Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Killed’

India suspects Islamist militants in Assam bombings: Toll in Assam blasts rises to 76: ULFA denies hand in blasts

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2008

அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு -குறைந்தது 60 பேர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கள், பெரும்பாலும் தலைநகர் குவாஹாட்டியில் நடந்துள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உல்ஃபா மறுத்திருக்கிறது.

முற்பகல் 11 மணிக்குப் பிறகு, குவாஹாட்டி, கோக்ரஜார், பார்பேடா சாலை மற்றும் பொங்கைகான் ஆகிய இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடம்
குண்டுவெடிப்பு நடந்த இடம்

குவாஹாட்டியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முதல் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். மாநில தலைமைச் செயலகம் அருகே நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்திய குவாஹாட்டியில் பான்பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டிவெடிப்புக்கள் நடந்துள்ளன.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, தான் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்துக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்ததில், பஸ்ஸின் முன்பகுதியில் தீப் பிடித்துக் கொண்டதாகவும், பலருக்கு குண்டு காயமும் பலருக்கு தீ்க் காயமும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டார்கள். போலீசார் மீதும் போலீஸ் மற்றும் தீயணைப்புபத்துறை வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் உதவி செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள்.

பல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன
பல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன

பெரும்பாலான குண்டுகள் கார்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உல்ஃபா அமைப்பைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார் அஸ்ஸாம் மாநில காவல்துறைத் தலைவர் ஆர்.என். மாதூர். ஆனால், உல்ஃபா அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தங்களுக்கு இன்றைய சம்பவங்களில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்ற அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் அவர்கள், பல அண்டை நாடுகள் அஸ்ஸாமின் எல்லையில் இருப்பதால் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினார்.

இதனிடையே, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவாஹாட்டி செல்கிறார். மன்மோகன் சிங், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Suicide attack on Pakistan tribal gathering kills 85: Pak. tribes raze Taliban houses after bombing: Orakzai jirga

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2008


பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், பழங்குடியின நிர்வாக சபை ஒன்றின் கூட்டத்தில் தற்கொலையாளி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அதில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் இயங்கும் தலிபான்களுக்கு எதிராக ஒரு பழங்குடியின ஆயுதக்குழுவை உருவாக்குவதற்காகவே இந்தக் கூட்டம் ஒரக்ஸாய் பிராந்தியத்தில் கூட்டப்பட்டது.

600 பேர் கலந்துகொண்ட கூட்டத்துக்குள் நடந்து சென்ற தற்கொலையாளி குண்டை வெடிக்கச் செய்ததாக ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Sri Lankan Cabinet minister, Maithripala Sirisena escapes suicide blast: Assassination attempt on his life by LTTE: British, Norway ambassadors visit Jaffna

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 10, 2008

தேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்

இலங்கை வரைப்படம்
இலங்கை வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.

இப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,
சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வடகே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் அரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையும், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

எனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை

இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

ஒமந்தை சோதனைச்சாவடி
ஒமந்தை சோதனைச்சாவடி

இலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

புளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுவந்திருந்தனர்.

புளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



வன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.

முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.


திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்

தமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

இலங்கை விவாகாரத்தில் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.



இலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன்

இந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.

வெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.


இலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்

கிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.

இது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


வன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.


புலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்
முகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்

இலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.

படைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.


இலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி

முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி

இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
தமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


இலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது

இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை
இலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன

இலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.

புளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.

வவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.

இந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்
கூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

இந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்
உடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


தற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.

ஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு
வைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


யாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

இலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.

இந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.



கிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு

விமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.

அவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.


இலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்

இலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.

விக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.


இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.

தமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.

அத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு

இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு
இடம்பெயர்வால் கல்வி பாதிப்பு

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

மீனவர்கள்
மீனவர்கள்

கடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.

திருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

சித்தார்த்தன்
சித்தார்த்தன்

போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.

மேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்

தமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.

இந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ரவூஃப் ஹக்கீம்
ரவூஃப் ஹக்கீம்

இலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.

அங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை தீர்வாகாது

இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.

வெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.

எங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.

இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக

பாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

India’s northeast: Agartala market bombings: Serial blasts in Tripura, 2 dead, 100 injured

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2008

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திருபுராவில் குண்டு வெடிப்பில் இருவர் பலி

திரிபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி
திருபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் புதன்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன. மொத்தம் நான்கு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புக்களில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

அங்கு பண்டிகை காலமாக இருப்பதால் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன. அதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த குண்டுகள் குறைந்தசக்தி கொண்டவை என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குக் யார் காரணம் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்திய–வங்கதேச எல்லையில் உள்ள திரிபுரா மாநிலத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Damascus: Hizbollah sees Israeli involvement: Car Bomb Kills 17 in Syria Near Intelligence Office: Worst attack in decades

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சிரியாவில் குண்டுத்தாக்குதல்

கார்குண்டுத் தாக்குதல்
கார்குண்டுத் தாக்குதல்

சிரியாவில் டமாஸ்கஸ் விமானநிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் குறைந்தப்பட்சம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான், இராக் மற்றும் லெபனானை சேர்ந்த யாத்தீரிகர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ஷியா முஸ்லிம் வழிப்பாட்டு இடம் ஒன்றுக்கு செல்லும் பாதையில் இருக்கும் காவல்நிலையம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல்கள் சிரியாவில் மிக அரிதாக நடைபெற்றுள்ளது என்றாலும், கடந்த ஆண்டு சிரியாவில் இரண்டு பெரும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.


Major attacks are rare in Syria, a tightly-controlled country with powerful security forces, but there have been a number of incidents in recent years, most of which have been blamed on Sunni Muslim groups.

April 1986: A string of co-ordinated attacks around the northern fishing port of Tartus and several other towns kill at least 144 people and injure another 149.

Syrian officials blame Saddam Hussein, the then-president of neighbouring Iraq.

December 1996: An explosion on a bus in a Damascus neighbourhood kills 13 people and wounds 40 others.

April 2004: Three assailants, a policeman and a woman passer-by die in a gun battle in an area of Damascus which includes a number of diplomatic missions.

The government blames al-Qaeda, but the attack is claimed by a group which says it wants to avenge the government crackdown on the Muslim Brotherhood in Hama in 1982.

September 2004:
A car bomb in southern Damascus kills an official of the Palestinian Hamas movement and three passers-by. Both the  government and Hamas blame Israel.

September 2006: Three armed men and a member of the security forces are killed and 14 people wounded in a failed attempt to set off a car bomb outside the US embassy in Damascus.

February 12, 2008: Imad Moghaniyah, a senior Hezbollah commander linked to attacks against Western and Israeli targets in the 1980s and 1990s, is killed by a car bomb in Damascus.

Hezbollah blames Israel, but it denies any involvement.

August 6, 2008: Syria confirms the assassination of Mohammed Sleiman, an army general described in the Arab media as having been the government’s liaison with the Hezbollah movement in Lebanon.

September 27, 2008: Seventeen civilians die in a car bomb blast on a road leading to the Damascus’s airport.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Italian inquiry into India murder: CEO of Greater Noida firm battered to death: Dismissed employees of the Graziano Trasmissioni turn violent; 63 under arrest

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2008

ஊழியர்களால் தலைமை அதிகாரி அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இத்தாலிய நிறுவனம் விசாரணை

இந்தியாவில் இயங்கும் ஒரு இத்தாலிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதில் வேலை செய்யும் பணியாளர்களாலேயே அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில், அந்த நிறுவனம் சுயமாக ஒரு விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

கிரேஸியானோ டிரான்ஸ்மிஷியோனி இந்தியா எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லலித் சௌத்ரி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுடன் நடத்திய கூட்டத்தில் வன்முறை வெடித்தில் அவர் இறக்க நேரிட்டது.

கிராசியானோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியாவில் தாம் பணியாளர்களை நடத்திய விதத்தை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் சௌத்ரி அவர்களின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிற கவலையை இத்தாலி வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் சுமார் முன்னூறு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டதற்கான பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Finland’s gun culture: Gunman murders 10 of his fellow students: School Shooting – Armed student opens fire at college

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 24, 2008

ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்

ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்ட அந்த துப்பாக்கிதாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.

தான் ஒரு துப்பாக்கி பயிற்சியிடத்தில் இருப்பதான வீடியோவை இணையத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திங்கழன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட போதிலும், கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கௌகாஜோகி நகரில் நடந்த இந்த சம்பவம், கடந்த ஒரு வருடத்தில், ஃபின்லாந்தில் நடந்த இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lanka’s Tamil Tigers warn of ‘genocide’ as UN agencies pullout: Ban Ki-moon ‘helping LTTE’ – Sri Lanka: IDPs urge foreign aid workers not to leave Vanni, block convoy

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

கிளிநோச்சிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்குகளுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று செவ்வாய் கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்தபோதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்கு படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத்தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்குக் கடந்த வாரம் உரிய பிரயாண அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று தெரிவித்திருக்கின்றது.

ஆயினும் 11 ஆம் திகதிக்குப் பின்னரான உணவு விநியோக நிலைமைகள் குறித்து இராணுவ தலைமையகம் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆரசாங்கத்தின் அறிவித்தலையடுத்து, வன்னிப்பிரதேசத்தில் இருந்து ஐநா அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து வன்னிப்பிரதேசத்திற்கான குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் மட்டுமல்லாமல், ஓமந்தைக்கு வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கடும் சண்டை நிலைமைகளும் இந்த இழுபறி நிலைமைக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகின்றது.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்

இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு உதவியாக கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திலும், அக்கராயன்குளம் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.45 மணியளவில் அடுத்தடுத்து மூன்றுதடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்போர்முனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 28 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம், வன்னேரிக்குளம், பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களையடுத்து, படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடந்த சிலதினங்களில் இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது.

இதேவேளை முச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் இரண்டு பெண்கள் நேற்றிரவு கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது. இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த கருத்தரங்கு

உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்
உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்

இலங்கையில் உள்நாட்டில் மோதல்களினால் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காணும் நோக்கில் மனித உரிமைகள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுடன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மூன்று-நாள் கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.

அகதிகளுகான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி பேராசிரியல் வால்டர் கலின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய பேராசிரியர் வால்டர் கலின் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைசூழ்நிலைக்கும் மத்தியிலும், குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள இடர்களிற்கு மத்தியிலும் இவ்வாறானதொரு கலந்துரையாடலினை நடாத்துவது வரவேற்கத்தக்கது என்றும், வன்முறைகளிற்கும், இடப்பெயர்வுகளிற்கும் முகம்கொடுத்துள்ள மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் மறந்துவிடமுடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வொன்றினைக்காண்பதற்கு தகுந்த திட்டமிடலொன்றினை முன்னகர்த்துவது என்பது ஒரு சவால் என்றும் அந்தச் சவாலிற்கு இப்போதே முகம்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆயுதக் களைவுக்கான அவசியம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்குள்ள ஆயுதக் குழுக்களிடம் ஆயுதக்களைவை செய்ய உறுதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கிலே ஸ்திரத்தன்மை, பெருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் இலக்கில் ஒரு முக்கிய பகுதியாக, இங்குள்ள மக்களுக்கு கல்வியறிவையும் தொழிற்பயிற்சியையும் வழங்குவது அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு எண்ணத்தையும் உத்தியையும் முன்னெடுப்பதற்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியமானதாகும் என்றும், இதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் கூறினார்.

தனியார் முதலீடுகள் அங்கு வருவதற்கு அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று வலியுறித்திய அமெரிக்கத் தூதர், அது விடயத்தில் தமக்கு கிழக்கு மாகாண முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை அரசும், கிழக்கு மாகாண அரசும் முதலமைச்சரும் பாதுகாப்பு உத்திரவாதங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அதுமாத்திரமல்லாமல் ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான வகையில் நடைபெறும் கொலைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ராபர்ட் ஓ பிளேக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்து குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கையில் தொடர்ந்தும் கடுமையான உயிர்ச்சேதம்

இலங்கை இராணுவ தாங்கி ஒன்று
இலங்கை இராணுவ தாங்கி ஒன்று

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் கிழக்கு, மேற்கு களமுனைகளிலும், கொக்காவில் பிரதேசத்தின் தென்பகுதியிலும், மாங்குளத்திற்கு மேற்கிலும் விடுதலைப் புலிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் குறைந்தது 36 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களது 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளளதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது. மேலும் 24 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து உடனடியாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும், கிளிநொச்சிக்குத் தெற்கே, வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நேற்று பல இடங்களில் முறியடிப்பு தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், வன்னிப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் துயர் நீங்குவதற்கு அமைதி ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியும் சர்வமதப் பிராரத்தனையும் நடத்தப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணையகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சர்வமதப் பிராரத்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.


வட இலங்கை மீனவர்களின் தொழில் பாதிப்பு குறித்து யாழ் பேராசிரியர்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையின் வட பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று கூறுகிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றுபவரும் கடல்வளம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவமான பேராசிரியர் சிலுவைதாசன்.

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதத்தைப் பெற்றிருந்த வடபகுதி தற்போது வெறும் பத்து சதவீதத்தையே பெற்றுள்ளது, மீன்பிடித் தொழிலில் முதலிடத்தில் இருந்து, தற்போது கடை நிலைக்கு இலங்கையின் வடக்கு மாகாணம் கீழிறங்கியுள்ளது என்றும் அவர் விபரித்தார்.

அரசாங்கம் விதித்துள்ள பலவித கட்டுப்பாடுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, தமிழக மீனவர்கள் தமது எல்லைக்குள் நுழைந்த்து, தொடர்ந்து மீன்பிடிப்பது வட இலங்கை மீனவர்கள் தொழில் செய்வதில் பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.

இந்நிலை தீர இருசாராரும் பேசி தீர்ககவேண்டும், தங்கள் பகுதியில் மீனவளம் வறண்டுபோயிருப்பதால் எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும், இலங்கைப் பகுதியிலும் அம்மாதிரி ஆகிவிடக்கூடாது, அதே நேரம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் வருத்தத்திற்குரியதே, இப்பிரச்சினை தீர இரு சாராரும் பேசித் தீர்க்கவேண்டும் என வற்புறுத்துகிறார் பேராசிரியர் சிலுவைதாசன்.

கொழும்பில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

இலங்கையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெயர்ந்திருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் குண்டுகளை வைத்துவருகிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உரிய காரணம் என்று குறிப்பிட்டு அப்படிப்பட்ட காரணம் இல்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை பாதுகாப்பு படையினரால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், யதேச்சதிகாரமாக தடுத்துவைக்கப்படுவதாகவும், அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் முறையிடுகின்றனர்.

இவ்வகையாக கொழும்புக்கு வந்துள்ளவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்ட விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒழுங்குகளுக்கு எதிரானது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உபதலைவரான யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார். இதே நேரத்தில் இந்த பதிவுகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது முறையற்ற செயல் என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கை அரசின் பிரதியமைச்சரான ராதாகிருஷ்ணன். இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிக்ழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்
வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்

இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது.

உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை காணபப்டுவது துரதிர்ஷ்டவசமானது என கவலை வெளியிட்டுள்ள
அச்சங்கத்தின் செயலாளரான டாக்டர் உபுல் குணசேகரா, போலி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ், சுகாதார அமைச்சு உட்பட உரிய தரப்புகளுடன் பல பேச்சுக்கள் நடத்திய போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

நாளொன்றிற்கு 750 முதல் 1000 வரைய கருக்கலைப்புகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அரசாங்க மருத்துவ சபைகளில் பதிவு செய்யப்படாதவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

கருக்கலைப்பகளை பொறுத்த வரை சட்ட விரோத மருத்துவர்களாலேயே பெரும்பாலானவை நடத்தப்படுவதாக பெண்கள் அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.

சட்ட விரோத மருத்துவர்கள் இருந்தாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்து போல் இந்த எண்ணிக்கையில் இல்லை என கூறும் சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்


இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை

திருகோணேஸ்வரர் ஆலயம்
திருகோணேஸ்வரர் ஆலயம்

இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் ஞாயிற்றுக்கிழமையன்று விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீதும், அவர்களது தளம் ஒன்றின் மீதும் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கொக்காவில் பகுதிகளில் தற்போது படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வன்னியில் உறவுகளை தொடர்புகொள்வதிலுள்ள பிரச்சினைகள்

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமது உறவுகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடந்துவரும் வேளையில், அங்கே செயல்பட்டு வந்த தொலை பேசி இணைப்புகள் பல வாரங்களாக முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டன.

இதனால், இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் இலங்கைத் தமிழர்களில் பலர் தமது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

வன்னிப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் தொலை பேசி இணைப்புக்களைத் தவிற பிற இணைப்புகள் அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாகவே தெரிகிறது.

உள்ளூர் தொடர்புகளும் அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு மட்டும்தான் வன்னி மக்களுக்கும் வெளியுலகுக்கும் இடையேயான ஒரே தொடர்பாய் தற்போது இருப்பதாகத் கருதப்படுறது.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாழும் சில இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளைத் தொடர்புகொள்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதனால் தாம் அடைந்துள்ள இன்னல்களை தமிழோசையில் விளக்குவதை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வியாழனன்று இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்த மோதல்கள் உயிரிழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் விசுவமடு பகுதியில் வியாழன் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இலங்கையில் கரையொதுங்கிய சடலங்கள் ‘இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளுடையது’

தனுஷ்கோடியைக் காட்டும் செயற்கைக்கோள் படம்

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் கடந்த சில தினங்களில் கரையொதுங்கிய 7 சடலங்களும் இந்தியாவில் இருந்து படகு மூலமாக தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகள் பயணம் செய்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேரில் மூவர் தவிர ஏனையோர் கடலில் மூழ்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

உயிர் தப்பிய மூவரும் கடலில் நீந்தி தமிழகக் கரையோரத்தை வந்தடைந்ததாக தமிழகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் நயினாதீவுகளில் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.

கிளிநொச்சிக்கான உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை

வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய ஐநா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்தப் பகுதிக்கு உலக உணவுத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்ற ட்ரக் வண்டிகள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்றும் அதற்கான அனுமதி படை அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், இதைவிட அரசாங்கத்தினால் கிளிநொச்சிக்கு ஒன்றுவிட்ட ஒருநாள் ஓமந்தை ஊடாக 20 லொறிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகளுக்கும் இந்த வாரத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புளியங்குளத்தில் கிளெமோர் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் இன்று காலை பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 3 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். எனினும் அதனை இராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைக்காகவே அவர்கள் சார்ந்த ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகில் இன்று காலை விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகுகள் உட்பட விடுதலைப் புலிகளின் 10 படகுகளைப் படையினர் அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இன்று பிற்பகல் 4 மணிவரையில் தொடர்ந்த இந்த மோதல்களில் 20 தொடக்கம் 30 வரையிலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வரவில்லை.

கடற்சமரோடு, வன்னிக்களமுனைகளிலும் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் அதேவேளை, அரச விமானப்படையினரும் வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் தெரிவித்திருக்கின்றன.

வன்னியில் விசுவமடுவுக்கு அருகே பிரமந்தன்குளம் என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் தளத்தில் விடுதலைப் புலிகள் பொருத்தியிருந்த விமான எதிர்ப்பு பொறிமுறையொன்றை (சிஸ்டம் ஒன்றை) விமானப்படையினர் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குண்டுவீசி தாக்கி அழித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் போர்முனைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்களும், எம்.ஐ 24 ரக ஹெலிக்கப்டர்களும் அடுத்தடுத்து நடத்திய விமானக்குண்டுத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் மேலும் ஒரு மோட்டார் பீரங்கித் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னேரிக்குளம் முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் உடனடியாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன்குளம் பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த மோதல்களில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய கரம்பைக்குளம் குளக்கட்டுப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள இராணுவம் இன்று அந்தப் பகுதியில் மேலும் ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வவுனியா வன்னிவிளாங்குளம், புதூர், மன்னகுளம், பகுதிகளில் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 இலிருந்து புதன்கிழமை காலை 6 மணிவரையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வன்னேரிக்குளத்தில் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிரான தமது தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இரண்டு இராணுவத்தின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


கொழும்பு வரும் வட மாகாணத்தவர்களை பதிய உத்தரவு

கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன
கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன

இலங்கையின் வடக்கிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும், செப்டம்பர் 21 ஆம் திகதி காவல்நிலையங்களில் பதிய வேண்டும் என்று இலங்கை காவல்துறை இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித குணசேகர தமிழோசையிடம் கூறுகையில், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களுக்காகவே இந்த பதிவுகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனைய பகுதிகளில் இருந்து வருபவர்கள் நீண்ட காலம் அங்கு தங்குவதில்லை என்பதால், அவர்களை பிரத்தியேகமாக பதியவில்லை என்றும், இருப்பினும், அப்படியானவர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சொந்தக்காரர்கள் பதித்து வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

தம்மை பதிந்துகொள்ள வருபவர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தையாவது தம்மோடு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

வட இலங்கையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன: இழப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலை முதல் மாலை வரையில் 5 இடங்களில் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதில் விடுதலைப் புலிகளின் இரண்டு எறிகணை பீரங்கி நிலைகள் அழிக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின் மீதும், உடையார்கட்டுக்குளம் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கு ஒன்றின் மீதும் விமானப்படையினர் இன்று காலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும், 8 வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வடபகுதியில் இடம்பெறும் மோதல்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து இருதரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.


கிளிநொச்சியிலிருந்து பெருமளவில் மக்கள் இடம் பெயர்வு

இடம் பெயரும் மக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதனாலும், அந்த நகரை அண்டிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமடைந்துள்ள நேரடிச் சண்டைகள் காரணமாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்ற இந்த இடப்பெயர்வு காரணமாக கிளிநொச்சி நகரை உள்ளடக்கிய கரைச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள 14 கிராம சேவையாளர் பகுதிகளில் இருந்து 6500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஒரு வண்டியில் பல பொருட்கள்
ஒரு வண்டியில் பல பொருட்கள்

ஐநா அமைப்புக்கள் வன்னிப்பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என அரசாங்கம் விடுத்திருந்த அறிவித்தலையடுத்து, அந்தப் பிரதேசத்திலிருந்து ஐநா அமைப்புக்கள் நேற்று முழுமையாக வெளியேறியுள்ளன.

இந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பணிகளும், தற்போது இடம்பெயர்ந்து சென்று கெர்ணடிருக்கும் மக்களுக்கான உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறுகின்றார்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை விமானப் படை தாக்குதலில் 4 பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பகுதியில் இன்று இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மறுப்பு

ஆனால், விடுதலைப்புகளின் இலக்குகள் மீது இன்று நான்கு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சு கிளிநொச்சியில் இரணைமடுவுக்கு மேற்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் கூடும் இடங்களில் இரு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் உடையார் கட்டுக்குளம் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, நான்கு பேர் இறந்துள்ளதாகவும், நான்கு பேர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிள்ளையார்கட்டு நோக்கி தாம் சென்ற வேளையிலேயே விமானப்படையின் விமானம் தம்மை தாக்கியதாக கூறுகிறார் காயம்பட்ட ஒருவர்.

அதேவேளை மோதல்கள் நடப்பதால், காயமடைந்தவர்களில், கவலைக்கிடமாக இருப்பவர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதிலும் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் சத்திய மூர்த்தி.

கிளிநொச்சி மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


வன்னியில் இருந்து ஐ நா மனிதநேயப் பணியாளர்கள் விலகல்

வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

வன்னிப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிப் பணியாளார்கள் முற்றிலுமாக விலகி விட்டார்கள் என்று ஐ நாவின் இலங்கை அலுவலகப் பேச்சாளர் கார்டன் வைஸ் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது சர்வதேச பணியாளர்களும், இலங்கையின் மற்றப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், ஆனால் வன்னிப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை மட்டும் தமது 20 பணியாளர்கள் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்துவிட்டதாக கார்டன்வைஸ் கூறினார்.

வன்னிப் பகுதியிலிருந்து தமது வாகனங்கள் அனைத்தும் முழுமையாக வெளியே வந்து விட்டதாகவும், உபகரணங்கள் பல வவூனியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பணிகளை செய்ய காரிடாஸ் முடிவு

கத்தோலிக்க நிறுவனமான கேரிடாஸ், வன்னிப் பகுதியில் தொடர்ந்து தம்முடைய மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் என்று கேரிடாசின் இயக்குனர் அருட் தந்தை டேமியன் பெர்னாண்டோ, பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

காரிடாஸ் ஒரு அரசு சாரா நிறுவனமல்ல என்றும் அது கிறிஸ்தவ தேவாலயத்தின் மனித நேயப் பணிகளை செய்யும் ஒரு அமைப்பு என்றும் விளக்கமளித்த காரிடாஸ் இயக்குனர் தங்களது அமைப்பில் வன்னிப் பகுதியில் வெளிநாட்டவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்றார்.


கொழும்பில் பஸ் குண்டுவெடிப்பில் 4 பேருக்கு காயம்

குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து
குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து

இலங்கையின் தலைநகர் கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.

அந்த குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாகவே அந்த பேருந்து பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அகற்றப்பட்டுவிட்டதால், எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

அந்த பேருந்தில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பது அவதானிக்கபட்டதை அடுத்தே, அதில் இருந்த பயணிகள் இறக்கபட்டு, அது பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கப் படையினர் அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


வவூனியா தாக்குதலில் இந்தியர்களுக்கு காயம்படவில்லை- இலங்கை இராணுவப் பேச்சாளர்!

ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன
ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன

இலங்கையிலிருக்கும் இந்திய தூதரகம், வவுனியா தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்தார்கள் என்று உறுதி செய்துள்ள நிலையிலும் கூட இந்தியர்கள் யாரும் அத்தாக்குதலில் காயமடையவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மீண்டும் கூறியுள்ளார்.

அந்த தாக்குதல் நடைபெற்ற தினத்தில், இந்தியர்கள் யாரும் வவுனியா முகாமில் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று அவர் தெரிவி்த்திருந்தார். ஆனால் தாக்குதலில் இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்ததை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன.

தாக்குதல் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிரிகேடியர் நாணயகாரா, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் இந்தியர்கள் காயமடைந்ததாக உங்களுக்கு இந்திய தூதரகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நீங்கள் அவர்களிடமே அது குறித்து மேலதிக விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்திய தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், இலங்கை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா அவர்களும் இரண்டு இந்தியர்கள் காயமடைந்ததை உறுதி செய்திருக்கிறாரே என்று அவரிடம் தமிழோசை கேட்டபோது, “நீங்கள் தயவு செய்து அந்த அமைச்சரையே தொடர்புகொண்டு இதை பற்றி கேளுங்கள். எனக்கு தெரியாத விடயம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. என்னை பொறுத்தவரை அந்த முகாமில் இந்தியர்கள் யாரும் இல்லை” என்று பிரிகேடியர் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகள் அழியும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் – இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கெதிராக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் அவர்களை முற்றாக அழித்தொழிக்கும்வரை தொடரும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை மாலை இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் நடாத்திய கலந்துரையாடலின்போது இது குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளும், முப்படைத்தளபதிகளும் தற்போது புலிகளுக்கு எதிராக வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளின் போக்குக்குறித்து மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இது ஒரு சாத்தியப்படும் காரியம் என்றும் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்திலிருந்து சர்வதேச தொண்டுநிறுவனப் பணியாளர்களின் வெளியேற்றம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச பணியாளர்களின் சுயபாதுகாப்பிற்காகவே அரசு அவர்களை வன்னியிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், அந்தப்பிரதேசங்கள் படையினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீளவும் அங்கு சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

‘ஐ.நா. பணியாளர்கள் வெளியேறுவதற்கு வழியேற்படுத்தித்தர விடுதலைப் புலிகள் சம்மதம்’

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேறத் துவங்கிவிட்டனர். மீதமுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி தடை ஏற்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிடம் பேசியதை தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருவதாக விடுதலைப்புலிகள் தங்களிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவரது விரிவான செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.



வட இலங்கை மோதல்கள்: முரண்பட்ட தகவல்கள்

இலங்கை சிப்பாய்

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற உக்கிர சண்டையில் எதிர்த்தரப்பினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகக்கூறி இருதரப்பினரும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அக்கராயனுக்குத் தெற்கே திருமுறிகண்டி வீதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையை எதிர்த்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் மீது படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இரு தரப்பினருக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் கடும் துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கி்ன்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது கடுமையான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும், ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவக்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல பாதுகாப்பு தேடி வடக்கு நோக்கி இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே. கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் மாதுறுஓயா காட்டுப்பகுதியில் திங்கள் மாலை விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிவில் பாதுகாப்புப் படை சிப்பாய் ஒருவரும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என மகாஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வன்னியிலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – ஐ.நா

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து ஐ.நா. உதவிப் பணியாளர்கள் விலகுவது தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது என்றாலும் அரசு ஆணைக்கமைய அப்பகுதியலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை என்று கார்டன் வைஸ் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். எனினும் தாங்கள் வவுனியா பகுதியில் இருந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வன்னியிலிருந்து வெளியேறும் போது வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அதி முக்கியமான பொருட்களையும் தாங்கள் வெளியேற்ற போவதாகவும், முக்கியமற்ற பொருட்கள் மற்றும் ஒரு சில பணியாளர்கள் அங்கே இருப்பார்கள் என்றும் ஐ,நா அதிகாரியான கார்டன் வைஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பகுதிக்கு அருகே மோதல்கள் வலுத்துள்ள நிலையில், அங்கிருக்கும் உதவிப் பணியாளார்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் வழங்க முடியாது எனக் கூறி அங்கிருந்து உதவிப்பணியாளர்களை விலகச் சொல்லி இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அதைத் தொடாந்து சில நாட்களுக்கு முன்னதாக ஐ.நா. அப்பகுதியலிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தது.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் வன்னி போர் முனைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் நாவற்குளம் மற்றும் வவுனியா நகருக்கு கிழக்கே உள்ள மாமடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாமடு பகுதியில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரது சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் நாச்சிக்குடா பகுதிகளிலும் வெலிஓயா ஆண்டான்குளம் போர்முனையிலும் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வன்னிக்கள முனைகளில் சில தினங்களுக்கு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த 2 விடுதலைப் புலிகளின் சடலங்கள் சனியன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தனது இணையத்தள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மட்டக்களப்பில் சட்ட விரோத மீன்பிடித்தலால் மீன் இனங்கள் அழிவு

மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்
மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்தல் அதிகரித்துள்ளதால் சில மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்பிடி விரிவாக்கல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாவியில் இனம் காணப்பட்டுள்ள 112 வகையான மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்படித்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.டி.ஜோர்ஜ் கூறுகின்றார்.

இம் மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மீனவ குடும்பங்களில், 50 சத வீதமான குடும்பங்கள் வாவி மீன்பிடித்தொழிலை தமது வாழ்வாதகரமாக நம்பியுள்ளதாகவும், வாவி மீனவர்களில் 20 முதல் 25 சத வீதமானவர்களே தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து சட்ட விரோத மீன் பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சட்ட நடவடிக்கை மூலம் இதனை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சட்ட விரோத மீன் பிடித்தல் காரணமாக இம் மாவட்டத்தில் சமூக பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மாவட்ட மீன் பிடி அபிவிருத்தி சபைத்தலைவரான சிதம்பரப்பிள்ளை பியதாச, கடந்த காலங்களில் இதனை தடுக்க முற்பட்ட போதெல்லாம் ஆயுத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் கூறுகின்றார்.


இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரக்கூடிய மக்களுக்கான உதவிகள் குறித்து ஆய்வு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களுக்கான உதவிகளை செய்வது குறித்த முக்கிய அதிகாரிகள் மட்டக் கூட்டம் ஒன்று இன்று வவுனியாவில் நடந்துள்ளது.

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீவிரமான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலைமையையடுத்து, பாரிய எண்ணிக்கையில் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியா பிரதேசத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு வரக்கூடிய இடம்பெயர்ந்த மக்களை 6 இடைத்தங்கல் முகாம்களில் முதலில் தங்கவைத்து அவர்களின் விபரங்கள் பதியப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அவர்களுக்கென வேறு 3 இடங்களில் அமைக்கப்படவுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வது குறித்து, இன்று வவுனியா செயலகத்தில் சிவில், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மற்றூம் ஐநா அமைப்புக்கள் உட்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளார்கள்.

கிளிநொச்சி நிலைமைகள்

வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்
வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

கிளிநொச்சியில் இருந்து உதவிநிறுவனப் பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக அவர்கள் மேற்கொண்டுவந்த பணிகள் தடைப்பட்டுள்ளதுடன், தமக்கு அவை ஒரு சுமையாக மாறியுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இராணுவததிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அந்தப் பிரதேசத்தில் இருந்து ஐ நா மன்றம் சார்ந்த நிறுவனங்களும், ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பாடசாலைகளில் தங்கியிருந்த மக்களுக்கான மாற்று வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்த வேலைத்திட்டங்கள் முடிவடையாத நிலையில் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் 17 பாடசாலைகளில் மாத்திரமே இடம்பெயர்ந்த மக்கள் வெளியேறியதையடுத்து, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

5 பாடசாலைகளில் இன்னும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார். அத்துடன் மாற்று வாழ்விட வசதிகளைப் பெற்றவர்களும் தமக்குரிய அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.



இலங்கையின் வன்னியில் இருந்து ஐ.நா மன்றத்தினரை வெளியேற வேண்டாம் என கோரி மக்கள் முற்றுகை

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநா மன்றத்தின் உதவி அமைப்பினரை அங்கிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி அங்குள்ள மக்கள் அந்த அலுவலகங்களைச் சூழ்ந்திருந்து தடுத்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஐநா மன்றத்தின் சார்பில் இலங்கையில் பேசவல்ல அதிகாரியாகிய கோடன் வெய்ஸ் அவர்கள், ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம், உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அலுவலகங்களைச் சூழ்ந்து சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் அந்த பணியாளர்களை அங்கிருந்து வெளியேற முடியாதாவாறு அமைதியான முறையில் தடுத்திருக்கின்றார்கள்.

தங்களது கரிசனைகளையும் கவலைகளையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை அவர்கள் எழுத்து மூலமாக அங்குள்ள தலைமைப் பணியாளரிடம் வழங்கி அவற்றை ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அங்கிருந்து வெளியேறவே முயற்சிக்கின்றோம். எமது கணிப்பின்படி அங்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அரசாங்கம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்து அங்கிருந்து எங்களை வெளியேறிவிடுமாறு கோரியிருக்கின்றது. அங்குள்ள எமது பணியாளர்கள் அவர்களை வெளியேறாதவாறு தடுத்துள்ள பொதுமக்களிடம் தம்மை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

New Delhi Rocked by Blasts in 3 Markets; 22 Killed, 110 Injured: Dust bins: The new terror tools

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 செப்டம்பர், 2008

இந்திய தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தார்கள்.

தெற்கு டெல்லியில் புகழ்பெற்ற குதுப்மினார் அருகே உள்ள மெஹரோலி மார்க்கெட் பகுதியில் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், மார்க்கெட்டில் எலக்ட்ரானிக் கடை அருகே ஒரு பையைப் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அதை சிறுவன் ஒருவன் எடுத்தபோது, அது வெடித்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அந்தப் பகுதியில் இருந்த பலர் காயமடைந்தார்கள். அந்த வெடிகுண்டு, ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த அந்த சிறிய தெருவில், ரத்தமும், உடைந்த கண்ணாடித் துண்டுகளும், மரச்சாமான்களும் சிதறிக்கிடந்தன. குண்டுவெடித்தவுடன், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடைக்காரர்களும், அங்கு வந்த பொதுமக்கள் பலரும், காயமடைந்தவர்களை மருத்துவனைகளுக்கு்க் கொண்டு செல்ல உதவினார்கள்.

குறைந்த சக்தி கொண்டதாகக் கூறப்படும் இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்த தேசிய பாதுகாப்புப் படை வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட ஆணிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.



தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

தில்லி குண்டுவெடிப்பு
தில்லி குண்டுவெடிப்பு

இந்திய தலைநகர் தில்லியில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபடுவதற்கு காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் இந்திய முஜாகீதின் எனப்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் கைதோடு, இதுவரையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஐந்தாக உயர்ந்துள்ளது.

முன்னதாக இரண்டு தீவிரவாத சந்தேக நபர்களை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தில்லி பகுதியில் துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் பொலிஸார் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

புதுடெல்லி தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலி

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்

புதுடெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் இந்த குணடுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன.

முதலாவது குண்டுவெடிப்பு கரோல்பாக் பகுதியில் உள்ள கஃபார் மார்க்கெட் பகுதியில் மாலை சுமார் 6.15 மணிக்கு ஏற்பட்டது.. அந்த நேரத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.

அடுத்த சில நிமிடங்களில், டெல்லியின் மையப் பகுதியான கன்னாட்பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு, பிரதான மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் சென்ட்ரல் பார்க் பகுதியில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கூடியிருந்த பலர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்
குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்

அதையடுத்து, அதற்கு அருகில் உள்ள பாரகம்பா ரோட்டில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அந்த வழியாகச் சென்ற பலர் படுகாயமைடந்தார்கள்.

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷில் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் இரணடு குண்டுகள் வெடித்தன. வாகனங்களில் வைக்கப்பட்ட இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன. கரோல்பாக் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட தகவல்களை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மார்க்கெட்டிலும் குண்டுவெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்களில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

சென்ட்ரல் பார்க், ரீகல் சினிமா மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு

இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. 9 குண்டுவெடிப்புக்கள் நடக்கும் என்றும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் சில ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி.ய ஈ-மெயில் தகவலில் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Fresh protests: Protesters and police clash in Indian Kashmir: 2 killed, 130 injured – Curfew continues in Shopian, Baramulla

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி கல்லெறிந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், குறைந்தது இரண்டுபேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருவர் இறந்த பகுதியான ஷோபியான் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஸ்ரீநகர் உள்ளிட்ட, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக புதிய போராட்டங்களில் பலர் ஈடுபட்டனர்.

லத்திகளாலும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைத்தனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Olympics quickly marred by tragedy: Relative of US volleyball coach killed – Father of former Olympian killed in Beijing

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

பீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை

கொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம்

பீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.

அமெரிக்கரைக் கொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.


Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Stampede at Naina Devi Temple in Bilaspur HP: 145 Dead, 30 Injured – ‘Police cane-charged us’: Stampede survivors

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2008

இந்தியக் கோவிலில் கூட்ட நெரிசல்; குறைந்தது 140 பேர் பலி

வட இந்தியாவில் ஒரு இந்துக் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். தவிர ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு குன்றின்மேல் அமைந்துள்ள நைனா தேவி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிராவண மாத நவராத்திரி சிறப்புப் பூஜைக்காக சென்றுகொண்டிருக்கையில், பாதையின் விளிம்பி உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழ, ஜனநெரிசல் ஏற்பட்டததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இறந்தவர்களில் சுமார் நாற்பது பேர் சிறார்

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

One fatal accident every five minutes on Indian roads: Motor Vehicles Amendment Bill

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது லட்சம் பேர் மோசமாக காயமடைகின்றனர்.

இந்தச் சாலை விபத்துகளினால் சமூகமும் பொருளாதாரமும் சந்திக்கும் இழப்பு மிகப்பெரியது.

ஆனால் இப்போதுதான் இந்திய அரசு இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது

தேசிய சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்- அதிகார ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.

சாலை பாதுகாப்பு, பாதுகாப்புமிக்க சாலைகள் பாதுகாப்புமிக்க வாகனங்கள் தொடர்பான பொறுப்பு அனைத்தையும் ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சி இது.

மலேரியா, காசநோய், எய்ட்ஸ் இவை எல்லாமும் சேர்ந்து பலிகொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆதலால் இவ்விவகாரத்தை இனியாவது கண்டுகொள்வதே இந்தியாவுக்கு நல்லது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »