Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Controversy’ Category

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

Operation Salma Ayup – Unmai Online: Bavanandhi

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஆப்பு’ ரேசன் சல்மா அயூப் – பவானந்தி

காந்தியக் கொன்ன கோட்சே, கொலை செய்யப் போகும் முன்பே கையில் ‘இஸ்மா-யில்’னு பச்சை குத்திக்கிட்டு சுன்னத் செஞ்சுகிட்டுத்தான் போனான். ஒரு வேளை தான் யார்னு அடையாளம் கண்டு பிடிக்கப் படாட்டா, முஸ்லீம்னு தெரியட்டும்; அதனால் கலவரம் வந்து முஸ்லீம்களைக் கொல்லட்டும்கிறதுக்காக அப்படி செஞ்சான். தான் செஞ்ச தப்பை அடுத்தவன் மேல போட்டு மாட்டிக் கொடுக்கிறது அவ்வாளுக்கு நிகர் அவாளே!

இப்படி முஸ்லீம் பேரைப் பயன்படுத்தி பூணூல் கூட்டம் பண்ற முடிச்சவிக்கித் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இப்ப சமீபத்தில நடந்தது. ரிடையராகி வீட்டில உட்கார்ந்துகிட்டிருந்தாலும், ஏகப்பட்ட பார்ப்பான் இன்னைக்கு இண்டர்நெட்டிலதான் உட்கார்ந்திருக்கான். தங்கள் குல ஆதிக்கம் அழிஞ்சிடாம இருக்க மூளைச் சலவை செய்யற வேலையில ரொம்ப பூணூல் இறங்கயிருக்குது. இதுக ஒரு பேர்லதான் வரும்னு இல்ல. நல்ல பிள்ளையாட்டமா ஒரு பேர்ல இருந்து கட்டுரை எழுதுறது. அப்புறம் ஏகப்பட்ட போலி பேர்கள்ல தனக்குத்தானே பாராட்டி முதுகைச் சொறிஞ்சுக்கிறது; பகுத்தறிவு, இனஉணர்வு எவனாவது பேசிட்டா அவனைப் பத்தி தரக்குறைவா எழுதறதுன்னு இதுகளோட ஆட்டம் தாங்க முடியல இணையத்தில்.

‘மொழி’ படத்துல வர்ற புரபசர் கேரக்டர் மாதிரி (எம்.எஸ்.பாஸ்கர் ஏற்ற பாத்திரம்) ‘சமீபத்தில 1967-ல அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தப்போ’, ‘சமீபத்தில நேரு இறந்தப்-போ’ன்னு இந்த மறதிக் கேஸு 40 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற மாதிரியே எழுதும். ‘சமீபத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ’ன்னு எழுதும்போது, விவேக் படத்தில வர்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது.

இது ஒரு கேஸுன்னா, இன்னொரு கேஸ் இருக்கு. அது அடுத்தவங்க பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு, இதுங்க அரிப்பை எல்லாம் அதில தீர்த்துக்கிறது. வலைப்பூக்கள்னு சொல்லப்படுகிற Blog Spot-கள் தமிழர்களால் அதிகளவு பயன்படுத்தப்-படுகிறது. பத்திரிகைகளில் பிரசுரிக்க அலையாமல், தங்கள் படைப்புகளை, கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுபோக எளிய வழி இது. தத்தம் பெயரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நல்ல வாய்ப்பைத்தான் தவறாய் பயன்படுத்துது இந்தக் கேஸு.

“திராவிட இயக்கங்கள், பெரியாரியம், தமிழ் உணர்வு போன்றவற்றையொட்டி, தனது வலைப்பூ தளத்தின் மூலமாக தன் கருத்துகளை சொல்லி வந்த ஒரு பெண் பதிவாளரின் பெயரில் போலிப் பதிவு யாரோ உருவாக்கி-யிருந்தார்கள். ‘Eveready’ என்பதையே ‘Every day’  என்று போலி உருவாக்குவது போல அந்தப் பெண்னின் பெயருடன் ஒரு எழுத்தைச் சேர்த்து புதிய வலைப்பக்கம் உருவாக்கப்-படுகிறது. அதே வடிவமைப்பு! அதே எழுத்து வடிவம்! அதே வண்ணங்கள்!

ஆனால், தளம் முழுக்க ஆபாசப் படங்களும், கதைகளுமாக எழுதப்பட்டிருந்தது. தளத்தின் உரிமையாளர் பெயர் சல்மா அயூப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே சல்மா அயூப் என்ற பெயரில் இதற்கு முன்பும் பல தளங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளது. யாரிந்த ‘சல்மா அயூப்’ என்பது பெருங்குழப்பமாயிருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண் பதிவரே ‘இந்தச் சிக்கல் தீரும் வரை நான் இணையத்தில் செயல்படப்போவதில்லை’ என்று சொல்லுமளவுக்கு முடக்கிப் போடும் வேலை நடந்ததுங்கிறாரு. இந்தப் பிரச்சினையில இறங்கி வேலை பார்த்த பாலபாரதி.

‘சல்மா அயூப் என்பது போலிப் பெயர் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில், அது யாரெனக் கண்டுபிடிக்கும் பதியை மேற்கொண்டோம். அந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் (IP Member Tracker) வாய்ப்பைப் பயன்படுத்தி கிண்டியில இருக்கிற முகவரியைக் கண்டு பிடித்துவிட்டோம். நாளை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். ஏற்கனெவே அவர்களிடம் சொல்லி வைத்தாயிற்று? அப்படின்னு ஒரு பதிவு இணையதளத்தில் வெளிவந்தது.

அவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்தில் பாலபாரதிக்கு போன் போட்டு “நான் உங்களைப் பார்க்கணும் எங்க வரணும்’னு கேட்குது ஒரு ஆண் குரல். இடத்தை சொன்னவு-டனே குறிப்பிட்ட நேரத்தில ஒரு கார்ல வந்திறங்கினார் ஒரு ஆளு. சல்மா அயூப்ங்கற பெயருக்கு பின்னாலே ஒளிஞ்சிருந்த பூணூல் பேர்வழி தான் அவரு.

முதல்ல “நான் எழுதல. என் தளத்தின் முகவரியிலிருந்து என் பாஸ்வேர்டு தெரிஞ்ச யாரோ இந்த மாதிரி செஞ்சிருக்காங்க’ன்னு சொல்லி கெஞ்சியிருக்காரு. “நாங்க இதுபத்தி போலீஸ்ல போட்டுக்கொடுக்கப்போறோம். உங்க பாஸ்வேர்டல எழுதறத யாருன்னு அப்பத் தெரிஞ்சிடும்ல’ என்று அ.மு.க. சார்பில் பாலபாரதி சொல்ல அ.மு.க. (அனானி முன்னேற்றக் கழகம்) ஒரு மணி நேரத்தில மெல்ல மெல்ல ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுட்டு இனிமே இதுமாதிரி செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.

நம்மாளுகதான் பெருந்தன்மையான ஆளுகளாச்சே! ‘மாட்டிக்கிட்டாரு மாப்புள! ஆனா சகபதிவர்தானே அதனால் மன்னிச்சு விட்டுடுவோம்’னு முடிவெடுத்து பெயரைக் கூட வெளியில சொல்லாம விட்டுட்டாங்க. இந்தப் பெருந்தன்மையை புரிஞ்சுக்கத் தெரியாத பூணூல், ‘நான் எழுதல என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க’ன்னு வெளியில போய்ச் சொல்ல ‘பாப்பானுக்கு முன்புத்தி கொஞ்சமும் கிடையாதுங்கிறது’ அப்பத்தான் ரொம்பப் பேருக்கு விளங்குச்சு. “ஏன்டா, நீ எங்கிருந்து எழுதறன்னு இங்கிருந்தே கண்டுபிடிச்ச எங்களுக்கு நீ என்ன பேசினன்னு பதிஞ்சு வைக்கத் தெரியாதா? இந்த புளுகு வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததிலிருந்து என்ன பேசினங்குற ஆடியோவை இணையத்தில் போட்டுடுவோம்’ நம்மாளுக சொன்னதுக்கப்புறம் தான் அந்த இழிபிறவிக்கு புரிஞ்சது- ‘ஆகா நமக்கு அறி-வில்லை’ங்கிறது.

“இந்த மாதிரி பண்ற ஆளுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இறக்கம் காட்டக்கூடாது வோய்! ஆனா அதே மாதிரி பல புனை பெயர்ல எழுதற உங்களவாவைப்பத்தி ஏன் பேச மாட்டேங்குறீர்’னு ஒரு பூணூல் கொதிச்சது.

“புனை பெயர் வேற, போலிப் பெயர் வேற, என் புனை பெயர்ல நான் என்ன வேண்ணா எழுதிட்டுப் போறேன். ஆனா உன்னைய மாதிரி ஆபாசமா நான் எழுதல. அப்படியும் என்னையக் கண்டுபிடிக்கணும்னா நீங்கதான் திறமைசாலி வெங்காயங்களாச்சே. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க’ன்னு பதிலடிச்சுவிட்டதில மூக்கில ப்ளாஸ்திரி ஒட்டற அளவுக்கு உடைஞ்சு போச்சு.

இப்படி “ஆப்பு’ அடிச்ச ‘ஆபரேசன் சல்மா அயூப்’ பண்ண தோழர்களுக்கு பாராட்டு சொல்லணும்னாலும். அந்தப் பூணூலோட ‘சைபர் கிரைம்’ குற்றவாளியா போஸ் கொடுக்க வச்சிருந்தா தானே மத்தவங்களுக்கு புத்திவரும். விட்டுட்டீங்களே பாலபாரதி! எங்களுக்கு அந்த இறக்கம்லாம் தேவையில்லை. அந்த இழி பிறவியோட பெயரை நாங்க சொல்லிடுறோம்.ஆபரேசன் சல்மா அயூப்ல ஆப்பு அடிக்கப்பட்ட ஆளு ‘ஜெயராமன்’ங்கிற பூணூலு!

Posted in Bavanandhi, Blogspot, Controversy, Issues, Operation, Salma Ayub, Salma Ayup, Tamil Blog, Tamil Blogs, Unmai, unmaionline, Viduthalai, Vituthalai | Leave a Comment »

Shilpa Shetty uses underworld criminals to collect her payment arrears – Praful Saris

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

தொழிலதிபருக்கு மிரட்டல்: ஷில்பாவை விசாரிக்க போலீஸ் யோசனை

Pankaj Aggarwal, the owner of Prafful Sarees who signed Shilpa in 1998 for a contract worth Rs 4 lakh a year, submitted tapes to police in Surat in which he was threatened by criminals allegedly hired by her parents to recover arrears, the actress said “the tapes were doctored”.

ஆமதாபாத், பிப். 26: தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்தது தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை விசாரிப்பது குறித்து சூரத் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

சூரத் துணிக்கடை தொழிலதிபர் பங்கஜ் அகர்வால். இவருக்கு 2003-ல் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்த போது ஃபசல் உல் ரெஹ்மான் என்பவர் மிரட்டியது தெரியவந்தது. இதன்பின்னர் அவரைக் கைது செய்து தில்லி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, “”ஷில்பா ஷெட்டி என்னிடம் உதவி கோரினார். அதனால்தான் பங்கஜ் அகர்வாலை மிரட்டினேன்” என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக ரெஹ்மானை விசாரிக்க சூரத் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சூரத் போலீஸ் துணை கமிஷனர் சுபாஷ் திரிவேதி கூறியது:

தில்லி உயர்நீதிமன்றக் காவலில் உள்ள ரெஹ்மானை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம். ரெஹ்மானிடம் விசாரித்த பிறகு, ஷில்பாவிடமான விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் இந்த மிரட்டல் வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தாயார் சுனந்தா, 2003-ல் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போதும் இவர் ஜாமீனில்தான் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தந்தையார் மீதும் அப்போது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Ad, Advertisement, Big Brother, Controversy, Extortion, Goonda, Gunda, Law, Model, Money, Munnabhai, Order, Pankaj Aggarval, Pankaj Aggarwal, Police, Power, Prafful Sarees, Praful, Sarees, Saris, Shilpa Shetty, Surat, Vasool Raja | Leave a Comment »

Actor Mansoor Ali Khan and public lock horns over land

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

நில பிரச்சினை கிராம மக்களுடன் மோதல் இல்லை: மன்சூர் லிகான் விளக்கம்

சென்னை, பிப்.8-

நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் குன்றத்தூர் அருகே நல்லூர் என்ற இடத்தில் 5 வருடங்களுக்கு முன் 2 1/2 ஏக்கர் நிலம், முன்னாள், தி.மு.க. குன்றத்தூர் தலைவர் குப்புச்சாமி என்பவர் மூலமும், நல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரகாஷ் மூலமும், என்தம்பி பெயருக்கு வாங்கி ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலுவலகத்தில் முறையே பத்திரம் எண் 1174/92, 405/மிக்ஷி/03 பதிவாகி இருக்கிறது.

இத்தனை வருடமும் அந்த இடத்தை பராமரித்து வந்தோம். சமீபத்தில் ரெட்டை ஏரி குடியிருப்பு மக்களுக்கு நல்லூர் அருகே அரசாங்கம் இடம் ஒதுக்கியது. அங்கு ஒரு வயோதிகர் மரணமடையவே, நல்லூர் மக்கள் அங்கே புதைக்க அனுமதி மறுத்ததால், அங்குமிங்கும் அலைந்து கடைசியில் எனது இடத்தில் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

எனக்கு இந்த விஷயம் இரண்டு நாள் முன்புதான் தெரியும். எனவே எனது இடத்திற்கு சென்று, அந்த ஊரில் வேலைக்கு வந்த மக்களை வைத்தே, எல்லையை சீர் செய்தேன். ஊர்மக்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நீர், மோர் கொடுத்து, ஊர்மக்கள் அன்போடு உபசரித்தார்கள்.

விசாரணைக்கு வந்த அதிகாரிகளும் டாகுமென்டை வைத்து நிலத்தை அளந்து சரிபார்த்து சென்று விட்டார்கள். நானும் அதிகாரிகளிடம், புதிய குடியிருப்பு மக்களுக்கு வேறு இடத்தில் சுடுகாடு ஒதுக்குமாறு கேட்டு கொண்டேன்.

நேற்று முழுவதும், எனது புதிய படத்தின் பாடல் பதிவில் இருந்தேன். இன்றுதான் சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களை சந்தித்து புதிய குடியிருப்பு மக்களுக்கு சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்க இருந்தேன். அதற்குள் வேறுமாதிரி செய்திகள் வந்திருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Posted in burial, Controversy, Court, DMK, Issue, KANCHEEPURAM, Kunrathoor, Kunrathur, Land, Law, Mansoor Ali Khan, Mansur Ali Khan, Nalloor, Nallur, Occupy, Order, Police, Porur lake, Property, Ramkumar, revenue officials, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, tahsildar, Tamil Actor, Thasildar, Usurp, Villain | Leave a Comment »

The Tamilnad Mercantile Bank Story: Pa Ramachandra Athithan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

மெர்க்கண்டைல் வங்கி பங்கு மோசடி: பா.ராமச்சந்திர ஆதித்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?- ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, பிப்.5-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் கே.பி.கணேசன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடார் சமுதாய மக்களுக்கு சொந்தமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி எஸ்ஸார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து வங்கியை மீட்பதற்காக பங்குகளை வாங்க வேண்டும் என்று கூறிய நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்ற தலைவரான ராமச்சந்திர ஆதித்தன் எனது புகாரில் முதல் குற்றவாளியாக உள்ளார்.

இந்த சமுதாயத்தை சேர்ந்த நான் பங்குகளை வாங்குவதற்காக ராமச்சந்திர ஆதித்தன் விடுத்த விளம்பரத்தை பார்த்து சில பங்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராமச்சந்திர ஆதித்தனை அணுகினேன். அவர் ஒரு பங்கின் விலை ரூ.5,500 என்றும் இது தொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தலைவர் மற்றும் செயலாளரை அணுகலாம். மற்றும் பிராந்திய மேலாளர், மேலாளர் ஆகியோரையும் அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நான் அந்த அதிகாரிகளையும் அணுகினேன். அவர்களும் இதே கருத்தை தெரிவித்து விளக்கம் அளித்தனர்.

நான் 23.4.97 அன்று ராமச்சந்திர ஆதித்தன் தலைவராக உள்ள நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்றத்தின் பெயரில் 27 ஆயிரத்து 500 ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்டு எடுத்து எனக்கு 5 பங்குகள் அனுப்பும்படி கோரியிருந்தேன். என்றாலும் 2000 ஆண்டு வரை எனக்கு பங்கு பத்திரம் தரவும் இல்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இதன் பிறகு நான் உசிலம்பட்டியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையின் மேலாளரிடம், எனக்கு வீட்டுக்கடனாக ஒரு லட்ச ரூபாய் வழங்கும்படி கூறினேன்.

29.12.2000 அன்று இந்த கடன் தொகை ஒரு லட்ச ரூபாயை எனது வங்கி கணக்கில் சேர்த்து, அதே நாளில் எனது ஒப்புதல் இல்லாமல் 82 ஆயிரத்து 500 ரூபாயை பங்குகள் வாங்குவதற்காக நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றிவிட்டார்.

நான் ஏற்கனவே நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் மன்றத்துக்கு 23.4.1997 அன்று கொடுத்த பணத்துக்காக இதுவரையில் எந்தவித பங்கு பத்திரங்களும் வழங்கப்படவில்லை. இப்போது மேலும் எனது கணக்கிலிருந்து 82 ஆயிரத்து 500 ரூபாயை அந்த மன்ற கணக்குக்கு மாற்றிவிட்டார். இதன் பின்னர் நான் எத்தனையோ முறை வங்கி அதிகாரிகளை சந்தித்து எனது பணத்துக்கு பங்கு பத்திரங்களை வழங்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன்.

நான் 2000-ம் ஆண்டிலேயே பணத்தை கொடுத்திருந்தும் 2003-ம் ஆண்டுதான் வாங்கியது போல 18.9.2003 அன்று, 10 பங்குகளை கொடுத்தனர். இதனால் நான், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகி என்னை அவர்கள் வேண்டுமென்றே ஏமாற்றி மோசடி செய்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் என்பதால் இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.

இதனால் வேறு வழியில்லாமல் நான் மதுரையில் உள்ள 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். நான் கொடுத்த புகாரை குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து புலனாய்வு செய்து அந்த அறிக்கையை 16.1.2005-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மதுரை 1-வது மாஜிஸ்திரேட்டு தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் இந்த நாள் வரை குற்றப்பிரிவு போலீசாரால் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முறையான நடவடிக்கைகள் எதுவும் குற்றப்பிரிவு போலீசாரால் எடுக்கப்படவும் இல்லை.

எனவே மதுரை 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின்படி எனது புகாரின் அடிப்படையில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர ஐகோர்ட்டு உத்தரவிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கணேசன் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருப்பதால் கண்டிப்பாக போலீசார் மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும். அரசு வக்கீலும் இதை ஏற்றுக் கொள்கிறார். இது சம்பந்தமாக விவரங்களை பெற அரசு வக்கீல் கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற விவரத்தை ஒரு வாரத்துக்குள் அரசு வக்கீல் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

======================================================

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 33 சதவீத பங்குகளை வெளிநாட்டினருக்கு விற்க திட்டம்; சிவசங்கரன், பா.ராமச்சந்திர ஆதித்தனின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்: கருணாநிதியை நேரில் சந்தித்து நாடார் சங்கத்தினர் மனு

சென்னை, மார்ச்.18-

முதல்-அமைச்சர்கருணா நிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் சங்ககளின் பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தார்கள். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாடார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை ஸ்டெர்லிங் நிறுவன அதிபர் சி.சிவசங்கரனிடமிருந்து மீட்பதற்காக வங்கி மீட்புக் குழு 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமை தாங்கினார். வங்கிக்கான பங்குகளை மீட்க உலகமெங்கும் உள்ள நாடார் சமுதாய மக்களிடம் பணம் திரட்டப்பட்டது.

இவ்வாறு ஒரு கோடியே 6 ஆயிரம் பங்குகளை மீட்க சுமார் ரூ.90 கோடி வசூல் செய்யப்பட்டு அதில் ரூ.80 கோடியே 75 லட்சம் மட்டும் ஸ்டெர்லிங் குழுமத் தலைவர் சி.சிவசங்கரன் வசம் கொடுக்கப்பட்டு சுமார் 96 ஆயிரம் பங்குகள் நாடார் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது. வசூல் செய்த பணத்தில் சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் தொகைக்கு உண்டான சுமார் 10 ஆயிரம் பங்குகளை நாடார் சமுதாய மக்களுக்கு கொடுக்காமல் பா.ராமச்சந்திர ஆதித்தன் மோசடி செய்து விட்டார்.

இதுகுறித்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவிற்கிணங்க மதுரை குற்றப்பிரிவில் (இந்திய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

மீட்புக்குழு தொடங்கி இதுநாள் வரை பா.ராமச்சந்திர ஆதித்தன் எந்தவித மான கணக்குகளும் முதலீட்டாளர்களுக்கோ, மன்ற உறுப்பினர்களுக்கோ கொடுக்கவில்லை. ஆகவே, தற்போது கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு மீட்புக்குழு அலு வலகத்திலுள்ள கணக்குகள் அடங்கிய நான்கு கணினிகளின் இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

தங்களது குடும்பத்தினரே தொடர்ந்து வங்கியின் இயக் குனர் பதவியை வகிப்பதற்கு சிவசங்கரன் வசமுள்ள 33 சதவீத பங்குகளின் ஓட்டுரிமை தேவைப்படுவதால் சிவசங்கரனின் கைப்பாவை யாக மாறி நாடார் சமுதாயத்தை அடகு வைத்து, நாடார் மஹாஜன வங்கி முதலீட்டாளர் மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் புதிய புதிய ஒப்பந்தங்களை பெருந்தொகைக்கு ஏற்படுத்தி கொண்டார். அந்த ஒப்பந்தத் தின்படி அவர் பணம் செலுத்தவில்லை. ஆனால் சிவசங்கரன் வசமுள்ள 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளின் மதிப்பு ரூ.74 கோடியே 25 லட்சம் ஆகும். ஆனால் பா.ராமச்சந்திர ஆதித்தன் மற்றும் எம்.ஜி.எம். மாறனும், ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்றத்திற்கு தெரியாமல் ரகசியமாக 10.3.2006 அன்று 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளை சுமார் 166 கோடியே 5 லட்சம் ரூபாய் என்று ஒரு போலியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் சிவசங்கரனிடம் கூட்டுச் சேர்ந்து 33 சதவீத வங்கியின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். ஆகவே, தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஸ்டெர்லிங் நிறுவனத்திடம் மீதமுள்ள 33 சதவீத பங்கு களை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மன்றம் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தின்படி நாடார் சமுதாய மக்களுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பா.ராமச்சந்திர ஆதித்தனும், அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இயக்குனர்களாக உள்ளனர். இந்த பதவியை தவறாக பயன்படுத்தி கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கடன் வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி கடன் வாங்கியவர்களிடமிருந்து ஒன் டைம் செட்டில்மெண்ட் மூலம் தீர்வு செய்வதிலும் கமிஷன் பெறுகிறார்கள்.

சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரை இந்த விசாரணையில் வேகம் காட்ட உத்தரவிட வேண்டுகிறோம். முதல்-அமைச்சர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகள் மாற்றம் செய்யும் விஷயத்தில் தலை யிட்டு வங்கியின் பங்குகளை நாடார் இன மக்களுக்கே கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பா.ராமச்சந்திர ஆதித்தனிடமிருந்து சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 ஆயிரம் வங்கியின் பங்கு பத்திரங்களையும், பணம் செலுத்தியும் பங்குகள் கிடைக்காத நாடார் சமுதாய மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

இதன்பின்பு அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:-

சிவசங் கரனின் ஸ்டெர்லிங் குழுமத் திடம் இருக்கின்ற 33 சதவீத வங்கிப் பங்குகளை வெளிநாட்டினருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ விற்பதற்கு, எங்களது நண்பராக இருந்த பா.ராமச்சந்திர ஆதித்தன் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார். அதைத் தடுக்க வேண்டும் என்பது எங்களின் முதல் கோரிக்கை.

மேலும் ஸ்டெர்லிங் குழுமத்திடம் உள்ள 33 சதவீத பங்குகளும் நாடார் களுக்குத்தான் வர வேண்டும். நாடார்களும் அனைவரும் நாடார் சங்கங்களும் அதை வாங்கத் தயாராக இருக்கிறோம்.

பா.ராமச்சந்திர ஆதித்தன் பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார். ஒரு மாத காலத் துக்குள் யாரிடமாவது இருந்து வாங்கித் தந்து விடுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் சிவசங்கரனிடம் இருந்துதான் 10 ஆயிரம் பங்குகளை வாங்குவதற்கு நாடார் சங்கங்கள் பணம் கொடுத்தன.

பணம் போய் சேர்ந்து விட்டது. ஆனால் அதற்கான பங்கு பத்திரங்கள் யாருக்குப் போனது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது பெரிய மோசடி. பாதிக்கப்பட்ட நாடார்களுக்கு பங்கு பத்திரங்களை வாங்கித் தர வேண்டும் என்பதை 2-வது கோரிக்கையாக முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வைத்தோம்.

முழுமையான ஈவுத் தொகை (டிவிடன்ட்), உரிமைப் பங்கு ஆகியவற்றை தருவதாகக் கூறிதான் நாடார்களிடம் பணம் வசூல் செய்தோம். அதைத் தருவதற்கும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதையும் 3-வது கோரிக்கையாக முதல்-அமைச்சரின் கவனத் துக்கு கொண்டு சென்றோம்.

மெர்க்கண்டைல் வங்கி லாபத்தில் ரிசர்வ் வங்கி ஆணைஇல்லாமலேயே ரூ.1000 டிவிடெண்ட் தரமுடியும். அதை கூட தரவில்லை. ஏனென்றால் சிவசங்கரனின் ஆணைப்படி நடக்கிறார்.

பங்குகளை நாங்களே வாங்க தயாராக இருந்த நேரத்தில் மீட்பு குழுவினரை கலந்து பேசாமல் தன்னிச்சையாக ரூ.74 கோடி மதிப்புள்ள பங்குகளை ரூ.130 கோடி என்றும் அதன் பின்னால் அதை ரூ.166 கோடி என்றும், ஒவ்வொரு பொதுக்குழுவின்போதும் 33 சதவீத பங்குகளுக்கான ஓட்டு உரிமையை வாங்குவதற்காக இவ்வாறு உயர்த்தி சமு தாயத்தை கடனாளியாக ஆக்கிவிட்டனர்.

நாடார்களின் உரிமையான இந்தப் பங்குகள், வெளி நாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ போகக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்காக இன்னும் எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் மனு கொடுத்தவர்கள் விவரம்:

மதுரை நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், திருநெல் வேலி தட்சணமாற நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர்.சபாபதி நாடார், தூத்துக்குடி நாடார் மகமை தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெ.த. பத்மநாபன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார் நாடார், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், மதுரை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்ற அறங்காவலர்கள் வி.எம்.ஜி.ராஜசேகரன், எஸ்.ஜி.சேகர், டி.பி.எஸ்.பொன்குமார், பல்லாவரம் வட்டார நாடார் கள் சங்க செயலாளர் சிற்றம்பல பாண்டியன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், சென்னை வாழ்நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்கு னர்கள் பி.எஸ்.சத்தியசீலன், ஆர்.தமிழரசன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கீழ்கடலோர நாடார் சங்க நிர்வாகிகள் டி.ராமச்சந்திரன், கே.சிவராமன்.

Posted in Aadhithan, Aathithan, Biz, Business, Controversy, Courts, Economy, Essar, Essar Group, Finance, inter-community rivalry, Judge, Justice, KP Ganesan, Law, Mercantile Bank, Naadar, Nadar, Nadar community, Order, Pa Ramachandra Athithan, Politics, regulatory lapses, Sterling Computers, Tamil Nadu, Tamilnad Mercantile Bank, TNMB | 2 Comments »

33rd National Games in Guwahati – No Place for TN athlete Santhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை சாந்திக்கு இடம் இல்லை

சென்னை, பிப்.1-

33-வது தேசிய விளையாட்டுப் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் வருகிற 9-ந் தேதி முதல் 18ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 40 பேர் இடம்பெற்று உள்ளனர். 20 வீரர்களும், 20 வீராங்கனைகளும் தேர்வாகி உள்ளனர்.

தோகாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த சாந்தி தமிழக அணியில் இடம் பெறவில்லை.

பெண் தன்மை சோத னையில் தோல்வி அடைந்த அவரது பதக்கம் பறிக்கப் பட்டதா இல்லையா என்ற மர்மம் இன்னும் நீடித்து இருக்கிறது. சாந்தியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு அமைச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் சி.நீலசிவலிங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சாந்தியின் பெயரை சேர்த்து இருந்தோம். திடீரென இந்திய தடகள சம்மேளனத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு பட்டியல் அனுப்பவும் என்று கடிதம் வந்தது. ஆனால் விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் சாந்தியை நீக்கி உள்ளோம்.

இவ்வாறு நீலசிவலிங்கசாமி கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள்:

அரவிந்த், மாணிக்க வாசகம், விஜய குமார், சத்யா, சரவணகுமார், ரகுநாத், முத்துசாமி, கருப்பசாமி, விக்டர், ஜெபசிங், புயல் பாலச்சந்தர், பெனடிக்ட் ஸ்டார்லி, நிகில், சித்தரசு, வெய்ன் பெபின், வினோத்ராஜ், சந்திரசேகர், ரஞ்சித்குமார், வடிவேலு, பார்த்தீபன், பிரேமானந்த், பிரசாந்த்,

பயிற்சியாளர் அண்ணாவி,

மானேஜர் செந்தில்.

பெண்கள்:

அஞ்சு ஜார்ஜ், சாரதா நாராயணா, அன்பு விமலா, பிரதீபா, மோகனாள், இளவரசி, சூர்யா, மகேஸ்வரி, சங்கரி, காயத்ரி, லீலாவதி, லட்சுமி, சுரேகா, சரஸ்வதி, அணிச்சம், கற்புரா மாலா, ஜெயந்தி, மோகன பிரியா, மலர் விழி, சரண்யா பிரகாஷ்,

பயிற்சியாளர்:- சுகந்தி,

மானேஜர்:- பார்வதி.

Posted in 33, Asiad, Asian Games, athlete, athletics, Contestants, Controversy, Games, India, Medals, National Games, Olympics, Santhi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Sports, Track and field | Leave a Comment »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »