Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

More clashes in Sri Lanka – fighting kills 24 in north

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: