன் கொடுத்தேன். அப்போதுதான் கமலும், டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவும் ஏற்கனவே என் மாதிரி இரண்டு பேரிடம் இப்படி அவுட்லைன் கேட்டு வாங்கிய விஷயம் தெரிந்தது.

ஆனாலும் எனது அவுட்லைன் டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவுக்கு பிடித்து விட்டது. கமலுடன் இது விஷயமாக பேசிய அவர், “திரைக்கதையை தயார் செய்யுங்கள்” என்றார். `நாம் கொடுத்த கதையின் மையக்கரு பிடித்ததோடு நம்மையே திரைக்கதை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்” என்பதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

திரைக்கதை

இதன்பிறகு திரைக்கதை உருவாக்குவதில் தீவிரமானேன். என் நண்பர் ரமணனும் இது விஷயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என்னால் மறக்க முடியாத நண்பர் அவர்.

திரைக்கதை உருவாக்கத்தின் போது கமலும் வந்து விடுவார். அப்போது அதுவரை யாரும் செய்திராத புதுமையாக கதையை காட்சிப்படுத்தும்போதே ஸ்கிரிப்டிலேயே `சவுண்ட் கட்டிங், ஓவர்லாக் கட்டிங்’ போன்ற விஷயங்களையும் எழுதினோம். அதுதான் “ராஜபார்வை.”

இந்தப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படங்களிலும் என் பங்களிப்பு தொடர்ந்தது. அவர்கள் தயாரிக்கும் படங்களில் எந்த டிபார்ட்மெண்ட் என்றாலும் அதில் என் ஈடுபாடு இருக்கும். கமல் நடிக்க ராஜசேகர் இயக்கிய ராஜ்கமலின் “விக்ரம்” படத்தில் கூட இப்படி என் பங்களிப்பு தொடர்ந்திருக்கிறது.

இயக்குனர் பொறுப்பு

கதை, வசனம், தொழில்நுட்பம் என்று ஒவ்வொன்றிலும் என் ஈடுபாட்டைப் பார்த்த கமல் எனக்குத் தந்த பரிசுதான், அடுத்து அவர் தயாரித்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” படத்துக்கு இயக்குனர் பொறுப்பு. நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பாடல்கள் வேண்டாம் என்று முதலிலேயே முடிவு செய்து விட்டோம்.

இந்தப் படம் வெற்றி பெற்று, தயாரிப்பாளர் கமலுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. எனக்கும் வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கமலின் மேனேஜர் டி.என். சுப்ரமணியன் தயாரித்த “குணா” படத்தை இயக்கும் வாய்ப்பையும் கமலே எனக்கு கொடுத்தார்.

இந்தப்படம் நூறு நாட்கள் ஓடியபோது கமலின் அடுத்த படமான `மகாநதி’ பட வாய்ப்பையும் எனக்கு கமலே ஏற்படுத்தி தந்தார்.”

இவ்வாறு டைரக்டர் சந்தான பாரதி கூறினார்.

“குணா”, “மகாநதி” பட அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-

“கமலை வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் நடிப்பின் இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற படம் “குணா”. இந்தப் படத்தின் கதையை கமலும் நானும் எழுத்தாளர் பாலகுமாரனுமாக சேர்ந்து உருவாக்கினோம்.

கதாநாயகி மீதான அபரிமிதமான அன்பின் காரணமாக அவளை கதாநாயகன் கண்காணாத ஒரு குகைக்குள் கொண்டு போய் மறைத்து வைக்கிறான் என்ற கதைப் பின்னணிக்கு அப்படியொரு குகை எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. ஆனால் அதையும் கமல் சார் விடாப்பிடியாக கண்டுபிடித்து விட்டார். முதலில் அந்தக் குகையை கமலுடன் சேர்ந்து நான் பார்த்த போது குகை அருகே இருந்த ஒரு சமாதி தான் சட்டென பயமுறுத்தியது. குகைக்குள் ஒரு வழியாக இறங்கிப் பார்த்த போது, “நாம் ஒரு வேகத்தில் வந்து விட்டோம். நாளைக்கே இதற்குள் படப்பிடிப்பு என்று ஆரம்பித்தால் நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள் குகைக்குள் இறங்கி ஏற வேண்டியிருக்கும். அப்படி வருகிறவர்கள் சுலபமாக இறங்கி ஏறும் வகையில் குகை இல்லையே என்று கமலிடம் கூறினேன். உடனே அவர் குகையின் பக்கவாட்டில் சவுக்குக் கம்பு நட்டு, அதில் கயிறு கட்டி, அதன் மூலம் குகைக்குள் இறங்க ஏற்பாடு செய்தார். அதோடு 30-க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களையும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

குகைக்குள் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தி முடித்த பிறகு ஐதராபாத்தில் ஒரு பங்களாவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பங்களாவில் மகாத்மா காந்தி, பெர்னாட்ஷா போன்ற முக்கிய பிரமுகர்கள் தங்கிப் போயிருக்கிறார்கள். அதனால் அது சரித்திரப் பிரசித்தி பெற்ற இடமாகி விட்டது.

நாங்கள் படப்பிடிப்புக்கு அந்த பங்களாவைக் கேட்ட போது, அதையே காரணம் காட்டி மறுத்தார்கள். பெரிய தலைவர்கள் தங்கிய மாளிகையில் படம் எடுப்பதில் எங்களுக்கும்தானே பெருமை என்று அவர்களிடம் பலவாறாக எடுத்துக்கூறி, படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றோம்.

60 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் வெளியான போது, நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வெளிப்பட்டது. படத்தை ரசித்ததோடு வெற்றி பெறவும் செய்தார்கள். “குணா” வும் நூறுநாள் படப்பட்டியலில் சேர்ந்தது.

ராஜ்கண்ணு

இதன்பிறகு படங்கள் இயக்கம், நடிப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்தேன். திடீரென கமலிடம் இருந்து அழைப்பு. போனேன். “பட அதிபர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு சாருக்கு ஒரு படம் பண்ணுகிறேன். எனது 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் அவர்தான். இப்போது நாங்கள் மீண்டும் இணைவதால் படம் பெரிய அளவில் வரவேண்டும். நான் ராஜ்கண்ணு சாரிடம் “பாரதியை (சந்தானபாரதி) வைத்து படம் பண்ணுங்கள்” என்று சொல்லி விட்டேன்” என்றார்.

எனக்கு மெய் சிலிர்த்து விட்டது. என்னைக் கேட்காமலே, நான் டைரக்டு செய்ய வேண்டும் என்று ஒரு பிரபல பட அதிபரிடம் சொல்லியிருக்கிறார் என்றால், என் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை!

கதை பற்றி கமல், நான், எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மூவரும் விவாதித்தோம். முதலில் நாங்கள் ஆரம்பித்தது வேறு கதை. திடீரென தான் “மகாநதி” கதைப் பின்னணி அமைந்தது.

படத்தில் கொல்கத்தா விபசார விடுதி தொடர்பான காட்சிகளும், கமல் அங்கே போய் தனது மகளை மீட்டு வரும் காட்சிகளும் ரசிகர்களை உலுக்கி விட்டன. மீட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மகள் திடீரென தூக்கத்தில் அலறியபடி, “விடுங்கடா… விடுங்கடா…’ என்று கத்திக் கதறும் காட்சியில் கமல் சாரின் நடிப்பை படமாக்கும்போது நாங்களும் கண்ணீர் விட்டோம். `அப்பா’ ஸ்தானத்தில் இருக்கும் எவரும் கலங்காமல் இருக்க முடியாத காட்சி அது.

இந்தப் படத்தில் வரும் ஜெயில் காட்சியை எடுப்பதற்காக அப்போது சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் இருந்த மத்திய சிறைக்கு சென்றோம்.

ஜெயிலில் கைதிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள், குடிக்க உபயோகிக்கும் டம்ளர்களைக்கூட, அதே மாதிரி வாங்கிப் பயன் படுத்தினோம்.

படத்தில் சென்னை பாஷை பேசத் தெரிந்த ஒரு புது வில்லன் நடிகர் வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாவிடம் சொல்லியிருந்தேன். அவர் சங்கர் என்ற ஸ்டண்ட் கலைஞரை என்னிடம் அழைத்து வந்தார். அவர் வில்லனாக சிறப்பாக நடித்து, இன்றைக்கும் `மகாநதி’ சங்கர் என்ற பெயரில் சினிமாவில் வில்லனாக நீடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்பட வரலாறு 963
கவுரவ வேடத்தில் கமல்
நகைச்சுவை படம் “மகளிர் மட்டும்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமல் சொந்தமாகத் தயாரித்த “மகளிர் மட்டும்” காமெடி படத்தில் நாசர் கதாநாயகனாக நடித்தார். மற்றும் ரேவதி, ஊர்வசி ஆகியோரும் நடித்தனர்.

கமல் கவுரவ வேடத்தில் நடித்த இந்தப்படம்
25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

நடிகர் கமல் அவ்வப்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து வந்தார். அதிலும் வெற்றி பெற்றார். அவர் தனது நிறுவனம் சார்பில் தயாரித்த “மகளிர் மட்டும்” படமும் இந்த வெற்றிப் பட்டியலில் சேர்ந்தது.

நாசர்

இந்தப் படத்தில் கமல் கவுரவ வேடம் மட்டுமே ஏற்றிருந்தார். கதைப்படி நாயகன் நாசர்தான். கமலின் சொந்த நிறுவனத்தில் மானேஜராக இருக்கும் நாசர் சரியான பெண் சபலிஸ்ட். எந்தப் பெண்ணையும் பார்வையிலே கவிழ்க்கப் பார்க்கும் கேரக்டர்.

அப்படிப்பட்ட குணநலம் கொண்ட நாசர், அவரது அலுவலகத்திலேயே வேலையில் இருக்கும் ரேவதி, ஊர்வசி, ரோகிணியை பார்த்தால் சும்மா இருப்பாரா? அவர்களுக்கும் அவ்வப்போது வலைவீசிப் பார்க்கிறார். அவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களை வசியப்படுத்தும் முயற்சியையும் தொடர்கிறார்.

இந்த குசும்பு எல்லை மீறும்போது, மூன்று பெண்களும் ஒரு அறைக்குள் அவரை கொண்டு சென்று தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு விடுகிறார்கள். தகவல் அறிந்து, கம்பெனி அதிபர் கமல் அலுவலகம் வருகிறார். தவறு புரிந்த மானேஜரை வேலையில் இருந்து தூக்கி விட்டு, ரேவதியை அந்தப் பொறுப்பில் வைக்கிறார்.

வேலைக்குப் போகும் பெண்கள் அனுபவிக்க நேரும் பாலியல் சித்ரவதைகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருந்தது, படத்துக்கு கனம் சேர்த்து விட்டது. அதுமாதிரி பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள், ஒன்று வேலையை விட்டு ஓடிப்போய்விடுவார்கள்; அல்லது மானேஜரை அனுசரித்து நடந்து, தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், பிரச்சினையை தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறியது இப்படம்.

கமலின் `ஆஸ்தான இயக்குனர்’ சிங்கிதம் சீனிவாசராவ்தான் இந்தப் படத்தையும் இயக்கி இருந்தார்.

ரேவதி எதிர்ப்பு

படத்தில் “காளை மாடு ஒண்ணு கறவை மாடு மூணு” என்ற பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலில் ஆட்சேபகரமாக ஒரு வார்த்தை இருப்பதாக கூறிய நடிகை ரேவதி, அந்த வார்த்தைகள் இடம் பெறும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். பெண்மையை கொச்சைப்படுத்துவதாக அவர் சொன்ன அந்த வரி மாற்றப்பட்ட பிறகே அந்த பாடல் காட்சியில் நடித்தார், ரேவதி.

வேலைக்குப் போகிற பெண்கள் எதிர் கொள்கிற அவஸ்தைதான் கதை என்பதால் கமலுக்கு மகளிர் அமைப்புகளின் பாராட்டு தேடி வந்தது.

படத்தில் பிரபல பட அதிபர் `கலைப்புலி’ தாணு கவுரவ வேடத்தில் தோன்றினார்.

மலையாளப் பதிப்பு

இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மலையாளத்தில் `லேடீஸ் ஒன்லி’ என்ற பெயரில் `டப்’ செய்தார் கமல். அங்கும் வெற்றி கிடைத்த உற்சாகத்தில் “ஆடவாளுக்கு மாத்ரம்” என்ற பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்தார். பெண்களின் பிரச்சினையை காமெடிக் கலவையில் சொன்ன படம் என்ற முறையில் தெலுங்கிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

நம்மவர்

விஜயா-வாகினி பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியை வைத்து “உழைப்பாளி” என்ற படத்தை தயாரித்தது. அதைத்தொடர்ந்து, கமல் நடிப்பில் அந்த நிறுவனம் உருவாக்கிய படம் “நம்மவர்.”

கல்லூரியில் படிக்க வரும் சில மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், உல்லாசம், உற்சாகம், தற்காலிக சந்தோஷம் என்று புறப்பட்டு தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமே கல்லூரி. அங்கே கவனச் சிதறல் இல்லாத கல்விக்குத்தான் முக்கியம் என்று வலியுறுத்திய படம் இது.

பேராசிரியர்

படத்தில் கல்லூரிப் பேராசிரியராக கமல் நடித்தார். அடாவடியையே அனுதினப் பணியாக தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்ட அந்தக் கல்லூரியின் அவலம் அவர் நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. மாணவர்களை தனது அன்பால் திருத்த முயல்கிறார்.

முதலில் மாணவர்களால் கேலியாக பார்க்கப்பட்ட அந்த பேராசிரியர், நாளடைவில் அவர்களாலேயே நேசிக்கப்படுகிறார், ஒரேயொரு மாணவனைத் தவிர.

அந்த மாணவன் மட்டும் கடைசிவரை அடங்குவதாக இல்லை. அவன் மூலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒரு மாணவனுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேராசிரியர் கமலுக்கு அதே குரூப் ரத்தம் என்றாலும், அவர் ரத்தம் கொடுக்க மறுத்துவிடுகிறார்.

இதனால் அவரை நேசித்த பெண் பேராசிரியை அவர் மீது தனது கோபத்தைக் கொட்டுகிறார். அப்போதுதான் ரத்ததானம் கொடுக்க முடியாத அளவுக்கு பேராசிரியர் “புற்று நோயாளி” என்பது தெரியவருகிறது. பேராசிரியை மட்டுமின்றி கல்லூரியும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

வன்முறையை அன்பால் திருத்த முடியும் என்பதை கவிதையாகச் சொல்லியிருந்தார்கள்.

கவுதமி

படத்தில் கமலை விரும்பும் பேராசிரியையாக கவுதமி நடித்திருந்தார்.

அடாவடி மாணவனாக கரண் நடித்தார். அவர் அறிமுகமான படம் இதுதான். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பால் கமலிடம் பாராட்டு பெற்றார், கரண்.

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் இசை. மகேஷ் என்ற இசை அமைப்பாளர் இசை அமைத்திருந்தார். இவரும் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்து போனார் என்பது சோகம்.

இவர் இசையில் “சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்”, “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” போன்ற பாடல்கள் இனிமையானவை.

படத்தில் கடைசியாக இடம் பெற்ற “புதுமெட்டை போட்டுக்கடா இளமொட்டை பார்த்துக்கடா” என்ற பாடலை இசைக் கருவிகள் எதுவும் கலக்காமல் கொடுத்திருந்தார் மகேஷ். இது இசை ரசிகர்கள் மத்தியில் அவருக்கு புகழ் சேர்த்தது.

அதோடு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மகேஷுக்கு கிடைத்தது. சிறந்த மாநில மொழிப்படமாக “நம்மவர்” விருது பெற்றது. மாநில அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது நாகேஷுக்கு கிடைத்தது.

மலையாள பட உலகின் பிரபல இயக்குனரான கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியிருந்தார். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியில் `சுமார்’ இடத்தையே பிடித்தது.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts

Posted by Snapjudge மேல் மே 20, 2008

ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.

பெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப ‘தசாவதாரம்’ ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.

  • வட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடி
  • மதுரை ஏரியா மூன்று கோடி,
  • கோயம்புத்தூர் நான்கு கோடி,
  • சேலம் இரண்டரை கோடி,
  • திருநெல்வேலி மற்றும்
  • கன்னியாகுமாரி ஒன்றரை கோடி,
  • திருச்சி
  • தஞ்சை இரண்டரை கோடி

என மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது.

கன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம்.

தசாவதாரம்’ இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடி.

Dasavatharam Nizam rights for 6.25 crore

The Nizam rights of the film Dasavatharam have been bagged by Siri Media of Dasari Narayan Rao for a record 6.25 crore. This is very high for a Tamil hero film in Nizam. After Rajinikanth’s Shivaji, the craze for a Tamil hero film has reached such heights.

Kamal Hassan’s new film Dasavatharam has already completed the censor formalities and is now set for release on June 6. Kamal plays 10 different roles while heroin Asin is playing a dual role. Mallika Sherawat and Jayaprada are playing special roles in the film.

Posted in Economy, Finance, India, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Director RC Sakthi – Kamalahassan, Manitharil Ithanai Nirangala: Dinathanthi Tamil Cinema History

Posted by Snapjudge மேல் மே 16, 2008

திரைப்பட வரலாறு :(921)
டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன் ஹீரோ ஆனது எப்படி?
ஆர்.சி.சக்தி வெளியிடும் ருசிகர தகவல்கள்

சினிமாவில் தடம் பதிக்க ஆர்.சி.சக்தி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் இளைஞர் கமலஹாசன் டான்ஸ் மாஸ்டராக இருந்தார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அதன் மூலம் இருவர் வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டன.

அந்தக் காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி, ஆர்.சி.சக்தி கூறியதாவது:-

“கவிஞர் சுப்பு ஆறுமுகத்திடம் பல படங்களில் வேலை பார்த்தேன். என்றாலும் என் பெயர் `டைட்டில் கார்டில்’ இடம் பெற்றதில்லை. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

பொற்சிலை

அப்போது `அகத்தியம் புரொடக்ஷன்ஸ்’ சார்பாக ஈரோடு குமரேசன், பொறையார் கோவிந்தராஜன், டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து ஒரு படம் ஆரம்பித்தார்கள். சிவம் என்பவர் பொறுப்பாளர். படத்தின் பெயர் `பொற்சிலை’. பிரான்சிஸ் என்பவர் இயக்குனர். இவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

இந்தப் படத்துக்கு திரைக்கதை – வசனத்தை சுப்பு ஆறுமுகம் எழுதினார். அதன் மூலம் அந்தப் படப்பிடிப்புக் குழுவினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் எல்லாருக்கும் பிடித்துவிட்டது.

உதவி இயக்குனர்

ஒருநாள் சிவம் என்னிடம், “நீ அண்ணனிடம் வேலை பார்க்கிறதைவிட, இங்கே தயாரிப்பு பணிகளையும் செய்து கொண்டு உதவி இயக்குனராகவும் இருந்து கொள். இரண்டு வேலைகளையும் பார்” என்று கூறினார்.

அவர் கூறியபடி, “பொற்சிலை”யில் பணிபுரியத் தொடங்கினேன். அங்கு நடன இயக்குனர் கே.தங்கப்பன் அவர்களின் நட்பு கிடைத்தது. அந்தப் படத்தில்தான், ராணி சந்திரா (விமான விபத்தில் இறந்தவர்) அறிமுகமானார். புதுமுகம் என்பதால் நடனம் சரியாக வரவில்லை. படக்கம்பெனியில் தினசரி நடனப் பயிற்சியும், ஒத்திகையும் நடக்கும். தங்கப்பன் மாஸ்டருடன் உதவியாளர் தாராவும் வருவார்.

தங்கப்பன் மாஸ்டர் காலை வந்துவிட்டு இரவுதான் போவார். நிறைய நேரம் உடன் இருந்ததால் பலவற்றையும் பேசிப் பகிர்ந்து கொள்வோம்.

எங்களுக்குள் நெருக்கமான நேசமும், இறுக்கமான நட்பும் வளர்ந்தது. மனம் விட்டு நீண்ட நேரம் பேசுவது வழக்கமாக இருந்தது.

ஒருநாள் மாஸ்டர் பேசும்போது, “நான் `அன்னை வேளாங்கண்ணி’ என்றொரு படம் எடுக்கப்போகிறேன். அதில் நீ கண்டிப்பாக வேலை செய்யவேண்டும்” என்று கூறினார்.

`அன்னை வேளாங்கண்ணி’ கதையை ஒரு நாடக நிகழ்ச்சியில் பார்த்துவிட்டு, அதை எப்படியாவது படமாக்குவது என்று ஆர்வமாக இருந்தார். அந்தக் கதையைப் பற்றியும், காட்சிகள் பற்றியும் விவரிக்க ஆரம்பித்தால் மாஸ்டர் முகத்தில் அவ்வளவு பரவசம் தெரியும்.

`பொற்சிலை’ படம் முடிந்த பிறகு தங்கப்பன் மாஸ்டர் `அன்னை வேளாங்கண்ணி’ ஆரம்பித்த சமயம், அவரிடம் உதவி இயக்குனரானேன்.

அப்போது மாஸ்டர் வேலை பார்க்கிற வேறு சில படங்களின் டான்ஸ் ஒத்திகையும் அங்கு நடக்கும். நான், சில நேரங்களில் வேடிக்கை பார்ப்பதுண்டு. அங்கே தாராவும் கமலும் நடனம் ஆடிக்காட்டுவார்கள்.

யார் தெரியுமா?

மாஸ்டர் ஒருநாள் என்னிடம் “சக்தி! இந்தப் பையன் யார் தெரியுமா?” என்றார். பின் அவரே, “களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசன். இப்போது என்னிடம் அசிஸ்டென்டாக இருக்கிறான்” என்றார்.

உடனே நான், “எனக்குத் தெரியும் மாஸ்டர்! இது எங்க ஊர் பையன். ஆனா அவருக்கு என்னைத் தெரியாது” என்றேன்.

உடனே கமல், “நீங்க யாரு? என்ன சொல்றீங்க?” என்று கேட்டதும், “நான் பரமக்குடி பக்கம் புழுதிக்குளம்” என்றேன். பிறகு பேச ஆரம்பித்து விட்டோம்.

ஊர்ப்பாசமோ என்னவோ, அந்த நிமிடம் முதல் எங்கள் உள்ளங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன. கமலும் நானும் பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். சினிமா, சமூகம், நாட்டு நடப்பு இப்படி எதுபற்றி வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவோம்.

எங்கள் பேச்சு, வயது வித்தியாசத்தை மறந்து, சிந்தனைகளை ஒன்று சேர்க்கிற இடமாக இருந்தது. எங்கள் நட்பு நாளொரு சந்திப்பு, பொழுதொரு விவாதம் என்று வளர்ந்து கொண்டே போனது.

அதுவரை நடன இயக்குனராக இருந்த கமலை “அன்னை வேளாங்கண்ணி”யில் உதவி இயக்குனராகவும் சேர்த்துக் கொண்டோம். பல போராட்டங்களுக்குப் பிறகு படமும் வெளியானது. படம் வெளியான பிறகும், கமலுக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்தது.

அப்போது நான் ரங்கராஜபுரத்தில் ரூம் எடுத்து தங்கியிருந்தேன். அங்கு நானும் கமலும் சந்தித்துக் கொள்வோம். அல்லது எல்டாம்ஸ் சாலையில் கமலின் வீட்டில் நான் இருப்பேன். எங்கள் விவாதங்களில் நல்ல சினிமா பற்றிய சிந்தனை, எதிர்கால சினிமா பற்றிய கருத்துகள், கனவுகள் இடம் பெறும்.

விடிய விடிய பேச்சு

எங்கள் பேச்சுக்கு அளவே இருக்காது. எல்லையே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம்.

அப்போது ரங்கராஜபுரத்தில் பஸ் வசதி கிடையாது. ஒருநாள் என்னிடம் கமல் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தபோது மிகவும் நேரமாகிவிட்டது. “வாங்க, பனகல்பார்க் வரை பேசிக்கிட்டே போகலாம். நான் அங்கிருந்து பஸ்சில் போய்விடுகிறேன். நீங்கள் திரும்பி வந்திருங்க” என்று கமல் சொல்ல, நாங்கள் பேசிக்கொண்டே போனோம். பனகல் பார்க்கை அடைந்தபோது இரவு 10.30 மணி ஆகிவிட்டது.

கமல் வீட்டுக்குப் போக அங்கிருந்து பஸ் இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. மழைக்காக ஒரு கடை வாசலில் ஒதுங்கினோம். மழை விட்டதும் போகலாம் என்று பேச ஆரம்பித்தோம். மழையும் விடவில்லை. பேச்சும் முடியவில்லை. சொன்னால் நம்ப முடியாது. விடிய விடிய பேசினோம். காலை 4 மணிக்கு மேல் மழை ஓய்ந்தது.

“இதுக்கு மேல் ரூமுக்குப் போய் என்ன செய்யப்போறீங்க? வாங்க, நடந்தே எல்டாம்ஸ் ரோடு போகலாம்” என்று கமல் சொன்னதும், கமல் வீட்டுக்கு சென்றோம்.

எங்களைப் பார்த்த கமலின் அம்மா, “எங்கப்பா போனீங்க?” என்று கேட்டுத் திட்டினார்கள். எப்படியோ சமாளித்து, குளித்துவிட்டுச் சாப்பிட்டோம். அம்மாவுக்கு என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. என்னையும் தன் பிள்ளையைப் போலவே பார்த்துக் கொள்வார்கள்.

ரூ.50 ஆயிரம் முதலீட்டில் ஒரு படம்

எனக்கு ஒரு பைனான்ஸ்சியர் அறிமுகமானார். `அன்னை வேளாங்கண்ணி’ படப்பிடிப்பு நடந்த போதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் ஒருநாள் என்னிடம், “சக்தி! உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் படம் ஆரம்பிக்கிறதாக இருந்தால் சொல்லுங்க. படம் முடியும் வரைக்கும் நான் பைனான்ஸ் பண்றேன்” என்றார்.

படத்தயாரிப்பு குறித்து அப்போது எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ஒருநாள் `அன்னை வேளாங்கண்ணி’ “பி.ஆர்.ஓ”வாக இருந்த ராமலிங்கம், என்னிடம் ராஜேந்திரன், கல்யாணசுந்தரம் என்கிற இரண்டு பேரை அழைத்து வந்தார்.

“கல்யாணசுந்தரம் பி.ஏ. படித்தவர். படம் எடுக்க விரும்புகிறார், ஆபீஸ் கூட போட்டாகி விட்டது” என்று கூறி அறிமுகம் செய்தார்.

கல்யாணசுந்தரம் தன்னிடம் ரூ.50 ஆயிரம் இருப்பதாகக் கூறினார். இந்தத் தொகை இருந்தால், படம் முடியும் வரை பணம் தருவதாக முன்பு பைனான்சியர் கூறியது நினைவுக்கு வந்தது. படம் பண்ணித்தர சம்மதித்தேன்.

புதியவர் ஒருவரை இயக்குனராகப் போட்டு, இணை இயக்குனராக நானும், உதவி இயக்குனர்களாக மணி, கமல் ஆகியோரும் பணியாற்றுவது என்று முடிவாயிற்று.

ஆனால், புதுமுக இயக்குனர் பின்வாங்கி விட்டார்.

என்ன செய்வது என்று விழித்தபோது, போட்டோகிராபர் ராஜேந்திரன், “நாம் ஏன் வெளியே டைரக்டரைத் தேடவேண்டும்? நம்ம சக்தி அண்ணன் டைரக்ட் பண்ணமாட்டாரா? அவருக்கு அந்த தகுதி இல்லையா?” என்று சொல்ல, உடன் இருந்த நண்பர்கள் மணிபாரதி, ராமலிங்கம், மணி, கமல், ஷியாம், ஸ்ரீஹரி உள்பட எல்லாருமே ஆமோதித்து கை தட்டினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

எதிர்பாராத வகையில் நான் இயக்குனர் ஆனேன். பட வேலைகள், கதை விவாதம், பட பூஜை என்று நான் அல்லாடிக் கொண்டிருந்தாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு கவலை உறுத்திக் கொண்டே இருந்தது. முதல் படம் சரியாக வரவேண்டுமே என்கிற பயம் எனக்குள் இருந்தது.

மீண்டும் பிரச்சினை

சில நாட்கள் சென்றன. திடீரென்று ஒருநாள் கல்யாண சுந்தரம், “என்னிடம் ரூ.5 ஆயிரம்தான் இருக்கிறது” என்று கூறி அழுதார். அவரைப் பார்க்க எனக்கு கோபமாகவும் இருந்தது. பாவமாக இருந்தது. மொத்தத்தில் பயமாகவும் இருந்தது.

“படம் எடுப்பதாக, எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். படம் எடுக்கவில்லை என்று தெரிந்தால், என்னை கிண்டல் செய்வார்கள். அதைவிட, ரெயில்முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்!” என்று கேவிக்கேவி அழுதார்!

கமல் கதாநாயகன்

எங்கிருந்தோ எனக்கு ஒரு முரட்டு தைரியம் வந்தது. விதியின் விளையாட்டா, காலத்தின் நிர்ப்பந்தமா தெரியாது.

“நாம் படம் எடுக்கிறோம். நம் படத்தில் அத்தனை பேரும் புதுமுகங்கள். யாருக்கும் சம்பளமில்லை. படத்தை ஆரம்பிப்போம். அப்புறம் கடவுள் விட்ட வழி” என்று கூறினேன்.

அருகிலிருந்த கமலைக் கூப்பிட்டு, “நீதான் ஹீரோ. கதையை அப்புறம் பேசிக்கொள்ளலாம்” என்று கூறி அட்வான்சாக ரூ.11 கொடுத்தேன். இசையமைப்பாளர் ஷியாமுக்கு ரூ.11-ம், நண்பரும், நடிகருமான மணிபாரதிக்கு ரூ.11-ம் அட்வான்ஸ் கொடுத்தேன். அந்தப்படம்தான் “உணர்ச்சிகள்.”

திரைப்பட வரலாறு :(922)
கமல் ஹீரோவாக நடித்த “உணர்ச்சிகள்”
சோதனைகளைத் தாண்டி வெளிவந்தது
பாராட்டுகள் குவிந்தன

கமலஹாசன் ஹீரோவாக நடித்த முதல் படமான “உணர்ச்சிகள்”, பல தடைகளைக் கடந்து வெளிவந்தது.

படத்தின் டைரக்டரான ஆர்.சி.சக்தி, அதுபற்றிக் கூறியதாவது:-

“பழைய திட்டங்கள் அனைத்தையும் மறந்து விட்டு, அன்றைய கமலின் வயதையும் எங்கள் கையிலிருந்த பணத்தையும் மனதில் வைத்து எழுதப்பட்டதுதான் “உணர்ச்சிகள்” படத்தின் கதை.

கதாநாயகனாக கமல். கதாநாயகியாக காஞ்சனா. மற்றவர்கள் புதுமுகங்கள்.

படப்பிடிப்பு நடத்த ஸ்டூடியோக்களை அணுகியபோது, எங்களை ஏளனமாகப் பார்த்தார்கள்; கேலியாகப் பேசினார்கள். அலைந்து பார்த்தோம். எந்த ஸ்டூடியோவும் கிடைக்கவில்லை.

கமல் வீட்டில் படப்பிடிப்பு

`இனி ஸ்டூடியோவே வேண்டாம். வீடுகளில் எடுப்போம்’ என்று தீர்மானித்தோம். பல வீடுகளைத் தேடி அலைந்தோம். கடைசியில் கமல் வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்துவது என்று முடிவு செய்தோம்! இதுபற்றிப் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். கமல் அம்மாவுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. “இங்கே எப்படிய்யா ஷூட்டிங் பண்ணுவீங்க?” என்று கேட்டார்கள்.

எப்படியோ படப்பிடிப்பைத் தொடங்கி விட்டோம். பலவித சோதனைகளுக்கு இடையே படம் வளர்ந்து, 6,000 அடியைத் தொட்டது. அதற்கு மேல் நகர முடியவில்லை. பணப்பிரச்சினையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பணம் தேடி நாங்கள் அலைந்தது கொஞ்ச நஞ்சமல்ல.

திருமணம்

இந்த நேரத்தில் எனக்கு இன்னொரு `விபத்து’ ஏற்பட்டது! ஆமாம்; எனக்கு திருமணமாகிவிட்டது!

இயக்குனரானது, திருமணமானது என்று இருவித விபத்துகளைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தேன்.

முதல் பட முயற்சியில் எப்படியாவது வெற்றி பெற்று, படத்தை முடித்து வெளியேக் கொண்டுவந்து விடவேண்டும் என்று இரவு – பகல் பாராமல் அலைந்து கொண்டிருந்தேன். இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்புவேன். மனைவி சிறிதும் முகம் சுழித்தது இல்லை. என் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தார்.

வினியோகஸ்தர்கள் யாராவது கிடைக்கமாட்டார்களா, நிதி உதவி எதுவும் கிடைக்காதா என்று தடுமாறிக் கொண்டிருந்தேன்.

ஒரு நண்பரின் உதவியால் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் கே.எல்.போஸ், சர்தார் என்கிற இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். எடுத்தவரை படத்தை அவர்களுக்குப் போட்டுக்காட்டினோம். சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்த சீனிவாசன் அவர்களின் நண்பர்களும் படத்தைப் பார்த்தார்கள். படம் அவர்களுக்குப் பிடித்துவிட்டது.

நடிகர்கள் மாற்றம்

பழைய தயாரிப்பாளர் கல்யாணசுந்தரத்துக்கு ஒரு ஏரியாவைக் கொடுத்துவிட்டு, படத்தை தொடரும் பொறுப்பை புதிய நண்பர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகு, நடிகர் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. வி.கோபாலகிருஷ்ணன், சந்திரகாந்தா, ஸ்ரீவித்யா, எஸ்.வி.ராமதாஸ் ஆகியோர் படத்தில் இடம் பெற்றனர். வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டன.

முதலில் ஆரம்பிக்கப்பட்ட “உணர்ச்சிகள்” பொருளாதாரப் பற்றாக்குறையால் தேங்கி நின்று போராடிக் கொண்டிருந்த வேளையில் கமல் நடித்த “அரங்கேற்றம்” போன்ற பல படங்கள் வெளியாகிவிட்டன. கமல், நாடறிந்த நடிகராகி விட்டார். இங்கு மட்டுமல்ல, மலையாளத் திரையுலகிலும் கமலின் புகழ் பரவத்தொடங்கியது.

ஒருநாள் கமல் என்னிடம் வந்து “உணர்ச்சிகள்” கதையைக் கேள்விப்பட்டு, மலையாளத்தில் அதை எடுக்க இயக்குனர் சங்கரன் நாயர் விரும்புவதாகக் கூறினார்.

இதில் எனக்கு விருப்பமில்லை. “வேண்டாம், கமல். அவர்கள் சீக்கிரம் படத்தை முடித்து தமிழ்நாட்டிலும் வெளியிட்டு விடுவார்கள். அதனால் நம் படம் பாதிக்கப்படும்” என்றேன்.

கமலோ, “நம் படம் முடிகிற நிலைக்கு வந்துவிட்டது. அவர்கள் இனிமேல்தான் படப்பிடிப்பே ஆரம்பிக்கப்போகிறார்கள். அவ்வளவு காலமா நம் படம் வெளிவராமல் இருக்கப்போகிறது? அது மட்டுமல்ல; இந்த நேரத்தில் உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால் ஆறுதலாக இருக்கும் அல்லவா?” என்றார்.

கமல் சொன்னது எனக்குச் சரியாகப் பட்டது. மலையாளத்தில் மட்டும் படமாக்கிக் கொள்ளும் உரிமையை விற்றோம்.

முந்திக்கொண்ட மலையாளப்படம்

நான் பயந்தது மாதிரியே ஆகிவிட்டது! எங்கள் படம் வெளிவரும் முன்பே, மலையாளப்படம் வெளியாகி விட்டது. மலையாளத்தில் கமலும், ஜெயசுதாவும் நடித்திருந்தார்கள். தமிழில் “உணர்ச்சிகள்” தாமதமாகிக்கொண்டே போக, மலையாளத்தில் படம் முடிந்து கேரளாவில் வெற்றியும் பெற்றது. தமிழ்நாட்டிலும் வெளியானது. அதுதான் “ராசலீலா.” சலீல் சவுத்ரியின் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆயின.

“ராசலீலா” கேரளாவில் ஓடியதுடன் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களிலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. சென்னையில் நிïஎல்பின்ஸ்டன் திரையரங்கில் 100-வது நாள் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் `உணர்ச்சிகள்’ ஒடியன் திரையரங்கில் வெளியானது.

“உணர்ச்சிகள்” படம் பற்றி, “இந்து” பத்திரிகையில் வந்த விமர்சனத்தில், “ராசலீலா” மலையாளப்படத்தின் அடிப்படையில் “உணர்ச்சிகள்” எடுக்கப்பட்டிருப்பதாக எழுதியிருந்தார்கள். இதுதான் காலத்தின் கோலம் என்பதா? அதற்கு மாற்று மருந்தாக “குமுதம்” விமர்சனம் அமைந்திருந்தது. என் படத்தில் சில குறைகளை சுட்டிக்காட்டிவிட்டு, “நெஞ்சை விட்டு நீங்காத படம்” என்று குறிப்பிட்டிருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது.

“உணர்ச்சிகள்” வணிக ரீதியாக பெரிய வெற்றிபெறவில்லை என்றாலும் பாராட்டுகள் பெற்று, பேசப்பட்ட படமாக அமைந்தது.

திரைப்பட வரலாறு :(923)
ஆர்.சி.சக்தி டைரக்ஷனில்
கமல்-ஸ்ரீதேவி நடித்த `மனிதரில் இத்தனை நிறங்களா?’

கமலஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்த “மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்தை, ஆர்.சி.சக்தி டைரக்ட் செய்தார்.

இதுகுறித்து ஆர்.சி.சக்தி கூறியதாவது:-

“உணர்ச்சிகள்” வெளியான பிறகு அடுத்து என்ன செய்வது என்கிற திட்டமில்லாமல் இருந்தேன்.

ஒருநாள் என் நண்பர் வி.எஸ்.டி.சுந்தரம் என்னிடம் ஒரு கதைப் புத்தகத்தைக் கொடுத்தார். “படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் படமாக எடுக்கலாம்” என்றார்.

படித்துப் பார்த்தபோது, சில மாறுதல்கள் செய்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. சொன்னேன் ஏற்றுக்கொண்டார்.

மனிதரில் இத்தனை நிறங்களா?

கதை விவாதம் தொடங்கியது. அப்போது என் உதவியாளர்களாக இருந்த ஜாவுதீன், சத்தியமூர்த்தி, எழுத்தாள நண்பர் டாயல் ஆகியோருடன் பேசி கதைக்கு ஒரு வடிவம் கொடுத்தோம். அதுதான் “மனிதரில் இத்தனை நிறங்களா?”

கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த திரைக்கதையில், கமல், ஸ்ரீதேவி இருவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தனர். என் இரண்டாவது படத்தில் நடிக்கும்போது, வியாபார வெற்றி நாயகன் என்கிற அளவுக்கு கமல் உயர்ந்திருந்தார். வெற்றி ஜோடியாக கமல் – ஸ்ரீதேவி வலம் வந்து கொண்டிருந்த நேரம்.

அதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யப்பிரியா கமலின் மனைவியாக குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தார். மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோருடன் தெலுங்கு கதாநாயகன் முரளி மோகன் ஸ்ரீதேவியின் ஜோடியாக நடித்திருந்தார்.

ஷ்யாமின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. பாதிப்படம் முடிந்தது. எடுத்தவரை போட்டுப் பார்த்தபோது கமல் உள்பட பலருக்கும் படம் பிடித்திருந்தது. இதேபோல மீதிப்படத்தையும் எடுத்து விட்டால் படம் சிறப்பாக அமையும் என்று எல்லோருமே நம்பினோம்.

சோதனை ஆரம்பம்

ஆனால், அதற்குப் பிறகுதான் சோதனை ஆரம்பித்தது. படத்தை அந்த ஆண்டு தீபாவளிக்குக் கொண்டுவரவேண்டும் என்று தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்களும் விரும்பினார்கள். ஆனால் அதே தீபாவளிக்கு கமல் நடிக்கும் வேறு 3 படங்கள் வெளிவருவதாக இருந்தது. என் படமும் சேர்ந்தால் 4 ஆகிவிடும்.

கமல் என்னிடம் இதுபற்றி பேசும்போது, “எந்த ஒரு நடிகனுக்கும் ஒரே நாளில் 4 படங்கள் வெளிவருவது நல்லதல்ல. இந்த 4 படங்களில் எது தோல்வியடைந்தாலும் அது என்னையும் சேர்த்துதான் பாதிக்கும். எனவே ஒரு மாதம் கழித்து இந்தப் படத்தை வெளியிடலாம். அதற்கான கால்ஷீட் நான் தருகிறேன்” என்று சொன்னார்.

கமல் சொன்னதன் நியாயம் எனக்கு புரிந்தது.

பண நிறைவும்… மன நிறைவும்

தயாரிப்பாளர், படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் பிடிவாதமாக இருந்தார். “நட்பா? பொறுப்பா?” என்று எனக்குள் குழப்பம்.

வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டிய பல காட்சிகளை எடுக்க முடியாமல், முடிக்க வேண்டிய சில வேலைகளை முடிக்க முடியாமல் படத்தை முடித்துக் கொடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு முடிவடையாத படம். தயாரிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு பணம் சேர்ந்தது. அவருக்கு லாபம்தான். அவருக்கு பண நிறைவு. ஆனால் எனக்கு மன நிறைவு இல்லை.

இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் படத்திற்கு மக்கள் மத்தியில் மரியாதை கிடைத்தது!”

இவ்வாறு ஆர்.சி.சக்தி கூறினார்.

தேடிவந்த வாய்ப்புகள்

கமலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய நிலையில் ஆர்.சி.சக்தி, பல படங்களை கையில் வைத்திருக்கும் அளவுக்கு பரபரப்பாகி விட்டார்.

“மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்துக்குப்பின் சக்தி கையில் இத்தனை படங்களா என்று பலரும் வியக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டார்.

அந்த அனுபவம் பற்றி ஆர்.சி.சக்தி கூறியதாவது:-

“என் முதல் படம் “உணர்ச்சிகள்” பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் ஒரு வெற்றிப்படம் கொடுத்த பிறகும், 1 1/2 ஆண்டு வாய்ப்பே இல்லாமல் வீட்டில் இருந்தேன்!

“மனிதரில் இத்தனை நிறங்களா?” படத்துக்குப்பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வந்தன.

மாம்பழத்து வண்டு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, பல வாய்ப்புகள் வந்தன. குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.

சேது சுந்தரம், ஆர்.எம்.எஸ்.சுப்பையா ஆகியோர் தயாரிப்பில் “மாம்பழத்து வண்டு” என்று ஒரு படம் இயக்கினேன்.

வித்தியாசமான கதை அது. “துப்பறியும் கதை வெற்றி பெறும்” என்று நம்பி எடுத்தேன். படத்தில் கதாநாயகன் என்று யாருமில்லை. சத்யப்பிரியாதான் கதாநாயகி. வி.கோபாலகிருஷ்ணன், சரத்பாபு, ஜெய்கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மனோரமா, வீராசாமி, வசந்தா மணிபாரதி நடித்தனர். இவர்களோடு சதிஸ்ரீ என்கிற புதுமுகமும் அறிமுகமானார்.

நான் எதிர்பார்த்த அளவில் படம் வெற்றி பெறவில்லை. தோல்விப்படமாகி விட்டது.”

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Kamal & KS Ravikumar: Is Dasavatharam offending Vaishnavite & Hindu beliefs

Posted by Snapjudge மேல் மே 15, 2008

தசாவதாரம் :‌ கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட புது தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் தசாவதாரம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்தது. இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹசன், இதுவரை தசாவதாரம் படத்தைப் பற்றிய செய்திகள், கதையை ரகசியமாக வைத்திருந்தோம். இனி மெல்ல மெல்ல தசாவதாரம் படம் பற்றிய செய்திகள் கசியும், என்றார்.

அவர் எதை வைத்து சொன்னாரோ தெரியவில்லை. அவர் சொன்னதுபோலவே தசாவதாரம் பற்றிய தகவல்கள் (கோர்ட்டில்) தினம் தினம் வெளியாகி வருகின்றன.

தசாவதாரம் படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்று இன்டர்நேஷனல் வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை, இப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.

நீதிபதிகள் ராஜசூர்யா, சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்விசாரணையின்போது தசாவதாரம் படம் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பாக தசாவதாரம் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் தசாவதாரம் குறித்து பல புது தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

  • பனிரெண்டாம் நூற்றாண்டு வரலாற்றில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள்தான் தசாவதாரம் படத்தில் இடம் பெற்றுள்ளன.
  • தமிழக அரசு வெளியிட்ட வரலாற்று புத்தகங்கள் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது,
  • பிற்கால சோழர் சரித்திரம் பகுதி-2,
  • தமிழ்நாட்டு வரலாறு,
  • சோழ பெருவேந்தர் காலம் ஆகிய புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் அடிப்படையில்தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ராமானுஜரை, ஸ்ரீரங்கநாதர் சிலையோடு சேர்த்து கட்டி கடலில் தள்ளிவிடுவது போன்ற காட்சி இருப்பதாக கூறுவது தவறு.
  • தசாவதாரம் என்ற பெயர் காப்புரிமை கொண்ட பெயரல்ல. இந்த பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை.
  • கமலஹாசன், வைஷ்ணவர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • விஷ்ணுவுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வது போன்ற காட்சி அமைந்துள்ளன.
  • ஓம் என்ற மந்திரத்தின் மீது நடிகர் கமலஹாசன் கால் வைத்து ஏறுவது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும்,
  • பகவத் கீதை புத்தகத்தின் மேல் கால் வைத்து ஏறுவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காட்சிகள் அமையவில்லை.
  • சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் இடையே வன்முறை மோதல் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெறவில்லை.
  • ராமானுஜசாரியார் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை. எனவே இந்த படத்தில் உள்ள எந்த காட்சியையும் நீக்கத் தேவையில்லை.பல வைஷ்ணவ நண்பர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.
  • கடவுள் விஷ்ணுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தை முழுமையாக திரையிட அனுமதிக்க வேண்டும்.மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

மத்திய தணிக்கை குழு அதிகாரி பாபு ராமசாமி தாக்கல் செய்த மனுவிலும் தசாவதாரம் பற்றிய புது தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், தசாவதாரத்தில் கமல்ஹாசன் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. ராமானுஜரின் உண்மையான சிஷ்யரான ரங்கராஜன் நம்பி வேடத்தில் அவர் நடித்து, குரு பக்திக்காக தியாகம் செய்வதாக கதை அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை அகற்ற முயன்றபோது அரசரின் வீரர்களோடு சண்டைபோடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த படம் எந்த வகையிலும் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ, மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை. இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அப்படியிருக்க, அதற்கு முன்பாகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதி நடைபெறவிருக்கிறது.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss

Posted by Snapjudge மேல் மே 15, 2008

ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் சிகரம் தொட்டு சாதனை படைத்தது நினைவிருக்கலாம். இந்த சிவாஜியின் சாதனையை ஒரு விஷயத்தில் விஜய்யின் குருவி படம் முறியடித்திருக்கிறது.

ஆம்! அதுவும் சென்னை நகரில்…! சென்னையில் சிவாஜி படம் மல்டிபிளக்ஸ் ஒன்றில் ஒரே நாளில் 25 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையைத்தான் குருவி முறியடித்திருக்கிறது. குருவி திரையிடப்பட்ட ஒரு மல்டிபிளக்ஸ்சில் ஒரே நாளில் 33 காட்சிகள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், குருவி படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

சிவாஜி படைத்த சாதனைச் சிதறல்கள் :

* இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டுடன், மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், வெளியான ஒரே படம் சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

* சிவாஜி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.70 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆயின. சென்னையில் 17 தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்பட்டது.

* செல்போன் நிறுவனத்திருக்கும் செம பிசினஸை கொடுத்தது சிவாஜி. சிவாஜி படத்தின் ட்யூன்களையும், பஞ்ச் வசனங்களையும் காலர் ட்யூன்களாக மாற்றி வெளியிடும் உரிமையை ஹங்கமா மொபைல்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அந்நிறுவனம் சிவாஜி படத்தின் ரிங் டோன்கள் மற்றும் காலர் ட்யூன்களை 33 நாடுகளில் 70 நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விட்டுள்ளது. நாளொன்றுக்கு 50 ஆயிரம் டவுன்லோடுகள் வரை செய்யப்பட்டதாக ஹங்கமா தெரிவித்தது.

* அமெரிக்க கண்ட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த படம் சிவாஜிதான்.

* 40 நாடுகளில் 800க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் வெளியான படம் சிவாஜி. அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ் சிவாஜி 44 மையங்களில் திரையிடப்பட்டது. இதுவரை இப்படி ஒரு படம் இங்கு திரையிடப்பட்டதில்லை.

* இங்கிலாந்தில், யுகே டாப் 10 பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ்ப் படம் இடம் பெற்ற பெருமையை சிவாஜி நிகழ்த்தியது.

* கனடாவில் மட்டும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

* டொரண்டோவில் ஒரு தமிழ்ப் படம் 100 நாட்களாக ஓடியது என்றால் அது சிவாஜியாகத்தான் இருக்க முடியும்.

* இலங்கையில் 12 தியேட்டர்களில் சிவாஜி தொடரந்து அரங்கு நிறைந்த காட்சிளாக ஓடியது.

* சிங்கப்பூரில் 2 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து சிவாஜி படம் ஓடியது.

* தமிழகத்தில் 90 தியேட்டர்களில் சிவாஜி 100 நாட்களை தொட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களிலும் புறநகர்களில் 13 தியேட்டர்களிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது.

* பெங்களூரில் சிவாஜி படம் 3 தியேட்டர்ளில் 100 நாள் ஓடியுள்ளது.

* மைசூரில் ஒரு தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடியது.

* மும்பையில் உள்ள அரோரா சினிமா ஹாலில் சிவாஜி நாளையுடன் 100 நாட்களை கடந்து ஓடியது.

Posted in Economy, Finance, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam: Kamal protects Asin for not attending Cauvery Protest Fast

Posted by Snapjudge மேல் மே 15, 2008

Taken from: சினிமா நிருபர்

சினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதெல்லாம் பழைய கதை…! விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன்? என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.

உண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

நடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.

கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.

கொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா? என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

Uthayanithy Stalin & Kruthika Uthayanithi: Photo with Tamil Actress Madhumitha

Posted by Snapjudge மேல் மே 15, 2008

‘எம் சினிமா’ பட நிறுவனம் தயாரிக்கும் ‘சொல்ல… சொல்ல… இனிக்கும்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு படத்தின் நாயகி மதுமிதாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். உடன் கிருத்திகா உதயநிதி.
MK Stalin Son with Spouse

Posted in DMK, Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »