Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Defame’ Category

TR Baalu, Ram Sethu Project and Subramaniam Swamy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

டி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்

சென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.

இந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.

சேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.

பாக் ஜலசந்தி
இந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்
பாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,

“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.

சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.

Posted in Adams Bridge, Allegations, Allege, Baalu, Balu, Biz, Bribery, Bribes, Bridge, Business, Company, Corrupt, Corruption, Defamation, Defame, DMK, Economy, Environment, Finance, God, Hindu, Hinduism, Hindutva, kickbacks, Law, Lawsuit, Money, Nature, nexus, Ocean, Order, Pollution, Project, Ram, Ram Sethu, Rama, Raman, Ramar, Religion, Saami, Sami, Sea, Selvam, Selvan, Sethu, Setu, Shipping, Ships, Subramaniam, Subramaniam Swamy, Swami, Swamy, TR Baalu, TR Balu, Transportation, TRB, TRB Selvam | Leave a Comment »

Vijay incites Kreedam movie clashes? – Ajith fan club vs Trisha admirers

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

oLiyile: Review: Kireedam (MalayaLam)

பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்

குரல்வலை: கிரீடம்

கிரீடம் (2007) « Manoranjitam

செல்வேந்திரன்: தல’ தப்புமா…?!

செப்புப்பட்டயம்: கிரீடம் திரைவ�

வெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா?

ராசபார்வை…: கிரீடம்!

சற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

Blogeswari: KIREEDAM: ORU KIZHISAL

BlogsOfRaghs :: பல்லவி & Charanam

Welcome to Sify.com

MSN INDIA – கிரீடம் – விமர்சனம்

சிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா!?

சும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்!

தமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’?

Mottaippaiyan: கிரீடம் விமர்சனம்

‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! :Sutharsan

Muthu’s Rambling Blog: Kireedam – Not what it means

Ultimate Star – Ajith Kumar Fans Club: Kreedam climax – behind the scenes

Blog with a Difference: Kireedam – Ajith’s Crown

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை


அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.

திரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.

அஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.

திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.

அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.
—————————————————————————————————————
ரசிகர்கள் மோதலின் பின்னணி

23 ஜூலை 2007

வழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.

`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.

த்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.

ஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.

விஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.

இருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

—————————————————————————————————-

குமுதம் ரிப்போர்ட்டர்

29.07.07 ஹாட் டாபிக்

அடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்

– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்

இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.

ஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.

அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.

‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.

எங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.

இந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.

எங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.

இந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.

அதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.

முழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்!’’ என்றார் வேதனையுடன்.

நடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

இப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.

இதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்!’’ என்றார் த்ரிஷா.

இவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.

பெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்!’’ என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.

இப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.

அஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்!’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ

– வி.குமார்

———————————————————————————————————
அஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை

அஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.

இதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.

போலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.

போலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.

இதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-

தாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.

தாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.

பிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.

ஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.

Posted in Actor, Actress, Admirer, Ajeeth, Ajith, Ajithkumar, Appreciation, Ardent, Asin, Banner, Burn, Chandrasekar, Chandrasekhar, Cinema, clash, Clubs, Craze, Cut-out, Cutout, Defame, Devotee, Effigy, Enthusiast, Fanatic, Fans, Films, Flag, Freak, Hoarding, Incite, Jassy, Jessie, Kireedam, Kiridam, Kreedam, Kridam, Love, Maniac, Movies, Nut, Passion, Protest, SA Chandrasekar, SA Chandrasekhar, Shoba, Shobha, Soorya, Star, support, Supporter, Surya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thala, Thrisha, Torn, Trisha, Vijai, Vijay, Zealot | 1 Comment »

Press Freedom, Corruption of the Justice system, Media Exposure – Sting Operations

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

“உண்மை’யைக் காட்டறீங்களா, கூடவே கூடாது!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

சில நாள்களுக்கு முன்பு “”பி.எம்.டபிள்யு.” வழக்கு என்ற கொலை வழக்கு தொடர்பாக, அரசுத்தரப்பு வழக்கறிஞரும், பிரதிவாதியின் தரப்பும் சந்தித்துப் பேசி வழக்கைச் சீர்குலைக்க நடத்திய பேரம் பற்றிய ரகசிய காட்சிகளை “”என்.டி.டி.வி.” படம் பிடித்து நேயர்களுக்கு நேரடியாகப் போட்டுக் காட்டியது.

பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவரைத் தப்ப விடுவார் என்பதை அப்பட்டமாக சுட்டிக்காட்டும் காட்சி அது. அதே நாளில் பத்திரிகையில் மற்றொரு செய்தி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அது, தனியார் தொலைக்காட்சிகளும், பண்பலை வானொலிகளும் கடைப்பிடிக்க வேண்டிய செய்தி ஒளி-ஒலிபரப்பு தொடர்பான நடத்தை நெறிகளைப் பற்றியது.

அந்த நடத்தை நெறிகள் என்னவென்ற விவரம் என்னிடம் கிடையாது; ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமானவற்றைப் படித்தபோது, நம்பமுடியாத, வியப்பை ஊட்டுகிற, அடக்குமுறையான கட்டுப்பாடுகள் பல இருப்பதை உணர முடிந்தது.

அதில் முதலாவது, “”நட்பு நாடுகளை விமர்சிக்கக்கூடாது” என்பது. பாகிஸ்தானைக்கூட இப்போது நட்பு நாடு என்றே வகைப்படுத்திவிட்டோம். தென்னாப்பிரிக்காவும் இஸ்ரேலும் நமக்கு வேண்டாத நாடுகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்படி என்றால், நாம் எந்த நாட்டையுமே விமர்சனம் செய்யக்கூடாது.

அதாவது, “”இராக்கை எத்தனை அடாவடியாக ஊடுருவினீர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பாராட்ட வேண்டும்; எங்கள் நாட்டு என்ஜினீயர்களுக்கும் டாக்டர்களுக்கும் “”எச் 1 பி” விசா தர மறுக்கும் உங்களுடைய பண்பாடுதான் என்னே என்று வியக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டையும் நாம் விமர்சிக்கக் கூடாது; இதைவிட கேலிக்குரியவர்களாக நாம் ஆக முடியுமா?

நீதித்துறையின் நேர்மையைச் சந்தேகிக்கவோ, விமர்சிக்கவோ கூடாது என்று நடத்தை நெறி கூறுகிறது. 2006-வது ஆண்டில் இந்தியாவின் கீழ் நீதிமன்றங்களில் ரூ.2,630 கோடி லஞ்சமாகக் கைமாறியது என்று “”டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்” என்ற அமைப்பு வெளியிட்ட தகவலை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலியோ தொலைக்காட்சியோ பயன்படுத்தக்கூடாது.

(இந்த ரூ.2,630 கோடி என்பதே குறைவு, உண்மையில் இதைப்போல பல மடங்கு லஞ்சமாகக் கைமாறுகிறது என்பதே என் கருத்து!)

வழக்குகளில் சாதகமான தீர்ப்புப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, வழக்கு முடிய நீண்ட காலம் காத்திருக்க நேர்கிறது என்ற தகவல்களால் நீதித்துறையையே சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அம்சம் அதிகரித்து வருகிறது.

இதைப் பத்திரிகைகள் பிரசுரிக்கலாம்; ஆனால் வானொலி, தொலைக்காட்சிகளில் வரக்கூடாது என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. பத்திரிகைகளை ஒரு மாதிரியாகவும் வானொலி, தொலைக்காட்சிகளை வேறு மாதிரியாகவும் நடத்துவது அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு அளிக்கும் சுதந்திரத்துக்கே முரணாக அமைந்துவிடும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லவா என்று கேட்டால் சரி, “”இனி பத்திரிகைகளும் பிரசுரிக்கக்கூடாது என்று கூறி விடுகிறோம்” என்ற பதில் கிடைக்கலாம்.

எவருடைய அந்தரங்க விஷயங்களிலும் தலையிட்டு, அவதூறு கற்பிக்கக்கூடாது என்பது அடுத்த கட்டுப்பாடு. இதைக் கூற இந்த கட்டுப்பாடு அவசியமே இல்லை, இது ஏற்கெனவே சட்டமே கொடுத்துள்ள அதிகாரம். அவதூறாகப் பேசினாலோ எழுதினாலோ நடவடிக்கை எடுக்க சட்டம் இடம் தருகிறது. எது அந்தரங்க வாழ்க்கை, எது பொது வாழ்க்கை என்று பிரித்துப் பார்ப்பது எப்படி?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்குவதை படம் பிடித்தால், “”அவர் ஏதோ சொந்தச் செலவுக்காக முயற்சி எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா?

அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் ரகசியமாகச் சந்தித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தப்பிக்கச் செய்ய ஏதாவது திட்டம் தீட்டினால், வழக்கறிஞர்களுக்கும் சாட்சிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம் அது என்று கண்ணை மூடிக்கொண்டு அப்பால் போய்விட வேண்டுமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளையும் பிரிக்கும் கோடு எது?

“”உள்ளதை உள்ளபடியே காட்டும் கேமரா” என்று தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வீதியிலும் பொது இடங்களிலும் அப்பாவிகள், தங்களை ஒரு கேமரா கண்காணிக்கிறது என்று தெரியாமல், பித்துக்குளித்தனமாக நடப்பதைப் படம் பிடித்து ஒளிபரப்புகின்றனரே அதுவல்லவோ, தனிப்பட்ட வாழ்க்கையில் குறுக்கிடும் சம்பவம்! அதை அனுமதித்துவிட்டு மற்றதைத் தடுப்பது எதற்காக? லஞ்சம், ஊழல்களை யாரும் அம்பலப்படுத்திவிடாமல் தடுப்பதற்காகவா?

லஞ்சமும் ஊழலும்தான் அன்றாட வேலைகள் என்றாகிவிட்ட நாட்டில், இந்த நாட்டை ஆள்கிறவர்கள் எப்படிப்பட்ட சுயநலவாதிகள், மோசடிப் பேர்வழிகள் என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்ட, ஊழலை அம்பலப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள்தான் உதவுகின்றன.

ஊழல்பேர்வழிகள் தயக்கமின்றிக் கொள்ளையடிக்கவா இந்த கட்டுப்பாடுகள்? அரசின் நடத்தை நெறிகளின் நோக்கமோ அல்லது விளைவோ இதுவாக இருந்தால் அது மிகவும் துயரகரமானது.

நடத்தை நெறியின் மற்றொரு அம்சம் சுவாரஸ்யமானது. தேசியத் தலைவர்கள் அல்லது மாநிலத் தலைவர்களின் உடலமைப்பு பற்றிய காட்சிகளை ஒளிபரப்புவதில் எச்சரிக்கை தேவை என்கிறது.

அதாவது இந்திரா காந்திக்கு முடி நரைத்துவிட்டதையோ, வாஜ்பாய் பேசும்போது திடீரென சில விநாடிகளுக்குத் தொடர்ந்து மெüனமாக இருப்பதையோ காட்டக்கூடாது!

இப்படிப்பட்ட தேசியத் தலைவர்களை இஷ்டப்படி கேலிச்சித்திரமாக வரைந்துதள்ளும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு உண்டு, தொலைக்காட்சிகளுக்குக் கிடையாது என்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்பது முதுமொழி. ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கு வாய்தா வாங்குவதே நமது நீதிமன்ற நடைமுறைகளின் தனிச்சிறப்பு. ஜெயலலிதா, லாலு பிரசாத் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருந்தாலும் அவர்கள் தலைவர்களாக நீடிக்கவும் ஆட்சி செய்யவும் சட்டபூர்வ தடை ஏதும் இல்லை.

இந்த வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்கும், அவர்கள் உண்மையிலேயே நிரபராதிகள்தானா அல்லது குற்றம் செய்தவர்களா என்பதைத் தெரிவிக்காமலே அவர்களைத் தொடர்ந்து ஆளவிடுவது சரியா? அவர்கள் நல்லவர்கள் என்றோ குற்றவாளிகள் என்றோ நான் கூறவில்லை; ஆனால், அப்படிப்பட்டவர்களின் உண்மையான நிலைமை என்ன என்பது மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் தெரிய வேண்டாமா?

அவதூறாகவோ, உள்நோக்கத்துடனோ பேசினால், எழுதினால் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வழக்குத் தொடுக்க முன்வருவதில்லை. நீதிமன்ற நடைமுறையால் வழக்கு தாமதம் ஆவது முக்கிய காரணம்.

இந்நிலையில் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் இச்செய்திகள் இடம் பெறுவதைத் தடுப்பதென்பது, பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே பல முறைகேடுகள் நடந்து முடிக்கச் சாதகமாக போடும் புகைத் திரையாகவே மாறிவிடும். முறைகேடுகள் வெளியே தெரியக்கூடாது, அவற்றை எதிர்த்து யாரும் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்காது என்றே நம்புகிறேன்.

அரசு தனது புதிய நடத்தை நெறிகளை வானொலி, தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது திணிக்க முற்பட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் அந்த நெருக்குதல்களை எதிர்க்க முடியாமல் பணிந்து போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும். வானொலி, தொலைக்காட்சி நடத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசின் தயவு அவர்களுக்குத் தேவை.

வானொலி, தொலைக்காட்சிக்கான புதிய கட்டுப்பாடுகள் என்பவை அரசுக்கும் தனியார் ஒளி, ஒலிபரப்புக்காரர்களுக்கும் இடையிலே மட்டும் உள்ள ஒரு விவகாரம் அல்லவே? இதில் மக்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. ஒலிபரப்பாவது அனைத்தும் மக்களுக்காகவே. மக்களின் நலன்தான் முக்கியமானது; நடத்தை நெறி என்ற பெயரில் தகவல் பெற மக்களுக்கு உள்ள உரிமையை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது.

ஜனநாயக நாட்டில் எந்தவொரு அமைப்பும் மக்களின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது அல்ல.

நாட்டின் முக்கிய நபர்கள் மீதும் அமைப்புகள் மீதும் தொலைக்காட்சி கேமராக்களின் வெளிச்சம் தடையின்றிப் பாயட்டும். அது நீதித்துறையாக இருந்தாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற அமைப்புகளாக இருந்தாலும், அரசின் பொது நிர்வாகமாக இருந்தாலும் -அது எதுவாக இருந்தாலும் மக்களின் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

Posted in abuse, Advocate, Attorney, Bribery, Bribes, Cartoons, Censor, Censure, Citizen, Collusion, Corruption, Courts, Defamation, Defame, Democracy, Ethical, ezine, FM, Freedom, Govt, HC, Independent, journalism, Journals, Judges, Justice, kickbacks, Law, Lawsuits, Leaders, Magazines, Mags, Media, Moral, MSM, NDTV, News, Newspaper, Order, Party, Police, Politics, Power, Preempt, Press, Prohibit, Radio, Republic, Research, SC, Shackles, Sting, Survey, Television, TI, Transparency, TV | Leave a Comment »