Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘fishermen’ Category

Feb 06: Eezham, Sri Lanka, LTTE, India Fishermen, Tamil Nadu, War, Media – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2008

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.


பிரயாணத் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்
சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மீதான பிரயாணத் தடை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் அததியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வண்டிகள், பயணிகள் செல்லும் பேருந்து வண்டிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிக்குச் சென்று திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து எந்த வாகனமும் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்ய முடியாது என பொலிசாரினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் பிரயாணிகள், உயர்கல்வி, மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட்ட துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள், வர்த்தகரகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜனைப் பெறுவதற்காக அனுராதபுரத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட ட்ரக் வண்டியும் பிரயாண அனுமதி மறுக்கப்பட்டு மதவாச்சி பொலிசாரினால் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவிடயம் குறித்து வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் கையிருப்பில் உள்ள ஒக்சிஜனின் அளவு நாளாந்தம் குறைவடைந்து செல்வதனால், அதனை அனுராதபுரத்தில் விரைவில் எடுத்து வராவிட்டால் வைத்தியசாலையின் நோயாளர்களின் உயிர்காக்கும் முக்கிய வைத்திய பணிகள் பாதிப்படையும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை அரசுக்கு ஊடகவியளாளர் அமைப்பு கண்டம்

சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப் பெரிய அமைப்பு இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில், அந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை அரசு அதிகாரிகள் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறித்து, இலங்கை அரசு மிகவும் ஆபத்தான அளவுக்கு அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு, விடுதலைப்புலிகள், மற்றும் பிற ஆயுதக்குழுக் களை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 பிப்ரவரி, 2008

வவுனியாவில் முழு அடைப்பு

வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று
வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடைகள் மூடப்பட்டு, பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தம்புள்ள மற்றும் தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும், இவற்றில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதையும் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புளொட் எனப்படும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த மாவட்டங்களில் அரச, தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

 


வட இலங்கையில் மோதல்கள் தொடருகின்றன

வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்
வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் தளம் ஒன்றின் மீது இன்று காலை 8.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், திருவையாறு வடக்கில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் இன்று காலை 20 குண்டுகளை வீசியதாகவும், இதன்போது அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு குழிகளுக்குள் இருந்ததாகவும், குடிசையொன்று சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி புறநகர்ப்பகுதியாகிய கணேசபுரத்தில் நேற்றுப் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி, நாகர்கோவில் உட்பட்ட போர்முனைகளில் இராணுவத்தினர் இன்று காலை 5.50 மணி முதல் 6.30 மணிவரையில் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

சுமார் 45 நிமிடங்கள் இந்தத் தாக்குதல் நீடித்ததாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் இதில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் தரப்பு சேதங்கள் குறித்து அவர்கள எதுவும் தெரிவிக்கவில்லை.

மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

 


ராமேஸ்வரம் மீனவர்களிடம் தமிழக அரசு விசாரணை

மீன்பிடி தொழிலாளர்கள்
மீன்பிடி தொழிலாளர்கள்

இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இலங்கை கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களின் படகுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவும் விதத்தில் நடந்து கொண்டதாக இலங்கை கடற்படை இந்திய அரசிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தி யிருக்கிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் நடத்திய இன்றைய விசாரணையின்போது, இந்திய கடற்படை அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் உடனிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் தமிழோசையிடம் கூறிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


 புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 பிப்ரவரி, 2008

 


இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-அம்னெஸ்டி இண்டர்நேஷணல்

அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்
அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்

இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்படுவதும், ஊடகவியாலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அதிகமாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பலர் சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அந்த அளிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவொரு சுதந்திர உள்ளூர் ஊடகத்தையும் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஊடகவியலாளர்களை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.

இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Bus, Condemn, Eelam, Eezham, Fish, fishermen, Fishing, LTTE, Media, MSM, Sea, Security, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Tourists, transit, Transport, Travel, War | Leave a Comment »

Sri Lanka’s Palali Military Complex Shelled by the LTTE

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கையின் யாழ்குடாநாட்டில் உள்ள பலாலி இராணுவ படைத்தளத்தின் மீது புலிகள் எறிகணை தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத்தின் பலாலி படைத்தளத்தின் மீது இன்று காலை 9.15 மணியளவில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற வேளை, கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் பலாலிக்குச் சென்றதாகவும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அவர்கள் பிரயாணம் செய்த விமானம் பலாலியில் தரையிறங்காமல், அவர்கள் நூலிழையில் உயிர்தப்பி கொழும்புக்குத் திரும்பிச் சென்றதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணத்திற்கான விமானப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் பலாலி தளத்தை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். எனினும் இராணுவத்தினருக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பலாலிக்கான விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்றுகாலை ஒரு தொகுதி இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தை பலாலியில் நடத்தியதாகவும், இதனை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இந்த எறிகணை தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புலிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதை போல, முக்கிய ராணுவ உயரதிகாரிகள் யாரும் இன்று பலாலிக்குச் சென்றதாக அங்கிருந்து அறிக்கைள் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், பலாலிக்கும் கொழும்பிற்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

 


தமிழக மீனவர்கள் கைது குறித்து சட்டமன்றத்தில் விவாதம்

தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

தங்கள் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் புதைத்திருப்பதாக இலங்கை அதிகாரப் பூர்வமாக இந்தியாவிற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஜனவரி 21ம் தேதி மூன்று விசைப்படகுககளில் சென்ற 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆளும் திமுகவைத் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை மீட்டுத்தர வேண்டும், அப்போது தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகாரத்துறைக்கான மத்திய இணைஅமைச்சர் அகமதுவுடன் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட மீனவர்கள் தொடர்பாக பேசியிருப்பதாகக்கூறினார். அவர்களெல்லாம் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தனது நம்பிக்கையினையும் வீராசாமி தெரிவித்தார்.

சர்வதேசஎல்லையை மீறக்கூடாது என தமிழகமீனவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், கச்சததீவு ஒப்பந்தப்படி அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர், அந்த உரிமைகளை மீட்டுத்தரும்படி மத்தியஅரசிடம் வற்புறுத்தப்படும் என்றும் வீராசாமி கூறினார்.

 


Posted in Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Jaffna, Landmines, LTTE, mines, Palali, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, Seamines, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Waters | 1 Comment »

Sri Lankan Navy plants mines along marine border with India: Defence system in Palk straits

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008

என்ன கொடுமை இது!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மாநில உளவுப் பிரிவு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது, அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுப்பது, விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வருவதை முடக்குவது போன்றவை வேண்டுமானால், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரமாக இருக்கலாம். ஆனால், இந்திய மீனவர்கள் தங்களது தொழிலைத் தொடர முடியாமல் செய்வதும், மரண பயத்துடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாவதும் எப்படி இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருக்க முடியும்?

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே உள்ள கடல் பகுதி மீன்வளம் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது மிகப்பெரிய தவறு என்று அன்றுமுதல் இன்றுவரை அத்தனை மீனவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் நியாயமான உரிமைகூட நமது மீனவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

பன்னாட்டுக் கடல் எல்லை எது என்பதை வேலியிட்டோ, சோதனைச் சாவடிகள் அமைத்தோ, எச்சரிக்கைப் பலகை அல்லது விளக்குகள் மூலமாகவோ தெளிவுபடுத்த முடியாத பரந்து விரிந்து கிடக்கும் கடல். நிலவொளி மட்டுமே துணையாக நடுக்கடலில் மீன் பிடிப்பவர்கள், எல்லையை அறிய மாட்டார்கள் என்பது பச்சிளம் குழந்தைக்குக்கூடத் தெரியும். அவர்கள் தவறுதலாக நுழைந்தால், படகுகள் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறும் பேரபாயம். என்ன கொடுமை இது?

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிற நாகரிக சித்தாந்தத்தையே தகர்க்கும் வகையில், ஒரு விரோதிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மீனவர்களை பலிவாங்கும் திட்டம்தான் இந்தக் கண்ணிவெடிகள் அமைக்கும் முயற்சி. இந்தக் கொலைவெறி முயற்சியை எப்படி அனுமதிப்பது?

ஆயுதக் கடத்தல் மற்றும் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகள், இந்திய மீனவர்களின் உயிரைப் பறிக்கும் விதத்திலும், இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் விதத்திலும் அமையும்போது அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்குமேயானால், அந்த அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்ட அரசு என்று தான் கொள்ள வேண்டும்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்குக் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கருத்துத் தெரிவிக்கும் தமிழக முதல்வர், நடக்க இருக்கும் படுகொலைகளுக்குத் துணை போகப் போகிறாரா?

கடலுக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகள், மனிதாபிமானத்துக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வைக்கப்படும் அணுகுண்டுகள். இதை நமது முதல்வர் நமது பிரதமருக்கும், நமது பிரதமர் இலங்கை அதிபருக்கும் எடுத்துக்கூறி கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால், சரித்திரம் மன்னிக்காது.

Posted in Border, defence, Defense, Eelam, Eezham, explosives, Fisheries, fishermen, Fishery, Fishing, Govt, India, International, Intl, Kachatheevu, Kachchatheevu, Katchatheevu, LTTE, marine, maritime, mines, Neduntheevu, Netuntheevu, Palk Straits, Sea, Security, Ships, Sri lanka, Srilanka, TN, Waters | 1 Comment »

Dec 21: Eezham, Sri Lanka, LTTE, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

மோதல்கள், ஆட்கடத்தல்கள் குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவலை

வடக்கு இலங்கை மோதல்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கள் காணாமல் போதல் ஆகியவை குறித்து, டிசம்பர் மாதம் 16 ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்துக்கான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, அவை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.

 

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு மற்றும் அடம்பனுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் மற்றும் யாழ் குடாநாட்டின் முகமாலையிலும் இடம்பெற்ற கடுமையான மோதல்கள் குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு மக்கள் பாதுகாப்புக் கோரி மனித உரிமைகள் ஆணையத்தில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா மோதல்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, வன்னியில் இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் சுமார் 300 மாணவர்கள் தேற்றியிருந்தனர்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

கிழக்கு பிராந்தியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் உட்பட 11 பேர் இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்டதாகவும், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பை அடுத்து அந்த மூன்று பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆட்கடத்தல்கள் சில தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எனப்படும் கருணா அணியினர் சப்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதாகவும் கண்காணிப்புக்குழு கூறியுள்ளது.

தாம் கடத்திய சிலருக்கு இந்த அணியினர் ஆயுதங்களை கொடுத்து பலவந்தமாக ரோந்தில் ஈடுபடப் பணித்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்று கண்காணிப்புக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கருணா அணியின் தலைவரான கருணா, லண்டனில் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிள்ளையான் மற்றும் கருணா பிரிவினருக்கு இடையே கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.


வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் கடும் மோதல்

 

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட படையினரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் முகாமுக்குத் திரும்பவில்லை என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, மன்னார், வெலிஓயா, முகமாலை பிரதேசங்களில் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் மற்றும் யாழ் முன்னரங்கப் பகுதிகளில் புதன்கிழமை இராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டைகளில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா தாலிக்குளம் பகுதிக்கு வாகனம் ஒன்றில் சென்றபோது, அடையாளம் தெரியாதவர்களினால் கடந்த புதன்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரது சடலம் வாரிக்குட்டியூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்த அடைமழை இன்று ஒய்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கிளிநொச்சி கல்லாறு மற்றும் கண்டாவளை பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக 400 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அப்பிரதேச வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

 

தமிழக மீனவர்கள், இலங்கை பாதுகாப்புப் படையினரின் குறுக்கீடுகள் இல்லாமல், இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதுடெல்லியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கருணாநிதியின் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக, கருணாநிதி இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. அவரது சார்பில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, முதல்வரின் உரையை வாசித்தார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 26 தாக்குதல் நிகழ்வுகளில் 8 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று கருணாநிதியின் உரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில், இலங்கைப் படையின் குறுக்கீடு இல்லாமல், இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிப்பதில் உள்ள பாரம்பரிய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது, கடல் பகுதியில் மனிதர்களாலும், பிற பொருள்களாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடைபெறும் எந்த ஒரு நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அகதிகள் வருகை, தமிழகத்தால் எதிர்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாக வடிவெடுத்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரை நான்கு கட்டங்களில் தமிழகத்துக்கு வந்த 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், 25 மாவட்டங்களில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்காக மாநில அரசு செலவிடும் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும், அகதிகளுக்காக கிலோ 57 காசு என்ற மானிய விலையில் அரிசி வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.


Posted in Boats, DMK, Eelam, Eezham, Fisheries, Fisherman, fishermen, Fishery, Jaffna, LTTE, Mannaar, Mannar, MK, Mugamaalai, Mugamalai, Muhamaalai, Muhamalai, Mukamaalai, Mukamalai, murders, Sri lanka, Srilanka, Vavuniya, War, wavuniya | Leave a Comment »

TN fishermen ‘detained’ by AP police

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2007

தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை

தமிழக மீன்பிடி படகு (ஆவணப்படம்)
தமிழக மீன்பிடி படகு (ஆவணப்படம்)

தமிழக தலைநகர் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த சுமார் 150 மீனவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள்.

அவர்கள் கடலில் தொழில் செய்து கொண்டிருந்தபோது, வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.

இதையடுத்து, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்கள் பாதுகாப்பு தேடி கரைக்குத் திரும்பியபோது, தவறுதலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா துறைமுக எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆந்திர போலீசார் மீனவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து பெருமளவு மீன்களையும் பறிமுதல் செய்துவிட்டனர்.

இந்த நிலையில், தமிழக அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக அந்த மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மீனவர்களை மீட்பதற்காக, காக்கிநாடா சென்றுள்ள, ராயபுரம் மீன்பிடித் துறைமுகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் தமிழக மீன்வளத் துறையின் உதவி இயக்குநர் எம். நஸீருல்லா இதுதொடர்பாக பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

 


Posted in Andhra, AP, Arrest, Border, Cyclone, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, India, Interstate, Intrastate, Ocean, Rain, Sea, State | Leave a Comment »

Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

சேதுத் திட்டம் யாருக்காக?

டி.எஸ்.எஸ். மணி

கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.

அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.

* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.

* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.

* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.

* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.

* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.

* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.

* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.

* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.

* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.

* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.

* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.

* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.

* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.

* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.

* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.

* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.

* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.

* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.

அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.

* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.

ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.

“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.

* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.

(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)

————————————————————————————————————————————–

சேது: அபாயத்தின் மறுபக்கம்!

ச.ம. ஸ்டாலின்


சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.

உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.

சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.

தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.

சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.

இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.

சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.

மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.

சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.

ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.

Posted in Adams, Analysis, Aquarium, Bay, Bay of Bengal, Boats, Bribery, Bridge, Carbon, Catamaran, Commerce, Consumption, coral, Corruption, Eco, Ecology, Economy, emissions, energy, Environment, Exports, Facts, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Freight, Gas, Hindu, Hinduism, Hindutva, Impact, Information, infrastructure, kickbacks, Leaks, Life, Mannaar, Mannar, Money, Nature, Nautical, Ocean, oil, Palk Straits, Petrol, Pollution, Project, Ram, Ramar, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, RamSethu, Reefs, Religion, Science, Scientific, Sea, Seafood, Sethu, Setu, Ships, Straits, Study, Tourism, Tourists, Transport, Transportation, Trawlers, Tsunami, Tuticorin, UN, UNDP, UNESCO, Water | 1 Comment »

Tamil Nadu’s fishing industry vs Sri Lankan naval personnel: Harassment of Indian fishermen

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

மீனவர் வாழ்வு விடியுமா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.

நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.

மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.

ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.

சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?

கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?

பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.

இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?

தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.

தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.

கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.

இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.

இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.

“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.

இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?

Posted in Arms, Boats, Bombs, borders, Boundary, Capture, Catch, Cocaine, Contraband, dead, defence, Defense, Drugs, Exports, Extortion, Extremists, fiberglass, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Harassment, Illegal, Imprison, India, Industry, International, island, Jail, Jury, Justice, Kachatheevu, Kachathivu, Kachativu, Katcha Theevu, Kodiakkarai, kodiyakkarai, Law, LTTE, Maginda, Magindha, Magintha, Mahinda, Mahindha, Mahintha, Marijuana, maritime, Misa, Narcotics, Nautical, Navy, Ocean, Oceanery, Order, Peace, POTA, Prison, Rajapaksa, Rajapakse, Refugees, release, SAARC, Sea, Sector, Shoot, Shot, Shrimp, Squids, Sri lanka, Srilanka, TADA, Talaimannar, Terrorism, Terrorists, Thalaimannar, Tourism, Tourist, Travel, Trawlers, Trespass, War, Waters, Weapons, World | Leave a Comment »

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


Posted in abuse, ADMK, ammunition, Arms, Attack, Contraband, dead, DMK, Eelam, Eezham, Fish, fishermen, Freight, Government, Jordan, LTTE, Military, Naval, Navy, Pirate, Robbery, Sea, Ship, Sri lanka, Theft, TN, Transport, Transportation, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 4 Comments »

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »

Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

தொழில்நுட்பம் உயிர் காக்கும்

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.

கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.

சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.

இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.

Posted in Arms, borders, Defense, Dispatch, Dispute, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishers, Fishery, Fishing, HAM, LTTE, Military, Narcotics, Naval, Navy, Police, Pulikal, Radio, Ramesvaram, Rameswaram, Sea, Sea tigers, Sri lanka, Srilanka, Surveillance, TN, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 1 Comment »

Is LTTE planning for a second suicide attack in India? – Dinamani

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இந்தியாவில் மற்றொரு தற்கொலை தாக்குதல் நடத்த புலிகள் திட்டமா?

சென்னை, பிப். 15:கோடியக்கரை கடல் பகுதியில் 5 பேருடன் பிடிபட்ட இலங்கைப் படகிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் விடுதலைப் புலிகள் மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அந்தப் படகில் இருந்த தற்கொலைப் படை பெல்ட் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய ஐஜி ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.

இந்த பெல்ட் எடை மற்றும் அது தயாரிக்கப்பட்ட விதம், ஒருவரை மட்டுமே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியவில்லை. மிகப் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் நோக்கில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடல் எல்லையில் இதுவரை பிடிபட்ட ஆயுதக் கடத்தலில் இது மிகப் பெரிய கடத்தலாகும். பிடிபட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் பிடிபட்டவர்கள் பற்றிய முழுவிவரமும் தெரிய வரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

பிடிபட்ட படகிற்கு எவ்வித பதிவுச் சான்றிதழ் விவரமும் இல்லை. இந்தப் படகு தமிழகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக படகுகள் அனைத்தும் மண்டபம் அல்லது தூத்துக்குடி பகுதியில்தான் பதிவு செய்யப்படும்.

படகில் உள்ள பதிவு எண், தமிழக பதிவு எண்ணுடன் ஒத்துப் போவதாக அமையவில்லை என்றும் ராஜேந்தர் சிங் தெரிவித்தார்.


 பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்
பிடிப்பட்ட படகுடன் இந்திய கடற்படையினர்

தமிழகத்தின் கோடியக்கரை கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட படகு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது – தமிழக காவல்துறைத்தலைவர்

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்திய கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய படகு இலங்கையைச் சேர்ந்தது என்றும், அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவின் படகு என்றும், தமிழக காவல்துறைத்தலைவர் டி.முகர்ஜி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தப் படகிலிருந்த ஐந்துபேரில் அருமைநாயகம் புருஷோத்தமன், சகாயம், ஆறுமுகம், சிவபத்மனாபன் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் இராமச்சந்திரன் என்பவர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.

இவர்களில் அருமைநாயகம் புருஷோத்தமன் என்பவர் கடற்புலி பிரிவைச்சேர்ந்தவர் என்றும், சிவ பத்மனாபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்த முகர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஏற்கனவே இலங்கைக்கு ஆயுதங்களை கடத்தியதான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் என்றும் கூறினார்.

இந்தப் படகு இரணை தீவிலிருந்து யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்ற வழியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரை தவிர்த்து வரும்போது இந்தியக் கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படகோ, படகில் இருந்த நபர்களோ, பொருட்களோ, ஆயுதங்களோ தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வரவில்லை என்று தமது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் முகர்ஜி கூறினார்.


தேவை எச்சரிக்கைதமிழகக் கடலோரப் பகுதிகளில் 2 நாள்களில் அடுத்தடுத்து படகுகளில் ஆயுதங்களும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது, பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்படுத்துவதாக உள்ளது.ஒரு படகு கோடியக்கரைப் பகுதியில் சிக்கியுள்ளது. அது மீன்பிடி படகுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் படையினர் சந்தேகத்தின்பேரில் அப் படகை மறித்து சோதனையிட்டதில் அதில் மனித வெடிகுண்டுக்குப் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள், ஏகே 56 ரக துப்பாக்கிகள், குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் மூவரும், தமிழகத்தைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்தபோது அப்பொருள்களைக் கடலூரில் ஒப்படைக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.இதேபோல் தனுஷ்கோடி பகுதியில் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் அலுமினியக் கட்டிகள், வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், இரும்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சில வாரங்களுக்கு முன்தான் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த இரும்பு குண்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை மும்பையிலிருந்து தமிழகம் வழியே இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தன. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் இனப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வரும் சூழ்நிலையில் போராளிகளுக்காக இவை கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில்தான் கடத்தல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும்போதும், இலங்கை அமைச்சர்கள் இந்தியா வரும்போதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லும்போதும் இது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, சண்டைக்குப் பயந்து நாள்தோறும் இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான உணவு, தங்குமிட வசதி செய்துதர வேண்டியுள்ளது. இச் சூழ்நிலையில் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் தமிழகத்துக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக வன்முறைக்கு வித்திடும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் எவரும் துணை நிற்க முடியாது. இந்த நிலையில் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கைப்பற்றப்பட்ட ஒரு பொருள் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதற்கான சாதனம் என்பதால் அது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு படகில் இருந்த வெடிபொருள்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். கடந்த காலச் சம்பவங்களை மனத்தில்கொண்டு, இப்போதைய சூழ்நிலையை போராளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.


இதுவரை பறிமுதலான வெடிபொருள் எவை? “வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்’

சென்னை, பிப். 16: தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் வெடிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர் என்றார் டிஜிபி டி.முகர்ஜி.2006-ல் இருந்து மாநில போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்களின் பட்டியல் விவரம்:2006 நவம்பர் 29-ல் மானாமதுரை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து 30 மூட்டைகளில் வெடிமருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஹைதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.அதைத்தொடர்ந்து பெரியமேட்டில் (சென்னை) 5 ஆயிரம் கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 7,500 கிலோ இரும்பு குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்கள் 5 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து இரும்பு குண்டு கடத்தியது தெரியவந்தது.2007 பிப்ரவரி 12-ல் தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில் சென்ற நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இருந்து 92 சாக்கு மூட்டைகளில் 2,800 கிலோ அலுமினிய உலோக கட்டிகள், உலோக வளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த முருகேசன், கணேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

2007 பிப்ரவரி 14-ம் தேதி அதே பகுதியில் 126 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 3,200 கிலோ அலுமினிய உலோகக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயகரன், சுகுமார், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

“”மும்பை, ஹைதராபாத், குஜராத்தில் இருந்து வெடிபொருள்கள் தமிழகத்தின் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார் டிஜிபி டி.முகர்ஜி.


தமிழ்நாட்டில் இருந்து ஆயுதங்கள் கடத்தும் விடுதலைப்புலி தளபதி: கைதானவர்கள் பரபரப்பு தகவல்சென்னை, பிப். 16-கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை இரவு விடுதலைப்புலிகளின் படகை இந்தியக் கட லோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர்.அதில் இருந்த2 விடு தலைப்புலிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,700 கிலோ வெடிப் பொருட்கள் மற்றும் மனித வெடி குண்டு பயன்படுத்தும் வெடிகுண்டு பெல்ட் கைப்பற்றப்பட்டன.

முதல் கட்ட விசாரணையில் இரனைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இந்த படகு சிங்கள கடற்படையிடம் சிக்காமல் இருப் பதற்காக இந்திய கடல் பகுதிக்குள் சுற்றி வந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையிடம் சிக்கியது தெரிய வந்தது. அந்த படகில் இருந்த 2 விடுதலைப்புலிகளில் அருமைநாயகம் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர். சிவபத்ம நாபன் புலிகள் அமைப்பு டிரைவர் ஆவார். இவர்கள் இருவரிடம் இருந்தும் 2 சயனைடு குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த 2 சயனைடு குப்பிகளில் கொடிய விஷம் நிரப்பப்பட்டிருந்தது. பொது வாக சிங்கள ராணுவத்திடம் சிக்கனால் சயனைடு குப்பிகளை தின்று விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொள்வார்கள். இந்திய கடற்படையிடம் சிக்கிய போது 2 விடுதலைப்புலிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.

சென்னை கொண்டு வரப்பட்ட அவர்களிடம் புதன்கிழமை இரவு முழுக்க மத்திய-மாநில உளவுத் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள். “வெடிகுண்டு பெல்டு” யாரை கொல்ல தயாரிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு கைதான விடுதலைப்புலிகளால் சரியான தகவலை சொல்லத் தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக கடத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதம் தொடர்பாக அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் விடு தலைப்புலிகளின் ஆயுதக் கடத்தல் மையங்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குந்துகல், பாம்பன், மண்டபம், வேதலை ஆகிய கடலோரப் பகுதிகள் வழியாக விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், மருந்து வகைகள் மற்றும் தேவையான பொருட்கள் செல்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து தினமும் டன் கணக்கில் விடு தலைப்புலிகளுக்கு பல்வேறு வகை பொருட்கள் செல்கிறது. இந்த பொருள்களை வாங்கி, கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு வந்து படகுகளில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறு குழுக் கள் உள்ளன. இவர்களை ஏஜெண்டு போல இருக்கும் சிலர் இயக்குகின்றனர்.

இந்த ஏஜெண்டுகளுக்கு தலைவன் போல ஒருவர் இருப்பது கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவர் ஆவார். அவர் பெயர் கண்ணன் என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதி யில் இவர் வசித்து வருவதாக தெரிகிறது.

கண்ணனின் முக்கிய வேலையே விடுதலைப்புலி களுக்கு தேவைப்படும் வெடி பொருட்கள், மருந்துகள், உணவுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்கி அனுப்புவதுதான்.

விடுதலைப்புலிகளின் தலைமையிடம் இருந்து வரும் தகவல்களுக்கு ஏற்ப செயல்படும் கண்ணன் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு குழுக்களை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு குழுவிலும் 2 அல்லது 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வேலையை கண்ணன் கொடுப்பார்.

எந்த குழு என்ன மாதிரி வேலை செய்கிறது என்பது யாருக்குமே தெரியாது. குறிப் பாக ஒரு குழு வேலை மற்ற குழுவுக்கே தெரியாது. இதன் மூலம் ரகசியங்கள்ë கசியாமல் வெடிபொருள் கடத்தலை கண்ணன் திறமையாக செய்து வந்துள்ளார்.

வெடிபொருள், உணவுக் கடத்தலுக்கு கண்ணன் விடுதலைப்புலிகளையோ, புலிகளின் படகையோ பயன் படுத்துவதில்லை. தமிழக மீனவர்களையே பயன்படுத்தி உள்ளார். தமிழக மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி அவர் ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு சில மாநிலங்களிலும் கண்ணன் ஆட்களை வைத்து இருப்பதாக தெரிகிறது. வெடி பொருட்களை சேகரிக்க மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அவர் ஏஜெண்டுகளை வைத்துள்ளார். சில சமயம் இந்த வெடி பொருள்களை கண்ணனே நேரிடையாக யாழ்ப்பாணத் துக்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு வருவார்.

கைதான விடுதலைப்புலிகள் மூலம் கண்ணன் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்து விட்டன. புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கண்ணன் தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக ரகசியமாக தங்கி இருந்து ஆயுதம் கடத்தி வந்திருப்பது உளவுத்துறையினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரை பிடிக்க தமிழகம் முழுக்க கிïபிராஞ்ச் போலீசார் நேற்றிரவே அதிரடி வேட்டையை தொடங்கி உள்ளனர்.

அகதிகள் முகாம்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலிகளின் படகு பிடிபட்டதுமே கண்ணன் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தளபதி கண்ணன் எந்த ஊரில் தங்கி இருந்தார் என்ற தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். கண்ணனை போலவே அவருக்கு உதவியாக இருந்த ஏஜெண்டுகளும் தப்பி ஓடி விட்டனர். அண்டை மாநிலங்களுக்கு இவர்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைதான விடுதலைப்புலிகளிடம் சென்னை போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. 2 விடு தலைப்புலிகளையும் 2 வாரம் காவலில் எடுத்து முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக போலீசார் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் மனு செய்தனர்.

கிïபிராஞ்ச் போலீசார் 2 விடுதலைப்புலிகளையும் கடலோர மாவட்டங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இந்த விசாரணை மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ கத்தில் இருந்து யார்- யாரெல்லாம் பொருட்கள் சேகரித்து கொடுத்து உதவினார்கள் என்பது தெரிய வரும்.


வெடிகுண்டு `பெல்ட்’டுடன் வந்தவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளா? சென்னை, பிப். 15-கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடி பொருட்களுடன் பைபர் படகு ஒன்று பிடிபட்டது.இந்தியக் கடலோரக் காவல்படையினர் அந்த படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த 3 இலங்கை தமிழர்கள், 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

படகை சோதனையிட்டபோது ஏ.கே.56 ரக துப்பாக்கி, 124 தோட்டாக்கள், 5 கையெறி குண்டுகள், 7 கிலோ வெடி பொருட்களுடன் கூடிய தற்கொலை படை இடுப்பு பெல்டு, 5 டெட்டனேட்டர்கள், 7 கிலோ ரசாயன பவுடர், மற்றும் 8 டிரம்கள் நிறைய திரவ ரசாயனப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதோடு ஒரு சாடிலைட் போன் மற்றும் தேவையான அளவு உணவு பொருட்கள் இருந்தன. அரிசி, பருப்பு மூட்டைகள், தேங்காய் களும் சில நாள் சமையலுக்கு போதுமான அளவுக்கு இருந்தன.

சாதாரண மீன்பிடி படகு போல 22 அடி நீளத்தில் இருந்த அந்த பைபர் படகுக்குள் மின்னல் வேகத்தில் செல்ல உதவும் நவீன என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. சமீபத்தில்தான் அந்த படகு கட்டப்பட்டது போல இருந்தது.

பொதுவாக தமிழ் நாட் டில் கட்டப்படும் மீன் பிடி படகுகள் தூத்துக்குடி அல்லது மண்டபம் பகுதியில் பதிவு செய்யப்படும். ஆனால் பிடிபட்ட படகு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஸ்ரீராமஜெயம் என்ற பெயரில் தமிழக மீன்பிடி படகு போல ஊடுருவி இருந்த அந்த படகுக்குள் உலகின் எந்த பகுதிக்கும் செல்ல வழி காட்டும் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டு இருந்தது.

இவை அனைத்தையும் பார்த்த கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு சந்தே கம் ஏற்பட்டது. வெறும் ஆயுதக் கடத்தலுக்காக இந்த நவீன படகு தமிழக கடலோரத்துக்கு வரவில்லை என்பதை உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த படகும், அதில் இருந்த 5 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்ட 5 பேரும் சகாயம் (44), ஆறுமுகம் (53), அருமைநாயகம் (28), ராமச்சந்திரன் (42), சிவபத்ம நாபன் (31), என்று தெரிய வந்தது. அவர்களிடம் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள், கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், 5 பேரும் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது தெரிய வந்தது.

கோடியக்கரைக்கு 22 கடல் மைல் தொலைவில் பாக்.ஜலசந்தி பகுதியில் அவர்கள் யாரோ ஒருவரது சிக்ன லுக்காக காத்து இருந்தபோது பிடிபட்டுள்ளனர். பிடிபட்ட 5 பேரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள். அவர்கள் கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வர திட்டமிட்டிருந்தது தெரிகிறது.

இந்தியாவுக்குள் மற்றொரு பயங்கர தற்கொலை தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் வந்து இருக்கலாம் என்று உளவுத் துறையினர் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து உளவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டுள்ள வெடிகுண்டு பெல்ட் தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுவதுதான். முக்கியப்பிரமுகர்களை குறி வைத்து இந்த பெல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முக்கிய பிரமுகர் யார் என்று எங்களுக்கு இதுவரை தெரியவில்லை” என்றார்.

அந்த உளவுத் துறை அதிகாரி மேலும் கூறுகையில், “தற்கொலை பெல்ட்டை வடிவமைத்து அனுப்பியது விடு தலைப்புலிகள் தான் என்பதில் சந்தேகமே கிடையாது என்றாலும் கோடியக்கரை பகுதிக்கு இதை வரவழைத்த பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை” என்றார். தனிப்பட்ட நபரை மட்டுமின்றி பலரை தீர்த்து கட்டும் வகையில் வெடிகுண்டு பெல்ட் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டுக்குள் ஊடுருவி பத்ம நாபா, ராஜீவ் காந்தி ஆகி யோரை கொன்ற போது இதே கோடியக்கரை வழியாகத்தான் வந்து சென்றனர். அதே பகுதியில் தற்கொலை படை வெடிகுண்டு பெல்ட் பிடிபட்டுள்ளதால் உளவுத்துறையினர் மிகவும் உஷாராகி உள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்து ஏதோ ஒரு பெரிய தற்கொலை தாக்குதலுக்கு முயற்சிப்பதாக நினைக்கிறார்கள்.

ராஜீவை கொல்ல விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் 2 கிலோ வெடி பொருள் பெல்ட்டைத் தான் பயன்படுத்தினார்கள். தற்போது பிடிபட்டுள்ள வெடி குண்டு பெல்ட்டில் 7 கிலோ வெடிபொருள் உள்ளது. எனவே சிவராத்திரி விழாவை சீர்குலைக்க அல்லது தேர்தலில் வன்முறையை ஏற்படுத்த அது கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெடிகுண்டு பெல்டு இருந்த படகை பிடிக்கும் முன்பு நிறைய வயர்லஸ் சிக்னல்களை கடலோரக் காவல் படையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அந்த வயர்லஸ் பேச்சு என்ன என்பது அதிகாரிகளுக்கு புரிய வில்லை. வயர்லஸ் பேசியவர்கள் ஈழத்தில் இருந்து ஏதோ தகவல் கொடுத்து இருக் கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது.

7 கிலோ வெடிகுண்டு பெல்டு 5 பிரிவுகளாக பிரித்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தது. இது நூற்றுக்கணக்காணவர்களை கொன்று குவித்து விடும் சக்தி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்துக்கு இந்த பெல்டு தயாரிக்கப்பட்டுள்ளதை உளவுத்துறையினர் ஒத்துக்கொண்டனர்.

விடுதலைப்புலிகளின்தற் கொலை படைதாக்குதலுக்கு பயன்படும் பெல்டு பிடிபட்டுள்ளதால் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் “தமிழக கடலோரத்தில் வெடிபொருள் மற்று வெடிகுண்டு பெல்ட்டை கொடுத்து விட்டு இலங்கைக்கு திரும்பி வந்து விட தங்களுக்கு உத்தரவிடப்பட்டது” என்று கூறி உள்ளதாக தெரிகிறது.

அவர்களிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெடிகுண்டு பெல்ட்டு பிடிபட்டுள்ளதால் கடலோர பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

கோடியக்கரை கடல் பகுதியில் விமானப்படை ரோந்து கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் சப்ளை: வெடிபொருள் கடத்தல் கும்பல் தலைவன் அடையாளம் தெரிந்ததுராமநாதபுரம், பிப். 15-ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 3 நாட்களில் 3 படகுகளில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டன.

ஏ.கே.56 துப்பாக்கி, கண்ணி வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு அணியும் ஜாக்கெட், அலுமினிய தகடுகள், பயங்கர அழிவை ஏற்ப டுத்தும் வெடி குண்டு கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் போன்றவை பிடிபட்டன.

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு இவற்றை கடத்தி சென்றதாக இது வரை 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடம் இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தியபின் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

பின்னர் அவர்களிடம் தமிழக போலீசாரும், உளவு பிரிவு, கிï பிரிவு அதிகாரி களும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

ஆயுதக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மீன்பிடி படகு போன்ற தோற்றம் கொண்ட அதிநவீன விரைவு படகு என்பதும் அதில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின்கள் உயர்சக்தி கொண்டவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் வாங் கப்பட்ட இந்த படகு பின்னர் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள் ளது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மீன்பிடி படகு போல வும் அதேநேரம் ரோந்து கப்பல்களை ஏமாற்றி காற்றை கிழித்து செல்லும் வேகத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து கரை யோர போலீசாருக்கு தெரிவித்த னர்.

இதையடுத்து போலீசார் தூத்துக்குடியிலிருந்து படகை வாங்கியவர் யார்? என்று விசாரித்தனர். இதில் தனுஷ் கோடியைச் சேர்ந்த கோமாளி என்பவரின் மகன் முத்தீஸ்வரன் (வயது 25) என்பது தெரிய வந்தது. படகை வாங்கிய இவர் அதை சீரமைத்து இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தி செல்ல பயன்படுத்தியுள்ளார்.

போலீசாரின் விசார ணையில் தெரிய வந்த இந்த விவரங்கள் உயர் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டன.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு திருஞானம் உத்தரவுப்படி படகை வாங்கியவர், அதை சீரமைத்தவர், கடத்தலுக்கு துணை போனவர்கள் ஆகியோரை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட் டன. அவர்கள் உள்ளூர் போலீசார் மற்றும் உளவுப் பிரிவு, கிï பிரிவு போலீசாரு டன் இணைந்து முத்தீஸ்வரன் பற்றிய தகவலை சேகரித்த னர்.

இதில் முத்தீஸ்வரனும் அவரது கும்பலும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. தமிழ் நாட்டின் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட் களையும் ரகசியமாக சேகரித்து ராமேசுவரம் பகுதிகளுக்கு ஒரு கும்பல் கொண்டு வந்து சேர்க்கும்.

பின்னர் முத்தீஸ்வரன் தலைமையிலான கும்பல் படகு மூலம் இதனை இலங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கும். இவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் முத்தீஸ்வரன் மூளையாக செயல்பட்டுள்ளார்.

ஆயுதக்கடத்தலின் ஆணி வேரை மோப்பம் பிடித்த போலீசார் இதற்கு தலையாக செயல்பட்ட முத்தீஸ்வரனை பிடிக்க வலை விரித்தனர். இதை உணர்ந்து கொண்ட முத்தீஸ்வரன் தலைமறைவாகி விட்டார். பல இடங்களிலும் தேடி பார்த்த போலீசார் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே முத்தீஸ்வரன் இலங்கைக்கு ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

எனவே முத்தீஸ்வரனின் கூட்டாளிகளை வளைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2, 3 நாட்களில் அவர்கள் போலீஸ் வலையில் சிக்குவார்கள் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதாகவும் வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கைக்கு தொடர்ந்து ஆயுதக் கடத்தல் நடந்து வருவதால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்துப யாரால்ப சேகரித்து அனுப்பப் படுகிறது என்பது பற்றியும் இன்னொரு தனிப்படை போலீசார் ரகசியமாக விசா ரணை நடத்தி வருகிறார் கள்.

மேலும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் ராமேசுவரம் கடற்கரையை ஒட்டியுள்ள முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, மண்டபம் மற்றும் இயற்கை அரண்களான கடற்கரை காட்டுப்பகுதிக்குள் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ராமேசுவரம் பகுதியில் எங்காவது ஆயுதக்குவியல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாப என்பதை கண்டுபிடிக்க உளவுப் பிரிவு போலீசார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதக்குவியல் கண்டு பிடிக்கப்பட்டாலோ அல்லது முத்தீஸ்வரன் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது பிடிபட்டாலோ இதுபற்றிய முழு விவரம் தெரிய வரும். இதற்காக அனைத்து பிரிவு போலீசாரும் அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


கடலோரக் காவல் படைக்கு “உளவு’ சொன்ன விடுதலைப் புலிகள்?

சென்னை, பிப். 17: இந்தியக் கடலோரக் காவல் படைக்கு, விடுதலைப் புலிகள் “உளவு’ கூறியது அம்பலமாகியுள்ளது.அது, இலங்கை ராணுவத்தினர் ரேடாரில் தங்களது படகை நெருங்கி விட்டதை அறிந்த விடுதலைப் புலிகள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்கவே இந்தியக் கடலோரக் காவல் படைக்கு “உளவு’ கூறியதாகக் கூறப்படுகிறது.இதன் அடிப்படையிலேயே இந்தியக் கடலோரக் காவல் படையினர் “ரமாதேவி’ என்ற படகின் மூலம், இந்தியப் பெருங்கடலின் பாக் நீரிணை பகுதியில் நின்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகைப் பறிமுதல் செய்துள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சமயத்தில், விடுதலைப் புலிகள் படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில உளவுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வெடிபொருள்கள் கடத்துவதற்கு, தமிழகத்தை ஒரு வழித்தடமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் உதவியாக உள்ளனர்’ என்று உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மிகவும் அதிநவீன படகுகளை வைத்துள்ளனர். அவர்களின் படகு 100 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஆனால், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் உள்ள படகின் வேகம் 60 கடல் மைல் கொண்டது. மேலும் தங்களை யாராவது நெருங்கும் பட்சத்தில் எதிரியை அழித்து விட நினைப்பார்கள். அல்லது தாங்களே உயிரை மாய்த்துக் கொள்வர்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு படகை இழப்பது என்பது மிகுந்த பொருட் செலவை ஏற்படுத்தும். அந்தக் காரணத்தினால் தான் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு உளவு சொன்னதாகத் தெரிகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயத்தில் இந்தியாவில் உள்ள நக்சலைட், மாவோயிஸ்டுகள் தீவிரவாதத்தை விட்டு மெல்ல விலகி ஜனநாயகப் பாதையில் கவனம் செலுத்த முன்வந்துள்ளனர். எனவே, அவர்களிடம் உள்ள ஆயுதங்கள், விடுதலைப் புலிகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றனவா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

காவலில் வைத்து விசாரிக்க முடிவு: விடுதலைப் புலிகள் கைது வழக்கு, கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க “கியூ’ பிரிவு போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.


Dinamani Editorial – Feb 23 2007தன்னைத்தான் காக்க

ஆயுதம் தயாரிக்க உதவும் பொருள்களை இலங்கைக்குக் கடத்தியதாக ஒரு சிலரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.

இவை விடுதலைப் புலிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை என்பதும் உறுதியாகியுள்ளது. சிலதினங்களுக்கு முன்பு தமிழகக் கடலோரப் பகுதியில் பயங்கர வெடிபொருள்களுடன் கடற்புலிகளின் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் உதவியும் புலிகளுக்கு இருக்கிறது என்பதை ராக்கெட் லாஞ்சர்கள் விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆயுதம் கடத்தும் பூமியாகத் தமிழகத்தை மாற்றிவிட்டனர் என்று எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும் குறை கூறியுள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி கடற்படை நிகழ்ச்சியொன்றில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, “தெரியவந்திருப்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. தெரியவராத இதுபோன்ற ஆயுதக் கடத்தல்கள் அதிகமானவை’ என்று கூறியுள்ளார். இது தமிழகத்தின் மீதான மறைமுகக் குற்றச்சாட்டு என்றே கருதப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல பகுதிகள் தற்போது இலங்கை ராணுவத்தின் கைக்கு வந்துள்ளன. புலிகள் தங்கள் பலத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அதற்கான போர் ஆயத்தம்தான் இந்த ஆயுதக் கடத்தல்கள்.

புவியியல் ரீதியாக, விடுதலைப் புலிகளால் ஆயுதம் கடத்தக்கூடிய வழி- தரைவழி என்றால் தமிழகம்; கடல்வழி என்றால் தமிழகக் கடற்கரை. இதைத் தவிர வேறு வழியே இல்லை.

இந்தக் கடத்தலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், இவர்களை பின் நின்று இயக்கும் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான். புலிகளின் ஊடுருவல் உள்ளதா என்பதைக் கண்டறிய கடலோரக் கிராமங்களில் சோதனை நடத்துவதாகத் தமிழகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் மீது தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாடு காட்டும் கருணை வேறு; விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதைப் புரிந்துகொண்டு அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் கடமை வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தீர்வாக அமைய முடியாது. பேச்சுவார்த்தை மூலம் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் எந்த நடவடிக்கையும் அப்பாவி மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

அதேநேரத்தில், “தமிழக மண்ணில் உங்கள் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தமிழகத்தைக் குற்றவாளி ஆக்காதீர்கள்’ என்று இங்குள்ள அரசும், தமிழக மக்களும் புலிகளைக் கேட்டுக்கொண்டால் அது யாரும் மறுக்க முடியாத நியாயமாக இருக்கும்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டமே இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இன்று ஆயுதக் கடத்தல் உதவிகளைச் செய்து கொண்டிருப்போர், நாளை வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுகின்ற ஆயுத வியாபாரிகளாக மாறும் ஆபத்து உள்ளது.

மேலும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையினால் தமிழகம் தேவையில்லாமல் ஒரு பழியை ஏற்க நேரிட்டது. மீண்டும் அதே சூழல் உருவாகக் கூடாது என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாக இருக்க முடியும்.


அரசியல்வாதிகளுக்கு கருணாநிதி எச்சரிக்கை: புலிகளுடன் தொடர்பிருந்தால் கடுமையான நடவடிக்கை
சென்னை, பிப். 24: விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தை வழங்கும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன.

இவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கு ஆயுத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், கண்காணிக்கப்படுகிறார்கள்.

அத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன. தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும் நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாகக் கருதிக் கொண்டு செயல்படக் கூடாது.

நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.


தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை – த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆயுதம் தயாரிக்கும் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கடத்தவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்காக தமிழகத்தில் இருந்து ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடிய மூலப் பொருட்களை கடத்தும் முயற்சிகள் சிலவற்றை தாம் முறியடித்துள்ளதாக, இந்திய கடற்படையும், கடலோறக் காவற் படையும் கூறிவருகின்றன. இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மூலப் பொருட்கள் பல கைப்பற்றப்பட்டன.

ஆனால் இந்த சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செல்வன் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், பல ஆண்டுகளாக கடத்தல் நடைபெற்றுவருவதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இப்பொருட்கள் தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்தார்.


Posted in Arms, Attack, Belts, Cyanide, Defense, Dinamani, Double Jeopardy, Eelam, Eezham, fishermen, Karuna, Karuna Faction, Karuna Group, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kodiakarai, kodiyakkarai, Law, Left, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Maoist, Naval LTTE, Navy, Navy Tigers, Naxal, Naxalbari, Order, Police, Pushpavanam, Radar, Rajeev Gandhi, Rajiv Gandhi, Rajiv Gandi, Ramadevi, Sea tigers, Spy, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, Trafficking, Vedaranyam, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons, WMD | Leave a Comment »

Rameswaram – Eight fishermen missing

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் மாயம்

ராமேசுவரம், பிப்.5: ராமேசுவரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன்துறையினரிடம் படகு உரிமையாளர் புகார் செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பின.

இந் நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பாண்டித்துரை ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர்கள் ராமேசுவரம் மீன் துறையினரிடம் புகார் செய்தனர்.

Posted in Arabian Sea, Bay of Bengal, Boats, Capsize, Fish, Fisheries, fishermen, Fishery, Indian Ocean, missing, Rameswaram, Sea, Seashore, Trawlers, Welfare | Leave a Comment »