Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Batticalao’

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

GoSL Military: 37 LTTE Rebels, 1 Soldier Killed in Fighting; Sri Lankan Security Chiefs Try to Stop Rebel Resurgence in East

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2008


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

விமான தாக்குதல்
விமான தாக்குதல்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினர் சந்திப்பு நடத்தும் முக்கிய இடத்தின் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இரணைமடுகுளத்திற்கு வடகிழக்கே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

எனினும், வட்டக்கச்சி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியதாகத் கூறியிருக்கும் விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

3 வீடுகள் தரைமட்டமாகியிருப்பதுடன் 15 வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார், வவுனியா, வெலிஓயா ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கையின் வடக்கே மோதல் தொடர்கிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கான ஒரேயொர நுழைவாயிலாகத் திகழும் ஓமந்தை சோதனைச்சாவடி இன்று சனிக்கிழமை நான்காவது நாளாக மூடப்பட்டிருந்த போதிலும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து அவசர மேல் சிகிச்சைக்கான 18 நோயாளிகள் இந்த சோதனைச்சாவடியின் ஊடாக வவுனியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் அரச படையினர் விடுதலைப் புலிகளின் மைக்கல் தளம் எனப்படும் முக்கிய தளம் ஒன்றினை நேற்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. இந்த நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகளுடன் மூன்று தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மன்னார், வவுனியா வெலிஓயா மற்றம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மற்றைய வெவ்வேறு தாக்குதல்களில் 37 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சனிக்கிழமை கரும்புலி தின வைபவங்கள் பரவலாக அனுட்டிக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாவலடியில் சோதனைச்சாவடி
நாவலடியில் சோதனைச்சாவடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக தற்போது இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சில இடங்களில் புதிதாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.வீதித் தடைகளும் நிரந்தர வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் சுற்றி வளைப்பு தேடுதல்களும் அங்கு இடம் பெற்று வருவதாக தகவல்கள் மூலம் தெரிகின்றது.

இம்மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளபடப்ட சில தாக்குதல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என பாதுகாப்பு தரப்பு இது பற்றி கூறுகின்றது.

ஆனால் பொது மக்களைப் பொறுத்த வரை பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால் தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Sakthi TV journalist killed; Outcry as Sri Lanka’s defence chief Gotabhaya urges censorship: Colombo & Sri Lanka

Posted by Snapjudge மேல் மே 28, 2008

கோதபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு இலங்கை ஊடக அமைப்புகள் எதிர்ப்பு

கோதாபய ராஜபக்ஷ

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு இலங்கையின் ஊடக அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் குறித்து பக்கசார்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதற்கு பாதுகாப்பு செயலரின் பேச்சு அச்சுறுத்தலாக உள்ளதாக ஊடக அமைப்புகள் கருதுகின்றன.

பத்திரிக்கையாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு அடித்துத் துன்புறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த இரண்டு மூத்த பத்திரிக்கையாளர்களை கோதாபய ராஜபக்ஜசே தன்னைக் காணவருமாறு பணித்ததாக ஐந்து ஊடக குழுமங்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளன.

அரசாங்க ஊடகத்தில், இராணுவம் மற்றும் இராணுவத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் ஏற்புடையவையல்ல என்று பாதுகாப்பு ஆலோசகருடனான இந்தச் சந்திப்பின்போது இவர்களுக்கு கூறப்பட்டதாகவும், அவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து இலைமறைகாயாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊடக குழுமங்கள் தெரிவித்துள்ளன.


யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் வெட்டிக் கொலை

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளியில் புதன் மாலை 4.30 மணியளவில் சக்தி தொலைக்காட்சி சேவையின் யாழ் மாவட்ட செய்தியாளராகிய 32 வயதுடைய பரநிருபசிங்கம் தேவகுமாரன் அடையாளம் தெரியாத ஆட்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்பபாணம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இவருடன் சென்றதாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் செயலக சிற்றூழியராகிய 38 வயதுடைய மகேந்திரன் வரதன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய மல்லாகம் மாவட்ட நீதிபதியின் உத்தரவையடுத்து, செய்தியாளர் தேவகுமாரனின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.


இலங்கை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில்

இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் கச்சதீவுக்கு அருகில் செவ்வாய் இரவு தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 இந்திய மீனவர்களை வியாழன் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் 4 படகுகளில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தலைமன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

தங்கச்சிமடம், இராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கின்றது.

இவர்களை கொழும்பு மீரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி அங்கிருந்து அவர்களை அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அதிகாரிகளுககு உத்தரவிட்டிருக்கின்றது.


மட்டக்களப்பில் தமிழர்-முஸ்லிம் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பில் கூட்டம்

கிழக்கு மாகாண முதல்வர்

இலங்கையின் கிழக்கே கடந்த சில தினங்களாக வழமைநிலை பாதிக்கப்ப்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வியாழன் முதல் வழமைநிலையை ஏற்படுத்தவது என புதன் மாலை பொலிஸ் நிலையத்தில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர்கள், சமய சமூக பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிபாரிகள் உட்பட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் எல்லைப் பிரதேசமான ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்டுவரும் காவலரனை அகற்றுமாறு முஸ்லிம்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அச்சமின்றி மீளக் குடியமர்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை முஸ்லிம் பிரதிநிதிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பில் பெண்கள் பேரணி

இலங்கை தலைநகர் கொழும்பில் புதனன்று நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நாட்டில் நடந்துவரும் கொடிய யுத்தத்தினை நிறுத்தவேண்டும், அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானத்தை நிலைநிறுத்த புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும், உலக மயமாக்கல் அடிமைத் தனத்திற்கு பணியக்கூடாது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, சம்பந்தப்பட்ட தரப்பினர்மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்கும் நோக்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குமான மக்களுக்கிடையிலான கலந்துரையாடல் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு எதிரில் இடம்பெற்ற இந்த அமைதிப் பேரணியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கலந்துகொண்டனர்.


Posted in Govt, Law, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

18 civilians killed in Wanni blasts; Moothoor fishermen protest against fishing ban; Pillayan group supporters attack Muslim traders in Thaazhangkudaa

Posted by Snapjudge மேல் மே 26, 2008

இலங்கை ரயில் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே தெஹிவளையில், ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில், 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற்பகலில் சன நெரிசல் மிக்க வேளையில், பயணிகள் பெட்டியில், பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத்தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது அரசாங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இதுவரை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து கருத்து எதுவும் வரவில்லை.

கடந்த மாதம் பேருந்து குண்டு வெடிப்பு ஒன்றில், 20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் என்னும் இடத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தரக்கோரி முஸ்லிம்கள் நடத்தியஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


மட்டக்களப்பில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டதில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பிள்ளையான் ஒப்புக்கொண்டார்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் கடந்த வியாழனன்று முஸ்லிம்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் தனது அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் ஒப்புக்கொண்டார்.

சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினரை தாங்களே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர், தனது அமைப்பிலேயேகூட எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வதை தான் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம்களை மீட்டுத்தரக் கோரி ஏறாவூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், ஒரு பெண் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏறாவூர் பகுதியில் 4 முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆயினும் அவர்களில் இருவரே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு முஸ்லிம்களும், தம்மை, முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களே கடத்தியதாக தெரிவித்திருப்பதாக கூறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள், கடத்தப்பட்டு இதுவரை வீடு திரும்பாத மற்ற இருவரது விடயத்தில் கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானிடம் கேட்டபோதே, இதுவரை விடுவிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தமது அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால், இதுவரை விடுவிக்கப்படாதவர்கள் விடயத்தில் தமக்கு சம்பந்தம் எதுவும் கிடையாது என்று கூறினார். அரசியல் நோக்கம் கொண்ட சிலரே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, இந்தக் கடத்தல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. அதனையடுத்து ஏறாவூர் பகுதியில், இன்று இரவு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் குண்டுவெடிப்புகளின் இலக்கானதைக் கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த வாகனங்கள் மீது கடந்த வாரம் அடுத்து நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களைக் கண்டித்து திங்களன்று வவுனியாவில் கடையடைப்பும் பணிப் புறக்கணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசங்களிலும் இன்று பாடசாலைகள் இயங்கவில்லை என்றும் அங்கு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களாகிய மல்லாவி, முறிகண்டி ஆகிய இடங்களில் கடந்த வியாழனன்று அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீதும் வெள்ளிக்கிழமையன்று சிவிலியன்கள் பிரயாணம் செய்த வண்டி ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வவுனியா மன்னார் மணலாறு மற்றும் முகமாலை போர் முன்னரங்குகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இரு தரப்புக்களையும் சேர்த்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ அறிக்கைகள் கூறுகின்றன.


மீன்பிடித் தடையை விலக்கக்கோரி மூதூர் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவாகள் இப்பிரதேசத்தில் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடித் தடையை
விலக்குமாறு கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர், மீன்பிடித்
தடையயை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம்
கையளிக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கான தீர்வினை செவ்வாய்கிழமையன்று காண்பதாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

கடந்த பதினாறு தினங்களாகவே தொடரும் இப்பிரச்சினை
தொடர்பாக கருத்துத் தெரிவித்த மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச்
செல்லாததினால் தாங்கள் வருமானம் இன்றி பசியால் வாடுவதாக
தெரிவித்துள்ளனர்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »