Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rameswaram’ Category

Sri Lanka’s Palali Military Complex Shelled by the LTTE

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கையின் யாழ்குடாநாட்டில் உள்ள பலாலி இராணுவ படைத்தளத்தின் மீது புலிகள் எறிகணை தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத்தின் பலாலி படைத்தளத்தின் மீது இன்று காலை 9.15 மணியளவில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற வேளை, கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் பலாலிக்குச் சென்றதாகவும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அவர்கள் பிரயாணம் செய்த விமானம் பலாலியில் தரையிறங்காமல், அவர்கள் நூலிழையில் உயிர்தப்பி கொழும்புக்குத் திரும்பிச் சென்றதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணத்திற்கான விமானப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் பலாலி தளத்தை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். எனினும் இராணுவத்தினருக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பலாலிக்கான விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்றுகாலை ஒரு தொகுதி இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தை பலாலியில் நடத்தியதாகவும், இதனை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இந்த எறிகணை தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புலிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதை போல, முக்கிய ராணுவ உயரதிகாரிகள் யாரும் இன்று பலாலிக்குச் சென்றதாக அங்கிருந்து அறிக்கைள் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், பலாலிக்கும் கொழும்பிற்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

 


தமிழக மீனவர்கள் கைது குறித்து சட்டமன்றத்தில் விவாதம்

தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

தங்கள் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் புதைத்திருப்பதாக இலங்கை அதிகாரப் பூர்வமாக இந்தியாவிற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஜனவரி 21ம் தேதி மூன்று விசைப்படகுககளில் சென்ற 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆளும் திமுகவைத் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை மீட்டுத்தர வேண்டும், அப்போது தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகாரத்துறைக்கான மத்திய இணைஅமைச்சர் அகமதுவுடன் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட மீனவர்கள் தொடர்பாக பேசியிருப்பதாகக்கூறினார். அவர்களெல்லாம் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தனது நம்பிக்கையினையும் வீராசாமி தெரிவித்தார்.

சர்வதேசஎல்லையை மீறக்கூடாது என தமிழகமீனவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், கச்சததீவு ஒப்பந்தப்படி அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர், அந்த உரிமைகளை மீட்டுத்தரும்படி மத்தியஅரசிடம் வற்புறுத்தப்படும் என்றும் வீராசாமி கூறினார்.

 


Posted in Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Jaffna, Landmines, LTTE, mines, Palali, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, Seamines, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Waters | 1 Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

Ramar sethu, Minority Governments, Politics+Religion: ‘Thuglaq’ Cho Interview in Dinamani

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2007

Thuklaq Cho Interview Ramar Sethu Ram ADams Bridge BJPசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே? ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? யார் திசை திருப்பியது?

மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.

அதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா? ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.

தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.

ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது?

அது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை? எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி? அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே? இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி?

வால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.

வால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.

ஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.
இந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

மது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம்? மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே? இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.

எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

இப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.

திமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?

ஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன? இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.

வேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

அது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.

அப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே?

காங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.

தமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா?

ஏன் மாறக்கூடாது? தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும்? அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன? இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.

கருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே?

கலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே! காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்?

சரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.

தேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்?

இப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன? தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.

பாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது?

நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

என்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்?

தமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

முதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

கட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

காரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா?

சேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.

Posted in Adams, ADMK, BJP, Bridge, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPM, DMK, Governments, Govt, Interview, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, minority, Paalam, PMK, Politics, Ramar, Rameswaram, Religion, Sethu, Setu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TN, TR Baalu, TR Balu, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »

Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

தொழில்நுட்பம் உயிர் காக்கும்

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.

கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.

சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.

இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.

Posted in Arms, borders, Defense, Dispatch, Dispute, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishers, Fishery, Fishing, HAM, LTTE, Military, Narcotics, Naval, Navy, Police, Pulikal, Radio, Ramesvaram, Rameswaram, Sea, Sea tigers, Sri lanka, Srilanka, Surveillance, TN, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 1 Comment »

Rameswaram – Eight fishermen missing

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் மாயம்

ராமேசுவரம், பிப்.5: ராமேசுவரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன்துறையினரிடம் படகு உரிமையாளர் புகார் செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பின.

இந் நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பாண்டித்துரை ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர்கள் ராமேசுவரம் மீன் துறையினரிடம் புகார் செய்தனர்.

Posted in Arabian Sea, Bay of Bengal, Boats, Capsize, Fish, Fisheries, fishermen, Fishery, Indian Ocean, missing, Rameswaram, Sea, Seashore, Trawlers, Welfare | Leave a Comment »

Sethu Bridge – Ramar Palam aka Hanuman Bridge referred in Ramayanam – History, Current state & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

1. காலம்: பார’தீய’ ஜெகதால கட்சி !

2. பொருனைக்கரையிலே: சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2

http://porunaikaraiyile.blogspot.com/2006/07/1.html

3. பினாத்தல்கள்: எல்லாப்பக்கமும் �

Voice on Wings said…

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

இப்படியிருக்கையில் Ram factor ஒரு அருமையான சந்தர்ப்பம் நம் அதிகார வரக்கத்திற்கு. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் இத்திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டி, சில தனிநபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் நம் ஆட்சியாளர்கள்.
September 23, 2007 11:08 AM

4. நினைத்தேன் எழுதுகிறேன்: வலைப்ப�

5. Thoughts at random: Rama,Sethu and Mr. Karunanidhi

6. E=mc^2: Where are the Indian Scientists?

7. குப்பைகள்: வராதா? வரக்கூடாதா? – கலைஞர் கடிதம்

8. குசும்பு: சென்னை வந்த ராமன்

9. பங்கு வணிகம்: இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்

10. வெட்டிப்பயல்: கர்ம வீரர், கலைஞர�

News:
11. தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர்

12. கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர�

13. மத்திய திமுக அமைச்சர்களை டிஸ்ம�

14. பஜ்ரங் தள், VHP, ராமசேனா தொண்டர்கள

15. இராமர் பாலம் – செய்தித் தொகுப்பு

16. சென்னை பஸ் எரிப்பு: கருணாநிதி க�

17. பெங்களூரூ வன்முறை – இராமர் சேது �

18. Ram Sethu controversy: Ambika Soni offers to resign | சற்றுமுன்…

19. இராமர் இருப்பு: அரசு பின்வாங்கி

20. இராமர் பாலம் – ஆதாரங்கள் இல்லை – ம

21. ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் க

Cartoons:

22. Ramar Sethu issue | சற்றுமுன்…

23. Dinamani’s Mathy on Congress vs BJP in Ramar Sethu Issue | சற்றுமுன்…


ஜெயலலிதா கூறும் ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது

விழுப்புரம், ஜன.29: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும்.

சேது கடல் கால்வாய் அமைக்கும்போது ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர். இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது.

பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் (இர்ழ்ஹப்நற்ர்ய்ங்) என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன.

திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் அளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம். படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கற்கள் மிதக்கும்

அதிசயம்

இப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே உள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஒருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஆபில்-ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் என்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் என்று அழைக்கின்றனர்.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

—————————————————————————————————————————————————————-
ராமர் பாலத்தைக் காப்போம்

இல. கணேசன்

“”ஏலத்துக்குத் தயாராக உள்ள சிற்பம்” குறித்து சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது. அது ஒரு சிறிய சுண்ணாம்புக் கல் சிங்கச் சிற்பம். அதன் ஏல மதிப்பு 7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த சிற்பம் தயாரான பொருள் விலை உயர்ந்ததா அல்லது கலை வேலைப்பாட்டில் மிகச் சிறந்ததா என்றால், எதுவுமில்லை. அதன் விலைமதிப்பு உயர்ந்ததற்கு ஒரே காரணம், அது 5000 ஆண்டு பழைமையானது என்பதே!

உலகின் எல்லா நாடுகளும் பழைமையைப் போற்றுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கட்ராஸ் ஆலயத்தின் பின்னணி என்ன? மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தாகம் மேலிட்டு, ஒரு குளத்தில் நீர் அருந்தச் சென்றனர். அப்போது யக்ஷனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததால், நால்வரும் மடிய, தருமர் சென்று யக்ஷனது கேள்விக்குப் பதில் கூறி நான்கு சகோதரர்களும் உயிர் மீட்ட சம்பவம் நடந்த இடம். அந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. அது சிதிலமடைந்துள்ளது. அதைப் புதுப்பித்துப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளது.”

இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் அரசுக்கு, மகாபாரதத்தின்மீது நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் தேசத்தின் தொன்மைச் சிறப்புடைய பழம்பொருள்களைப் பாதுகாக்கும் அக்கறை அதற்கு உள்ளது. ராமன் இருந்தார் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்ற ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டாமா? அக்கறை செலுத்தாவிட்டாலும் ராமர் பாலத்தைத் தகர்ப்பதையாவது தவிர்க்க வேண்டாமா?

அது ராமர் நடந்த பாலம் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை; நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்பது தவறு. வணக்கத்துக்குரிய முகமது நபிகளின் திருமுடி ஒன்றைப் பேழையில் வைத்து ஹஸரத்பால் மசூதியில் போற்றுகின்றார்கள். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை மதிக்கிறோம். புத்தரது பல் ஒன்றை வைத்து பௌத்தர்கள் பாதுகாக்கிறார்கள். அது அவர்களது நம்பிக்கை. அதையும் நாம் மதிக்கிறோம்.

இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு எவரும் கேள்வி கேட்கக்கூடாது. கன்னியாகுமரியின் பாதம் விவேகானந்தப் பாறையில் பதிந்துள்ளதை நாம் நம்புகிறோம். நிரூபிக்க கைரேகை நிபுணரது சான்றிதழைக் கொண்டுவா என்றா கேட்பது?

ராமேசுவரம் மீனவர்கள் தங்களது படகில், யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு ராமர் பாலத்தைக் காட்டுகிறேன் என அழைத்துச் சென்று, கரையிலிருந்து சிறிதுதூரம் சென்று கடல் நடுவே தண்ணீரில் இறக்கிவிட்டு நடக்கச் சொல்வார்கள். இது பாரம்பரியமாக எத்தனையோ ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. “நாஸô’ படமெடுத்துக் காட்டிய பிறகுதான், அது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை தொடர்ந்து இருப்பதை உலகம் உணர்ந்தது. சுனாமி வந்தபோது கடல் வெகுதூரம் உள்வாங்கியது. அப்போது இந்தப் பாலத்தை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்தார்கள்.

அது சரி, ராமர் பாலம் என மக்கள் சொன்னால் போதுமா? வரலாற்று ஆதாரம் வேண்டாமா எனக் கேட்கலாம். சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்களில் ஒன்று, ஆங்கிலேயர்கள் 1788 ஜனவரி 1-ல் தயாரித்த வரைபடம். இஸ்லாமிய ஆட்சியின் இறுதிக்காலம் (நன்ழ்ஸ்ங்ஹ் ம்ஹல் ர்ச் ஏண்ய்க்ன்ள்ற்ட்ஹய் ன்ய்க்ங்ழ் ஙர்ஞ்ன்ப் உம்ல்ண்ழ்ங்) தொடர்பானது. அதில் தனுஷ்கோடி – தலைமன்னார் பகுதிக்கு ராமர் பாலம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, ஒரு வரைபடம் – நெதர்லாந்து வரைந்தது. அதில் இதே பகுதியை ராமர்கோயில் என எழுதி, ராமர் பாலம் என அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளனர். ராமன் வாழ்ந்ததே கற்பனை; எனவே, அவர் தெற்கே வந்ததும் கற்பனை எனக் கூறுவோரும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு கேள்வி. ராமேசுவரம் என்கிற பெயர் எப்படி வந்தது? ராமன், ஈஸ்வரனை அதாவது சிவனைப் பூஜித்த ஸ்தலம் என்பதால்தானே?

அந்தக் கடற்கரைப் பகுதி புனிதமானதாகக் கருதப்படுகிறதே, அது அந்தப் பகுதிக்கு ராமர் வந்த பிறகுதானே? அது சேது சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளதே! சேது தீர்த்தம் என்றும் சொல்கிறார்களே! சேது என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பாலம் என்பது பொருள். தமிழ் அகராதிப்படி செயற்கைக்கரை என்று பொருள். செயற்கையாக அமைந்த பாலம் என்று பெயர். சேது சமுத்திரம் என்பதற்கு, பாலத்தை ஒட்டியுள்ள சமுத்திரம் என்றுதானே பொருள்? அந்தப் பாலத்திற்கு அதிபதி – தலைமன்னார் வரை – சேதுபதி. பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிடும்போது சேது முதல் இமயம் வரை – சேது ஹிமாசலம் என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்திய அரசு 1767-ல் தயாரித்த முதல் நிலஅளவைக் குறிப்பேட்டில் அதன் சின்னத்தைப் பொறித்து கீழே ஆசேது ஹிமாசலம் என்றே எழுதியிருக்கிறார்கள்.

ராமன் கட்டிய சேதுவின் பெயரில்தான் சேது சமுத்திரத் திட்டம் அமைந்துள்ளது. அரசின் திட்டப்படி அது நிறைவேறினால் திட்டம் வெற்றி பெறும். சேது இருக்காது. ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடிகளை தமிழ்நாடு அரசு 1990-ல் வெளியிட்டது. அதற்கு அன்றைய முதல்வர் எழுதிய முன்னுரையில், ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக இம்மாவட்டத்தின் சமூக வரலாற்றை ஆராய்வதற்குப் பயனுடைய பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், நல்ல பணிகளிலும் ஆராய்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விவரச்சுவடி பெரிதும் பயன்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியில் இது நள சேது என்றும் தமிழில் திருவணை என்றும் சொல்லப்படுகிறது. ராம சேது என்றும் சொல்வர்; ஆதி சேது என்ற பெயரும் உண்டு.” இந்த விவரங்கள் அடங்கிய அரசுப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய அன்றைய முதல்வர்தான், இன்றும் முதல்வராக உள்ளார்.

இது மக்களுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தொல்பொருள் என்பது மட்டுமல்ல. இன்றைய தினம் இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதில் பிடிவாதமாக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் பயனாக நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அணுஈனுலை மூலம் அபரிமிதமாகப் பெறலாம் என்பது எத்தனை காலத்துக்கு? அமெரிக்கா விரும்புகிறவரை மட்டுமே!

ஆனால் இந்த ராமர் பாலத்தையொட்டி (நீங்கள் அதற்கு என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் சரி) சுமார் 400 ஆண்டுகளுக்கு நாடு முழுவதற்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிப்பதற்குத் தேவையான அணுசக்தி மூலப்பொருள் மண்டிக் கிடக்கிறதே!

ராமர் பாலம் என்று அழைப்பதற்கு எங்களது பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை என்று கருதுவோர், இந்த அணு மின்சக்தி மூலப்பொருளுக்காகவேனும் சேது திட்டத்தின் வழித்தடத்தை மாற்றலாமே?

சேது சமுத்திரத் திட்டத்தைக் கொள்கைரீதியாக ஏற்று ஆய்வுப் பணிகளைத் துவக்கியது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான். வாஜ்பாய் ஆட்சிக் காலத்துக்கு முன்பு இரு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்று மண்டபம் அருகே. இரண்டாவது – பாம்பன் அருகே. முதல் வழித்தடத்தை 1956-ல் பரிந்துரைத்த எ.ஆர். ராமசாமி முதலியார், ஆதாம் பாலத்தை (அதாவது ராமர் பாலத்தை) இடிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.

வாஜ்பாய் அரசில் 3-வது வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டது. அது கோதண்டராமர் ஆலயத்தைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பி கைவிடப்பட்டது.

பிறகு 4-வது வழித்தடம் கோதண்டராமர் கோயிலுக்கும் எஞ்சியுள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் இடையே உள்ள ஆளில்லா நிலப்பகுதியில் தோண்டப் பரிந்துரைக்கப்பட்டது. இது நேரடியான பாதை. குறைந்த தூரம், குறைந்த செலவு. இரு பகுதியிலும் உள்ள நிலப் பகுதிகள் சுவர்போல அமையும். ராமர் பாலத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

பக்தியின் அடிப்படையிலும் அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஆனால் அது ராமர் பாலத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நான்காவது வழித்தடத்தில் அமைய வேண்டும் என்பதுதான் இந்துமதத்தில் நம்பிக்கையுள்ள பெருவாரியான மக்களின் விருப்பம். பெரும்பான்மை விருப்பத்திற்கு மாறாகத்தான் செயல்படுவோம் என்று இவர்கள் மார்தட்டினால், மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கும்.

(கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், பாரதீய ஜனதா கட்சி).

——————————————————————————————————————————

கடவுள் காப்பாற்றட்டும்

Dinamani Editorial (Sep 21, 2007)

ஏதாவது கேட்டால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு எதையாவது சொல்லி கேள்வியைத் திசைதிருப்புவது என்பது முதல்வர் கருணாநிதியின் வாடிக்கை. ராமர் பற்றி விமர்சித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நீங்கள், ஏசுநாதர் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு, “”ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்; ஆரிய-திராவிடப் போராட்டத்தின் கதைதான் ராமாயணம்; நேரு சொன்னார், ராஜாஜி சொன்னார் என்று எதைஎதையோ சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் சொல்லி எங்கெங்கோ விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

பகுத்தறிவுவாதம், இறைமறுப்பு என்பன போன்ற விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விருப்பம். இவையெல்லாம் திராவிட அரசியல் உலகுக்கு எடுத்துரைத்த புதுக்கருத்தல்ல. சொல்லப்போனால் பொதுவுடைமைவாதிகளிடமிருந்து திராவிட இயக்கங்கள் அரைகுறையாகக் களவாடிய விஷயங்கள்தான் இவை. திராவிட இயக்கத்தினரைப்போல ஊருக்குப் உபதேசிக்காமல், பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வாழ்க்கைநெறியாகவே கடைப்பிடிப்பவர்கள் பொதுவுடைமைவாதிகள்தான்.

இறைமறுப்பு என்பது இந்து மதத்தின் பல்வேறு தத்துவங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சமயக்குரவர்களும் சொல்லிவிடாத பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வேறு யாரும் சொல்லிவிடவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை அவை தத்துவம். முதல்வர் கருணாநிதியைப் பொருத்தவரை இவை மூன்றாம்தர வாக்கு வங்கி அரசியல்.

வால்மீகி எழுதிய ராமாயணம் என்கிற காவியத்தின் கதாநாயகன்தான் ராமர். “நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் வரும் கதாநாயகர்களைப்போல ராமனும் ஒரு கதாநாயகன்தான்’ என்கிறார் முதல்வர் கருணாநிதி. இவர் எழுதிய “அவன் பித்தனா, பூமாலை, மறக்க முடியுமா போன்ற படங்களின் கதாநாயகர்களின் பெயர் என்ன என்று கேட்டால் அந்தப் படத்தைப் பார்த்த எத்தனை பேருக்கு இப்போது ஞாபகம் இருக்கும்? களவொழுக்கத்தை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கதைகளை இப்போது பார்த்தால் யாராவது ரசிப்பார்களா? ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும் பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை, இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயம்?

ராமாயண காவியத்தில் எத்தனைஎத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நமது முதல்வருக்குத் தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தில் சோமபானம் அருந்தினார் ராமர் என்று ஒரு வரி இருப்பதாகவும் அதை விவாதிக்கத் தயாரா என்றும் கேட்கிறார் முதல்வர். ஏகபத்தினி விரதன் ராமன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு?

“வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை. எந்தப் பாதை என்பதல்ல பிரச்னை. எங்களுக்குத் தேவை சேது சமுத்திரத் திட்டம் என்றும், ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். நல்லதொரு மனமாற்றம். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அப்படியானால் ராமர் பற்றிய சர்ச்சை ஏன்? தேவையில்லாமல் ராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தன்னுடைய மூன்றாம்தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான ராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?

முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

——————————————————————————————————————
இன்று சேது, நாளை எவரெஸ்ட்?

டி.ஜே.எஸ். ஜார்ஜ்
1920-களில் திராவிட இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த சுயமரியாதைக் கொள்கை எங்கே போனது? இன்றைக்கு திராவிட அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும், தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளும் போக்கு எப்படி உருவானது?

“திராவிட நாட்டில்’ அண்மைக்காலமாக எழுந்துள்ள மோதல் போக்குச் சூழல்களால்தான் இக் கேள்விகள் எழுகின்றன. கர்நாடகத்தில், குறிப்பாக பஸ் பயணிகள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான விரோத உணர்வு அரசியலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கர்நாடகத்தில் அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்று செயல்படும் காவல் துறை, இந்த விஷயத்தை மெத்தனமாகக் கையாண்டதால் நிலைமை மேலும் மோசமானது.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் இத்தகைய மோசமான சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். தெலுங்கு- கங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழக அரசு தனது அண்டை மாநிலங்களுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சர்ச்சையால் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்பட்டதால், இந்த மோதல்போக்கு தேசிய அளவில் விரிவடைந்துள்ளது. ஆளும் திமுகவில் அதிகார மையமாகச் செயல்படும் குழுவினர், இந்தப் பிரச்னைகள் அனைத்திலும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தாங்கள் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது சரியல்ல என்பது இவர்களுடைய நிலைப்பாடு. இது சரிதானா?

ஒரு தலைமுறைக்கு முன்னதாக, ராமர்- சீதை கதாபாத்திரங்களைக் கலந்து “”கீமாயணம்” என்ற நாடகத்தை அரங்கேற்றினார் காலஞ்சென்ற நடிகர் எம்.ஆர். ராதா. இன்றைய சூழ்நிலையில் அதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. அது தேவையற்றதும்கூட.

1852-ல் “”மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்” என்ற அமைப்பால் வடிவம் கொடுக்கப்பட்ட திராவிடக் கொள்கையில் சில முக்கிய அம்சங்களும் இருந்தன. 1920-களில் திராவிடக் கொள்கையானது மேலும் வலிமை பெற்றது; நீதிக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிகோலியது.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைதான் திராவிடக் கொள்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பல்வேறு விஷயங்களில் பெரியார் மாறுபட்ட குணாதிசயங்களுடன் செயல்பட்ட போதிலும், நவீன இந்திய வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். திராவிட அரசியல் வித்தியாசமாகவே இருந்தது. நீதிக் கட்சி வலுவாக இருந்த காலகட்டத்தில், நிலச் சீர்திருத்தம், பெண்கள் விடுதலை ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்ணாவுக்கு, தெளிவான அரசியல் இலக்குகள் இருந்தபோதிலும், பள்ளிகளில் சரியான வரலாற்றைப் போதிப்பதற்காக இயக்கம் நடத்தினார்; 1950-களின் பிற்பகுதியில் சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்களாக மாறினர்.

தற்போதைய திமுக தலைமைக்கு இதுபோன்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. சிசுக் கொலைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 20 ஆயிரம் திமுக தொண்டர்களை கிராமங்களுக்கு அனுப்பலாமே? தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரால் நடைபெறும் தொடர் மோதல்களுக்கு முடிவு கட்ட பயிற்சி பெற்ற ஆண்களையும், பெண்களையும் கிராமங்களுக்கு அனுப்பலாமே? இதன்மூலம், சாதிய உணர்வுகளுக்கு முடிவு கட்ட உறுதி ஏற்கலாமே?

இந்தக் கேள்விகளுக்கு வாக்கு வங்கி என்ற தேர்தல் ஜனநாயகத்தில்தான் பதில்கள் பொதிந்து கிடக்கின்றன. வாக்குகளைப் பெறுவதற்கு சாதிதான் குறுக்கு வழி. பெண் சிசுக் கொலை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளூர் விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமே தவிர, வாக்குகளைக் கவர்வதற்கு அவை எந்தவிதத்திலும் உதவாது.

காவிரி நீர், தமிழகத்துக்கு புதிய ரயில்வே கோட்டங்கள் போன்ற எளிதான உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்பதால், மற்றவற்றைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள், தமிழகத்துக்கு மட்டுமேயான மத்திய அமைச்சர்களாகத்தான் செயல்படுகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலை ஆழப்படுத்துவதற்கு டி. ஆர். பாலுவிடம் ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், இயற்கையின் போக்கை மாற்ற நினைத்தால் பேரழிவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடற்கரை மணலைத் தோண்டுவதாலும், அலையாத்திக் காடுகளை அழிப்பதாலும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு நமக்குக் கற்றுத் தந்த பாடம். இந்த பாடத்தை நாம் கற்றுக் கொண்டோமா?

எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரத்தை சில நூறு அடிகள் வெட்டிக் குறைத்தால், அந்த மலைப் பகுதியில் அதிக லாபம் ஈட்டித் தரும் சுற்றுலா மையங்கள் உருவாகலாம். எவரெஸ்ட் சிகரப் பகுதியை வெட்டுவதற்கு இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? எவரெஸ்ட் தமிழகத்தில் இல்லாமல் போனதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————–
“ஒரு மணி 45 நிமிடத்தை மிச்சப்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி செலவா?’

சென்னை, செப். 29: சேது சமுத்தி ரக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதன் மூலம் 1 மணி 45 நிமிடத்தை மட் டுமே மிச்சப்படுத்த முடியும்.
இதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா? என இந்தியக் கப்பல் படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பினார்.
சேது சமுத்திர கப்பல் கால்வாய் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென் னையில் வெள்ளிக்கிழமை சேது சமுத்திரம் குறித்த அறிவியல், பொருளாதார ரீதியான நிலைத் தன்மை குறித்த விவாதம் நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்தின் மூலம், கோல்கத்தாவிலி ருந்து தூத்துக்குடிக்கு கப்பல் போக்குவரத்துக்கான தூரத்தை 340 கடல் மைல்களாகவும், சென் னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 434 கடல் மைல்களாகவும் குறைக்க முடியும் என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது.
பொதுவாக ஒரு கப்பல் கோல் கத்தாவிலிருந்து இலங்கையைச் சுற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு செல்வதற்கு கடக்க வேண்டிய மொத்த தூரம் 1227 கடல் மைல் கள் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால் வாய் மூலம் செல்ல, கடக்க வேண் டிய தூரம் 1098 கடல் மைல்கள் ஆகும். இதன் மூலம் கடக்க வேண்டிய தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைகிறது.
கப்பல் அதிகபட்சமாக ஒரு மணிக்கு 12 கடல் மைல்கள் வேகத் தில் செல்லமுடியும். இதன்படி கோல்கத்தாவிலிருந்து இலங்கை யைச் சுற்றிக்கொண்டு தூத்துக்கு டிக்குச் செல்ல 102.2 மணி நேரம் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் 98.5 மணி நேரம் ஆகும். ஏனெனில், திட்டத் தின்படி, சேது சமுத்திரக் கால் வாய் 12 மீட்டர் அளவுக்குதான் ஆழப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் செல்லும்போது, கப்பலின் வேகத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் கால்வாய் வழியாக பய ணிக்கும் போது கப்பலின் பாது காப்புக்காக ஒரு மாலுமியை பணி யமர்த்தவேண்டும். இவர் கப்ப லில் ஏறி இறங்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இதன் மூலம் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்ல மொத்தம் 100.5 மணி நேரம் ஆகும். இதன்படி 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே குறைகிறது.
மொத்த தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைந்து, 1 மணி 45 நிமி டம் மிச்சமாவதற்காக ரூ. 4 ஆயி ரம் கோடியை செலவு செய்ய வேண்டுமா? மேலும் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக கப்பல் செல்லும் போது, அந்த கப்பல் நிறுவனத் துக்கு ரூ. 19 லட்சம் நஷ்டம் ஏற்ப டும். எனவே இந்தத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
முழுமையான ஆய்வு மேற் கொள்ளப்படவில்லை: இந்தியப் புவியியல் ஆய்வுக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் கே. கோபாலகி ருஷ்ணன் கூறியது: ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி-மன்னார் வளை குடா பகுதியில் பூகம்பம் வருவ தற்கு அதிக வாய்ப்புகள் உள்ள தென பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அரசு கூறுவதுபோல் ஆதம் பாலம் வெறும் மணல் திட்டுக ளால் மட்டும் உருவாகவில்லை.
பல்வேறு நிலப்பரப்பு மாற்றங்க ளையும், கடலில் ஏற்படும் அதிர்வு களையும் உள்வாங்கி இந்தப் பகுதி ஒரு தடுப்பு அரணாக விளங்கிவரு கிறது.

இந்தப் படிவங்களில் பெரிய பிளவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிளவுகள் மூலம் அவ்வப் போது நகர்வுகள் ஏற்படும். இத னால் இதன் மேற்பரப்பில் கட்டப் படும் எந்தக் கட்டுமானங்களும் நிலைத்து நிற்காது.

சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்துக்காக, இந்தியப் புவியியல் ஆய்வுக் கழகம் மூன்று துளைகள் மட்டுமே போட்டு ஆய்வு செய் துள்ளனர். அதுவும் ஆதம் பாலத் தின் மீது ஒரு துளை மட்டும் போட்டு ஆய்வு செய்துள்ளனர்.

முழுமையான திட்டத்துக்கான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை.
பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப் படும்: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி, மன்னார் வளை குடா கடல் உயிரிகள் வாழ்வதற்கு மிக ஏதுவான சூழ்நிலைக் காணப் படுகிறது. சுத்தமான நீர் உள்ள இந்தப் பகுதியில்தான் மீன்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள் ளும்.

எனவே ஆதம் பாலத்தின் ஒரு பகுதி தோண்டப்படுவதன் மூலம் அசுத்த நீர் கலந்து மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.
மேலும் சூறாவளி, சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படுவ தோடு, மழைப் பொழிவிலும் மாற் றம் ஏற்படும் என்றார் அவர்.

Posted in Anuman Palam, Backgrounders, Current state, Details, Hanuman Bridge, History, India, Islands, Ramar Palam, Ramayan, Ramayanam, Rameswaram, Sethu, Sethu Bridge, Sri lanka, Srilanka | குறிச்சொல்லிடப்பட்டது: , | 11 Comments »

Madurai Central Election Observers visit Rameswaram & Thekkadi while parties resort to Violence

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2006

மத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்

மதுரை, அக். 12-

மதுரை மத்திய தொகுதி ஓட்டுப்பதிவு நேற்று பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது.

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலேயே மதுரைக்கு வந்துவிட்ட அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சின்னக் கடை வீதியில் தி.மு.க-அ.தி. மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. வாக்கா ளர்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயன்றதாக வும் அதை அ.தி.மு.க.வினர் தடுக்க முயன்றபோது தகராறு மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் உடைக்கப்பட்டது. அவர் ஆதர வாளர்களும் தாக்கப்பட்டனர்.

இது பற்றி ராஜன் செல்லப்பா தேர்தல் பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் பெரியார் பஸ் நிலையம் எதிரே மறியல் செய்து விட்டு போலீஸ் கமிஷனரிடமும் புகார் கூறினார்.ஆனால் போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அ.தி.மு.க.வினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி நீக்கப்பட்டு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு போலீஸ் துணை கமிஷனர்களுக்கும் தேர்தல் பணி வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த கலவரங்களின்போது மத்திய தேர்தல் பார்வையாளர்கள் என்ன செய்தார்கள். சம்பவ இடத்திற்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்களா என்ற கேள்வி எழுந்தது.

இதில் சம்பவம் நடந்த 5-ந்தேதி தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ்குமார் கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. அவர் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

தேக்கடியில் பார்வையாளர் சஞ்சீவ்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவரது உதவியாளர் கொடுத்த தகவல்களும் சஞ்சீவ்குமார் அங்கு சென்றார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.

இதனால் தேர்தல் நேரத்தில் திடீரென நடக்கும் சம்பவங்களை இவர்களால் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க முடியாமலும் போய் விட்டது.

கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது இது போல மதுரைக்கு தேர்தல் பார்வையாளராக வந்தவர்கள் கொடைக்கானலுக்கும் கேரளாவுக்கும் இன்பச் சுற்றுலா சென்றது பத்திரிகை களில் வெளியானது. இதை யடுத்து அவர்களை தேர்தல் ஆணையம் உடனே திரும்ப அழைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in ADMK, Bypolls, DMK, Election, Government, Madurai Central, Observers, Poll, Rameswaram, Thekkadi, Violence | Leave a Comment »