Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘triconmalee’

Sri Lankan government continues offensive despite ceasefire offer; 15th SAARC South Asian summit kicks off in Colombo

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2008


சார்க் மாநாடு கொழும்பில் ஆரம்பம்

சார்க் சின்னம்

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்க் அமைப்பின் உச்சமாநாடு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துடன் ஞாயிறன்று தொடங்கியுள்ளது.

அதிகாரிகளின் கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடக்கும். அதன் பின்னர் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் மற்றும் முன்றாம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

சார்க் நாடுகளுக்கிடையே உணவுப் பாதுகாப்புக் கையிருப்பு, சார்க் நிதியம் ஏற்படுத்துதல் மற்றும் மின்வலு பரிமாற்றம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

மாநாட்டின் நிகழ்ச்சித் திட்டம் குறித்து கொழும்பிலிருந்து எமது செய்தியாளர் கருணாகரன் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை சிப்பாய்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குளத்தை நோக்கிச் செல்லும் வீதியை நோக்கி முன்னேறும் இராணுவத்தினர், மல்லாவிக்கு அருகில் தமது படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்விளான் பகுதியைச் சுற்றி வளைக்க முயன்ற இராணுவத்தினரை எதிர்த்து, குட்டிமூலை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 25 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளம் களமுனையில் கொல்லப்பட்டு இராணுவத்தினரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 30 சடலங்களில் 19 சடலங்கள் ஞாயிறன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

இதனிடையில் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், அக்கராயன் போன்ற பிரதேசங்களை நோக்கி நகர்ந்து பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மரநிழல்களின் கீழ் தஞ்சமடைந்திருப்பதாகவும், இவர்களுக்கான அவசர நிவாரணப் பணிகள் பெரும் சிக்கல்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலைகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கியிருப்பதனால், இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


மீன் பிடித் தடைகளை அகற்ற திருகோணமலை மீனவர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள்

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்

திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள்
பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான
தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு
உறுதியளித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri lanka: Ambarai District – Two policemen murdered

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2008

அம்பாறையில் இரு போலீசார் கொலை

அம்பாறை நகர்
அம்பாறை நகர்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப் பகுதியில் இன்று காலை இரண்டு பொலிஸ்காரர்கள், அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இவர்கள் இருவரும், கல்முனை நீதிமன்றத்துக்கு கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில், தரவை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில், மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி தாரிகளினால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீதே பொலிஸார் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், அதாவது கடந்த 40 நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பேருமாக மொத்தம் 9 பொலிஸார் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, திருகோணமலை மாவட்டம், மூதூர் மணற்சேனை என்னும் இடத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரைத் தாம் சுட்டுக்கொன்றதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின்போது, கொல்லப்பட்டவர், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்டத்துக்கான தென்பிராந்திய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான, தங்கன் என்று அழைக்கப்படும் சௌந்திரராஜன் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Opposition to Sri Lanka’s bid to UN Rights Council (UNHRC) & 15 Tamils missing after Triconmalee Elections

Posted by Snapjudge மேல் மே 21, 2008

ஐ. நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீண்டும் இடம்பிடிப்பதற்கு எதிர்ப்பு

In the Asian group, Bahrain, East Timor, Japan, Pakistan, South Korea and Sri Lanka will compete to fill four seats.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவுக்கு மீண்டும் தேர்தெடுக்கப்படுவதற்கு இலங்கை எடுத்துவரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் மக்கள் காணாமல் போவதும், ஆட்கடத்தலும் நாடு தழுவிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரும் வேண்டுகோளுக்கு, நோபல் பரிசை பெற்றவரான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பேராயர் டெஸ்மாண்ட் டூட்டூ, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜிம்மி கார்டர் மற்றும் ஆர்ஜண்டீனா நாட்டு நோபல் பரிசை வென்ற அமுடால்போ பெரேஸ் எஸ்கிவெல் ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

மிகவும் மோசமான நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் இலங்கையில் திட்டமிட்டு சீரான வகையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன என டெஸ்மாண்ட் டூட்டூ கூறுகிறார்.

ஆனால், இலங்கை மீது குற்றஞ்சாட்டும் இந்தப் பிரமுகர்கள், அதற்கு முன்னதாக இலங்கையின் தரப்புக் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் இலங்கை அரசின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க.

இருந்தபோதிலும், இலங்கை மனித உரிமைகளை மதிக்கின்ற, சர்வாதிகாரப் போக்கற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் போக்குக்கு இணங்க நடக்கும் ஒரு நாடு என்ற கருத்தே பல நாடுகளின் மத்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவில் 4 நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. அதில் இலங்கை உட்பட 6 நாடுகள் போட்டியிடுகின்றன.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


திருகோணமலையில் தேர்தலை அடுத்து 15 பேரைக் காணவில்லை

திருகோணமலையில் 15 பேரைக் காணவில்லை
திருகோணமலையில் 15 பேரைக் காணவில்லை

இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடந்ததை அடுத்த காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 15 தமிழர்கள் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 15 தமிழர்கள் திருகோணமலையில் காணாமல் போனதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் பிராந்திய இணைப்பாளரான குளோரியா பிரான்சிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் அனைவரும் 20 முதல் 30 வாயதுக்கு உட்பட்டவர்கள் என்று உறவினர்களால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், இது குறித்து தமது தலைமை அலுவலகத்துக்கும், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



TamilNet: 21.05.08 Asian rights offenders fight for UN seats: “In what is viewed as the most significant contest, six Asian nations, Japan, South Korea, Pakistan, Sri Lanka, Bahrain and East Timor, are vying for four seats in the UN Human Rights Council where the secret ballot to select the members is being held today. Only Japan and South Korea are designated as ‘free’ by the NGO Freedom House, based on the past voting record and the history of adherence to human rights principles, so the outcome of the Asian race is the one with the most potential to change the council’s overall composition, reports said.”

TamilNet: 20.05.08 Third nobel laureate opposes Sri Lanka's bid to UN Rights Council: “Following objections filed by former U.S. President Jimmy Carter, and South African Archbishop of Cape Town, Desmond Tutu, against selection of Sri Lanka to U.N.’s Human Rights Council, a third nobel peace laureate, Adolfo Pérez Esquivel, from Argentina, in a commentary published by Página 12 in Buenos Aires, ‘compared the routine torture and the hundreds of ‘disappearances’ and extrajudicial killings committed by Sri Lankan government forces to the ‘dirty wars’ waged by various Latin American governments against their own citizens in the 1970s and 1980s,’ a press release issued by the Asian Human Rights Commission (AHRC) said.”

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »