Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘VC’ Category

Shalle we name the Vice President of India? – AB Bardhan, general-secretary CPI

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2007

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளராவதற்கு பரதனுக்கு நல்ல வாய்ப்பு

சந்தோஷ்பக்கங்கள்: 203. பரதன் இந்த பொழப்புக்கு நல்லா வாயில வருது

புது தில்லி, ஜூலை 11: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் தரப்பில் யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதனாக இருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய அணி இடதுசாரிகள்தான். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளன.

என்றாலும் அதிகாரபூர்வமாக எதையும் அவை வெளிப்படுத்தவில்லை. ஏ.பி.பரதனை தவிர,

  • இடதுசாரி சித்தாந்தத்தில் நன்கு ஊறிய இர்பான் ஹபீப்,
  • மேற்கு வங்க சட்டப் பேரவைத் தலைவர் ஹஷீம் அப்துல் ஹலீம் ஆகியோரும் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்புடையவர்கள்.

“குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பிரதிபா பாட்டீலுக்கு நாங்கள் ஆதரவு தருவதால் அதற்கு ஈடாக குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதை எங்களிடம் விட்டு விடுங்கள்’ என இடதுசாரிகள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்து விட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகம்மது சலீம் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை நாங்கள் விவாதிக்கவில்லை. ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பிறகே இந்த பிரச்னை பற்றி முழுமையாக விவாதிக்கப்படும். குடியரசுத் துணைத் தலைவர் பதவி வேட்பாளராக பரதன் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம் அந்த கூட்டத்தில்தான் விவாதிக்கப்படும் என்றார்.

பார்வர்டு பிளாக் பொதுச்செயலர் தேவவிரத பிஸ்வாஸ் கூறியதாவது: பரதனை நிறுத்துவது என்பது நல்ல யோசனைதான். எனினும் பரதனுக்கு பதிலாக வேறு யாரையாவது வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்துமா என்பதையும் யோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விஷயத்தில் தற்போதைக்கு பட்டென கருத்து கூறுவதை தவிர்க்க விரும்புகிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் தனது நிலையை அது எடுத்துவிடும்.

இடதுசாரி சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த தலைவர் ஒருவரையே குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது ஒரு சாராரின் யோசனை. ஆனால். அரசியல் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளில் அத்துப்படியானவரை வேட்பாளராக நிறுத்தலாம். மாநிலங்களவையையும் தலைமை ஏற்று நடத்தவேண்டியவர் குடியரசுத் துணைத்தலைவர் என்பதால் இது அவசியம் என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இந்த தகுதிகளை கருத்தில் கொண்டால், பரதன் பொருத்தமானவராக உள்ளார் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.

—————————————————————————————————-

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணிக்கும் ஏற்புடைய வேட்பாளர்: ஏ.பி.பரதன் தகவல்

புதுதில்லி, ஜூலை 16: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏற்புடைய வேட்பாளரை இடதுசாரிகள் நிறுத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசியக் குழு கூட்டம் முடிவடைந்ததை ஒட்டி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தன்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார் பரதன்.

வேட்பாளராக என்னை அறிவிக்கவும் மாட்டார்கள்; இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஏற்புடையதாகவும் இராது என்பது எனக்குத் தெரியும்.

என்னுடைய பெயரை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி. இதுபோன்ற விஷயங்களுக்காக கட்சியின் பொதுச் செயலாளரை முன்னிறுத்துவதை கட்சி அனுமதிக்காது. அடுத்த ஆண்டு மார்ச்சில் ஹைதராபாதில் கட்சி காங்கிரûஸ கூட்ட வேண்டிய உள்ளது. அதுவரை பொதுச் செயலராக ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்றார் அவர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பரதன், வியாழக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக 4 இடதுசாரிக் கட்சிகளும் கூடி முடிவெடுக்க உள்ளன என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தரும் ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றால் மட்டும் தங்களது ஆதரவு கிடைக்கும் என மூன்றாவது அணி கூறியுள்ளது. அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனான உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது. மேலும் அது ஜெயலலிதாவின் அறிக்கைதானே ஒழிய, மூன்றாவது அணியின் ஒட்டுமொத்தக் கருத்து அல்ல.

காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவரை நிறுத்த இடதுசாரிக் கட்சிகள் முயற்சி செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படுத்தவும் முயற்சி செய்வோம். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியையும் இதற்கு ஆதரவாக மாற்ற முடிந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறியுள்ளார் பரதன்.

பரதனை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சனிக்கிழமை கூறியிருந்தது. இந்தக் கருத்துக்கு முரண்படும் வகையில் பரதன் ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக வருபவர் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அவர் வரலாற்றாளராக, கல்வியாளராக அல்லது பொருளாதார அறிஞராகக் கூட இருக்கலாம் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிராகாஷ் காரத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Posted in AB Bardhan, AB Bharadhan, Abdul Haleem, ADMK, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Andhra, AP, Barathan, Bardan, Bardhan, Barthan, Benegal, Bengal, Bharadhan, Chatterjee, Chatterji, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI(M), DMK, Elections, Forward Bloc, Forward Block, Gandhi, Gandi, Gopal, Gopal Gandhi, Hindu, Irfan Habib, Islam, Jamia Millia, JJ, Jothibasu, KK, Left, Lok Saba, LokSaba, LokSabha, Mahatma, Manmohan, Marx, Marxists, Mohammad Salim, Mushirul Hasan, Muslim, N Ram, Naidu, Nandhigram, Nandigram, National Democratic Alliance, Nayudu, NDA, parliament, Polls, Pradhiba, Pradhibha, Prathiba, Prathibha, Pratiba, Pratibha, President, Professor, Rajeev, Rajiv, Rajiv Gandhi, Rajmogan, Rajmohan, Rajmohan Gandhi, Ram, Revolutionary Socialist Party, RSP, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shyam Benegal, Somnath, Somnath Chaterjee, Sonia, Speaker, TDP, The Hindu, United Progressive Alliance, University, UPA, UPA-Left, VC, Vice-chancellor, vice-president, VP, WB, West Bengal, WestBengal | 1 Comment »

Bharati Dasan University VC resigns

Posted by Snapjudge மேல் மே 18, 2007

திருச்சி பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் திடீர் ராஜிநாமா

திருச்சி, மே 18: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. தங்கமுத்து, புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.

இவருடைய பதவிக்காலம் முடிய இன்னும் 22 நாள்களே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

தனது ராஜிநாமா கடிதத்தை புதன்கிழமை இரவு ஆளுநருக்கு “பேக்ஸ்’ மூலம் அனுப்பி வைத்திருக்கிறார் தங்கமுத்து.

மேலும், ஒரு கடித உறையையும் அலுவல்பூர்வமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட செல்போனையும் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள துணைவேந்தர் இல்லத்தைக் காலி செய்துவிட்டுச் சென்னைக்குச் சென்றுவிட்டார்.

இந்தக் கடித உறையைத் தந்தவரிடம் வியாழக்கிழமை காலை பிரித்துப் பார்க்கும்படி அவர் தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

“என்னுடைய பணிக்காலத்தில் மிகச் சிறப்பாகப் பணி செய்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன் அனைவரையும் பிரிந்து செல்கிறேன்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே பல்கலைக்கழகப் பொருளியல் துறையில் பணியாற்றியவரான தங்கமுத்து, இந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் இருந்துள்ளார்.

மிகவும் நேர்மையானவர். இவருடைய பணிக்காலத்தில் குறிப்பிடும்படியான எந்தக் குற்றச்சாட்டும் கூறப்பட்டதில்லை.

பல்கலைப் படிப்புகளிலும் பல்வேறு சீரமைப்புகளைக் கொண்டுவரக் காரணமாக இருந்த இவர், “கிரெடிட் சிஸ்டம்’, ஒரே நேரத்தில் இரு பட்டங்கள் பெறும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

பல்கலையில் 5 ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த பெரியார் உயராய்வு மையத்தை மீண்டும் செயல்படச் செய்தார்.

பல்கலைக்கழகத்திலுள்ள ஆசிரியர், ஊழியர் சங்கங்களுடன் சுமுக உறவைப் பராமரித்துவந்தார்.

ஜூன் 8 ஆம் தேதியுடன் இவரின் பதவிக்காலம் முடிவடையவிருந்தது. அதற்குள் துணைவேந்தர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழா அழைப்பிதழில் துணைவேந்தர் பெயரும் இடம்பெறவில்லை.

இதனிடையே, இவ்விழாவுக்கு வந்த மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் தங்கமுத்துவை அழைத்துக் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தமுற்றே திடீரென தங்கமுத்து ராஜிநாமா செய்திருக்கலாம் எனக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் என்பதாலேயே, ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்ததும் அரசியல் வட்டாரங்களிலிருந்து பல்வேறு சங்கடங்களை இவர் சந்திக்க வேண்டியிருந்தது.

இதனிடையில், சென்னையில் ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்த தங்கமுத்து தனது ராஜிநாமாவுக்கான காரணங்களை அவரிடம் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை கண்டுகொள்ளாதவர்: ஒவ்வொரு தேர்வுக் காலத்திலும் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உயர் கல்வித் துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Posted in abuse, ADMK, Barathidasan, Barathidhasan, Baratidasan, Bharathidasan, Bharathidhasan, Bharati Dasan, Bharatidasan, Bharatidhasan, Chancellor, Corruption, DMK, Economics, Education, Favor, Higer Education, kickbacks, Ponmudi, Power, Professor, Recommendation, resignation, Thangamuthu, University, VC, Vice-chancellor, ViceChancellor | Leave a Comment »

60,000 Indian IT professionals in US return home

Posted by Snapjudge மேல் மே 15, 2007

இந்தியாவில் பொருளாதார, ஐ.டி. தொழில் வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 60 ஆயிரம் பேர்

நியூயார்க், மே 15: பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் அமெரிக்காவில் இருந்து சுமார் 60 ஆயிரம் பேர் அண்மையில் இந்தியா திரும்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த சிலிக்கான்வேலி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, தாயகம் திரும்புவோர் இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்குவதாகவும் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தாயகம் திரும்பியோருக்கான அமைப்பின் உறுப்பினர் மிஸ்ரா கூறுகையில், 2003-ம் ஆண்டு இந்தியா திரும்பியோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது, அதன்பின்னர் 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்றார்.

இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சிலிக்கான்வேலியில் உள்ள ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவின் மீது தங்களது கவனத்தை திருப்பியுள்ளன என்றார்.

சிலிக்கான்வேலியில் “கிளியர்ஸ்டோன்’ என்ற அவரது நிறுவனத்திற்கு மும்பையிலும் கிளை உள்ளது.

இதனிடையே, அன்னா லீ மற்றும் பெர்கிலி ஆகிய இரு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிலிக்கான்வேலியில் உள்ள 15 சதவீத நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலிக்கான் வேலியில் அறிவியல் மற்றும் பொறியியல் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 53 சதவீதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் 25 சதவீதத்தை ஆரம்பித்தவர்கள் இந்தியர்கள் என்றும் அம் மாணவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் ரூ. 34440 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளன. 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே “மெர்குரி நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கிளைகள் திறக்காமல் அமெரிக்காவில் எந்த பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் செயல்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2015-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அவுட்சோர்சிங் பெறுவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

அதற்கு பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 25 வயதிற்குள்பட்டவர்கள். குறைந்த ஊதியத்தில் திறமையாகப் பணியாற்றக் கூடியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

“இன்டல் இந்தியா’ நிறுவனத்தின் அமர்பாபு என்பவர் கூறுகையில், ஆராய்ச்சி -வளர்ச்சிப் பணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளதால் இந்தியச் சந்தையின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்றார்.

Posted in Biotech, Boom, Bust, Capital, Clearstone, Commerce, Economy, Employment, Engineering, Finance, Foreign, GC, Green Card, H1-b, Immigration, Information, InfoTech, IT, Jobs, L1, migration, NRI, r2i, Research, Return, Science, Scientific, Silicon Valley, Survey, Tech, Technology, US, USA, VC, Venture, Visa | Leave a Comment »

Divestment back on track, 4 public issues ahead

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

3 அரசு நிறுவன பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.1,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

புது தில்லி, பிப். 9: தேசிய முதலீட்டு நிதி கணக்கில் (என்.ஐ.எஃப்.) பணம் ஏதும் இல்லாததால் 3 அரசுத்துறை நிறுவனங்களின் மதிப்பீட்டுக்கு ஏற்ப, புதிதாக பங்குகளை வெளியிட்டு ரூ.1,500 கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதை தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

  • ஊரக மின்சார கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி.),
  • பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (பி.ஜி.சி.ஐ.எல்.),
  • தேசிய புனல் மின் உற்பத்தி கார்ப்பரேஷன் ஆகியவற்றின் பங்குகளை, அவற்றின் இன்றைய மதிப்பீட்டுக்கு ஏற்ப விற்று மொத்தமாக ரூ.2,400 கோடி திரட்ட முடியும் என்று தெரிகிறது.

இதில் ரூ.1,500 கோடியை தேசிய முதலீட்டுக்கு நிதியத்துக்குத் திரட்ட அரசு முடிவு செய்திருக்கிறது.

அரசுத்துறை நிறுவனத்தின் இப்போதைய பங்குகளை விற்பதைப் போல அல்ல இது என்று நிதியமைச்சர் தெளிவுபடுத்தினார்.

அதாவது கைவசம் உள்ள பங்குகளை சந்தை மதிப்பில் விற்பது அல்ல என்றார். ஆனால் இன்னொரு வகையில் இது அரசு நிறுவனப் பங்குகளை விற்பதாகத்தான் அர்த்தம். ஏன் என்றால் இம் மூன்று அரசுத்துறை நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளும் அரசின் வசமே உள்ளன. புதிதாக பங்குகளை வெளியிட்டு அதை விற்பதன் மூலம் இந்த 100 சதவீத உரிமை குறைந்து 81.22%-ஆகவும் 86.36% ஆகவும் மாறிவிடும் என்று தெரிகிறது.

அரசுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது, அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக்கூடாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே சமயம் தேசிய முதலீட்டு நிதியில் பணம் ஏதும் இல்லாமல் இருப்பதும் சரியல்ல என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். இந்த விற்பனைத் தொகை அந்த நிதியத்துக்குத்தான் செல்கிறது என்று விளக்கினார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பங்குகளை வெளியிடுவதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in BEML, Bharat Earth Movers Ltd, Business, Cabinet Committee on Economic Affairs, Capital, CCEA, Communist, CPI, CPI(M), Divestment, Equity, Finance, Finance minister, Government, government equity, Initial public offerings, IPO, Left, Market, Marxist, Marxist Communist, National Hydroelectric Power Corporation, National Investment Fund, NHPC, NIF, P Chidambaram, PFC, PGCIL, Power Finance Corporation, PowerGrid Corporation of India Ltd, public issues, public sector, public sector enterprises, REC, Rural Electrification Corp, Shares, Stock market, VC | Leave a Comment »