Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Violence’

India: Violence against Christians: No let-up in Orissa, Karnataka mob attacks: Police station torched

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 17, 2008

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை

கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.

ஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.

இந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.



இந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது

மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்
மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்

இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.

ஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.

Posted in Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

New Delhi Rocked by Blasts in 3 Markets; 22 Killed, 110 Injured: Dust bins: The new terror tools

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 செப்டம்பர், 2008

இந்திய தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தார்கள்.

தெற்கு டெல்லியில் புகழ்பெற்ற குதுப்மினார் அருகே உள்ள மெஹரோலி மார்க்கெட் பகுதியில் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், மார்க்கெட்டில் எலக்ட்ரானிக் கடை அருகே ஒரு பையைப் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அதை சிறுவன் ஒருவன் எடுத்தபோது, அது வெடித்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அந்தப் பகுதியில் இருந்த பலர் காயமடைந்தார்கள். அந்த வெடிகுண்டு, ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த அந்த சிறிய தெருவில், ரத்தமும், உடைந்த கண்ணாடித் துண்டுகளும், மரச்சாமான்களும் சிதறிக்கிடந்தன. குண்டுவெடித்தவுடன், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடைக்காரர்களும், அங்கு வந்த பொதுமக்கள் பலரும், காயமடைந்தவர்களை மருத்துவனைகளுக்கு்க் கொண்டு செல்ல உதவினார்கள்.

குறைந்த சக்தி கொண்டதாகக் கூறப்படும் இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்த தேசிய பாதுகாப்புப் படை வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட ஆணிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.



தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

தில்லி குண்டுவெடிப்பு
தில்லி குண்டுவெடிப்பு

இந்திய தலைநகர் தில்லியில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபடுவதற்கு காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் இந்திய முஜாகீதின் எனப்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் கைதோடு, இதுவரையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஐந்தாக உயர்ந்துள்ளது.

முன்னதாக இரண்டு தீவிரவாத சந்தேக நபர்களை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தில்லி பகுதியில் துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் பொலிஸார் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

புதுடெல்லி தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலி

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்

புதுடெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் இந்த குணடுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன.

முதலாவது குண்டுவெடிப்பு கரோல்பாக் பகுதியில் உள்ள கஃபார் மார்க்கெட் பகுதியில் மாலை சுமார் 6.15 மணிக்கு ஏற்பட்டது.. அந்த நேரத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.

அடுத்த சில நிமிடங்களில், டெல்லியின் மையப் பகுதியான கன்னாட்பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு, பிரதான மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் சென்ட்ரல் பார்க் பகுதியில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கூடியிருந்த பலர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்
குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்

அதையடுத்து, அதற்கு அருகில் உள்ள பாரகம்பா ரோட்டில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அந்த வழியாகச் சென்ற பலர் படுகாயமைடந்தார்கள்.

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷில் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் இரணடு குண்டுகள் வெடித்தன. வாகனங்களில் வைக்கப்பட்ட இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன. கரோல்பாக் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட தகவல்களை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மார்க்கெட்டிலும் குண்டுவெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்களில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

சென்ட்ரல் பார்க், ரீகல் சினிமா மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு

இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. 9 குண்டுவெடிப்புக்கள் நடக்கும் என்றும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் சில ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி.ய ஈ-மெயில் தகவலில் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

South Africa seeks to end anti-foreigner attacks: Anti-Immigrant Violence Continues

Posted by Snapjudge மேல் மே 19, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்கள் மீதான தாக்குதல்கள் நீடிக்கின்றன

வீதியில் கிடக்கும் சடலத்தை தூக்கும் பொலிஸ்காரர்

தென்னாப்பிரிக்காவில் குடியேறி சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் நீடித்துவருகின்ற நிலையில் அந்நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் காவல் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த இந்த வன்முறையில் இதுவரையில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

இந்தத் தாக்குதல்கள் மற்ற இடங்களுக்கும் பரவுகின்ற ஆபத்து தற்போது ஏற்பட்டிருப்பதாக தென்னாப்பிரிக்க செஞ்சிலுவைச் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறிக்கிறார்கள் என்ற எரிச்சலுணர்வினால் இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை உருவாகியிருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 மே, 2008


தென்னாப்பிரிக்காவில் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக வன்முறை

தென்னாப்பரிக்க காவல்துறையினர்
தென்னாப்பரிக்க காவல்துறையினர்

தென்னாப்பிரிக்கத் தலைநகர் ஜோஹன்னஸ்பர்கின் ஏழ்மையான பகுதிகளில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களுக்கு எதிராக அலையலையாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது நகரின் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது.

கிளீவ்லேண்ட் என்ற ஒரு புறநகர்ப் பகுதியில் நேற்றிரவு நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர் அடித்தோ அல்லது உயிருடன் எரித்தோ கொல்லப்பட்டுள்ளார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் ஜிம்பாப்வே குடியேற்றக்காரர்களை இலக்குவைத்து ஒரு வார காலமாக நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் தென்னாப்பிரிக்காவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இனவெறி காலத்தில் நடந்த வன்முறையோடு இதனை ஒப்பிட்டும் சில தலைவர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.


தென்னாபிரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான வன்செயல்கள்

பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தென்னாப்பிரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து அங்கு குடியேறியவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது வன்செயல்கள் ஜோஹனன்ஸ்பேர்க் நகருக்கு அண்மித்த பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

இதன் காரணமாக 13,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும், காவல் நிலையங்கள் மற்றும் உள்ளூராட்சி சபையின் அரங்குகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனவும் உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்த அரசாங்க அமைச்சர்கள் சரியான ஆவணங்கள் உள்ள எந்த ஒருவரும் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

எனினும் சட்டங்கள் சரியான முறையில் கடுமையாக அமல் படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் காவல்துறையினரும் அவர்களுக்கு அனுசரணையாக ஹெலிகாப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | 2 Comments »