Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘News’

Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC

Posted by Snapjudge மேல் மார்ச் 18, 2009

நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.

ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.

சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.

இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Posted in Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Ruling party wins Zambia presidential race: VETERAN diplomat Rupiah Banda sworn in as Zambia’s president after narrow election victor

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2008


ஜம்பியாவின் அதிபராக ருப்பய்யா பண்டா

ருப்பய்யா பண்டா
ருப்பய்யா பண்டா

ஜம்பியா நாட்டின் இடைக்கால அதிபராக இருந்த ருப்பய்யா பண்டா அவர்கள் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

கடந்த வியாழன் நடந்த தேர்தலில் அவர் சிறு வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துள் இரவரது பதவியேற்பு நடந்துள்ளது.

வறுமையையும் ஊழலையம் எதிர்த்துப் போராடுவேன் என்றும் வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் மைக்கல் சத்தா அவர்கள் வாக்குகள் திரும்ப எண்ணப்பட வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்திடம் போகவிருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியான எம்.எம்.டி கட்சி இது உணர்ச்சிகள் கொந்தளிக்கக் கூடிய ஒரு காலகட்டம் என்று கூறி, ஜம்பிய மக்கள் அனைவரையும் குழம்பாமல் இருந்து தேசிய ஐக்கியத்துக்கும் அமைதிக்கும் உதவும்படி கேட்டுள்ளது.

கலவரங்கள் மூளலாம் என்ற அச்சத்தில் தலைநகர் லுசாக்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் லெவி முவனவாஸ அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து பண்டா அவர்கள் இடைக்கால அதிபராகப் பதவியேற்றிருந்தார்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

LTTE’s Parappakkadantan Stronghold Falls – June 27: Tamil Eelam, Sri Lanka, War Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008

விடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.

எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.


ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது

கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்
கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.

இன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


பரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

மன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

மன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008


வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.

விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.


புலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4

மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை
மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.

சாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008

விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.


பிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்

விமல வீரவன்ஸ
சிவநேசத்துரை சந்திரகாந்தன்





கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்

டி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.

அவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

நாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.

2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.

புலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என்பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்

இலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.

உலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.

இதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.

விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

BBC shuts down Romanian service

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

கடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.

உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Posted in Economy, Finance | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

East Sri lanka Violence: 5 Dead; Hisbolla becomes Minister; UNHRC Elections – Srilanka loses

Posted by Snapjudge மேல் மே 23, 2008

இலங்கையின் கிழக்கே வன்முறை: ஐந்து பேர் கொலை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் வியாழன் நண்பகல் இடம்பெற்ற வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 2 பேரும் 3 முஸ்லிம்களும் என 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரையம்பதி பிரதேச பொறுப்பாளர் சாந்தன் என்பவரும் அவரது உதவியாளரும் அடையாளம்தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளிலேயே குறிப்பிட்ட 3 முஸ்லிம்களும் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது மேலும் 10 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

இந்தச் சம்பவங்களையடுத்து தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையயடுத்து அந்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வியாழன் நண்பகலுக்கு பின்னர் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சவுணர்வு காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வன்முறை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹிஸ்புல்லா ஆகியோரின் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்றார் ஹிஸ்புல்லா

இலங்கையின் கிழக்கு மாகாண அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வியாழனன்று பதவியேற்றார்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹிஸ்புல்லாவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சுகாதாரம், சமூக நலம், சிறார் பராமரிப்பு, பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி முதலிய துறைகள் ஹிஸ்புல்லாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அவருடன் அவரது ஆதரவு உறுப்பினர்கள் இருவரும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.


ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் தோல்வி இலங்கைக்கு பின்னடைவல்ல: அமைச்சர் சமரசிங்க

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் (வலது பக்கம்) அமைச்சர் சமரசிங்க – பழைய படம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது துரதிருஷ்டம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனாலும் இத்தோல்வி ஒரு இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகளில் பின்னடைவை ஏற்படுத்தாது என்று இலங்கை மனித உரிமை மற்றும் அழிவுகால நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரங்சிங்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

சில முக்கியப் பிரமுகர்களும், அரசு சாரா சர்வதேச அமைப்புகளும் தங்களுடைய சொந்தக் கருத்தை முன்னிறுத்தி இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததே இத்தோல்வியின் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு பார்வையாளர் நாடாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தொடர்ந்தும் செயற்துடிப்புடன் இலங்கை பங்காற்றும் என்று அவர் அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.

அதேநேரம், மனித உரிமைப் பாதுகாப்பு விஷயத்தில் இலங்கை மென்மேலுமாக மோசமடைந்துவந்துள்ளது என்பதையே இந்தத் தேர்தல் தோல்வி காட்டுகிறது என்றும் இலங்கை அரசு இந்தச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காணவேண்டும் என்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மனோகணேசன் கூறுகிறார்.


சாதி மோதலால் மூடப்பட்ட எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறப்பு

எறையூர் மாதா தேவாலயம்
எறையூர் மாதா தேவாலயம்

தலித் மற்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மூடப்பட்ட தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் எறையூர் மாதா தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று அந்த தேவாலயத்தின் கொடியேற்ற நிகழ்வு அமைதியாக நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்த செபமாலை மாதா கோயில் வழிபாட்டில் தலித் மக்கள் பல்வேறு வகைகளில் அவமானப்படுத்தப்பப்டுகின்றனர் என்று புகார்கள் எழ, அதன் பின்னர் ஏற்பட்ட மோதல்களில் இருவர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.

அதனையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் தேவாலயமே மூடப்பட்டது.

அதனையடுத்து புதுச்சேரி மறைமாவட்ட நிர்வாகம் இருதரப்பினருடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவங்களில் அரச அதிகாரி ஒருவர் உட்பட குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரே நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெறுகின்ற இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென இராணுவ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி – அக்கராயன் வீதி 4ஆம் கட்டை பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்த வான் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்ப வைபவம் ஒன்றிற்குச் சென்றவர்களுக்கே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதி கல்விளான் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய, அம்புலன்ஸ் வண்டியொன்றில் பயணம் செய்த, மன்னார் மாவட்ட கடற்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகிய 47 வயதுடைய ஜோசப் போல் ஜுலரியன் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் சிற்றூழியராகிய வசந்தகுமாரன் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து, முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் சுண்டிக்குளம் பகுதியில் இன்று பிற்பகல் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கிறன.

இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
வடாராட்சி கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இந்தப் பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் குடியிருப்புகளே இந்தத் தாக்குதலில் சேதமடைந்தவையாகும்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Chennai: Harassed couple ends life – Loving women: Being lesbian in India

Posted by Snapjudge மேல் மே 19, 2008

சென்னையில் ஒன்றாக தீக்குளித்த இரண்டு பெண்கள்

பெண் ஓரினச் சேர்க்கையை குறிக்கும் சின்னம்

மிக நெருங்கிய உறவு கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தவிர்கக வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்த, மனம் கசந்து இருவரும் தங்களுக்கு தாங்களே தீயிட்டுக்கொண்டு மரித்திருக்கிறார்கள்.

40 வயதான ருக்மணி மற்றும் 38 வயதான கிறிஸ்டி ஜெயந்தி மலர் ஆகிய இந்த இரு பெண்களுக்கிடையே பாலுறவு இருந்ததாகவும் அதனாலேயே இருதரப்பு உறவினர்களும் கடுமையாக அவர்கள் நட்பிற்கு ஆட்சேபித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் மணமானவர்கள், அவர்களில் மலருக்கு எட்டு வயது மகன் ஒருவரும் இருக்கிறார். ஆனால் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே இருக்க முயன்றிருக்கிறார்கள். அடிககடி ருக்மணி தனது குடும்பத்தை விட்டு மலரின் வீட்டுககுச் சென்று அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதனாலேயே பிரச்சினை ஏற்பட்டதாகவும் காவல்துறையின் தெரிவிக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்கொலை என்று மட்டுமே வழக்கு பதிவாகியிருப்பதாகவும், இறந்த பெண்களை சந்திக்கக்கூடாது என்று வற்புறுத்தியதாக உறவினர்கள் மீதெல்லாம் முதல் தகவலறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்றார்.

ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்திருகின்றனர். தத்தம் குடும்பத்தினரின் ஆட்சேபணைகளை மீறி நெருக்கமாக இருந்திருக்கின்றனர் என்று மட்டும் தெரியவந்திருப்பதாகவும், அவ்விருவருககிடையே என்னமாதிரியான உறவிருந்தது என்பது எல்லாம் மேல்விசாரணையிலேயே தெரியவரும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பெண்களிடையிலான ஓரினச் சேர்க்கை தொடர்பாக பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.நாராயண ரெட்டி தமிழோசைக்கு வழங்கிய சில கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Apr 27 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates from BBC

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008

வட மாகாணத்துக்கு சிறப்புச் செயற்பாட்டுக்குழு

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கென்று புதிய சிறப்பு செயற்பாட்டுக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த பிரேரணை ஒன்றுக்கு, நேற்று புதன்கிழமை கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரைகளில் வட மாகாணத்திற்கு என்று ஒரு இடைக்கால சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைப்படி, நிறுவப்படக் கூடிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு முன்னோடியாக இந்தக் குழு அமையும் என்று இந்தக்குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல பணிகளை இந்தக்குழு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்ப்பு

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள்.

தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இந்தியா இதற்கு உதவுவது குறித்து இந்தியா மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்கள்.

விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது என்கின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


‘இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்’- பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.

இன்று இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


வட இலங்கையில் கடுமையான மோதல்

இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன
இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே மன்னார், வெலிஓயா பகுதிகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் -18 எனப்படும் முக்கிய தளம் உட்பட்ட வேப்பங்குளம், கள்ளிக்குளம் பிரதேசம் முழுமையாக இராணுவத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இப்பகுதியில் இராணுவத்தினருக்கு உதவியாக எம்.ஐ தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இதன்போது, விடுதலைப் புலிகளினால் சிறிபுர பகுதிமீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நெடுங்கேணி பகுதி மீது நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யுஎன்டிபி ஊழியர் கைத்துப்பாக்கியுடன் கைது

இதனிடையில் யுஎன்டிபி எனப்படும் ஐநாவின் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊழியர் எனக் கூறுப்படும் ஒருவர் இன்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் மைக்ரோ பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் வழியில், ஈரப்பெரியகுளம் வீதிச்சோதனையில் இவரை சோதனையிட்ட பொலிசார் இவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரை வவுனியா பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.


பிரபாகரன் திரைப்பட வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்
பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்

பிரபாகரன் திரைப்படத்துக்கான தடை குறித்த வழக்கை சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படச் சுருள்களை ஜெமினி கலர் லாப் நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று முன்னர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதுவரை படச்சுருள்களை எடுத்துச் செல்லவும் அது தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனரான துஷார பீரிஸ் பதில் மனு தக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை இன்று ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவிருந்தது. ஆனால், அதனை எதிர்த்து திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் சார்பிலான வழக்கறிஞர் ஆர்வலனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


நளினிக்கு முதிரா விடுதலை கோரி மனுத்தாக்கல்

தனது கணவர் முருகனுடன் நளினி
தனது கணவர் முருகனுடன் நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.

வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு முதிரா விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவ்வாறு நிராகரித்தமை தவறு என்று கூறியே தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


திருகோணமலை பிரச்சாரக் கூட்டத்தில் ரணில்

பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்
பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்

திருகோணமலை மாவட்டத்தில், இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தை, சம்பூரில் அல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டபடி பவுல் பொயிண்டில் அமைக்க முயற்சி எடுக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய அதிகாரிகளுடன் பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி அனல் மின்நிலையத்தை பவுல் பொயிண்டில் அமைப்போம் என்றும், சம்பூரையும் அதனை அண்டிய 23 கிராமங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த பதினேழாயிரம் மக்களையும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்வோம் என்றும் கூறினார்.

அத்தோடு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அனைத்து சமூகங்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வையே தாம் முன்வைப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்

இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளன.

தமது கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை உட்பட தமது பலவிதமான கருத்துக்களையும் அந்த பிரச்சாரங்களின் போது அந்தந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இவை குறித்து எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஏப்ரல், 2008

மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடுமாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.

மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் மழை, வெள்ளம், மண் சரிவுக்கு குறைந்தபட்சம் 7 பேர் பலி

இரத்னபுரியில் மழை வெள்ளம்

இலங்கையில் பல்வெறு பகுதிகளில் இன்று கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.

இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், அங்கு பல பகுதிகளில் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யட்டியாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்து மகாசமுத்திர பிரந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த கடுமையான மழை பெய்வதாகவும், களுகங்கைப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோரத்தில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் மீண்டும் வான்தாக்குதல்

வான் தாக்குதல்
வான் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வெலிஓயா எனப்படும் மணலாறு இராணுவ முன்னரங்க பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை விமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்ட இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள்,
ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.43 மணியளவில் விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் வெலிஓயா பகுதியில் உள்ள இராணுவ முன்னரங்குகள் மீது 3 குண்டுகளை போட்டதாகவும், அங்கு தரையில் இருந்த படையினர் அந்த விமானங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் விமானங்களை ராடர் கருவிகளும் காட்டியதையடுத்து, விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் விமானங்களைத் தடுத்து தாக்கும் தமது விமானங்களைச் செலுத்தினார்கள் என்றும், எனினும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவு பகுதியை நோக்கித் தப்பிச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை – மன்னார் ஆயர்

மடுமாதா தேவாலயம்
மடுமாதா தேவாலயம்

மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »