Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘YSR’ Category

‘No protection for Tamil Movie Producers’ – Kasthoori Raja & Selvamani

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008


தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை
“சினிமா எடுப்பதை விட கூலி வேலைக்கு போகலாம்”
சினிமா பட விழாவில், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா-செல்வமணி வேதனை


சென்னை, பிப்.1-

“சினிமா தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. படம் எடுப்பதை விட, கூலி வேலைக்கு போகலாம்” என்று ஒரு பட விழாவில் டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி ஆகிய இருவரும் பேசினார்கள்.

சினிமா பட விழா

புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து, சந்தர்நாத் டைரக்டு செய்துள்ள புதிய படம், `கண்களும் கவிபாடுதே.’ கே.ஜி.ரங்கமணி, ஆர்.நந்தகுமார், பி.ரமேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

விழாவில், `பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் கஸ்தூரிராஜா, செல்வமணி, பட அதிபர் எச்.முரளி, இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் பேசும்போது, “திரையுலகுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறது. என்றாலும், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக வந்த 6 படங்களும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்று கூறினார்.

கே.ஆர்.ஜி.

`பிலிம்சேம்பர்’ தலைவர் கே.ஆர்.ஜி. பேசும்போது, “50 படங்கள் தயாரித்தவன், நான். ஆனால் இப்போது, செல்வமணியிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா? என்ற சூழ்நிலையில் இருக்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசவந்த டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-

“50 படங்கள் தயாரித்த கே.ஆர்.ஜி, செல்வமணியிடம் உதவியாளராக போகலாமா என்ற சூழ்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். நான், 35 படங்களில் உதவி டைரக்டராக வேலை செய்து இருக்கிறேன். 20 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 12 படங்களை தயாரித்து இருக்கிறேன். இனிமேல் படம் எடுக்க வேண்டுமா? என்ற கேள்விக்குறி பெரிதாக என் முன் நிற்கிறது.

ஒரு நடிகரால் 100 படங்கள் நடிக்க முடிகிறது. ஒரு லைட்மேனால் 100 படங்களில் பணிபுரிய முடிகிறது. ஆனால், இந்த காலத்தில் 10 படங்களுக்கு மேல் யாராவது தயாரிக்க முடிகிறதா? இதற்கு காரணம் என்ன? என்று தெரிந்துகொள்ளும் பொறுப்பை, ராம நாராயணனிடம் ஒப்படைக்கிறேன்.

பாதுகாப்பு இல்லை

தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தன்மானத்துடன் தொழில் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இப்போது நான் ஒரு படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக படப்பிடிப்பு நடத்திவிட்டு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலை பற்றி திரையுலகம் ஆலோசனை நடத்தவேண்டும். அதற்கான முயற்சியை, ராம நாராயணன் எடுக்க வேண்டும்.”

இவ்வாறு கஸ்தூரிராஜா பேசினார்.

செல்வமணி

அடுத்து பேச வந்த டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:-

“என்னிடம் உதவியாளராக சேர்ந்து விடலாமா என்று யோசிப்பதாக கே.ஆர்.ஜி. வருத்தத்துடன் சொன்னார். படம் எடுப்பது அந்த அளவுக்கு `டார்ச்சர்’ ஆன விஷயமாக இருக்கிறது.

சினிமா துறையில் இருந்தே விலகிவிடலாமா? என்ற எண்ணம் வருகிறது. வேறு ஏதாவது கூலி தொழில் செய்யலாம் போல் இருக்கிறது. சினிமாவில் செலவுகள் அதிகரித்து வருகிறது. நான் டைரக்டு செய்த `புலன் விசாரணை’ படத்தில், மிகப்பெரிய `கிளைமாக்ஸ்’ சண்டை காட்சி இடம்பெற்றது. அப்போது, `கிராபிக்ஸ்’ இல்லை.

ஆனால், இப்போது எல்லா சண்டை காட்சிகளிலும் `ரோப்’ (கயிறு) பயன்படுத்துகிறார்கள். அது படத்தில் தெரியுமே? என்று கேட்டால், `கிராபிக்ஸ்’சில் அழித்து விடலாம் என்கிறார்கள். தயாரிப்பாளர்களால், தொழில்நுட்ப கலைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.”

மேற்கண்டவாறு செல்வமணி பேசினார்.

உடனே கே.ஆர்.ஜி. எழுந்து வந்து, `மைக்’கை பிடித்தார்.

“பிரச்சினைகளை மேடையில் சொல்லக்கூடாது. அதற்கென்று சங்கம் இருக்கிறது. அங்கே சொல்லலாம். இது, மேடையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. அந்தக்காலத்தில் ஸ்ரீதர் எனக்கு `துடிக்கும் கரங்கள்’ படத்தை 40 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். பாரதிராஜா `சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை 30 ரோல்களில் எடுத்துக்கொடுத்தார். இப்போது முடியுமா? இவ்வளவு பேசுகிற கஸ்தூரிராஜாவை, பிரச்சினை வரும்போது தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலை-சந்தர்ப்பத்துக்காக மட்டும் மேடையை பயன்படுத்தக் கூடாது” என்று கூறினார்.

சத்யராஜ் சமரசம்

தொடர்ந்து பேச வந்த சத்யராஜ், இரு தரப்பினரையும் சமரசம் செய்வது போல் பேசினார். “இது, குடும்பத்தில் நடந்த ஒரு கலந்துரையாடல். அவ்வளவுதான். திரையுலக நன்மைக்காக நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக, டைரக்டர் சந்தர்நாத் வரவேற்று பேசினார். விழா முடிவில், பட அதிபர் ரங்கமணி நன்றி கூறினார்.

Posted in Cinema, Directors, Economy, Expenses, Films, Finance, Graphics, Incentives, Kasthoori raja, KasthooriRaja, kasthuriraja, KRG, Movies, Producers, Production, Protection, Rich, Security, Selvamani, Tax, Wealthy, YSR | Leave a Comment »

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Kalki Editorial: Hyderabad Bomb Blasts – Religious sectarianism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

இஸ்லாமியர்களே! இணைந்து குரல் கொடுங்கள்!

ஹைதராபாத்தில் நடந்த அதிகோர குண்டு வெடிப்பைத் தவிர்த்திருக்க முடியும் – மத்திய உளவுத்துறை அளித்த ரகசிய எச்சா¢க்கை அறிக்கை மீது ஆந்திர அரசு உ¡¢ய நடவடிக்கை எடுத்திருந்தால்!

எச்சா¢க்கை செய்யப்பட்டும் கடமையில் தவறிய ஆந்திர அரசின் தயக்கமும் அலட்சியமும் கடுமையான கண்டனத்துக்கு உ¡¢யவை.

இஸ்லாமியர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினால் அதன் மூலம் மதவாதப் பிரச்னையைக் கிளப்ப நேருமே என்று ஆந்திர அரசு தயங்கியதாகச் செய்திகள் வருகின்றன!

தங்க ஊசி என்பதற்காக அதைக்கொண்டு கண்ணைக் குத்திக் கொண்ட கதைதான் இது!

இந்தியாவில் இஸ்லாமியர்களைச் சிறுபான்மை இனத்தினர் என்று பாகுபடுத்தி ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறோம். ஆனால்,
இந்த தேசத்துக்குச் சமீப காலங்களில் ஏற்பட்ட மிகக் கொடூரமான சேதங்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் விளைந்தவையே! ‘ஜிஹாதி’ என்ற பெயா¢ல், திட்டமிட்ட கொலை வெறியாட்டம்
நிகழ்த்தி வருகின்றன இவ்வமைப்புகள்! கடந்த ஆறு மாதங்களாக
பாகிஸ்தான் ஜிஹாதி பத்தி¡¢கைகளில், ‘ஹிந்துக்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும்’ என்று பகிரங்க பிரசாரம் நடந்து வந்திருக்கிறது.
இந்தியாவை முஸ்லிம் தேசமாக்க வேண்டும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது! இச் செய்திகளை ஆதார பூர்வமாக இந்தியப் பத்தி¡¢கைகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், இந்த எழுத்துக்கள் பற்றி
அறியாதிருக்கக்கூடும். ஆனால், இங்கு நடக்கும் குண்டு வெடிப்பு கோரங்களைக்கூட இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்யவில்லை; தங்கள் மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இந்தப் பாதகத்தை நிறுத்த வேண்டும் என்று தார்மிகக் கோ¡¢க்கை விடுக்கவும் முன்வரவில்லை.

நமது அரசியல்வாதிகளும் (பா.ஜ.க. நீங்கலாக) இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலை வெறியை நேரடியாகக் கண்டனம் செய்யத் தயங்கி, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது பழி சுமத்துவதுடன்
நிறுத்திக்கொள்கிறார்கள்! இந்தப் பிரச்னையை இவ்வாறு கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதம் மேலும் வளரும். இன்னொரு பக்கத்தில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு
எதிரான உணர்வுகள் கொழுந்துவிட்டு எ¡¢ய ஆரம்பிக்கும். அவ்வாறு உணர்வுகள் பெருக்கெடுக்கிற கட்டத்தில் ஹிந்துத்வா சித்தாந்தத் துக்கே ஆதரவு பெருகும் (ஏற்கெனவே இந்தப் போக்கு
ஆரம்பித்துவிட்டது); காங்கிரஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது துர்லபம் ஆகும்.

இந்தியா இன்று மதச்சார்பற்ற நாடாகத் திகழ்கிறது; நாளை பா.ஜ.க. மற்றும் அதன் ஆதிக்க அமைப்புகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால்
ஹிந்துத்வா கோட்பாடுகள் வலுப் பெறும். எத்தனை ஜிஹாதி அக்கிரமங்கள் நடந்தாலும் இந்தியா முஸ்லிம் நாடாக மாறவே முடியாது. ஆனால், முஸ்லிம் பயங்கரவாதிகளுடைய நடவடிக்கைகளின்
எதிர்விளைவாக அது ஹிந்து நாடாக மாறுவது வெகு எளிது. அப்போது இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதரர்களின் பாதுகாப்புக்கும் இப்போது அவர்கள் அனுபவிக்கும் உ¡¢மைகளுக்கும் கடுமையான சவால்கள் ஏற்படும்.

தார்மிக உணர்வுத் தூண்டலால் இல்லாவிட்டாலும் இந்தத் தொலைநோக்கின் அடிப் படையிலாவது இந்திய முஸ்லிம் சகோதரர்கள் விழிப்புகொள்ள வேண்டும். தங்கள் மதத்தின் பெயரால்
இங்கே இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்தும்படி அழுத்தம்
திருத்தமாகக் குரல் கொடுக்க வேண்டும். “எங்கள் தேசத்தைச்
சிதைத்து, எங்கள் வாழ்க்கையைக் கேள்விக் குறி ஆக்காதீர்கள்!” என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அவர்கள் விடுக்கும்
எச்சா¢க்கை மட்டுமே பயன்தர வல்லது.

Posted in Andhra, AP, BJP, Blasts, Bomb, Center, Congress, Editorial, Govt, Hindu, Hyderabad, Islam, Jihad, Kalki, Muslim, Naidu, Op-Ed, Religion, TDP, YSR | Leave a Comment »

Ilaiyaraja’s son & Music Director Yuvan Shankar Raja files for Divorce

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

Yuvan shankar raja marriage Wedding snapஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்

சென்னை, ஆக. 7-

இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க

தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.

கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.

Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »

TTD vs Himalaya Sampadha Samratchana Samithi

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

திருப்பதி தேவஸ்தான நிலத்துக்கு ஆபத்து!

ஹைதராபாத், ஜூன் 13: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக ரிஷிகேசத்தில் உள்ள நிலங்களைக் கைப்பற்ற நில ஆக்கிரமிப்பாளர்களும், “”ரியல்-எஸ்டேட் மாஃபியா”க்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

70 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்களைக் காப்பாற்ற, இவற்றுக்கு வேலி அமைப்பது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.

ஆஸ்ரம வரலாறு:

ஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்பவர் ஆந்திர ஆஸ்ரமத்தை 1942-ம் ஆண்டு ரிஷிகேசத்தில் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். சமீபத்தில் அந்த இடங்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மாற்றப்பட்டன.

இந் நிலையில், ஆந்திர ஆஸ்ரமத்தில் உள்ள நிலங்களையும் கட்டடங்களையும் மேம்படுத்தியும் புதிதாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாகவும் உள்ளூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சமீபகாலமாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தன.

தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை இல்லாமல் நன்கொடைகளைத் திரட்டி இப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அவை கூற ஆரம்பித்தன. இப்போது இந்த நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் பொறுப்பாளராக உதவி செயல் அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சமிதியின் விஷமம்:

ரிஷிகேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும், “”இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி” என்ற அமைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை ஏற்படாமல் 200 கடைகளை அந்த ஆஸ்ரமத்தில் கட்டித்தர விரும்புவதாக 2004 செப்டம்பரில் தெரிவித்தது.

வியப்பைத் தரும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகக்குழுவில் முன்னர் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையைப் பரிசீலிக்கலாம் என்று தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தார்.

தேவஸ்தானத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூட அவர் அந்த சமிதியுடன் செய்துகொண்டார்.

ஊழல் வாடை:

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஏ.பி.வி.என். சர்மா இதில் ஏதோ ஊழல் வாடை தெரிகிறதே என்று சந்தேகப்பட்டார். இணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியை ரிஷிகேசத்துக்கு உடனே சென்று விசாரித்து நேரில் வந்து அறிக்கை தருமாறு பணித்தார். அவரும் அவ்விதமே விசாரணை நடத்திவிட்டு வந்து அறிக்கை தந்தார்.

“இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி’ என்ற அமைப்புக்கு நிதி ஆதாரம் ஏதும் கிடையாது; தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதை வெளியில் காட்டி நிதி வசூலிக்க திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் தேவஸ்தானத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்பதையும் உணர்ந்து கொண்டார். தேவஸ்தானம் வசம் உள்ள நிலங்களைச் சுற்றி உடனே வேலி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் ஆஸ்ரமத்துக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்குக் குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தரவும் உத்தேசித்திருக்கிறது.

இந்த நிலங்களை தேவஸ்தானத்தின் செலவிலேயே மேம்படுத்துவதா அல்லது பொது ஏலம் மூலம் நிலங்களை விற்றுவிடுவதா என்ற முடிவை தேவஸ்தானம் பிறகு மேற்கொள்ளும்.

வரவு எட்டணா, செலவு பத்தணா?

ரிஷிகேசத்தில் உள்ள ஆந்திர ஆஸ்ரமத்தின் ஆண்டு வரவு ரூ.5.73 லட்சம்தான். ஆனால் செலவு ரூ.52.32 லட்சம்! எனவே இதன் வருவாயைப் பெருக்கும் வழிகளை யோசிக்குமாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான போர்டு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Andhra, Andhra Pradesh, Andhrapradesh, AP, Apartments, Ashram, Assets, Bribery, Bribes, Chamundi, Complex, Construction, Corruption, Devasthanam, Devaswom, Don, Expenses, Flats, Ganga, Ganges, Haridhwar, Haridwar, Himalaya, Himalayas, Himalya, Hindu, Hinduism, Hrishikesh, Hundi, Imalaya, kickbacks, Land, Loss, mafia, Malls, Naidu, Plots, Profit, Property, Rao, Real Estate, Religion, Revenues, Rishikesh, Rowdy, Sambadha, Sambatha, Samithi, Samithy, Sampadha, Sampatha, Samratchana, Shakthi sthal, Shopping, TD, Temple, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, YSR | Leave a Comment »

Andhra MLAs to get software for analysing their Constituency

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

தொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்

ஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.

முதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Computer, Congress, Constituency, Deployment, Hyderabad, MLA, Naidu, Software, TDP, Telugu, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | 1 Comment »

State of Andhra Pradesh Temples – Financial statement

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

ஆந்திரத்தின் 2 ஆயிரம் கோவில்களில் அன்றாட நைவேத்தியத்துக்கே வழியில்லை!

விசாகப்பட்டினம், மார்ச் 5: ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய 3 கடலோர மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அன்றாட பூஜைக்கும் நைவேத்தியத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது.

ஆலயத்துக்கு கிடைக்கும் வருவாய் அடிப்படையில் கோயில்களை மாநிலத்தில் 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவை “ஏ’ பிரிவு. ஆண்டு வருவாய் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருப்பவை “பி’ பிரிவு. ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கும் குறைவானவை “சி’ பிரிவு. இவை தவிர மேலும் 2,800 கோவில்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்தவை.

இப்போது சி பிரிவு கோயில்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.1,500 அர்ச்சகர்களுக்கு ஊதியமாக தரப்படும். தூப, தீப, நைவேத்திய செலவுக்காக ரூ.1,000 வழங்கப்படும். முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிருஷ்ணா மாவட்டத்தில் இத்திட்டத்தை சமீபத்தில்தான் தொடங்கி இருக்கிறார்.

Posted in Andhra Pradesh, AP, Budget, Chandrababu Naidu, Congress, Constraints, Districts, Finance, Hindu, Hinduism, Krishna, Naidu, NTR, Pilgrim, Pilgrimage, Politics, Politics+Religion, Poor, Religion, Rich, Srigakulam, Srikakulam, Telugu, Telugu Desam, Temple, Tourism, TTD, Vijayanagar, Vijayanagaram, Vishakapatnam, Vishakapattinam, Visit, Vizag, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | Leave a Comment »

Nagma recommended for Andhra Pradesh Rajya Sabha seat

Posted by Snapjudge மேல் மார்ச் 2, 2007

ஆந்திர மேல்சபைக்கு நடிகை நக்மா பெயர் சிபாரிசு

ஐதராபாத், மார்ச். 1-

ஆந்திர சட்டசபையில் புதிதாக மேல்சபை உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி மேல்சபை உறுப்பினர் தேர்தல் நடக்கிறது. இதுதவிர ஆந்திர மாநில கவர்னர் பரிந்துரையின் பேரில் 12 பேர் உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இந்த 12 பேர் பட்டியலில் நடிகை நக்மாவின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முதல்- மந்திரியுமான குலாம்நபி ஆசாத் நடிகை நக்மா பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளார்.

ஆந்திராவில் மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக வெளியாகவில்லை.

இது தொடர்பாக வருகிற 3-ந் தேதி முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி டெல்லி சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்படும்.

ஆந்திராவில் புதிதாக மேல்சபை தொடங்க குலாம்நபி ஆசாத் முழு ஒத்துழைப்பு தந்தார். நடிகை நக்மாவின் பெயரை அவர் சிபாரிசு செய்து இருப்பதால் அவர் மேல்சபை உறுப்பினராவது உறுதி என்று ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் மூலம் நக்மாவை மாநில அரசியலில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Posted in Actress, Andhra, Andhra Pradesh, AP, Bollywood, Cinema, Congress, Ghulam Nabi Azad, Jayalalitha, Jayaprada, Kashmir, Minister, MLA, Nagma, Rajasekara Reddy, Sarath, Sarath Kumar, seat, Sharath, Sharath Kumar, Telugu, Tollywood, Vijayasanthi, YSR | Leave a Comment »

Margadarsi’s petition – Jaya condemns raids: Apex court admits plea accusing attack on freedom of press

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 24: மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் போலீஸôர் சோதனை நடத்தினர்.

இதை எதிர்த்து ராமோஜிராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநில போலீஸôர் மார்கதர்சி நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறித்து பதிலளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம் முற்றுகிறது: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஹைதராபாத், பிப். 24: அரசின் மீது குற்றஞ்சாட்டி ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகளுக்காக பத்திரிகைகள் மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவதூறு வழக்கு தொடுக்க ஆந்திர அரசு பிறப்பித்திருந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.

தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆந்திர சட்டப் பேரவையில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய அந்த ஆணை இம் மாதம் 20-ம் தேதி மாநிலத்தின் தலைமைச் செயலர் ஜே. ஹரிநாராயணரால் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் மீது செய்தி, மக்கள் தொடர்புத் துறை ஆணையர்கள் வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை அந்த ஆணை வழங்கியிருந்தது. அத்துடன் இத்தகைய வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது மத்திய அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் குரலை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இந்த ஆணை நினைவுபடுத்துகிறது என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராமோஜி ராவ் தலைமையிலான ஈ நாடு பத்திரிகையும் ஈ டி.வி.யும் ஆந்திர அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஊழல்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துகின்றன. இது ஆளும்கட்சிக்கு பெருத்த சங்கடத்தை அரசியல்ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் ராமோஜி ராவுக்குத் சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் விவகாரங்களை மாநில அரசு கிளற ஆரம்பித்தது. அதன் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதை அடக்குமுறை நடவடிக்கையாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் கருதுகின்றன.

இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது. நிலைமை மோசமாகிவருவதால், சர்ச்சைக்குரிய ஆணையைத் திரும்பப் பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அதை முதல்வரே பேரவையில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எந்த நடவடிக்கையையும் நடத்தவிடாமல் ரகளை செய்தனர். அரசை குறைகூறினர். இந்த விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் நடைபெறவில்லை, அடுத்த நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் முதல்வர் ராஜசேகர ரெட்டியே எழுந்து சர்ச்சைக்குரிய ஆணை, தனக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்டது என்றும் அது குறித்து விசாரணை நடத்துவதாகவும் பத்திரிகைகளை தங்களுடைய அரசு மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்படியே முதல்வர் கூறுவது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தனக்கே தெரியாமல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்காக, தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Posted in abuse, ADMK, AIADMK, Andhra Pradesh, Andhra Pradesh Protection of Depositors of Financial Es, Andra Pradesh, AP, APPDFE, Charminar Bank, Chitfunds, Chits, Congress, Congress(I), Corruption, deposit, depositors, Eenaadu, Eenadu, Enaadu, Enadu, Finance, Freedom, Government, High Court, Jaya, kickbacks, Krushi Bank, Law, Margadarasi, Margadarsi, Margadarsi Financiers, Order, Petition, Petitions, Politics, Power, Press, Prudential Bank, Ramoji Rao, RBI, Reserve Bank of India, SC, Supreme Court, Tamil Nadu, Telugu, TN, Ushodaya, Ushodaya Enterprises Limited, Y.S. Rajasekhar Reddy, YSR | Leave a Comment »

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »

Na Muthukumar pens the opening song for Rajinikanth in Sivaji (The Boss)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

கவிஞருக்கு வசன “கிரீடம்’!

அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது

  • “சிவாஜி’,
  • “போக்கிரி’,
  • “பீமா’,
  • “தீபாவளி’,
  • “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!

Posted in Ajeeth, Ajith, Ajith Kumar, AR Rehman, Assistant Director, Author, Balu Mahendira, Balu mahendra, Beema, Doctorate, Na Muthukumar, Naa Muthukumar, Ph.d, Poet, Pokkiri, Rajini, Rajni, Singer, Sivaji, Sivaji the Boss, Song writer, Ultimate Star, Vijay, Writer, YSR, Yuvan, Yuvan Shankar Raja | 2 Comments »

Recent Tamil Movie Reviews

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

இருவர் மட்டும்
காட்டில் இருகேரக்டர்களை உலவவிட்டு பின்னியுள்ள கதை…

சிறு வயதிலேயே காட்டில் வசிக்கும் அழகு அனாதை. மலை அடிவாரத்தில் நீர் வீழ்ச்சி அருகில் ஆங்கிலேயர்கள் கட்டிப்போட்ட பழைய மரவீட்டில் தனியாக குடியிருக்கிறான். பறவைகள், விலங்குகளிடம் பாசம் காட்டுகிறான். வெளியுலக அறிவு இல்லை.

திருமணத்திற்கு வற்புறுத்தும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து அதே காட்டின் வழியாக பஸ்சில் செல்லும் செல்வி டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்ய வற்புறுத்தி இறக்கி விடப்படுகிறாள். மிருகங்கள் சத்தத்தில் பயந்து ஓடும் அவள் அழகு வீட்டில் பதுங்க விறுவிறுப்பு…

அழகு, செல்வி இடையே மோதல், நட்பு, காதல் என நீண்டு திருமணத்துக்கு தயாராக திருப்பம்…

கல்யாணத்துக்கு அம்மா ஆசிர்வாதம் வாங்குவோம் என்று செல்வியை அழைத்து போய் மூடிக்கிடந்த அறையை திறக்க… செத்துப்போன அவன் தாய் பலகாலம் நாற்காலியில் அப்படியே பிணமாக சாய்ந்து கிடக்க மரண பயம். தப்பி ஓடுகிறாள் செல்வி. அவளை விரட்டி பிடித்து ஆவேசமாக தூக்கி வந்து பலவந்தமாக தாலி கட்டுகிறான், அழகு அறியாமையில் இருந்து மீண்டானா? செல்வி அவனோடு வாழ்ந்தாளா? என்பது கிளைமாக்ஸ்…

இரு பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்துவது வித்தியாசம்… அழகுவாக வரும் அபய், பாத்திரத்துக்கு கச்சிதம். மரங்களில் ஏறி குருவிக்குஞ்சிக்கு பொறியை சவைத்து நாக்கில் வைத்து உணவூட்டுவது… தாயை இழந்த குஞ்சுகளை மீட்டு வந்து வீட்டில் தொட்டிலில் வைத்து தாலாட்டுவது பளிச்…

தாய் உயிருடன் இருப்பதாக அவள் பிணத்துடன் பேசும்போது திடுக்கிட வைக்கிறார். செல்வியாக வரும் சுனிதாவர்மா இளமைச்சாரல்… காடு, மலை, நீர் வீழ்ச்சி பின்னணியில் அரைகுறை ஆடையுடன் சூடேற்றுகிறார்.

அழகு தாய் பிணத்தை தன்னோடு வைத்து வாழ்வதை பார்த்து மிரண்டு ஓட்டம் பிடிப்பது மரண பயம்… குழிதோண்டி மண்ணில் புதைந்த அழகுவை மீட்க அழுது போராடுவது ஜோர்…

படத்துக்கு ஜீவனாக இருப்பது அருவியும், காடு, மலை இயற்கை காட்சிகளும் பி.கே.தாஸின் காமிரா அவற்றின் கொள்ளை அழகை மொத்தமாகஅள்ளியுள்ளது. அந்த பகுதியில் வாழவேண்டும் என்ற ஆவலை தூண்ட வைக்கிறது.

புத்திசாலித்தனமாக பேசவும் ஊருக்குள் நடமாடிவிட்டு வரவும் செய்யும் அழகுக்கு மரணம் பற்றிய அறிவு இல்லை என்பது சறுக்கல் இருவரை மட்டுமே வைத்து படம் பண்ணியது துணிச்சல் என்றாலும் சிலஇடங்களில் அலுப்பு…

விஜய் ஆண்டனி இசையில் வைரமுத்துவின் பாடல் சுகராகம்… இயற்கையின் ஜில்லிப்போடு கவித்துவமாக படத்தை செதுக்கியுள்ளார். இயக்குனர் துவாரகிராகவன்.

நெஞ்சில்
சுற்றுப்பயணத்தில் உருவாகும் காதல் கதை…

தனியார் நிறுவனம் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து லண்டனுக்கு இலவச சுற்றுலா அனுப்புகிறது.

பயணக்குழுவில் உள்ள நவ்தீப்-அபர்ணாவுக்கு காதல். அவர்களை பிரிக்க அதே குழுவில் சென்ற கிருஷ்ணமூர்த்தியும் கல்யாணியும் சதி செய்கின்றனர்.ஆனந்த் மோசமானவன் என்று பிரியாவை நம்ப வைத்து அவனை வெறுக்கச் செய்கின்றனர்.

மோதலை சாதகமாக்கி பிரியாவை அடைய துடிக்கிறான் லண்டனில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி. காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

காதலர்களாக வரும் நவ்தீப், அபர்ணா துருதுரு ஜோடி. இருவரும் மோதிக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் கல கல…

போதையில் ரஞ்சிதா நவ்தீப் நெருக்கம் திருப்பம். காதல் தோல்விக்கு பின் கதையில் வேகம்… மணிசுடன் சுற்றி நவ்தீப்பை அபர்ணா வெறுப்பேற்றுவது நறுக்…

அபர்ணா நடிப்பில் மெருகு… காதல், கோபம், தோல்வி, வெறுப்பு என ஒவ்வொன்றிலும் வித்தியாசம். காதலனை இன்னொரு பெண்ணுடன் பார்த்து நொறுங்குவது நச்…

ஆண்களை வெறுப்பவராக ரஞ்சிதாவும் பெண்களை வெறுப்பவராக தலைவாசல் விஜயும் கச்சிதம்… காதலர்களை பிரிக்கும் சூழ்ச்சி திக்.. இருவரும் மனம் மாறி காதலர்களாவது கலகலப்பு…

வடிவேலு-மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். இங்கிலீஸ்காரன் வடிவேலு, கேரக்டர் நச்… கலகலப்பும் விறுவிறுப்புமாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வா. இமான் இசையில் பாடல்கள் தாளரகம்.

ரெண்டு
மாதவனின் இருவேட ஆக்ஷன், காமெடி படம்.

பட்டிணத்துக்கு வேலை தேடி வரும் மாதவன் பொருட்காட்சியில் மேஜிக் ஷோ நடத்தும் மாமா கிரிகாலனிடம் அடைக்கலமாகிறார். எதிரில் நாகக்கன்னி ஷோ நடத்தும் வெள்ளி மீது காதல்.

மாதவன் உருவத்தில் இன்னொருவர் தொடர் கொலைகள் செய்ய போலீஸ் இவரை பிடிக்கிறது. அதிலிருந்து மீண்டாரா, கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் சுந்தர்.சி.

பொருட்காட்சி அரங்கில் மாதவன், வடிவேலு பண்ணும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ரகம்.

மேஜிக் ஷோவுக்கு பணம் கொடுத்து ஆட்களை வர வைப்பது, சவாரி வந்த ஆட்டோ டிரைவரிடம் ஆர்.சி. புக்கை வாங்கி அடகு வைத்து பணம் வாங்குவது.. என மாதவன் காமெடி அவதாரம் எடுத்துள்ளார். பெண் மனதில் இடம் பிடிக்க வடிவேலுவுக்கு ஆலோசனை சொல்லி சிக்கலில் மாட்ட வைப்பது ரகளை.

வில்லன்களை பழிவாங்கும் கேரக்டரில் வேகம். திருமண மண்டபத்தில் விலிப்பு நோயால் ஒரு பெண்ணின் திருமணம் நிற்க அவளுக்கு தனது அண்ணனை மணமுடித்து வைப்பது ஜீவன். அனுஷ்கா காதல் கவிதை.

வில்லன்களை தீர்த்து கட்டுவது மிரட்டல். திருமண மண்டபத்தில் பலரை கொன்று சாய்ப்பது தூக்கலான வன்முறை. வில்லன் ரகசியம் தெரிந்தவர் மாதவன் தந்தை மட்டும்தான். அவரோடு மொத்த குடும்பத்தையும் கொல்வது ஒட்டவில்லை.

அனுஷ்கா அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். கவர்ச்சியில் தாராளம்.

வெள்ளியாக ரீமாசென் பளிச். மேஜிக் நிபுணர் கிரிகாலனாக வடிவேலு பண்ணும் காமெடி ஜோர்.. தப்பு தப்பாக மேஜிக் செய்து பார்வையாளர்களிடம் மாட்டி விழிப்பது.. ஒரு பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்க வீர சாகசம் செய்ய முயன்று தோற்று தவிப்பது என கலகலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், மயில்சாமி, சந்தானம், விச்சு, தாரிகா ஆகியோரும் உள்ளனர்.

முதல் பாதி கலகலப்பாகவும் மறுபாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது. இமாம் இசை பலம். ரசனையான ரெண்டு.

ஆவணி திங்கள்
கிராமத்தில் வசிக்கும் அனாதை இளைஞன் ராசப்பா. உதவாக்கறை நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். குடும்ப பாசத்துக்கு ஏங்குகிறான்.

திருமண ஆசை ஏற்படுகிறது. உள்ளூர் புரோக்கர் மூலம் பெண் பார்க்கிறான். புரோக்கர் அவனை ஏமாற்றி பணம் பறிக்கிறார். பெண் அமையவில்லை. ஏதேச்சையாக புரோக்கர் மகள் காயத்ரியை காணும் ராசப்பா அவள் மீது காதல் கொள்கிறான். காயத்ரியும் விரும்புகிறாள்.

சொந்த பந்தம் இல்லாத ராசப்பாவுக்கு பெண் கொடுக்க புரோக்கர் மனைவி மறுக்கிறாள். அதை சவாலாக ஏற்று பாறையில் வெடி வைத்து உடைக்கும் ஆபத்தான வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து வீடு வாசல் என்று வசதியாகிறான் ராசப்பா. அதன் பிறகு அவனுக்கு பெண் கொடுக்க புரோக்கர் குடும்பம் சம்மதிக்கிறது. திருமணத்துக்கும் நாள் குறிக்கிறார்கள்.

அப்போது ஜமீன்தார் பேத்தி தீபிகா மூலம் ராசப்பா வாழ்வில் விதி விளையாடுகிறது. தீபிகா விளையாட்டாக செய்யும் காரியத்தால் ராசப்பா ஒரு கையை இழக்கிறான். திருமணம் தடைபடுகிறது. மனம் உடையும் தீபிகா தன் திருமணத்தை தள்ளி வைத்து ராசப்பாவுக்கு பெண் தேடுகிறாள் பெண் அமையவில்லை. திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

ராசப்பாவாக வரும் ஸ்ரீகுமார் கிராமத்து இளைஞனாக கச்சிதம். ஒற்றைக் கையுடன் மனதை பிழிகிறார். காயத்ரியாக மதுஷா, தீபிகாவாக தேஜினி போட்டி போட்டு நடித்துள்ளனர். கிணற்றுக்குள் வெடி வைத்து விபத்து ஏற்படும் காட்சி தத்ரூபம்.

லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், காதல் சுகுமார், அஜய்ரத்னம் ஆகியோரும் உள்ளனர். ஆர்.சங்கர் இசையில் பாடல்கள் நீண்ட இடைவெளிக்குபின் இனிமை. வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஹரிகிருஷ்ணா வின் இயக்கத்தில் ஆவணித் திங்கள் மனதை வருடுகிறது.

சிவப்பதிகாரம்
அரசியல்வாதிகளை மாணவன் பழிவாங்கும் கதை…

கல்லூரியில் படிக்கும் ஒழுக்கமான முதல் மாணவன் சத்தியமூர்த்தி. இடைதேர்தல் பற்றி சகமாணவர்களுடன் கருத்துகணிப்பு வெளியிட பலிக்கிறது.

தோற்றுபோன சண்முகராஜன் தனது தோல்விக்கு கருத்து கணிப்புதான் காரணம் என்று அடியாட்களுடன் கல்லூரியை முற்றுகையிட்டு கலாட்டா செய்கிறார்.

மந்திரி உதவியோடு கல்லூரிக்குள் கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து பல மாணவர்களை சாகடிக்கிறார்.

சத்தியமூர்த்தியின் வாட்சுமேன் தந்தையும் தீயில் பலியாகிறார்.

கண் முன்னே நடக்கும் இந்த கொடூரத்தை பார்த்து பழிவாங்க துடிக்கும் சத்தியமூர்த்தியை பேராசிரியர் ரகுவரன் தடுக்கிறார்.

பொது தேர்தலில் வேட்பாளர்களாக அவர்கள் நிறுத்தப்பட்டதும் கொலைகார அரசியல்வாதிகளை ஒவ்வொருவராக அழிப்பது கிளைமாக்ஸ்…

சத்யமூர்த்தியாக வரும் விஷால் கச்சிதம். நல்ல மாணவராக மனதில் நிற்கிறார். நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளராக கிராமத்தை வலம் வருவது வேகத்தடை. பொது தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சூடுபிடிக்கிறது.

வேட்பாளர்களை சாகடிப்பது திக்… திக்… வேட்பாளர்கள் மிரண்டு மொத்தமாக வேட்புமனுவை வாபஸ் பெறுவது… தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைப்பது வித்தியாசம்.

விஷாலை காதலிப்பவராக வரும் மம்தா அழகு, கவர்ச்சியில் ஜொலிக்கிறார். அமைதியான பேராசிரியராக வந்து போகிறார் ரகுவரன். கலெக்டர் வேலை பார்த்தவர் என்ற முடிச்சு அவிழும்போது திக்…

கஞ்சா கருப்பு கலகலப்பூட்டுகிறார். அழுத்தம் இல்லாத முதல் பாதி கதை இவரால்தான் நகர்கிறது.

மணிவண்ணன், சண்முக ராஜன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோரும் உள்ளனர்.

இடைவேளை வரை வயலும் வயக்காடுமாக மெதுவாக நகரும் கதைக்கு பிற்பகுதியில் வேகம் கொடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். வித்யாசாகர் இசையில் பாடல் கள் கிராமிய மணம் வீசுகிறது. கோபிநாத் கேமராவில் பசுமை.

வாத்தியார்
ஆசிரியர் தாதாவாகும் கதை…

அர்ஜ×னுக்கு இன்னொரு `ஜென்டில்மேன்’ பாணி படம். அநீதிகளை எதிர்க்கும் ஆசிரியர் `கெட்டப்`பில் வெளுத்துள்ளார்.

பரீட்சை பேப்பரில் அதிக மதிப்பெண் போட மிரட்டும் ரவுடி மாணவன். அர்ஜ×ன் மாணவியை மானபங்கம் செய்யும் சக வாத்தியார் போன்றோரை நொறுக்க வேலை பறிபோகிறது.

பள்ளிக் கட்டிட கூரை எரிந்து 48 மாணவர்கள் பலியாக ஆவேசமாகும் அர்ஜ×ன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை துவைத்து மக்கள் முன் நிறுத்துகிறார். அதில் ஒரு அதிகாரி செத்துப்போக கொலைப்பழி சுமந்து சிறைக்கு போகிறார். ரிலீசாகும் போது தீயவர்களை அழிக்குமாறு பலர் படையெடுக்க தாதா கெட்டப்புக்கு மாறுகிறார்.

ஊனமுற்றோருக்காவும், ஆதரவற்ற முதியோர்களுக்காவும் அன்னை இல்லம் திறந்து காப்பாற்றுகிறார். ரவுடிகளை ஒழித்து கட்டுகிறார். அவரை ஆதாரத்தோடு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

முதல்- மந்திரி பதவியை குறுக்கு வழியில் பிடிக்க முயலும் நாச்சியார் வழிபாட்டு தலங்களில் குண்டு வைக்க அர்ஜ×ன் உதவியை நாட அவர் மறுக்க விறுவிறுப்பான அடிதடி கிளைமாக்ஸ்.

வாத்தியார் கெட்டப்பில் அர்ஜ×ன் கச்சிதம். பள்ளியில் சாராயம் காய்ச்சும் ரவுடி வீராவை வீழ்த்தும் அறிமுகம் தூள்..

பள்ளி கூரை எரிந்து குழந்தைகள் பலியாகக் காரணமான கல்வி அதிகாரிகள், என்ஜினீயர்களை தோல் உரிப்பது நச்…

கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காத தோல் கம்பெனி முதலாளிக்கு எதிராக தொழிலாளர்களை தூண்டுவது நறுக்…

மகளை பழித்த ரவுடியை தந்தையை விட்டு கொல்ல வைப்பது திடுக்…. சவக்குழிக்குள் இருந்து அர்ஜ×ன் மீள்வது ஹாலிவுட் மிரட்டல்.

அர்ஜ×ன் காதலியாக வரும் மல்லிகா கபூர் அன்னை இல்லத்தில் புகுந்து கல கலப்பூட்டுகிறார். அன்னையாக வரும் சுஜாதா ஜீவன்.

வில்லத்தன போலீஸ் அதிகாரி சாயலில் வந்து இறுதியில் நல்ல அதிகாரி என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் திருப்பம்….

வடிவேலு காமெடி ஆரவாரம். மல்லிகா கபூர் தன்னை காதலிப்பதாக ஏங்குவது…. பஸ்சில் கண்டக்டரிடம் மீதி கேட்டு ரவுடிகளிடம் சிக்கி அடிவாங்குவது ரகளை….

பிரதீப் ராவன், மணிவண்ணன், தலைவாசல் விஜய் கேரக்டர்கள் கச்சிதம்.

தெளிவான கதை… அழுத்தமான சீன்கள்… வித்தியாசமான கதை களத்தில் படத்தை விறு விறுப்பாக்கியுள்ளார். இயக்குனர் வெங்கடேஷ்… கும்பகோணம் பள்ளி விபத்து, ரேஷன் கடை தில்லு முல்லு… அரசியல் சாக்கடை, நோய் பரப்பும் ஆலைகள் என சமூக அவலங்களை பொறுக்கி பிரமிப்பான கதையாக்கியுள்ள வெங்கடேஷ் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.

இமான் இசை, கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பலம். `என்னடி முனியம்மா ரீ மிக்ஸ் பாடல் தாளம்.

சபாஷ் வாத்தியார்!

கிழக்கு கடற்கரை சாலை
சுனாமியில் சொந்தங்களை இழந்து அனாதையான இளைஞனின் கதை.

பெட்ரோல் பங்கில் வேலை செய்பவன் கணேஷ். தனது சக கூட்டாளிகளுடன் ஊர் சுற்றி திரிகிறான். அப்போது வக்கீல் வி.டி.ஆரின் தங்கை பிரியாவை சந்திக்க நேரிடுகிறது. அந்த பெண்ணை காதலிக்க வை பார்க்கலாம் என்று நண்பர்கள் சபதம் போடுகிறார்கள். இதை ஏற்கும் கணேஷ் அவள் காதலை பெற கடும் போராட்டம் நடத்துகிறான்.

நம்மால் ஒரு உயிர் போககூடாது என்ற பரிதாபத்தில் தினமும் பத்து நிமிடம் கணேசை சந்தித்து பேசுகிறாள் பிரியா. அப்போது அவளுக்கு காதல் பற்றி கொள்கிறது. இருவர் திருமணத்துக்கும் பிரியா அண்ணன் சம்மதிக்கிறான். பிறகு அவனே பிரியாவை கடத்தி நாடகமாடுகிறான்.

இந்த உண்மையை கணேஷ் வெளி கொண்டு வருகிறான். இறுதியில் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்து காதல் ஜோடிகளை கடலுக்குள் தள்ளி விடுகிறான் பிரியா அண்ணன். இருவரும் உயிர் பிழைத்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கணேசனாக ஸ்ரீகாந்த் கச்சிதம். அப்பா அம்மாவை நினைத்து கடல் அலைகளுடன் உரையாடுவது உருக்கம். கடலில் தள்ளிவிட்ட பிறகும் காதலியை விடாமல் துரத்துவது வேகம். காதலியின் கனவுகளை நிறைவேற்ற செய்யும் சில்மிஷம் ரசிப்பு.

பிரியாவாக பாவனா. அழகு பதுமையாக கண்களை குளிர வைக்கிறார். கைதேர்ந்த நடிப்பை பாவனாவிடம் பார்க்க முடிகிறது. கிரிமினல் வக்கீல் பாத்திரத்தில் சுரேஷ் வில்லத்தனம் பளிச்.

முத்துக்காளை, கஞ்சா கருப்பு நகைச்சுவை கூட்டணி களை கட்டுகிறது. பால்ஜே இசையில் பாடல்கள் இனிமை.

முரட்டு காதலை சொல்லியவிதம் அருமை. காதல் காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஸ்டான்லி. கதையில் அழுத்தம் குறைவு பன்னீர்செல்வத்தின் கேமரா கடலோர அழகை அள்ளியுள்ளது.

வல்லவன்
நிஜக் காதல் அழகு பார்க்காது என்பதை பதிவு செய்யும் படம்.

மனசுக்கு பிடித்த பெண்ணை காதலித்து மணக்க லட்சியம் வைத்துள்ள வள்ளுவன் கண்ணில் அழகான சுவப்னா பட காதல்… நீண்ட பல்லுடன் முகத்தை விதார மாக்கி சுவப்னாவிடம் காதல் யாசி என்றான் அவளே அவனை அழகற்றவன் என்று வெறுக்கிறாள். பிறகு அவளுக்காக சிறு சிறு உதவிகள் செய்து மனதை தொடுகிறான். காதலிக்க சம்மதிக்கிறாள். அதன் பிறகு கோர பல்லை அகற்றி உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான்.

காதலர்கள் சந்தோஷத்தில் திளைக்கும்போது வள்ளுவன் தன்னை விட வயது குறைந்தவன் என்றும் தனது கல்லூரி மாணவன் என்றும் சுவப்னாவுக்கு தெரிய அதிர்ச்சியாகிறாள்.

அதன் பிறகு கதையில் வேகம்…. வள்ளுவனை உதறி விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்கத் தயாராகிறாள்.

இருவரும் இணைந்தார்களா? என்பது பிற்பகுதி விறுவிறுப்பு…

வள்ளுவனாக சிம்பு, துடுக்கத்தனம், காதல், அழுகை, ஆத்திரம் அத்தனையிலும் முத்திரை….

போடு ஆட்டம் போடு என குழந்தைகளுடன் நடனத் தோடு அறிமுகமாகும் ஆரம்பம் நச்… நீண்ட பல் சோடா புட்டி கண்ணாடியுடன் ஜோக்கர் உருவத்துக்கு மாறி காதலிக்காக ரவுடிகளிடம் அடிவாங்குவது… சுவப்னா விரும்பிய செருப்பை திருடி போலீசிடம் மாட்டி சித்திரவதைப்படுவது… மனதை பிழிபவை…

காதலியுடன் நடத்தும் முதலிரவு கிளு கிளு…. அந்த நேரம் இருவரும் பேசிக் கொள்ளும் வசனம் “ஏ” ரகம்…

காதலி வெறுத்து ஒதுக்கிய பின் வரும் சிம்பு, ரீமாசென் `பிளாஸ்பேக்’ பள்ளிக் காதல் சரவெடி…. சைக்கோவான ரீமாசென்னிடம் செருப்படி வாங்குவது… வாந்தியை அள்ளுவது… மனதை தொடுபவை.

சுவப்னா பாத்திரத்தில் நயன்தாரா ஜொலிக்கிறார். மாணவனை காதலித்து விட்ட தவறை உணர்ந்து அவன் மீது ஆவேசப்பட்டு கதறுவது சபாஷ். `பல்லன்’ தோற்றத்தை பார்த்த உடனே சிம்புவிடம் ஒட்டுவது மனதில் ஒட்டவில்லை.

காதல் சைக்கோ’ பாத்திரத்தில் ரீமாசென் நிஜமாய் கச்சிதம். காதலன் வீட்டு போன் துண்டிக்கப்பட்ட நிலையிலும் விடிய விடிய காத்திருந்து போன் நம்பரை சுழற்றுவது திக்…. திக்… ஷுவை கழற்றி காதலன் மேல் வீசுவது… காலில் விழுந்து கெஞ்ச வைப்பது… திகில் காதல்..

சிம்புவின் தோழியாக சந்தியா வந்து போகிறார். எஸ்.வி.சேகர், சந்தானம், சுகுமார், கொட்டாச்சி கலகலப்பு…

கதையில் `லாஜிக்’ நெருடல்கள் இருந்தாலும் காட்சிகளின் பிரமாண்டம் மறக்கச் செய்கிறது.

யுவன் சங்கர்ராஜா இசையில் `லூசுப் பெண்ணே’, `வல்லவா’ யம்மாடி ஆத்தாடி பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ப்ரியன் ஒளிப்பதிவு அபாரம்..

காதல் “வல்லவன்”

வட்டாரம்
முழு நீள ஆக்ஷன் படம்…

லாஜிக் பார்க்காமல் இருந்தால் பெரிய துப்பாக்கிகளின் மேஜிக்.

சின்ன வயதில் தன்னையும் தன் தந்தையையும் அவமானப்படுத்தி தன் தந்தையின் தற்கொலைக்கு காரணமான அமைந்த குருபாதத்தை பழி வாங்கி அவர் இருக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஹீரோ பர்மாவிற்கு!

வளர்ந்து பெரியவன் ஆனதும் பெரிய மனிதர், பெரிய பிஸினஸ்மேன் போர்வையில் வலம் வரும் ஆயுத வியாபாரி தாதா குருபாதத்திடம் வேலைக்கு சேருகிறான்.

குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி ஒரு கட்டத்தில் அவரது கூட்டாளிகள், அடியாட்கள் என்று சகலரையும் போட்டுத் தள்ளிக்கொண்டே மற்றொரு பக்கம் குருபாதத்தின் எதிராளி என்.கே.சாமி எனும் கருப்புசாமிக்கும் ஆயுத சப்ளை செய்து அந்த கேங்கையும் குருபாதத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறான் பர்மா.

குருபாதத்தின் ஆட்களை தீர்த்து கட்டி அந்த கொலைகளை கருப்பசாமி குரூப் செய்ததாக கதை கட்டி இரண்டு குரூப்பையும் மோத விடுகிறான்.

எதிர்பாராமல் குருபாதத்தின் மகளுக்கும், கருப்பசாமியின் மகனுக்கும் திருமண பேச்சு வார்த்தை எழுந்து இரு குரூப்பும் சமாதானமாகிறது. இதை விரும்பாத பர்மா குருபாதத்தின் மூத்த மகனோடு சென்று கருப்பசாமியின் மகனை தீர்த்து கட்டி விட்டு குருபாதத்தின் மூத்த மகன், உன் பிள்ளையை தீர்த்து கட்டி விட்டான் என்று கருப்பசாமிக்கு தகவல் அனுப்புகிறான். அதில் கடுப்பாகும் கருப்பசாமி குருபாதத்தின் மூத்த மகனை போட்டுத்தள்ளுகிறான்.

இப்படி பழிக்கு பழி வாங்கியபடி துப்பாக்கி சப்தம் கேட்க செல்லும் கதையில் பர்மா, குருபாதத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அவரது இடத்திற்கு வந்தனா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ பர்மாவாக ஆர்யா, குருபாதமாக நெப்போலியன் இருவரும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதம்.

துப்பாக்கிகளும் கையுமாக ஆர்யா, ஆக்ஷனில் ஜேம்ஸ்பாண்டு ரேன்ஜ×க்கு அசத்தல். நெப்போலியனும் கலக்கல். அரிவாள், கம்பு என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இதுவரை திரிந்து நெப்போலியனுக்கு இந்தப் படம் மூலம் வித்தியாச `கெட்அப்’.

கதாநாயகியாக கீரத், அவரது தோழியாக அதிசயா என்று இரண்டு புதுமுகங்கள் இருவருமே வலுவாக காலூன்றும் தன்மை. கீரத்தின் நடை, உடை பாவனை அதிசயாவின் வித்தியாசமான குருல் மைனஸ். தண்டபாணி, ரமேஷ்கண்ணா, வையாபுரி, ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வட்டாரம் எனும் பெயரில் பெரிய தொழில் அதிபர்கள் போர்வையில் இருக்கும் தாதாக்களின் `வட்டாரங்களை டச் பண்ணியிருக்கும் சரண் காட்சியமைப்புகளில் சபாஷ். கதை விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

பரத்வாஜின் இசையில் வைர முத்துவின் பாடல்களையும் ஏ.வெங்கடேசனின் ஒளிப்பதிவையும், சரணின் இயக்கத்தையும் ரசிக்கலாம்.

தலைமகன்
சரத்குமாரின் நூறாவது படம்…

பத்திரிகை, அரசியல், தண்ணீர் பிரச்சினை மூன்றிலும் சவாரி செய்கிறது கதை.

மினரல் வாட்டர் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு எதிர்கால சமுதாயத்தை தண்ணீர் தட்டுப்பாடு உலுக்கும் என்ற கருவை ஆக்ஷன் கலந்து பதிய செய்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி நெடுங்குளம் கிராமத்தில் தண்ணீர் பேக்டரி, திறக்க அனுமதி கொடுக்கிறார் மந்திரி சண்முக வடிவேலு. இத்திட்டத்தால் வறட்சி உருவாகி மக்கள் பாதிக்கப்படுவர் என்று சரத்குமார் எதிர்க்கிறார்.

பத்திரிகையிலும் கட்டுகரை எழுதுகிறார். சரத் மீது எரிச்சல் ஆகும் மந்திரி போலீசை ஏவி பத்திரிகை ஆபீசில் வெடி குண்டுகளை பதுக்கச் செய்கிறார். சரத்குமாருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பொய் வழக்கை பதிவாக்கி கைது செய்ய வைக்கிறார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்த சரத்குமாரை அழைத்து போகும் போலீஸ் நடுவழியில் அவரை கொல்லத் துணிகிறது. சரத்குமார் தப்பினாரா? தண்ணீர் கம்பெனி தடுக்கப்பட்டதா? என்பதை விறு விறுப்பாக சொல்லியுள்ளனர்…

பத்திரிகை நிருபர் பாத்திரத்தில் சரத்குமார் கச்சிதம். மந்திரி அக்கிரமத்துக்கு துணை போகும் போலீஸ் அதிகாரி, ரவுடிகள் என மூன்று தரப்பினரிடமும் மோதுவதில் வேகம்…

பத்திரிகை எடிட்டர் விஜயகுமாரை சித்ரவதை செய்தும் அவர் மகளை கற்பழித்து கொல்வது கொடூரம்… அதுவரை மெதுவாக நகரும் கதை பின் சூடு பிடிக்கிறது.

சரத்குமாரை ஏற்றி வந்த வேனை தண்டவாளத்தில் நிறுத்தி ரெயிலை மோதச் செய்வது பயங்கரம்….

சரத்குமார் உடல் முழுவதும் ரத்த காயம் ஆகி கேரள மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு பழைய விஷயங்களை நினைப்பது போல் கதையை பிளாக் பேக்கில் நகர்த்தியது. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டெக்னிக்…

சிகிச்சைக்குப் பின் நீண்டமுடி, உருக்குலைந்த முகம், தெத்தும் பேச்சு, நொண்டும் நடை என வித்தியாசமான தோற்றத்தில் நெடுங்குளம் கிராமத்தில் ஆஜராவது அபாரம்.

மந்திரி, போலீஸ் அதிகாரியை வீழ்த்த சரத்குமார் தொழிற்சாலைக்குள் கம்ப்ïட்டரை இயக்கி விïகம் அமைப்பது… மயானத்தில் கல்லறையை பெயர்த்து ஊழல் பைல்களை தோண்டி எடுப்பது… திக்… திக்… மந்திரியுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்…

சரத்குமார் காதலியாக நயன்தாரா. குறைவாக வந்தாலும் நிறைவு. தீன் தேனா பாடலில் திறமை காட்டுகிறார்…

போலீஸ் டி.ஜி.பி.யாக வரும் சீமா பிஸ்வாஸ் வில்லன்களுடன் சேர்ந்து மிரட்டுகிறார். மந்திரி கேரக்டரில் வரும் முகேஷ் தீவாரிக்கு சத்தத்தில் மட்டும் வேகம்… கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பின் போது சில இடங்களில் பின்னணி இசை கோர்க்காதது வேகத்தடை…

படத்தின் பிற்பகுதியை விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் சரத்குமார்.

வடிவேலு ஒளியும் வில்லன்களை காட்டி கொடுத்து மாட்டும் காமெடி ரகளை…

விஜயகுமார், சங்கிலிமுருகன், அலெக்ஸ், டெல்லி கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், குஷ்பு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா, பால் இசையில் `நூறு நூறு’ பேனாகாரன் பாடல் முணு முணுக்க வைக்கிறது. டைரக்டர் சேரன் திரைக்கதையமைத்துள்ளார்.

வரலாறு
அஜீத்குமார் நடிப்பை பறைசாற்றும் படம்… மூன்று பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

விபத்தில் கால் இழந்ததாக சொல்லி சக்கர நாற்காலியில் வலம் வரும் கோடீஸ்வர தொழில் அதிபர் சிவனுக்கு மகன் விஷ்ணு மீது பிரியம். மனைவியும் அதே விபத்தில் பலியாகி விட்டதாக மகனிடம் சொல்லி வளர்க்கிறார்.

விஷ்ணுவுக்கு கல்லூரி மாணவி திவ்யா மீது காதல். அவன் ஆசைப்பட்ட பெண்ணை மணமுடித்து வைக்க பேசி நிச்சயம் செய்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் திருப்பம். பூனைக் கண்களோடு வெறி பிடித்தவனாக விஷ்ணு தோற்றத்தில் ஜீவா என்பவன் ஆஜர்ஆக படம் படுவேகம்.

விஷ்ணுவாக திவ்யா வீட்டுக்குள் போதையில் நுழைந்து ரகளை, அடி-தடி செய்து திருமணத்தை நிறுத்துகிறான். திவ்யா தோழியை கற்பழிக்க முயன்று அவள் வெறுப்பை விஷ்ணு மீது திருப்புகிறான். சிவனை கத்தியுடன் பாய்ந்து கொல்லத் துணிகிறான்… மொத்த பழியும் விஷ்ணு மீது விழ அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

விஷ்ணு தோற்றத்தில் வந்த ஜீவா யார்? சிவனை பழி வாங்க துடிப்பது ஏன் என்பது பிளாஸ்பேக்கில் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

வயதான சிவன், அப்பாவி விஷ்ணு, பழிவாங்கும் வெறியில் அலையும் ஜீவா என முன்று கேரக்டரில் வெளுத்துள்ளார் அஜீத்.

செய்யாத தப்புக்கு தந்தையிடம் அடி வாங்குவது… பைத்தியக்காரன் என முத்திரைகுத்தி மனநல ஆஸ்பத்திரியில் மின்சார அதிர்ச்சி சிகிச்சைக்குள் மாட்டி அலறுவது… அனுதாபத்தை நிறைய அள்ளகிறார் விஷ்ணு அஜீத். தந்தை சிவனாக வரும் கேரக்டரில் உச்சத்தை தொட்டுள்ளார்.

மகன் தன்னை கொலை செய்ய வந்ததை பார்த்து அதிர்வது… அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பதை சகிக்காமல் பதறுவது அபாரம்.

ஜீவா கேரக்டர் தன்னை கொல்ல பாய்வதை பார்த்து ஆவேசமாக சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கால்களை லாவகமாக சுழற்றி சண்டைக்கு தயாராவது படுபயங்கர திருப்பம்… இருபத்தைந்து வருடமாக கால் ஊனமாக சிவன் நடித்தது ஏன்? அதிலிருந்து பிளாஸ்பேக் விரிகிறது.

இளம் பரத நாட்டிய கலைஞராக சிவன் வரும் காட்சிகள் நச்…நச்…

இடையை குலுக்கி தலையை ஆட்டி, கைகளை பரதக்கலை முத்திரையில் அசைத்து பெண்மைத்தனமாய் நடக்கையில் நடிப்புலகை குலுக்குகிறார்.

மணமேடைக்கு மாப்பிள்ளையாக அன்ன நடையில் வரும் லாவகம்… மணப்பெண் கனிகா ஆண்மையில்லாதவன் என்று தன்னை பழித்ததும் கூட்டத்தினர் மத்தியில் அவமானப்பட்டு கூனி குறுகும் தன்மை… தாய் அதிர்ச்சியில் இறந்ததும் ஆவேசமாக வீட்டுக்குள் போய் பெண்மைக்கான நளினம் ஆண்மை வேகம் கலந்த பாத்திரமாகவே மாறி கற்பழிக்கும் ஆவேசம் என அத்தனையும் அவார்டு பெற்றுத்தருபவை.

ஜீவா பாத்திரத்தில் கொலை வெறியனாக பளிச்.. தந்தை பாத்திரத்தோடு மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்.. பைத்தியகாரத் தாயிடம் காட்டும் பாசம் ஜீவன்.

அஜீத்தின் மூன்று கேரக்டர்களை கச்சிதமாக செதுக்கி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

திவ்யாவாக வரும் அசின் விஷ்ணுவிடம் விலைமாது என ஏமாற்றி பரிதாபப்பட வைப்பது பளிச்…

கனிகா கொஞ்சம் ஆவேசம். கொஞ்சம் அமைதி. ராஜேஷ், சந்தானபாரதி, சுமன்ஷெட்டி, ராஜலட்சுமி, ரமேஷ்கன்னா, பாண்டு, விஜயன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும் உள்ளனர்.

இருபத்தைந்து வருடமாக நொண்டியாக நடிக்க அழுத்தமான காரணம் சொன்னாலும் அது சாத்தியமா என்பது போன்ற சில லாஜிக்- தொய்வுகள் இருந்தாலும் அஜீத்தின் வலுவான கேரக்டர்கள் அவற்றை மறக்கடிக்கச்செய்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பலம்.

அஜீத் “வரலாறு” படைத்துள்ளார்…


புதுமையான கதை களம்.

`ஈ’ என்கிற பெயரில், தனது முழுப்பெயர் ஈஸ்வர் என்பதுக் கூட தெரியாமல் ஒட்டுமொத்த திருட்டு தனமும் நிறைந்த குப்பத்து ராஜாவாக சுற்றித் திரிகிறான் ஹீரோ.

காசுக்காக எதையும் செய்யும் `ஈ’க்கு கையாளாக டோனி. சின்ன அளவில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு வழக்குகளுக்காக உள்ளே போய் வரும் `ஈ’க்கு பெரிய அளவில் கடத்தல், கத்திக்குத்து நடத்தி ஏரியா தாதா ஆக வேண்டும் என்பது ஆசை.

அதற்கான வாய்ப்பு அமையும்போது மும்பையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் டான்ஸ் ஆடிப் பிழைக்கும் ஜோதி குறுக்கிடுகிறாள். `ஈ’ மீது காதல் கொள்கிறாள். `ஈ’ யை திருத்த முயற்சிக்கிறாள்.

அந்த ஏரியாவிலேயே பிரபலமான மருத்துவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனின் கையாளாக இருக்கிறான் `ஈ’. அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் அவர் சொல்வதை செய்து வருகிறான். ராமகிருஷ்ணன் சட்டத்திற்கு புறப்பாக செய்யும் மருந்து பரிசோதனைக்கு எதிரியாகி அவரை தீர்த்துகட்ட சபதம் பூண்டிருக்கும் நெல்லைமணியை ஒருகட்டத்தில் கடத்தி டாக்டரிடம் பல லட்சங்களை சம்பாதிக்க திட்டம் போடுகிறான் `ஈ’.

திட்டமிட்டபடியே நெல்லை மணியை கடத்தினானா. ஜோதியும் `ஈ’யும் விரும்பியபடி திருமணம் செய்து கொண்டார்களா? டாக்டர் ராமகிருஷ்ணன் சமூக விரோதி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்களா என பல முடிச்சுகளுக்கு விடை சொல்லும் எதிர்பாராத கிளைமாக்ஸ். வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜனநாதன்.

`ஈ’ என்கிற ஈஸ்வர் பாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருக்கிறார். கறைபடிந்த `பற்கள்’, குளிக்காத முகம், எண்ணையே பார்க்காத பரட்டை தலை என்று ஒரு சேரிப்பையனாக பிரமாதம். மார்வாடிக்கடையில் டூப்ளிகேட் செயினை வைத்துபணம் கேட்பது, புரோக்கர் சிலர் ஜீவாவின் காதலி ஜோதியை விபச்சாரத்திற்கு கூட்டி வரச்சொன்னதும் கூசாமல் போய் அவளை விபச்சாரத்திற்கு அழைப்பது இது மாதிரி பல காட்சிகளில் ஜீவாவின் நடிப்பில் குப்பத்து படிக்காதவர்கள் குறும்பு பழக்க வழக்கங்கள் பிளிச்.

`ஈ’யின் காதலி ஜோதியாகவும், `பார் டான்ஸராகவும் நயன்தாரா பட்டையை கிளப்புகிறார். `ஈ’ யை எடுத்த எடுப்பிலேயே சிக்கலில் மாட்டிவிடும் நயன்தாரா, அந்த காரணத்திற்காகவே அவன் மீது காதல் கொள்வதும், காதலன் தன் பேச்சை மீறி விட்டான் என்று `ஈ’யை பிரிந்து செல்வதும் நெருடல்.

டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஸ்வித்யார்த்தியின் வில்லத்தனம் கொடூரம், தனக்கு நெருக்கமான அடியாளாக இருக்கும் `ஈ’ யின் பாட்டியையே தன் மருந்து பரிசோதனைகள் மூலம் பலி கொள்வது படுபயங்கரம். நெல்லை மணியாக வரும் பசுபதி பிரமாதம்.

`ஈ’யின் நண்பராக வரும் கருணாஸ் நடிப்பு உருக்கமாக உள்ளது. அஜய்ரத்னம், அசினா, ஆரியா, சேரன்ராஜ், மாதவி, வானி என்று இன்னும் பலரும் நடித்திருக்கின்றனர். என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீகாந்த்தேவா இசை படத்திற்கு பெரிய பக்க பலம். மிரட்டலான படம் `ஈ’.

தர்மபுரி
விஜயகாந்த் `இமேஜை’ உயர்த்த அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியல் நெடி படம்.

மண்பாண்ட தொழில் செய்யும் ஒரு கிராமம். படத்தின் களம். அந்த ஊரையும் மண்ணையும் நேசிப்பவராக விஜயகுமார். ஊர் மக்கள் மண் எடுத்து தொழில் செய்ய தனக்கு சொந்தமான இரு நூறு ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்கிறார். ஊர் கோவிலுக்கு மண் குதிரைகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது பழி விழ குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்தில் குடியÚறுகிறார்.

ஊருக்கு அவர் இலவசமாக கொடுத்த நிலத்தை சிவந்தி கருப்பு, பெருச்சாளி கருப்பு என்ற அண்ணன்- தம்பி தாதாக்கள் பறித்துக் கொள்ள ஊரால் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்துக்கு போய் மெய்யப்பன் மகன் சிவராமிடம் நிலத்தை மீட்டுத்தர வேண்டுகின்றனர். சிவராம் கிராமத்துக்கு வந்து ரவுடிகளை வீழ்த்தி நிலத்தை பிடுங்கி ஊராருக்கு கொடுப்பது பின் பகுதி கதை…

மக்களுக்கு நன்மை செய்யும் சிவராம் பாத்திரத்தில் விஜயகாந்த் கச்சிதம். சிறு வயது போட்டோவை கம்ப்ïட்டரில் கொடுத்து அவரை அறிமுகப்படுத்தும் இடம் அமர்க்களம். திருமண வீட்டில் தனது நாற்காலிகளுக்கு வாடகையாக தரும் பணத்தை திருப்பி கொடுப்பது, ரவுடிகள் ஆக்கிரமித்து மதுக்கடையாக்கிய பள்ளியை மீண்டும் திறப்பது, சூதாட்ட விடுதிÖக்கிய பிரசவ ஆஸ்பத்திரியை மீண்டும் திறப்பது என வாக்காளர்களை வசியப்படுத்தும் காட்சிகள் நிறைய….

இவன் தமிழன், தமிழ் நாட்லேதான் இருப்பான். ஏ போலீசு இப்ப இவர் முன்ன நிக்கிறீங்க சீக்கிரம் பின்னால் வரப்போறீங்க. இவர் பின்னால் இந்த காலத்துல இவ்வளவு கூட்டம் கூடுது என்று விஜயகாந்தை தலைவராக சித்தரிக்கும் வசனங்கள். `இவர் கோட்டையிலே கொடு பறக்குமோ வந்துட்டாரு வந்துட்டாரு வாத்தியாரு என்பன போன்ற பாராட்டு பாடல்களும் நிறைய… உன்கிட்ட இருப்பது கூலிப்படை என்கிட்ட இருப்பது மக்கள் படை. கள்ள ஓட்டு, குறுக்கு வழியில் அரசியல் நடத்துறே என்று ரவுடி எம்.எல்.ஏ.வை பார்த்து விஜயகாந்த் கர்ஜிப்பது ஆவேசம்.

வேலைக்காரனை தன் உருவில் மாற்றி அவனுக்கு வேலைக்காரன் வேடத்தில் விஜயகாந்த் கிராமத்தில் நுழையும் உத்தி பளிச்.

விஜயகாந்த் வேலைக்காரனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ரசனை. மெய்யப்பன் மகன் நான்தான் என்று கிராமத்தில் ஆஜராகி ரவுடிகளிடம் மாட்டி தவிப்பது, விஜயகாந்த் முறைப்பெண்ணை விரும்பி நிச்சயதார்த்தத்தில் தட்டு மாற்றுவது என கல கலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், பாபி, ராஜ்கபூர், ஜெயபிரகாஷ் ரெட்டி மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டல். லட்சுமிராய் அழகாய் ஜொலிக்கிறார். நடனம் பளிச்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் படல்கள் துள்ளல் ரகம். சரவணன் ஒளிப்பதிவு மண்மேடு கிராமத்தை கண்ணில் பதிக்கிறது.

கட்சிகளில் விறுவிறுப்பு காட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு. கதையில் அழுத்தம் குறைவு.

விஜயகுமார், சுமித்ரா, ராஜேஷ், பீலிசிவம், மனோ பாலா ஆகியோரும் உள்ளனர்.

விஜயகாந்த் புகழ் பாடும் தர்மபுரி.

துள்ளுற வயசு
இளசுகளின் காதல் கதை…

பள்ளியில் ஒன்றாய் படிப்பவர்கள் ராகவ், தீபிகா. நட்பாய் பழகும் அவர்கள் மனதில் காதல்…

இருவருக்கும் காதலை வெளிப்படுத்த தயக்கம். பள்ளி முடியும் நாளில் ஆட்டோ கிராப் எழுத நோட்டை மாற்றும்போது ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் கடிதம் எழுதி வைக்கின்றனர்.

கடிதம் தீபிகா அண்ணன் கைக்கு போகிறது. ராகவின் காதல் கடிதத்தை படித்து அவனுக்கு அதிர்ச்சி.

தீபிகாவுக்கு மயக்க ஊசி போட்டு செத்து விட்டதாக ராகவை நம்ப வைத்து பிரிக்கிறான்.

காதலியை இழந்த தூக்கத்தில் ராகவ் பட்டினத்தில் படிக்க வர திருப்பம்.

அதே ஊரில் மருத்துவக்கல்லூரி மாணவியாக தீபிகா…

காதலை பிரிக்க அண்ணன் செய்த சூழ்ச்சி இருவருக்கும் புரிகிறது. ராகவை தீர்த்துக் கட்ட தீபிகா அண்ணன் ரவுடிகளை ஏவுகிறான். தீபிகாவையும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். இருவரும் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

பள்ளி மாணவனாக அமைதியாக வரும் ராகவ் பிற்பகுதியில் ஜொலிக்கிறார். காதலி செத்து விட்டதாக அழுது புலம்புவது உருக்கம். ரவுடிகளிடம் அடிபட்டு ரத்த சகதியாவது அனுதாபம். காதலியை பார்க்க விடாமல் தடுப்பவர்களுடன் கிளைமாக்ஸ் சண்டை வேகம்…

தீபிகா குருத்தோலை மாதிரி வருகிறார். `மிடி’யில் கைப்பந்து ஆடுவது இளமை நச்…

தீபிகா அண்ணனாக வரும் பிரணவா மிரட்டல்… தங்கையை மயக்கமடைய வைத்து செத்து விட்டதாக ஒப்பாரி வைத்து நடிப்பது, தங்கைக்கு உளவு சொன்ன வேலைக்காரியை தீர்த்து கட்டுவது வில்லத்தனத்தில் கச்சிதம்… ஷர்மிலி, ஆசிரியையாக வந்து கிறங்கடிக்கிறார்.

`டீன் ஏஜ்’களின் இளமைப் படையல் பாதி… காதல் வலி மீதி என தெவிட்டாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் கோபால்… இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் தாளம்.

இளமை துள்ளல்…

Posted in Aashish Vithiyaarthy, Aavani Thingal, Ajeeth, Ajith, Anushka, Aparna, Arjun, Arya, Ashish Vithyarthi, Asin, Bharadhwaj, Bhardvaaj, Bhardwaj, Bhavna, Bhawana, By2, Captain, Clips, Comedy, Dharmapuri, Director, Dwaragi Ragavan, Dwaraki Raghavan, E, ECR, Imaan, Irandu, Iruvar Mattum, Jananathan, Jeeva, Jenanathan, Kanika, Karthk Raja, Karu Palaniappan, Karu Pazhaniyappan, Kizhakku Kadarkarai Saalai, Kollywood, KS Ravikumar, KSR, Maadavan, Madhavan, Manivannan, Mayilsaamy, Mayilsami, Navdeep, Nayanthara, Nenjil, Nepolean, Pasupathy, Raghuvaran, Reema Sen, Rendu, Reviews, Sandhiya, Sandhya, Santhanam, Saran, Sarathkumar, Selva, Silambarasan, Simbu, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Tamil Cinema, Tamil Movies, Thala, Thalai Makan, Thalaimagan, Thullara Vayasu, Vaathiyaar, Vaathiyar, Vadivelu, Vallavan, Varalaaru, Vattaaram, Vijay Antony, Vijayakanth, Vijayganth, Vimarsanam, Vishal, YSR, Yuvan Shankar Raja | Leave a Comment »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »