Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tamil songs’ Category

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha

Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007

ஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை 

1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.

கண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.

இதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.

கே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.

இந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.

ஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.

ஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.

ஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.

பெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.

பெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே!

இந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

சினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.

“நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?”

நானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.

சினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.

ஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.

சினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு!

சினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

என்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.

இத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.

சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.

Posted in Actress, Actresses, Backgrounder, Cinema, Films, Glamor, Heroines, Movies, Pornography, Sex, Snega, SNEHA, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, TamilNadu, Taminadu | 26 Comments »

The woes of a Tamil Cinema Producer – GV Films shoots off balance sheets

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

யாரைத்தான் நம்புவதோ?

ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.

கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.

“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!

அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.

ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.

பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »

Vijay’s ‘Azhagiya Thirumagan’ stops production due to Plagiarism issues

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை

சென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.

“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.

நீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.

Posted in Alagiya Thirumagan, Alagiya Thirumakan, Azagiya Thirumagan, Azagiya Thirumakan, Azhagiya Thirumagan, Azhagiya Thirumakan, Jeeva, Plagiarism, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Vijai, Vijay | 1 Comment »

Thamil Cinema Association not to support Tamil Actresses: Why?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!

சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.

உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.

முன்னணி நடிகைகளான

  • ஸ்ரேயா,
  • ஜெனீலியா,
  • ஜோதிர்மயி,
  • தமன்னா,
  • நவ்யா நாயர்,
  • சிந்துதுலானி,
  • நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:

அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.

இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.

Posted in Actress, Association, Compensation, Dues, Geneelia, Genelia, Geneliya, Issues, Jeevan, Jeneelia, Jenelia, Jeneliya, Jodhirmayee, Jodhirmayi, Jothirmayee, Jothirmayi, Member, Navya, Navya Nayar, Raama Narayan, Raama Narayanan, Rama Narayan, Rama Narayanan, Salary, Shreya, Shriya, Sindhu Dholani, Sindhu Dolani, Sreya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamanna, Union | Leave a Comment »

Trisha Fan clubs step towards Politics?

Posted by Snapjudge மேல் மே 3, 2007

புதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா

சென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.

இதுகுறித்த விவரம்:

கடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

வரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

விழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.

Posted in Actress, Fan, Fan Club, Fans, Heroine, Kisukisu, Kollywood, Politics, Rumor, Rumour, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theatres, Telugu, Tollywood, Trisha, Vambu | 1 Comment »

Periyar Movie Celebrations – Processions, Theater Specials

Posted by Snapjudge மேல் மே 2, 2007

சாரட் வண்டியில் “பெரியார்’ ஊர்வலம்

ஈரோடு, மே 2: ஈரோட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் “பெரியார்’, “ராவணன்’ வேடமணிந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரியார் திரைப்படம் மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். பெரியார் திரைப்படம் வெளியானதையொட்டி தி.க.வினர் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை கொல்லம்பாளையத்தில் இருந்து தேவி அபிராமி திரையரங்குக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் திராவிடர் கழக ஈரோடு நகரச் செயலர் தியாகு பெரியார் வேடமணிந்தும், இளைஞர் அணி அமைப்பாளர் ராசு ராவணன் வேடமணிந்தும் சென்றனர்.

ஊர்வலம் கொல்லம்பாளையம், காளைமாட்டுச் சிலை, மணிக்கூண்டு, பஸ்நிலையம் வழியாக திரையரங்கை அடைந்தது. பெரியார், ராவணன் வேடமணிந்தவர்கள் சாரட் வண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். திரையரங்கில் பெரியார், ராவணன் வேடமணிந்தவரை தி.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Posted in Celebrations, Cinema, Fan, Fan Clubs, Kushboo, Kushbu, Manram, Movie, Periyar, Rasigar, Rasikar, Ravanan, Sathyaraj, Satyaraj, Tamil Cinema, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Theater, Theatre | 1 Comment »

Balu Mahendra to start new Film Institute in Chennai for aspiring Tamil Cinema entrants

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

Posted in Admissions, Balu mahendra, Camera, Chennai, Cinema College, College, Courses, Degree, Degrees, dialogues, Diploma, Direction, Director, Editing, Gopali, Graduate, Institute, Madras, Photography, Post graduate, Screenplay, Story writing, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Technicians, Technology, Thamizh Movies, Thamizh padam, TV, University | Leave a Comment »

Thirumagan – Malavika, SJ Surya

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

பாடலோடு வாழ்ந்து….

“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…

“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.

கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக

  • “பொறந்தது’,
  • “இதுக்குத்தானா’,
  • “ஷாக்கடிக்குது’,
  • “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.

Posted in Deva, Kushi, Malaviga, Malavika, Rathnakumar, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumagan, Thirumakan, Vaali, Vairamuthu, Vali | Leave a Comment »

Movie Producer ALS Kannappan passes away

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

படஅதிபர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் மரணம்

சென்னை, ஜன.17-

பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

கனவுகள், கற்பனைகள், துணிச்சல், இயக்கம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

  • சாரதா,
  • திருடாதே,
  • கந்தன் கருணை,
  • கருப்பு பணம் உள்ளிட்ட பல படங்களை ஏ.எல்.எஸ்.நிறுவனம் தயாரித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த ஏ.எல்.எஸ்.கண்ணப்பனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், லாவண்யா, டாக்டர் யாமினி, ஐஸ்வர்யா என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராயப் பேட்டையில் உள்ள வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் தகனம் நாளை நடக்கிறது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Posted in ALS Kannappan, Kandhan Karunai, Karuppu Panam, Movie Producer, Saradha, Tamil Cinema, Tamil Film, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres | Leave a Comment »

Dhanush claims Simbu is his friend – Jeeva’s new film Pori launch

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

சிம்பு என் மச்சான்  தனுஷ் 

சிம்புவுக்கும், எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் மாமா, மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சிம்புவும், தனுஷûம் பள்ளிக் கூட தோழர்கள். ஆனால் நடிக்க வந்த பிறகு இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. தனுஷை கிண்டலடித்து தனது படங்களில் சிம்பு வசனம் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சிம்பு எதிரே வர, மறுபக்கம் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் (இவரும் சிம்புவின் தோஸ்து தான், ஒருகாலத்தில்!) வர ஹலோ சொல்லிக் கொள்வார்கள் என எல்லோரும் எதிர்பார்க்க கண்டு கொள்ளாமல் விருட்டென்று ஐஸுடன் பறந்து விட்டார் தனுஷ்.

இப்படி அனலும், உலையுமாக இருவரும் இருந்து வரும் நிலையில் திடீரென சிம்புவை தூக்கி வைத்துப் பேசியுள்ளார் தனுஷ். ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள பொறி படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ்,

இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.

எங்களைப் பற்றி வெளியில்தான் வேறு மாதிரியாக பேசுகிறார்கள். எங்களுக்குள் மோதல் என்ற இமேஜ் இருக்கிறது. ஆனால் உண்மையில், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். மாமன், மச்சான் என்றுதான் பேசிக் கொள்வோம் (மாமா யாரு, மச்சான் யாரு??). சத்தியமா நம்புங்க, சிம்பு என் நண்பன்தான்.

இதை நான் தனியாக சொன்னால் நன்றாக இருக்காது. நான் சின்னப் பையன் மாதிரி இருப்பது தான் என் பலமும் பலவீனமும்.

திருடா திருடி மூலம் என்னைத் தூக்கி விட்டவர் சுப்ரமணியம் சிவா. மன்மத ராசாவை மறக்க முடியுமா? அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொறியும் சிறப்பாக அமையும். இப்படத்தில் தீப்பொறி உள்ளது. நிச்சயம் ஜீவா சாதிப்பார். படமும் வெற்றி பெறும் என்றார் தனுஷ்.

நண்பன் ‘துயரத்தில்’ இருக்கும்போது கை கொடுப்பவன், ஆறுதல் சொல்பவன்தான் உண்மையான நண்பன் என்பார்கள். ‘லிட்டில்’ சிம்பு இப்போது ‘கஷ்டத்தில்’ இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போல பேசியுள்ளார் தனுஷ்.

இதுவல்லோ நட்பு!

Posted in Aishwarya Rajnikanth, Aiswarya Rajiniganth, Asiwarya Rajinikanth, Audio, CD Release, Dhanush, Jeeva, Little Superstar, Manmadhan, Manmatha Raasa, Pori, Sathyam Cinemas, Sify.com, Silambarasan, Simbu, Simbu vs Dhanush, Subramania Siva, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Thatstamil.com, Thiruda Thirudi, Thiruvilayadal Aarambham, Tiruvilayadal Arambham, Vallavan | 1 Comment »

Asin gets hurt in Vijay’s Pokkiri song picturization by Prabhu Deva

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006

படப்பிடிப்பில் அஸின் காயம்

சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.

நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.

பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.

உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Posted in Accident, Asin, Blood, Dance Master, Heroine, Ilaiya Thalapathi, Ilaiya Thalapathy, Pokkiri, Prabhudeva, Remake, Rest, Shoes, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil songs, Telugu Cinema, Tollywood, Vijay | 4 Comments »

Naa Muthukumar gets Honorary Doctorate

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

நா.முத்துகுமாருக்கு முனைவர் பட்டம்

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு சென்னை பல்கலைக் கழகம் அண்மையில் முனைவர் பட்டம் வழங்கியது. அதற்கான சான்றிதழை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்குகிறார். உடன் (இடமிருந்து) அமைச்சர் பொன்முடி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன்.

Posted in Chennai University, Doctor, Madras University, Na Muthukumar, Naa Muthukumar, P Chidambaram, Ponmudi, Ramachandiran, Surjeet Singh barnala, Tamil songs, Vice-chancellor | Leave a Comment »

Aavani Thingal – Item Number gets axed & Receives a ‘U’

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

ஆபாசபாடலுக்கு தடை; `ஆவணித்திங்கள்’ படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

புதுமுக நடிகர் ஸ்ரீகுமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆவணித் திங்கள். இதில் தேஜினி, மதுஷா என இரு கதா நாயகிகள். ஹரிகிருஷ்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப் படத்தை இயக்கி யுள்ளார்.

இந்த படத்துக்கான படப் பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை வருகிற 17-ந்தேதி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ராஜாராம்ரெட்டி முடிவு செய்தார். இதையடுத்து ஆவ ணித்திங்கள் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு பாடல் காட்சி மிகவும் ஆபாசமாக இடம் பெற்று இருந்தது.

திண்டுக்கல்லு பூட்டு திருப்பி போட்டு மாட்டு என்ற அந்த பாடலுக்கு லக்ஷா கவர்ச்சியாக நடனம் ஆட இருந்தார். பாடல் வரிகளும் நடனமும் ஆபாசமாக இருப்பதாக தணிக்கை குழுவினர் எதிர்த்தனர். பாடல் காட்சியை நீக்கும்படி வற்புறுத்தினர். அதற்கு டைரக்டரும்,தயாரிப்பாள ரும் சம்மதிக்கவில்லை. இதை யடுத்து வாக்குவாதம் ஏற்பட் டது. இறுதியாக பாடல்காட்சி முழுவதுமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அதன்பிறகு படத்துக்கு `யு’ சான்றிதழ் கொடுத்து வெளி யிட அனுமதித்தனர்.

Posted in Aavani Thingal, Censor, Certificate, Dance, Glamor, Harikrishna, Kollywood, Laksha, Madhusha, Obscene, Rajaram Reddy, Srikumar, Tamil Film, Tamil Movie, Tamil songs, Thejini | Leave a Comment »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »