Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Condemn’ Category

Feb 06: Eezham, Sri Lanka, LTTE, India Fishermen, Tamil Nadu, War, Media – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2008

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கை புகார்

இலங்கைக் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அத்துமீறி மீன்பிடித்துவருவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி இந்தியாவிடம் இலங்கை கடற்படை முறைப்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கையின் தலைமன்னார் கடற்பகுதியில் திங்கள் கிழமையன்று ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகொன்று சேதமானதை அடுத்தே இந்த முறைப்பாட்டினை இலங்கைக் கடற்படைத் தலைமையகம் கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இவ்வாறானதொரு முறைப்பாட்டினைச் செய்திருப்பதனை கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதோடு, இது குறித்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தனர்.


பிரயாணத் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்
சோதனைச் சாவடியில் நிற்கும் பேருந்துகள்

இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் மீதான பிரயாணத் தடை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் அததியாவசிய தேவைகளுக்காகச் செல்லும் வண்டிகள், பயணிகள் செல்லும் பேருந்து வண்டிகள் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிக்குச் சென்று திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த மூன்று தினங்களாக மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக வவுனியா மன்னார் மாவட்டங்களில் இருந்து எந்த வாகனமும் மதவாச்சி ஊடாகப் பயணம் செய்ய முடியாது என பொலிசாரினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் பிரயாணிகள், உயர்கல்வி, மாணவர்கள், வைத்தியர்கள் உட்பட்ட துறைசார்ந்தவர்கள், பொதுமக்கள், வர்த்தகரகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்சிஜனைப் பெறுவதற்காக அனுராதபுரத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட ட்ரக் வண்டியும் பிரயாண அனுமதி மறுக்கப்பட்டு மதவாச்சி பொலிசாரினால் வவுனியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவிடயம் குறித்து வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் கையிருப்பில் உள்ள ஒக்சிஜனின் அளவு நாளாந்தம் குறைவடைந்து செல்வதனால், அதனை அனுராதபுரத்தில் விரைவில் எடுத்து வராவிட்டால் வைத்தியசாலையின் நோயாளர்களின் உயிர்காக்கும் முக்கிய வைத்திய பணிகள் பாதிப்படையும் அபாயம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை அரசுக்கு ஊடகவியளாளர் அமைப்பு கண்டம்

சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
சுதந்திர செய்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப் பெரிய அமைப்பு இலங்கை அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி அறிக்கையில், அந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை அரசு அதிகாரிகள் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் உரிமை குறித்து, இலங்கை அரசு மிகவும் ஆபத்தான அளவுக்கு அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு, விடுதலைப்புலிகள், மற்றும் பிற ஆயுதக்குழுக் களை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

 


புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 பிப்ரவரி, 2008

வவுனியாவில் முழு அடைப்பு

வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று
வெறிச்சோடிக் கிடக்கும் வவுனியா சாலை ஒன்று

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடைகள் மூடப்பட்டு, பணிபுறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பு கோட்டை ரயில் நிலையம், தம்புள்ள மற்றும் தட்சணாமருதமடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையும், இவற்றில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதையும் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

புளொட் எனப்படும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த மாவட்டங்களில் அரச, தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை இங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

 


வட இலங்கையில் மோதல்கள் தொடருகின்றன

வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்
வடக்கில் வான்வழித் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் தளம் ஒன்றின் மீது இன்று காலை 8.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், திருவையாறு வடக்கில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் இன்று காலை 20 குண்டுகளை வீசியதாகவும், இதன்போது அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு குழிகளுக்குள் இருந்ததாகவும், குடிசையொன்று சேதமடைந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி புறநகர்ப்பகுதியாகிய கணேசபுரத்தில் நேற்றுப் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கிளாலி, நாகர்கோவில் உட்பட்ட போர்முனைகளில் இராணுவத்தினர் இன்று காலை 5.50 மணி முதல் 6.30 மணிவரையில் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

சுமார் 45 நிமிடங்கள் இந்தத் தாக்குதல் நீடித்ததாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் இதில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் தரப்பு சேதங்கள் குறித்து அவர்கள எதுவும் தெரிவிக்கவில்லை.

மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் நேற்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாகவும் இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

 


ராமேஸ்வரம் மீனவர்களிடம் தமிழக அரசு விசாரணை

மீன்பிடி தொழிலாளர்கள்
மீன்பிடி தொழிலாளர்கள்

இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இலங்கை கடற்படையின் வாட்டர்ஜெட் ரோந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்தது.

இந்த சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களின் படகுகள் விடுதலைப்புலிகளுக்கு உதவும் விதத்தில் நடந்து கொண்டதாக இலங்கை கடற்படை இந்திய அரசிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் இன்று புதன்கிழமை விசாரணை நடத்தி யிருக்கிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் நடத்திய இன்றைய விசாரணையின்போது, இந்திய கடற்படை அதிகாரிகளும், கடலோர காவல்படையினரும் உடனிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகள் குறித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான போஸ் தமிழோசையிடம் கூறிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 


 புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 பிப்ரவரி, 2008

 


இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-அம்னெஸ்டி இண்டர்நேஷணல்

அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்
அம்னெஸ்டி இண்டர்நேஷணல் அமைப்பின் சின்னம்

இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில், ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்படுவதும், ஊடகவியாலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும், அதிகமாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. பலர் சித்திரவதை செய்யப்பட்டதுடன், அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அந்த அளிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எந்தவொரு சுதந்திர உள்ளூர் ஊடகத்தையும் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஊடகவியலாளர்களை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோரியுள்ளது.

இவை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Bus, Condemn, Eelam, Eezham, Fish, fishermen, Fishing, LTTE, Media, MSM, Sea, Security, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Tourists, transit, Transport, Travel, War | Leave a Comment »

Rajeem Mohammed Imam: Tamil National Alliance (TNA) legislator to ‘resettle Muslims’

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.

 


உதயன் செய்தித்தாளுக்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

எனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

 


மன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

கிளேமோர் கண்ணிவெடி
கிளேமோர் கண்ணிவெடி

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Posted in AI, Colombo, Condemn, Eelam, Eezham, Extortion, Freedom, Independence, Islam, Jaffna, journalism, Journalists, LTTE, Mannaar, Mannar, Media, MSM, Muslims, Newspaper, Rajeem Mohammed Imam, Sri lanka, Srilanka, Tamil National Alliance, TNA, Udayan, Udhayan, Uthayan | Leave a Comment »

Malaysia: Over 200 Indian workers claim being abused

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

மலேசியத் தமிழர் போராட்டம் பற்றிய செவ்விகள்

அமைச்சர் டத்தோ சாமிவேலு
அமைச்சர் டத்தோ சாமிவேலு

மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், “இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.

“வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


வரம்பு மீற வேண்டாம்!

“”மலேசியத் தமிழர் பிரச்னைப்பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படவேண்டுமே தவிர மலேசியப் பிரச்னையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்”- இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது, கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் “நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்.

அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

மலேசிய மக்கள்தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால், மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல், மலேசியவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், ஹிந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் “டத்தோ’ சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

மலேசிய அமைச்சர் “டத்தோ’ சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான், அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும்? தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய போலீஸôர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டபோது பலர் படுகாயம் அடைய நேரிட்டது.

அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு போலீஸôர் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும், மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

மலேசிய தமிழர் பிரச்னை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால் பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பது போல, மலேசியாவிலும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி -தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல், தான்சானியா பிரதமரா குரல் கொடுப்பார்? வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்!

Posted in abuse, Allegations, Citizen, Condemn, Condemnation, dead, Disparity, employees, Employers, Employment, Exploitation, Freedom, Govt, Hindu, Hinduism, Illegal, Independence, India, Islam, Jail, job, Law, Liberation, Malaysia, Muslim, Order, Passport, Prison, Protests, Race, Racists, Religion, rights, Samivelu, Slaves, Tamils, Visa, workers | Leave a Comment »

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்

பிரான்சிஸ்கோ பிரான்கோ
பிரான்சிஸ்கோ பிரான்கோ

ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.

ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.

ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »

Tehelka on Gujarat riots: Neerja Chowdhury – Sting, Expose, Revelations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தெஹல்கா புலனாய்வுக்கு அப்பால்…!

நீரஜா சௌத்ரி

குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரங்கள் குறித்து ஏற்கெனவே இருந்துவந்த சந்தேகங்களை தெஹல்காவின் ரகசியப் புலனாய்வு நடவடிக்கை நிரூபித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அப்பாலும் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக நடைபெற்றதே அந்தக் கலவரம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிவந்ததை அது பொய்யாக்கியிருக்கிறது. பஜ்ரங்க தளம், விசுவ ஹிந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் உறுப்பினர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதே அப் படுகொலைகள் என்பதை அந்த ரகசியப் புலனாய்வு டேப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

அதில் மிக முக்கியமானது என்னவென்றால், அந்தக் குற்றச்செயல்களைச் செய்தவர்களுக்கு முதல்வர் நரேந்திர மோடியின் ஊக்குவிப்பும் ஆதரவும் இருந்தது என்பதை அம்பலப்படுத்தி இருப்பதுதான். அக் குற்றங்களைச் செய்தவர்களே அவற்றை ஒப்புக்கொண்டு இருப்பது இதுதான் முதல் முறை.

தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிந்துத்துவ ஆதரவாளர் என்று கூறிக்கொண்டு சென்ற, அன்னியரான தெஹல்கா நிருபரிடம் இத்தனை பேர் தாம் அக் குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பதைக் கூறியிருப்பதிலிருந்தே, அவர்களை யாரும் தொட முடியாது என்ற தைரியம் அவர்களுக்கு இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவர் தமது இயக்கத்தின் எவ்வளவு தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், எந்த அரசியல்வாதியும் அரசியல் கட்சி ஊழியர்களும் தமது குற்றங்களைப் பற்றி அவ்வளவு சாதாரணமாக அவரிடம் கூறிவிட மாட்டார்கள். ஆனால், தெஹல்கா நிருபரிடம் தமது செயல்களைப் பற்றிப் பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள். “முஸ்லிம் வெறுப்பு’ என்னும் செயல்திட்டத்தின் மூலமாகத்தான் குஜராத்தில் அரசியல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்று தெஹல்கா நிருபர் கூறியிருப்பதை நிரூபிப்பதாக அது இருக்கிறது.

மோடிக்கு “விசா’ அனுமதி வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்த பிறகும், மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்தான் தனது பாதையை அவர் மாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு, “வளர்ச்சி’யில் அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோடி. ஆனால், கடந்த காலச் செயல்கள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் ஏற்பட்ட விரக்தி வெளிப்பாடுதான், கரண் தாப்பருக்கு அளித்துக்கொண்டு இருந்த பேட்டியிலிருந்து அவர் பாதியில் வெளியேறிய செயல்.

மோடியின் சொந்தக் கட்சியோ அவரைக் கண்டிக்க விரும்பவுமில்லை; கட்சியால் கண்டிக்க முடியவுமில்லை. 2002-ல் குஜராத்தில் நடந்த சம்பவங்களால் வேதனைக்கு உள்ளான அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், “ராஜ தர்ம’த்தைக் கடைப்பிடிக்காததற்காக மோடியை லேசாகக் கடிந்துகொண்டார். ஆனால் கோவாவில் அவர் இருந்தபோது, கட்சியிலிருந்து அவருக்கு வந்த கடுமையான நெருக்குதல்கள் காரணமாக, தனது நிலையை அவசரமாக மாற்றிக்கொண்டுவிட்டார் அவர்.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகுதான் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மோடி என்று கூறி, தெஹல்கா ரகசியப் புலனாய்வை மறுக்கின்றனர் பாஜக தலைவர்கள். அப்படிப் பார்த்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள “கறைபடிந்த’ அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கேட்டிருக்கவே கூடாது. எத்தனையோ குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.யான சகாபுதீனைப் போன்ற ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்ட ஒரே காரணத்தால் புனிதராக ஆகிவிடுவாரா? கடந்த காலக் குற்றமோ, நிகழ்காலக் குற்றமோ எதுவாக இருந்தாலும், தேர்தல் வெற்றியானது அதிலிருந்து ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கும் தெஹல்காவுக்கும் இடையே ரகசிய கூட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக. இவ்வாறு விட்டேத்தியாகக் கூறியிருப்பதிலிருந்தே மோடி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கும் திட்டமும் அக் கட்சிக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவரது அனுமதி தேவை; தெஹல்கா ரகசியப் புலனாய்வின் அம்பலங்கள் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்றாலும் மோடியின் ஒப்புதல் தேவை.

உண்மை என்னவென்றால், குஜராத்தில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத அடிப்படையில் இருகூறாக அணிதிரளச் செய்துவிடக்கூடிய எதையும் செய்துவிடக் கூடாது என்ற கவலையில் தத்தளிக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், அது மீண்டும் மோடிக்குச் சாதகமாகப் போய்விடும்.

மத்தியில் 2004-ல் இருந்து ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். ஆனால், 2002 கலவரத்தின்போது, அக் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஈசான் ஜாப்ரி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகூட உருப்படியான எந்த நடவடிக்கையையும் அது எடுக்கவில்லை. “வளர்ச்சி’ என்னும் கோஷத்தை மோடி சுவீகரித்துக்கொள்ள விட்டுவிட்டது காங்கிரஸ். பயங்கரவாத அச்சுறுத்தலால் குஜராத்தி இந்து மத்தியதர மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் பயன்படுத்தி, கடந்த 4 ஆண்டுகளில், தமது தீவிர இந்துத்துவா அடித்தளத்தை விரிவுபடுத்தியதுடன், இன்றைய உலகமயமாக்கச் சூழலில் முன்னேற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்னும் அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில், “வளமை மிக்க குஜராத்’ என்ற கோஷத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார் மோடி. வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவினர்தான் அவருக்கு இருக்கும் ஆதரவின் அடிப்படையாகும்.

மோடியை எதிர்கொள்ள சரியான திட்டமும் உறுதியும் இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், முஸ்லிம்கள் ஆகியவை ஓரணியில் திரட்டும் ஒரு திட்டத்தை ஏற்கெனவே காங்கிரஸ் வகுத்தது. அதோடு, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரையும் அணிதிரட்டியிருந்தால், மோடிக்குச் சிறந்த மாற்று சக்தியாக அது உருவாகி இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் களத்தில் மாயாவதி போன்றோரும் நுழைந்துவிட்டதால், காங்கிரஸ் இன்னும் தாமதித்துக்கொண்டு இருக்க முடியாது.

தெஹல்கா அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள், இந்தியாவின் மற்ற பகுதியில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்திலிருந்து குஜராத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் வேறாகவும் இருக்கக்கூடும்.

குஜராத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸýக்கு மிக முக்கியம். இடதுசாரிகளின் ஆதரவை உதறிவிட்டு மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்பது குறித்து குஜராத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் முடிவுசெய்யக்கூடும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற மோடி கையாண்டதைப்போல, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை திட்டமிட்டுக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு, தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும் வழியை மற்ற மாநில முதல்வர்களும் கையாளத் தொடங்கினால், அதை எப்படி தடுப்பது? மொத்த மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் வாக்களிக்க வருகின்றனர். அதில் 35%-லிருந்து 40% வாக்குகள் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஏதாவது ஓர் உணர்ச்சிகரமான பிரச்னையை முன்வைத்து, மொத்த வாக்காளர்களில் 20 சதவிகிதத்துக்குக் குறைவானவர்களைக் கவர்ந்துவிட்டாலே வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நிலை.

விசாரணையில் இருக்கும் பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறவிருக்கும் 200 பேரின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அது மட்டுமல்ல; இந்திய அரசின் அதிகாரம், அரசியல் சட்டத்தின் புனிதத்தன்மை, கடமைப் பொறுப்பு, குடிமக்களைக் காப்பதில் சட்டத்தின் பங்கு… என, ஜனநாயகம் அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு அவசியமான அனைத்துமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

தெஹல்கா புலனாய்வு ஒளிப்பதிவுகளைப் பார்த்தவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற புனிதப் போர்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால், இது 2002-ல் இந்தியாவில் நடந்திருக்கிறது. எனினும், அச் செயல்களில் ஈடுபட்டோர் அதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு, தண்டனை அனுபவிக்காமல் இன்னும் பகிரங்கமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர். தெஹல்கா புலனாய்வு அம்பலப்படுத்தி இருக்கும் விஷயங்கள் குறித்து, குறைந்தபட்சம் விரிவான விசாரணையாவது நடத்தப்பட வேண்டும்.

—————————————————————————————————————–

மோடி வெற்றியின் எதிரொலிகள்

நீரஜா சௌத்ரி

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், யாராலும் தோற்கடிக்க முடியாதவராக உருவெடுத்துவிட்டார் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதா கட்சியில் அவர் மீது அதிருப்தி நிலவியபோதிலும், ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவற்றில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், குஜராத்தின் சாதுக்களில் ஒரு பிரிவினர் அவரை எதிர்த்தபோதிலும் அவை அனைத்தையும் சமாளித்து, அதோடு அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எதிராக நிலவக்கூடிய இயல்பான அதிருப்தியையும் முறியடித்து மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார் நரேந்திர மோடி.

2002-ல் இருந்த ஆதரவை ஏறக்குறைய தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அவர். கட்சியின் செல்வாக்கையும் கடந்து மாபெரும் தலைவராகிவிட்டார் மோடி. கடந்த 12 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்துவந்த 45 சதவீத மக்களின் ஆதரவை மோடி என்ற தலைவருக்கான வாக்குகளாக மாற்றிவிட்டார் அவர்.

1971-ல் காங்கிரஸ் கட்சியின் சிண்டிகேட் பிரிவுத் தலைவர்களைப் புறந்தள்ளி, துர்க்கையாக உருவான இந்திரா காந்தியை நினைவூட்டுகிறது 2007-ம் ஆண்டின் குஜராத். 2000-மாவது ஆண்டு பிகார் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி, லாலு பிரசாத் பெற்ற வெற்றியையும் ஒத்திருக்கிறது மோடியின் வெற்றி.

மோடியேகூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டோரோ என்று தோன்றுகிறது. தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது அவரது நடவடிக்கைகள் அவ்வளவு உற்சாகமாகக் காணப்படவில்லை என்று அவரைச் சந்தித்தவர்கள் கூறினர். “”எனது கட்சி எனக்கு எதிராகப் போரிட்டபோதிலும் என்னால் முடிந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன்” என்று, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 3 நாள்களுக்குமுன் மத்திய அமைச்சர் ஒருவரிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகளின் விளைவுகள் காந்திநகர், வடோதரா, ராஜ்கோட், மேஹ்சானாவையும் கடந்து எதிரொலிக்கும் என்பது தேர்தல் பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்தே மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தத் தேர்தலானது இரு பிரதான கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், மோடி மற்றும் எல்.கே. அத்வானி ஆகிய தனிப்பட்ட இரு தலைவர்களுக்கும் முக்கியமானதாக அமைந்துவிட்டது.

மக்களவைக்கு இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா என்னும் காங்கிரஸ் கட்சியின் யோசனையைக் கிடப்பில் போடச் செய்துவிட்டது, குஜராத்தில் அக் கட்சிக்குக் கிடைத்த தோல்வி.

மனந்தளர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடியதாக குஜராத் வெற்றி அமைந்திருக்கும் நேரத்தில், தில்லியில் தனது ஆட்சியைப் பாதியில் முடிவுக்குக் கொண்டுவரும் அறிவீனத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஈடுபடாது. காங்கிரஸýக்கு மற்றொரு அபாய எச்சரிக்கை மாயாவதியிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது. குஜராத்தில் அதை காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருந்தது. விரைவிலேயே கர்நாடகத்திலும் தில்லியிலும் தேர்தல் வரவிருக்கிறது. அங்கும் காங்கிரஸýக்குத் தொல்லையாகவே அவர் இருக்கப் போகிறார்.

குஜராத் தேர்தல் முடிவின் எதிரொலி பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்திலும் கொஞ்சம் கேட்கக்கூடும். அங்கு கட்சி அணிகளிடையே கட்டுக்கோப்புக் குலைந்திருந்தபோதிலும், பாஜகவும் சிவசேனையும் ஒன்றுபட்டு உழைக்கும்பட்சத்தில் குஜராத் வெற்றியானது அவற்றுக்குப் பெருமளவில் கைகொடுக்கக்கூடும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் என்ற தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் மும்பையில் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைச் சந்திக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். இதற்குப் பல வகையான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மறுபுறம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் கதியும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாகிவிட்டது. 2008-ல் தேர்தல் வரக்கூடும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இடதுசாரிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியும் அணுசக்தி உடன்பாட்டுக்காக ஆட்சியைத் தியாகம் செய்யும் அளவுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, எந்தவிதமான உருப்படியான முடிவுக்கும் வராமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸýம் இடதுசாரிகளும் பேசிக்கொண்டே காலம் கடத்துவர் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்தால், தாங்களும் இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஆதரிப்போம் என்று ஜனநாயகக் கட்சியும் அறிவித்திருக்கிறது. எனவே, ஜார்ஜ் புஷ்-மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே அந்த உடன்பாடு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியானது, அண்மைக் காலமாக உரசல் போக்கில் இருந்த இடதுசாரிகளையும் காங்கிரûஸயும் கைகோத்துக்கொள்ளச் செய்துவிடக்கூடும். பலம் மிக்க காங்கிரûஸவிட பலவீனமான காங்கிரஸýடன் அரசியல் உறவு வைத்துக்கொள்ளவே இடதுசாரிகள் விரும்பக்கூடும். ஆனால், இப்போது பாஜக புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிவரும் சூழலில், காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்த இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என அழைக்கப்படும் 3-வது அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளிக்கும் ஆதரவிலும் குஜராத் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஹிந்துத்துவாவின் புதிய வெற்றிச் சின்னமாக நரேந்திர மோடி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதானது, மத்தியில் அத்வானியின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக விளங்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. உடனடியாகவோ, 2009-ம் ஆண்டிலோ அத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஹிந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, பலமும் ஆதிக்கமும் மிக்க தலைமை ஆகியவற்றைக் குழைத்து மோடி உருவாக்கி இருக்கும் புதிய அரசியல் பாதையை, பின்பற்ற வேண்டிய முன்னுதாரணமாக பாஜக வரித்துக்கொள்ளக்கூடும். எனினும் குஜராத்துக்கு வெளியே தனக்கு ஆதரவைத் திரட்டுவது மோடிக்கு சவாலாகவே இருக்கும். அடுத்த தலைமுறைத் தலைவர்களில் அருண் ஜேட்லியைத் தவிர அவரை ஆதரிப்போர் யாருமில்லை.

குஜராத்தில் அசைக்க முடியாத வெற்றியை மோடி பெற்றிருப்பதால் அவருக்கு எதிராக யாரும் இப்போதைக்குக் குரல் எழுப்ப மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்கு முன்பேகூட, கேசுபாய் படேல், கான்ஷிராம் ராணா போன்ற தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையை நோட்டீஸ் அனுப்ப வைத்தவர் மோடி.

ஹிந்துத்துவாவின் வெற்றிச் சின்னமாக மோடி உருவெடுத்திருப்பதால், ஆர்எஸ்எஸ்ஸýம் விஎச்பியும்கூட அவருடன் சமாதானம் செய்துகொள்ள முன்வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க தலைவராக உருவாவதும், பாஜக கூட்டணிக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க தலைவராக உருவாவதும்தான் இப்போது நரேந்திர மோடிக்கு முன்னுள்ள சவால்கள். அது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் தனது 3-வது பதவிக் காலத்தில் பலதரப்பட்டோரையும் அரவணைத்துக் கொள்ளக்கூடிய, நிதானப் போக்கு கொண்ட, அதாவது “காங்கிரஸ் முகம்’ கொண்ட தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் முயற்சி செய்யக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தேசிய அரசியலில் குதிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பார் மோடி. 2009-ல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைக்கும்பட்சத்தில் அதை தேசிய அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பாக மோடி பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

எனவே, இப்போதைக்கு தமக்கு குஜராத்தில் கிடைத்திருக்கும் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அதன் முலம் குஜராத்திலிருந்து தனது ஆதரவாளர்கள் பலர் எம்.பி.க்களாவதை உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடக்கூடும்.

2004 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் 92-ல் பாஜகவைவிட கூடுதல் வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், 90 தொகுதிகளில்தான் காங்கிரûஸவிட கூடுதல் வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. ஆனால், அப்போது நரேந்திர மோடி அரசின் மீது அந்த மாநில ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர் மத்தியில் நிலவிய அதிருப்தியைப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. ஆனால், அத் தேர்தல் முடிவுகளின் அறிகுறிகளை உணர்ந்துகொண்ட மோடியோ, அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துவிட்டார்.

அண்மையில் பாஜகவால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எல்.கே. அத்வானியைப் பொருத்தவரை, குஜராத் வெற்றியானது இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பாகும். அத் தேர்தலில் மோடி தோற்றிருந்தால், அத்வானியின் தலைமையை ஆதரிப்போரின் கரங்களைப் பலப்படுத்துவதாக அது இருந்திருக்கும்.

மோடியின் மகத்தான வெற்றியானது, அவரை அத்வானி சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும். நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் விருப்பப்படிதான் கட்சி வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனது விருப்பப்படியே தேர்தல் டிக்கெட் வழங்கப்படுவதை அவர் உறுதிசெய்துவிடுவார்.

பாரதிய ஜனதா கட்சிக்கும்கூட மோடியின் வெற்றியானது கசப்பும் இனிப்பும் கலந்த மாத்திரை போன்றுதான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த, சோர்வுற்றிருந்த கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது குஜராத் தேர்தல் வெற்றி.

அதே நேரத்தில், தனியொருவரின் தலைமைக்குப் பதில் கூட்டுத் தலைமையை வலியுறுத்திவரும் கட்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நரேந்திர மோடியின் எழுச்சியானது, ஏற்றுக்கொண்டாக வேண்டிய புதிய பரிமாணமாக அமைந்துவிட்டது.

சுருக்கமாக கூறவேண்டுமானால் இந்திய அரசியல் வானில் ஒரு புதிய மக்கள் தலைவர் குஜராத்தில் இருந்து உருவாகி வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


மோடியின் வெற்றியும்- சோவின் துள்ளலும்!Viduthalai Editorial

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி அமைந்துவிட்டது. நரேந்திர மோடி தான் வெற்றிக்குக் காரணம். நரேந்திர மோடியின் நேர்மையும், நல்லாட்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
சோனியா தாக்குதல், பிரதமர் பிரச்சாரம், வெளியேறிய பா.ஜ.க.,வினர், டெகல்கா விவகாரம் பத்திரிகைகள் எதிர்ப்பு, டெலிவிஷன்கள் கண்டனம், ஜாதிப் பிளவு – முயற்சி இவற்றை எல்லாம் மீறி மோடி வெற்றி பெற்றுள்ளார் என்று அட்டைப் படத்திலிருந்து தலையங்கம் வரை தீட்டி திருவாளர் சோ ராமசாமி துள்ளிக் குதிக்கிறார்.
நீரோ மன்னன் என்று இந்திய உச்சநீதிமன்றம் எந்த அர்த்தத்தில் விமர்சனம் செய்தது என்பதுபற்றி எல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால், அவர் ஆட்சியைப் பயன்படுத்தி சிறு பான்மை மக்களை நரவேட்டையாடிய கொடுமை எல்லாம் சரியானதுதான் என்று திருவாளர் சோ. ராமசாமி சொல்ல வருகிறார் போலும்.

இதன்மூலம், சிறுபான்மை மக்களைப் படுகொலை செய்வது சரிதான் என்ற உற்சாகத்தை இந்து வெறியர் களுக்கு அவர் ஊட்ட முனைகிறார் என்று கருதலாமா?

இந்தியாவில், மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கி களைப் பிரித்துவிட்டால் என்ன அக்கிரமம், கொடூரமான – காட்டுவிலங்காண்டித்தனமான முறையில் செயல்பட்டாலும், வெற்றி கிடைக்கும் – அந்த வழியை நரேந்திர மோடி பின் பற்றி வெற்றி பெற்றுவிட்டார். அந்த நிலை இந்தியா முழு வதும் புயல் வேகத்தில் பரவட்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மதக் கலவரத்தை நடத்தினால்தான் வாக்கு வங்கிகளை இரு கூறுகளாகப் பிரித்து குளிர்காயலாம் என்று திருவாளர் சோ எழுதுவதை நிதானமாகக் கவனிக்கத் தவறக்கூடாது. தொடக்க முதலே நரேந்திர மோடியின் பக்கம் நின்று அவருக்குத் தொடர்ந்து சோ பராக்குக் கூவுவது இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான்.

பா.ஜ.க.,வின் செயற் குழுவில் அவர் பெயர் இல்லை என்ற போது கடுமையாக பா.ஜ.க.,வின் தலைமையைச் சாடி தலையங்கம் தீட்டிய பார்ப்பனர் இவர் என்பதை நினைவுகூர்ந்தால், இவரும் இன்னொரு வகை யிலான நரவேட்டை நரேந்திர மோடியின் மறுபதிப்புதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

டெகல்கா படம் பிடித்து அதிகாரப்பூர்வமாக ஆதாரப்பூர்வ மாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததே – அவற்றை மோடியால் மறுக்க முடிந்ததா? மக்கள் வாக்களித்து முடிவு செய்கின்ற தீர்ப்பா இது? சொந்த கட்சி சட்டமன்ற உறுப் பினர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனரே – அவை எல்லாம் இல்லாமல் போய்விடுமா?

ஆட்சியின் சிறப்பைப்பற்றியெல்லாம் ஆகா ஓகோ என்று எழுதித் தள்ளியிருக்கிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது இந்த மோடி ஆளும் குஜராத்தில்தானே?

அய்ந்து ஆண்டுகாலம் அகதிகள் முகாம்களில் சிறு பான்மையினர் இருக்கின்றனர் என்றால், இதன் பொருள் என்ன? பாசிச ஆட்சி என்றுதானே கருதவேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சாலைகளும், விளக்குகளும், வசதி களும் இந்துக்கள் வாழும் தெருக்களில் மட்டும்தான்; சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை தொலைக்காட்சிகளே படம் எடுத்துக் காட்டினவே – மறுக்க முடியுமா?

படுகொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப் படுத்த தேர்தல் ஒன்றுதான் சரியான வழி – நீதிமன்ற முறை என்ற ஒன்று கூடாது என்று கூறப் போகிறதா இந்தக் கூட்டம்?

இதற்கு முன் தேர்தல் வெற்றி பெற்றவர்களையும், கட்சி களையும் – நரேந்திர மோடி வெற்றியின் கண்ணோட்டத்தில் சோ விமர்சித்ததுண்டா?

அடிப்படை ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு பார்ப்பனரிட மிருந்து வேறு வகையாக எதிர்பார்க்க முடியாதுதான்!

————————————————————————————————————————-
மகேசன் தீர்ப்பு
Dinamani Editorial

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும், இன்னும் சிலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வராகிறார் என்பதும், தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் சிலரால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும், குஜராத் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு ஏற்புடைய தீர்ப்பு என்பதால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

தீர்ப்பு தவறாகிவிட்டது என்றும், மக்கள் முட்டாள்கள் என்றும் கூறுபவர்கள் மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் கூற வேண்டும். தங்களுக்கு சாதகமான தீர்ப்பு தரப்படும்போது வரவேற்பதும், பாதகமான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் சரியான அணுகுமுறையாகாது. குஜராத் மக்களின் நன்மதிப்பை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத்தான் இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது.

ஒருவகையில் பார்த்தால், தமிழகத்தில் ஜெயலலிதாவால் செய்ய முடியாத சாதனையை, குஜராத்தில் நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அதிமுக, நடிகர் விஜயகாந்தின் தேமுதிக களத்தில் இறங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை நரேந்திர மோடி செய்து காட்டியிருக்கும் சாதனையைச் செய்திருக்குமோ என்னவோ?

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, குஜராத்திலுள்ள 180 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. நரேந்திர மோடியின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கணித்தது அதனால்தான். அதே நிலை தொடர்ந்திருந்தால் நிச்சயமாகக் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால், தனது செல்வாக்குச் சரிவை நரேந்திர மோடி தடுத்து நிறுத்தியது மட்டுமல்ல, மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்றால் அது அரசியலில் ஒரு மிகப்பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் நரேந்திர மோடி என்கிற அரசியல் ராஜதந்திரியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவருக்கு நிகரான செல்வாக்குடைய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதும், நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் குஜராத் மாநிலம் அடைந்த வளர்ச்சியை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதும், குஜராத்தியர்களின் சுயமரியாதைக்கு அடையாளமாக நரேந்திர மோடி கருதப்படுகிறார் என்பதும் பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் காரணங்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தவறான அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும்தான் நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளை, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதுபோல காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சித்திரித்ததை, குஜராத்திலுள்ள சிறுபான்மையினரே விரும்பவில்லை என்று தெரிகிறது. சிறுபான்மையினரில் 99 சதவீதம் பேர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர். மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து வாழ ஆசைப்படுபவர்கள். தங்களுக்குத் தீவிரவாத முலாம் பூசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வாக்களிக்காமல் இருந்தவர்கள் ஏராளம் என்று கூறப்படுகிறது.

அது போகட்டும். நரேந்திர மோடியின் வெற்றி தேசிய அளவில் சில நல்ல விஷயங்களுக்கு உதவப் போகிறது. முதலில், நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் அரசு தனது அணுசக்தி ஒப்பந்தப் பிடிவாதத்தைத் தளர்த்தி, ஒப்பந்தத்தை ஒத்திப்போட்டுவிடும். மூன்றாவதாக, ஆட்சியைக் கவிழ்த்தால், பாரதிய ஜனதா மீண்டும் பதவிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில், இடதுசாரிகள் அரசை மிரட்ட மாட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஏதோ, ராகுல் காந்தியால் காங்கிரஸ் புத்துயிர் பெற்று மீண்டும் பழைய பலத்தைப் பெற்றுவிடும் என்கிற நப்பாசையும், நரேந்திர மோடியின் தயவால் நைத்துப் போய்விட்டது. உத்தரப் பிரதேசத்திலும் சரி, குஜராத்திலும் சரி அவருக்குக் கூடிய கூட்டம் வேடிக்கை பார்க்கத்தான் வந்ததே தவிர வாக்களிக்க அல்ல என்பது தெளிவாகி விட்டது. இனிமேல், பிரியங்காவை முன்னிறுத்தி வேடிக்கை காட்டுவார்கள் என்று நம்பலாம்.

நரேந்திர மோடியின் வெற்றிக்குப் பின்னால் அவரது உழைப்பும், தன்னம்பிக்கையும் தெரிகிறது. அதற்காக அவரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். அதேநேரத்தில், இந்த வெற்றியின் போதைக்கு அவர் அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். தான் ஒட்டுமொத்த குஜராத் மக்களின் முதல்வர் என்பதை மறந்துவிடாமல் ஆட்சியில் தொடர சரித்திரத்தின் பக்கங்களை அவர் அடிக்கடி புரட்டிப் பார்ப்பது நல்லது!

————————————————————————————————————————-
குல்தீப் நய்யாரின் கூற்றைக் கவனியுங்கள்

Viduthalai Editorial

பிரபல அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் எழுதி யுள்ள கட்டுரை ஒன்றில் குஜராத் தேர்தல்பற்றி நுணுக்கமாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

(1) வகுப்புவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கையை ஏன் மாற்றிக் கொண்டது என்று தெரியவில்லை.

(2) நரேந்திர மோடிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் வகுப்புவாதம் மட்டுமே கொள்கையாக இருந்தது – இருக்கிறது.

(3) முசுலிம்களுக்கு எதிராக நபருக்கு நபர் எதிர்பிரச்சாரம் குஜராத்தில் தேர்தலுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.

(4) இந்துத்துவா கொள்கையை வைத்து மோடியும், பா.ஜ.க.,வும் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரண்டாக அல்லது மூன்றாக நாட்டைப் பிரித்துக் கொண்டு இருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான விஸ்வ இந்துபரிசத் கிறித்தவர்களைக் குறி வைக்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி., ஆதரவு அரசின் ஒத்துழைப்போடு வி.எச்.பி., செய்து வருவது மிகவும் வெட்கக்கேடானது.

(5) வகுப்புவாதம் மோசமான நிலையில் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் பெருமைகளைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது.

(6) வகுப்பு வாதத்தை எதிர்ப்பதை காங்கிரஸ் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில், அது வெற்றி பெற்றால், பாசிசம் உண்டாகும்.

(7) குஜராத் ஒரு மாநிலம் அல்ல; அது இந்துத்துவா என்ற கொள்கையின் அடையாளமாக ஆக்கப்பட்டுவிட்டது. முழுப் பிரச்சாரத்தையும் ஒரே ஒரு பிரச்சினையாக மாற்றிவிட்டனர். நீங்கள் ஒரு இந்து என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.
அனேகமாக அரசியல் விமர்சகர் குல்தீப் நய்யார் குஜராத் தேர்தலை மட்டுமல்ல; இந்துத்துவாவைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் பி.ஜே.பி., அதன் சங் பரிவாரங்களின் நச்சுத் தன்மையின் சாரத்தை அப்படியே பிழிந்து கொடுத்திருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இனிமேல் அரசியல் நடத்த விரும்பும் நியாயவாதிகள், முற்போக்குக் கொள்கையாளர்கள், இடதுசாரிகள் யாராக இருந்தாலும் தங்களுக்குள் இருக்கும் வரப்புகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே.பி., வகையறாக்களுக்கு எப்படி ஒரு பார்வை – இந்து என்ற பார்வையை மட்டும் மய்யப் படுத்தி மக்கள் மத்தியில் தூபம் போட்டு மதத் தன்மையில் ஒன் றிணைக்க விரும்புகிறார்களோ, அதேபோல, ஒரே நோக்கம், ஒரே பார்வை, ஒரே பாய்ச்சல் இந்த மதவாத – வகுப்புவாத சக்திகளை அவற்றின் ஆணி வேர் வரை சென்று நிர்மூலம் செய்வதில்தான் இருக்க வேண்டும்.

முதன்மையாக தலைமை வகிக்கும் காங்கிரசுக்கு முக்கியமாக இந்த குறிக்கோள் இருக்கவேண்டும்; அதன் அடிப்படையில் மதச் சார்பற்ற சக்திகளைச் சேதாரம் இல்லாமல், வீண் சச்சரவுகளை உண்டாக்கும் பிரச்சினை களை உற்பத்தி செய்யாமல், அணைத்துச் செல்லும் பக்குவத்தோடு பலத்தைப் பெருக்கி, ஒரே மூச்சில் மதவாதத்தை வீழ்த்தித் தள்ளிட வேண்டும்.

குஜராத்தில் இவ்வளவுப் பச்சையாக மதவாதத் தேர்தல் நடந்திருந்தும் தேர்தல் ஆணையம் எப்படி அவற்றை அனுமதித்தது என்றே தெரியவில்லை.

பா.ஜ.க., செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அதன் பார்வை திரும்பக்கூடும்; அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அது பகற்கனவு என்று காட்ட வேண்டியது அம்மாநிலங்களின் கடமையாகும். அடுத்து நடக்க உள்ள நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மதச் சார்பற்ற சக்திகள் ஒரு சோதனைக் களமாகக் கருதவேண்டும்.

2009 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்த லுக்குமுன் இந்த வகையில் தீவிரமாக திட்டமிட்ட வகையில் அறிவியல் கணிப்போடு செயல்பட்டே தீரவேண்டும்.
சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சில மாநிலங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதுண்டு. அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது என்பதையும் மனதிற்கொண்டு, சோர்வுக்குச் சிறிதும் இடமின்றி, தன்னம்பிக்கையுடன் இடதுசாரிகளும், மதச் சார்பற்ற அணிகளும் ஒன்று சேர்ந்து உழைக்கவேண்டியது அவசியம்.

————————————————————————————————————————-

Posted in Aajtak, abuse, Advani, America, Arrest, Ayodhya, Ayodya, Ayothya, Bajrang, Bharatiya Janata Party, BJP, CBI, Censure, Chowdhry, Chowdhury, CNN, Condemn, Congress, crimes, Criminal, dead, Elections, Expose, Godhra, Gujarat, Hindu, Hinduism, Hindutva, HT, Investigation, Islam, Judges, Justice, Killed, Law, massacre, Media, MLA, Modi, MP, MSM, Muslim, Nanavati, Narendhra, Narendra, Narendra Modi, Narenthira, Neerja, Operation Kalank, Order, Party, pogrom, Police, Polls, Power, Revelations, riots, RSS, Sting, Tehelka, USA, Vajpai, Vajpayee, Vajpayi, VHP, Vidudhalai, Viduthalai, Violence, Visa, Vituthalai | Leave a Comment »

India’s Ruling Coalition Nominates Pratibha Patil for President

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

பதுமை அல்ல குடியரசுத் தலைவர்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

நாட்டின் 12-ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசுக்கான அழகுப் பதுமை என்று குறைத்துக் கூறிவிட முடியாது இந்தப் பதவியை!

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது உறுதி செய்யப்பட்டே வந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விடுதலைக்குப் பின் ராஜாஜியைக் குடியரசுத் தலைவராக்க நேரு விரும்பினாலும் காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராஜேந்திர பிரசாத்தையே விரும்பினர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே ராஜேந்திர பிரசாத்தை அறிவிக்க, நேருவும் ஏற்றுக்கொண்டு 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஹிந்து சீர்திருத்த மசோதாவைப் பிரதமர் நேரு கொண்டுவந்தபோது ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் ராஜேந்திர பிரசாத். மசோதாவில் குறிப்பிட்ட மாற்றத்தை நேரு செய்ய, டாக்டர் அம்பேத்கர் பதவி விலகினார்.

ராஜேந்திர பிரசாத் துவாரகை சென்றபோது மதரீதியாகக் குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நேரு தடுத்ததும் பிரச்னைகளை எழுப்பின.

டாக்டர் இராதாகிருஷ்ணனும் இந்திரா காந்தியும் பொறுப்பில் இருந்தபொழுது கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. பின் வந்த கல்வியாளர் ஜாகீர் உசேன் இரு ஆண்டுகளே பொறுப்பிலிருந்து மறைந்துவிட்டார்.

1969 இல் நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து நின்ற வி.வி. கிரி வெற்றி பெற முழு முயற்சிகளை இந்திரா காந்தி மேற்கொண்டார்.

முதன்முதலாக இரண்டாவது விருப்ப வாக்குகள் என்ற அடிப்படையில் கிரி வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது.

கிரிக்குப் பின் இந்திரா காந்தியின் விருப்பத்தின்பேரில் பதவிக்கு வந்தார் பக்ருதீன் அலி அகமது. அவர் காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். உரிமைகள் மறுக்கப்பட்டன.

ஜனதா கூட்டணி ஆட்சிக் காலத்தில் பதவிக்கு வந்த சஞ்சீவ ரெட்டி, பிரதமரான மொரார்ஜி தேசாய்க்கு விரோதமாகச் செயல்பட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது.

ரெட்டிக்குப் பின் ஜெயில்சிங். இவர் காலத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி பிரதமரானார். இவருக்கும் ராஜீவ் காந்திக்கும் அஞ்சல் துறை மசோதா – 1986 தொடர்பாகப் பிரச்னை ஏற்பட்டது.

ஜெயில்சிங்குக்கு ராஜீவ் அரசு தெரிவிக்க வேண்டிய அரசு பரிபாலனம் சம்பந்தமான செய்திகளைத் தெரிவிக்கவில்லை என்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தை ராஜீவ் காந்தி மீறிவிட்டார் என்றும் மோதல்கள் நடந்தன.

ராஜீவ் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு, ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சியினர் ஜெயில்சிங்கிடம் வழங்கிய மனு நிலுவையில் இருந்தபோது, பிரதமர் ராஜீவை ஜெயில்சிங் நீக்குவார் என்ற வதந்திகள் எழுந்தன.

சீக்கியரான ஜெயில்சிங் 1984 இல் நடைபெற்ற சீக்கிய கலவரங்களை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொண்டது ராஜீவ் காந்திக்குப் பிடிக்கவில்லை.

ஜெயில்சிங்குக்குப் பின் ஆர். வெங்கடராமன். இவர் காலத்தில்தான் வி.பி. சிங்கின் கூட்டணி அமைச்சரவை அமைந்ததும் கவிழ்ந்ததும். அப்போது தேசிய அரசு அமைக்கலாமா என்ற விவாதங்களும் எழுந்தன.

இவர் காலத்தில் சந்திரசேகர் தலைமையிலான குறுகிய கால அரசாங்கம், “அதர்வைஸ்’ என்ற சொல்லைக் கொண்டு பிரிவு 356-ஐ பயன்படுத்தித் தமிழகத்தில் திமுக அரசைக் கலைக்கச் செய்தது.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து நரசிம்மராவ் பிரதமர் ஆனார். புதிய பொருளாதாரத் திட்டங்களுக்கு அடிகோலப்பட்டது. சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் எனப் பொறுப்புக்கு வந்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்ம ராவ் ஆட்சியைக் கண்டித்தார் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.

பிகார், உத்தரப்பிரதேச அரசுகளைக் கலைக்கும் வாஜ்பாய் அரசின் தீர்மானங்களைத் திருப்பி அனுப்பினார் கே.ஆர். நாராயணன்.

கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜாஜியும் கலாமும்தான் பதவியிலிருந்து வெளியேறும்போது தங்களுடைய உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வராதவர்கள் என்பதன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களாக இருப்பார்கள்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களின் தன்மை என்ன? இதுவரை நடந்த நடைமுறைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையிலும் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்’ மாதிரி இருந்தாலும், பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் அவர்.

ஐந்து ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ. 50 ஆயிரம் ஊதியத்துடன் வசதியான வாழ்க்கை, சிம்லா, ஹைதராபாதில் அரண்மனை போன்ற பங்களாக்கள் போன்ற சகல வசதிகளுடன், முப்படைகளின் தளபதி, நாட்டின் இறையாண்மையைக் காக்கும் பாதுகாவலர், முதல் குடிமகன் எனப் பல பெருமை.

எனினும், பிரதமர் தலைமையில் இருக்கின்ற அமைச்சரவை வழங்குகின்ற ஆலோசனையின் பேரில்தான் அவர் இயங்குகிறார்.

பல நேரங்களில் நிலையற்ற அரசுகள் மத்தியில் அமையும்போது குடியரசுத் தலைவரின் பங்களிப்பு முக்கியமாகக் கருதப்பட்டது.

ஜனதா ஆட்சி விழுந்தவுடன் சரண்சிங்கைப் பதவி ஏற்க சஞ்சீவ ரெட்டி அழைத்ததும், ’96 தேர்தலுக்குப் பின் வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்ததும் அந்தப் பதவியின் அதிகார மேலாண்மையை வெளிப்படுத்தின.

பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்றவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளே குடியரசுத் தலைவர் என்பவர் பதுமை அல்ல என்பதைத் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு விருப்பத்திற்கேற்றவாறு மாநில அரசுகளைக் கலைத்தாலும் நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது போன்ற நெருக்கடியான காலத்தில் சர்வ அதிகாரமிக்கவராக மாறுகிறார் குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் மாளிகை போன்று 200 ஆயிரம் சதுர அடி கொண்ட வசிப்பிடமும், மொகல் தோட்டத்துடன் 13 ஏக்கர் பரப்பளவுள்ள இருப்பிடமும் உலகில் எந்த நாட்டின் அதிபருக்கும் கிடையாது.

ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் மாளிகையின் 350 அறைகளில் ஒரேயொரு அறையைத்தான் பயன்படுத்தினார். (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில்கூட 132 அறைகள்தான் உள்ளன.) இவ்வளவு வசதிகளையும் பெறப் போகும் 12-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்பது இன்றைய கேள்வி.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளராக பிரதிபா பாட்டீலை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி.

வெற்றி பெற்றால் நாட்டின் மிக உயர்ந்த பதவியை அலங்கரிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுவார் இவர்.

எதிரணியில் சுயேச்சை வேட்பாளராகத் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தேர்தல் சதுரங்கத்தில் வென்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் குடியேறப் போகும் பெருந்தகையாளர், நாட்டின் நலனையும் பன்மையில் ஒருமையான இந்தியாவையும் தொலைநோக்கோடு கொண்டுசெல்ல வேண்டியதுதான் இன்றைய தேவை.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்.)


தேர்தல்களில் தோல்வியே காணாதவர் பிரதிபா பாட்டீல்!புது தில்லி, ஜூன் 15: குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவில் நிறுத்தப்படும் பிரதிபா பாட்டீல் (72) தேர்தல்களில் தோல்வியே அறியாதவர். ஆண்கள் மட்டுமே வகித்துவந்த குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போகும் முதல் பெண்மணி.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதிபா எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். வழக்கறிஞர். கல்லூரி நாள்களில் சிறந்த டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரர்.ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் அதே நகரில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார்.மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்தார். நகர்ப்புற வளர்ச்சி, வீடமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள்துறை, பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தவர். துணை அமைச்சராக முதலில் அமைச்சரவையில் இடம் பெற்றவர், காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார்.மகாராஷ்டிர முதலமைச்சராக சரத் பவார் 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா பாட்டீல்.1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழு தலைவராகவும் இருந்தார்.1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவி வகித்தார்.1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சட்டப் பேரவை, மக்களவை ஆகியவற்றுக்குப் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியே கண்டவர் பிரதிபா.மக்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றவர் போல சற்று ஒதுங்கி இருந்தார். பிறகு தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரமாக ஈடுபட்டார்.2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமித்தது.குடும்ப வாழ்க்கை: பிரதிபா பாட்டீலுக்கு 1965 ஜூலை 7-ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத். சிறந்த கல்வியாளர். இத் தம்பதியருக்கு ஜோதி ரதோர் என்ற மகளும், ராஜேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத், அமராவதி மாநகராட்சியின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளையாட்டுத்துறையிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஷெகாவத் 1985-ல் மகாராஷ்டிர பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டில் போட்டி

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி.

பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா.

சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.


பிரதிபா பாட்டீல், இந்தியப் பெண்களுக்கு கெüரவம்!நீரஜா செüத்ரிஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!இந்தியா சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு “”பெண்ணை”த் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.நான்கு சுவர்களுக்குள் அடைந்துகிடந்த பெண் இனத்துக்கே பெருமை தேடித்தரும் வகையில், நாட்டின் உயர்ந்த பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இத் தேர்வு இப்படி சுபமாக முடிந்திருந்தாலும், காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய முத்தரப்பும் அவரை முதல் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.யார் யாரின் பெயர்களையோ வரிசையாகச் சொல்லி, இவர்களுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கழித்துக் கட்டி, கடைசியில் எப்படியோ தேர்வு செய்யப்பட்டவர்தான் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.”சிவராஜ் பாட்டீலைத்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சோனியா காந்தி கூற, “கூடவே கூடாது’ என்று இடதுசாரிகள் விடாப்பிடியாக எதிர்க்க அவரைக் கைவிட நேர்ந்தது.அப்துல் கலாமை எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் பிரதிபாவையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.2002-ல் இதே போன்ற சூழலில் அப்போதைய குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த்தான் குடியரசுத் தலைவர் ஆவார் என்று நம்பப்பட்டது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கூட கிருஷ்ண காந்திடமே, “”நீங்கள்தான் வேட்பாளர்” என்று கூறியிருந்தார்.ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஒரு பிரிவினர் அவரைக் கடுமையாக நிராகரித்ததால், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவரான அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிருஷ்ண காந்த் அந்த அவமானத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலேயே சில வாரங்களுக்கெல்லாம் மரணம் அடைந்தார்.)குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, நடத்தை ஆகியவற்றை ஒப்புநோக்கி, விருப்பு, வெறுப்பு இல்லாமல் விவாதம் நடத்தி தேர்வு செய்திருந்தால் பிரதிபாவை கடைசியாகத் தேர்வு செய்ததைக் கூட குறையாகச் சொல்ல முடியாது.ஆனால் கலாமும் சரி, பிரதிபாவும் சரி முதல் தேர்வு அல்ல. இதற்கு மூல காரணம் கூட்டணி அரசு என்ற நிர்பந்த அரசியல் சூழலே.அர்ஜுன் சிங் வேண்டாம் என்று சோனியாவும், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் வேண்டாம் என்று இடதுசாரிகளும் நிராகரித்த பிறகு, “வேட்பாளர் பெண்ணாக இருந்தால் எப்படி?’ என்று கேட்கப்பட்டது.

அப்போதும்கூட பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, மோஷினா கித்வாய் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பிரதிபா தேர்வு செய்யப்பட்டார். அவருடைய கணவர் தேவிசிங் ஷெகாவத், சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானியர், பைரோன் சிங் ஷெகாவத்தைப் போலவே தாக்குர் சமூகத்தவர் என்றதும் பிரதிபாவுக்கு ஒப்புதல் கிடைத்தது.

சொல்லப் போனால், வேட்பாளராக பிரதிபா தேர்ந்தெடுக்கப்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல, பைரோன் சிங் ஷெகாவத்தான் காரணம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் மொத்த வாக்கு எண்ணிக்கையால் காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றாலும் பைரோன் சிங் ஷெகாவத்துக்கு பிற கட்சி உறுப்பினர்களிடையே இருக்கும் செல்வாக்கு, மரியாதை ஆகியவற்றால் காங்கிரஸ் தலைமை மிகவும் அரண்டு போயிருக்கிறது.

எனவேதான் “”ஷெகாவத்” என்ற பின்னொட்டுப் பெயர் வருகிற பிரதிபாவைத் தேடிப்பிடித்து நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகியவற்றைச் சேர்ந்த எவராவது மாற்றி வாக்களித்தால்தான் பிரதிபா தோற்பார். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் பிரதிபா தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயமாகிவிட்டது. அவரும் தாக்குர் என்பதால் தாக்குர்கள் அணி மாறி வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள்தான் சிதறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மராட்டியத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை குடியரசுத் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ பதவி வகித்ததில்லை, எனவே நம் மாநிலத்தைச் சேர்ந்தவரைத் தோற்கடிப்பதா என்ற கேள்வி சிவ சேனையினரின் நெஞ்சத்திலே கனன்று கொண்டிருக்கிறது.

வலுவான வேட்பாளர் தேவை. எனவே பிரணாப் முகர்ஜியைத்தான் நிறுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் ஆரம்பத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். பிரதிபா அப்படி வலுவானவர் அல்ல என்றாலும் இடதுசாரிகள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். “”வலுவானவர்”, “”வலுவற்றவர்” என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஆர்ப்பாட்டம், பந்தா ஏதும் இல்லாமல் பணிபுரிந்தால் அவர் வலுவற்றவரா?

பிரதிபாவின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது நிரம்ப அனுபவமும், அறிவும், பொறுமையும், திறமையும் உடையவர் என்பது புலனாகிறது.

பொதுவாழ்வில் நேர்மை, நன்னடத்தை, அடக்கம் ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறார். திறமைக்கேற்ப கிடைத்த பதவிகளை முறையாக வகித்திருக்கிறார்.

பதவிக்காக ஆசைப்பட்டு தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார். சமூகப் பணி செய்த பிறகே அரசியலுக்கு வந்திருக்கிறார். இதுவரை அவரைப்பற்றி பரபரப்பாக எதுவுமே பேசப்படவில்லை என்பதே அவருக்குச் சாதகமானது. அவரால் எவருடைய அரசியல் வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து இல்லை என்பதால் எளிதாகத் தேர்வு பெற்றுவிட்டார்.

பிரதிபா, ஷெகாவத் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முதலில் சோனியாவிடம் கூறியவரே சரத் பவார்தான். மகாராஷ்டிரத்தில் பவாருக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் வரிசையில் பிரதிபாவுக்கு முக்கிய இடம் உண்டு என்றாலும் அவருடைய தகுதிகளை மெச்சினார் பவார்.

இதுவரை பதவியில் இருந்த குடியரசுத் தலைவர்கள் தங்களுடைய சிறப்பான செய்கைகள் மூலம் முத்திரை பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆர். வெங்கட்ராமனை “”சட்ட புத்தகத்தில் சொல்லியபடியே நிர்வகிப்பவர்” என்றார்கள்.

அரசியல் ஸ்திரமற்ற தேர்தல் முடிவுகள் வந்து அடுத்த நிர்வாகி யார் என்ற இருள் சூழும்போது, வானில் நம்பிக்கையூட்டும் மின்னல்கீற்று போன்றவர்தான் குடியரசுத் தலைவர் என்று நிரூபித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

“”செயல்படும் குடியரசுத் தலைவர்” என்று தன்னை அழைத்துக் கொண்ட கே.ஆர். நாராயணன், வாஜ்பாய் அரசின் பல முடிவுகளைக் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்.

அப்துல் கலாம் மக்களுடன் ஒன்றிவிட்டவர். மக்களும் அவரைத் தங்களுடையவர் என்று மனதார ஏற்றுக் கொண்டனர். எனவே அவர் “”மக்களின் குடியரசுத் தலைவராக” பெயர்பெற்றுவிட்டார்.

பிரதிபா பாட்டீல் எப்படி பேர் வாங்குகிறார் என்று பார்ப்போம்.

—————————————————————————————

பிரதிபாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை, ஜூன் 20: வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள், முஸ்லிம் ஆட்சியாளர்கள் காலத்தில்தான் தங்களை காத்துக்கொள்ள தலைக்கு முக்காடு போடும் பழக்கம் வந்தது என்று கூறியதற்காக, பிரதிபா பாட்டீலுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு வலுத்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

“குங்கட்’ என்று அழைக்கப்படும் முக்காடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் தெரிவித்த கருத்து காரணமாக எதிர்ப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கி உள்ளது.

தேசியக் கட்சிகளும், மாநில அளவிலான கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பிரதிபாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு: மகாராணா பிரதாப்பின் 467-வது பிறந்த நாள் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதிபா பாட்டீல்,””வட இந்தியாவில் ஹிந்துப் பெண்கள் முக்காடு போட்டு முகத்தை மறைக்கும் முறை மொகலாயர்களின் காலத்தில் ஏற்பட்டது. மொகலாய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணியத் தொடங்கினர்” என்றார்.

சுதந்திர இந்தியாவில் இந்த முக்காடு முறை கைவிடப்பட வேண்டும், இதுபோன்ற முறைகள் தொடராமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை என்றார் அவர்.

“”இந்தியாவில் முக்காடு முறை 13-வது நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த முறை தொடங்கப்பட்டது எனக் கூறுவது சரியல்ல” என்று கோல்கத்தாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் கௌசிக் ராய் தெரிவித்தார்.

த.மு.மு.க. கண்டனம்: பர்தா அணிவது முஸ்லிம் பெண்களின் கடமையும், உரிமையும் ஆகும். அதை விமர்சிப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அழகல்ல. இவ்வாறு கூறுவதன் மூலம் சங்கப் பரிவாரின் குரலை அவர் எதிரொலிக்கிறார் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கண்டித்துள்ளார்.

தர்மசங்கடம்: சிறுபான்மையினரின் எதிர்ப்பு வலுத்து வருவது காங்கிரஸின் தலைமைக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
———————————————————————————————–
பிரதிபாவுக்கு எதிரான தகவலுடன் சிறிய புத்தகத்தை வெளியிட்டது பாஜக

புதுதில்லி, ஜூன் 28: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி- இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் பிரதிபா பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சிறிய புத்தகத்தை பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப் புத்தகத்தில் இரண்டு கட்டுரைகளை முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சௌரி எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையை ஊழலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இப் புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

கொலையில் தொடர்புடைய சகோதரரைப் பாதுகாத்தார், தான் தலைவராக இருந்த சர்க்கரை ஆலை வங்கிக் கடனை செலுத்தவில்லை, அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்ட ஏழை பெண்கள் முதலீடு செய்த கூட்டுறவு வங்கி திவலானது என்று பிரதிபா மீது புகார் படலமாக அமைந்துள்ளது புத்தகம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக களங்கம் நிறைந்தவரும் ஊழல்பேர்வழியும் வர வேண்டுமா? பெண்களுக்கு அநீதி இழைந்தவர் குடியரசுத் தலைவர் ஆகலாமா என்று கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம்.

மன்மோகன் கண்டனம்

பிரதிபா பாட்டீல் புகழுக்கு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. ஆனால் அந்த முயற்சியில் அவை வெற்றி பெறாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பிரதிபாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்தவித புகாரும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

கலாம் விவகாரம்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது உயர் மதிப்பு வைத்துள்ளோம். “வெற்றி உறுதி என்று தெரிந்தால் மீண்டும் போட்டி’ என்று அவர் கூறியதாக வந்த செய்தியின் அடிப்படையிலேயே மத்திய அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி, சரத் பவார் கருத்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட ஒருவர் விரும்பினால் வெற்றி உறுதி என்று தெரிந்தால் மட்டுமே போட்டி என்று கூறுவது சரியானது இல்லை என்றார் பிரதமர்.

———————————————————————————————–

பிரதீபா பட்டீல் உறவினர்களால் திவாலான பெண்கள் வங்கி: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

ஜலகோன், ஜுன். 28-

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரதீபா பட்டீல் உறவினர்கள் மீது தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை தனது புலனாய்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அதில் கூறப்படுவதாவது:-

பிரதீபா பட்டீல் பெயரில் 1973-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜலகோனில் “பிரதீபா மகிளா சககாரி” என்ற பெயரில் பெண்கள் கூட்டுறவு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வங்கியை நிறுவியர் பிரதீபா பட்டீல் என்றாலும் தற்போது அவருக்கும் இந்த வங்கிக்கும் சம்பந்தமில்லை.

எனினும் இந்த வங்கியில் பிரதீபா பட்டீலின் அண்ணன் திலீப் சிங் பட்டீல் மற்றும் அவரது உறவினர்கள் லட்சக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர். இதனால் ரூ.2.24 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு கடந்த 2003-ம் ஆண்டு அந்த வங்கி திவாலானது என்று அந்த தனியார் தொலைக்காட்சி தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் அந்த கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் கோர்ட்டில் திலீப் சிங் பட்டீல் மற்றும் பிரதீபா பட்டீலின் உறவினர்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“திலீப்சிங் பட்டீல் “பிரதீபா மகிளா சககாரி வங்கியின்” தொலைபேசியின் மூலமாக மும்பையில் உள்ள பங்கு சந்தை தரகர்களுக்கு மணிக் கணக்கில் அடிக்கடி தொலை பேசியில் பேசினர். இந்த வகையில் ரூ.20 லட்சத்தை தொலைபேசி கட்டணமாக வங்கி கட்ட வேண்டியிருந்தது.

கார்கில் வீரர்களுக்கு உதவுவதற்காக ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சமபளத்தை அளித் தோம். ஆனால் அந்த பணம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போய் சேரவில்லை. இடையில் ஊழல் நடந்துள்ளது. பிரதீபா பட்டீலின் உறவினருக்கு சொந்தமான சர்க்கரை ஆலைக்கு வங்கி பெரும் பணம் கடனாக கொடுத்திருந்தது. ஆனால் அப்பணம் திருப்பித் தரவில்லை. இதனால் வங்கி திவாலானது.

இவ்வாறு பல்வேறு குற்ற சாட்டுக்களை பிரதீபா பட்டீலின் உறவினர்கள் மீது பிரதீபா மகிளா சககாரி வங்கி யின் ஊழியர்கள் தாங்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.

———————————————————————————————–

பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (2)

ஜலகாம் கூட்டுறவு வங்கி சமூக நீதி காத்த விதம்!

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியில், “”சமூக நீதி”யை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை ஊழியர்கள் சங்கம் சொல்லியிருப்பது தனிக்கதை.

வங்கியில் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நியதிகளைக்கூட வங்கியின் நிர்வாகிகள் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு உரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை. நிர்வாக இயக்குநர்கள் தங்களுடைய உறவினர்களுக்கே அந்த வேலைகளை வழங்கினார்கள்.

கடனில் வங்கி மூழ்குவதைத் தடுக்க, பிரதிபா பாட்டீல் அவருடைய அண்ணன் திலீப் சிங் பாட்டீல் மற்றும் பிற உறவினர்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தது. அவர்களுக்கு எப்படி அவ்வளவு சொத்து குறுகிய காலத்தில் சேர்ந்தது என்று விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தது. மகாராஷ்டிர மாநில அரசின் கூட்டுறவுத்துறையும் இந்த நோக்கில் விசாரணையைத் தொடங்கியது.

அதே சமயத்தில், அந்த வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனந்த்சிங் பாட்டீல் என்பவர், சங்க லெட்டர் பேடில் பிரதிபா பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். வங்கியின் முறைகேடுகளில் உங்களுக்கு பங்கு ஏதும் இல்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய், சங்கத்தின் சார்பில் பிரதிபாவிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டதை ரிசர்வ் வங்கியும் இதே காலத்தில் விசாரிக்க ஆரம்பித்தது. பிரதிபாவின் நெருங்கிய உறவினர்கள் வாங்கிய கடன்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டது உண்மைதான் என்று தனது ரகசிய அறிக்கையில் 2002 ஜூன் 18-ல் அது குறிப்பிட்டது. பிரதிபாவின் 3 உறவினர்களின் கடன் ரத்து தொடர்பான குறிப்பிட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மைதான் என்று அது தனது அறிக்கையில் பதிவு செய்தது. கடன்களை ரத்து செய்வதை பரிசீலிப்பதற்கென்றே ரிசர்வ் வங்கியில் இருக்கும் உதவி துணை மேலாளரை, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி அணுகி ஒப்புதல் பெறவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஊழியர் சங்கங்களின் புகார் மனுக்கள் கூட்டுறவுத்துறை, ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு மட்டும் அல்லாமல் பிரதிபாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஊழியர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் 2002 மார்ச் 13-ல் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரதிபாவின் அண்ணன் திலீப் சிங் பாட்டீல், வங்கியின் தொலைபேசியைச் சொந்த பயன்பாட்டுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதை சுட்டிக்காட்டினர்.

வங்கியின் 224672 என்ற எண்ணுள்ள தொலைபேசியை அவர் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு, பங்கு பரிவர்த்தனை வியாபார விஷயங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றுக்கான டெலிபோன் கட்டணம் ரூ.20 லட்சம். அந்த தொலைபேசியிலிருந்து மும்பையில் உள்ள பங்குத் தரகர்களுடன் பேசியிருப்பதை தொலைபேசி பில் தெரிவிக்கிறது.

இந்த ஆவணங்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஆனால் தொலைபேசியைத் தவறாகப் பயன்படுத்தியதை மறைக்க முடியவில்லை. வங்கியின் நிர்வாக அதிகாரியாக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட அமோல் கைர்னார், இந்த தொலைபேசி பில்லுக்கு விளக்கம் தருமாறு வங்கி மேலாளர் பி.டி. பாட்டீலுக்கு 2003 பிப்ரவரி 1-ம் தேதி எழுதிய கடிதத்தில் கோரியிருக்கிறார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அவ்வப்போது முறைகேடாக கடன் வழங்கியிருப்பதையும் ரிசர்வ் வங்கியின் நோட்டீஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த சர்க்கரை ஆலைதான் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக பிரதிபா பாட்டீல் நிறுவியது. 1999-ல் சோனியா காந்தி இதைத் தொடங்கி வைத்தார்.

பிரதிபா மகிளா சஹகாரி வங்கியைப் போலவே இந்த சர்க்கரை ஆலையும் மூடப்பட்டுவிட்டது. ரூ.20 கோடி மதிப்புக்கு கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இந்த ஆலை மூடப்பட்டது. ஆனால் அந்த 20 கோடி ரூபாய் மதிப்புக்கு அது எந்த நாளிலும் சர்க்கரையை உற்பத்தி செய்யவே இல்லை என்பதுதான் அதன் சிறப்பு!

சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பங்குகளை வாங்க, பிரதிபா மகிளா சஹகாரி வங்கி தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடன் வழங்கியிருக்கிறது. சர்க்கரை ஆலையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதிபாவின் சகோதரர்கள் இப்படித் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கடனை அள்ளி வழங்கினர்.

பொதுமக்கள் தங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்து கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தால், உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் அதில் புகுந்துகொண்டு இப்படி ஊழல் செய்யும்பட்சத்தில் மக்கள் யாரைத்தான் நம்புவது என்றும் ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

“நீங்கள்தான் இந்த கூட்டுறவு வங்கியின் நிறுவன தலைவர். ஆனால், சுயலாபத்துக்காக நீங்களே இந்த வங்கியை அழித்து விட முயற்சிகளைச் செய்து வருகிறீர்கள். 2002 மார்ச்சுக்குள் வங்கியின் நிலைமை மேம்படாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

உங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, வங்கியில் நிகழ்ந்துள்ள ஊழல்களையும் முறைகேட்டையும் வெளியே தெரியவிடாமல் தடுத்துவிட முடியும். உங்களால் எங்களுக்கும் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உயிர்களுக்கும் ஆபத்து நேரிட்டிருக்கிறது. ஏற்கெனவே உங்களை நாங்கள் சந்திக்கும்போதே இதை குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள். உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காக எங்களுடைய உயிரைவிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்செயலாகவோ, வேறு வகையிலோ எங்களுக்கோ, எங்கள் குடும்பத்தவருக்கோ ஏதேனும் நேர்ந்துவிட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

கடன் வாங்கிய “”பெண்கள்” யார் என்பதைச் சொல்லிவிட்டோம். பணம் போட்டவர்கள் யார்? அதை அவர்களே பின்வருமாறு வங்கி நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்கறி, பழங்கள் விற்பது, குப்பை பொறுக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்யும் ஏழைகளான நாங்கள்தான், நல்ல சேமிப்பாக இருக்கட்டும் என்று உங்கள் வங்கியில் முதலீடு செய்தோம். இப்போது நாங்கள் கேள்விப்படும் விஷயங்கள் எங்களுக்குக் கவலை தருவதாக இருக்கின்றன. ஏழைகளுக்கு உதவத்தான் இந்த வங்கியைத் திறந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தையெல்லாம் இதில் முதலீடு செய்துள்ளோம். எனவே நமது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்களின் முகவரிகளை வெளியிடுங்கள்’ என்று வங்கியில் பணம் போட்டவர்கள் கோரியுள்ளனர்.

மகளிர் முன்னேற்றத்துக்காகவும், ஊரக வளர்ச்சிக்காகவுமே 24 மணி நேரம் உழைக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பிரதிபா பாட்டீல் வகையறா சமூக சேவகர்கள் இதற்கு அளித்த பதில்தான் என்ன?


பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (3): மறந்துவிடாதீர்கள், கணவரும் உண்டு!அருண் செüரி
மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால், “”அதிகாரம் பெறும் மகளிருக்கு கணவர் உண்டு” என்பதை எல்லோருமே மறந்துவிடுவதுதான்!இணையதளத்தில், பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் -“”பிரதிபா மகிளா சஹகாரி வங்கியின் நிறுவனர், தலைவர்” என்று அவரைக் குறிப்பிட்டுள்ளனர். வங்கி பற்றி எழுத ஆரம்பித்ததும், அவருக்கு 1994 முதல் அந்த வங்கியுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று திடீரென்று அறிவிக்கின்றனர்.ஜலகாம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர் என்று வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. அந்த ஆலைபற்றி எழுத ஆரம்பித்ததும் அறிவிப்பு வருகிறது -அவருக்கும் சர்க்கரை ஆலைக்கும் சம்பந்தம் இல்லை என்று!கூட்டுறவு வங்கி, சர்க்கரை ஆலை இரண்டிலிருந்தும் விலகிய பிரதிபா, தனது நேரம், உழைப்பு அனைத்தையும் கல்விப்பணிகளிலேயே செலவிட்டிருப்பார் என்று நம்பலாம்.பிரதிபா பாட்டீலும் அவருடைய குடும்பத்தாரும் சங்கம் அமைத்து சில பள்ளிக்கூடங்களை நடத்தினர். அதில் பணியாற்றுகிறவர்கள் நிர்வாகத்தின் மீது மிகுந்த கசப்புணர்வோடு இருக்கின்றனர். அவர்களோடு பணியாற்றிய கிசான் தாகே என்ற ஆசிரியர் எப்படி நடத்தப்பட்டார், அவர் எப்படி தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை ஆவணங்களோடு அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கெல்லாம் பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடைய சகாக்களும்தான் காரணம் என்கின்றனர்.ஷெகாவத்துகள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 1977-ல் கிசான் தாகே பணிக்குச் சேர்ந்தார். உதவி ஆசிரியர் என்ற பதவியில் அமர்த்தப்பட்டார். ஊதியம் தராமலும் உரிய மரியாதை கொடுக்காமலும் அவமதிக்கப்பட்ட அவர் 1998 நவம்பர் 15-ல் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதுவன்றி ஒரு பத்திரமும் அவரிடம் இருந்தது. போலீஸôர் அவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு, பிரேத பரிசோதனை நடத்தினர். தேவிசிங்கும் அவருடைய நண்பர்களும் எப்படி தன்னைச் சிறுமைப்படுத்தினார்கள், ஊதியம் தராமலும், பள்ளிக்கூட சங்கத்துக்குச் சொந்தமான கடன் சங்கத்திலிருந்து கடன்கூட வாங்க முடியாமலும் எப்படியெல்லாம் அலைக்கழித்தனர் என்றெல்லாம் விவரமாக அதில் எழுதியிருந்தார்.கிசான் தாகே உயிரோடு இருந்தபோது பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவருடைய மகன், கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு எழுத விண்ணப்ப மனுகூட கிடைக்கவொட்டாமல் தடுத்தனர். வேலைபார்த்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் “உபரி’யாக இருப்பதாகக் கூறி, தொலை தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றினர். அங்கு ஆசிரியர் வேலையே காலி இல்லை என்றதும், விடுதி மேலாளராக வேலைபார்க்குமாறு கூறினர்.

அமராவதி நகரில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிக்கு இதுபற்றிக் கடிதம் எழுதினார் தாகே. ஆசிரியர் பணியிடமே இல்லாத இடத்துக்கு ஒருவரை மாற்றுவது சட்டவிரோதமான செயல் என்று சமூகநலத்துறை அதிகாரி 1998 ஜனவரி 27-ல் பள்ளிக்கூட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். அந்த மாறுதலுக்கு தன்னுடைய ஒப்புதலைத் தர முடியாது என்றும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு ஊதியம் தருவதை முற்றாக நிறுத்திவிட்டது நிர்வாகம்.

இதற்கிடையே, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் 1998 ஜனவரி 19-ல் மனு தாக்கல் செய்தார். தன்னைச் சட்டத்துக்குப் புறம்பாக மாற்றியது குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறும் ஊதியம் தருமாறும் 1998 அக்டோபர் 8-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1997 ஆகஸ்ட் 25 முதல் அவருக்கு நிலுவை ஊதியத்தையும் தருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டது. அதன் பிறகும் ஊதியம் பெற அவர் நிர்வாகத்திடம் நடையாய் நடந்தார். இந்த கட்டத்தில் அவருடைய உடல் நலிவடைய ஆரம்பித்தது. டாக்டர் அளித்த சான்றுடன் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அதையும் நிர்வாகம் ஏற்கவில்லை. தாகேயின் பரிதாப நிலை கண்டு சக ஆசிரியர்கள் மிகவும் வருந்தினர். அவர்களால் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வீட்டில் உள்ள பண்ட, பாத்திரங்களையும் மனைவியின் நகைகளையும் விற்றுத்தீர்த்துவிட்டதால் இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில், தற்கொலை முடிவை எடுத்து நிறைவேற்றிவிட்டார் தாகே. தாகேவின் மனைவி மங்கள்பாய் போலீஸில் புகார் செய்தார். போலீஸôர் பாராமுகமாக இருந்துவிட்டனர்.

மங்கள்பாயின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், “தாகேவைச் சிறுமைப்படுத்தியது, வேலையே இல்லாத இடத்துக்கு மாற்றியது, பிறகு ஊதியம் தராமல் நிறுத்தியது, மருத்துவ விடுப்பைத் தர மறுத்தது, உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் அதை எதிர் மனுக்கள் மூலம் தாமதம் செய்தது’ என்று எல்லாவற்றையும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இதில் முதல் நோக்கில் தவறு யார் மீது என்று தெரிகிறது, போலீஸôர் உரிய வகையில் வழக்கைப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. 2000 அக்டோபர் 6-ம் தேதி அந்த ஆணை வெளியானது. அதற்குள், ஊதியம் இல்லாமல் 3 ஆண்டுகள், தாகேவே இல்லாமல் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஆணையையும் எதிர்த்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஏ.ஏ. நந்தகாவோன்கர் அளித்த தீர்ப்பு, பள்ளிக்கூட நிர்வாகத்தை, கன்னத்தில் அறைந்தாற்போல இருந்தது. தேவிசிங் மீதும் அவருடைய சகாக்கள் மீதும் மனுதாரர் செய்த புகார்கள் உண்மையானவை என்பது நடந்த சம்பவங்களிலிருந்தும் கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்தும் தெரிகிறது, எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அது 2005 ஜூலை 22-ல் வெளியானது.

அதன் பிறகாவது சட்டம் தன் வேலையைச் செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கவிருக்கும் இந்த நாட்டின் முதல் குடிமகளின் கணவர் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அந்த ஆணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

சமூக நலத்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதியும், கன்னத்தில் அறைந்தாற்போல ஒரு தீர்ப்பை அளித்தார். இந்த தற்கொலை வழக்கில், சந்தர்ப்ப சாட்சியங்களும், ஆவணங்களும் தற்கொலைக்குத் தூண்டியது யார் என்பதை சந்தேகமற தெரிவிக்கின்றன; அப்படியிருக்க அவர்களுடைய மனுக்கள் பரிசீலனைக்கே ஏற்றவை அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். இந்த ஆணை 2007 பிப்ரவரி 7-ம் தேதி வெளியானது. தாகே 1998 நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இன்னும் இந்த வழக்கில் விசாரணையே ஆரம்பமாகவில்லை!

ஆதரவற்ற அப்பாவியான தாகே இறந்துவிட்டார்; அநாதையாகிவிட்ட அவருடைய மனைவி மங்கள்பாய் இனி அங்கும் இங்கும் அலைய முடியாதபடிக்குச் சோர்ந்துவிட்டார். இந்த விஷயத்தில் முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தேவிசிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் மாளிகையில் நுழைவதற்குத் தயாராகிவிட்டார். தேவிசிங் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

——————————————————————————————-

பிரதிபா பற்றிய எல்லா தகவல்களும் தலைமைக்குத் தெரியும்! – பிரதிபா முகத்திரையை விலக்கினால்… (5)

அருண் சௌரி

ரஜனி பாட்டீல் தில்லி செல்கிறார், சோனியா காந்தியை 2006 ஜனவரியில் சந்திக்கிறார். தனது கணவர் எப்படி கொல்லப்பட்டார், யாரால் கொல்லப்பட்டார், ஏன் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கிறார். அகமது படேல், சுசீல் குமார் ஷிண்டே, மார்கரெட் ஆல்வா போன்ற தலைவர்களையும் சந்திக்கிறார்.

அவர்கள் யாரும் சுட்டு விரலைக்கூட ரஜனிக்காக அசைக்கவில்லை. மாறாக, இந்தக் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 2 பேர் மீதான முதல் தகவல் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையை முதலில் உள்ளூர் போலீஸôரிடமிருந்து எடுத்து மாநில சி.ஐ.டி. போலீஸôரிடம் ஒப்படைத்து, பிறகு அவர்களிடமிருந்தும் எடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர். இந்த வழக்கை ஏற்பது குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கவே 3 மாதங்கள் ஆனது.

“எங்களுக்கு பணிப்பளு அதிகம், இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சர்வதேச அளவில் விசாரிக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை எனவே எங்களுடைய விசாரணை இதற்கு அவசியம் இல்லை’ என்று சி.பி.ஐ. பதில் அளித்தது.

வழக்கு விசாரணையை ஊனப்படுத்தவும் தொடர்புடையவர்களைத் தப்பவைக்கவும் நடந்ததே இந்த நாடகம். ரஜனி பாட்டீல் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் பெஞ்சில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.

“இந்த வழக்கில் விஷ்ராம் பாட்டீலின் அரசியல் எதிரிகள்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை’ என்று சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ரஜனி பாட்டீலின் குற்றச்சாட்டே அதுதான்; முக்கிய எதிரிகள் என்று குறிப்பிடப்படுகிறவர்களைப் போலீஸôர் அழைத்து விசாரிக்கவே இல்லை, கைது செய்யப்பட்டவர்களிடமும் இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை.

ராஜு மாலி, ராஜு சோனாவானே ஆகியோர் 3.1.2006-ல் எழுதிய கடிதத்துக்கும் அந்த அதிகாரி பதில் அளிக்கவில்லை. “”எங்களை நிர்பந்திக்கிறார்கள்; குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளியுங்கள் இல்லாவிட்டால் விஷ்ராம் பாட்டீலுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் என்று எங்களை மிரட்டுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் மராத்தியில் இருவரும் எழுதியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. அளித்த பதிலை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் 2007 பிப்ரவரி 23-ல் நிராகரித்தது. “உங்களுடைய பணிப்பளுவும், இந்த வழக்கின் தன்மையும் எங்களுக்குத் தெரியும். இருதரப்பு வழக்கறிஞர்களின் உதவியோடு ஆவணங்களைப் பரிசீலித்ததில் இது வித்தியாசமான வழக்கு என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே சி.பி.ஐ. இதை விசாரிப்பதே சரியானது’ என்று நீதிமன்றம் ஆணையிட்டது.

2007 மார்ச் 5-ம் தேதி ரஜனி பாட்டீல் மீண்டும் ஒருமுறை வழக்கு பற்றிய குறிப்புகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். எனது குடும்பமே கொல்லப்படும் என்று அஞ்சுகிறேன் என்று கூட அதில் குறிப்பிட்டிருந்தார். சோனியாவிடமிருந்து பதிலே வரவில்லை.

பிறகு இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை தொகுத்து, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் மனு அளித்தார். பிறகு எதுவும் நடைபெறாததால், “”பிரதிபா பாட்டீல்தான் மும்பை, தில்லியில் உள்ள தனது அரசியல் செல்வாக்கு காரணமாக அண்ணன் டாக்டர் ஜி.என். பாட்டீலைக் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.

எதிர் குற்றச்சாட்டு: பிரதிபா பாட்டீலுக்கு இணையான தகுதி படைத்த வேட்பாளர் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் பாரதீய ஜனதா தவறான பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பிரதிபா பாட்டீல் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய கட்சிக்காரர்கள் அளித்த பேட்டிகள், வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்திலும், போலீஸôரிடமும், தில்லியிலும், மும்பையிலும் அவர்கள் அளித்த புகார் மனுக்கள் அம்பலப்படுத்துகின்றன. இவை பாரதீய ஜனதாவின் மூளையில் உதித்த கட்டுக்கதைகள் அல்ல. இது பொய்ப் பிரசாரம் என்றால் “”ஆஜ்-தக்” ஒளிபரப்பிய பேட்டி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தனை நாள்கள் விட்டுவிட்டு, பிரதிபாவை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த பிறகு ஏன் இதையெல்லாம் சொல்கிறீர்கள் என்பது அவர்களின் அடுத்த கேள்வி.

எல்லா மாவட்டங்களிலும் இதைப்போல ஆணவத்தோடு நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், அவர்களில் எவரும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறவரோ, அல்லது அவருடைய உறவினரோ அல்ல. எனவே நாட்டின் உயர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவரின் தகுதியை ஆராய்வதிலும் ஆட்சேபம் தெரிவிப்பதிலும் என்ன தவறு? இந்த மோசடிகளை இப்போது அம்பலப்படுத்தாவிட்டால் பிறகு எப்போதுதான் இவை வெளியே வரும், அதனால் என்ன பலன் இருக்கும்?

சோனியாவுக்கு எதுவுமே தெரியாதா? சோனியாவுக்கு பிரதிபா குறித்து எதுவுமே தெரியாது, அதனால் தேர்வு செய்துவிட்டார் என்று மட்டும் கூறாதீர்கள். மகாராஷ்டிரத்தில் ஒரு மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒரு முறை அல்ல -3 முறை இருந்தவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபற்றி அவருடைய மனைவியும் கட்சித் தலைவர்களும் அலையலையாக தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள், பேட்டி தருகிறார்கள். உள்ளூர் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது எதுவுமே தெரியாது என்று சொல்லும் அளவுக்கு, இது “”சகஜமான” விஷயமா?

அப்படியானால் சோனியாவுக்கு பிரதிபா குறித்து எல்லாம் தெரிந்துதான் அவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாரா? ஆமாம் -அதில் சந்தேகமே வேண்டாம்.

அரசியலில் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கைப் பிரதமராக பதவியில் அமர்த்தினார். அவருக்கு அரசியல் சாதுரியம் இல்லாவிட்டாலும், இன்னமும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். நாளையே அவர், சோனியா சொன்னபடி கேட்காமல் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டால் பிரச்னையாகிவிடும்.

எனவே காங்கிரஸ் கட்சித்தலைவரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், குடியரசுத் தலைவராக வருகிறவரும் சொந்த செல்வாக்கு இல்லாதவராக இருக்க வேண்டும்; அது மட்டும் போதாது, “”தலைமையின் தயவில்தான்” அவருடைய பதவியே நீடிக்க வேண்டும். இதற்குப் பிரதிபாவைவிட வேறு நல்ல வேட்பாளர் கிடைப்பாரா?

———————————————————————————–

கூட்டுறவு வங்கி ஊழல்: பிரதீபா பட்டீலுக்கு பா.ஜ.க. 3 கேள்வி

புதுடெல்லி, ஜுலை. 5-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் பிரதீபா பட்டில். வருகிற 19-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. பிரதீபா பட்டீல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரதீபாபட்டீல் உறவினர்கள் மீது எழுந்துள்ள கூட்டுறவு வங்கி ஊழல் குற்றச்சாட்டுக்களை கையி லெடுத்து அவருக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

தனக்கும் அந்த கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள் நோக்கம் கொண்டவை என்றும் பிரதீபாபட்டீல் அறிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதீபா பட்டீலுக்கும் திவாலான பெண்கள் கூட்டுறவு வங்கிக்கும், அதில் நடந்த ஊழலுக்கும் தொடர்பு உண்டு என்று கூறி அது சம்பந்தமாக மூன்று கேள்விகளை பிரதீபாபட்டீல் முன்பு எழுப்பி யுள்ளார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். அந்த மூன்று கேள்விகள் வருமாறு:-

பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுத்ததால் திவாலாகிப்போன பிரதீபா பெண்கள் கூட்டுறவு வங்கியை தான் நிறுவவில்லை என்று பிரதீபாபட்டீலால் கூற முடியுமா?

1990-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அந்த வங்கியின் இயக்குனர்கள் கூடி பிரதீபாபட்டீலின் உறவினர்களுக்கு கடன் கொடுக்க சவுகர்யமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்தில் பிரதீபாபட்டீல் கையெழுத்திட்டுள்ளார். இதை அவரால் மறுக்க முடியுமா?

கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வங்கியின் இயக்குனர்கள் குழு ஒன்று கூடி வங்கியின் தலைமை செயல் அலுவலரை நியமிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை உங்களால் மறுக்க முடியுமா?

மேற்கண்ட மூன்று கேள்விகளை பா.ஜ.க. பிரதீபாபட்டீல் முன்பு வைத்துள்ளது.

வங்கியில் நடந்த முறை கேடுகளுக்கு பிரதீபா பட்டீலே பொறுப்பு என்று கூறும் பா.ஜ.க. அது சம்பந்தமான ஆதாரங்களை புத்தகமாக வெளியிட்டு பிரதீபா பட்டீலுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

——————————————————————————————————-

எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீட்டில் பிரதிபா விதிமீறல்

புதுதில்லி, ஜூலை 8: குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதிபா பாட்டீல் எம்.பி.யாக இருந்த போது அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.36 லட்சம் ஒதுக்கியதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி உயர் தலைவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். விதிமுறைகளைப் புறக்கணித்து குடும்ப அறக்கட்டளைக்கு எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து பிரதிபா பாட்டீல், நிதி ஒதுக்கிய விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழு அல்லது நெறிமுறைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறும் அவர்கள் மக்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவையில் பாஜக துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா மற்றும் ஷாநவாஸ் ஹுசைன், கே.எஸ்.சங்வன், ரக்பீர் சிங் கௌசல் உள்ளிட்டோர் மக்களவைத் தலைவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். மகஜரில் அவர்கள் கூறியிருந்தாவது:

மகாராஷ்டிரத்தின் அமராவதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பிரதிபா பாட்டீல் 1991-1996-ம் ஆண்டுகளில் இருந்தார். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் ஏற்படுத்திய அறக்கட்டளை “வித்யா பாரதி சிக்ஷான் சன்ஸ்தா’. இதற்கு ஒரு கல்லூரி அருகே விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி. உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.36 லட்சத்தை 1995-ம் பிரதிபா பாட்டீல் அளித்தார். சம்பந்தப்பட்ட இடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக இல்லாத நிலையில் அங்கு விளையாட்டு வளாகம் கட்ட உள்ளூர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எம்.பி.க்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய சங்கத்துக்கோ, அறக்கட்டளைக்கோ எம்.பி. தொகுதி நிதியிலிருந்து நிதி அளிக்கக்கூடாது என்று வழிகாட்டு விதிமுறையை பிரதிபா மீறி செயல்பட்டுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா போட்டியிடுகிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இப்போது இந்த மிக மோசமான முறைகேடு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனிடையே, மகாராஷ்டிர மாநில அரசு அந்த அறக்கட்டளைக்கு கல்லூரி அருகே 25,000 சதுர அடி இடத்தை கடந்த ஏப்ரலில் வழங்கியது. பிரதிபா பாட்டீல் 12 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கிய ரூ.36 லட்சத்தை பயன்படுத்தி அங்கு விளையாட்டு வளாகம் கட்டவும் அடுத்த மாதமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிவிட்டது.

பிரதிபா பாட்டீல் 1996 வரை எம்.பி.யாக இருந்தார். அவர் எம்.பி.யாக இருந்த போது ஒதுக்கி பயன்படுத்தப்படாத நிதியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் இப்போது பயன்படுத்த எவ்வாறு அனுமதிக்கலாம்?.

விதிமீறல் தொடர்பாக பிரதிபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஜரில் குறிப்பிட்டுள்ளனர். மகஜரை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தங்களிடம் உறுதி அளித்ததாக பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

“ஊழல், கிரிமினலை பாதுகாத்தல், எம்.பி.யாக இருந்தபோது நிதி ஒதுக்கீட்டில் விதிமீறல் போன்ற புகாரில் பிரதிபா பாட்டீல் சிக்கியுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா என்பதை வாக்களிக்க உரிமை பெற்ற எம்.பி., எம்.பி.க்கள் மனசாட்சி அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்றும் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார்.

—————————————————————————————————

From Unmai Online:

மகளிருக்கு மரியாதை

முதல் பெண் குடியரசுத் தலைவர்

மனித சமூகத்தின் சரிபகுதி பெண்ணினம் எல்லாத் துறைகளிலும் கால் பதிப்பதற்கு போராட்டத்தைத்தான் மேற்கொள்ள வேண்டி-யிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்-கத்தில் தென்னகத்திலிருந்து பெரியாரின் குரல் மட்டும்தான் பெண்ணுக்கு நீதி வழங்கும் என்று உரத்து ஒலித்தது.

நீதி, நிருவாகம், சட்டமியற்றுதல், காவல், ராணுவம், அரசியல், அறிவியல், தொழில்-நுட்பம் என பல்துறைகளிலும் பெண்கள் மெல்ல மெல்ல கால்பதித்து சாதனை படைத்-திருந்தாலும் நாட்டின் உச்சபட்ச பொறுப்புக்கு ஒரு பெண் இப்போது தான் வரப்போகிறார்.

அறுபதாண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் குடிமகனாக (ளாக) bஙுவூகு. ðபூகுðட் ðட்ஙீர்™ ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்-படுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.

அதுவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு பெண் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். இந்தத் தேர்வில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் பங்கு முதன்மையாக இருந்தது எனும்போது வரலாறு இன்னொரு முறை கலைஞரின் மூலமாக பெரியாரைப் பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படப் போகும் திருமதி பிரதிபா பாட்டில் அவர் ஒரு பெண் என்பதற்காக மட்டுமே தேர்வா-கவில்லை. மகாராஷ்டிரா அரசியலில் நுழைந்த நாள் முதல் தோல்வியே காணாத வெற்றியாளராக அவர் இருந்து வந்துள்ளார்.

அவருடைய தனித்தன்மையைப் பற்றி கூறும் பலரும், “தன்னை பிரபலமாக்கிக் கொள்ளாத விளம்பரத்தை விரும்பாத அரசியல் வாதி” என்றே கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்-முறையாக வெற்றி பெற்ற பிரதிபா பாட்டில் இப்போது தனது 71ஆம் வயதில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகப் போகிறார்.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை வலுவாக ஒலித்து வரும் காலகட்டத்தில் பிரதிபா பாட்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக வரப்போகிறார் என்பது வரவேற்க வேண்டிய செய்தி. ஆனால் இதற்குச் சில பெண்களே எதிர்நிலை எடுப்பதும் அவதூறு பரப்புவதும் எத்தகைய அருவருக்-கத்தக்கது என்பதையும் இந்திய வரலாறு பதிவு செய்தே வருகிறது. என்றாலும், “சுதந்திர இந்தியாவின் 60 வருட காலத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று சோனியா காந்தி கூறியுள்ளது முற்றிலும் பொருத்தமானது ஆகும்.

1947-இல் அந்நியர் ஆட்சி அகன்று 60 ஆண்டுகளுக்குப் பின்பு, முதன்முறையாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பெண் வருகிறார் என்பது பாலியல் நீதி. அப்பெண் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்-தவர் என்பது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி; பிரதிபா பிறந்த சோலங்கி ஜாதி ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியாகும். இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பத-வியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் இவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 90 கோடிக்கு மேல் ஆகும்.

1934 டிசம்பர் 19-இல் பிறந்த பிரதிபா எம்.ஏ; மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர்; மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்-கோயன் எனும் ஊரில் வழக்குரைஞர் தொழில் செய்தார். அங்கு பொறியியல் கல்லூரியை ஏற்படுத்திக் கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடத்துகிறார். பார்-வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்துகிறார்.

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார். பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டில்லியில் தனி விடுதிகளை நடத்துகிறார்.

பள்ளி, கல்லூரியில் பயிலும்பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து-கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாட்டில், 1962-இல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாக இருந்தார்.

1966-இல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டார்; இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்-யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்-டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மய்யம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியை பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.

பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜ°தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்காக இருந்ததில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாட்டில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர்.

திவான் பகதூர் தோங்கர்சிங் பாட்டில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேயுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு காட்டினார் என்பதும், பார்ப்பனீயத்தை மறுத்தவர் என்பதும்தான். அவருக்கு `மிக நெருக்கமாக’ இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டி-ருந்தார் என்பது பெறப்படுகிறது.

இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாட்டிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டினார், பிரதிபா பாட்டில்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்பொழுது தான் 1962 முதல், மாநிலக் காங்கிரசின் தலைவராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற மாநிலங்களவைத் துணைத் தலைவராக, மக்களவை உறுப்-பினராக, பல்வேறு நாடுகளில் நடந்த பல-வகைப் பன்னாட்டு அரங்குகளில் பங்கேற்ற-வராக, ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அப்பழுக்-கற்ற பொது வாழ்வினராக, மதச் சார்-பற்றவராக, சிறந்த நிர்வாகி என மெய்ப்-பித்தவராக உள்ள ஒருவரைப் பார்ப்பன ஏடுகள் ஏன் பரிகசிக்கின்றன என்பது தெரியவரும்.

——————————————————————————————————

திருமதி. பிரதிபா பாட்டில்
வாழ்க்கைக் குறிப்பு

தந்தை பெயர்: நாராயணராவ்

பிறந்த தேதி: டிசம்பர் 19, 1934

பிறந்த இடம்: மகராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன்

துணைவர் பெயர்: டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத்

குழந்தைகள்: பிரதிபா-ஷெகாவத் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கல்வித் தகுதி: எம்.ஏ. எல்.எல்.பி. கற்று வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

பொது வாழ்வில் ஈடுபட்டு சமூகப் பணியாற்றி வந்த பிரதிபா பாட்டில் 1962 முதல் 1985 வரை தொடர்ந்து 23 ஆண்டுகள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் துணை அமைச்சராகவும் பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றுப் பணிபுரிந்துள்ளார். குடிமைப் பொள் வழங்கல், மக்கள் நலவாழ்வு, சுற்றுலா, வீட்டுவசதி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, மதுவிலக்கு, மறுவாழ்வு மற்றும் பண்பாடு, கல்வித் துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளது சிறப்பான தகுதிகளாகும்.

1985 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங் களவைத் துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளார்.
1991இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றினார்.

கடந்த 2004ஆம்ஆண்டு ராஜ°தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமூக மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பெண்கள் நலம், பணியாற்றும் மகளிருக்கு விடுதிகள் ஏற் படுத்துதல், கிராமப்புற இளைஞர் நலன், பார்வை யற்றோருக்கான பள்ளிகள் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துதல், பெண்கள் நலனை மேம்படுத்துதல் ஆகியவைக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுவது தனது விருப்பம் என்பது பிரதிபாட்டிலின் கருத்து ஆகும்.

பல்வேறு உலக நாடுகள் சுற்றி வந்த பிரதிபா பாட்டில் சமூக நலம் குறித்த உலக அளவிலான மாநாடுகளில் பங்கேற்றுள்ளதுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்றார்.
——————————————————————————————————

பதவியின் கௌரவத்தைக் குலைப்பது யார்?

எஸ். குருமூர்த்தி
“”எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரசாரமானது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது” -இப்படிக் கூறி இருப்பவர், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் பேசப்பட்டதன் காரணமே, அத்தனை விவகாரங்களில் பிரதிபா பாட்டீல் சம்பந்தப்பட்டிருப்பதும், அவை தொடர்பாக நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகளும் முதல் தகவல் அறிக்கைகளும் பதிவாகியிருப்பதால்தான்.

இவையெல்லாம் வெறும் புகார்கள்தானா? இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியவர்கள் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியா, பாரதீய ஜனதாவா? பரபரப்புக்காக செய்தி ஊடகங்களே அவற்றைப் பரப்பிவிட்டனவா?

பேராசிரியர் வி.ஜி. பாட்டீல் என்பவரின் கொலைக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர் பிரதிபா பாட்டீலின் சகோதரர் ஜி.என். பாட்டீல் என்று குற்றம் சாட்டியவர் ரஜனி பாட்டீல். அவர்தான் வி.ஜி. பாட்டீலின் மனைவி; ஜலகாமைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை.

வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீல் இருவருமே சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஜலகாம் மாவட்டப் பிரமுகர்கள். பேராசிரியர் வி.ஜி. பாட்டீல், ஜி.என். பாட்டீலை ஜலகாம் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்கடித்தவர். சுனாமி நிவாரணத்துக்காகவும், பிரதிபா பாட்டீல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டி, அதை உரிய வகையில் செலவழிக்காமல் பிரதிபாவும் அவரது சகோதரர் ஜி.என். பாட்டீலும் ஏமாற்றியதை அம்பலப்படுத்தப் போவதாக எச்சரித்தார் அவர். “”உங்களைக் கொல்ல, அடியாள்களை ஏவிவிட்டுள்ளனர்” – வி.ஜி. பாட்டீலுக்கு 3 எச்சரிக்கைக் கடிதங்கள் வந்தன.

கிரிமினல் சட்டப்படி, ஒருவர் ஒரு கொலையைச் செய்தாலோ, செய்யத் தூண்டினாலோ அதில் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அது பிரதிபா பாட்டீலை நோக்கியே இருந்தது.

இந்த ஆதாரம் சரியில்லை என்று கருதினாலும்கூட, 2005 செப்டம்பரில் வி.ஜி. பாட்டீலைக் கத்தியால் குத்திக் கொன்றவர்களில் ஒருவன், சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். “”இந்தக் கொலையில் நீங்கள் அடியாள்கள்தான் என்றால் உங்களை ஏவிவிட்டவர்கள் யார்?” என்று கேட்டபோது அவர்கள், “”ரஜனி பாட்டீல் யார் யார் மீது குற்றஞ்சாட்டுகிறாரோ அவர்கள்தான்” என்று பதில் அளித்தான். பின்னர் அந்த “”சாட்சியமும்” மறைந்துபோனது. சிறையில் போலீஸôரின் காவலிலேயே அந்தக் கைதி மர்மமாக இறந்தார்.

பிரதிபாதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்று யாரும் கற்பனை செய்துகூட பார்த்திராத அந்த நாளில் வி.ஜி. பாட்டீலின் கொலையையும், அதில் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஜி.என். பாட்டீலும் அவருடைய அரசியல் சகாவும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களால் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடாமல் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்று “ஆஜ்-தக்’ டி.வி. நிருபர் படம்பிடித்துக் காட்டினார்.

ஜலகாமிலிருந்து 2 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக பிரதிபா இருந்திருந்தும் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வி.ஜி. பாட்டீல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தும் அவருடைய மனைவியான ரஜனியிடம் அனுதாபம் தெரிவித்துக் கூட பிரதிபா ஒரு வார்த்தைகூட பேசியதே இல்லை என்பது ஆச்சரியமாக இல்லை?

2005 தொடக்கத்திலும் 2007-ம் ஆண்டிலும், காங்கிரஸ் கட்சி என்ற பெரிய குடும்பத்தின் தலைவரான சோனியா காந்திக்கு தனது கணவரின் படுகொலை குறித்து 2 முறை கடிதம் எழுதினார் ரஜனி. ஜி.என். பாட்டீலை அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்று இருமுறை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சோனியாவின் மனம் இளகாததால் உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தார்.

பிரதிபா உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடங்கிய அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று 2007 பிப்ரவரியில் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறவரின் சகோதரர் இப்போது சி.பி.ஐ.யின் பார்வையில். சகோதரர் செய்த கொலைக்கு பிரதிபா எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். சந்தேகத்துக்கு உரியவரை அவருடைய சகோதரியே காப்பாற்றுகிறார் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறதே, அதற்குப் பிறகும் இந்த விஷயத்தில் நாம் எப்படி பிரதிபாவை சந்தேகப்படாமல் இருக்க முடியும்?

பிரதிபா குடியரசுத் தலைவர் ஆகிவிட்டால் அவருடைய சகோதரரை சி.பி.ஐ.யால் எப்படி விசாரிக்க முடியும்? நாட்டின் மிக உயர்ந்த பதவியின் மதிப்பைக் குலைக்க முயல்வது யார்? கொலை விசாரணையிலிருந்து சகோதரரைக் காப்பாற்றியவரா? பொதுமக்களிடம் அதை அம்பலப்படுத்தியவர்களா?

1973-ல் பிரதிபா பாட்டீல் தனது சொந்தப் பெயரில், தன்னையே நிறுவனர் தலைவராகவும் தனது உறவினர்களை இயக்குநர்களாகவும் கொண்டு கூட்டுறவு வங்கியொன்றை தொடங்கினார்.

சில ஆண்டுகள் கழித்து அந்த வங்கி -காய்கறி விற்பவர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், தினக்கூலிகள் மற்றும் இவர்களைப் போலவே கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்களிடமிருந்து ரூ.760 லட்சத்தை டெபாசிட்டாகத் திரட்டியது. 1990-ல் அந்த வங்கி, பிரதிபாவின் உறவினர்கள் உள்பட பலருக்கும் கடன் வழங்கியது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் தர வேண்டும் என்பது அந்த வங்கியின் முக்கியமான விதி. ஆனால் பயன்பெற்றவர்களில் பிரதிபாவின் உறவினர்கள் பலர் இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள் என்பதுதான் வேடிக்கை.

பிரதிபாவின் உறவினர்கள் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை ரூ.33 லட்சம் ரத்து செய்யப்பட்டது; இந்த குறிப்பைப் புரிந்துகொண்ட அவர்கள், அசல் ரூ.225 லட்சத்தையும் திருப்பித் தராமல் தங்களிடமே வைத்துக் கொண்டனர்.

பிரதிபாவின் மற்றொரு சகோதரர், வங்கிக்கு உரிய தொலைபேசியை வீட்டுக்கு எடுத்துச்சென்று பங்குச் சந்தை தரகர்களுடன் அன்றாடம் பேசி 20 லட்ச ரூபாய் பில் வருமாறு சமூகத்துக்கு சேவை செய்தார்.

இதைப்போன்ற முறைகேடுகளும், சுரண்டல்களும் வங்கியின் நிதியில் 37%-ஐ கரைத்துவிட்டன. வேறு வழியில்லாமல் வங்கி நொடித்து விழுந்தது. ஏழை முதலீட்டாளர்கள் தங்களுடைய சேமிப்பு, வட்டி எல்லாவற்றையும் இழந்தனர். பிரதிபாவின் உறவினர்களோ அவர்களுடைய இழப்பிலிருந்து லாபம் பார்த்துவிட்டனர்.

2002-ல் அந்த வங்கியின் நிதி நிர்வாகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, வங்கியின் உரிமத்தை 2003-ல் ரத்து செய்தது. இனி இந்த வங்கியைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு அது வந்தது. 2002 ஜூன் 18-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரகசிய அறிக்கையில், உறவினர்களுக்கே கடனும் சலுகையும் வழங்கியிருப்பது பெரும் மோசடியே என்று சாடியிருக்கிறது. பிரதிபா உள்ளிட்ட நிர்வாகிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வங்கி ஊழியர்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளை சட்டப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்காமல், முழுக்க தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்களையே நியமித்துவிட்டனர். வங்கி நிர்வாகத்துக்கும் பிரதிபாவுக்கும் தொடர்பே இல்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் 2002 ஜனவரி 22-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில்கூட, தலைமை நிர்வாகியை நியமிக்கும் அதிகாரத்தை பிரதிபாவுக்கு வழங்கியிருக்கின்றனர்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மைகள். வங்கியை இப்படி முறைகேடாக நிர்வகித்ததற்காக விசாரணை நடத்தினால் பிரதிபா உள்பட அனைத்து இயக்குநர்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியல் சட்டம் 361 (2) பிரிவின்படி அவர் மீது வழக்கு தொடுக்க முடியாது.

சந்தேகத்துக்குரிய குற்றவாளி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் அமர்ந்தால் அதனால் அந்தப் பதவிக்கு கெüரவம் அதிகரிக்கும் என்பதுதான் பிரதிபாவின் வாதம் போலிருக்கிறது. தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் உள்ள வங்கியில் முறைகேடான செயல்களை அனுமதிக்கிறவர் குற்றவாளியா, அல்லது அதை வெளி உலகுக்குத் தெரிவித்து வாக்களிக்கப் போகும் மக்கள் பிரதிநிதிகளையும், நாட்டின் குடிமக்களையும் முன்கூட்டி எச்சரிப்பவர்கள் குற்றவாளிகளா?

——————————————————————————————————————-
Part II

பிரதிபாவின் பெயரில் தொடங்கிய வங்கி மட்டும் திவாலாகவில்லை; அவர் தன்னையே நிறுவனராகவும் முதன்மை ஊக்குவிப்பாளராகவும் கொண்டு தொடங்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும் அதேபோல நொடித்துப்போனது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை 1999-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டது. அதிக அளவு சர்க்கரையை உற்பத்தி செய்யாமலேயே ஆலை நொடித்தது. பிரதிபாவின் வங்கி உள்பட சில வங்கிகள் சேர்த்து அளித்த ரூ.20 கோடி திரும்ப வராமலேயே நஷ்டமாகிவிட்டது. ஊரக வளர்ச்சிக்காக நாட்டு மக்கள்தான் இந்த நஷ்டத்தையெல்லாம் ஏற்று ஈடுகட்ட வேண்டும். சர்க்கரை ஆலையின் தலைவரும், முதன்மை ஊக்குவிப்பாளருமான பிரதிபாவுக்கும் அந்த ஆலைக்கும் தொடர்பு கிடையாது என்று இப்போது அவருடைய நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள மிக உயர்ந்த பதவியின் கெüரவத்தைக் குலைப்பது யார்? பொதுமக்களின் 20 கோடி ரூபாயை விழுங்கிய கூட்டுறவு ஆலையா அல்லது அதை நாட்டுக்கு அம்பலப்படுத்திய எதிர்க்கட்சிகளா?

சகோதரருடன் கூட்டு சேர்ந்து கூட்டுறவு வங்கியையும் சர்க்கரை ஆலையையும் நடத்தினார். கணவர், மகள்களின் உதவியோடு கல்வி நிலையங்களையும் உழைக்கும் மகளிருக்கான விடுதிகளையும் நடத்தினார். பிரதிபாவின் கணவர் தேவிசிங் ஷெகாவத் செய்த சாதனைகளைத்தான் பாருங்களேன்! கிசான் தாகே என்ற ஏழை பள்ளிக்கூட ஆசிரியரை, உரிமையை வலியுறுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக சம்பளம் கொடுக்காமலும், வேலையே இல்லாத தொலைதூர கிராமப் பள்ளிக்கு மாற்றியும் அலைக்கழித்தார். வேதனை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்குக் காரணம் தேவிசிங்தான் என்று அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

ஆனால் போலீஸôர், தாகேவின் மரணம் தொடர்பாக தேவிசிங் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்யக்கூட மறுத்துவிட்டனர். பேராசிரியர் பாட்டீல் கொலை வழக்கில் எப்படி பிரதிபாவின் அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தனரோ அப்படியே இந்த வழக்கிலும் போலீஸ்காரர்கள் நடந்து கொண்டனர். இந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு முறையல்ல, 3 முறை தலையிட்டது. சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது தேவிசிங்தான் முதல் குற்றவாளி என்று அது திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். உயர்ந்த பதவிக்கு இழுக்கு என்று பிரதிபா எதைக் கூறுகிறார்? அவருடைய கணவரின் கிரிமினல் நடவடிக்கைகளையா? அல்லது அவற்றை மக்கள் அறிய அம்பலப்படுத்தும் பத்திரிகைகளையும் எதிர்க்கட்சிகளையுமா?

அடுத்தது அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான சில அறக்கட்டளைகளின் அளப்பரிய சேவைகளைப் பற்றியது. ஷ்ரம் சாதனா டிரஸ்ட் (எஸ்.எஸ்.டி.), மகாராஷ்டிர மகிளா உதயம் டிரஸ்ட் (எம்.எம்.யு.டி.) என்ற அந்த இரண்டுக்குமே பிரதிபா பாட்டீல்தான் தலைவர், அவருடைய மகள் ஜோதி ரதோர்தான் நிர்வாக அறங்காவலர். இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து 5 உழைக்கும் மகளிர் விடுதிகளையும், 2 பள்ளிகளையும், ஜலகாமில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்துகின்றன.

அவர்களுடைய உழைக்கும் மகளிர் விடுதி ஒன்று மும்பை-புணே நெடுஞ்சாலையில் பிம்ப்ரி என்ற இடத்தில், அரசு கொடுத்த நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விடுதிகள் மத்திய, மாநில அரசுகள் தந்த மானியங்களில்தான் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.16,000-க்கு மேல் சம்பாதிக்காத ஏழைகளுக்குத்தான் இந்த விடுதியில் இடம் தர வேண்டும் என்பது முதல் விதி. ஆனால் அங்கு தங்கியுள்ள மகளிரில் பலர் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த, அதிக வருவாய் உள்ள பெண்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்படும் 22.5% இடங்களும் கூட மற்றவர்களுக்கே வழங்கப்படுகின்றன. ஆக இந்த அறக்கட்டளையின் நோக்கம் “”அறம்” அல்ல, எல்லாவற்றிலும் “”லாபம் தேடு” என்பதுதான். இந்த விவகாரத்தில் பிரதிபாவின் நடத்தையால் அந்த உயர்ந்த பதவியின் மாண்பு குலைகிறதா அல்லது அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களாலா?

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது 2007 ஏப்ரல் 26-ல், மகாராஷ்டிர மாநில அரசு 25 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பை பிரதிபாவின் கணவருடைய கல்விச் சங்கத்துக்கு அளித்தது. அங்கு விளையாட்டு அரங்க வளாகத்தைக் கட்டுவதற்காக அந்த நிலம் தரப்பட்டது. அதற்கு ரூ.36 லட்சம் தரப்பட்டது. 1996-ல் தனக்கு தரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இத் தொகையை பிரதிபா வழங்கினார். உறவினர்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்கக்கூடாது என்று அரசு விதி குறிப்பிடும் நிலையிலும் இந்த முறைகேடு நடந்திருக்கிறது.

தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய பிரதிபாவின் செயலால் உயர் பதவியின் கெüரவத்துக்கு இழுக்கா அல்லது அதை அம்பலப்படுத்திய பத்திரிகைகளின் நடவடிக்கையால் இழுக்கா?

தனியார் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று எல்லா மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகின்றன. இந் நிலையில் பிரதிபாவின் குடும்பத்துக்குச் சொந்தமான இரு அறக்கட்டளைகளும் சட்ட விரோதமாக கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை நன்கொடை என்ற கணக்கில் எழுதிக்கொண்டன. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை கண்டுபிடித்து, வரி போட்டது.

இதில் எது உயர் பதவியின் மாண்பைக் குறைக்கிறது? கூடுதல் கல்விக் கட்டணத்தை நன்கொடை என்ற பெயரில் மறைத்து வரி ஏய்ப்பு செய்ததா அல்லது அதை பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அம்பலப்படுத்தியதா? இன்னும் பல ஊழல்கள் இருந்தாலும் எழுத இடம் போதாது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

குடியரசுத்தலைவர் பதவியின் மாண்பை, அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிபா பாட்டீல்தான் குலைக்கிறாரே தவிர, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளோ இதர செய்தி ஊடகங்களோ அல்ல. வேட்பாளர் என்று அவரை அறிவித்தபோதே இத்தனை ஊழல்களும் அணிவகுத்து முன் நிற்கிறதே, அவர் குடியரசுத்தலைவராகவே ஆகிவிட்டால் அப்புறம் என்னவெல்லாம் நடக்கும்?

தேர்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி என்பதே கேலிக்குரியதாகிவிடும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களைப் பற்றி பேசாதீர்கள் என்று பிரதிபா வேண்டுகோள் விடுப்பதன் மூலம், பதவியின் மாண்பைக் காப்பாறிவிட முடியாது! தேர்தலுக்குப் பிறகும் இந்த விவகாரங்கள் பேசப்படும். நீதிமன்றத்தில் இது வழக்காக வந்தால், கேலி இன்னமும் உச்சத்துக்குப் போகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உடன்பாட்டுக்கு வந்தால்கூட, இத்தனை முறைகேடுகளைச்செய்துள்ளதால் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முடியாது.

சுயநல நோக்கில் அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோளே, அவர் குற்றம் செய்ததை நிரூபிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இந்தப் பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று பிரதிபா உண்மையிலேயே விரும்பினால் போட்டியிலிருந்து அவர் விலகுவதுதான் ஒரே வழி.

———————————————————————————-
இந்தியக் குடியரசும் இங்கிலாந்து முடியரசும் ஒன்றா?

இரா. செழியன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களைப் பரிசீலித்து, தகுதியற்றவைகளை நிராகரித்த பிறகு பிரதிபா தேவிசிங் பாட்டீல், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் மட்டுமே இப்போது களத்தில் நிற்கின்றனர்.

பிரிட்டனில் அமலில் உள்ள “வெஸ்ட்மினிஸ்டர்’ பாணி அரசியல் அமைப்பு முறையே நமக்கும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் நிர்ணய சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால், மத்திய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளின்படி செயல்பட வேண்டிய -அடையாளச் சின்னமாக மட்டும் -நாட்டின் தலைவரான குடியரசுத் தலைவர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதிலும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதிலும் மட்டும் ஓரளவுக்கு இவர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வரைவு வாசகத்தை, அப்போதைய அரசியல்சட்ட ஆலோசகர் பி.என். ராவ் வடித்திருந்தார்.

நேருஜி அதை ஏற்கவில்லை. “இது எளிமையாக இருக்கும் என்பது உண்மையே, ஆனால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சி அல்லது குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது அந்தக் கட்சி அல்லது குழு தங்களைச் சேர்ந்த ஒருவரை மட்டுமே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுவே அலங்காரப் பதவிதான், மிகக் குறைந்தவர்கள் தேர்ந்தெடுத்தால் இது அப்பட்டமான “”கைப்பாவை” பதவியாகிவிடும். குடியரசுத் தலைவரும் மத்திய அமைச்சரவையும் ஒரே எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, அரசியல் சட்ட நிர்ணய சபையில் மீண்டும் இது விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும், சட்டமன்றங்களின் எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களிக்க வேண்டும், மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் வாக்குகளுக்கு மதிப்பு போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் அரசர் எப்படியோ இந்திய ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவரும். சம்பிரதாயமான தலைவர்தான்! ஆயினும், பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரின் தலைவராகவே இந்தியாவில் குடியரசுத் தலைவர் பார்க்கப்படுகிறார். நாடு சுதந்திரம் அடைந்தது தொடங்கி முதல் 20 ஆண்டுகளுக்கு பாபு ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் போன்ற பழுத்த அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் அந்தப் பதவியை அலங்கரித்தனர்.

1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்குள் } தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட கலவரத்தாலும், மனசாட்சிப்படி வாக்களிப்பது என்ற கருத்தை பிரதமரே கையாண்டதாலும் அந்தப் பதவிக்குரிய கெüரவமும், கண்ணியமும் பாதிப்படைந்தது. குடியரசுத் தலைவர் என்ற பதவி வெறும் பொம்மை போன்றதாக இருக்கும் என்ற அச்சம், நிஜமாகிவிட்டது.

இப்போது நடைபெறவுள்ள 12-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தலைப் பொருத்தவரை, இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி வாய்ந்த பலர் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர்.

முதலில், பிரணாப் முகர்ஜியை எடுத்துக் கொள்வோம். திறமை, அனுபவம் ஆகிய இரண்டும் கலந்த அவரைவிடத் தகுதி வாய்ந்தவர் யாரும் இல்லை. அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், “”அவர் இல்லை -அவர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறார்” என்ற அறிவிப்பு கட்சி மேலிடத்தால் வெளியிடப்பட்டது.

மிகுந்த திறமைசாலி என்பதை கட்சித் தலைமையே ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், மத்திய அமைச்சராக இருப்பதற்குத்தான் தகுதி தேவை, குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கருதுவதுபோலத் தெரிகிறது. பொது வாழ்வில், “”தகுதியே” தகுதிக்குறைவாகவும் இதைப்போல, ஆகிவிடுவது உண்டு.

அதன் பிறகு பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதே வேகத்தில் நிராகரிக்கவும்பட்டன. எதைச் செய்வது என்று புரியாமல் ஒரு குழப்பத்தில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீலை நிறுத்துவது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்- இடதுசாரி கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இதில் தவறு ஏதும் இல்லை. 1950-களில் குடியரசுத் தலைவர் பதவி என்பதை மிகுந்த மரியாதைக்குரிய, பெருமைக்குரிய பதவியாகக் கருதினார் ராஜேந்திர பிரசாத். கட்சியிலோ, மத்திய அமைச்சரவையிலோ வகிக்கும் பதவியைவிட குடியரசுத் தலைவர் பதவி பெரிது என்று அவர் நினைத்தார். மெதுவாக அந்த நிலைமை மாறி, ஆளுங்கட்சித் தலைவர் பதவி என்பது பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளைவிட சக்திவாய்ந்தது என்று இப்போது ஆகிவிட்டது.

பிரதிபா பாட்டீல் மீது உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் கமிஷனிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதிபா மட்டும் அல்லது அவர்களுடைய உறவினர்களின் செயல்கள் குறித்தும் புகார்கள் செய்யப்படுகின்றன. வேட்பாளர்களின் சொத்து, கடன் விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்குப் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருப்பவர்களும் -“”அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன், நாட்டின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கட்டிக்காப்பேன்” என்று உறுதி அளிக்க வேண்டும் என்று “”தேசிய ஒருமைப்பாடு-பிராந்தியவாதம்” தொடர்பாக ஆராய 1962-ல் நியமிக்கப்பட்ட சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் கமிட்டி பரிந்துரை செய்தது.

ஆனால், 16-வது திருத்தச்சட்டம் என்ற புதிய அரசியல் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதை அந்த நாளில் திமுகவுக்கு எதிரான சட்டம் என்றே அழைத்தார்கள். மக்களவை, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கட்டிப்போட அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2003 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவின்படி, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய படிப்பு, சொத்து, கடன், தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், விசாரணையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை உரிய படிவங்களில் தெரிவிக்க வேண்டியவர்களானார்கள். இதை எல்லாப் பதவிகளுக்கும் கட்டாயமாக்குவது நல்லது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சிவசேனை ஆகியவற்றுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் பிரதிபா பாட்டீல்தான் வெற்றி பெறுவார்; 1969-ல் கடைப்பிடிக்கப்பட்ட மனசாட்சிப்படி வாக்களிக்கும் உத்தி கடைப்பிடிக்கப்பட்டால் இந்த முடிவு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அரசியல் ஆதரவைவிட பிரதிபா பாட்டீலுக்கு ஆன்மிக ஆதரவு இருக்கிறது. பிரம்ம குமாரிகள் சங்கத்தை நிறுவிய பாபா லேக்ராஜின் பரிபூரண ஆசி (1969-ல் அவர் இறந்துவிட்டார்) பிரதிபாவுக்கு இருக்கிறது. மவுண்ட் அபுவில், பிரம்ம குமாரிகள் சங்கத் தலைவருடன் சமீபத்தில் பேசியபோது, “”மிகப்பெரிய பொறுப்பை ஏற்க நீ தயாராக இருக்க வேண்டும்” என்று பாபா லேக்ராஜ் கூறியிருக்கிறார். அதன் பிறகே, கட்சித் தலைவர் சோனியா காந்தியிடமிருந்து அவருக்கு அந்த இனிய அழைப்பு போயிருக்கிறது, குடியரசுத் தலைவர் தேர்தலில் நீங்கள்தான் வேட்பாளர் என்று.

பிரிட்டிஷ் வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஞாபகம் இருக்கும், முதலாவது ஜேம்ஸ் என்ற மன்னன், கடவுள் தன்னிடம் பேசி தனக்களித்த ஆசியினால், “”தெய்வீக உரிமையோடு” மக்களை ஆள்வதாக அறிவித்தார்.

பிரிட்டனில் மன்னர் எப்படி தேசத்தின் அடையாளத் தலைவரோ, அப்படி குடியரசுத் தலைவர் இங்கு அடையாளத் தலைவராகப் பதவி வகிக்கிறார். அதற்காக இங்கிலாந்து மன்னரைப்போலவே தனக்கும் “”தெய்வீக உரிமை” இருப்பதாகக் கூறி மக்களைத் தொல்லை செய்யாதிருப்பாராக!

(கட்டுரையாளர்: முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்.)

————————————————————————————————————

மிஸ்டர் பிரதிபா பாட்டீல்…
Prathibha patil husband devisingh shekawath

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் வருகைக்காக தனது இல்லம் முன்பு காத்திருக்கும் கணவர் தேவிசிங் ஷெகாவத்.

புது தில்லி, ஜூலை 23: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிபா பாட்டீல் இனி தனது குடும்பத்திற்கும் தலைவியாக செயல்படுவார் என அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் கூறினார்.

குடும்பத் தலைவி மட்டுமில்லாது எங்களின் குலத்தலைவியாகவும் அவர் இருப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில் அவர் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஜூலை 25 முதல் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு குடிபுக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தங்களின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை தங்களின் மகன்களில் ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் நிர்வகித்து வந்தார். தற்போது அதில் அவர் தலையிடுவது இல்லை என்றார்.

குடியுரசுத் தலைவரின் கணவராக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்கையில், தான் ஒரு சாதாரண மனிதன் தான் என அவர் தெரிவித்தார்.

Posted in Abdul Kalam, Abdulkalam, abuse, Accusations, Accused, Advani, Akbar, Allegation, Alliance, APJ, Attorney, Aurangazeb, Babar, Bajpai, bank, BJP, Bribe, Bribes, BSP, Burqa, candidate, Chandrasekar, Chandrasekhar, Chezhiyan, Co-operative, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cooperative, Corrupt, Corruption, CPI, CPI(M), Dalit, Desai, Devisingh, DMK, Elections, Emergency, Fakhruddin, Fakhrudheen, Fakruddin, Fakrudheen, Fakrudhin, Fakrudin, Female, Finance, Giri, Governor, Governor-general, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, History, Hussain, Hussein, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Islam, Issues, Jailsingh, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, Kalaam, Kalam, kickbacks, KR Narain, Lady, Law, Lawyer, Loans, Lok Saba, Lok Sabha, LokSaba, maharashtra, Mahila Sahakari Bank, Manmohan, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mogals, Moghuls, Moguls, Moraarji, Morarji, Moslem, MP, Mukhals, Muslim, Narain, Narayan, Narayanan, NDA, Neeraja, Neeraja Choudhri, Neeraja Choudhry, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Nehru, nexus, Nomination, Order, Party, Patil, Pilani, PM, Polls, Post, Power, Pradhiba, Pradhibha, Pradiba, Pranab, Pranab Mukherjee, Pranav, Prathiba, Pratiba, Pratibha, Pratibha Devisingh Patil, PRATIBHA MAHILA BANK, PRATIBHA MAHILA SAHAKARI BANK, Pratibha Patil, President, Prez, Propaganda, Purqa, Radhakrishnan, Raj, Rajaji, Rajasthan, Rajeev, Rajeev Gandhi, Rajendra, Rajendra Prasad, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rashtrapathi, Rashtrapathy, Reddy, Religion, Republic, SAHAKARI BANK, Sanjeev, Sanjeev Reddy, Sanjeeva reddy, Sarma, Scam, Scandal, SD Sharma, Sezhiyan, Shankar Dayar Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Shivraj, Shivraj Patil, Shourie, Sikhs, Speaker, Speech, support, Sushil Kumar Shinde, TMMK, UPA, Vajpayee, Vajpayi, Veil, Venkatraman, vice-president, Victory, Vote, VP, VP Singh, Winner, Women, Zail singh, Zailsingh, Zakir | 6 Comments »

CPI(M) condemns Prime Minister Manmohan Singh’s request to Indian Businesses in People’s Democracy

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

முதலாளிகளைக் கெஞ்சுவதா? மார்க்சிஸ்ட் கோபம்!

புது தில்லி, ஜூன் 3: “விலைவாசியைக் குறைக்க உதவுங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்காதீர்கள், அரசுடன் சேர்ந்து ஏழ்மையை ஒழிக்க சமூகக் கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தொழில் அதிபர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பது அர்த்தமற்றது, பலன் தராதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி‘யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

“சுரண்டுவதை நிறுத்திவிடும்படி முதலாளிகளைக் கேட்பது என்பது சைவமாக மாறிவிடு என்று புலியை வேண்டிக் கொள்வதற்குச் சமம்.

ஏழைகள் மீது பிரதமருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அரசின் கொள்கைகளைத்தான் மாற்ற வேண்டும். தாராளமயம், உலகமயம் ஆகியவற்றைக் கைவிட்டு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.

வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரமின்மை ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மையமாக வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்றால் அது வறிய பிரிவினருக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளித்தலாக இருக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநலத்துறைக்கு அதிகம் செலவிடுவோம், வறுமையை ஒழிப்போம், அரசுத்துறைகளில் முதலீட்டை அதிகப்படுத்துவோம், அரசுத்துறைகளுக்கு முக்கியத்துவம் தருவோம், அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டோம், விலைவாசியைக் குறைப்போம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை அமல் செய்யப்பட்டன?

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நாலில் ஒரு பங்கு, அதாவது 8 லட்சத்து 54 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறி, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பெருமைப்படுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

ஏழை, பணக்காரர் வேற்றுமை அதிகரித்து வருகிறது. ஏழைகள் படிப்புக்கும் வாழ்க்கைச் செலவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்க முடியாமல் ஊட்டச் சத்து குறைந்தும், நோயில் வீழ்ந்தும், படிப்பைப் பாதியில் நிறுத்தியும் சிரமப்படுகின்றனர். கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என்பதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது.

2001-02 பட்ஜெட்டில் சமூகநலத் துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 28.26% செலவிடப்பட்டது. 2006-07-ல் இது 27.19% ஆகக்குறைந்துவிட்டது’ என்று தலையங்கம் சாடுகிறது.

Posted in Business, CEO, College, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Divide, Economy, Education, Election, Employment, Expenses, Finance, GDP, Govt, Growth, Inflation, Jobs, Manmohan, Manmohan Singh, Needy, Op-Ed, Opinion, People's Democracy, PM, Polls, Poor, Recession, Rich, Schemes, Society, WB, Wealthy, Welfare | Leave a Comment »

Congress Krishnasamy – ‘How many seats did AIADMK win in Tamil Nadu Civic Polls?’

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஜனநயாக படுகொலை நிகழ்த்தப்பட்டதாக சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இரா.செழியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள

  • 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்,
  • 80 ஆயிரம் வாக்குசாவடிகள் மூலமாக
  • 4லட்சம் பேர் வேட்பாளர்களாக போட்டி யிட்டு
  • 1 லட்சத்து 31 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியில் அமர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள

  • 472 மாநகராட்சி வார்டுகளில் 62பேரும்,
  • 4 ஆயிரத்து 374 நகராட்சி வார்டுகளில் 1016பேரும்,
  • 8 ஆயிரத்து 780 வார்டுகளில் 1643 வார்டுகளிலும்,
  • 6589 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1417 வார்டுகளிலும்
  • மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 157 வார்டுகளிலும் அ.தி.மு.க. கட்சியின் சார்பாக போட் டியிட்டவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.

நடந்து முடிந்த தேர்தலிலே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக குரல் எழுப்புகிற இவர்களின் வாதத்தில் உண்மை இருக்குமேயானால் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு இருக் கிறது.

சென்னை மாநகராட் சிக்குட்பட்ட சில வார்டுகளில் கலவரங்கள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லப்பட்டு 17 வாக்குசாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீதிமன்ற ஆணைக்கேற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தல் முடிவு என் பது நீதிமன்ற ஆணையின் அடிப்படையில்தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது என் பதை உணராமல் தேர்தல் முடிவுகளை கொச்சைப் படுத்துகிற வகையில் பேசு வது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்.

மக்களை திசை திருப்ப உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற 3கோடி வாக்காளர் களை அவமதிக்கும் செயலாக வும் கருதப்படும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Posted in ADMK, AIADMK, Chennai, Civic Polls, Condemn, Congress, Congress (I), Corporation, Era Sezhiyan, Indira Congress, Iraa Sezhiyan, Jayalalitha, Krishnasaamy, Krishnasamy, Krishnaswamy, local body elections, Madras, Meeting, Municipality, seats, Tamil Nadu | Leave a Comment »

“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.

  • “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

Posted in 2.5 Lakhs, Condemn, Creamy Layer, Dalit Panthers, Percentage, Reservations, Salary limits, Supreme Court, Thol Thiruma, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 4 Comments »

North Korea Nuclear Tests – India Condemns

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

வடகொரியாவுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி, அக். 9-
வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அலுவல கம் வெளியிட்டுள்ள செய்தி யில் சர்வதேச எதிர்ப்பை மீறி இந்த அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பது கண்டிக் கத்தக்கது. கொரிய தீப கற்ப பகுதியில் அமைதியை இது பாதிக்கும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக மற்ற நாடுகளுடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

Posted in Atom Bomb, Condemn, Hypocrisy, India, News, North Korea, Nuclear, South Korea, Tests | Leave a Comment »