Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vanni’ Category

Jan 15 – LTTE, Eezham, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2008

இந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.

இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.

ஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

 


வன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

வான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.

மக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.

 

 


அனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதியுடன் திஸ்ஸ விதாரண
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.

புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.

இந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை

மட்டக்களப்பின் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்
மட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.


இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.

நிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.

சுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

டாக்டர் விக்னேஸ்வரன்

இதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.

இந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.


மொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.

முதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.

மொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.

அதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்

சைமன் ஹியுஸ்

இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.

இப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.

“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை

இலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 

 


போர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்

யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்
யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம்

இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால்.

மட்டக்களப்பில் ஹர்த்தால்
மட்டக்களப்பில் ஹர்த்தால்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

இலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

பிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.

ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

 


புத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்

புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

 


Posted in Attacks, Batticaloa, dead, Economy, Eelam, Eezham, Fights, Finance, Killed, LTTE, Murder, Peace, Sri lanka, Srilanka, Vanni, Wanni, War | 2 Comments »

LTTE’s Head of Army Intelligence killed in Claymore ambush

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய இலுப்பைக்கடவை பகுதியில் வேன் ஒன்றின் மீது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியினர் சனிக்கிழமை பிற்பகல் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராகிய சார்ல்ஸ் எனப்படும், கேர்னல் அருள்வேந்தன் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

ஆனால், அருள்வேந்தன் கிளேமோர் மூலம் கொல்லப்படவில்லை, அவர் மோதலின் போதே கொல்லப்பட்டார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

இவருடன் பயணம் செய்த கேர்னல் தரத்திலான வேறு 3 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

மன்னார் இலுப்பைக்கடவைக்கும் பள்ளமடுவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த கேர்னல் சார்ல்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்றும் விடுதலைப் புலிகள் விபரம் வெளியிட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, முகமாலையில் இராணுவத்தின் முன்னரங்க பகுதி மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்திய திடீர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலின்போது தமது தரப்பில் சேதங்கள் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

முகமாலை முன்னரங்க பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.


ஜயந்த தனபாலா ராஜினாமா

இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா
இலங்கை ஜனாதிபதியுடன் ஜயந்த தனபாலா

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலைப் புலிகள் உடனான சமாதான முயற்சியில் பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஜயந்த தனபாலா ராஜினாமா செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் கடந்த 2002 ம் ஆண்டு செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து தன்னிச்சையாக விலகி கொண்டதாக அரசாங்கம் அறிவித்த சில தினத்தில் இந்த ராஜினாமா இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஜயந்த தனபாலா கூறியுள்ளார்.

கலாநிதி ஜயந்த தனபாலவை அரசாங்க சமாதான செயலகத்தின் பணியாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நியமித்திருந்தார், அதன் பின்னர் 2005 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இவரை தனது பிரதான ஆலோசகராக நியமித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கை சார்பில் இலங்கையின் சார்பின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் ஜயந்த தனபாலா.

 


Posted in ambush, Army, Charles, CIA, dead, Eelam, Eezham, FBI, I&B, Iluppaikkadavai, Intelligence, Jaffna, KGB, Killed, LTTE, Mannaar, Military, Murder, Pallamadu, Pirapaharan, Ravishankar, RAW, Shanmuganathan, Shanmuganathan Ravishankar, Sri lanka, Srilanka, Vanni, War | Leave a Comment »

Asian Human Rights Commission (AHRC) urges foreign intervention in Sri Lanka

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

சர்வதேச மனித உரிமைகள் தினம்: இலங்கையில் நாடுதழுவிய நிகழ்ச்சிகள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை இலங்கையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், கண்டன-கவனயீர்ப்பு ஊர்வலங்களும் நடந்தன.

மேலக மக்கள் முண்ணணி தலைமையிலான மக்கள் கண்காணிப்புக் குழு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் ஒன்றும் இன்று கொழும்பில் இடம்பெற்றிருக்கிறது.

கடத்தப்பட்டு காணாமல்போனோரின் உறவினர்கள், தடுப்புச் சிறைகளிலும், பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இன்று சிறிலங்கா பவுண்டேஷன் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் விசேட அதிதிகள் கலந்துகொண்டனர்.

 

இதில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருக்கிறார்.

இங்கு உரையாற்றியுள்ள அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பில் மூன்றாம், நான்காம் சரத்துக்களில் மனித உரிமைகளின் சுதந்திரம் குறித்து குறிப்பாக தெரிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சுதந்திரம், பக்கச்சார்பின்மை, நீதித்துறையின் ஆளுமை என்பன மனித உரிமைகள் பேணப்படுவதற்கு மிகவும் அவசியமான அம்சங்கள் என்று தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, போரினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும், போரினால் மனித உரிமைகளை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுவதையும் நிராகரித்துப் பேசினார்.

இதற்கிடையில் இங்கே லண்டனிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கைத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு மையம் என்னும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.


மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில், யுத்த சூழ்நிழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியிடுத்தும் வகையில் திங்கட்கிழமை பேரணி ஒன்று நடந்துள்ளது.

இந்தப் பேரணிகளிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்திலும், பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்திருந்த மற்றும் மீள்குடியமர்த்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையிலும் பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் வாசக அட்டைகளை ஏந்திச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பேரணி சென்ற வீதிகளில், வழமைக்கு மாறாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி., பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப்-பத்மநாபா அணி பிரதிநிதிகளும் பங்குபெற்றனர்.

அவர்கள் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டினையும் விமர்சித்து உரையாற்றினர்.

கூட்ட முடிவில், மக்களின் தேவைகளை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் முகமாக ஒரு மனு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மகேசன் அவர்களிம் கையளிக்கப்பட்டது.


வடக்கு இலங்கையில் வன்முறை வலுக்கிறது

இலங்கையின் வடக்கே ஞாயிறன்றும் திங்களன்றும் நடைபெற்ற மோதல்களில், 26 விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 இராணுவ வீரர்கள் காயமடைந்ததுள்ளதாகவும் இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மணலாறு பகுதியில் தமது பிரதேசத்துக்குள் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பெரியதம்பனனைப் பகுதியில், நேற்று முந்தினம் கொல்லப்பபட்ட விடுதலைப் புலிகளில், நல்ல நிலையில் உள்ள ஆறு சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற வன்செயல்களில், மட்டக்களப்பு மாவட்டம் பிள்ளையாரடியில், ஞாயிறு இரவு இரண்டு யுத்த அகதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுளனர் எனவும், துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு சடலம் கண்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Posted in AHRC, Batticaloa, Displaced, Eelam, Eezham, EPDP, EPRLF, HR, Human Rights, IDP, LTTE, Manalaar, Manalaaru, Manalar, Manalaru, Padhmanaba, Padhmanabha, Padmanaba, Padmanabha, Pathmanaba, Pathmanabha, plot, Refugees, Sri lanka, Srilanka, Vanni, Violence, Wanni, War | Leave a Comment »

Mine attack on bus in northern Sri Lanka kills at least 15, Wounds 38

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி

இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து பதவியா ஜானகபுரவுக்குச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெப்பிட்டிக்கொல்லாவவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அபிமானிபுர என்ற இடத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார முன்னதாக தமிழோசைக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கெப்பிட்டிக்கொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு

மோதல்கள் அதிகரித்துள்ளன
மோதல்கள் அதிகரித்துள்ளன

இலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களில் 30 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள சின்னசிப்பிக்குளம் பகுதியில் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், படையினரின் எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதே பகுதியில் பிற்பகல் 12.50 மணியளவில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 2 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

மன்னார் அடம்பன் மேற்கு, முள்ளிக்குளம் பரப்பாங்கண்டல் மற்றும் நரிக்குளம் ஆகிய வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களின்போது, 30 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை மன்னார் நரிக்குளம், யாழ்ப்பாணம் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது, 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் அது கூறுகிறது.

கிளாலி முன்னரங்க பகுதியில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியிலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் தெரிவித்திருக்கின்றனர். இந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தமது தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும், தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட முயற்சி கடுமையான எதிர்த்தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

 

இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்.

அடையாளம் தெரியாதவர்களின் அச்சுறுத்தல்கள், கப்பம் கோரி விடுக்கப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றினால் இந்த பணியாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள், இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக, அச்சமின்றி பணிகளில் ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.


மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை

 

கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

இதனை உறுதி செய்த ரயில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இரண்டு ரயில்கள் இன்றிரவு வவுனியாவை வந்தடையும் என்றும் நாளை காலை முதல் அனைத்து ரயில்களும் வழமைபோல வவுனியாவில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வவுனியா ஒமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெற்று வந்த பொதுப் போக்குவரத்து நடைமுறையில் படையினர் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியாவிலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்பவர்களை படையினர் அனுமதித்திருந்தார்கள் எனினும் வன்னிப்பகுதியில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியாவுக்குள் வருவதற்குப் பொதுமக்கள் எவரையும் படையினர் அனுமதிக்கவில்லை.

இந்த கட்டுபபாடுகள் இன்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் பலநாட்களாகக் காத்துக்கிடந்த பொதுமக்களில் ஒரு தொகுதியினர் இன்று வவுனியாவை வந்தடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இது பற்றி இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடர்ந்து வழமைபோல நடைபெறும் என அவர் கூறினார்.


Posted in Aid, Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Attacks, Bribery, Bus, Corruption, dead, Economy, Eelam, Eezham, Extortions, Finance, Help, kickbacks, LTTE, Mannaar, Mannar, Mine, mines, Money, NGO, Rails, Railways, ransom, relief, Security, service, Sri lanka, Srilanka, Threats, Trains, Transport, Transportation, TRO, UN, UNESCO, Vanni, Vavuniya, Vawuniya, Volunteer, Volunteering, Wanni, wavuniya, Wawuniya, Wounded | Leave a Comment »

Sri Lanka releases Tamil suspects detained after Colombo bombings

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்

கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது.

இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர்.

இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே
அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளே

தமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன.

இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன.

அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார்.

அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.


வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை

பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்
பெரும் சிரமங்களுடனான வடபகுதிப் பயணங்கள்

இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிக்கும் இடையே ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான தபால் விநியோக சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக வன்னிப்பிராந்திய இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

எனினும் நோயாளர்களின் போக்குவரத்து மற்றும் வன்னிப்பிரதேசத்திலிருந்து பொதுமக்கள் வவுனியா பகுதிக்குள் வருவது போன்ற விடயங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்து நிலைமைகள், மற்றும், வடபகுதிக்கான ரயில் சேவை அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்பன குறித்து வவுனியா மேலதிக அரச அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Anuradapura, Anuradhapura, Anuradhapuram, Anurathapura, Arrest, Bombs, Bus, Colombo, Eelam, Eezham, Govt, Islam, Jail, JVP, LTTE, Muslim, Prison, Roads, Sinhala, Sri lanka, Srilanka, Suspects, Tamil, Tamils, Trains, Transport, Transportation, Vanni, Vavuniya, Wanni, wavuniya | Leave a Comment »

Nov. 22 – Eezham, Sri lanka, LTTE updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

தொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி

மோதல்கள் தொடருகின்றன
மோதல்கள் தொடருகின்றன

இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.

யாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

இதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Arms, dead, Displaced, Eelam, Eezham, LTTE, Mugamalai, Muhamalai, Mukamaalai, Mukamalai, Soldiers, Sri lanka, Srilanka, Vanni, Vavuniya, Wanni, War, wavuniya, Weapons | Leave a Comment »

Tamil Rehabilitation Organisation (TRO) – US Treasury sanctions to freeze Tamil charity assets: LTTE militants bunker line destroyed

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்க முடிவு

தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.

அந்த அமைப்பு, அமெரிக்காவில் 1997 முதல் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி ஆதரவு மற்றும் இதர கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்ததாக கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ரொபர்ட் ஓ பிளேக்
ரொபர்ட் ஓ பிளேக்

 


தமிழர் புனர்வாழ்வுக் கழக சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டது குறித்து கொழும்பு அமெரிக்கத் தூதர் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பாக செயல்பட்டு அதற்கு ஆதரவாக நிதி சேகரித்ததாக் கூறி அமெரிக்க அரசின் கருவூலத் துறை நேற்று வியாழனன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்காவில் முடக்கி வைப்பதாக அறிவித்தது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமையன்று கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் விரிவான விளக்கத்தினை அளித்துள்ளார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அறக்கட்டளை என்கிற பெயரில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் உட்பட இதர கொள்வனவுகளை மேற்கொண்டு வந்தது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுதான் என்றும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்கா, இலங்கையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில் முன்னெடுக்கப்படும் நியாயமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வுக்கு அனைத்து ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இராணுவ வழிமுறைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அமெரிக்க திடமாக நம்புகிறது என்றும் கொழுபிலுள்ள அமெரிக்கத் தூதர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

இதனிடையே இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இயக்குநர் ஜான் கிறிஸ்டி, அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தமது அமைப்பின் நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையாகவும், அனைவருக்கும் திருப்தியளிக்கக் கூடிய வகையிலும் உள்ளன என்றும் அவர் கூறினார்.


விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுக்கவே தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது – ஆய்வாளர் கருத்து

தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கிலேயே, தமிழர் புனர்வாழ்வுக்கழக சொத்துக்களை அமெரிக்க அரசு முடக்கியிருப்பதாக கூறுகிறார், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் துறை பேராசிரியர் சஹாதேவன் அவர்கள்.

தமிழோசைக்கு அவர் அளித்த ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியில், விடுதலைப்புலிகளை அனைத்து வகைகளிலும் பலவீனப்படுத்தி, பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைப்பது என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

அதே வேளை, இலங்கை அரசுக்கான தனது ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறை என்பது, இலங்கை இனப்பிரச்சினையில் அதன் சமச்சீரற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் சகாதேவன் கூறினார்.

இதன் காரணமாக, எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா உள்ளிட்ட சரவதேச நாடுகளின் சமாதான முன்னெடுப்புகளை விடுதலைப்புலிகள் புறக்கணிக்ககூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 


 

இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக கட்சித் தாவல்கள் தீவிரமடைகின்றன

தீவிரமடையும் கட்சித்தாவல்கள்
தீவிரமடையும் கட்சித்தாவல்கள்

இலங்கைப் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2008 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மீது தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தினைத் தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்காக அது விடப்படவிருக்கிறது.

இதனை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டுமென்று ஆளும் கூட்டணியும், இந்த வரவுசெலவுத்திட்டத்தினை எப்படியாவது தோற்கடித்து அதனூடாக இந்த அரசினை பதவிநீக்கம் செய்யவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும், முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவும் தற்போது பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதன் ஒரு அங்கமாக புதன்கிழமை ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ சபையில் எதிர்க்கட்சிவரிசையில் வந்து அமர்ந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, எதிராக வாக்களிக்கப் போவதாகக் கூறியிருக்கின்றார். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக்க அரசதரப்புக்குத் தாவியிருக்கிறார்.

இவை தொடர்பாக கட்சித்தாவல்களை மேற்கொண்டோர், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களடங்கிய விரிவான செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்களில் 20 பேர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப்பிரதேசத்தில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி இன்று காலை 5 மணியளவில் முன்னேறிய படையினர், விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகளைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட மோதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

இப்பகுதியில் இராணுவத்தினரின் முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

வவுனியா, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்க பகுதிகளாகிய கள்ளிக்குளம், நரிக்குளம், விளாத்திக்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கண்ணாட்டி என்னுமிடத்தில் விடுதலைப புலிகள் வைத்திருந்த மிதிவெடிகளில் சிக்கிய 4 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டிருக்கிறது.

ஆயினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


வான்வழித் தாக்குதலில் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது: இலங்கை இராணுவம்

அழிக்கப்பட்ட முறிகண்டி படகுக் கட்டுமான தளம்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது இன்று வெள்ளிக்கழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு கட்டுமான நிலையம் அழிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவுக்கு மேற்கே முறிகண்டி பகுதியில் நேர்த்தியான மறைவிடம் ஒன்றில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் படகுக் கட்டுமான தளத்தின் மீதே இந்த விமான குண்டுத் தாக்குதல் காலை 6.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் படகு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், ஏ9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டி சிற்றூரில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான படகு கட்டுமாண தொழிலகத்தின் மீது இன்று காலை 6.20 மணியளவில் இரண்டு தடவைகள் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தொழிலகத்தை அழித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், மன்னார் துவரங்கேணி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த இளைஞன், அப்பகுதியில் தேடுதல் நடத்திய படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, இன்று காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மன்னார் கட்டையடம்பன், தம்பனை, மற்றும் மணலாறு, வடக்கே நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2007 

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை தடை செய்தது இலங்கை அரசு

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு இலங்கையில் தடை

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை இலங்கையில் தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம முன்வைத்த ஒரு பிரேரணையின்படியே, அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை என்கிற பெயரில் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, அதை புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக அளித்தது தெரியவந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கிய இலங்கை அரசு, கடந்த வாரம் அமெரிக்கா இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்க எடுத்த நடவடிக்கையை அடுத்தே அந்த முடிவினை எடுத்துள்ளது.

இந்தத் தடையானது விடுதலைப் புலிகளுக்கு பெரிய பின்னடைவு என்று இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா அவர்கள் கூறியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எந்த அமைப்பாவது எந்த பெயரிலாவது நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவற்றையும் தடை செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் அரசு கோரவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Posted in Adampan, Arms, Assets, Attacks, Blasts, Bombs, Budget, bunker, Charity, Commerce, defence, Defense, Economy, Eelam, Eezham, Finance, Funds, Kallikulam, Kallikulamn, Kannadi, LTTE, Mannaar, Mannar, MCNS, Media Centre for National Security, Militants, Military, mines, Mugamalai, Muhamalai, NGO, Party, Politics, sanctions, Security, Srilanka, Tamil Rehabilitation Organisation, Terrorism, Terrorists, TRO, Umayaratuvarankulama, Vanni, Vavuniya, Vilaththikulam, Wanni, Weapons | 1 Comment »

Mannar Residents should move out of their establishments – Tigers leaflet or Sri Lankan Govt Campaigns?

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவில்லை என்றும், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வைபவங்களைக் குழப்புவதற்காக அரச படையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில், விடுதலைப்புலிகள் என்று கூறப்பட்டு இலங்கை விசேட அதிரடிப்படையினரால், சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கொலைசெய்யப்பட்ட இந்தப் பொதுமக்களின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உறவினர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கை அரசின் விமானப்படை விமானம்
இலங்கை அரசின் விமானப்படை விமானம் ஒன்று

இதற்கிடையில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவுக்கு மேற்கில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும், அலம்பில் கடற்கரையோரப்பகுதியில் விடுதலைப் புலிகள் படகுகளை நிறுத்தி வைக்கும் மறைவிடம் ஒன்றும் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மன்னார், பாலம்பிட்டி பகுதியில் நேற்று மாலை படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் வாகனம் ஒன்றில் பிரயாணம் செய்த 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு மோதல் சம்பவத்தில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Alleged LTTE leaflet in Mannar asking people to vacate their residencesயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பகுதியில் இன்று அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரைப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்து இறந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்த ந.மயூரன் என தெரியவந்துள்ளதாகவும் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று மாலை மடுக்கோவில் பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையினால் படுகாயமடைந்திருந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டதில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.


Posted in Airforce, Ambaarai, Ambarai, Arms, Athikkuli, Attacks, Campaigns, dead, defence, Defense, Eelam, Eezham, Govt, Jaffna, Karuna, leaflet, LTTE, Mannaar, Mannar, Military, Mullai, Mullai River, Mullai Theevu, Peace, responsibility, Spin, Sri lanka, Srilanka, Vanni, Wanni, Weapons | Leave a Comment »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Posted in air crafts, Air Force, Arrests, Attack, Commission, Contribution, defence, Defense, Donation, Extortion, Foreign, France, French, Funds, Interpol, Katunayake, kickbacks, Law, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapaksa, Military, Navy, Non-profit, Order, Paris, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, separatist, South Asia, Sri lanka, Srilanka, Suicide, terror, Terrorism, terrorist, Vanni, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Wanni | 5 Comments »