Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thamizh padam’ Category

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

Balu Mahendra to start new Film Institute in Chennai for aspiring Tamil Cinema entrants

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

Posted in Admissions, Balu mahendra, Camera, Chennai, Cinema College, College, Courses, Degree, Degrees, dialogues, Diploma, Direction, Director, Editing, Gopali, Graduate, Institute, Madras, Photography, Post graduate, Screenplay, Story writing, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Technicians, Technology, Thamizh Movies, Thamizh padam, TV, University | Leave a Comment »

New Tamil Movie releases – 2006 end of year Tamil Cinema Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 8 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்

தீபாவளிக்கு விஜயகாந்த் சரத்குமார், அஜீத், ஆர்யா படங்கள் ரிலீசாயின. இந்த படங்களுடன் மோதாமல் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டன. அதன்படி இம்மாதம் 8 படங்கள் ரிலீசாகின்றன. வாத்தியார், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்கள் இன்று ரிலீசாயின.

`வாத்தியார்‘ தீபாவளிக்கு வர இருந்தது. சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் வெளிவராமல் நின்றது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம் ஏற்பட்டு ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் அர்ஜ×ன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்துள்ளார். அநியாயங்களை எதிர்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் கதைதான் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை படத்தில் ஸ்ரீகாந்த், பாவனா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்த் பெட்ரோல் பங்க் ஊழியராக நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க விரும்பினர். பாவனா கால்ஷீட் இல்லாததால் எடுக்க முடியவில்லை. ஸ்டான்லி இயக்கியுள்ளார்.

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படமும் இம்மாதம் ரிலீசாகிறது. ஏற்கனவே விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு படங்கள் தொடர்ச்சியாக வென்றதால் இப்படமும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜோடியாக மம்தா நடித்துள்ளார்.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ரெண்டு படம் 17-ந் தேதி ரிலீசாகிறது. மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரீமாசென், அனுஷ்கா என இரு நாயகிகள். சென்னையில் தீவுத்திடலில் `செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரீமாசென் கடல் கன்னியாக நடிக்கிறார்.

பரத் கதாநாயகனாக நடித்த வெயில் படமும் அதே 17-ந் தேதி ரிலீசாகிறது. ஜோடியாக பாவனா நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ளார். விருதுநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ஸ்ரேயா ரெட்டி, பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமான கல்யாணி கதாநாயகியாக நடித்த பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை படமும், புதுமுகங்கள் நடித்துள்ள ஆவணி திங்கள் படமும் இம்மாதம் ரிலீசாகிறது.

பாலச்சந்தர் இயக்கியுள்ள `பொய்‘ படமும் இம்மாத ரிலீஸ் படங்கள் பட்டியலில் உள்ளது. இதில் உதய்கிரண், விமலாராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Posted in Aavani Thingal, Arjun, Balachander, Bhawana, Deepavali, Diwali, East Coast Road, ECR, Imsai Arasan, izhakku Kadarkarai Salai, K Balachandar, KB, Movie Previews, New Films, Pasupathy, Poi, Prakashraj, Reema Sen, Rendu, Shreya Reddy, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Sunday 9 to 10:30, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thamizh padam, Vaathiyaar, Vasanthabalan, Veyyil, Vishal | Leave a Comment »

Paruthi Veeran – Movie Previews by Amar : Sivakumar’s son & Priya Mani

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்

தரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.

பருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு

‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.

படத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.

பருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

மலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.

—————————————————————————————————
“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”
டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை
`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை

சென்னை, ஆக.8-

“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

`பருத்தி வீரன்’ பட விவகாரம்

நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.

நாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.

ஆடியோ ரிலீஸ்

“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ஏரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

படத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.

சட்டப்படி நடவடிக்கை

பருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.

நாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.

Posted in Absence, abuse, Ameer, Amir, Audio, Awards, Ban, Cannes, Captain, Cheat, Chennai, cinematographer, Climax, Compensation, Controversy, Creative, Distribution, Durai, Faces, Festival, Film Festival, Foul, job, Kaarthi, Kuravar, Limelight, Loser, Madras, Mounam Pesiyathe, Mownam Pesiyathey, music, Narikkuravar, Narikuravar, Paruthy Veeran, people, Portrayal, Presence, Priyamani, Prizes, Protest, Ram, Ramji, Representation, rights, Salary, SC, Sivakumar, Songs, ST, Stereotype, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamizh Movies, Thamizh padam, Theater, Theaters, Theatre, Theatres, tribal, Violation, Winner, YSR, Yuvan Shankar Raja | 5 Comments »