Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Tamils’

Malaysia bans ethnic Indian protest group: Hindraf branded as security threat: Hindu Rights Action Force Outlawed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008

மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு தடை

மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்திய வம்சாவளிகளுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோரி போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது.

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உள்துறை கூறியுள்ளது. மலேசியாவில் வாழும் இருபது லட்சம் இந்திய வம்சாவளிகளுக்கு வேலைகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஹீண்ட்ராப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.

மலேசியாவின், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹிண்ட்டிராப் அமைப்பின் 5 தலைவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத பெருமளவிலான மக்கள் பங்கேற்ற எதிர்புப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியினர் காவல் துறையுடன் மோதியும் உள்ளனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Italian Dragnet Arrests 28 for Financing Tamil Tigers; Sri Lankan Gun Battles Kill 25 Rebels, 7 Soldiers

Posted by Snapjudge மேல் ஜூன் 18, 2008

TamilNet: 16.06.08 Italian Tamils express support for Eezham homeland: “Diaspora Tamils in Northern Italy gathered Sunday for Pongku Thamizh rally held in Piazza Argentina in Milan, one of the largest cities in Italy, from 3:00 p.m. to 6:00 p.m., and voiced their support for Eezham Tamil homeland, Tamils right to self-determination, and protested against the Sri Lankan state’s aerial bombardment of Tamil civilians and rights violations of the Tamil people in Sri Lanka. Burani Vainer, a renown lawyer in Italy for his legal defence of freedom struggles, addressed the audience as a chief guest, on the principles of the right to self determination.

Around 50,000 Sinhalese expatriates live in Northern Italy. ”

இத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.

இத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.

இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.

பெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.


வட இலங்கை மோதல்களில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிரத்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Canada adds World Tamil Movement to terror list; Action Contre la Faim (ACF); Sri Lankan Appeal Court decides to inquire Batticaloa election petition

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

உலகத் தமிழர் இயக்க அலுவலகம்
உலகத் தமிழர் இயக்க அலுவலகம்

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கனடிய அமைச்சரவை நேற்று இந்த முடிவை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையானது கனடாவில் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, உலகத் தமிழர் இயக்கத்தின் கணக்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிதி நிறுவனமும் அது குறித்து கனடிய அரசாங்கத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமது அமைப்பைத் தடை செய்வதற்கான கனடிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்றும் அதனை கனடிய சட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கப் போவதாகவும் கூறும் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரான சின்னத்தம்பி சிற்றம்பலம், தமது அமைப்பு கனடாவிலும், இலங்கையிலும் அகதிகளுக்கு உதவும் பணிகளில் மாத்திரமே ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாண தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான முறையில் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவினை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்கப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் இருவர் சார்பில் இந்த தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருள்பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் புகுந்து வாக்களிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பினை செல்லபடியற்ற தாக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மூதூர் கொலைகள் குறித்து ஏசிஃப் சர்வதேச விசாரணை கோருகிறது

மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்
மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்

இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள் மூதூரிலுள்ள தமது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கொலைகள் இடம்பெற்றன.

இந்தக் கொலைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுவதை இலங்கை அரசு மறுக்கிறது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

East Sri lanka Violence: 5 Dead; Hisbolla becomes Minister; UNHRC Elections – Srilanka loses

Posted by Snapjudge மேல் மே 23, 2008

இலங்கையின் கிழக்கே வன்முறை: ஐந்து பேர் கொலை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வியாழன் நண்பகல் இடம்பெற்ற வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 2 பேரும் 3 முஸ்லிம்களும் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி பிரதேச பொறுப்பாளர் சாந்தன் என்பவரும் அவரது உதவியாளரும் அடையாளம்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளிலேயே குறிப்பிட்ட 3 முஸ்லிம்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது மேலும் 10 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இந்தச் சம்பவங்களையடுத்து தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையயடுத்து அந்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன் நண்பகலுக்கு பின்னர் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சவுணர்வு காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா ஆகியோரின் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்றார் ஹிஸ்புல்லா

இலங்கையின் கிழக்கு மாகாண அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வியாழனன்று பதவியேற்றார்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹிஸ்புல்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சுகாதாரம், சமூக நலம், சிறார் பராமரிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முதலிய துறைகள் ஹிஸ்புல்லாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அவருடன் அவரது ஆதரவு உறுப்பினர்கள் இருவரும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.


ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் தோல்வி இலங்கைக்கு பின்னடைவல்ல: அமைச்சர் சமரசிங்க

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் (வலது பக்கம்) அமைச்சர் சமரசிங்க – பழைய படம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது துரதிருஷ்டம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனாலும் இத்தோல்வி ஒரு இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமை மற்றும் அழிவுகால நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரங்சிங்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

சில முக்கியப் பிரமுகர்களும், அரசு சாரா சர்வதேச அமைப்புகளும் தங்களுடைய சொந்தக் கருத்தை முன்னிறுத்தி இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததே இத்தோல்வியின் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு பார்வையாளர் நாடாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தொடர்ந்தும் செயற்துடிப்புடன் இலங்கை பங்காற்றும் என்று அவர் அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

அதேநேரம், மனித உரிமைப் பாதுகாப்பு விஷயத்தில் இலங்கை மென்மேலுமாக மோசமடைந்துவந்துள்ளது என்பதையே இந்தத் தேர்தல் தோல்வி காட்டுகிறது என்றும் இலங்கை அரசு இந்தச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காணவேண்டும் என்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மனோகணேசன் கூறுகிறார்.


சாதி மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறப்பு

எறையூர் மாதா தேவாலயம்
எறையூர் மாதா தேவாலயம்

தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மூடப்பட்ட தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வு அமைதியாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த செபமாலை மாதா கோயில் வழிபாட்டில் தலித் மக்கள் பல்வேறு வகைகளில் அவமானப்படுத்தப்பப்டுகின்றனர் என்று புகார்கள் எழ, அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களில் இருவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் தேவாலயமே மூடப்பட்டது.

அதனையடுத்து புதுச்சேரி மறைமாவட்ட நிர்வாகம் இருதரப்பினருடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவங்களில் அரச அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெறுகின்ற இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென இராணுவ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி – அக்கராயன் வீதி 4ஆம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்த வான் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வைபவம் ஒன்றிற்குச் சென்றவர்களுக்கே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதி கல்விளான் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய, அம்புலன்ஸ் வண்டியொன்றில் பயணம் செய்த, மன்னார் மாவட்ட கடற்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகிய 47 வயதுடைய ஜோசப் போல் ஜுலரியன் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் சிற்றூழியராகிய வசந்தகுமாரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து, முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் இன்று பிற்பகல் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கிறன.

இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வடாராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் குடியிருப்புகளே இந்தத் தாக்குதலில் சேதமடைந்தவையாகும்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

மலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு

Posted by Snapjudge மேல் மே 15, 2008


ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்

மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »