Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ram’ Category

Jeyaraj Fernandopulle to take the place of Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama as interim in-charge of External Affairs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம்

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் வெளிநாட்டமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளைய தினமே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பவிருப்பதாகத் தெரியவருகிறது.

ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானிலிருந்து திரும்பும் வரையில் தன்னை தற்காலிகமாக வெளியுறவு அமைச்சராக இருக்கச்சொல்லி ஜனாதிபதி பணித்ததால் தான் இன்று இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சரும் துணையமைச்சரும் நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் சில முக்கியப் பணிகளுக்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் தான் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும் அதன் பின்னர் கனடாவுக்கான தூதரை இன்று தான் நியமித்ததாகவும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டபோது ஜெயராஜ் ஃபெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாடு திரும்பிய பின்னர் போகல்லகம வெளியுறவு அமைச்சராகத் தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபுடன் அமைச்சர் போகல்லகம

இதேவேளை, பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அங்கு ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப், பிரதமர் மற்றும் அரச உயர்பிரதிநிதிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார்.

இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைபாட்டிற்கும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜெனரல் முஷாரஃப், இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடந்தும் தனது ஆதரவினை வழங்கிவருமென்று உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.


சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார்

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், “துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது” என்றார்.

எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.

இலங்கைத் தாக்குதலில் 18 பேர் பலி

இலங்கை மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ள எனுமிடத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற பாரிய பஸ் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 50ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனுராதபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த பஸ் வண்டி தம்புள்ளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அதில் குண்டு வெடித்தது

கொல்லப்பட்டுள்ளவர்களில் 14 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தம்புள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். சுதர்ஷன் அரம்பேகெதர அவர்கள் காயப்பட்டவர்கள் மொத்தம் 93 பேர் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார்.

பஸ்ஸினுள் வைக்கப்பட்ட இந்தக் குண்டு தூர இயக்கியால் வெடிக்க வைக்கப்பட்டது என்ற பொலிஸ் விசாரணையின் ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய மாகாணத்துக்கான உயர் போலீஸ் அதிகாரியான கிங்ஸ்லி எக்கநாயக்க அவர்கள் இந்தக் குண்டு மாத்தளையில் பஸ்சுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்புள்ளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 பிப்ரவரி, 2008

கொழும்பு இரயில் நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் தலைநகர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினுள் இடம்பெற்ற பெண் தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

கொழும்பு நகரின் இதயப்பகுதியில், மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஞாயிறு பிற்பகல் மீரிகம பிரதேசத்திலிருந்து வந்த இரயில் வண்டியொன்று மூன்றாவது மேடையில் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக்குண்டுதாரியொருவரே இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பினை நடத்தியிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவல் வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரியொருவர், இந்தக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சுமார் 100 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் சுமார் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இரயில் நிலையத்தில் தற்போது மேலதிக துருப்பினர் குவிக்கப்பட்டு, விசேட தேடுதல் மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

திங்கட்கிழமையன்று, இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாட்டின் சகல பாகங்களிலும் குறிப்பாகத் தலைநகர் கொழும்பையும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஞாயிறன்று இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணிகள் போக்குவரத்திற்கு தடை

வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்
வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன.

வவுனியாவில் இருந்து மதவாச்சி மற்றும் அனுராதபுரம் ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியாகிய ஏ9 வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக, வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்குப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் போக்குவரத்துக்கள் அனுராதரபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று காலை தம்புள்ள நகர பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்தே இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலதிக விபரங்களைக் கேட்கலாம்.


இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்: மக்கள் கருத்து

இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்
இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்

இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டு காலமாகின்றது என்றாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு உடன் எட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாக முடியும் என்று திருகோணமலைவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது உரிய கல்வித் தரத்தினை இன்னும் எட்டவில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய போர்ச் சூழலின் விளைவாக இந்த மாகாணத்தில் 32 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கிழக்கு மாகாண கல்வித் தரத்தை முன்னேற்ற முயன்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளை இயன்றவரை முன்னெடுத்துச் வருவதாகவும், பின் தங்கிய கிராமங்களிலும் இத்தகைய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றளவும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதுடன் அவர்கள் விரும்பிய தொழிலையும் மேற்கொள்ளும் நிலைதான் உண்மையான சுதந்திரம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமது ரஜீஸ் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 பிப்ரவரி, 2008

அனுராதபுரம் மாவட்டத்தில் பேருந்து மீது கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்; 13 பேர் பலி

காயமடைந்தவர்களுக்கு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வெலிஓயா பகுதியில் எத்தாவெட்டுணுவௌ என்னுமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் அரசு பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 5 இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பராக்கிரமபுரவிலிருந்து ஜானகபுர என்னுமிடத்தை நோக்கிச் சென்ற பேருந்து வண்டி மீது கொப்பேகடுவ சந்திக்கு அருகில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காயமடைந்தவர்கள் பதவியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற 3 ஆவது பெரிய குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு குற்றம்சுமத்தியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலிகளுக்கு எதிரான போரை வென்று வருகிறோம்: வைரவிழா சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரை

முப்படை தளபதிகளுடன் இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது அரசு வெற்றிபெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் நாட்டின் 60 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளின்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசாரின் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் கண்கவர் இராணுவ அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

இராணுவ அணிவகுப்பு
இராணுவ அணிவகுப்பு

இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டுக்காகப் போராடி உயிர்நீர்த்த சகலரையும் நினைவு கூறும்வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியின் பின்னர், கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபரீதியாக ஏற்றிவைத்தார்.

பின்னர் இராணுவத்தினரின் பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இலங்கை கொடிய பயங்கரவாதத்தை முறியடிப்பது மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற இருபெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது என்றும், இந்தச் சவால்களை துணிவாக எதிர்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல தானும் தனது அரசும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சுதந்திர தினம்

வவுனியாவில் நடந்த சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச செயலகங்கள், பொலிஸ் மற்றம் இராணுவ தளங்களில் தேசிய கொடியேற்றலுடன் சுதந்திர தின வைபவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தினத்தையொட்டி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா அரச செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அரச வைபவத்தில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சமூக முக்கியஸ்தர்களோ பொதுமக்களோ கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் சி.சண்முகம் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி

தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


அறுபது வருடகால சுதந்திரத்தின் பின் இலங்கை: பெட்டகம்

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் தெற்காசியாவிலேயே உயர்ந்த அளவு என்று சொல்லக்கூடிய சுமார் 90 வீதமான படித்த ஜனத்தொகையையும், பல்வேறு இயற்கைவளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கை இன்னமும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது.

இது குறித்துக் பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் எமது கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Affairs, Bhaila, Bogollagama, defence, Defense, Deputy, Eelam, Eezham, External, External Affairs, Fernandopulle, Foreign, Hussein, Hussein Bhaila, interim, Jeyaraj, LTTE, Minister, Navy, Ram, Rama, Raman, Ramar, Rohitha, Sea, Sethu, Setu, Sri lanka, Srilanka | Leave a Comment »

TR Baalu, Ram Sethu Project and Subramaniam Swamy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

டி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்

சென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.

இந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.

சேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.

பாக் ஜலசந்தி
இந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்
பாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,

“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.

சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.

Posted in Adams Bridge, Allegations, Allege, Baalu, Balu, Biz, Bribery, Bribes, Bridge, Business, Company, Corrupt, Corruption, Defamation, Defame, DMK, Economy, Environment, Finance, God, Hindu, Hinduism, Hindutva, kickbacks, Law, Lawsuit, Money, Nature, nexus, Ocean, Order, Pollution, Project, Ram, Ram Sethu, Rama, Raman, Ramar, Religion, Saami, Sami, Sea, Selvam, Selvan, Sethu, Setu, Shipping, Ships, Subramaniam, Subramaniam Swamy, Swami, Swamy, TR Baalu, TR Balu, Transportation, TRB, TRB Selvam | Leave a Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

Tamil Nadu Govt Cinema Awards Ceremony details – Karunanidhi, Rajni & Kamal speech

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

சேது திட்டத்துக்கு உரிய தீர்வு காண வேண்டும்: ரஜினி

Kalainjar karunanidhi DMK Govt Awards Functionசென்னை, அக்.17: சேதுசமுத்திர திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி உரிய தீர்வு காணவேண்டும் என ரஜினி காந்த் தெரிவித்தார்.
2005 மற்றும் 2006-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் திரைப் பட விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கி ழமை நடைபெற்றது. இவ்விழா வில் ரஜினிகாந்த் பேசியதாவது: நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அந்தப் படம் வெற்றி பெற்று ஓடினால் தான் மக்கள் மனதில் இடம்பி டிக்க முடியும். அப்படிப்பட்ட படங்களை எடுத்தவர்களையும் அவற்றில் நடித்த கலைஞர்க ளையும் கெüரவப்படுத்த அரசு எடுக்கும் விழாதான் இது.

இதில் எனக்கும் சிறந்த நடிகர் விருது வழங்கப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியோடு வந்திருக் கிறேன். “சந்திரமுகி’ படத்தில் நடித்ததற்காக எனக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Priyamani Paruthi Veeran Prize Ceremony Mu Karunanidhi 84இந்தப் படத்தில் ரஜினி என்ன பெரிதாக நடித்துவிட் டார்; ஜோதிகா, வடிவேலு தானே சிறப்பாக நடித்தார்கள் என நினைக்கலாம். “வேட்டை யன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்குத்தான் எனக்கு இந்த விருது. கிட்டத்தட்ட 26 வரு டங்களுக்குப் பிறகு இந்தக் கேரக்டரில் எப்படி நடிப்பது எனத் தீவிரமாக யோசித்து நடித்த படம் “சந்திரமுகி’ தான்.

விருது வாங்கும் அனைவருக் கும் பாராட்டுகள். குறிப்பாக “பருத்தி வீரன்’ படத்தில் நடித்த கார்த்தி, ப்ரியாமணி, ஆகியோ ரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் கார்த்தி 100, 200 படங்களில் நடித்தால் வரும் அனுபவத்தோடு நடித்திருக்கி றார். இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கிய அமீருக்கும் பாராட்டு கள். பலர் வாய்ப்புகளுக்காக தவம் கிடக்கிறார்கள். நல்ல வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும்போது அவற்றைப் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும்.

அடுத்து “பெரியார்’ படத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். “பெரியார்’ படத்தைப் பார்த்த பிறகு எனக்கு அதுவரை புரியாத பல விஷயங்கள் புரிந் தன. அந்தப் படத்தைப் பாராட்டி கடிதமும் எழுதினேன். ஆனால் அது பல்வேறு தரப்பிலும் சில விமர்சனங்களை எழுப்பியது.

“பெரியார்’ என்பவர் ஒரு “விருந்து’ போன்றவர். விருந்தில் 10 வகை யான காய்கறிகள் இருக்கும். சாப் பிடுபவர்கள் தங்களுக்குப் பிடித் ததை எடுத்துக்கொண்டு மற்ற வற்றை விட்டுவிடலாம். பெரி யார் வெறும் கடவுள் எதிர்ப்பு என்ற விஷயத்தை மட்டும் சொல் லவில்லை. தீண்டாமை, ஜாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என எத் தனையோ நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார். கடவுள் மறுப்பு என்ற விஷயம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரை அப்படியே ஒதுக்கிவிட முடி யுமா? அதை விட்டுவிட்டு அவர் சொன்ன பல நல்ல விஷயங்களை நான் எடுத்துக்கொண்டேன்.

அவர் ஒரு சீர்திருத்தவாதி.

இந்த மேடையில் இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசவேண் டும் என நினைக்கிறேன். இங்கு பேசலாமா எனத் தெரிய வில்லை. இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லிவிடுகிறேன்.

யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சமீபகால மாக சேதுசமுத்திரத் திட்டத் தைப் பற்றி பல செய்திகள் வரு கின்றன. அதில் லாபம் இருக்கி றது; நஷ்டம் இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். அது பற்றி எனக்கு சரியான உண்மை தெரியவில்லை. அது பற்றிய சில சென்சிட்டிவான விஷயங்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் அது பெரிய அளவில் தெரிய வில்லை. ஆனால் வட மாநிலங்க ளில் அது வேறு வகையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விஷ யத்தைப் புகையாக்கி நெருப்பாக் கப் பல முயற்சிகள் நடக்கின்றன.

நமக்குக் காரியம்தான் முக்கி யம். இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி வட மாநிலத் தலை வர்களுடன் கலந்துபேசி சேது சமுத்திரத் திட்டத்துக்கு விரை வில் உரிய தீர்வு காண வேண் டும் என்றார் ரஜினிகாந்த்.

விழாவில் கமல்ஹாசன் பேசிய தாவது:

முதல்வர் கருணா நிதி திரையுலகுக்கும் மக்களுக் கும் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். இந்த விழா வில் மாலை, சால்வை போன்ற வற்றுக்குப் பதிலாக புத்தகங்க ளைத் தந்திருக்கிறார்கள். அரசு விழாக்களில் இனி இது தொட ரும் என்றும் சொல்லியிருக்கி றார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நினைத்த விஷயம் இது. முதல் வர் இதை நிறைவேற்றியதற்கா கத் தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். திரையுல குக்கு இன்னும் பல விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

அதற்காகத் தற்போது பட்டியல் தரப்போவதில்லை. எங்களுக் குத் தேவையானவற்றைத் தங்க ளிடம் கேட்டுப் பெற்றுக்கொள் வோம். அந்த தைரியத்தைத் தந்த தும் தாங்கள்தான் என்ற உரிமை யில் இதைச் சொல்கிறேன் என் றார்.

விழாவில் விஜய், அஜித், விக் ரம், பிரபு, சூர்யா (ஜோதிகாவுக் காக), கார்த்தி, வடிவேலு, விவேக், ப்ரியாமணி, சந்தியா, பசுபதி, நாசர், இயக்குநர்கள் ஷங்கர், திருமுருகன், சீமான், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெய ராஜ், பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலருக்கு முதல்வர் கருணாநிதி விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனு ஹாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகம் வளர்ந்தால் வட மாநிலங்களுக்கு ஆபத்தா? ராமரை முன்னிறுத்தி சதி வேலை என்கிறார் கருணாநிதி

சென்னை : “தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்’ என முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழக அரசின் 2005, 2006ம் ஆண்டிற்கான கலைத் துறை வித்தகர் விருதுகள், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமையில் நடந்த விழாவில் 2005, 2006 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, நடிகைகள் சந்தியா, இயக்குனர் சங்கர் மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அரசியல் கருத்துக்களை, நாட்டு மக்களுக்கு, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை கலை உலகில் பலர் புகுத்தியிருக்கிறார்கள். எங்களுக்கு முன்பே எங்களுக்கு வழிகாட்டியவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் நாட்டுப்பற்றை படங்கள் மூலமாக வளர்த்தார்கள் என்ற உண்மையை மறுத்துவிட முடியாது.

இதிகாசங்கள், வரலாறு இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டும். இதிகாசம் நாமாக செய்து கொள்ளும் கற்பனை. ராஜாஜி, சக்ரவர்த்தி திருமகன் என்ற புத்தக முன்னுரையில், “ராமாயணம் ஒரு இதிகாசம். சரித்திரம் அல்ல. நான் இதிலே அடையாளம் காட்டுகிற ராமன் கடவுள் அவதாரம் அல்ல.

ராமனும் மனிதன் தான். ஒரு ராஜகுமாரன் தான். நல்லவர். நல்ல காரியங்களை செய்தவர். அவரிடம் தெய்வீக அம்சம் உண்டு என்று சொல்லப்பட்டாலும், ராமன் செய்தவைகளை கடவுளின் வேலையாக நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.பெரியாரின் கருத்துக்கள் முதலில் சந்தேகத்திற்கு உரியவையாக இருந்து, இன்று ரஜினியால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிமாறப்பட்ட பத்து பண்டங்களில் எனக்கு பிடித்த பண்டங்களை நான் சுவைக்கிறேன் என்று குறிப்பிட்டாரோ, அதைபோல, ராஜாஜி படைத்த பண்டங்களில் எங்களுக்கு பிடித்த பண்டம் “ராமன் ஒரு ராஜகுமாரன் தான். அவதார புருஷன் அல்ல’ என்பது தான்.

சேது சமுத்திர திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள தலைவர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவிற்கு வாருங்கள் என ரஜினி கூறினார். உள்ளபடியே சந்தேகம் இருந்தால் போக்கலாம். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் காலத்தில் திட்டத்திற்காக எட்டு முதல் 10 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேறும் என கணக்கிடப்பட்டு, இடையில் சில தடங்கல்கள் ஏற்பட்டு திட்டம் நின்று போனது. 1963ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது பிரதமர் நேருவை சந்தித்து திட்டம் குறித்து சொல்லி திட்டம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.

பிறகு திட்டம் நின்று போனது. 1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த போது சேது சமுத்திர திட்டம் தமிழகத்திற்கு தேவை என்பதை வலியுறுத்தி எழுச்சி நாளாக கொண்டாடினார்.அதன் பிறகு தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்ற போது சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இப்படி கேட்ட போது தெய்வீக முலாம் யாரும் பூசவில்லை.

பாம்பன் கால்வாய், தேம்ஸ் நதி போல இது ஒரு திட்டம். ஒரு வழி பாதை. வழியை பொருளாதாரத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும், தமிழகம் வளம் பெறவும், வியாபார ரீதியாக பல தொடர்புகளை உலகத்தோடு கொள்ளவும், கடல்வழி குறுகிய காலத்தில் போய்ச் சேரும் வழியாக இத்திட்டத்தை யோசித்தோம். அண்ணா முயற்சிக்கு பிறகு, நான் முதல்வராக இருந்த போது கடிதம் மூலமாக வலியுறுத்தியிருக்கிறேன்.

வாஜ்பாய் பிரதமரான போது, சென்னை கடற்கரையில் அண்ணா பிறந்தநாள் விழாவில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சொன்னார். திருநாவுக்கரசு உட்பட பா.ஜ., அமைச்சர்கள் அந்த திட்டத்தை ஏற்று கையெழுத்திட்டு, சேது சமுத்திர திட்டத்திற்கான வழிமுறைகள் செய்யப்பட்டன.

மன்மோகன்சிங் ஆட்சி வந்த பிறகு நாம் தொடர்ந்து கேட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் திட்டமாக இத்திட்டத்தை அறிவித்து முக்கால்வாசி பணி முடிந்துள்ளது.இந்நேரத்தில், ராமர் பிரச்னையை யார் முதல்முதலில் எழுப்பினார்கள் என்றால், நாம் அல்ல. ராமர் கட்டிய பாலத்தை இடிக்கிறார்கள் என்று சொல்லி இத்திட்டத்தை கெடுப்பதற்காக, சிலபேர் தமிழகத்திற்கு இத்திட்டம் வரக்கூடாது,

தமிழகம் வளர்ந்து விடும். எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ந்து விடும். தமிழகம் வளர்ந்தால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களுக்கு ஏதோ ஆபத்து ஏற்படும் என தவறாக கருதி, ராமரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ராமரிடம் எங்களுக்கு எந்தவித விரோதமும் கிடையாது. ராமரை நாங்கள் வெறுப்பவர்கள் அல்ல. எந்த அவதார புருஷர்களும் நன்மைகளை செய்திருந்தால், பாராட்டக் கூடியவர்கள் தான் நாங்கள்.

கிருஷ்ணா என்பதற்காக கிருஷ்ணா நதி நீர் வேண்டாம் என்று சொல்லி விட்டோமா? கிருஷ்ணா நதி நீர் வேண்டும் என்பதற்காக துரைமுருகனும், ஸ்டாலினும், ஆந்திராவில் உள்ள சாய்பாபாவிடம் துõது சென்று வந்தனர்.கிருஷ்ணா என பெயர் வைக்கக் கூடாது என்று கூறினோமா? ராமகிருஷ்ணா என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாலம் என்ற பெயர் இருந்திருக்குமானால், அத்திட்டத்தை அந்தப் பெயரால் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருப்பேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இமயமலை சாமியார்களிடம் துõது :

ரஜினிக்கு கருணாநிதி யோசனை :

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

சேது சமுத்திர திட்டம் நிறைவேற ரஜினி எனக்கு ஒரு யோசனை கூறினார். என்னை விட வடநாட்டில் அதிகமாக சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பும் வசதியும் படைத்தவர் ரஜினி. அவர் நினைத்தால் இமயமலை வரை சென்று சாமியார்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு உண்டு.

நீங்கள் செல்லும் போது, அவர்களிடம், “கருணாநிதி நாத்திகர் தான். கருணாநிதி ராமர் என்ற பெயரை வெறுப்பவர் அல்ல. அவரது தலைவருக்கு ராமசாமி என்று தான் பெயர்’ என்ற உண்மையை அங்குள்ள சாமியார்கள் சொல்ல வேண்டும். அந்த சாமியார்கள் திருந்தினால், நாடு திருந்தும்.

சேது சமுத்திர திட்டத்தில் மதம், ஜாதி, கடவுள் தன்மை, இதிகாசம் குறிக்கிடக் கூடாது. இதில் குறுக்கிட வேண்டியவை நல்வாழ்வு, எதிர்காலம், வரும்காலம் தான் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பொறுப்பை ரஜினி ஏற்றுக் கொள்ள வேண்டும். ரஜினிக்கு விருது வழங்கவில்லை, இந்த வேண்டுகோளை வழங்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.

————————————————————————————————-
ரஜினி நழுவவிட்ட “முதல்வர்’ வாய்ப்பு

விறுவிறுப்பான ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தியது தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா.

விழாவில் செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசும்போது, முதல்வருக்கும் திரையுலகுக்கும் சுமார் 60 ஆண்டு காலத் தொடர்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர் அரசியலிலும் ஈடுபட்டுக்கொண்டு, 73 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இது மிகப் பெரிய சாதனை. இன்னொரு விஷயம் அவருடைய வசனத்தில் நடித்த மூன்று பேர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். ஒருவர் எம்.ஜி.ஆர்., மற்றொருவர் ஜானகி எம்.ஜி.ஆர்., இன்னொருவர் யாரென்று உங்களுக்கே தெரியும்; கலைஞரின் வசனத்துக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என சூசகமாகப் பேசி உரையை முடித்தார்.

ரஜினி பேசும்போது தன்னால் கருணாநிதி வசனத்தில் நடிக்க முடியாமல் போனதே என்று ஆதங்கப்பட்டார். இதுபற்றி ரஜினி கூறும்போது… “”ஒரு சமயம் எனக்கு எஸ்.பி. முத்துராமன் மூலமாக கலைஞர் கைப்பட எழுதிய “மந்திரி குமாரி’ படத்தின் ஸ்கிரிப்டைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வசனத்தோடு ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்க வேண்டும்; நடிகர், நடிகைகளின் உடை, செட் எல்லாவற்றையும் குறிப்பிட்டு “இது என்னுடைய கருத்து; பிடித்த விஷயங்களை இயக்குநர் எடுத்துக்கொள்ளலாம்’ என்றும் எழுதியிருந்தார். அப்படி ஒரு ஸ்கிரிப்ட் கிடைத்தால் நானே டைரக்டர் ஆகி விடுவேன்.

15, 20 வருடங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர், தான் தயாரித்து இயக்கிய “இலங்கேஸ்வரன்’ என்ற படத்தில் என்னை ராவணனாக நடிக்கச் சொன்னார். படத்துக்கு கலைஞரிடம்தான் வசனம் எழுதித் தருமாறு கேட்கப்போகிறேன் என்றார். நான் ஏதோ “இது எப்படி இருக்கு? அது எப்படி இருக்கு? அதிருதுல்ல, உதிருதுல்ல…’ போல டயலாக் பேசி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். என்னால் எப்படி கலைஞரின் வசனத்தைப் பேச முடியும் என்று நினைத்து அந்தப் படத்தில் நடிக்கவில்லை. இதை ஒரு சமயம் கலைஞரிடமும் சொன்னேன்.

அதற்கு அவர் “மலைக்கள்ளன்’ பார்த்தீர்களா? அதில் வசனம் எப்படி இருந்தது? என்று கேட்டார். நானும் படம் பார்த்திருக்கிறேன். வசனம் சாதாரணமாக இருந்தது என்றேன்.

அதற்கு அவர் அதே படத்தில் சிவாஜிகணேசன் நடித்திருந்தால் வசனம் வேறு மாதிரி இருக்கும் என்றார். அப்போதுதான் அவருடைய வசனத்தில் நடிக்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என நினைத்தேன் என்றார்.

ஒருவேளை கருணாநிதியின் வசனத்தில் நடித்திருந்தால்… ரஜினியும் அரசியலில் ஈடுபட்டிருந்தால்… கருணாநிதி வசனத்தில் நடித்து முதல்வரான நாலாமவராக ஆகியிருக்கலாமோ என்பது விழாவுக்கு வந்திருந்த ரஜினி ரசிகர்களின் முணுமுணுப்பு.

Posted in Awards, Ceremony, Cinema, EVR, Films, God, Hindu, Hinduism, Hindutva, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Karuna, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Movies, Paper, Periyar, Prizes, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Ram, Ramar, Religion, Sedhu, Sethu, Speech, Talk | Leave a Comment »

Islam religion & Muslims in Tamil Nadu – Backgrounders, Explanantions, Current State: Interview

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2007

தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆரம்பம் என்ன? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?

எங்களது இயக்கத்தின் தொடக்கம் எண் பதுகளில் ஆரம்பித்தது. வரதட்சிணை, பெண் அடிமைத்தனம், புரோகிதம் போன்ற மூடநம்பிக்கைகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. திருக்குரானுக்கு எதிரான செயல்கள் இவை என்பதை நாங்கள் எடுத் துரைத்தோம். அதனால், எங்கள் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட அதுதான் காரணமாக இருந்தது.

ஜாக் என்பது அந்த அமைப்பின் பெயர் ஜமியா அஹவி குர் ரான்-உல்-ஹதீஸ் என்பது அதன் விரிவாக்கம். திருக்குர்ரான் மற்றும் நபிகள் நாயகத்தின் பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அர்த்தம். சுமார் பதினைந்து வருடங்கள் எங்களது பிரசாரம் தொடர்ந்தது. மெல்ல, மெல்ல சமுதாயத்தினர் மத்தியில் பெரிய அளவில் எங்களுக்கு வரவேற்பு அதிகரித்தது.

நமக்கு எதிராகத் தொடுக்கப்படும் கொடுமைகளையும், அடக்குமுறைகளையும் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்க ளாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்பை நியாயமாகத் தெரிவிக்க முடியாதபோதுதான், வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர் கள் இறங்குகிறார்கள்.

அதற்காக ஏற்பட்ட அமைப்புதானே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்?

ஆமாம். அதன் அமைப்பாளர் நான்தான். குணங்குடி ஹனீஃபா என்பவர் அந்தப் பெயரில், பெயரளவில் ஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அவரைத் தலைவராக அறிவித்தோம். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு விஷயங்களில் தீர் மானமாக இருந்தோம். அவை, எந்தக் காரணம் கொண்டும் தேர்த லில் போட்டியிடுவதில்லை என்பதும், எந்தவித அரசுப் பதவியும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும்தான்.

அதற்கு என்ன காரணம்?

பதவியைக் காட்டிதான் எங்களது சமுதாயம் பல வருடங்க ளாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1967-ல் “காயிதே மில்லத்’ முகம்மது இஸ்மாயில் அவர்கள் திமுகவுடனான கூட்டணியில் பெற்ற இடங்கள் 15. இப்போது ஓர் இடத்திற்குக் கூட்டணி கட்சிக ளிடம் கெஞ்ச வேண்டியிருக்கிறது. 1967-ல் திமுகவுடன் கூட் டணி அமைப்பதற்கு முன்னால் அண்ணா அளித்த வாக்குறுதி தான் எங்கள் சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு. அதனால்தான் ஒட் டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணிக்கு வாக்களித்தது.

அண்ணா இறந்துவிட்டதும் அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் தங்களது இடங்களுக்கான ஒதுக்கீட்டு டன் ஒதுங்கிக் கொண்டார்களே தவிர, சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படவில்லை. அதனால்தான் நாங் கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பதவிக்கு ஆசைப்படுவதோ கூடாது என்று தீர்மானம் போட்டோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பிளவுபட என்ன காரணம்?

முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்கிற தவறான கண்ணோட்டம் மாறவேண்டும் சமுதாய நல்லிணக்கத்துக்காக நாம் பாடுபட வேண்டும் போன்ற உறுதியான கொள்கைகளுடன் பல்வேறு மாநாடுகளையும், ஆங்காங்கே கூட்டங்களையும் ஏற்பாடு செய் தோம். அப்படி நடத்திக் காட்டியதுதான் தஞ்சையில் நடத்திய பேரணி. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் எங்களில் சிலருக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்திவிட்டது. பதவி ஆசை வந்துவிட்ட பிறகு சமுதாய நலன் புறக்கணிக்கப்பட்டு விடும் என்பது எனது கருத்து.

அவர்கள் பாதையில் செல்ல எனது மனம் ஒப்பவில்லை. அதன் விளைவுதான் இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

ஆமாம், தவ்ஹீத் ஜமாத் என்றால் என்ன அர்த்தம்?

தவ்ஹீத் என்றால் சரியான இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பது என்று அர்த்தம். நமது சீர்திருத்தப் பிரசாரம் கைவிடப்பட்டால் நமது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் நாட்டமுடைய த.மு.மு.க. நிர்வாகிகளில் சிலர் கருதி னார்கள்.

“தவ்ஹீத்’ தங்களது அரசியல் ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அவர்கள் நினைத்தது தவறு என்று நிரூபிப்பதற் காகத்தான் எங்களது இயக்கத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்று பெயரிட்டோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு உங்களு டைய முயற்சிகள் முக்கியமான காரணம் என்று கருதப்படுகி றது. இட ஒதுக்கீட்டை நீங்கள் வலியுறுத்தியதன் காரணம் என்ன?

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே, அது சரியா, அதிலென்ன நியாயம் என்று கேட்கிறார்கள். முதலாவதாக, முஸ் லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட உரிமை திருப் பித் தரப்படுவதுதானே தவிர, புதிய சலுகை அல்ல. இந்தியா சுதந் திரம் அடைந்த நேரத்தில் எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது எங்க ளுக்கு இருந்த இட ஒதுக்கீடு ஏழு சதவீதம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக் கப்பட்டிருந்தாலும் உண்மையில் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீடுதான் தனியாகப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த விஷ யத்தைப் பற்றி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எங்களை அழைத்துப் பேசினார். அப்போது மதரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் சட்டம் இடமளிக்காது என்று கருத்துத் தெரிவித் தார். இதற்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என்று எங்களிடம் கேட்டபோது, நாங்கள்தான் அந்த வழியைக் காட்டினோம்.

நீங்கள் காட்டிய மாற்று வழிதான் என்ன?

ஏற்கனவே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற எங்க ளது இஸ்லாமியப் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடில் இடம் பெற்றிருக்கிறார்கள். மொத்த பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அதன் பயன் எங்களுக்கு கிடைப்பதில்லை. புதிதாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போதுதான் பிரச்னை வருமே தவிர, ஏற்கெனவே இருக்கும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு மட்டுமாகப் பிரித்து ஒதுக்குவதில் யாரும் குற்றம்காண முடியாது என்பதைக் கனிமொழியிடம் எடுத்துரைத்தோம். இடஒதுக்கீடு கிடைத்ததற்கு எங்கள் சமுதாயம் நன்றி சொல்லவேண்டியது முதல்வர் கருணாநி திக்கு மட்டுமல்ல, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் தான்.

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவைதானா?

நிச்சயமாகத் தேவைதான். மதரீதியாக மட்டும் அதைப் பார்க் கக்கூடாது. சமுதாய நல்லிணக்க ரீதியாகவும் பார்க்க வேண்டும்.
எங்கள் சமுதாய இளைஞர்கள் பலர் படிப்பதில்லை. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு வேலையில்லை. இப்படிப் படித்த, வேலையில்லாத இளைஞர்களைத்தான் தீவிரவாத இயக்கங்கள் குறிவைத்துத் தங்களது வலையில் வீழ்த்துகின்றன. போதிய படிப் பறிவும், வேலையும், அதனால் ஏற்படும் சமூக அந்தஸ்தும் முஸ் லிம் சமுதாய இளைஞர்கள் தீவிரவாதிகளின் வலையில் விழுந்து விடாமல் தடுக்கும்.

இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை யாக இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

இது மேலைநாட்டவரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்படும் ஏமாற்று வேலை. விடுதலைப் போராளிகளை மதத் தின் பெயரால் குற்றம் சாட்டுவது எந்தவிதத்திலும் நியாய மில்லை. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், இராக்கில் அந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவரும், பாலஸ்தீனத்தில் அந்த நாட்டின் விடுதலைக்கா கப் போராடுபவரும் இஸ்லாமியராக இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யமுடியும்?

அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், பிரான் ஸிலும் அவரவர் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடக்கும்போது அமெரிக்க உள்நாட்டுப் போராளி, ரஷியப் புரட்சிக்காரர், பிரெஞ் சுப் புரட்சியாளர்கள் என்று சொன்னார்களே தவிர, கிறிஸ்துவப் புரட்சியாளர்கள் என்றா கூறினார்கள்?

அப்படியானால் இந்தத் தீவிரவாதிகளை எப்படித்தான் அழைப்பது?

அந்தந்தத் தீவிரவாத அமைப்பின் பெயரால் அழையுங்கள்.

அதற்கு ஏன் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று பெயரிட்டு அத் தனை இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சித்திரிக்கிறீர்கள்? இப்படி அழைப்பதன் மூலம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மாறுவதற்கு வழி வகுக்கப்படுகிறது. அது தவறு என்கிறோம்.

இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தி னர் மத்தியில் வரவேற்பு இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தீவிரவாத இயக் கங்களை ஆதரிப்பதே இல்லை. தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது என்பதுதான் உண்மை. இஸ்லாமியர்கள் மட் டும் அல்ல; எந்தவொரு சமுதாயமும், சமாதானமாகவும், பிரச் னைகள் இல்லாமலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புமே தவிர, இது போலத் தீவிரவாத அமைப்புகளுடன் ஒத்துழைக்கவே முன் வராது. அது மனித இயல்பு.

இதைக்கூடப் புரிந்துகொள்ளா மல், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று கூறுவது மடமை. விவரமில்லாத பேச்சு.

இந்தியாவில் காணப்படும் தீவிரவாதத்துக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நக்சலைட்டுகள், காஷ்மீர தீவிரவாத இயக்கங்கள், அசாமி லுள்ள போடோ தீவிரவாதிகள் என்று பலர் இருந்தாலும், இந்தி யாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவர்கள் என்பதை மறுப்பதற் கில்லை. இந்த விஷயத்தில் இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே நிலவும் மூடநம்பிக்கை களை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். அப்படி என்ன மூடநம்பிக் கைகள் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?

வரதட்சிணை என்கிற பழக்கமே திருக்குர்ரானுக்கு எதிரான விஷயம். ஆண்கள்தான் பெண்களுக்கு “மஹர்’ தரவேண்டுமே தவிர, ஆண்களுக்குப் பெண்கள் வரதட்சிணை தரும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. ஆனால் தற்போது இந்தப் பழக்கம் நிலவுகிறது. அதேபோல, தர்கா வழிபாடு திருக்குர்ரானில் மறுக் கப்பட்ட ஒன்று. ஆனால் பெண்கள் பலரும் தர்காவுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அது தவறு என்று கூறுகிறோம்.

புரோகிதம் என்பது இஸ்லாமியர்களுக்குக் கிடையாது. அதேபோல, ஆண்க ளைவிடப் பெண்களுக்கு அதிக உரிமைகளை இஸ்லாம் அளித்தி ருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. விவா கரத்து விஷயத்தில் ஆணுக்கு இருப்பதைவிட அதிக உரிமை பெண்களுக்குத்தான். அவர்களது உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.

பெண்களின் சுயமரியாதை பாதிக்கப்படுகிறது என்று கூறும் நீங்கள், பெண்கள் “பர்தா’ அணிவதைப் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

“பர்தா’ என்பது உடலை மறைக்கும் ஆடை. அவ்வளவுதான்.

இஸ்லாமில் முகத்தை மறைக்கவேண்டும் என்று எங்கேயும் சொல் லவில்லை. ஆனால் முகத்தையும் கை,கால்களையும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை மறைக்க வேண்டும் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான நியதி. பெண்கள் “பர்தா’தான் அணியவேண்டும் என்பதில்லை. உடலை மறைக் கும் உடைகளை அணியவேண்டும், அவ்வளவே..!

அவரவர் இஷ்டப்படி உடையணியும் உரிமை ஏன் பெண்க ளுக்கு மறுக்கப்படுகிறது?

ஆண்கள் தொப்புளைக் காட்டியபடி உடையணிவதில் எந்தவி தக் கவர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் அப்படி உடையணிவதில்லையே? பெண்கள் தங்களது உடலழகை உலகுக்குக் காட்டியபடி பலரது உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடைய ணிவது, கலாசாரமற்றவர்கள் செய்கை. இதை நாகரிகம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ஆண்கள் உடலை மறைத்து உடை அணிவது போலப் பெண்களும் உடையணிவதில் தவறு காண் பவர்கள், வக்கிரபுத்தி உடையவர்கள். பெண்களின் உரிமை என்பது உடையணிவதில் அல்ல. அவர்களது நியாயமான அந் தஸ்தையும், மரியாதையையும் பெறுவதில்தான் இருக்கிறது.

தங்களது உடைப் பழக்கத்தாலும், பேச்சு வழக்காலும் இஸ்லாமியர்கள் மற்ற சமுதாயத்தினரிலிருந்து வேறுபடுகிறார் கள் என்கிற கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை, உடைப் பழக்கம் மாறுபடுகிறது என்பது சரி, ஆனால் பேச்சு வழக்கு மாறுபட்டிருக் கிறது என்பது தவறு. உடைப் பழக்கம் என்றால், ஒவ்வொரு சமு தாயத்துக்கும் அவரவர் உடைப் பழக்கங்கள் இருக்கின்றன.
அதில் நாம் தவறு காண முடியாது. தமிழகத்தில் உள்ள பெருவாரி யான முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்கள்தான். வெறும் ஐந்து சதவி கித முஸ்லிம்கள்தான் உருது பேசுபவர்கள்.

சினிமாவில் முஸ்லிம் கள் என்றாலே “நம்பள்கி, நிம்பள்கி’ என்று பேசுவது போலக் காட்டி தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற ஒரு தவ றான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். எங்கள் சமுதா யத்தினர் மத்தியில் இருக்கும் தமிழார்வம் எத்தகையது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

கிறிஸ்துவர்கள் மாதா கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தும்போது, இன்றும் பள்ளிவாசலில் அரபிதான் ஒலிக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “ஜனகணமன’ என்கிற தேசிய கீதத்தை நாம் ஏன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்? அந்த தேசிய கீதம் வங்காளத்தில் இருக்கிறது என்பதால் நாம் தமிழனாகவோ, இந்தியனாகவோ இல்லாமல் போய்விடுகிறோமா? கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். பிரார்த்தனைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி செய்து கொள்ளலாம். பல்வேறு இனத்தவரையும், நாடுகளையும் கடந்தது மதமும் இறையும். அதை ஒருங்கிணைக்க, மத ஒற்றுமையை நிலைநாட்ட ஒரு மொழியை தொழுகை மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அது அரபி, அவ்வளவே. பள்ளிவாசலில் அரபியில் ஓதுவதால், நாங்கள் தமிழரல்ல என்று சொல்வது அபத்தமான வாதம்.

அயோத்தி பிரச்னையில் உங்களது அமைப்பின் நிலைப்பாடு என்ன?

இப்படி ஒரு பிரச்னையைத் தீர்வே இல்லாமல் இழுத்துக் கொண்டு போவது இந்தியாவின் ஒற்றுமைக்கும், நமது வருங்காலத்துக்கும் நல்லதல்ல. அப்படியொரு சூழ்நிலையை அரசும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி அதில் ஆதாயம் தேட முயலுகிறார்கள் என்பது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நன்றாகவே தெரியும். இதற்காக இரண்டு தரப்பினருக்கும் ஏற்புடைய நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்து, விரைவாகத் தீர்ப்பளிப்பதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். அந்தத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதுதான் முறை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

ராமர் பாலப் பிரச்னை பற்றி…?

இந்தப் பிரச்னைக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் சம்பந்தமே கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். எங்களை ஏன் அநாவசியமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்?

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் வரும்போது மட்டும் கலவரங்கள் ஏற்படுகின்றனவே, அது ஏன்?

எங்களைக் கேட்டால் எப்படி? கேட்க வேண்டியவர்களிடம் கேளுங்கள். எல்லா ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அங்கெல்லாம் கலவரம் நடக்கிறதா? மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று, இரண்டு பள்ளிவாசல்களைக் கடந்துதான் அந்தச் சப்பரம் செல்கிறது. எப்போதாவது ஏதாவது கலவரம் நடந்ததுண்டா? காரணம். அவை பக்தர்களால் நடத்தப்படுபவை. ஆனால், விநாயகர் ஊர்வலங்கள் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுபவை. மதமும் அரசியலும் ஓர் ஆபத்தான கலவை. அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியாக மாறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மை சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது- இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

முஸ்லிம்கள் பலதார மணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்தியப் புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்க வேண்டும், தரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.

இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். சின்ன விஷயத்தைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களுடைய பதில் என்ன?

எங்களுக்கு இழைக்கப்படும் பல அவமானங்களை நாங்கள் வெளியில் சொல்வதில்லை. தாங்கிக் கொள்கிறோம். மனதிற்குள் புழுங்குகிறோம். நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான். எங்களை இந்தியர்களாகப் பார்க்காமல், இஸ்லாமியர்களாக, பாகிஸ்தானின் கைக்கூலிகளாக சிலர் சித்திரிக்க முற்படும்போது நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்திய

முஸ்லிமுக்கு இருக்குமளவு சகிப்புத் தன்மை உலகில் வேறு யாருக்குமே கிடையாது என்று சொல்ல வேண்டும். அதையும் மீறி நாங்கள் இந்தத் தேசத்தை, இந்த மண்ணை நேசிக்கிறோம். ஏன் தெரியுமா? தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்தியர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். இன்னும் சகிப்போமே தவிர எங்கள் இந்தியத் தனத்தை இழக்க மாட்டோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – இது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் அமைப்பு. கும்பகோணத்தில் இந்த அமைப்பு நடத்திய பேரணியும் ஊர்வலமும், சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய முஸ்லிம் பேரணிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜைனுல் ஆபிதீனை ஒரு மதச்சார்பு இயக்கவாதி என்பதைவிட ஒரு சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர் என்பது ஒரு
புறம் இருக்க, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதில் முனைப்பாக இருப்பவர் என்பதுதான் இவருடைய தனித்தன்மை.
சொல்லப் போனால் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தவ்ஹீத் ஜமாத்தின் சிறை நிரப்புப் போராட்டத்தின் எதிரொலிதான் என்று கருத இடமுண்டு. இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய
சமுதாயம் பற்றியும் என்ன கேள்வியைக் கேட்டாலும் அதற்குக் கோபப்படாமல் பதில் சொல்லும் இவரது லாவகம், பிரமிக்க வைக்கிறது. ஒரு சமுதாயத்தை நேர் வழியில் நடத்திச் செல்லும் திறமையும் தகுதியும் படைத்தவர் என்று மாற்று
மதத்தினரும் மதிக்கும் தலைவராக இருக்கும் ஜைனுல் ஆபிதீனின் இன்னொரு சிறப்பு – பதவி அரசியலில் இவருக்கு இல்லாத நாட்டம்.
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்புப் பேட்டி~

Posted in Abhidheen, Abhitheen, Abhithin, Abidheen, Abitheen, Abithin, Ayodhya, Ayodya, Ayothya, Blasts, Caste, Child, Christ, Christianity, Christians, Cinema, Community, Democracy, Dhouheed, DMK, Eid, Explanantions, explosion, Extremism, Extremist, Extremists, Films, Ganesh, Ganesha, Id, Interview, Islam, Jainul, Jamadh, Jamat, Jamath, Jesus, Jihad, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kids, Kuran, Language, Mosque, mosques, Movies, Muslims, NGO, Outbursts, Pillaiyaar, Pillaiyar, Population, Purda, Purdah, Purtha, Purthah, Quran, Ram, Ramadan, Ramar, Ramazan, Ramdan, Ramzan, Religion, Sensitive, Sethu, SIMI, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Teerorism, Terrorism, terrorist, Terrorists, Thouheed, TMMK, TN, TNTJ, Touheed, Touheed Jamat, Urdu, Vinayak, Violence, Wakf | Leave a Comment »

Happy Navarathri: Dussehra Celebrations – Golu Special

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

Madhurai Meenakshi Golu Hinduism Navarathri Utsavar Decoration Raja Rajeswari
மங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
சென்னை, அக்.11-

“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

புண்ணியம் தரும் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.

நவராத்திரி

புரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.

சக்தி வழிபாடு

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.

இதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மைசூர் தசரா

வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுவாசினி, கன்யா பூஜை

நவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.

இதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.

எத்தனை படிக்கட்டுகள்

நவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.

இன்று கொலு வைக்க சிறந்த நாள்

இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.

கொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.

என்னென்ன பிரசாதம்?

நவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.

ஆயுத பூஜை

நவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விஜயதசமி

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.

விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.

இவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.

———————————————————————————————————————————

நவராத்திரி இரண்டாம் நாள்
வாராஹி :

விஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.

நைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்

———————————————————————————————————————————

நவராத்திரி மூன்றாம் நாள்

இந்திராணி :

பராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.

இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.

நைவேத்யம் : வெண்பொங்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்
———————————————————————————————————————————
———————————————————————————————————————————

Posted in Celebrations, Ceremony, Culture, Dolls, Durga, Dussehra, Dussera, Festival, Functions, Golu, greetings, Guide, Hindu, Hinduism, India, Lakshmi, Laxmi, Legends, Mahalakshmi, Mahalaxmi, Myth, Naragasura, Naragasuran, Narakasura, Narakasuran, Navarathri, Navaratri, Navrathri, Navratri, Pig, Pooja, Puja, Ram, Rama, Ramlila, Ravana, Ravanan, Religion, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Sita, Sitha, Steps, Story, Tamil Nadu, TamilNadu, Tips, TN, Varaahi, Varahi, Vijayadasami, Vijayadashami, Vijayadhasami, Vijayadhashami, Vijayathasami, Vijayathashami, Winter | Leave a Comment »

Shalle we name the Vice President of India? – AB Bardhan, general-secretary CPI

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு

சந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

புது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.

என்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,

  • இடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,
  • மேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.

“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.

பார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.

இடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.

—————————————————————————————————-

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்

புதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.

வேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.

காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.

பரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Posted in AB Bardhan, AB Bharadhan, Abdul Haleem, ADMK, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Andhra, AP, Barathan, Bardan, Bardhan, Barthan, Benegal, Bengal, Bharadhan, Chatterjee, Chatterji, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI(M), DMK, Elections, Forward Bloc, Forward Block, Gandhi, Gandi, Gopal, Gopal Gandhi, Hindu, Irfan Habib, Islam, Jamia Millia, JJ, Jothibasu, KK, Left, Lok Saba, LokSaba, LokSabha, Mahatma, Manmohan, Marx, Marxists, Mohammad Salim, Mushirul Hasan, Muslim, N Ram, Naidu, Nandhigram, Nandigram, National Democratic Alliance, Nayudu, NDA, parliament, Polls, Pradhiba, Pradhibha, Prathiba, Prathibha, Pratiba, Pratibha, President, Professor, Rajeev, Rajiv, Rajiv Gandhi, Rajmogan, Rajmohan, Rajmohan Gandhi, Ram, Revolutionary Socialist Party, RSP, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shyam Benegal, Somnath, Somnath Chaterjee, Sonia, Speaker, TDP, The Hindu, United Progressive Alliance, University, UPA, UPA-Left, VC, Vice-chancellor, vice-president, VP, WB, West Bengal, WestBengal | 1 Comment »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »