Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Songs’ Category

Chennai Gana specialist Viji – A Docufilm by V Ramu: Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

சமூகம்: விதி வரைந்த பாதை!

வானுயர்ந்த கட்டிடங்கள். பளபளக்கும் தார்ச்சாலை. நுனி நாக்கில் ஆங்கிலம் என்று பார்த்துப் பழகின நமக்குச் சென்னையின் மறுபக்கத்தை அறிமுகப்படுத்துகிறது, “மாநகர் ஜித்தன் மரண கானா விஜி‘ என்ற ஆவணப்படம். வி. இராமு படமாக்கியிருக்கிறார். சாலையோரங்களில், குப்பங்களில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களின் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் பல விதங்களில் உள்ளன. இந்த மக்களின் மகிழ்ச்சியை, சோகத்தைப் பாடல்களாக அந்த மக்களே பாடுகின்றனர். இந்த விளிம்புநிலை மக்களின் தவிர்க்க முடியாத இசை, கானா பாடல்கள். நம் கிராமங்களின் இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது போல் சென்னை மாநகரங்களில் மரண கானா பாடப்படுகிறது.

இந்த ஆவணப் படத்தின் நாயகன் விஜி சுமார் மூவாயிரம் சாவுகளுக்குப் பாடல் பாடி உள்ளார். “”அப்பா, அம்மா யாருன்னே தெரியாது. பேப்பர் பொறுக்கும் சிறுவர்களே என் சிறுவயது நண்பர்கள். எந்த வேலையும் தெரியாது. பீச்சுக்கு வர்றவங்ககிட்டே திருடறது. விபச்சாரத் தொழிலுக்குத் தூது வேலை பார்க்கறதுனு பொழப்பு ஓடுச்சு. அப்பவே ஏங்கூட இருந்தவங்க நானூறு, ஐநூறு சம்பாரிப்பாங்க. ஆனா எல்லா ரூபாயையும் போதைக்குதான் செலவு பண்ணுவாங்க. இப்படி போய்கிட்டிருந்த என் வாழ்க்கையில கானா நுழைஞ்சது” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் விஜி.

“”தண்டையார் பேட்டை பக்கம் ஒரு அம்மா தீபாவளி, கார்த்திகை நேரத்தில எங்களை மாதிரி ஆளுகளுக்குச் சாப்பாடு போடுவாங்க. செவப்புனா செவப்பு அப்படி ஒரு செவப்பு. அந்தம்மாவுக்கு முதுகில அழகா ஒரு மச்சம் இருக்கும். ஒரு தடவ நான் அதைத் தொட்டேன். “அப்படிலாம் தொடக்கூடாது ராசா. நீ எனக்கு புள்ள மாதிரி’னு சொன்னாங்க. மனசு உருகிப் போச்சு. அப்புறம் அந்தம்மாவப் பார்க்கல. கொஞ்ச நாள்ல அந்தம்மா, உடம்பு சீரியஸôகி ஹாஸ்பிடல்ல சேர்ந்திருக்கிறதா சொன்னாங்க. ஓடிப் போய் பார்த்தேன். நான் போனபோது அவங்க இறந்து போயிட்டாங்க. அந்தம்மாவுக்கு யாருமில்ல. ஒரே ஒரு பொண்ணு மட்டும் பக்கத்தில அழுதுகிட்டிருந்தது. அந்தம்மாவோட மக’னு சொன்னாங்க. ஏதோ சேட்டோட தயவுல இருந்தாங்கனு தெரிஞ்சது. பொண்ணு கையில அம்பது, அறுபது ரூபாதான் இருந்துச்சு. பேப்பர் பொறுக்கிறவங்க போட்டு வைச்சிருந்த பழைய டயர், பிளாஸ்டிக் வாளி எல்லாம் கிடந்துச்சு. அதை விலைக்குப் போட்டதுல 300 ரூபா கிடச்சுது. நானும் அந்தப் பொண்ணும் கண்ணம்மா சுடுகாட்டுல அந்தம்மாவுக்கு ஈமச் சடங்கு பண்ணினோம். மரண கானா ஆரம்பிச்சது அங்கதான்.

அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சவங்க யாரும் இல்லாததால ஹாஸ்டல்ல விடலாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்லிடுச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க வீட்ல விட்டுட்டு ஜெயிலுக்குப் போயிட்டேன். கஞ்சா வித்த கேசுல அரெஸ்ட் பண்ணுவாங்க. நாங்க வித்ததில்ல. யாரோ விப்பாங்க. நாங்க ஜெயிலுக்குப் போவோம். சும்மா கணக்குக்காக அரெஸ்ட் பண்ணுவாங்க. அப்படி போனதுல பதினைஞ்சாயிரம் கிடைச்சது. ஜெயில்ல மாமுல் போக பனிரெண்டாயிரம் கிடைச்சது. அத வெச்சுகிட்டு நானும் அந்தப் பொண்ணும் வாழறோம். ரெண்டு குழந்தைங்க இருக்கு” என்கிறார் விஜி.

இந்த ஆவணப் படம் சென்னையின் பூர்வகுடி மக்களை, அவர்களுடைய வாழ்க்கையை- பண்பாட்டை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மனிதர்கள் வாழ்க்கை குப்பைகளிலும், சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் சுடுகாட்டிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாதிரி இடங்களில் படப்பிடிப்பை நிகழ்த்தாமல் ஓவியக் கல்லூரியில் படத்தை எடுத்திருப்பது நெருடுகிறது.

“பம்பரக் கண்ணாலே’ என்ற சந்திரபாபு பாட்டு கானா வகையைச் சேர்ந்தது. இந்த மாதிரி கலைஞர்களுக்குச் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வது இன்னமும் எட்டா கனியாகவே இருக்கிறது. இந்த விளிம்புநிலை கலைஞர்களை ஆவணப்படுத்திய வி. இராமு இந்தச் சமூகம் அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தை உணர வைக்கிறார்.

விதிக்கும் விஜிக்கும் ஓரெழுத்து வித்தியாசம்தான். எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து மரணங்களை நம்பி வாழும் இந்த மனிதர்களின் வாழ்க்கையும் மனித சமுத்திரத்தின் ஒரு துளிதானே?

முத்தையா வெள்ளையன்

Posted in Arrest, Audio, burial, Chennai, dead, Documentary, Faces, Films, Funeral, Gana, Jail, Kana, Madras, Movies, music, names, people, Poor, Raamu, Ramu, Rites, Slum, Songs, Viji | Leave a Comment »

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

Kavinjar Thanjai Ramaiyah Das – Tamil Cinema Poets

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 790
காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்
ஆசிரியராகஇருந்து பட உலகுக்கு வந்தவர்


சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு.

  • எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தருவார்.
  • மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தருவார்.
  • காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
  • நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தருவார்.

முன்னோடி

புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939-ல் வெளிவந்த “மாரியம்மன்” படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

புலவர் பட்டம்

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?

கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:-

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட தியாகி

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும்போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை – வசன – பாடலாசிரியருக்கு `வாத்தியார்’ என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் `வாத்தியார்’ ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜ×னா, வள்ளி திருமணம் போன்ற நாடகங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, ”ஓர் இரவு” போன்ற நாடகங்களை கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது.

அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால், அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ்

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக “வெச்சேன்னா வெச்சதுதான்” என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க, அது அவர்களுக்கு பிடித்துப்போனது.

அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கம், அப்பாவை மாடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்தபோது வியந்திருக்கிறார். அப்பாவின் கதை-வசனம் இயக்கத்தில் “மச்சரேகை” நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர்.மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.

இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா – வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா – வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.

அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர்

ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.

அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.

“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் – குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த “குறவஞ்சி” படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி “எந்நாளும் `தண்ணி’யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா… ரா…. ரா…” என்று எழுதினார்.

சினிமாவில் `கேட்டது கிடைக்கும்’ என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ, அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது “தங்கரத்தினம்” படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் “உதயசூரியன்” என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் “எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குது வயசு, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு” என்று எழுதிக் கொடுத்தார்.

அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது “மாலையிட்ட மங்கை” என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த `பிஸி’யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.

அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.

பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்”

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

——————————————————————————————————————————————————————————–
வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு – 791
ராமையாதாஸ் தயாரித்த “ராணி லலிதாங்கி”:
பாதி படம் எடுத்த பிறகு கதாநாயகன் மாற்றம்!
எம்.ஜி.ஆருக்கு பதிலாக சிவாஜிகணேசன்!

தஞ்சை ராமையாதாஸ், “லலிதாங்கி” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். கதாநாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார். கிட்டத்தட்ட பாதி படம் தயாரான நிலையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட, கதாநாயகனாக சிவாஜிகணேசனை நடிக்க வைத்து படத்தை முடித்தார்.

தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-

சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.

கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். “சிங்காரி”யில் “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.

“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.

ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.

குலேபகாவலி

அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.

இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.

இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.

இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”

ராணி லலிதாங்கி

கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.

கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.

இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:

“ஆண்டவனே இல்லையே

தில்லை தாண்டவனே உன்போல்

ஆண்டவனே இல்லையே”

– இதுதான் பாட்டு.

இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.

சிவாஜி

ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி – பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.

அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”

இவ்வாறு விஜயராணி கூறினார்.

ஏ.பி.நாகராஜன்

தஞ்சை ராமையாதாஸ் நாடகத்துறையில் இருந்தபோது அவரது மாணவராக இருந்தவர் ஏ.பி.நாகராஜன். இவர் குரு எழுதும் நாடகங்களில் வில்லனாக நடித்து வந்ததோடு நடன நிகழ்ச்சியையும் இயக்கி வந்தார்.

தஞ்சை ராமையாதாஸ் பாடல்களில் சில கருத்துக்களை துணிச்சலாக சொன்னார். அதனால் சிறு சிறு சர்ச்சைகள் எழுந்து அடங்கின. அதுபற்றி விஜயராணி கூறுகிறார்:-

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க” என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய “ஆனந்தக்கோனாரே” பாடலும் சர்ச்சைக்குள்ளானது.

சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. “ஆளைக் கண்டு மயங்காதே” படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.”

இவ்வாறு கூறினார், விஜயராணி.

ஆரூர்தாஸ்

தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.

இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், “நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா’ என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே” என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.

திருக்குறள்

சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.

1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் “திருக்குறள் இசையமுதம்” எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-

“நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்” என்று அப்பா சொன்னார்.

திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.

45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், “இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.

விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.

Posted in Audio, Biosketch, Daas, Das, Doss, Faces, Films, History, Kavinjar, Literature, Movies, music, people, Poets, Raamaiya, Raamaiyah, Ramaiya, Ramaiyah, Songs, Tanjore, Thanchai, Thanjai | 1 Comment »

Celebrated Hindustani classical singer Prabha Attre’s 75th birthday celebrations

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

வாழும்போதே வாழ்த்துங்கள்!

ஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.

பாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி! -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.
ரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.

வழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.

கௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.

(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை! அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.

இத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.

அப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.

இந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.

பிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.

ஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.

பெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.

அடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.

நாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.

இவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.
ஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.

ஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.

சாருகேசி 

Posted in 75, aathre, aatre, Artist, Birthday, Carnatic, Celebrations, Faces, Guru, Hindustani, music, Musician, Padmabhushan, Padmabushan, Pathmabhushan, Pathmabushan, people, praba aathre, praba aatre, prabha aathre, prabha aatre, Professor, Singer, Songs, Students, svaramyi, swaramyi, Swarangini, Swaranjini, Teachers | Leave a Comment »

Lightening the load of 10th Standard Tamil Textbook: State of Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

தமிழுக்கு அநீதி!

ச. செந்தில்நாதன்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் “சுமை’ அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும், எதை எடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து

  1. “புகழ்’,
  2. “வெகுளாமை’,
  3. “இடனறிதல்’,
  4. “ஊக்கமுடைமை’

என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள் “இடனறிதல்’, “ஊக்கமுடைமை’ ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் – அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன. நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா? திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே? குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்? இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?
நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் “”அந்தரத்தில் மேடை அமைத்தார்” என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் “விடிவதற்குள்’ என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் “மண்ணாசை’ நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் “மண்ணாசை’ கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க “திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்’ என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)

Posted in 10th, Ami, Answers, Asokamithiran, Asokamithran, Asokamitran, Avoid, Books, Conservative, Couplets, Decrease, Delete, Education, Exams, Fiction, Kural, Kurunthogai, Kurunthokai, Language, Learn, Lessons, Liberal, Life, Lighten, Literature, Load, Main, Non-detail, Obsolete, PAK, papers, Planning, Poems, Poet, Questions, Read, Reduce, Sample, Sangam, Schools, Second, Songs, standard, State, Students, Tamil, Tamil Nadu, TamilNadu, Teach, Teachers, Tenth, Textbook, Textbooks, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TV, Valluvar | Leave a Comment »

‘Lyricist Snehan is raping Tamil culture by innovative marriage ceremonies’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

கற்பை கொச்சைப்படுத்துவதாக எதிர்ப்பு: கவிஞர் சினேகன் வீட்டில் முற்றுகை போராட்டம்

சென்னை, மார்ச்.16-

பறையர் பேரவை பொதுச் செயலாளர் ஏர்போர்ட் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவிஞர் சினேகன் டைனமிக் திருமணம் என்ற பெயரில் புதுக்கோட்டை கொத்தமங்களம் கிராமத்தில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்ள ஒருவரை முறையே இல்லாமல் புரட்சி சிந்தனை என்ற பெயரில் காமகளியாட்ட கேவலங்களை தலைமையேற்று நடத்தியுள்ளார்.

நடிகை குஷ்பு, கற்பு பற்றியும் தமிழக ஆண், பெண்கள் பற்றி கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. அதைவிடமோசமாக தற்போது தமிழர்களின் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட கவிஞர் சினேகன் இன்று முற்படுகிறார்.

கற்புக்கு இலக்கணம் கண்ட முன்னோடி இனமே தமிழினம்தான். பெண்ணானவள் தானாக தனித்துப் போராடி பெற்ற அவளுக்கு மட்டுமேயான உரிமையே கற்பு என்னும் உரிமை, அதை ஆண் அப்பெண்ணின் மீது திணிக்கவில்லை. ஆய்வுகள் இப்படி இருக்க தமிழர்களின் கற்பு நெறியை கொச்சைப்படுத்தும் விதமாக சினேகன் பேச்சும் பேட்டிகளும் அமைந்துள்ளன.

கட்டிப்பிடித்து மகிழ்ந்தால் கற்பு பறிபோய் விடுமா? தொடுவதால் கற்பு என்கிற புனிதம் தொலைந்து போய்விடும் எனச் சொன்னால், கற்புள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடமுடியும். தமிழகத்தில் எத்தனை ஆண்கள் ஒருத்திக்கு ஒருவனனாக இருக்கிறார்கள்? என ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

திரைப்படங்களில் பாடல்கள் எழுதும்போது பெண்களை பாலியல் வக்கிரங்களாய் உருவகப்படுத்தி, சின்னவீடா வரட்டுமா? பெரியவீடா வரட்டுமா? கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா? என இளைஞர்களை தவறான பாதையில் திசை திருப்புவது போல பாடல் எழுதிவரும் கவிஞர் சினேகன் போன்ற பன்னாட்டு உலகமயமாக்கல் ஏஜென்டுகளாய் தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவோம்.

வரும் 22.03.07 அன்று காலை 11.00 மணிக்கு பறையர் பேரவை சார்பில் 100 இளைஞர்கள், கோயம்பேடு வணிகவளாகம் அருகில் வெங்கடேசுவரா பிரதான சாலை, விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டிற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Posted in Airport Murthy, Arts, Audio, Ceremony, Cinema, Conservative, Culture, Culture Police, Films, Heritage, Kiss, Kushboo, Kushbu, Liberal, Love, Lust, Lyricist, Lyrics, Marriage, Moorthee, Moorthy, Moral, Morality, Movies, Murthy, music, Relationship, rights, Sex, Snegan, Snehan, Songs, Tradition, Traditional, Vows, Wedding, Wrongs | 1 Comment »

‘Sivaji’ the boss – Audio Launch details

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

`சிவாஜி’ படம் மே 8-ல் ரிலீஸ்: பாடல் கேசட் அடுத்த மாதம் வெளியீடு

சென்னை, பிப். 20-

ரஜினியின் `சிவாஜி’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி யுள்ளது. படப்பிடிப்பு 2005 டிசம்பர் 13-ந்தேதி தொடங் கியது. இறுதி கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க இந்தியர்கள் பலர் ரஜினியுடன் நடித்தனர். படப் பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத் தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்ரல் 28-ல் முடிகிறது. பள்ளி தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு `சிவாஜி’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

`சிவாஜி’ பாடல் கேசட் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

`சிவாஜி’ படம் அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் என்பதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போகலாம் என்ற தவிப்பு பட அதிபர்களுக்கு இருக்கிறது. எனவே சிவாஜி ரிலீசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவோ அல்லது ரிலீசாகி சில மாதங் கள் கழித்தோ இதர படங்களை ரிலீஸ் செய்ய சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் திட்டமிட் டுள்ளனர்.

`சிவாஜி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் ரிசீலாகிறது. இதற் காக 500 பிரிண்ட்கள் போடப் படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் `சிவாஜி’ யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் அதே தேதியில் கேரளாவில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் `சிவாஜி’ படம் ரூ. 3.10 கோடிக்கு விற் பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநில சூப்பர் ஸ்டார் களான மம்முட்டி, மோகன் லால், படங்கள் விலைபோகும் தொகையை விட இது அதிகம்.

Posted in AR Rehman, ARR, Audio, Malayalam, music, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Shankar, Shivaji, Shivaji the boss, Sivaji, Sivaji the Boss, Songs, Tamil Films, Tamil Movies, Telugu | Leave a Comment »

Sivaji (The Boss) opening song details – Superstar gifts 3 Lakhs for Folklore

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

`சிவாஜி’ படத்தில் `மெகா’ கரகாட்டம்: 64 கிராமிய கலைஞர்களுக்கு ரஜினி ரூ.3 லட்சம் பரிசு

இயக்குனர் சங்கர் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. ரஜினியின் “சிவாஜி” படத்துக்காக அவர் இதுவரை இல்லாத அளவுக்கு காட்சிக்கு காட்சி இரட்டிப்பு மடங்கு பிரமாண்டத்தை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக ரஜினி ஆடும் பாடல் காட்சிகள் பிரமாண்டத்தின், பிரமிப்பின் உச்சியைத் தொடும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதிலும் ஒரு கிராமிய மணம் கமழும் பாடல் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியில் வாய் எனும் மலை பிரதேசத்திலும், பஞ்ச தனி அணைக் கட்டிலும் இந்த பாடல் காட்சி 8 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் பங் கேற்றனர்.

இந்த பிரமாண்டத்துக்காக சங்கர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தமிழகத்தில் இருந்து முதலில் அவர் எதிர்பார்த்தது போல நாட்டுப்புறக் கலைஞர்கள் கிடைக்கவில்லை. கடைசியில் புஷ்பவனம் குப்புசாமி மூலம் முகப்பேரில் கலைக்கோட்டம் நடத்தி வரும் எம். அன்பரசனை அணுகினார். அன்பரசன் 2 நாள்அவகாசத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்று 64 நாட்டுப்புறக்கலைஞர்களை தேர்வு செய்து ஒருங் கிணைத் தார்.

அதன் பயனாக 64 கலை ஞர்களும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அரிய வாய்ப்பை பெற்றனர். ரஜினியுடன் இவர்கள் மயி லாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று விதம் விதமாக கிராமிய நடனங்களை ஆடி தூள்கிளப்பி இருக்கிறார்கள். ரஜினியும் இந்த பாட்டில் பட்டையை கிளப்பி உள்ளாராம்.

இந்த பாடல் “சூட்டிங்” நடந்த 8 நாட்களும் 64 கலைஞர்களும் ரஜினியின் பாசத்தையும் துளி கூட பந்தா இல்லாத பண்பையும் கண்டு, அனுபவித்து நெகிழ்ந்து போய் விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி இவ்வளவு இறங்கி வந்து அன்பாக பழகுபவரா என்று 64 கலைஞர்களும் மெய்சிலிர்த்து விட்டனர். 64 பேரிடமும் தனித்தனியாக குடும்ப சூழ்நிலையை விசாரித்து அவர் தன் உணர்வையும் பகிர்ந்து கொண்டதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்கிறார்கள்.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல பாடல் காட்சி படமாக்கி முடித்ததும் தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட 64 கலைஞர்கள் கையிலும் ரஜினி ஒரு கவரை திணித்தார். ஒவ்வொரு கலைஞனுக்கும் அதில் ரஜினி தன் சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் ரஜினியின் இரக்க குணத்தை நினைத்து 64 கலைஞர்களும் நெகிழ்ந்து விட்டனர். அவர்களுக்கு ரஜினி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் இரட்டிப்பாக உயர்ந்தது.

உணர்ச்சிப் பெருக்கில் இருந்த அவர்களை ரஜினி அத்துடன் விடவில்லை. 64 கலைஞர்களுடனும் தனித் தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோக்கள் 64 பேருக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

அதனால் தானோ என்னவோ இந்த 64 கலை ஞர்களும் ரஜினியுடன் பழகிய 8 நாள் அனுபவத்தை 8 ஜென்மத்துக்கு சமமானது போல கருதுகிறார்கள்.

இந்த 64 கலைஞர்களையும் ரஜினியுடன் ஆட வைத்த கலைக்கோட்டம் நிறுவனர் அன்பரசனும் ரஜினியின் பாசமழையில் நனைந்து விட்டு வந்துள்ளார். கலைமாமணி பட்டம் பெற்ற இவர் குடி யரசு தினவிழாவில் 300 கலைஞர்களை புதுமையான முறையில் ஆட வைத்து பாராட்டு பெற்றவர். இவர் கைவண்ணத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் முத்திரை பதித்துள்ளன. ஆனாலும் ரஜினியுடன் பழகிய 8 நாட்களும் மறக்க முடியாதவை என்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “ரஜினி மனித நேயம் மிக்க நடிகர். ஒவ்வொருவருடனும் அவர் எளிமையாக நெருங்கி பழகினார். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா இல்லவே இல்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப் பார். நான் அடையார் இசைக்கல்லூரியில் பேரா சிரியராக பணிபுரிகிறேன் என்றதும் சரிக்கு சமமாக உட்கார வைத்தே பேசினார். மற்றவர்கள் மனதுக்கு நன்கு மரியாதை கொடுக்கிறார். நான் அழைத்துச் சென்ற 64 பேருக்கும் 3 லட்சம் ரூபாயை அவர் கொடுத்து விட்டு, கலைஞர்கள் முகத் தில் மகிழ்ச்சியை கண்டதும், அவரும் சிரித்தார். அப் பப்பா… இவ்வளவு ஈகை குணம் உள்ளவரா என்று சிலிர்த்து போனேன். அவர் காட்டிய அன்பு கள்ளங் கபடலம் இல்லாதது. நினைத்து, நினைத்துப் பார்த்து மகிழக்கூடியது” என்றார்.

இயக்குனர் சங்கரை, “மக்கள் ரசனையை நன்கு புரிந்தவர்” என்றார். புறப்படும் போது “சஸ்பென்ஸ்” வைத்தப்படி அன்பரசன் மேலும் ஒரு தகவல் சொன்னார். “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ரஜினி கிராமிய கலைஞர்களுடன் ஆடிய பாடல் 2007-ல் சூப்பர் ஹிட் பாட்டாக இருக்கும். பட்டி தொட்டி எல்லாம் இது தான் ஒலிக்கும். அது ஒரு மனம் கவரும் பாடல்” என்றார்.

அவர் சொல்ல, சொல்ல ரஜினியின் கிராமிய இசை, நடன பாட்டை எப்போது கேட்போம் என்ற ஆவல் அதிகமாகி விட்டது… கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். விரைவில் “சிவாஜி” பாடல் கேசட் வரப்போகிறது.

Posted in Folklore, Kalaikottam, M Anbarasan, music, Preview, Pushpavanam Kuppusamy, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, Songs, Superstar, Tamil Cinema, Tamil Movies | 2 Comments »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »

Manipuri Language Banned by Naga Students

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006

மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை

இம்பால், செப். 10: மணிப்பூர் மாநிலத்தில் நாகா பிரிவினர் வாழும் 4 மலைப்பகுதி மாவட்டங்களில் மணிப்புரி மொழியைப் பயன்படுத்த நாகா மாணவர் அமைப்பு தடை விதித்துள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழியை திணிப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், மணிப்புரி பாடல்கள், திரைப்படங்களுக்கும் வரும் 17-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறுகையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழி திணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Posted in Immersion, India, Language, Manipuri, Movies, Nagaland, North East, Regional, Songs, State, Students, Tamil, Teach | Leave a Comment »