Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Lit’

Fiction by Annadurai: Lit Review by Imaiyam

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

அண்ணாதுரை சிறுகதைகள்
இமையம்

இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல; வாழ்இக்கைதான் என்னு டைய பிரச்னை. வாழ்க் கையில் இன்பத்தைப் பெருக்க வேண்டும்; வேதனையைக் குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூகக் குறிக்கோள் உள்ள எழுத்தாளன் நான். இந்தச் சமூக உறவுதான் என்னை எழுதவைக்கிறது”

– அண்ணாதுரை நாவல் வடிவத்தைப் போலவே சிறு கதை வடிவமும் ஆங்கில இலக்கிய வாசிப்பின் வழியே தமிழுக்கு பெறப்பட்டதுதான். தமிழில் இவ் வடிவத்தின் முன்னோடியாக வ. வெ.சு.ஐயரைக் குறிப்பிடலாம்.

ஐயரை அடுத்து பி.எஸ்.இராமையா, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன். சி.சு.செல்லப்பா, கா. சிவத்தம்பி, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியன், பி.எம்.கண்ணன், மௌனி போன்றவர்கள் சிறுகதைகளை மட்டுமல்லாமல் பரி சோதனை ரீதியிலான கதைகளையும் எழுதினார்கள்.

அடுத்து இவர்களுடைய வரிசையில் கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிர்தம், தி.ஜானகிராமன் போன்றவர்களும் சிறுகதை வடிவத்தை தமிழில் வளப்படுத்தினார்கள். இந்த எழுத்தாளர்கள், சிறுகதையின் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் மொழிக்கும் நடைக்கும் பரிசோதனைக்கும் முன்னுரிமை தந்து எழுதியவர்கள். பெரும்பாலும் இவர்கள் தனிமனித சிக்கல், புலம்பல், குழப்பம், குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்களையே பிரதானப்படுத்தி எழுதினார்கள்.

ஒருவகையில் இவர் கள் அனைவரையும் ஆச்சாரத்தை கடைப்பிடித்து மிகவும் ஆச்சாரமான முறையில் எழுதிய எழுத்தாளர்கள் எனலாம்.

இவர்கள் எழுதிய அதே காலக் கட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பல எழுத்தாளர் களையும் சிந்தனையாளர்களையும் போராட்டக்காரர்களையும் உருவாக் கியது. இவர்களை காலமும் சமூகமும் உருவாக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இயக்கங்களின் கொள்கை அடிப்படையிலும் இவர்கள் எழுதினார்கள்.

சமூகத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பரம்பரை தொழில்களுக்கு எதிராக கருத்துப் பிரசாரம் செய்யவேண்டிய – கிட்டத்தட்ட கலகம் செய்யவேண்டிய -சூழலில் இவர்கள் இருந்தார்கள். இப்படி இனம், மொழி, திராவிட இயக்கச் சிந்தனைகள், பழமைக்கு எதிரான குணம், அறியாமை, மடமை, மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதி ரான நிலைப்பாட்டுடன் எழுத வந்த வர்களில், முக்கியமானவராகவும் முதன்மையானவராகவும் பேரெழுச்சியை உருவாக்கியவராகவும் இருந்தவர் அண்ணாதுரை.

இவரது எழுத்து தமிழகத்தில் ஒரு இயக்கமாக வளர் ந்தது. ஒரு புதியவகை எழுத்து இயக்கத் தை மட்டுமல்ல, ஒரு அரசியல் இயக்கத்தையும் உருவாக்கியது. அண்ணாவினுடைய எழுத்து தமிழ் மொழியில், தமிழ்ச் சமூக வாழ்வில் பாய்ச்சலான பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பது வரலாறு.

அந்த வரலாறு எளிதில் அழிக்கக்கூடிய வரலாறாக இல்லை. அவருடைய எழுத்தின் தாக்கம் இன்றும் இருக்கிறது.

அண்ணாவுக்கு மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், நாடக ஆசிரியர் என்று பல முகங்கள் உண்டு. மற்ற முகங்களைவிட சிறுகதை ஆசிரியர் என்ற முகம் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

1934 முதல் 1966 வரையிலான காலத்தில் அவர் மொத்தம் நூற்று பதிமூன்று சிறுகதைகளை எழுதியுள்ளார்.

11-12-1934இல் வெளிவந்த ‘கொக்கரக்கோ’ அண்ணாவின் முதல் சிறுகதை.

14-01-1966இல் வெளிவந்த ‘பொங்கல் பரிசு’ அவருடைய கடைசி சிறுகதை.

கொக்கரக்கோ என்பது தமிழ்ப் பண்பாட்டில், கலாச் சாரத்தில், நம்பிக்கையை மையப் படுத்துவது; பொங்கல் என்பது மகிழ்ச்சியை, ஆனந்தத்தை, கொண் டாட்டத்தை, நிறைவை மையப்படுத் துவது. அண்ணா, சிறுகதைகளை கொக் கரக்கோவில் ஆரம்பித்து பொங்கல் பரிசில் முடித்துள்ள ஒற்றுமை இயற்கையாக அமைந்த ஆச்சரியம்.

அண்ணாவுக்கு ஒரு நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திற்காகத்தான் அவர் எழுதினார். கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங், “எனக்கொரு கனவு இருக்கிறது” என்று சொன் னதுபோல, “எனக்கொரு நோக்கம் இருக்கிறது, லட்சியம் இருக்கிறது” என்று அண்ணா சொன்னார். தமிழ்ச் சமூகத்தை இருட்டிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும் என்பது அண்ணாவின் லட்சியம்; சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.

இதனடிப் படையில் வாழ்விற்கான உரிமையையும் அதற்கான வேட்கையையும் முன் னிறுத்தியே அவர் எழுதினார். தமிழ்ச்இசமூகம் மகிழ்ச்சியை, கொஇண்இடாட்இடத்தை இழந்ததற்கான கார ணங்கள் என்ன, அவற்றை அடை வதற்கான வழிவகைகள் என்ன என்று தன் சிறுகதைகளில் அவர் ஆராய்ந்தார். ஒரு எழுத்தாளனுடைய நோக்கம்தான் அவன் எழுத்துக்கு வலிமையான பலமாக அமைகிறது.

இந்த வலிஇமைஇதான் எழுத்தினுடையவும் எழுத்இதாளஇனுடையவும் மேன்மையாக அமைஇ கிறது.அரை நூற்றாண்டு காலம் முடி ந்துஇவிட்ட பிறகும், இன்றும் நாம் அண்ணாவினுடைய சிறுகதைகளைப் பற்றி பேசுவதற்குக் காரணம் அக் கதைகளினுடைய வலிமையும் மேன்மையும்தான்.

கருத்தைப் பரப்புவதற்காக, பிரசாரம் செய்வதற்காக எழுதப்பட்டதுதான் அண்ணாவினுடைய சிறுகதைகள் அனைத்தும். அவருடைய இயக்க செயற்பாடுகளில் ஒன்றாகத்தான் அவருக்கு எழுத்தும் இருந்தது. ஆனால், பிரசாரத்திற்காக எழுதப்பட்டி ருந்தாலும் அவருடைய கதைகள், சிறுகதைகளுக்குரிய எல்லாக் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

குழப்பமில்லாத தெளிவான நடை, குறிப்பாக உணர்த்துதல், நுட்பமான சித்தரித்தல், எள்ளல், அங்கதம், ஒப்பீடு, நகைச்சுவை, உருவக, கவிதை குணம் கொண்ட வாக்கியமைப்புகள் என்று அனைத்துக் கூறுகளும் நிறைந் திருப்பதை இன்றும் காணமுடியும். அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகியும் அவருடைய கதைகளை எளிதாக படிக்க முடிகிறது; ரசிக்க முடிகிறது என்பதோடு அக்கதைகள் இக்காலத்திற்கும் பொருத்தமானதாக, தேவையானதாக இருக்கிறது என்பது ஆச்சரியமான விசயம்.

அண்ணா, கதை எழுத ஆரம்பித்த காலத்திலும் எழுதிக் கொண்டிருந்த காலத்திலும் நான்கு விதமான கதை எழுதும் போக்குகள் இருந்தன. தனி மனித பிரச்னைகள், சிக்கல்கள், பிடுங்கல்கள், மனப்போரட்டங்கள், உளவியல் பிரச்னைகள்; குடும்ப உறவுகளுக்கிடையிலான மோதல்கள், சிடுக்குகள், விரக்தி, நம்பிக்கையின்மை, மனக்குழப்பங்களை, சீர்குலைவு களை பதிவு செய்வது என்று ஒரு பிரிவினர் இருந்தனர், இவ் வகையான எழுத்துகளையே இலக்கியமாக இலக்கியவாதிகள் அங்கீகாரம் செய்தனர்.

தனிமனித பிரச்னைகளையும் சமூகப் பிரச்னை களையும் அப்பட்டமாக பதிவு செய் வதுதான் எழுத்தாளனின் வேலை; அதில் குறுக்கீடு செய்வதோ, விமர்சனம் செய்வதோ அல்ல என்பது மற் றொரு பிரிவினர்களுடைய போக்கு. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், நாட்டுப்பற்று, விடுதலைப் போராட்டம், தேசிய இயக்கம், காந்திய சிந்தனைகளின் அடிப்படையில் எழுதுவது மூன்றாவது பிரிவினருடைய எழுத்து வகை.

நடைமுறை சமூக வாழ்வில் இருக்கக்கூடிய அசலான பிரச்னைகளையும் பிரச்னைகளுக் கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முன் வைத்து எழுதி யவர்கள் நான்காவது வகையினர். அண்ணா, நான்காவது வகையைச் சார்ந்த எழுத்தாளர்.

சமூகத்தை முன்னேற்றுவதற்கு, விமர்சனம் செய்வதற்கு – முக்கியமாக பிரசாரம் – செய்வதற்கான கருவியாகவும் தன்னுடைய கருத்தை, சிந்தனையை, எண்ணத்தை பரப்புவதற்கு தகுந்த ஆயுதமாகவும்தான் கலைப் படைப் புகளை அண்ணா கருதினார்; இதே நோக்கத்திலேயே சிறுகதை என்ற வடிவத்தை பயன்படுத்தினார்.

அதோடு, இலக்கியம் மக்களுக்கானது, அது மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சமூகத்தின் மீதான தன்னுடைய விமர்சனத்தை சிறுகதைகளின் வழியே செய்தார். தேவையான இடங்களில் விமர்சனத்தைக் கடுமையாகவும் வைத்தார். அவர் வாழ்வை நான்கு சுவர்களுக்குள் காணவில்லை; மாறாக தெருவில் கண்டார்.

இதனால், அண்ணா கதைகள் சராசரியான கதைகளாக இல்லாமல் கலகக் குரலாக இருந்தது. முதல் கதையிலிருந்து கடைசி கதை வரை இந்தக் கலகக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் வாழ்வினுடையதும் சமூகத்தினுடையதுமான நெருக் கடிகளில் இருந்து உருவானது அவருடைய சிறுகதைகள்.

அண்ணாவினுடைய சிறுகதைகளின் மையமான கரு – மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரம்; சாதியப் பிரச்னைகளுக்கு, மத மோதல்களுக்கு, சமயப் பூசல்களுக்கு, புராண இதிகாசக் கட்டுக் கதைகளுக்கு, பெண்ணுரிமை, வரதட்சணை கொடுமைக்கு எதிரானது; குருட்டுத்தனத்திற்கு, பழமைக்கு எதிரானது; சமூகத்தின் மேல் அடுக்கில் இருப்பவர்கள் சமூகத்தின் கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மீது செலுத்திய குரூரமான ஒடுக்குமுறைக்கு, சித்ர வதைக்கு எதிரானது. சமூக மேம்பாடும் சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும்தான் அவருடைய மொத்தக் கதைகளின் சாரமும் நோக்கமுமாக இருக்கிறது.

அண்ணா, தமிழ் மரபின் பிரதிநிதி என்பதால் தமிழ் வாழ்வுக் குறித்த மதிப்பீடுகளே அவருடைய கதைகள் என்றும் சொல்லலாம்.

அண்ணாவினுடைய 113 சிறு கதைகளையும் மொத்தமாக படித்து முடிக்கும் போது, அவருடைய பரந்துட்ட அறிவு வீச்சு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு அவர் தொடாத விசயங்கள் எதுவுமில்லை என்பதும், ஒரு கதையினுடைய சா யலை மற்றொரு கதையில் காண முடியாது என்பதும், அவருடைய எழுத்தின் மேன்மைக்கு சான்றாக இருக்கிறது.

  • மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ‘பரிசு’ என்ற கதையையும்;
  • சாதிகள் இந்த மண்ணில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதற்கு ‘சிங்கள சீமாட்டி‘ (1939) என்ற கதையையும்;
  • மதப்பூசல்களுக்கு எதிராக ‘மதுரைக்கு டிக்கட் இல்லை’ (1945) என்ற கதையையும்;
  • பேய் பிசாசு போன்ற கட்டுக்கதைகளுக்கு எதிராக ‘யார் மீது கோபித்துக் கொள்வது’ (1955) என்ற கதையையும்;
  • மாந்திரிகத்தினால் ஏற்படும் கேடுகளுக்கு எதிராக ‘விழுப்புரம் சந்திப்பு’ (1965) என்ற கதையையும் எழுதியுள்ளார்.
  • முதலாளித்துவத்தின் சுரண்டல் போக்குகளை, கோரச் செயல்பாடுகளை பல்வேறு நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ‘செவ் வாழை’ (1949),
  • ‘ரொட்டித்துண்டு’,
  • ‘பக்த பக்காத் திருடன்’ (1950)
  • ‘பூபதியின் ஒரு நாள் அலுவல்’ (1946)
  • ‘பொய் – லாப நஷ்டம்’ (1945)
  • ‘நாடோடி’ (1945)
  • ‘உடையார் உள்ளம்’ (1966) போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  • இந்த நாட்டில் வரத ட்சணை கொடுமையினால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை சீர்கெட்டுப் போகிறது என்பதற்கு ‘சோணாச்சலம்’ (1947) என்ற கதையை எழுதியுள்ளார்.
  • பெண்களும் மனித உயிர்களே; அவர் களுக்கும் சகல உரிமைகளோடு வாழ்வ தற்கு உரிமை உண்டு என்பதோடு பெண்கள் படும் அல்லல்களை துன்பங் களை விவரிக்கும் விதமாக
  • ‘வாலிப விருந்து’,
  • ‘சுடு மூஞ்சி’ (1946),
  • ‘கன்னி விதவையானாள்’ (1961) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • இந்த மண்ணில் ஏற்பட்டுள்ள, ஏற்படுகிற சகல விதமான மூடத் தன ங்களுக்கும், சமயப்பூசல்களுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும், கீழ்மைத் தனங்களுக்கும், மோசடி கபட நாடகங்களுக்கும் பிராமணியமே அடிப்படையான காரணம் என்பதைத் தோலுரித்து காட்டும் விதமாக
  • ‘அறுவடை’ (1955),
  • ‘பேரன் பெங்களூரில்’,
  • ‘மேலதிகாரி’ (1956),
  • ‘சொல்வதை எழுதேண்டா’ (1946) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  • காதல் என்ற பெயரால் நடக்கும் மோசடிக்கும், கபட நாடகத்திற்கும் ஆளாகி அவதிப்படும் பெண்களுடைய வாழ்வை சித்தரிக்கும் விதமாக
  • ‘தங்கத்தின் காதலன்’ (1939),
  • ‘புரோகிதனின் புலம்பல்’,
  • ‘அவள் மிகப் பொல்லாதவள்’ (1939) போன்ற கதைகளை எழுதியுள்ளார்.
  • பணக்காரர்களுடைய ஏழைகளின் மீதான அன்பு, இரக்கம் பச்சாதாபம் என்பதெல்லாம் நாடகமே என்பதை ‘இரு பரம்பரைகள்’ (1946) என்ற கதையில் காட்டுகிறார்.
  • பெண்களுடைய உரிமைக்காகவும் வாழ்விற்காகவும் குரல் கொடுப்பதோடு பெண்ணிய நோக்கில்
  • ‘அவள் விபச்சாரியானாள்’ (1946)
  • ‘வழுக்கி விழுந்தவள்’ (1965) ஆகிய கதைகளை எழுதியுள்ளார்.
  • வரலாறுகளையும் வரலாற்றில் நடந்து ள்ள மோசடிகளையும், ஏமாற்று சித்து வேலைகளையும் தர்க்கப்பூர்வமாக ஆராய்ந்து
  • ‘புலிநகம்’ (1946),
  • ‘பிடி சா ம்பல்’ (1947),
  • ‘திருமலை கண்ட திவ்விய ஜோதி’ (1952),
  • ‘தஞ்சையின் வீழ்ச்சி’,
  • ‘வெளியூரில் கொலம்பசு’ போன்ற கதைகளை எழுதிஇயுள்ளார்.
  • உளவியல் சா ர்ந்த கதைகளான
  • ‘ராஜபார்ட் ரங்கத்துரை பாகவதத்’ (1948),
  • ‘மரத்துண்டு’ போன்றவற்றையும் எழுதினார்

கரு, அமைப்பு, நோக்கம், உள்ளடக்கம், வெளிப்பாட்டுத்திறன், ஆளுமை, மொழி போன்றவற்றை வைத்து அண்ணா சிறுகதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்க முடியும். தொடக்ககாலக் கதைகள் பசி, வறுமை, நோய், அறியாமை, சாதி மற்றும் பொருளாதார ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள், உழைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் போன்ற பிரச்னைகளை நேரிடையாகவும் அப்பட்டமாகவும் பேசியதோடு அதற் கானத் தீர்வுகளையும் முன்வைக் கின்றன.

பொதுவாக தமிழ் இலக்கிய உலகம் பிரச்னைகளையும் பிரச்னைகள் உருவாவதற்கான காரணிகளையும் ஆராயும். ஆனாலும், முடிவை வாசகனுடைய தீர்மானத்திற்கு விட்டு விடும். இதற்கு நேர்மாறான குணத் தை அண்ணாவினுடைய தொடக்கக்கால கதைகள் கொண்டிருப்பது கவனத்திற்குரியது.

இடைக்காலக் கதைகள் பிரச்னைகளை விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து, தீர்வை முன் வைப்பதற்குப் பதிலாக விவாதத் தையும் தர்க்கத்தையும் முன்வைத்தன. கடைசிக்காலக் கதைகளில் கருவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வடிவம், செய்நேர்த்தி, சொல்முறை, நுட்பம், செறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இக்கால கதைகளில் முதிர்ச்சியையும் தேர்ச்சியையும் காண முடிகிறது. இதே காலத்தில்தான் ஓப்பீட்டு முறையிலான கதைகளையும் எழுதியுள்ளார். ஒரு எழுத்தாளனுடைய வாழ்க்கையில் வளர்ச்சிப் படிநிலைகள் தவிர்க்க முடியாதவை; இந்த வளர்ச்சிப் படி நிலைகள்தான் அந்த எழுத்தாளனுடைய எழுத்தின் வலிமையைக் காட்டுகிறது என்ற கோட்பாடு அண்ணாவின் கதைகளுக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.

மரபுகளை உதறித்தள்ளி புதிய மரபுகளை உருவாக்கிய சிறுகதைகள் அண்ணாவினுடையது. திரித்துக் கூறுதல், சுற்றி வளைத்துப் பேசுதல் என்பது அண்ணாவின் சிறுகதைகளில் காண முடியாத ஒன்று.

சிறுகதைக்குரிய எல்லா குணங்களும் சிறப்பாக இருந் தும், ஆச்சாரமான இலக்கிய விமர்சகர்கள் அவரது சிறுகதைகளை கொள் கை முழக்கங்களாக பார்த்ததின் விளைவு அவருடைய கதைகள் பர வலாகாமலேயே போய்விட்டது.

நம் முடைய விமர்சகர்கள் ஒரு படைப்பை அதனுடைய தரத்தை வைத்து மதிப்பிடாமல், அந்த படைப்பை எழுதிய எழுத்தாளனுடைய சாதி, சார்ந்துள்ள கட்சி, அவனுடைய பின்னணி போன்றவற்றை வைத்தே மதிப்பிடுகிறார்கள் என்பதால் நிகழ்ந்த துயரம் இது. ஆனால், விமர்சகர்களால் உதவாக்கரை என்று ஒதுக்கப்பட்ட அண்ணாவின் சிறுகதைககள்தான் இன்று அதிகமாகப் பேசப்படுகின்றன.

அண்ணாவுக்கு தெளிவான நோக்கம் இருந்தது; அந்த நோக்கத்திலும் லட்சி யத்திலும் இருந்துதான் அவருடைய சிறுகதைகள் உருப்பெற்று வந்தன. இந்நிலையில் ஆய்ந்து அண்ணா வினுடைய சிறுகதைகளை மதிப்பிட வேண்டும்.

அண்ணா எந்தெந்த பிரச் னைகள் தீரவேண்டும், ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினாரோ அந்தப் பிரச்னைகள் இன்றுவரை ஒழி ந்தப்பாடில்லை. சாதிக்கொடுமை, தீண்டாமை, பசி, பிணி, வறுமை, அறியாமை, பொய்மை, போலித்தனம், சமயப்பூசல், இளமை மணம், காதலுக்குத்தடை, தெய்வத்தின் பெயரால் ஏற்பட்ட கட்டுக்கதைகள், புராண – இதிகாசப் புரட்டுகள் இந்த மண்ணில் இருக்கும்வரை; சூழ்ச்சியின் பிடியில் தமிழ்ச் சமூகம் சிக்கி தவிக்கும் வரை; பிரச்னைகள் மடிவதற்குப் பதிலாக வேகம் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்ற வரை; அண்ணாவினுடைய சிறுகதைகளும் இருக்கும்.

Posted in Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

Aravind Adiga: Novel About India Wins the 2008 Man Booker Prize: The White Tiger

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008


சென்னையில் பிறந்த இந்திய எழுத்தாளருக்கு புக்கர் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது

புக்கர் பரிசு பெறும் அரவிந்த் அடிகா
புக்கர் பரிசு பெறும் அரவிந்த் அடிகா

உலகளவில் இலக்கிய வட்டாரத்தில் மதிப்பு வாய்ந்த ஒரு விருதாகக் கருதப்படும் மான் புக்கர் பரிசு இந்த ஆண்டு இந்திய எழுத்தாளரான அரவிந்த் அடிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

33 வயதான அடிகா சென்னையில் பிறந்து தற்போது மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டின் பரிசுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்த ஆறு பேரில். மிகவும் வயது குறைந்தவர் அடிகாததான்.

கிராமத்து ஏழ்மையிலிருந்து மீண்டு நகரத்தில் வளமான வாழ்க்கைக்கு உயர்ந்த ஒரு மனிதனின் கதைதான் வெள்ளைப் புலி புதினத்தில் கூறப்பட்டுள்ளது.

எமாற்றுதல், ஊழல் மற்றும் இறுதியாக கொலையின் மூலமே ஒருவன் எவ்வாறு இப்படி உயர்ந்தான் என்பதை அந்தப் புதினம் வெளிக் கொண்டு வருகிறது.

யாருக்கு பரிசு என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமான விடயமாக இருந்தது என்றும் எனினும் வெள்ளிப் புலி புதினம் ஆழமான உண்மைகளை கொண்ட ஒரு புத்தகம் என்று தேர்வுக் குழுவின் தலைவரான மைக்கேல் போர்ட்டிலோ கூறினார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 1 Comment »

Interview with Sirpi Award winner Kavinjar Sugumaran – Dinamani

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

காகிதம் காலியாக…உண்மையை எழுதுகிறேன்!

ஜி.மீனாட்சி

இந்த ஆண்டுக்கான (2008) “சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ளார் கவிஞர் சுகுமாரன். கவிஞர் என்ற முதன்மை முகத்துடன், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர் சுகுமாரன்.

நவீன தமிழ்க் கவிதையில் தனக்கென தனித்த மொழி நடையும், சொற்செட்டும் கொண்டவர். வருணனைகள் அதிகமின்றி நதியின் இயல்பில் நகரும் படகுபோல் இயல்பாய், நேருக்கு நேராய் பேசக்கூடியதுபோல அமைந்தவை அவரது கவிதைகள்.

35 ஆண்டுகளாக சுகுமாரன் பெரும்பாலும் பென்சிலால் எழுதி வந்துள்ள கவிதைகளின் தொகுப்பான “பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற புத்தகமே அவருக்கு சிற்பி இலக்கிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. விருது பெறுவதற்காக பொள்ளாச்சி வந்த கவிஞர் சுகுமாரனிடம் பேசியதிலிருந்து…

உங்கள் எழுத்துலகப் பிரவேசம் எந்த வயதில் நிகழ்ந்தது?.

பள்ளி செல்லும் பருவத்தில் எல்லோரையும்போல் கிறுக்குத்தனமாக எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். பிரசுரமான முதல் கவிதை என்றால், என்னுடைய 16-வது வயதில் “கண்ணதாசன் இதழில்’ வெளிவந்த கவிதையைக் கூறலாம். தொடர்ந்து “தாமரை’, “கணையாழி’, “காலச்சுவடு’ போன்ற இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. ஆரம்ப காலத்தில் என்னுடைய தமிழாசிரியர்கள் என் கவிதைகளைப் படித்துப் பார்த்து ஊக்குவித்தார்கள்.

உங்களின் முன்னோடியாக யாரைக் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தை விரும்பும் எல்லோரையும்போல சுப்பிரமணிய பாரதியார்தான் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். புதுமைப்பித்தனின் படைப்புகளில் மனதைப் பறி கொடுத்திருக்கிறேன். சுந்தரராமசாமி, பிரமிள், விக்கிரமாதித்தன், கலாப்ரியா ஆகியோரின் படைப்புகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பலரது படைப்புகளும் என்னைபப் பாதித்திருந்தாலும், எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், என்னுடைய படைப்புகள் யாருடைய சாயலும் இல்லாதவை. எனக்கென தனி மொழி, என் அனுபவத்தின் வெளிப்பாடு போன்றவையே என் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. எல்லோரும் செய்வதையே நாமும் செய்வோம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள படைப்புகள் பற்றி…

35 ஆண்டுகளாக நான் எழுதி வந்திருந்தாலும்கூட, குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளையே எழுதியுள்ளேன். 4 பக்கத்தில் சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக ஒரே கவிதையில் என் கருத்துக்களைச் சொல்லிவிடலாம் என்பதால், கவிதைக்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். “உயிர்மை’ சிற்றிலக்கிய இதழில் “தனிமையின் வழி’ என்ற தொடர் எழுதியுள்ளேன். நிறைய நூல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். மலையாளத்தின் மூத்த கவிதாயினி சுகதகுமாரி முதல் புதிய தலைமுறைக் கவிதாயினி கவிதா பாலகிருஷ்ணன் வரை 10 பெண் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து “பெண் வழிகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளேன். பாப்லோ நெரூடா கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். உலகக் கவிஞர்கள் எட்டு பேரைப் பற்றி “கவிதையின் திசைகள்’ என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.

என்னுடைய படைப்புகளும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பத்திரிகைத் துறையில் உங்கள் அனுபவம்…

குங்குமம் பத்திரிகையின் துணையாசிரியராகவும், சூர்யா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளேன். இரண்டு ஊடகங்களிலுமே எனக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. என் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும், எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

தற்போது கிழக்குப் பதிப்பகத்தின் நியூ ஹொரைசான் மீடியாவின் தலைமைப் பதிப்பாசிரியராக திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறேன்.

எழுத்தாளனுக்கு பத்திரிகைப் பணி என்பது ஒரு சாபக்கேடாகக்கூட இருக்கலாம். நாம் சார்ந்திருக்கும் பத்திரிகையின் கொள்கைகளுக்கேற்ப எழுத வேண்டி இருக்கும். வர்த்தக அடிப்படையில் செயல்படுவது, பத்திரிகையின் குணம். அதற்கேற்ப பத்திரிகையாளன் இயங்க வேண்டி உள்ளது.

இதுவரை பெற்றுள்ள விருதுகள் பற்றி…

இப்போது கிடைத்துள்ள சிற்பி இலக்கிய விருதுதான் நான் பெற்ற முதல் விருது. என் படைப்புகளை நானே அனுப்ப, அதைச் சிலர் தேர்ந்தெடுத்து விருது தருவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. விருது தர விரும்புபவர்கள் தாங்களாகவே சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து வழங்கும் விருதுதான், படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் எனக் கருதுகிறேன்.

கவிதை எழுதுவது, மற்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது… எது கடினமானது?

சொந்தமாகக் கவிதை எழுதுவதுதான் என்னைப் பொருத்தவரை கடினமானது. உணர்வைச் சொற்களாக்குவதில் சிக்கல்கள் தோன்றலாம். மொழிக்குள் நான் இயங்கினால்தான் கவிதை பிறக்கும். எதையும் வலிந்து செய்ய முடியாது. மொழிபெயர்ப்பில் சிக்கல் இல்லை. அந்த மொழி நமக்குத் தெரிந்தால்போதும். கலாசார இடர்பாடுகள் வேண்டுமானால் சில நேரங்களில் வரலாம்.

பத்திரிகையாளன்… கவிஞன்… எப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறீர்கள்?

நான் பத்திரிகையாளன் ஆனது தற்செயல் நிகழ்வு. வாழ்வின் நோக்கமல்ல; பிழைப்பின் நோக்கம். ஆனால், பத்திரிகைத் துறையில் ஈடுபட்டபோது, அதற்குத் தகுதியான ஆள் நான் என்பதை உணர்ந்தேன். 12 வயதில் பிடித்த பேனா, அதே உற்சாகத்துடன், ஆர்வத்துடன் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. எழுத்தைச் சார்ந்து நான் இருக்கிறேன். ஒரு முகம்தான் எனக்கு.

பத்திரிகைகளின் பக்கத்துக்குப் பக்கம் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த புதுக் கவிதைகளில் தற்போது பெருத்த தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே..

1945-ல் பிச்சமூர்த்தி எழுதிய “காதல்’ என்ற கவிதைதான் தமிழின் முதல் புதுக்கவிதை வடிவம். அதற்கு முன்பு பாரதி, புதுமைப்பித்தன் எழுதியவை வசன கவிதைகளாகக் கருதப்பட்டன. ஆரம்பத்தில் புதுக்கவிதைக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எந்தப் புது விஷயமும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்குள்ளாவது இயல்புதானே? பின்னர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பழங்காலக் கவிதைகள் செய்யுள் வடிவத்தில் இருந்தன. மொழியும், மொழி சார்ந்த இலக்கணமும் அவற்றுக்கு ஆதாரமாக இருந்தன.

காலப்போக்கில் புதுக்கவிதையை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாக அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

உண்மையில் புதுக்கவிதையில் புதிய பரிமாணங்கள் இப்போதுதான் பிறந்துள்ளன. பெண் குரல், தலித் குரல், குழந்தைகள் குரல் என்று பல குரல்கள் புதுக்கவிதையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

புதிய தலைமுறைக் கவிஞர்களில் யாருடைய படைப்பு தங்களை அதிகம் கவர்ந்துள்ளது?.

பெண் கவிஞர்கள் சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி, தேன்மொழி போன்றவர்களின் படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஆண்களில் முகுந்த் நாகராஜன், ராஜ்குமார், அழகிய பெரியவன் என்று பெரிய பட்டியலே உள்ளது.

இளம் தலைமுறைக் கவிஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது…?

அறிவுரை என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. என் அனுபவத்தை, என் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்வதற்கான பொது வெளிதான் -எழுத்து. சமூகத்தின் மீதான என் வருத்தத்தை, கோபத்தை என் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன், அவ்வளவுதான். பாரதியார் கூறியிருப்பதுபோல “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்பதே என் கருத்தும். லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கோனர் பாஹாவின் கருத்துப்படி, காகிதம் காலியாக இருக்கிறது. அதில் உண்மையை எழுதி நிரப்புகிறேன். பொய்யை எழுத முடியாது அல்லவா?

உங்கள் சாதனையாகக் கருதுவது…?

35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருவதே சாதனைதான். எல்லோரையும்போல சாதாரண வாழ்க்கைதான் என்னுடையதும். வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே கவிதை எழுதும் ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பதே சாதனைதானே?.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Vijay Tendulkar put Marathi theatre on international map, passes away: A multifaceted personality

Posted by Snapjudge மேல் மே 19, 2008

முன்னணி இந்திய நாடகாசிரியர் விஜய் டெண்டுல்கர் காலமானார்

இந்தியாவின் முன்னணி நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான விஜய் டெண்டுல்கர் புனேவில் தனது இல்லத்தில் காலமானார். எண்பது வயதான விஜய் டெண்டுல்கர் நெடுநாளாக சுகவீனமடைந்திருந்தார்.

தனது தாய்மொழியான மராத்தியிலும் ஹிந்தியிலும் எழுதிவந்த அவர், தனது நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் பிற உரைநடைகளுக்காக பல விருதுகளை வாங்கியவர்.

அவரது பிரபலமான படைப்புகளுக்கு 1970களில் பழமைவாத நேயர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது, ஆனால் காலம் செல்லச் செல்ல அப்படைப்புகள் பெரும் புகழ் பெற்றன.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »